Home Top Ad

 "பஸ்ஸை தொட்டு பாருங்க.. அப்பறம் இருக்கு" என்று தாக்க முயன்ற பாஜகவினருக்கு "சவுண்டு" விட்ட தமிழக எஸ்.ஐக்கு கேரளாவில்...

பஸ்ஸை தொட்டு பாருங்க.. வீரம் காட்டிய "தமிழ் சிங்கம்" எஸ்ஐ.. கேரளாவிலிருந்து குவியும் பாராட்டு

 "பஸ்ஸை தொட்டு பாருங்க.. அப்பறம் இருக்கு" என்று தாக்க முயன்ற பாஜகவினருக்கு "சவுண்டு" விட்ட தமிழக எஸ்.ஐக்கு கேரளாவில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

குமரி - கேரள எல்லையில் கேரள அரசுப் பேருந்தை தாக்க முயன்ற பா.ஜ.க-வினரை எதிர்த்து குரல்கொடுத்து பேருந்தைக் காப்பாற்றிய களியக்காவிளை சப் இன்ஸ்பெக்டர் மோகன அய்யருக்கு பாராட்டுப்பத்திரம் மற்றும் சன்மானம் வழங்குவதாக கேரள அமைச்சர் அறிவித்துள்ளார்.

2 நாளைக்கு முன்னாடி அதாவது 2-ம் தேதி 2 பெண்கள் சபரிமலைக்கு தரிசனம் செய்ய போனார்கள். ஏற்கனவே கொதித்து கிடந்த அம்மாநில பாஜகவினர், இந்த விஷயத்துக்கு பிறகு திரும்பவும் போராட்டங்களில் இறங்கினார்கள். இதற்காக மறுநாள் 3-ம்தேதி பந்த்தை நடத்தினார்கள்.

அடித்து நொறுக்கினர்

அப்போது நூற்றுக்கும் அதிகமான பஸ்கள் அடித்து நொறுக்கப்பட்டன. பாஜகவினர் அங்கு போராட்டம் செய்தாலும், கேரள பார்டர் என்பதால், கன்னியாகுமரிக்கும் பரவியது. அங்க இருக்கிற ஆத்திரத்தை எல்லாம் இங்கு வந்து காட்டி, நம் தமிழக பஸ்களையும் கேரள பாஜகவினர் சுக்குநூறாக்கினர்.

எஸ்.ஐ. மோகன அய்யர்

அப்போதுதான் எல்லை பகுதியான களியக்காவிளைக்கும் பாஜகவினர் நுழைந்தனர். அங்கும் எந்த பஸ்களையும் செல்ல விடாமல் அமர்க்களம் செய்தார்கள். அந்த நேரம் பார்த்து, கேரள அரசு பஸ் ஒன்று வந்து கொண்டிருந்தது. இதனை பார்த்ததும் பாஜகவினர் பாய்ந்து போய் அடிக்க போனார்கள். அப்போது பாதுகாப்பு பணியில் களியக்காவிளை போலீஸ் எஸ்.ஐ. மோகன அய்யர் என்பவர் இருந்தார்.

தொட்டு பாருங்க..

பஸ்ஸை தாக்க வருகிறார்கள் என்று தெரிந்து ஆவேசப்பட்டு, போராட்டக்காரர்களை தடுத்து நிறுத்தினார். அப்போதும் பாஜகவினர் பஸ்ஸை தாக்குவதிலேயே குறியாக இருந்தனர். ஒரு கட்டத்தில் நரம்புகள் புடைத்து எழுந்த எஸ்.ஐ., "எங்க.. பஸ்ஸை தொட்டு பாருங்க.. அப்பறம் இருக்கு உங்களுக்கு" என்று கர்ஜித்தார்.

ஓட்டம் பிடித்தனர்

இதை பார்த்து பயந்து மிரண்ட பாஜகவினர் பஸ்ஸை எதுவுமே செய்யாமல் ஓட்டம் பிடித்தனர். கேரள பஸ்ஸை தமிழக எஸ்.ஐ. சேதமின்றி காத்த இந்த சம்பவம்தான் இணையத்தில் வைரலானது. எஸ்.ஐ. மோகன அய்யரின் புகழ் கேரளாவரை பரவிவிட்டது. இப்போது, அம்மாநில போக்குவரத்து துறை அமைச்சர் போனில் பேசி வாழ்த்து சொல்லி இருக்கிறார்.

தமிழ் சிங்கம்

கேரள அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் மோகன அய்யருக்கு பாராட்டுக்களும் தெரிவிக்கப்பட்டது. இதை தவிர கேஎஸ்ஆர்டிசி நிறுவனம் 1000 ரூபாய் சன்மானமும் அறிவித்திருக்கிறது. இப்போது நம்ம ஊர் எஸ்.ஐ. மோகன அய்யருக்கு "தமிழ் சிங்கம்" என்ற பட்டப்பெயரை வைத்து அம்மாநில மக்கள் செல்லமாக அழைத்து தங்கள் வாழ்த்து மழையை பல்வேறு ரூபங்களில் பொழிந்து கொண்டிருக்கிறது.

0 coment�rios:

நடிகர் கதிர் போலீசாக நடிக்கும் சத்ரு படத்தின் டீசர் வெளியானது. பரியேறும் பெருமாள் படத்தை தொடர்ந்து கதிர் நடிக்கும் படம் சத்ரு. மைல் ஸ்டோன் ...

"போலீச அடிக்கிறதெல்லாம் சினிமால தான்... நிஜத்துல சிறுநீர் வரும்"!

நடிகர் கதிர் போலீசாக நடிக்கும் சத்ரு படத்தின் டீசர் வெளியானது.

பரியேறும் பெருமாள் படத்தை தொடர்ந்து கதிர் நடிக்கும் படம் சத்ரு. மைல் ஸ்டோன் மூவிஸ் சார்பில் திரு தயாரித்திருக்கும் இப்படத்தை நவீன் நஞ்சுந்தன் இயக்கியுள்ளார். இந்த படத்திற்கு நடிகர் அம்ரீஷ் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது. கதிர் இதில் முதல் முறையாக போலீசாக நடித்துள்ளார். படத்தில் அவர் பேசும், "போலீச அடிக்கிறதெல்லாம் சினிமால தான்... நிஜத்துல சிறுநீர் வரும்" எனும் வசனம் படுமிரட்டலாக இருக்கிறது.

டீசரை பார்க்கும் போது, இது ஒரு போலீஸ் கேங்ஸ்டர் படம் என்பது தெளிவாகிறது. பணத்துக்காக கடுங்குற்றங்களை செய்யும் ஒரு கும்பலுக்கும், போலீசுக்கும் இடையே நடக்கும் யுத்தம் தான் சத்ருவாக இருக்க முடியும்.

இந்த படத்தில் கதிருக்கு ஜோடியாக சிருஷ்டி டாங்கே நடிக்கிறார். வில்லனாக புதுமுகங்கள் சிலர் நடிக்கின்றனர்.

0 coment�rios: