Home Top Ad

முன்னொரு காலத்தில் பாக்தாத் நகரை அல் ரஷீத் என்ற அரசர் ஆண்டு வந்தார். அவருடைய நெருங்கிய நண்பரான ஜாபர் என்பவர் முதல் அமைச்சராக இருந்தார். ...

ஒரு அரசன் , ஒரு அமைச்சர் , ஒரு அடிமைப்பெண் ! - புதிர் கதை


முன்னொரு காலத்தில் பாக்தாத் நகரை அல் ரஷீத் என்ற அரசர் ஆண்டு வந்தார். அவருடைய நெருங்கிய நண்பரான ஜாபர் என்பவர் முதல் அமைச்சராக இருந்தார்.

ஒரு நாளிரவு, அல் ரஷீதும், ஜாபரும் மதுவைக் குடித்து, மகிழ்ச்சியாகப் பேசிக்கொண்டிருந்தார்கள்.  இருவருக்குமே போதை ஏறிக்கொண்டிருந்தது.

அப்போது அல் ரஷீத், " ஜாபர் ...நீ அழகான அடிமைப் பெண் ஒருத்தியை விலைக்கு வாங்கியிருக்கிறாயேமே!!!...எனக்கு அவளை விற்றுவிடு.நீ என்ன விலை கேட்டாலும் கொடுக்கிறேன்" என்றார்.


அதற்கு ஜாபர் தனக்கு என்ன விலை கொடுத்தாலும் அந்த அடிமைப் பெண்ணை யாருக்கும் விற்பதாக இல்லை என்றார்.
அப்படியானால் எனக்கு அன்பளிப்பாகத் தந்துவிடு என்றார் அரசர்.
அன்பளிப்பாகவும் கொடுக்கமுடியாது என்றார் ஜாபர்.

மதுவின் போதையில் இருந்த அரசருக்கு கடுமையான கோபம் உண்டானது."ஜாபர்.....நீ எனக்கு அடிமைப் பெண்ணை விலைக்கோ அல்லது அன்பளிப்பாகவோ தந்தே ஆகவேண்டும். அப்படி அவள் எனக்கு கிடைக்காதுபோனால், பட்டத்து அரசி சுபேதாவை நான் தலாக் செய்துவிடுவேன் [விவாக ரத்து] இது உறுதி" என்று கூச்சல் போட்டார்.

போதை தலைக்கேறியிருந்த ஜாபரும், " நான் அவளை உங்களுக்கு விற்கவோ அல்லது அன்பளிப்பாகவோ தரமாட்டேன். அப்படித் தந்துவிடுவேனேயானால், எனது மூன்று குழந்தைகளுடன் என் மனைவியை தலாக் [ விவாகரத்து] செய்துவிடுவேன். இதுவும் உறுதி" என்றார்.

கொஞ்ச நேரம் கழித்து இருவருக்குமே போதை தெளிந்தது. குடிபோதையில் இருவரும் பேசியவை நினைவுக்கு வந்தது. என்ன செய்தாலும் இருவரில் யாராவது ஒருவர் விவாகரத்து செய்தே ஆகவேண்டுமே.......வாழ்க்கை பாழாகிவிடுமே....என்ன செய்வது என்று இருவருமே வருந்தினார்கள்.

எந்த சிக்கலான பிரச்சினயானாலும் அதற்குத் தகுந்த தீர்வு கூறும் காஜி யூசுப்பை அழைத்துவரும்படி காவலர்களுக்குக் கட்டளையிட்டார்கள். அந்த இரவு வேளையிலே காவலர்கள் சென்று காஜியை அழைத்துவந்தார்கள்.

நடந்த விஷயத்தை அவரிடம் கூறி இதற்கு சிக்கல் இல்லாமல் தீர்வு எப்படிக் கான்பது என்று கேட்டார்கள்.
அவர்கள் கூறியது முழுவதையும் கேட்ட காஜி சிரித்தபடியே, " இதில் எந்த சிக்கலுமே இல்லையே.சுலபமாக தீர்வு கானலாமே!!!" என்றார்.

அவர் கூறியபடியே நடந்து இருவருக்குமே எந்த சிக்கலும் இல்லாமல் பிரச்சினையைத் தீர்த்துக்கொண்டார்கள்.

நண்பர்களே காஜி யூசூப் இந்தச் சிக்கலுக்கு என்ன தீர்வு கூறியிருப்பார்.?


 புதிர் விடை :

அவர்களது பிரச்சினையைக் கேட்ட யூசுப் அலி " இதிலே சிக்கல் எதுவுமே இல்லையே.  மிகச் சுலபமாக இதற்குத் தீர்வு கானலாம் " என்றார்.

" இந்த அடிமைப் பெண்ணை அமைச்சர் உங்களுக்கு பாதி விலைக்கும், பாதி அன்பளிப்பாகவும் தரவேண்டும். அதனால் அமைச்சர் விற்றதாகவும் ஆகாது. அன்பளிப்பாகக் கொடுத்ததாகவும் ஆகாது. ஆக இதனால் நீங்கள் இருவருமே கூறியது போலவே நடந்துள்ளது. அதனால் இருவரது சபதங்களுமே காப்பாற்றப் படும்" என்றார். யூசுப்பின் தீர்வைக் கேட்ட இருவருமே மகிழ்ந்தார்கள்.

அமைச்சர் உடனே அந்தப் பென்னை வர வழைத்து, அரசனுக்குப் பாதி விலையாகவும் பாதி அன்பளிப்பாகவும் கொடுத்தார்.

0 coment�rios: