Home Top Ad

ஏற்கனவே 2 வாரமாக எந்தவொரு புதிய படமும் வெளியாகாததால் சினிமா ரசிகர்கள் அதிருப்தியில் உள்ளனர். இந்நிலையில் வரும் வெள்ளிக்கிழமை முதல் அனைத்து ...

தியேட்டர் உரிமையாளர்கள் எடுத்த அதிரடி முடிவு! ரசிகர்கள் மகிழ்ச்சி

ஏற்கனவே 2 வாரமாக எந்தவொரு புதிய படமும் வெளியாகாததால் சினிமா ரசிகர்கள் அதிருப்தியில் உள்ளனர். இந்நிலையில் வரும் வெள்ளிக்கிழமை முதல் அனைத்து திரையரங்குகளுக்கு மூடப்படும் என தியேட்டர் உரிமையாளர்கள் அறிவித்திருந்தனர்.

சென்னை தியேட்டர் உரிமையாளர்கள் சங்க கூட்டம் இன்று நடந்தது. அதில் ஸ்டிரைக்கில் கலந்துகொள்ளமாட்டோம் என முடிவெடுத்துள்ளதாக சங்க தலைவர் அபிராமி ராமநாதன் தெரிவித்துள்ளார்.

மக்களின் பொழுதுபோக்கிற்காக தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், ஆங்கிலம் என அனைத்து மொழி படங்களையும் திரையிடவுள்ளோம் என மேலும் அவர் கூறியுள்ளார்.

0 coment�rios: