Home Top Ad

 பச்சை சோயா பீன்ஸ் உள்ள சிவப்பு விதையிலிருந்து சோயா பால் எளிதில் தயாரிக்கலாம். சோயா பால் தயாரிப்பதன் மூலம் நிறைய வருமான மும் அந்த பாலின்...

சோயா பால் தயாரிக்கும் முறை!



 பச்சை சோயா பீன்ஸ் உள்ள சிவப்பு விதையிலிருந்து சோயா பால் எளிதில் தயாரிக்கலாம். சோயா பால் தயாரிப்பதன் மூலம் நிறைய வருமான மும் அந்த பாலின் விதையின் கழிவிலி ருந்து உணவுக்கு தேவை யான பொரு ட்கள் தயாரிக்கலாம். அதிலிருந்து டிரை சோயாபீன்ஸ் தயாரித்து நாமே சொந்த மாக கடைக்கு சந்தைப்படுத்தினால் வியாபாரத்தை அபிவிருத்தி செய்ய லாம்.

சோயா பாலை எந்தவிதமான கெமிக்க ல் இல்லாமல் இயற்கையில் எளிய முறையில் மதிப்புகூட்டும் முயற்சியால் மூன்று மாதம் கெடாமல் வைத் திருந்து இந்த சோயா பாலிலிருந்து பாதாம்பால் தயாரித்து விற் பனை செய்தால், லாபம் அடையலாம்.

சோயா பாலில் சர்க்கரை, எசன்ஸ், சிறிது சமையலுக்கு பயன்படும் உப்பு சேர்த்து சுவையான பாதாம்பால் தயாரி க்கலாம். சோயா பீன்சிலிருந்து மூன்று விதமாக சோயாபால் எடுக்கலாம்.

 * சிவப்பு சோயா பால் விதையில் தோல் உரிக்காமல் அப்படியே பால் எடுக்லகாம். ஆனால் அதன் நிறம் இளம் ஊதா நிற த்தில் இருக்கும்.

 * சோயா விதையில் அதன் தோலை நீக் கி அதன் வெள்ளைநிற சோயா விதையி லிருந்து பால் எடுத்தோமானால் சோயா பால் வெள்ளையாக இருக்கும்.

 * மளிகை கடைகளில் விற்கும் சோயா பீன்ஸ் டிரை சோயா பீன்ஸ் ஆகு ம்.

வாங்கி வந்த சோயா பருப்பை நன் றாக கழுவி 8 மணி நேரம் ஊற வை த்து மறுபடியும் சோயா பருப்பை கழு வி சுத்தம் செய்து அதிலிருந்து சோ யா பால் தயாரிக்கலாம். இதன் சுவை மணமும், நிறமும் சற்று மாறுதலாக இருக்கும். தரம் குறைவாக இருக்கும். சோயா பால் தயாரி ப்பதற்கு இயந் திரம் உள்ளது. இந்த இயந்திரத்தின் பெயர் சோயா டைரக்ட் என்பதாகும். இதன்மூலம் குறைவான பாலை உற் பத்தி செய்ய முடியும். ஆட்டோமெடிக் இயந்திரம் உள்ளது. ஒவ்வொரு பிராண்டைப்பொறுத்து அதன் கொள்ளளவு பொறுத்து விலை 3 லட்சம் முதல் கிடைக்கும்.

மாட்டு பாலுக்கு மாற்றாக பயன்படுத்தி சோயா பாலிலிருந்து பத்து வகையான உணவு தயாரிக்கலாம். 1. பாதா ம்பால், 2. பிஸ்தா மில்க், 3. ஏலக்காய் மில்க், 4. ரோஸ் மில்க், 5. ஸ்ட்ராபெரி மில்க், 6. பைன் ஆப்பிள் மில்க், 7. வெண்ணிலா மில்க், 8. ஜிகர்தண்டா மில்க், 9. சாக்லேட் மில்க், 10. காபி மில்க் ஆகியவை. சோயா பாலிலிருந்து எளிய முறையில் வீட்டிலிருந்தபடியே சிறு தொழிலாக அமைத்து பெரிய தொழிலாக மாற்றி அதிக லாபம் அடையலாம்.

இந்த சோயா பீன்ஸ் விதையிலிருந்து பால் எடுத்தபிறகு அதன் கழிவு சத்தான உணவு ஆகும். இதற்கு ஒகாரா என்று பெயர். இதில் அதிகமாக நார்சத்து உள்ளது. இந்த ஒகாரா மாற்று உணவுப் பொருட்களுடன் பிஸ் கட், கோதுமை மாவு, மற்ற தானிய உணவுடன் சேர்த்துக் கொண்டால் உடல் நலத்திற்கு ஆரோக்கியமாக இருக்கும்.

இந்த சோயா பால் தரமான மாட்டு பாலில் உள்ள சத்துக்களைவிட அதிக சத்துக்கள் கொண் டது. இந்த சோயா பாலில் எனர்ஜி, புரோட்டின், கொழுப்பு, கார்போ ஹைட்ரேட், கால்சியம், நார்ச்சத்து, இரும்புச்சத்து, சோடியம் உள்ளது. இதைப்போல் 30க்கும் மேற்பட்ட வைட்டமின் கள் உள்ளன.
இந்த சோயாபால் தினமும் அருந்தினால் கொலஸ்டிரால் அளவு குறைந் துவிடும். இதயம் மற்றும் சிறுநீரகம் நல்ல ஆரோக்கியமாக செய ல் படும். உடலில் கேன்சர் செல் வராமல் தடுக்கும். மூளையின் ஞாபகசக்தி அதிகரிக்கும். மெல்லிய தேகம் உள்ளவர்கள் சோயா பால் அருந்தினால் உடல் வலுப் பெறும். உடலில் சர்க்கரை அளவு கட்டுப்பட்டு குறைந்து விடும்.

உடலில் சீக்கிரம் செரிமானமாகும். நார்ச்சத்து அதிகம் உள்ளதால் குடலு க்கு ஏற்ற உணவாகும்.

சோயா பாலிலிருந்து பாதாம்பால் தயா ரிக்க சிறிய பாதாம்பால் பாட்டில் தேவைப்படும். இந்த பாதாம்பால் பாட்டி லில் பத்து வகையான நறுமண பால் வீட்டிலிருந்தபடியே சிறு தொழிலாக குறைந்த முதலீட்டில் ஒரு பாதாம்பால் தயாரிப்பு செலவு ரூ.5.00. அடக்கவிலை நமக்கு ஏற்படும். அதன் பாட்டி லின்மேல் லேபிள்கம்பெனி பெயர், எக்ஸ்பைரி டேட், எம்ஆர்பி: 15.00 என்று அச்சிட்டு கடைக்கு பாட்டில் ரூ. 10.00க்கு விற் பனை செய்ய வேண் டும்.

குறைந்தது ஒரு நாளுக்கு 100 பாட்டில் விற்பனை செய்தோமானால் நமக்கு மாதத்திற்கு செலவு போக ரூ.15,000 லா பம் கிடைக்கும். வீட்டில் உள்ள இரண்டு நபர்கள் தேவைப்படும். நம் வீட்டில் உள் ள அறையே போதுமானதாகும். மாட்டுப் பால், சோயாபால் இந்த இரண்டு வகை யான பாலில் நாம் எந்தவிதமான கெமி க்கல் கலந்தாலும் இரண்டு பாலும் கெட் டுவிடும். அதாவது பென்சாயிக் ஆசிட் மற்றும் பிரிசர்வேட்டிவ் கிளாஸ்-2 கெமிக்கல் கலக்கக்கூடாது.

பாதாம்பால் ஏஜன்சி எடுத்து செய்ப வர்கள், ரஸ்னா மோர் தயாரித்து விற் பனை செய்பவர்கள், சோடா கலர் கம் பெனி நடத்துபவர்கள் மற்றும் சாக்லே ட், பிஸ்கட், தண்ணீர் பாக்கெட் விற் பனை செய்பவர்கள் அனை த்து ஏஜெ ன்சி எடுப்பவர்கள் வீட்டிலிருந்தபடியே சோயாபால் தயாரித்து எளிய முறை யில் அதிகமாக சம்பாதிக்கலாம்.

இதனை கையில் எளிய முறையில் தயாரித்தாலும் இயந்திரத்தின் உதவியுடன் தயாரித்தாலும் மிகவும் முக்கியம் ஒவ்வொரு கடைக்கும் சந்தைப் படுத்துவதன் மூலம் இயற்கை அங்காடி, இன்ஜினியரிங் காலே ஜ் கேன்டீன், சூப்பர் மார்க் கெட், பள்ளி கேன்டீன் இவற்றின்மூலம் வியாபாரத்தை அதிகப்படுத்தி லாபம் கூடுதலாக சம்பாதித்து வாழ்க்கை த்தரத்தை சொந்த தொழில் மூலம் உயர்த்திக் கொள்ளலாம்.

0 coment�rios:

கொடி போல இடை தளிர்போல நடைன்னு சொல்வாங்க. அப்படி சிக்குன்னு சுறுசுறுன்னு இருக்கனும்பாங்க. சுலபமா செஞ்சு முடிக்கக்கூடிய இஞ்சிப் பால் இருக்...

இஞ்சிப் பால்..!



கொடி போல இடை தளிர்போல நடைன்னு சொல்வாங்க. அப்படி சிக்குன்னு சுறுசுறுன்னு இருக்கனும்பாங்க. சுலபமா செஞ்சு முடிக்கக்கூடிய இஞ்சிப் பால் இருக்க பயமேன்? கவலையை விடுங்க.


ஒரு நபர் ஒரு வேளை குடிக்கக்கூடிய அளவுக்கு இஞ்சிப்பால் செய்யறது எப்படி?
ஆள்காட்டி விரல் பருமனில் சிறிது துண்டு இஞ்சியை எடுத்துத் தோலைச் சீவிக்கணும். தோல் சீவிய இஞ்சித்துண்டை நல்லா நசுக்கிட்டு, பிறகு முக்கால் குவளை தண்ணீர் எடுத்து அதில் நசுக்கிய இஞ்சியை போட்டு நல்லா கொதிக்க விடணும். தண்ணீரில் சாரம் முழுவதும் இறங்கி விடும். பிறகு வடிகட்டி சாரை எடுத்துக் கொள்ளணும்.


அப்புறம் அரைக் குவளை காய்ச்சிய பால் எடுத்துக்கொண்டு அத்துடன் வடிக்கட்டிய சாரத்தை கலந்து கொள்ளணும். அத்துடன் தேவையான அளவில் தேன் அல்லது பணங்கற்கண்டு அல்லது சர்க்கரை இனிப்புச் சுவைக்காக சேர்த்துக்கணும். அவ்வளவுதான். இஞ்சிப்பால் தயார். இந்த இஞ்சிப் பாலை காலையில வெறும் வயிற்றில் குடிக்கனும்.


அட. இப்படி தினம் செஞ்சா என்ன கிடைக்கும்?


1. நுரையீரல் சுத்தமாகும்.

2. சளியை ஒழுச்சு கட்டிடும்.

3. வாயுத் தொல்லை என்பதே வராது.

4. தேவையில்லாத கொழுப்பு பொருளை கரைச்சிடும்.

5. தொப்பை வயிற்றுக்காரர்கள் தொப்பைக்கு விடை கொடுத்துவிடலாம்.

6. அதிகமா எடை இருந்தா படிப்படியாக குறைஞ்சிடும்.

7. ஒல்லியா ஆகணும்னு நினைக்கிறவங்க தொடர்ந்து குடிக்கலாம்.

8. இரத்தக் குழாய்களில் அடைப்பு எதுனாலும் இருந்தா நீக்கி விடும். அதனால மாரடைப்பை தடுக்கும் சத்தி இதுக்கு இருக்கு.

9. முக்கியமா பெண்களுக்கு சினைப்பையில் வரக்கூடிய புற்றுநோய்க் கட்டிகளை நீக்கி விடும்.

10. தினமும் சாப்பிட்டால் உடம்பு சும்மா சுறு சுறுன்னு இருக்கும்மில்லே.

அதுசரி, இந்த பாலை எல்லாருமே சாப்பிடலாமா?

3 வயசுக்கு மேல யார் வேணுமின்னாலும் சாப்பிடலாம்.

ஆனால் வாய்ப்புண், வயிற்றுப் புண், மலவாயில் புண், எரிச்சல் இருப்பவர்கள் தவிர்க்கனும்.


மீதிப்பேர் சாப்பிடலாம்.

என்ன நாளையில இருந்து உங்க வீட்டில காப்பிக்கு பதில் இஞ்சிப்பால்தானே?

0 coment�rios: