Home Top Ad

அலுவலகத்தில் வேலை பார்ப்போருக்கும் சரி பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கும் சரி ஞாயிற்றுக்கிழமை வந்தாலே உற்சாகம் தான். வாரம் முழுதும் வேலை பார்...

வாரத்தில் முதல் நாள் ஞாயிற்றுக்கிழமை ஏன் வந்தது?.. எப்போதாவது யோசித்ததுண்டா?

அலுவலகத்தில் வேலை பார்ப்போருக்கும் சரி பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கும் சரி ஞாயிற்றுக்கிழமை வந்தாலே உற்சாகம் தான்.

வாரம் முழுதும் வேலை பார்த்து சோர்வடைந்தவர்களுக்கு புத்துணர்ச்சி தரும் தினம் வாரத்தின் முதல் நாளான ஞாயிற்றுக்கிழமையே.

உலகில் உள்ள அனைத்து உயிர்களும் வாழ்வதற்கு முக்கிய ஆதாரம் சூரிய ஒளி. இது இல்லை எனில் தாவரங்கள் அவற்றிற்கு தேவையான உணவினை தயாரித்து கொள்ள முடியாது. மற்ற உயிர்களுக்கும் உணவு கிடைக்காது.

உலகில் உள்ள ஓரறிவு உயிர் முதல் ஆறறிவுள்ள மனிதன் வரை அனைவருக்கும் மிக முக்கியமானது சூரியன். அனைத்து உயிர்களுக்கும் ஜீவாதரமாக சூரியன் திகழ்வதால் வாரத்தின் முதல் நாளாக சூரியனை ஏற்படுத்தினார்கள்.

ஐம்பெரும்காப்பியங்களுள் ஒன்றான சிலப்பதிகாரத்திலும் கடவுள் வாழ்த்தின் துவக்கத்தில் ஞாயிறு போற்றுதும் என்றே எழுதப்பட்டுள்ளது. சூரியனுக்கு பின்னரே மற்ற இயற்கை வழிபாடுகளான நிலா, மழை போன்ற தெய்வங்கள் குறிக்கப்படுகின்றன.

0 coment�rios: