Home Top Ad

நம்மில் பெரும்பாலானோர் பஸ் பயணம் செய்யும் போது வழியிலுள்ள ஹைவேஸ் ஓட்டல்கள் மற்றும் பேருந்து நிலையங்களில் உள்ள கடைகள் ஆகியவற்றில், உணவு பொரு...

முன்னாள் நிதியமைச்சர் ஏர்போர்ட்டில் டீ வாங்கி குடிக்க முடியாத சோக ட்வீட் ட்ரெண்டிங் ஆனது!

நம்மில் பெரும்பாலானோர் பஸ் பயணம் செய்யும் போது வழியிலுள்ள ஹைவேஸ் ஓட்டல்கள் மற்றும் பேருந்து நிலையங்களில் உள்ள கடைகள் ஆகியவற்றில், உணவு பொருட்களின் விலை யைக் கேட்டு நொந்து போயிருக்கிறோம்.. அப்போதெல்லாம் இந்த விலை சர்ச்சையை சீண்ட ஆளாளில்லாத நிலையில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்த்துக்கு நேர்ந்த ஓர் அதிர்ச்சியால் அந்த விலைவாசி விஷயம் ட்ரெண்டிங் ஆகி விட்டது ..

அதாவது சென்னை விமான நிலையத்தில் உள்ள காபிடே கடையில் ஒரு டீ கேட்டதாகவும், அந்த கடையின் ஊழியர் ஒரு கப் வென்னீர் மற்றும் ஒரு டீ பேக் எடுத்து வந்து வைத்து விட்டு ரூ.135 பில் கொடுத்ததாகவும், தான் மறுத்துவிட்டதாகவும் தன் ட்விட்டர் பேஜ்-ஜில் கூறியுள்ளார். மேலும் நான் செய்தது சரியா அல்லது தவறா? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

அந்த ட்வீட்டில், சென்னை விமான நிலையத்தில் உள்ள ஒரு காஃபி கடையில், டீ கேட்டேன். சுடு தண்ணீரும், ஒரு டீயும் கொடுத்தனர். விலை ரூ.135. விலையை கேட்டு அதிர்ச்சியடைந்த நான், டீ வேண்டாம் என்று கூறிவிட்டேன். நான் செய்தது சரியா? தவறா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் காபியின் விலை என்னவென்று கொஞ்சம் அதிர்ந்து போய் தான் கேட்டதாகவும் அதற்கு அந்த ஊழியர் ரூ.180 என்று கூறியதாகவும், இவ்வளவு விலைக்கு யார் வாங்கி குடிக்கின்றார்கள் என்று கேட்ட கேள்விக்கு ‘நிறைய பேர்’ என்று அந்த நபர் பதில் கூறியதாகவும் தெரிவித்துள்ளார். ஒருவேளை நான் தான் அப்டேட்டில் இல்லையா? என்றும் சிதம்பரம் கூறியுள்ளார்.

முன்னாள் நிதியமைச்சரின் இந்த ஏர்போர்ட்டில் டீ வாங்கி குடிக்க முடியாத சோக ட்வீட் ட்ரெண்டிங் ஆகி போச்சு!

0 coment�rios:

நீங்கள் புகைப்படத்தில் காணவிருக்கும் விலங்கினம் எங்கிருந்து வந்தது என கண்டு பிடிக்க முடியவில்லையாம். அதன் ஸ்டெம்செல் எடுத்து ஆராய்ந்த போது ...

இந்த அதிசய உயிரினத்தின் ரகசியம் தெரியுமா?... படித்துப் பாருங்க ஆடிப்போயிடுவீங்க

நீங்கள் புகைப்படத்தில் காணவிருக்கும் விலங்கினம் எங்கிருந்து வந்தது என கண்டு பிடிக்க முடியவில்லையாம். அதன் ஸ்டெம்செல் எடுத்து ஆராய்ந்த போது அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

அது ஆயிரம் வருடங்களுக்கு முற்பட்டதாம். மேலும் பூமியிலுள்ள எந்த ஒரு உயிரின செல்லோடும் ஒத்துப்போகவில்லையாம்.

நாம் உண்ணும் எதையும் அது உண்பதில்லையாம். சூரியனிலிருந்து ஆற்றலை கிரகித்துக் கொள்கிறதாம். இரவில் பறக்கிறதாம். இன்னும் ஆய்வுகள் நடந்து வருகிறது.

இந்த தகவலினை வெளியிட்டால் மக்கள் பீதி அடைவார்கள் என மத்திய உள்துறை அமைச்சகம் ரகசியம் காக்கிறதாம். அடுத்த வாரம் நாசாவிலிருந்து வருகிறார்களாம்.

இதன் செல்லை எடுத்து சாகாவரம் பெற்ற மனிதர்களை உருவாக்க முயல்கிறார்களாம். இதை விலைக்கு வாங்க 7500 டிரில்லியன் டொலர்களை இந்தியாவிற்கு கொடுக்க அமெரிக்கா முன் வந்துள்ளதாம்

ஆனால் இந்தியா 18575 டிரில்லியன் கேட்கிறதாம். இந்த தொகை கிடைத்தால் இந்தியர்கள் அனைவரும் கோடீஸ்வரர்கள் ஆகிவிடுவார்களாம்.

இந்த அதிசய உயிரினம் கேரளா நீலம்பூரியில் சிக்கியுள்ளது.


0 coment�rios:

சிலருக்கு ஒரு கண் மட்டும் அடிக்கடி துடிக்கும். அவ்வாறு துடிக்கும் போது, ஒருசில மூடநம்பிக்கைகளானது மக்கள் மத்தியில் உள்ளது. அது என்னவென்றா...

வலது கண் துடிக்கின்றதா? என்ன அர்த்தம் தெரியுமா?

சிலருக்கு ஒரு கண் மட்டும் அடிக்கடி துடிக்கும். அவ்வாறு துடிக்கும் போது, ஒருசில மூடநம்பிக்கைகளானது மக்கள் மத்தியில் உள்ளது.

அது என்னவென்றால், ஆண்களுக்கு வலது கண் துடித்தால், நல்லது நடக்கும், அதுவே பெண்களுக்கென்றால் தீமை ஏற்படும் என்றும், ஆண்களுக்கு இடது கண் துடித்தால் கெட்டது நடக்கப் போகிறது, அதுவே பெண்களுக்கானால் நல்லது நடக்கும் என்று நம்புகின்றனர்.

    உண்மையில் இது மிகப்பெரிய முட்டாள்தனமான ஒரு மூடநம்பிக்கை என்று தான் சொல்ல வேண்டும். ஆம், நல்லது கெட்டது நடப்பதற்கும், கண்களுக்கும் எப்படி தொடர்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று சிந்திக்காமல், குருட்டுத்தனமாக பலர் நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் உண்மையில் இந்த மாதிரி கண்கள் துடிப்பதற்கு, உடலில் ஒருசில பிரச்சனைகள் உள்ளது என்பதற்கான அறிகுறியாகும்.

அதுமட்டுமல்லாமல், கண்கள் துடிப்பதற்கு ம்யோகிமியா (myokymia) என்று பெயர். இத்தகைய கண் துடிப்பு அல்லது தசைச் சுருக்கம் ஏற்படுவதற்கு அதிகப்படியான மன அழுத்தம், தூக்கமின்மை, அதிகமாக காப்ஃபைன் உட்கொள்ளுதல் மற்றும் பல காரணங்களாகும். சிலருக்கு கண் துடிப்பானது ஒரு வாரம் அல்லது ஒரு மாதம் கூட இருக்கலாம்.
கண்கள் துடிப்பது ஏன்?

உடம்பில் உள்ள புறநரம்புகளின் இயல்புக்கு மீறிய மிகையான தூண்டலின் காரணமாக சில நேரங்களில் கண்களின் நரம்புகளும், அதனைச் சார்ந்த தசைகளும் துடிக்கும். இந்த கண்கள் துடிப்பிற்கு மயோகீமியா என்று மருத்துவ துறையில் கூறுவார்கள்.

குடிப்பழக்கம்,சோர்வு, கண்கள் வறட்சி, மன அழுத்தம், அதிக காபி குடிப்பது, சரிவிகித சத்துக்களின் பற்றாக்குறை, அலர்ஜி, அதிக நேரம் புத்தகம் படிப்பது போன்ற செயல்பாடுகள் கண்களின் ஆரோக்கியத்தைக் குறைத்து கண் துடிப்புகளை ஏற்படுத்துகிறது.

ஆனால் நீண்ட நாள் கண் துடிப்பு அல்லது வெட்டி இழுப்பது போன்ற பிரச்சனைகள் இருந்தால், அது மூளை தொடர்பான கோளாறாகவும் இருக்கலாம்.
கண் துடிப்பை தடுப்பது எப்படி?

    கண் துடிப்பினை தடுக்க, நன்றாக உறங்குவதுடன், கண்களுக்கு போதிய ஓய்வினைக் கொடுக்க வேண்டும். அல்லது கண்களுக்கு வெதுவெதுப்பான ஒத்தடம் கொடுத்தால், கண் நரம்புகளின் இறுக்கம் தளர்ந்து கண் துடிப்பது நிற்கும்.

0 coment�rios:

சினிமா என்றாலே தற்போது மக்களுக்கு கொஞ்சம் வெறுப்பாகவே உள்ளது. ஆனால், சினிமாவையும் தமிழகத்தையும் ஒரு போதும் பிரிக்க முடியாது. ஏனெனில், திர...

சினிமா ரசிகர்களை தியேட்டருக்கு அழைத்து வர சூப்பர் திட்டத்தை கொண்டு வந்த பிரபல திரையரங்கம்

சினிமா என்றாலே தற்போது மக்களுக்கு கொஞ்சம் வெறுப்பாகவே உள்ளது. ஆனால், சினிமாவையும் தமிழகத்தையும் ஒரு போதும் பிரிக்க முடியாது.

ஏனெனில், திரையரங்க டிக்கெட் விலையால் தான் ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளார்களே தவிர, சினிமா பார்ப்பதையே யாரும் தவிர்க்கவில்லை.

அப்படி சினிமா மீது ஆர்வம் உள்ள ரசிகர்களுக்கு சென்னையில் உள்ள பிரபல திரையரங்கம் ஒன்று செம்ம தகவல் ஒன்றை கூறியுள்ளது.

ரூ 349 கட்டினால் அந்த திரையரங்கில் எத்தனை படம் வேண்டுமானாலும் ஒரு மாதத்திற்கு பார்த்துக்கொள்ளலாம்.

அதேபோல் ரூ 1749 கட்டினால் 6 மாதத்திற்கு எத்தனை படம் வேண்டுமானாலும் பார்க்கலாம் என்று ஸ்பெஷல் தகவல் ஒன்றை அறிவித்துள்ளது.

0 coment�rios:

செல்வராகவன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் தமிழ் சினிமாவே கொண்டாடும் படம் ஆயிரத்தில் ஒருவன். பாகுபலிக்கு முன்பே இப்படி ஒரு கதைக்களத்தை எடுத...

ஆயிரத்தில் ஒருவன் படத்தில் முதலில் இந்த நடிகர் தான் நடிக்க இருந்தாராம்- நீண்ட நாளுக்கு பிறகு கிடைத்த தகவல்

செல்வராகவன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் தமிழ் சினிமாவே கொண்டாடும் படம் ஆயிரத்தில் ஒருவன். பாகுபலிக்கு முன்பே இப்படி ஒரு கதைக்களத்தை எடுத்து செல்வராகவன் மிரட்டியிருப்பார்.

ஆனால், அப்போது அந்த படம் ஒரு சில காரணங்களால் எதிர்ப்பார்த்த வெற்றியை பெறவில்லை, இந்நிலையில் ஆயிரத்தில் ஒருவன் படத்தின் பார்த்திபன் கதாபாத்திரத்தை நாங்கள் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியது இல்லை.

ஒரு வாக்கு வித்தியாசத்தில் தேசிய விருதை தவறவிட்ட கதாபாத்திரம், அப்படியிருக்கையில் பார்த்திபன் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்கவிருந்த நடிகரே வேறு ஒருவர் தானாம்.

அது செல்வராகவன் தம்பி பிரபல நடிகர் தனுஷ் தான் நடிப்பதாக இருந்ததாம், சோழர்களின் இளவரசராக தனுஷை நடிக்க வைக்க செல்வராகவன் முயற்சி செய்ய, ஒரு சில கால்ஷிட் பிரச்சனையால் அதில் தனுஷ் நடிக்க முடியாமல் போனதாம்.

0 coment�rios: