Home Top Ad

சமீபத்தில் இந்தியாவிற்கு "உயரமான சிலைகள்" மீதான போதை உருவாகி இருப்பதை நையாண்டியாக தெரிவிக்கும் நோக்கில் மார்க்கண்டேய கட்ஜூ அவர்...

விண்வெளிக்கு லிஃப்ட்; ஜப்பானை பார்த்து வாய் பிளக்கும் நாசா!

சமீபத்தில் இந்தியாவிற்கு "உயரமான சிலைகள்" மீதான போதை உருவாகி இருப்பதை நையாண்டியாக தெரிவிக்கும் நோக்கில் மார்க்கண்டேய கட்ஜூ அவர்கள், சமூக வலைததளத்தில் ஒரு கருத்தை தெரிவித்து. அதில் போகும் போக்கை பார்த்தால் விண்வெளிக்கி செல்ல ராக்கெட்டுகள் தேவைப்படாது, சிலைகள் போதும் என்பது போல் கூறி இருந்தார். அது ஜப்பான் நாட்டு ஆராய்ச்சியாளர்களின் காதில் விழுந்தது போல ஒரு சோதனை நிகழ்வுள்ளது.

ஜப்பான் நாட்டில் உள்ள ஷிசோக்கா பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் குழு ஒன்று, ஜப்பான் ஏரோஸ்பேஸ் எக்ஸ்ப்ளோரர் ஏஜென்சி (JAXA) உடன் இணைந்து "ஒரு நம்பமுடியாத" திட்டத்தின் கீழ் பணியாற்றுகிறது. அது வரவிருக்கும் வாரத்தில் ஒரு மினியேச்சர் பதிப்பு ஸ்பேஸ் லிஃப்ட்டர்களின், அதாவது விண்வெளியை நோக்கி செல்லும் லிஃப்ட் சோதனைகளைத் தொடங்குகிறது. இது அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையான நாசாவிற்கே வாராத யோசனை ஆச்சே என்று நினைக்கிறீர்கள் தானே? இருக்கலாம்!

விண்வெளி எலிவேட்டர்

இதுவரை நடத்தப்பட்ட சோதனைகள் ஆனது குறைந்த தூரத்தில் உள்ள மற்றும் எளிமையான நட்சத்திரங்களை அடையும் நோக்கத்திலான சிறிய சிறிய படிகளை செயல்படுத்தியது. இந்த விண்வெளி எலிவேட்டர் ஆனது 6 செ.மீ உயரம், 3 செ.மீ நீளம், மற்றும் 3 செ.மீ அகலம் கொண்ட ஒரு சிறிய பெட்டியைக் கொண்டிருக்கும். இரண்டு சிறிய க்யூப்சாட்ஸ்க்கு (CubeSats) இடையேயான இடைவெளியில் இடைநிறுத்தப்பட்ட ஒரு 10 மீட்டர் கேபிள் வழியாக இந்த பெட்டி நகரும். பெட்டியின் இயக்கம் செயற்கைக்கோள் வழியாக கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்.

எலிவேட்டர் டெஸ்ட்

பல்கலைக்கழகத்தின் செய்தித் தொடர்பாளர் ஒரு பேட்டியில், "விண்வெளியில் நடத்தப்படும் இந்த எலிவேட்டர் டெஸ்ட் ஆண்டு உலகின் முதன்மையான பரிசோதனையாகும்" என்றார். கடந்த 1895 ஆம் ஆண்டில், ரஷ்ய அறிவியலாளர் ஆன கோன்ஸ்டாண்டின் சியோல்கோவஸ்கி எண்ணத்தில் உதித்த இந்த ஸ்பேஸ் லிஃப்ட் ஆனது சாத்தியப்படாமல் போக பல முக்கியமான காரணங்கள் இருந்தன.

பூமியின் மேற்பரப்பில் இருந்து விண்வெளிக்கு நகரும் ஒரு கேபிள்

ஸ்பேஸ் லிப்டின் முக்கிய யோசனையே, அது செல்ல வேண்டிய இடத்தை சென்று அடையும் வரை, பூமியின் மேற்பரப்பில் இருந்து விண்வெளிக்கு நகரும் ஒரு கேபிள் ஆனது விண்வெளி சுற்றுப்பாதையில் நிலுவையில் இருக்கும் என்பது தான். மற்றொரு முக்கியமான விடயமாக, இந்த கேபிளுக்கு தேவையான பொருள்கள் வேறு எந்தப் பொருளையும் விட இலகுவாகவும், வலுவாகவும் இருக்க வேண்டும், அப்போதுதான் விண்வெளியில் கிடைக்கும் அழுத்தத்தை அதனால் தாக்கு பிடிக்க முடியும்.

ஒபாயாஷி

ஷிசோக்கா பல்கலைக்கழகத்துடன் ஒத்துழைத்த ஒரு ஜப்பானிய கட்டுமான நிறுவனமான ஒபாயாஷி, 2050 ஆம் ஆண்டுக்குள் ஒரு விண்வெளி எலிவேட்டரை கட்டும் இலக்கைக் கொண்டு இருப்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. கடந்த 2014 ஆம் ஆண்டில் இந்த திட்டம் அறிமுகப்படுத்தியபோது, ​​"தற்போதைய தொழில்நுட்பங்களில் இந்த கருத்தை செயல்படுத்தும் அளவிற்கான போதுமானதாக திறன்கள் இல்லை, இருந்தாலும் எங்களின் திட்டம் யதார்த்தமானது என்று கூறப்பட்டு இருந்தது.

96000 கிலோ மீட்டர்

இந்த திட்டத்திற்கு சுமார் 96000 கிலோ மீட்டர் அளவிலான கார்பன் நானோகுழாய் கேபிள்கள், பூமி மீது 400 மீட்டர் விட்டம் கொண்ட 'எர்த் போர்ட்' (அது 12500 டன் எதிர் எடையை தாங்கும் அளவு பலமானதாக இருக்க வேண்டும்) ஆகியவைகள் தேவைப்படுகிறது. கார்பன் நானோகுழாய்கள் எஃகை விட அதிக இழுவிசை வலிமை கொண்டதாக அறியப்படுகின்றன, அதனால் தான் இந்த குறிப்பிட்ட ஸ்பேஸ் எலிவேட்டர் திட்டத்திற்கு அவைகள் தேர்ந்து எடுக்கப்பட்டு உள்ளன.

விண்வெளி ஆராய்ச்சிக்கான நிதி

மிகவும் சாத்தியமற்றகாக கருதப்படும் இந்த விண்வெளி உயர்த்தி (எலிவேட்டர்) ஆனது கட்டமைக்கப்பட்டால் அது எதிர்காலத்தில் சாத்தியமான விண்வெளி ஆராய்ச்சிக்கான நிதி சுமைகளை குறைக்கும் என்பதில் எந்த விதமான சந்தேகமும் வேண்டாம். இன்னும் சொல்லப்போனால் தற்போது ஒரு விண்வெளி ஏவுதலுக்கு ஒரு பவுண்டு எடைக்கு சுமார் 40,000 முதல் 50,000 டாலர்கள் வரை செலவு ஆகிறது. ஆனால் இந்த விண்வெளி எலிவேட்டர் சாத்தியம் ஆன (அனுமானங்களின் அடிப்படையிலான ஆரம்ப ஆய்வுகளின் கீழ்) பிறகு பவுண்டுக்கு 100 டாலர்கள் என்கிற நிலை உருவாகலாம். ஆகமொத்தம் எதிர்காலத்தில் நிகழப்போகும் விண்வெளி பயணம் ஆனது நிச்சயமாக மிகவும் உற்சாகமாக இருக்கும்.

0 coment�rios:

தோட்டக்கலையின் மீது பல பேருக்கு ஈடுபாடு உள்ளது. தங்கள் வீட்டை அலங்கரிக்க பூச்செடி தொட்டிகளை வாங்கி குவிப்பார்கள். அவர்களை பொறுத்த வரை தோட்ட...

நகர்ப்புற வீடுகளுக்கான சில தோட்டக்கலை இரகசியங்கள்!!!

தோட்டக்கலையின் மீது பல பேருக்கு ஈடுபாடு உள்ளது. தங்கள் வீட்டை அலங்கரிக்க பூச்செடி தொட்டிகளை வாங்கி குவிப்பார்கள். அவர்களை பொறுத்த வரை தோட்டக்கலை என்பது ஓய்வில் செய்யக்கூடிய ஒரு பொழுது போக்காகும். சில நேரம் ஈடுபாட்டையும் தாண்டி உயிராக அதன் மீது நாட்டம் கொண்டுள்ளனர் சிலர்.

நீங்கள் உண்ணுவதற்கு ஆரோக்கியமான காய்கள் மற்றும் பழங்களை கூட வளர்க்கலாம். ஆனால் நகர்ப்புற வீடு என்றால் அவைகளில் சில வேற்றுமைகள் இருக்கும். சில பேரின் வீட்டில் தோட்டத்திற்கென தனி முற்றம் என்பதே இருப்பதில்லை. உங்களுக்கு இந்த கலையின் மீது ஆர்வம் இருந்தும் கூட வீட்டில் இடம் இல்லாத போது ஏமாற்றம் அடைவார்கள் சிலர்.

ஆனால் வருத்தப்படுவதற்கு எதுவுமே இல்லை. தோட்டம் வைப்பதற்கு இடம் இல்லை என்றால் தான் என்ன? அழகிய தொட்டிகளில் சிகளை வைத்து, அவைகளை ஜன்னலின் மீது அல்லது சமையலறை ஜன்னலின் மீது அழகாக அடுக்கி, தோட்டக்கலையின் மீது இருக்கும் உங்கள் ஆர்வத்தை நிறைவேற்றிக் கொள்ளுங்கள்.

ஆர்வம் தான் முக்கியம், அது இருந்தால் அதை எந்த வடிவில் வேண்டுமானாலும் நிறைவேற்றிக் கொள்ளலாம். எந்த காலமாகட்டும் அல்லது எந்த இடமாகாட்டும், நாங்கள் கூறும் ரகசியங்களை தெரிந்து கொண்டால், இந்த கலையின் மீதுள்ள ஆர்வத்தை நிறைவேற்றிக் கொள்ளலாம். உங்களுக்கு தேவையானது எல்லாம் சில தொட்டிகள் மற்றும் என்ன வளர்க்க வேண்டும் என்பது மட்டுமே. மற்றது எல்லாம் பெரிய விஷயம் அல்ல.

சரி, நகர்ப்புற வீட்டில் இருக்கும் நீங்கள் தோட்டக்கலையை மேற்கொள்ள உங்களுக்காக சில ரகசியங்களை கூறப் போகிறோம். ஆர்கானிக் வகை செடிகளை உங்கள் வீட்டில் வளர்க்கலாம். அதனால் இந்த அழகு ரகசியங்களை கவனமாக படியுங்கள்.

கிடைக்கும் இடத்தை புத்திசாலித்தனமாக பயன்படுத்தவும்

உங்கள் வீட்டிற்கு வெளியே அழகிய முற்றம் ஒன்று இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அது எவ்வளவு பெரியது என்பதை கவனியுங்கள். அங்கே போதிய சூரிய வெளிச்சம் விழுகிறதா என்பதை முதலில் கவனியுங்கள். ஒரு வேளை, அங்கே மண் இருந்தால், மண்ணின் வகையை சோதனை செய்யுங்கள். ஆர்கானிக் செடி அல்லது பூ வகையை தேர்ந்தெடுப்பதற்கு முன், முதலில் முற்றத்தின் அனைத்து நிலைகளையும் சோதனை செய்து கொள்ள வேண்டும். ஆம், உங்களுக்கு முழுமையான தோற்றத்தை உண்டாக்கும் ஆசை இருக்கலாம். ஆனால் போதிய இடம் இல்லையென்றால், இருக்கும் இடத்தை எப்படி அழகாக்குவது என்று யோசியுங்கள். ஒரு வேளை, பக்கத்து வீட்டுக்காரருடன் அந்த இடத்தை பகிரும் நிலை ஏற்பட்டால், அவர்களுடன் பேசி அவர்களின் இடத்தை கொஞ்சம் பயன்படுத்திக் கொள்ளுங்கள். யோசித்துப் பாருங்கள்.

தண்ணீர் வரத்தை சோதனை செய்து கொள்ளுங்கள்

முற்றம் ஏதும் இல்லாமல் தோட்டம் போட விரும்புபவர்கள், மனதில் வைத்துக் கொள்ள வேண்டிய முக்கியமான ஒன்று இது. எங்கிருந்து தண்ணீர் கொண்டு வர திட்டமிட்டுள்ளீர்கள்? ஹோஸ் பைப் வைத்து தண்ணீர் எடுத்து வர வேண்டுமா அல்லது வாளியில் தண்ணீர் நிறைத்து தூக்கி கொண்டு வர வேண்டுமா? ஒரு வேளை, வாளியில் பிடித்துக் கொண்டு வர வேண்டும் என்றால் அது கஷ்டமாக இருக்கும். அதனால் தான் சொன்னோம், தோட்டம் அமைக்கும் முன்பு, போதிய திட்டமிடுதல் தேவை என்று. மேலும் தண்ணீருக்கான கட்டுப்பாட்டின் மீதும் கவனம் தேவை. உங்கள் வீட்டில் கோடைக்காலத்தில் தண்ணீர் பிரச்சனை இருந்தால், அதற்காக உங்கள் செடிகள் வாடக்கூடாது அல்லவா?

தோட்டம் அமைப்பதை பற்றிய திட்டமிடுதல்

தோட்டத்தை அமைப்பதற்கு முன்பு என்ன செடிகள் வளர்க்கப் போகிறீர்கள் என்பதை திட்டமிடுவது அவசியம். என்ன வளர்க்க போகிறீர்கள் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்: சிறு செடி, உணவு, செடிகள், பூக்கள் போன்றவைகள்.ஒரு வகை செடி தான் வளர்க்க போகிறீர்களா அல்லது அனைத்து வகையிலும் ஒவ்வொன்று வளர்க்க போகிறீர்களா? உங்கள் முதன்மை எதன் மீது என்பதை தீர்மானித்துக் கொள்ளுங்கள். நீங்கள் விரும்பிய செடிகளை வளர்க்க இந்த பதில்கள் உங்களுக்கு இடத்தை ஏற்படுத்திக் கொடுக்கும். எவ்வகை செடிகளுக்கு அதிக சூரிய வெளிச்சம் தேவை, தேவையில்லை என்பதையும் தெரிந்து கொள்வீர்கள். போதிய இடம் இல்லாத போது, திட்டமிடுதல் மிகவும் முக்கியம்.

புதுமையான தோட்டம்

போதிய இடம் இல்லாத போது, உங்கள் ஆக்கப்படைப்பை வெளிக்கொண்டு வாருங்கள். எப்போதும் வளர்க்கிற காயையும் பழங்களையும் தான் வளர்க்க வேண்டும் என்றில்லை. நீங்களே ஆராய்ச்சி செய்து, புதுமையான ஒன்றை திட்டமிடுங்கள். இவ்வகை சூழ்நிலைகள் உங்களின் ஆக்கப்படைப்பு உங்களுக்கு பெரிதும் உதவும்.

தலைகீழ் தோட்டம்

தற்போது, இவ்வகை தோட்டத்தை தான், நகர்ப்புற வாசிகள் பலரும் பின்பற்றுகிறார்கள். உண்மையிலேயே இது ஒரு சுவாரஸ்யமான போக்காகும். இந்த முறையால், உங்கள் தோட்டத்தின் அளவு பெரிதாகி, கிடைத்த சிறு இடத்தை நன்றாக பயன்படுத்தலாம். உயரமான தொட்டிகளை பயன்படுத்தி அதில் செடிகளை வையுங்கள். ஜன்னல் பெட்டிகளை பயன்படுத்தினால் இடத்தை அடைக்காமலும் இருக்கும். இந்த ஐடியாவால் கிடைத்த சிறு இடத்தில், அதிகமாக வளர்க்கலாம். கிடைத்த சின்ன இடத்தை பயன்படுத்த கிராதி பெட்டிகளை பயன்படுத்துங்கள்.

வீட்டினுள் தோட்டம்

சிறு செடிகளை வீட்டினுள்ளேயே வளர்க்கலாம். வீட்டினுள்ளேயே பல செடிகளை வளர்க்கலாம். அவைகள் நன்றாக வளர, அதன் மீது சூரிய ஒளி படும் வகையில் ஜன்னல் இருக்க வேண்டும். சூரிய வெளிச்சம் தேவைப்படும் செடிகளை வீட்டிற்கு வெளியே வளர்க்கலாம்.

0 coment�rios:

உங்கள் வீட்டு பிரிட்ஜில் காய்கறிகள், பால், மீதம் உள்ள உணவு என்று ஓரிரு வாரங்களாக அப்படியே உள்ளதா? கவலை வேண்டாம். இவற்றை ஒழுங்கமைக்க சில குற...

பிரிட்ஜில் எந்த பொருள்களை எந்த இடத்தில் வைக்க வேண்டும் என்று தெரியுமா? தெரிஞ்சிக்கோங்க...

உங்கள் வீட்டு பிரிட்ஜில் காய்கறிகள், பால், மீதம் உள்ள உணவு என்று ஓரிரு வாரங்களாக அப்படியே உள்ளதா? கவலை வேண்டாம்.

இவற்றை ஒழுங்கமைக்க சில குறிப்புகள் உள்ளன. அவற்றைப் பற்றி இப்போது பார்க்கலாம். உங்கள் பிரிட்ஜில் பொதுவாக மிகவும் குளிரான பகுதி சற்று சூடான பகுதி என்று சில இடங்கள் உள்ளன. ஆகவே குறிப்பிட்ட பொருட்களை குறிப்பிட்ட இடத்தில் வைப்பதன் மூலம் அதன் தன்மையை அப்படியே பாதுகாக்க முடியும்.

பிரிட்ஜ்

சில பொருட்களை பிரிட்ஜில் தனியாக வைப்பதன் மூலம் அதன் சுகாதாரம் பாதுகாக்கப்படுகிறது. குறிப்பாக இறைச்சி, பால் பொருட்கள் அல்லது காய்கறிகள், சமைக்காத பொருட்கள் போன்றவற்றை சமைத்த உணவுக்கு அருகில் வைப்பதை தவிர்க்க வேண்டும்.

உயர் வெப்பநிலையில் சமைக்கப்படும் உணவுப் பொருட்களை பிரிட்ஜின் அடிப்பகுதியில் வைக்க வேண்டும். இந்த இடத்தில் தான் அதிக குளிர்ச்சி இருக்கும்.

காய்கறிகள் மற்றும் பழங்கள்

குறைந்த ஈரப்பதம் அல்லது க்ரிஸ்பர் என்ற பகுதி உங்கள் பிரிட்ஜில் இருந்தால் அந்த இடத்தில் பழங்களை சேமித்து வைக்கலாம். பழங்களுக்கு பொதுவாக குறைந்த ஈரப்பதம் மட்டுமே தேவைப்படும். அதிக ஈரப்பதம் உள்ள இடத்தில் காய்கறிகளை வைக்க வேண்டும்.

இறைச்சி மற்றும் பால் பொருட்கள்

பிரிட்ஜின் அடிப்பகுதியில் குளிர்ச்சி அதிகமாக இருப்பதால் அந்த இடத்தில் இறைச்சியை சேமிக்க வேண்டும். இதனால் மற்ற பொருட்கள் கெட்டுப் போவது தடுக்கப்படும். இறைச்சியின் சாறு பிரிட்ஜில் சொட்டாமல் இருக்கும் விதத்தில் இறைச்சியை கவனமாக மூடி ஒரு பாத்திரத்தில் வைக்கவும். குறிப்பாக மற்ற பொருட்களை வைத்து அதன் மேலே உள்ள அடுக்கில் இறைச்சியை வைக்கும்போது அதிக கவனம் தேவை. இந்த பகுதியை அடிக்கடி சுத்தம் செய்து வைப்பது நல்லது.

பிர்ட்ஜின் பாதி பகுதிக்கு மேலே, பால் பொருட்களை சேமித்து வைக்கலாம். முட்டை மற்றும் சமைக்காத மற்ற பொருட்களைக் கூட அந்த இடத்தில் வைத்துக் கொள்ளலாம்.

மீதமாகும் உணவுகளை எங்கே வைப்பது?

தயார் செய்யப்பட்ட உணவு மற்றும் மீதம் உள்ள உணவை பொதுவாக பிரிட்ஜின் மேல் பகுதியில் வைக்கலாம். இந்த பகுதி மற்ற பகுதிகளை விட சற்று குளிர்ச்சி குறைவாக இருக்கும். இதனால் உணவு எளிதில் கெட்டுப் போகாமல் பாதுகாக்கப்படும். மேலும் மேல் பகுதியில் இவற்றை வைப்பதால் உங்களால் எளிதில் மறக்காமல் அதனை எடுத்து காலி செய்ய முடியும்.


பிரிட்ஜின் கதவு பகுதியில் என்ன வைக்கலாம்?

சுவையூட்டிகள் மற்றும் குளிர்பானங்களை பிரிட்ஜின் கதவு பகுதியில் வைக்கலாம். இந்த பகுதி பிரிட்ஜில் அதிக வெப்பமயமான பகுதி, கதவை அடிக்கடி திறப்பதும் மூடுவதுமாக இருப்பதால் இந்த இடத்தில் இவற்றை வைக்கலாம். குளிர்பானங்களை வைப்பதால் சிந்தும் வாய்ப்பு இருப்பதால் இந்த பகுதியை அடிக்கடி சுத்தம் செய்வதும் அவசியமாகும். இந்த பகுதியில் பால் வைப்பது முற்றிலும் தவறான செயலாகும். பொதுவாக பாலை குளிர்ச்சியான இடத்தில் வைக்கவேண்டும்.

0 coment�rios:

ஸ்மார்ட் போனை ஒரு கையால் பிடிப்பது நீங்கள் உங்கள் ஸ்மார்ட் போனில் எதாவது செய்தி படிக்கும் போதோ, டைப் செய்யும் போதோ, ஸ்கீரினை நகர்த்தும் ப...

செல்போன எப்படி புடிப்பீங்கனு சொல்லுங்க... நீங்க எப்படிபட்டவர்னு சொல்றோம்...



ஸ்மார்ட் போனை ஒரு கையால் பிடிப்பது

நீங்கள் உங்கள் ஸ்மார்ட் போனில் எதாவது செய்தி படிக்கும் போதோ, டைப் செய்யும் போதோ, ஸ்கீரினை நகர்த்தும் போதோ ஒரு கையை மட்டும் பயன்படுத்துபவராக இருந்தால் நீங்கள் மிகவும் நம்பிக்கையான நபராக இருப்பீர்களாம். தனியாளாக இருந்து அனைத்தையும் சமாளித்து விரும்பிய முடிவுகளை எடுத்து அதில் வெற்றியும் அடைவீர்களாம்.

அது மட்டுமல்லாமல் ஒரு நபருடனான உறவை தீர்மானிக்க அந்த நபர் நம் வாழ்க்கையில் தேவையா இல்லையா என்பதை தீர்மானிக்கவும் போதுமான நேரத்தை செலவழிப்பீர்கள். அதனால் தான் என்னவோ மற்றவருக்கு நீங்கள் தனிமைப்படுத்தப்பட்ட அல்லது ஒதுக்கப்பட்ட நபராக தெரிவீர்கள்.

ஒரு கையில் பிடித்துக் கொண்டு மறு கை பெருவிரலால் ஆப்ரேட் செய்தல்

இந்த மாதிரி ஸ்மார்ட் போனை கையாள்பவர்கள் புத்திசாலியாக இருப்பார்களாம் . உங்கள் உள்ளுணர்வு சரியானதாகவும் மிகுந்த புத்திசாலித்தனத்தை கொண்டும் காணப்படுவீர்கள். எந்தவொரு காரியத்திலும் முதல் அடி எடுத்து வைப்பதற்கு முன் பல அடி முன்னால் சென்று யோசிப்பீர்கள். உங்கள் வாழ்க்கையில் நடக்கும் அனைத்தையும் முன்னரே புரிந்து கொள்வீர்கள். இதனால் உங்களை ஏமாற்றுவது மிகவும் கடினம்.

இருப்பினும் நீங்கள் காதல் விஷயங்களில் கடினமாக நடந்து கொள்ளும் நபராக இருப்பீர்கள். உறவில் நீங்கள் சிந்திக்காமல் எடுக்கின்ற ஒரு சில முடிவுகள் உங்கள் உறவை பாதிக்க கூடும். காதல் என்று வரும் போது நிறைய சட்ட திட்டங்களை பேசும் நபராக மாறி விடுவீர்கள்.

இரண்டு கைகளிலும் பிடித்துக் கொண்டு ஆப்ரேட் செய்வது

ஸ்மார்ட் போனை இரண்டு கைகளிலும் பிடித்து கொண்டு கையாள்பவரா நீங்கள் அப்போ உங்கள் லவ் ரெம்ப பாஸ்ட்டாக இருக்கும். நீங்கள் விரைவான திறமையான முடிவுகளை எடுக்கும் நபராக இருப்பீர்கள். வேகமாக மாறும் சூழலுக்கு ஏற்ப மாறி திறம்பட செயல்படுவீர்கள்.

ஆனால் காதல் என்று வரும் போது உங்கள் வேகம் போதாது. உண்மையைச் சொல்லப் போனால் நீங்கள் காதலில் எதிர் தான். உங்கள் பயமே அன்பானவருடான நெருக்கத்தை இழக்க வைக்கும்.

ஒரு கையில் பிடித்துக் கொண்டு இரண்டாவது கையின் ஆள்காட்டி விரலால் கையாள்வது

இந்த மாதரி ஸ்டைல போனை கையாளும் நபர்கள் க்ரீயேட்டிவ் திறன் கொண்டவராக இருப்பார்களாம். நிறைய ஐடியாக்களை உங்கள் வாழ்க்கையில் பயன்படுத்தி அதை திறம்பட முடித்தும் காட்டுவீர்கள். உங்களுடைய எண்ணங்களை ஒன்று திரட்டி உங்களுக்கென்ற உலகில் தனியாக வாழ்வீர்கள். ஓவியம் தீட்டிதல் அல்லது புத்தகம் எழுதுதல் போன்றவை உங்களுக்கு வெற்றி தரும்.

காதல் என்று வரும் போது உங்கள் படைப்பாற்றல் அப்படியே கூச்ச சுபாவமாக மாறி விடும். இதனாலேயே நீங்கள் காதல் உறவில் செல்ல திணறுவீர்கள். ஆனால் உங்களை யாரும் புரிந்து கொண்டால் அவருடனான உறவு நன்றாகவே இருக்கும். கண்டிப்பாக உங்கள் ஆளுமை திறனை கண்டு அவர்கள் ஆச்சரியப்படுவார்கள்.

என்னங்க நீங்க எந்த ஸ்டைல போன பிடிக்கிறீங்க? நீங்களும் எப்படிப்பட்ட நபர்னு தெரிஞ்சுகிட்டீங்களா.


இதை ஆராயும் விதமாக ஸ்மார்ட் போனைக் கொண்டு ஒரு சுவாரஸ்யமான சோதனையை மேற்கொண்டனர். சரி வாங்க அதைப் பற்றி கீழ்க்காணும் படங்களின் மூலம் அறிந்து கொள்ளலாம்.
கிரக நிலை ஜோதிடம், கை ரேகை ஜோதிடம் மாதிரி இதுவும் ஸ்மார்ட் போன் ஜோதிடம் என்றே கூறலாம். ஆமாங்க 2020 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பு படி கிட்டத்தட்ட 3 பில்லியன் மக்கள் ஸ்மார்ட் போனை பயன்படுத்துவார்கள் என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இதை நீங்கள் தொழில்நுட்ப வளர்ச்சியாக ஒருபக்கம் பார்த்தாலும் மனநிலை சார்ந்ததாக பார்க்க வேண்டும் என்று மன தத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். ஏனெனில் நாம் ஸ்மார்ட் போனை கையாளும் விதம், பயன்படுத்தும் முறைகள் போன்றவைகள் நம் குணத்தை வெளிப்படுத்துகின்றன என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

0 coment�rios:

இந்தாண்டும் தமிழ் சினிமாவில் மொத்தம் 171 நேரடி தமிழ் படங்கள் வெளியாகியுள்ளன. இந்தியாவில் பாலிவுட், டோலிவுட்டுக்கு அடுத்தப்படியாக மிகப்பெரிய...

பிளாஷ்பேக் 2018 : இந்த வருடம் வெளியான 171 படங்கள்.... முழு பட்டியல் இதோ!

இந்தாண்டும் தமிழ் சினிமாவில் மொத்தம் 171 நேரடி தமிழ் படங்கள் வெளியாகியுள்ளன.

இந்தியாவில் பாலிவுட், டோலிவுட்டுக்கு அடுத்தப்படியாக மிகப்பெரிய சினிமாத்துறை கோலிவுட் தான். உலகம் முழுவதிலுமே தமிழ் சினிமாவுக்கு என தனி மவுசு உண்டு.

தமிழ் சினிமாவை பொறுத்தவரை எப்போதும் பெரிய பட்ஜெட் படங்களைவிட , சிறிய பட்ஜெட் படங்கள் தான் அதிகளவில் வெளியாகும். இந்த வருடமும் அதே நிலைதான்.

சினிமா தொழில் டிஜிட்டல் மயமானப்பின்னர், கடந்த சில வருடங்களாக ஆண்டுக்கு 200க்கும் அதிகமான திரைப்படங்கள் வெளியாகின. ஆனால் இந்த ஆண்டு 171 படங்கள் மட்டுமே வெளிவந்துள்ளன.

அவை என்னப்படங்கள் என பார்ப்போம்...

ஜனவரி மாதம்

ஜனவரி 5: காவாலி, டிசம்பர் 13, வாநாய்கள் ஜாக்கிரதை, பார்க்க தோனுதே, சாவி, விதி மதி, உல்டா
ஜனவரி 12: குலேபகாவலி, ஸ்கெட்ச், தானா சேர்ந்த கூட்டம்
ஜனவரி 19: வீரத் தேவன்
ஜனவரி 26: நிமிர், மன்னர் வகையறா, சரணாலயம்

பிப்ரவரி மாதம்

பிப்ரவரி 2: மதுர வீரன், ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன், படை வீரன், விசிறி, ஏமாலி
பிப்ரவரி 9: கலகலப்பு 2, நரிவேட்டை, சவரக்கத்தி, சொல்லிவிடவா
பிப்ரவரி 16: மனுசனா நீ, மேல்நாட்டு மருமகன், நாகேஷ் திரையரங்கம், நாச்சியார், வீரா
பிப்ரவரி 23: 6 அத்தியாயம், கூட்டாளி, காத்தாடி, கேணி, மெர்லின், ஏன்டா தலையில எண்ண வெக்கல, தமிழனானேன்

மார்ச் மாதம்

மார்ச் 2: தாராவி
மார்ச் 20: மெர்க்குரி, முந்தல், பிப்ரவரி 27: தியா, பாடம், பக்கா

ஏப்ரல் ஸ்டிரைக்

ஏப்ரல் மாதத்தில் ஒட்டுமொத்த திரைத்துறையும் ஸ்டிரைக்கில் இருந்ததால் எந்த படமும் ரிலீசாகவில்லை. அதேபோல், படப்பிடிப்பும் நடைபெறவில்லை.

மே மாதம்

மே 4: அலைபேசி, இருட்டு அறையில் முரட்டு குத்து, காத்திருப்போர் பட்டியல்
மே 11: இரவுக்கு ஆயிரம் கண்கள், இரும்புத்திரை
மே 17: பாஸ்கர் ஒரு ராஸ்கல்
மே 18: காளி, காதலர்கள் வாலிபர் சங்கம், செயல், பால்காரி
மே 25: அபியும் அனுவும், ஒரு குப்பைக் கதை, காலக் கூத்து, பேய் இருக்கா இல்லையா, புதிய ப்ரூஸ்லீ, செம

ஜூன் மாதம்

ஜூன் 1: ஆண்டனி, மோகனா, பஞ்சுமிட்டாய், வயக்காட்டு மாப்பிள்ளை, எக்ஸ் வீடியோஸ்
ஜூன் 7: காலா , ஜுன் 8: சமூக வலைப்பின்னல்
ஜூன் 14: கோலி சோடா 2
ஜூன் 15: கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாய்ங்ய, கன்னக்கோல், நானுடன் நீ
ஜூன் 22: ஆந்திரா மெஸ், என்ன தவம் செய்தேன், கார்கில், ட்ராபிக் ராமசாமி, டிக் டிக் டிக்
ஜூன் 29: அசுரவதம், சேம போத ஆகாதே, எதுக்குடி காதலிச்ச

ஜூலை மாதம்

ஜூலை 6: இட்லி, காசு மேல காசு, மிஸ்டர் சந்திரமௌலி, ரோஜா மாளிகை
ஜூலை 12: தமிழ்ப் படம் 2
ஜூலை 13: கடைக்குட்டி சிங்கம் படம், நண்பர்கள்
ஜூலை 20: போத, மாயா பவனம், ஒண்டிக் கட்ட, விண்வெளி பயணக் குறிப்புகள்
ஜூலை 27: பிரம்மபுத்ரா, ஜுங்கா, மோகினி

ஆகஸ்ட் மாதம்

ஆகஸ்ட் 3: அரவிடம், எங்க காட்டுல மழை, கஜினிகாந்த், கடல் குதிரைகள், கடிகார மனிதர்கள், காட்டுப்பயன் சார் இந்த காளி, மணியார் குடும்பம், நாடோடி கனவு, போயா வேலையப் பாத்துக்கிட்டு, உப்பு புளி காரம்
ஆகஸ்ட் 10: அழகு மகன், காதல் எனக்கு பிடிக்கும், பியார் பிரேமா காதல், விஸ்வரூபம் 2
ஆகஸ்ட் 17: கோலமாவு கோகிலா, மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன, ஓடு ராஜா ஓடு, ஓ காதலனே
ஆகஸ்ட் 24: எச் சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம், களரி, லக்ஷ்மி, மேற்குத் தொடர்ச்சி மலை
ஆகஸ்ட் 30: இமைக்கா நொடிகள்
ஆகஸ்ட் 31: 60 வயது மாநிறம், ஆருத்ரா, அண்ணனுக்கு ஜே

செப்டம்பர் மாதம்

செப்டம்பர் 7: அவளுக்கென்ன அழகிய முகம், படித்தவுடன் கிழித்து விடவும், ராஜாவின் பார்வை ராணியின் பக்கம், டார்ச்லைட், தொட்ரா, வஞ்சகர் உலகம்

செப்டம்பர் 13: சீமராஜா, யு டர்ன்
செப்டம்பர் 21: ஏகாந்தம், மேடை, ராஜா ரங்குஸ்கி, சாமி 2
செப்டம்பர் 27: செக்கச் சிவந்த வானம்,
செப்டம்பர் 28: பரியேறும் பெருமாள், ஆடவர்

அக்டோபர் மாதம்

அக்டோபர் 4: விஜய் சேதுபதி - திரிஷா நடித்த '96'
அக்டோபர் 5: ராட்சசன், யாகன், நோட்டா
அக்டோபர் 12: ஆண் தேவதை, அடங்காதப் பசங்க, அமாவாசை, களவாணி சிறுக்கி, கூத்தன், மனுசங்கடா, மூணாவது கண்
அக்டோபர் 17: வடசென்னை
அக்டோபர் 18: சண்டக்கோழி 2, எழுமின்
அக்டோபர் 26: ஜீனியஸ், ஜருகண்டி

நவம்பர் மாதம்

நவம்பர் 2: தப்பு தாளங்கள், வன்முறைப் பகுதி, சந்தோஷத்தில் கலவரம்
நவம்பர் 6: பில்லா பாண்டி, களவாணி மாப்பிள்ளை, சர்கார்
நவம்பர் 16: காற்றின் மொழி, திமிரு புடிச்சவன், உத்தரவு மகாராஜா
நவம்பர் 23: கிருஷ்ணன், கார்த்திகேயனும் காணாமல் போன காதலியும், பேதியாக்கும் சகவாசம், செய், செம்மறி ஆடு, வண்டி
நவம்பர் 29: 2.0

டிசம்பர் மாதம்

டிசம்பர் 7: வினை அறியார், டோனி கபடி குழு, சீமாத்துரை, இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு
டிசம்பர் 14: பயங்கரமான ஆளு, திருமல , பிரபா, ஜானி, துப்பாக்கி முனை
டிசம்பர் 20: சீதக்காதி
டிசம்பர் 21: கனா,அடங்க மறு, மாரி 2, சிலுக்குவார்பட்டி சிங்கம்
டிசம்பர் 28: காட்சிப் பிழை, பிரான்மலை

என மொத்தம் 171 படங்கள் இந்த ஆண்டு ரிலீசாகியுள்ளன.

0 coment�rios:

ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு கலாச்சாரத்தையும் பன்பாடுகளையும் அந்த நாட்டின் முன்னோர்கள் தங்களது பின் சந்ததியினருக்கு கற்று கொடுத்து சென்றிருப்...

பெண்களின் முக்கிய பிரச்சனைக்கு தீர்வு கொடுக்கும்... சீனர்களின் ஐஸ்கட்டி வைத்தியம்!

ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு கலாச்சாரத்தையும் பன்பாடுகளையும் அந்த நாட்டின் முன்னோர்கள் தங்களது பின் சந்ததியினருக்கு கற்று கொடுத்து சென்றிருப்பார்கள்.

அவர்களும், உணவு பழக்கம் முதல் உடை அணியும் முறை வரையிலும் அனைத்தையும் முன்னோர் கற்றுக் கொடுத்த கலாச்சாரம், பண்பாடுகளையே பின்பற்றி வருவார்கள்.

இதுப் போல தான் மருத்துவ முறையிலும், ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு தனித்துவம் இருக்கிறது.

அந்த வகையில், நம் உடலில் ஏற்பட்டுள்ள எல்லா வித வலிகளையும் சட்டென போக்கும் ஆற்றல் சீனர்களின் புது வித ஐஸ்கட்டி மருத்துவத்தில் உள்ளதாம்.

இந்த ஐஸ்கட்டி மருத்துவத்திற்கு பெயர் Feng Fu. ஆம், இது ஒரு வித்தியாசமான மருத்துவமுறையாக உலக அளவில் கருதப்பட்டு வருகிறது.

Feng fu என்பது குறிப்பாக கழுத்து மற்றும் மூட்டு பகுதிகளில் ஏற்பட்டுள்ள வலிகளுக்கான மருத்துவ முறையின் பெயராம். பெரிய அளவில் செலவு எதுவும் தேவையில்லை. வெறும் ஐஸ்கட்டிகள் மற்றும் சில ஜிப்லாக் பைகள் போதும் எனக் கூறப்படுகிறது.

இந்த மருத்துவமுறையானது உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை இருக்கும் அனைத்து வலிகளையும் குணப்படுத்தி விடுமாம்.

கழுத்து வலி:

தற்போதெல்லாம், ஒரே இடத்தில் அதிக நேரம் உட்காருவதாலோ, அல்லது குனிந்து கொண்டு லேப்டாப் உபயோகிப்பதாலோ தண்டுவடம் அதிகளவில் பாதிப்படைகிரது.

இதை, குணப்படுத்துவதற்கு, ஒரு ஜிப்லாக்(ஜிப் கொண்ட பாலிதீன் பை) பையில் ஐஸ்கட்டிகளை நிரப்பி கொண்டு கழுத்து பகுதிக்கும் மண்டையின் எலும்பிற்கு சிறிது கீழ் வட்டத்தில் ஒரு 20 நிமிடம் நன்கு ஒத்தடம் வந்தால் கழுத்து வலி பறந்து போய் விடும்.

மேலும், இதனை தூங்குவதறகு முன்பும் செய்யலாம்.

மாதவிடாய் வலி:

பெண்களுக்கு மாதம் மூன்று நாட்கள் ஏற்படும் இந்த மாதவிடாய் பிரச்சனை அந்த மூன்று நாட்களும் அவர்களை நிம்மதியாக இருக்க விடாமல் ரணமாய்க் கொல்லும்.

இவ்வாறான பெரிய வலியையும் சரி செய்து விடுமாம். இந்த ஐஸ்கட்டி வைத்தியம்.

மேலே, கூறியவாறு ஒரு ஜிப்லாக் பையில் ஐஸ்கட்டிகளை நிரப்பிக் கொண்டு வலி உள்ள இடத்தில் ஒத்தடம் கொடுத்தால் போதும் உடனே சரியாகி விடுமாமிந்த மாதவிடாய் வலி.

தூக்கமின்மை சரியாக:

தூக்கமில்லாமல் அவதிப்படுவோருக்கு ஒரு எளிய வழி முறை இருக்கிறது. Feng Fu புள்ளி என்று சொல்லப்படும் இடத்தில் ஐஸ்கட்டியை வைத்து கொண்டு மெல்ல ஒத்தடம் கொடுத்து எடுத்தால் நன்றாக தூக்கம் வருமாம்.

மேலும், மூளை, தண்டுவடம், ரத்த ஓட்டம் ஆகியவற்றை இலகுவாக வைத்து மனம் நிம்மதியும் அடையுமாம்.

மூட்டு வலி குனமாக:

வயதாகமலே வரும் நோய்களில் மூட்டு வலியும் ஒன்று. மூட்டு வலியால் இன்று பெரியவர்கள் முதல் இளைஞர்கள் வரை அனைவரும் அவதிப்படுகின்றனர்.

இந்த மூட்டு வலிகளை சரி செய்ய Feng Fu புள்ளியில் ஐஸ்கட்டிகளை வைத்து எடுத்தால் விரைவில் குணமடையலாம்.

தலைவலிக்கு:

தலைவலி ஒருவரை நிம்மதியிழக்க செய்யும்ன் ஒரு விடயம் என்றால் அது இந்த தலைவலி தான். தலைவலி வந்து விட்டால் ஒரு வேளையும் ஓடாது. அன்றைய நாளே வெறுமையாக தான் இருக்கும்.

ஆனால், இந்த சீனர்களின் ஐஸ்கட்டி வைத்தியம் தலைவலியை குணப்படுத்த பெரிதும் உதவும். மற்ற மருத்துவங்களை காட்டிலும் அருமையான தீர்வை நமக்கு தரும்.

இந்த Feng Fu முறையை பின்பற்றி கழுத்து பகுதிக்கும் மண்டையின் எலும்பிற்கு சிறிது கீழ் வட்டத்தில் ஒத்தடம் கொடுத்து வந்தாலே இவை சட்டென சரியாகும்.

தைராய்டு பிரச்சினைக்கு

இன்று அதிக படியான நோய்களில் இந்த தைராய்டும் முக்கிய நோயாக உள்ளது.

இதனை Feng Fu புள்ளி என சொல்லப்படும் கழுத்து பகுதியில் ஐஸ்கட்டியை கொண்டு ஒத்தடம் கொடுத்து வந்தால், விரைவாக நலம் பெறலாம். மேலும், சீரான ரத்த ஓட்டத்தையும் இது ஏற்படுத்தும்.

இந்த Feng fu முறையை எப்போது செய்யலாம்..?

இந்த Feng Fu முறையை தினமும் இரு வேளையில் செய்து வரலாம்.

காலையில் வெறும் வயிற்றிலும் இரவில் தூங்குவதற்கு முன்பும் இதனை செய்யலாம். குறிப்பாக, ஒத்தடத்தை 30 வினாடிகள் விட்டு விட்டு கொடுக்கவும்.

இது உடலை ஆரோக்கியமாக வைக்க பெரிதும் உதவும்.

0 coment�rios:

காதலை சொல்லும் எத்தனையோ படங்கள் வந்து போகின்றன. ஆனால் அதில் சில படங்கள் தான் மக்கள் மனதில் இடம் பெறுகின்றன. ரசிகர்களை ஈர்த்து விடுகின்றன. அ...

96 திரை விமர்சனம் - அனைவரையும் மீண்டும் காதலை தேடவைக்கும். உங்களுக்கு எப்படியோ....


காதலை சொல்லும் எத்தனையோ படங்கள் வந்து போகின்றன. ஆனால் அதில் சில படங்கள் தான் மக்கள் மனதில் இடம் பெறுகின்றன. ரசிகர்களை ஈர்த்து விடுகின்றன. அந்த வகையில் தற்போது விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் 96 படம் வெளிவந்துள்ளது. இப்படம் சொல்லும் காதல் ஆழம் தானா என 96க்குள் போய் பார்ப்போம்.

கதைக்களம்

படத்தில் ஹீரோவாக வரும் விஜய் சேதுபதி ஒரு சாதாரண குடும்ப பின்னணி கொண்டவர். ஹீரோயின் திரிஷா. இருவரும் பள்ளிக்கூடத்தில் ஒன்றாக படித்தவர்கள். இவர்களின் தோழர்களாக ஆடுகளம் முருகதாஸும், தேவதர்ஷினியும். எப்போதும் கூட்டணியாக தான் இருப்பார்கள் இவர்கள்.

விஜய் சேதுபதி, திரிஷா ஆகிய இவர்களுக்குள் எப்போதும் இணை பிரியாத பாசம். கடைசியில் அது காதலாக துளிர்விடுகிறது. சொல்லத்துடிக்கும் நேரத்தில் சொல்ல முடியாமல் ஒரு நிகழ்வு அரங்கேறுகிறது.

ஒரு கட்டத்தில் இருவரும் சந்திக்க முற்படுகையில் என்னென்னவோ நடந்து போகிறது. பிரிந்தவர்கள் ஒன்று சேர்ந்தார்களா? காதலை சொன்னார்களா? பிரிவின் காரணம் என்ன என்பதை பின்னோக்கி நம்மை அழைத்துச்சென்று சொல்வதே இந்த 96.

படத்தை பற்றிய அலசல்

விஜய் சேதுபதி தான் நடிப்பில் எப்போதும் மாஸ் காட்டுவாரே. கதைகளையும் நன்றாக தேர்ந்தேடுப்பாரே என சொல்வோருக்கு இப்படம் ஒன் மோர் கிரெடிட் என சொல்லலாம். இப்படத்தில் அவர் ஒரு புகைப்படக்கலைஞர். அதிலும் நுட்பத்துடன் கலையையும் ரசிக்கும் வகையில் அவர் செய்கையுடன், சொல்லும் டையலாக்கும் நம்மை அந்த கலைஞராக்கிவிடும்.

திரிஷாவுக்கு காதல் சப்ஜெக்ட் சோ க்யூட் என சொன்னால் அதுவும் இங்கேயும் சாத்தியமே. விஜய் சேதுபதியுடன் முதல் முறையாக ஜோடி சேர்ந்திருக்கிறார். வழக்கம் போல மரத்தை சுற்றி டூயட் ஆடாமல் இம்முறை ஒரு புதிய முயற்சி. மீண்டும் அவர் தனக்கான இடத்தை ஸ்கோர் செய்துவிட்டார்.

ஹீரோவின் இளம் பருவ தோற்றமாக பிரபல நடிகர் எம்.எஸ். பாஸ்கரின் மகன் ஆதித்யா பாஸ்கர் நடித்துள்ளார். இவருக்கான காட்சிகள் போதுமானது என்றாலும் மனதிற்கு நிறைவானதாக நடித்திருக்கிறார். அடுத்தடுத்து வாய்ப்புகள் வரும் ஃப்ரோ.

அதே போல திரிஷாவாக கௌரி என்ற பெண் நடித்துள்ளார். இவரை இப்போது தான் பார்க்கிறோம் என்றாலும் அனுபவம் வாய்ந்தவர் போல நடித்திருக்கிறார். இவர்களின் வெகுளியான அன்பும், காதலும் நம்மை அந்த வருடத்திற்கே அழைத்து சென்றுவிடும். மீண்டும் ஸ்கூல் யூனிஃபார்ம் போட சொல்லும்.

இவர்களின் நட்பு வட்டாரமாக வரும் ஆடுகளம் முருகதாஸும், தேவ தர்ஷினியும் படத்திற்கு போதுமான காமெடி தருகிறார்கள். அதே வேளையில் விஜய் சேதுபதியின் ரியாக்‌ஷன் கூட சில இடங்களில் நம்மை சிரிக்க வைத்து விடுகிறது. மீண்டும் பிரபல நடிகர் ஜனகராஜை திரையில் பார்த்தது பலருக்கும் மகிழ்ச்சி. ஆனால் வயதாகிவிட்டதல்லவா. அந்த இளமையான குரல் கொஞ்சம் தளர்ந்து விட்டது வருத்தம் தான்.

படத்தின் இயக்குனர் பிரேம் குமார் சிம்பிளான கதையாக இருந்தாலும் மிகவும் அழகாக காண்பித்திருக்கிறார். காதலின் இயற்கை கதையோடு ஆழமாக பயணமாகிறது. ஒரு வசனத்தை மனப்பாடம் செய்து பேசலாம். ஆனால் கடந்த காலத்தை அதிலும் குறிப்பிட்ட அந்த வருடங்களை நம் உணர்வுகளால் கொண்டு வருவது சாத்தியம் என சொல்லியிருக்கிறீர்கள். சலாம் சார்.

ஒளிப்பதிவு சரியான நகர்வு. திட்டமிட்டு காட்சிகளை நகர்த்தி நம்மையும் படத்துடன் பயணிக்க வைத்திருக்கிறார். இசைக்கு கோவிந்த மேனன். அந்த ஒரே ஒரு Lead போதும் சார். இன்னும் பலமுறை கேட்க வேண்டும் போலிருக்கிறது.

சின்மயி குரல் சமந்தாவுக்கு மட்டுமே பொருந்தும் என்பதை மாற்றி திரிஷாவுக்கும் பொருந்தும் என காண்பித்து விட்டார். கார்த்திக் நேதா, உமா தேவியின் பாடல் வரிகளில் பாடகர் பிரதீப், சின்மயி பாடிய பாடல்கள் இனிமை.

கிளாப்ஸ்

விஜய் சேதுபதி, திரிஷாவின் ரியாக்‌ஷன் ஃபீல் குட் ஃபிளாஷ் பேக் மெம்மரிஸ்.

இயக்குனர் கதை சொன்ன விதம், காட்சிகளை கோர்த்தது பொருத்தம்.

பாடல்களும், பின்னணியும் இசையும் நம்மை உணர்ச்சி வசமாக்குவது உறுதி.

பல்ப்ஸ்

படம் முழுக்க ஹீரோ ஹீரோயினை கொஞ்சம் வேறு காஸ்ட்டுயூமிலும் காட்டியிருக்கலாமே.

மொத்ததில் 96 அனைவரையும் மீண்டும் காதலை தேடவைக்கும். உங்களுக்கு எப்படியோ....

0 coment�rios:

தமிழ் திரையுலகில் பல திறமைகளை கொண்டுள்ள நடிகர்களில் தனுஷும் ஒருவர். கோலிவுட்டை தாண்டி ஹாலிவுட்டில் எல்லாம் சென்று நடித்து வந்தார். ஆனால் தற...

பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் இந்த படங்களில் தனுஷ் நடித்து தான் ஆக வேண்டுமாம்!

தமிழ் திரையுலகில் பல திறமைகளை கொண்டுள்ள நடிகர்களில் தனுஷும் ஒருவர். கோலிவுட்டை தாண்டி ஹாலிவுட்டில் எல்லாம் சென்று நடித்து வந்தார்.

ஆனால் தற்சமயம் இவருக்கு கஷ்டக்காலம் போல. இவர் பல படங்கள் தயாரித்து இருந்தாலும் ரஜினி நடித்த காலா படம் போல எந்த படம் நஷ்டத்தை ஏற்படுத்தவில்லை.

அதாவது இந்த படத்தை வாங்கிய விநியோகஸ்தரர்கள் இவரின் கழுத்தை நெரிக்கும் அளவுக்கு கொண்டு சென்றது. பிறகு இதில் கலைப்புலி எஸ்.தாணு தான் தலையிட்டு பிரச்சனையை தீர்த்து வைத்தார்.

சும்மா தீர்த்து வைப்பாரா...தனது நிறுவனத்துக்காக தனுஷ் 3 படங்களில் நடிக்க வேண்டும் என்று பிசினஸ் பேசி தான் தீர்த்து வைத்துள்ளார். முதலாவதாக வெற்றிமாறன் இயக்கிய வடசென்னை படத்தில் நடித்து முடித்தார்.

இதன் தொடர்ச்சியாக அடுத்து முண்டாசுப்பட்டி ராம்குமாரின் இயக்கத்தில் நடிக்கவுள்ளாராம். அடுத்த வருடம் பாதியில் தான் இப்படம் துவங்கவுள்ளதால், அடுத்த வருடம் முழுவதும் தனுஷ் தாணுக்காக தான் நடித்தாக வேண்டும்.

0 coment�rios:

மணிரத்னம்... தமிழ் சினிமாவில் மிக முக்கியமான பெயர். காட்சி மொழியில் தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்துக்குக் கொண்டுவந்தவர். எத்தனை சர்ச்சைகள், ...

"இளையராஜாவிடம் கவனமாக இருக்க வேண்டும்... ஏ.ஆர்.ரஹ்மானிடம் அப்படியல்ல!" - மணிரத்னம் பகிர்ந்த அனுபவங்கள்

மணிரத்னம்... தமிழ் சினிமாவில் மிக முக்கியமான பெயர். காட்சி மொழியில் தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்துக்குக் கொண்டுவந்தவர். எத்தனை சர்ச்சைகள், விமர்சனங்கள், புகார்கள் எடுத்துவைத்தாலும் அவரது பங்களிப்பு மறுக்க முடியாதது.

வயது 60க்கு மேல், திரையுலகில் வயது 20க்கும் மேல், ஆனால் இன்னும் புதுமை விரும்பும் பெரும்பாலான இளைஞர்களின் சாய்ஸும் மணிரத்னம், கிரேஸும் மணிரத்னம்தான். ஒளிப்பதிவும் இசையும் இவரது படங்களில் புதுப்புது உயரங்களைத் தொட்டன. இவரது படங்களில் பாடல்களின் அழகே தனி. புதுப்புது ஒலிகளையும் பரிமாணங்களையும், தன் படங்களின் மூலம் தமிழ்த் திரையிசைக்குக் கொடுத்தவர் மணிரத்னம். இவர் இதுவரை இரண்டு முக்கிய இசையமைப்பாளர்களுடன் பயணித்திருக்கிறார்.

1983ஆம் ஆண்டில் முதன் முதலில் இவர் இயக்கிய கன்னட படமான 'பல்லவி அனுபல்லவி' தொடங்கி 1991இல் 'தளபதி' வரை இவரது படங்களுக்கு இளையராஜாதான் இசை. இளையராஜா, மணிரத்னம் இருவரின் பிறந்த தினமும் ஜூன் 2 என்பது ஸ்பெஷல். இவர்களுக்குள் பிரச்சனை, ஈகோ ப்ராபளம் என்றெல்லாம் கூறப்பட்டாலும் இன்றும் 'ராஜா சார்' என்று மரியாதையாகவே குறிப்பிடுகிறார் மணிரத்னம். 1992இல் தன் 'ரோஜா' மூலம் ஏ.ஆர்.ரஹ்மான் என்னும் இசைப்புயலை தமிழ் திரையுலகின் பக்கம் திருப்பிவிட்டவர் மணிரத்னம். இந்த இருவருமே மணிரத்னம் உடன் இணையும்போது வெளிவந்த பாடல்கள் எப்பொழுதும் மறக்க முடியாதவை. 'மௌனராகம்' லவ் தீம் 'ம்யூசிக்கல்லி' காலத்திலும் ட்ரெண்ட்தான். அதுபோல 'பம்பாயி'ன் உயிரே உயிரே இன்றைய காதலர்களின் சோகத்திலும் இருக்கிறது.

இந்த இருவருடனும் தான் பணிபுரிந்த அனுபவங்களை தான் முன்பு அளித்த பேட்டி ஒன்றில் பகிர்ந்திருந்தார் மணிரத்னம். அவர் கூறியது...

"நான் இந்த இருவரிடமுமே 'ஒரு லவ் சாங் வேணும்'னோ 'ஒரு டான்ஸ் சாங்' வேணும்னோ சொல்லமாட்டேன். அதுவும் இளையராஜாகிட்ட அந்த மாதிரி சொல்றதேயில்லை. படத்தின் போக்கு, அந்த சிச்சுவேஷன், அதை சுற்றிய விஷயங்கள்தான் சொல்லுவேன். இதை சொல்லிக்கிட்டு இருக்கும்போதே அவர் தன் ஆர்மோனியத்தில ட்யூன் போட ஆரம்பிச்சுருவார். அவர்கிட்ட நாம ரொம்ப கவனமா இருக்கணும். ட்யூன் அவருக்குள்ள இருந்து பொங்கி வரும். எது நமக்கு சரியாக இருக்கும்னு கவனிச்சு வாங்கிக்கணும். பத்து நிமிஷத்துல ட்யூன் போட்டுருவார். அவரோட டீம் அதை கவனிச்சு நோட்ஸ் எடுத்து, அப்படியே வாசிக்க ஆரம்பிச்சுருவாங்க. அது மிகப்பெரிய அனுபவம். அந்த வேகத்துக்கு நாமும் போகணும். அவர்கிட்ட ஒரு மீட்டிங்குக்குப் போனால் போதும், வெளியே வரும்போது முழு பாடலோட வரலாம். அவர் எனக்குக் கொடுத்த பாடல்களிலும் இசையிலும் இதுவரை எந்தக் குறையுமே இருந்ததில்லை.

ஆனா, ஏ.ஆர்.ரஹ்மான் அப்படியே வேற மாதிரி. மெதுவா பண்ணுவார். நெறய பேசுவோம், நல்லா டைம் எடுத்துக்குவோம். புதுசு புதுசா முயற்சி பண்ணுவோம். ஷூட்டிங் போறதுக்கு தேவையான அளவுக்கு பாட்டை ரெடி பண்ணித் தருவார். ஷூட்டிங் போயிட்டு வந்து பார்த்தா, பாட்டு இன்னும் வேற லெவெலில் இருக்கும். முடிந்த அளவு மெருகேற்றிக்கொண்டே இருப்பார். சில நேரம், காட்சிகள் அழகா பண்ணிட்டா, அதற்கு ஏற்ப இன்னும் அழகு சேர்ப்பார். இப்படி, ஏ.ஆர்.ரஹ்மானும் இளையராஜாவும் வேலை செய்யும் ஸ்டைல் முற்றிலும் வேறு வேறு.

பின்னணி இசை அமைக்கும்போதும் இளையராஜா, ஒவ்வொரு ரீலாக படத்தின் ஆரம்பத்தில் தொடங்கி க்ளைமாக்ஸ் வரை வரிசையாகப் போவார். ஒரு ஒழுங்கைக் கடைபிடிப்பார். ஏ.ஆர்.ரஹ்மானுடன் பணிபுரியும்போது, நாங்க இடையில் ஏதோ ஒரு ஸீன் எடுப்போம், அதுக்கு ம்யூசிக் ரெடி பண்ணுவோம், திரும்ப வேறொரு ஸீன் எடுப்போம். அதுல வேலை செய்வோம். இப்படி ரஹ்மான் கூட ஒர்க் பண்றது ஃப்ரீயா வேற ஸ்டைலில் இருக்கும்".

1 coment�rios:

அந்நாட்களில் வீட்டு சுவர்களில் ஏன் வறட்டி காய வைக்க வேண்டும்? இந்தப் பழக்கம் ஏன் வழக்கமானது? வெறும் சமையல் எரிவாயுக்காக பயன்படுத்தினரா? இல்...

சுவர்களில் மாட்டு சாணம்! இதற்குள் இருக்கும் ரகசியம் தெரியுமா?

அந்நாட்களில் வீட்டு சுவர்களில் ஏன் வறட்டி காய வைக்க வேண்டும்? இந்தப் பழக்கம் ஏன் வழக்கமானது? வெறும் சமையல் எரிவாயுக்காக பயன்படுத்தினரா? இல்லை அதற்குள் வேறு காரணம் இருக்குமா?

ஒவ்வொரு பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை வீட்டுச்சுவரின் வெளிப்புறத்தில் வறட்டி காய வைக்கும் பழக்கும் தமிழகம் முழுவதும் கிராமப்புறங்களில் காணப்பட்டதை நாம் அறிவோம். ஆம், வேறு காரணம் உண்டு அவை என்னவென்பதை தெரியவேண்டுமா? இதோ

அதற்கு முக்கிய காரணம், வறட்டிகளால் சூழப்பட்ட சுவர்கள் வெளியில் எந்த தட்பவெப்ப நிலை இருந்தாலும் அவை சரியாக 28.35°C வெப்பநிலையை வீட்டிற்குள் வழங்கும். இந்த விஞ்ஞான உண்மை உங்களை திகைக்க வைக்கலாம்.!
கிருமி நாசினி

அப்போதெல்லாம் தடுப்பூசியோ மருந்து மாத்திரையோ தமிழகத்தில் இல்லை. காரணம் பசு வறட்டியில் உள்ளது. நாட்டு மாடுகளின் A2 சாணம் என்பது ஒரு மிகச்சிறந்த கிருமி நாசினி என்பது அறிவியல்.

18 மாதங்கள் நிரம்பிய ஒவ்வொரு பசுவின் சாணமும் ஆயிரம் தடுப்பூசிக்கு சமம். அப்படியான சாணத்தை தனித்தனியாக ஒவ்வொருவர் முகத்திலும் தனித்தனியாக அடிக்க முடியாது என்பதால் வீட்டுச்சுவற்றில் அடித்து வந்தனர். இதன் மூலம் முழுமையாக சுத்திகரிக்கப்பட்ட ஒரு Safe Zone-ல் நம் தாத்தா பாட்டி காலம் வரை வாழ்ந்தார்கள் என்றால் நம்ப முடிகிறதா?

அதுபோல, வழி மண்டலத்தில் இருந்து வரும் புற ஊதா கதிர்கள் மற்றும் காஸ்மிக் கதிர்கள் இந்த நன்கு காய்ந்த வறட்டியில் படும்போது, மின்காந்த சக்தி உந்தப்பட்டு அந்த வீடே அணுக்கதிர்கள் கூட துளைக்க முடியாத ஒரு எஃகு அரணாக மாறிப்போகும். ஆனால் இதன் பலன் 15 நாட்களுக்கு மட்டுமே. இதனாலேயே சோழர்களின் கோட்டையை ஆங்கிலேயர்களால் வீழ்த்த முடியவில்லை என்பது தனிக்கதை.
சக்கர நோய்

மேலு‌ம், இம்மாதிரியான வறட்டி தட்டும் பழக்கம் கைகள் மூலமாக உடலில் ஏற்படும் கெட்ட கொழுப்புகளை அகற்றி சர்க்கரை நோயை கட்டுக்குள் இருக்க வைத்தது. சுற்றிலும் வறட்டிகளை கொண்ட வீடுகளில் 48 நாட்கள் புழங்கி வந்தால் அலர்ஜி, கேன்சர், இருதய கோளாறு போன்றவை சரியாகும் என சித்தர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலைநாட்டினர் அவற்றின் மகிமையைப் புரிந்துக்கொண்டு தான் தற்போது வறட்டியை அதிக அளவில் தங்கள் வீடுகளில் சேமித்து வைக்கின்றனர். வறட்டி தயாரிக்கும் முறைக்கு காப்புரிமையும் பெற்றுள்ளனர். ஆனால் நாமோ, பகுத்தறிவு என்று நமது முன்னோரின் சம்பிரதாயங்களில் இருக்கும் விஞ்ஞான அறிவைப் புரிந்துகொள்ளாமல் கேலிசெய்து கேவலப்படுத்துகிறோம் .

நம் முன்னோர் ஒன்றும் முட்டாள்கள் இல்லை..!

இப்போது நாம் பேசும் பகுத்தறிவு அவர்களின் கால் தூசுக்கு ஈடாகாது..!

0 coment�rios:

ஒரு கோடி மரக்கன்றுகள் நடுவதுதான் விவேக்கின் டார்க்கெட். அதில் 30 லட்சம் வரைக்கும் நட்டுவிட்டார் அவர்.  இதில் பாதி முளைத்திருக்கும். மீதியை ...

நட்ட மரம் முளைச்சுதா? பட்ட மரம் தழைச்சுதே! வியக்க வைத்த விவேக்!

ஒரு கோடி மரக்கன்றுகள் நடுவதுதான் விவேக்கின் டார்க்கெட். அதில் 30 லட்சம் வரைக்கும் நட்டுவிட்டார் அவர்.  இதில் பாதி முளைத்திருக்கும். மீதியை மாடோ, ஆடோ புல் மீல்ஸ் கட்டியிருக்கும். இருந்தாலும் ‘நட்டதுதான் கணக்கு. லஞ்ச் ஆனதெல்லாம் நமக்கெதுக்கு?’ என்று சாந்தியும் சமாதானமும் அடைந்திருப்பார் அவர். இது ஒருபுறம் இருக்கட்டும்… விவேக்கின் மரம் நடும் சந்தோஷத்தின் மகோனத தருணம் ஒன்று அண்மையில் நடந்திருக்கிறது.

பாப்பாபட்டி என்ற கிராமத்தில் ஒரு கோவில். அங்கு அரிய வகை கடம்ப மரம் ஸ்தல விருட்டமாக இருந்திருக்கிறது. ஆனால் கடந்த பல ஆண்டுகளாக பட்டுப் போய் கிட்டதட்ட உயிரே போய்விட்டது அதற்கு. இதை கண்டு வாடிய அந்த ஊர் கிராம மக்கள் எவ்வளவோ முயன்றும் நோ சான்ஸ். மரம் தழைக்கவே இல்லை. யாரோ ஒருவர் விவேக்கிடம் சொல்லி பார்ப்போம். அவர் ஏதாவது முயற்சி எடுப்பார் என்று கூற, கிராமமே சேர்ந்து அவருக்கு கடிதம் எழுதியதாம்.

அதற்கப்புறம் ஆக்ஷனில் குதித்தார் விவேக். மதுரையிலிருக்கும் தனது ‘பாட்டனி’ பார்ட்னர்களை, பசுமை விஞ்ஞானிகளை பாப்பாபட்டிக்கு அனுப்பி வைத்தாராம். அதற்கப்புறம் நடந்தது அதிசயம். நெய், பருத்தி, வேப்பம் கொட்டை உள்ளிட்டவற்றுடன் சில மூலிகைகளையும் கலந்து மை போல அரைத்தவர்கள், அந்த மையை மரத்தை சுற்றி பூசியிருக்கிறார்கள். அதன் மேல் ஒரு சாக்கை கட்டி, எந்நேரமும் ஈரம் இருப்பதை போல சொட்டுநீர் பாசனத்தையும் அதன் மீது செலுத்தியிருக்கிறார்கள். இந்த வித்தையை செய்தால் எந்த மரமும் துளிர்க்கும் என்பது நம்மாழ்வார் தியரி.

சுமார் இரண்டு மாதங்களாக எந்த அறிகுறியும் இல்லை. மவுன சாமியாராகிவிட்டதே மரம்? என்று கவலையில் கண்ணீர் வடித்தார்கள் ஊர் மக்கள். ஆனால் 61 வது நாள் அத்தனை கவலையும் பறந்தது. மரத்திலிருந்து ஒரு இலை மட்டும் தலை நீட்டி, என்னா பெருசுகளா… சவுக்யமா? என்று கேட்க… ஆனந்த கூத்தாடிவிட்டது ஊர். கெட்டி மேளம், கரகம் என்று மரத்தை சுற்றி சுற்றி வந்து மகிழ்ந்திருக்கிறார்கள்.

சென்னையிலிருக்கும் விவேக்கும் தகவல் சொல்லப்பட்டுள்ளது. இன்னும் சில தினங்களில் பாப்பாப்பட்டிக்கு விசிட் அடிக்கப் போகிறார் விவேக். எந்த ராசா வச்ச மரமோ? பட்டுப்போனதை மீட்டுவிட்டார் விவேக். அவருக்கும் அவரது வில்லேஜ் விஞ்ஞானிகளுக்கும் நன்றி சொல்ல வேண்டிய நேரமிது!

0 coment�rios:

ரஜினிகாந்த் இந்திய சினிமாவின் ஈடு இணையில்லா நடிகர்களில் ஒருவர். இவர் நடிப்பில் தற்போது பேட்ட படம் தயாராகி வருகின்றது. இந்நிலையில் அடுத்த சூ...

அடுத்த சூப்பர் ஸ்டார் யார்? ரஜினிகாந்தே சொன்ன தகவல்

ரஜினிகாந்த் இந்திய சினிமாவின் ஈடு இணையில்லா நடிகர்களில் ஒருவர். இவர் நடிப்பில் தற்போது பேட்ட படம் தயாராகி வருகின்றது.

இந்நிலையில் அடுத்த சூப்பர் ஸ்டார் என்ற பஞ்சாயத்து பல வருடங்களாக நடந்து வர, இன்றும் சூப்பர் ஸ்டார் நான் தான் என படத்திற்கு படம் நிரூபித்து வருகின்றார்.

சில வருடங்களுக்கு முன் ரஜினிகாந்தே ஒரு நிகழ்ச்சியில் சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

அதில் அவர் பேசுகையில் ‘சூப்பர் ஸ்டார் பட்டம் என்பது ஒரு ஸ்டேஷன் மாஸ்டர் மாதிரி தான், அவர் ஓய்வு பெற்றால் அந்த இடத்திற்கு வேறு ஒருவர் வந்து தான் ஆகவேண்டும்.

நான் மட்டும் நிரந்தரம் இல்லை, இன்று நான், நாளை வேறு ஒருவர் அந்த இடத்திற்கு வந்து தான் ஆகவேண்டும், அந்த இடத்திலேயே ஒருவன் இருக்க வேண்டும் என்று நினைப்பது தவறு’ என கூறியுள்ளார்.

0 coment�rios:

கதை: சென்னை, வேளாச்சேரி பாலத்தில் சட்டத்திற்கு புறம்பாக, சென்டர் மீடியன் கற்களை நகர்த்தி வைத்துவிட்டு "யு டர்ன்" எடுப்பவர்களால் ஏ...

U Turn- திரை விமர்சனம் சினிமா விமர்சனம்

கதை: சென்னை, வேளாச்சேரி பாலத்தில் சட்டத்திற்கு புறம்பாக, சென்டர் மீடியன் கற்களை நகர்த்தி வைத்துவிட்டு "யு டர்ன்" எடுப்பவர்களால் ஏகப்பட்டவிபத்துகள் ஏற்படுகிறது. விபத்துகளில் ஏகப்பட்டோர் உயிர் இழக்க அது பற்றிபிரபல ஆங்கில நாளிதழான "டைம்ஸ் ஆப் இந்தியா" பத்திரிகையில் புதிய நிருபராக பணியில் சேர்ந்திருக்கும்சமந்தா, ஒரு கட்டுரை எழுத ஆய்வில் இறங்குகிறார்.



இந்நிலையில் சென்டர் மீடியன் கற்களை நகர்த்தி விட்டு தினமும் "யுடர்ன்" போடும் பத்துக்கும் மேற்பட்டோர் அடுத்தடுத்து மர்மமாக மரணமடைகின்றனர். அவர்களது மரணத்திற்கு எல்லாம் காரணம். சமந்தா தான் என சந்தேகிக்கும் "ஆடுகளம்" நரேன் தலைமையிலான போலீஸ் அவரையும், அவருக்கு உதவுபவர்களையும்அழைத்துப் போய் விசாரிக்கிறது. ஆனால், அந்த போலீஸ் டீமில் இருக்கும் ஆதி மட்டும் சமந்தா குற்றமற்றவர் என தீர்மானமாக நம்பி அவருக்கு உதவுகிறார்.



சமந்தா குற்றமற்றவரா? தொடர் கொலைகளுக்கு காரணம் யார்? என்பது உள்ளிட்ட இன்னும் பல வினாக்களுக்கு வித்தியாசமாகவும், விறுவிறுப்பாகவும் விடை சொல்கிறது "யுடர்ன் ( UTURN )" படத்தின் மீதிக் கதையும், களமும்!



காட்சிப்படுத்தல்: சமந்தா அக்கினேனி, ஆதி பினி செட்டி, ராகுல் ரவீந்திரன், நரேன், "ஆடுகளம்" நரேன், பூமிகா சாவ்லா உள்ளிட்டோர் நடிக்க பவண்குமார் இயக்கத்தில் ஸ்ரீனிவாச சித்தூரி, ராம்பாபு பண்டாரு தயாரிப்பில் கிரியேடிவ் என்டர்டெயினர்ஸ் & டிஸ்டிபியூட்டர்ஸ் கோ. தனஞ்செயன் வெளியீடு செய்ய க்ரைம், த்ரில்லர் & ஹாரர் படமாக வெளிவந்திருக்கும் "யுடர்ன் ( UTURN )" படத்தில் சஸ்பென்ஸ் காட்சிகளும், ஹாரர் காட்சிகளும்காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் விதம் சூப்பர்ப் மிரட்டல் இது தமிழ் சினிமா வுக்கு முற்றிலும் புதிய கோணம் என்பது கவனிக்கப்பட வேண்டியது.



கதையின் நாயகி : சமூக அக்கறையுடன் கூடிய பரபரப்பு கட்டுரைகளுக்காகஅலைந்து திரியும் பிரபல ஆங்கில நாளிதழான "டைம்ஸ் ஆப் இந்தியா" பத்திரிகையின் இளம் பெண் நிருபராக , கதையின் நாயகியாக .சமந்தா அக்கினேனி , அதாங்க நம்ம சமந்தா பொண்ணு செம சமத்தாக ,சதா சர்வ நேரமும் முகத்தில் கலவரத்துடனும் , உடம்பு முழுக்க தனக்கே உரியகவர்ச்சியுடனும் படத்திற்கும் தான் ஏற்று நடித்திருக்கும் பாத்திரத்திற்கு வலு சேர்த்திருக்கிறார். வாழ்த்துக்கள் சமந்தா!



கதை நாயகர்கள் : சமந்தாவுக்கு உதவும் போலீஸ் அதிகாரியாக, முதல் நாயகர் "மிருகம் "ஆதி பினிசெட்டி , மிரட்டியிருக்கிறார் மிரட்டி.


சமந்தாவிடம் காதலை சொல்லாதகாதலராக, மற்றொரு நாயகராகஅவர் வேலை பார்க்கும் அதே "டைம்ஸ் ஆப் இந்தியா" பத்திரிகையில் சீனியர் க்ரைம் நிருபராக வேலை பார்க்கும் ராகுல் ரவீந்திரனின் நடிப்பும், துடிப்பும் கூட ரசனை.



பிற நட்சத்திரங்கள் : தன் குடும்பம் விபத்தில் பலியாகதானே காரணமான நரேன், எப்பேற்பட்ட வழக்கையும், எப்படியாவது முடித்து வைக்க முயலும் போலீஸ் அதிகாரியாக "ஆடுகளம்" நரேன், மகளை அநியாயமாக விபத்தில்இழந்த பூமிகா சாவ்லா உள்ளிட்ட எல்லோரும் கனமான பாத்திரங்களில் கவனமாக நடித்து அசத்தியுள்ளனர்.



தொழில்நுட்பகலைஞர்கள் : கவின் பாலாவின் வசனவரிகள் , சுரேஷ் ஆறுமுகத்தின் பின் பாதி ஷார்ப் -படத்தொகுப்பு , நிக்கேத் பொம்மி ரெட்டியின் அழகிய கதைக்கு தேவையான லைட்டிங்குடன் கூடிய ஒளிப்பதிவு, பூர்ண சந்திர தேஜஸ்வியின் மிரட்டல் இசை ... உள்ளிட்டவை படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கின்றன.



பலம் : இப்பட நாயகி சமந்தாவும் , இப்படத்தின் வெளியீட்டை "பாப்டா புளு ஒசியன் பிலிம் & டெலி விஷன் அக்கடமியின் உரிமை யாளரும் , கிரியேடிவ் என்டர்டெயினர்ஸ் & டிஸ்டிபியூட்டர்ஸ் நிர்வாகியுமானகோ.தனஞ்செயன் சிறப்பாக செய்து வருவதும் பெரும் பலம்.



பலவீனம் : முன் பாதி கதைக்கு தேவை இல்லாத நீளம் சற்றே பலவீனம்.



இயக்கம் : பவண்குமார் இயக்கத்தில் ., முதல் பாதி கொஞ்சம் இழுவையாக தெரிந்தாலும் ., இரண்டாம் பாதி , கதையிலும்எதிர்பாராத எக்கச்சக்க "யுடர்ன் ( UTURN ) " களுடன் ., க்ரைம் , த்ரில்லர் , ஹாரர் ரசிகர்களை செமயாக கவரும் படி படமாக்கப்பட்டு ரசிகர்களை சீட்டோடு கட்டிப்போட்டு விடுகிறது என்பது பெரிய ப்ளஸ்!



அதே மாதிரி , "அப்பாவை ஒன்னும் பண்ண வேணாமா...." என தங்கள் சாவுக்கு காரணமான தந்தையை ., தன் தாய் மாயா - பூமிகாவின் ஆவியிடம் காப்பாற்ற உருகும் மகள் ஆர்னாவின் ஆவி., மெய்சிலிர்க்க வைத்து விடுகிறது. அதே மாதிரி 13வது மாடியில் இருந்து .... மனைவியும் , மகளும் சாக காரணமாகி விட்டோமே .... என தற்கொலை செய்யும் முடிவோடு விழும் நரேனையும் உயிர் பிழைக்க வைக்கும் ஆவி பூமிகாவும்
இயக்குனரின் திறமைக்கு கட்டியம் கூறுகின்றனர்.



பைனல்" பன்ச் " : மொத்தத்தில் ., க்ரைம் , த்ரில்லர் , ஹாரர் , சஸ்பென்ஸ் ...படங்களை பிடிக்கும்ரசிகர்களை "யுடர்ன் ( UTURN ) ' திரைப்படம் -திரும்ப திரும்ப, தியேட்டருக்கு " யு டர்ன் ( UTURN ) 'அடிக்க வைக்கும்!"

0 coment�rios:

தமிழ் சினிமாவில் ஒரு சிலருக்கு மட்டுமே தொட்டதெல்லாம் வெற்றியாகும். அப்படி தொடர்ந்து வெற்றியை மட்டுமே ருசித்து வரும் சிவகார்த்திகேயன், ஹாட்ர...

சீமராஜா திரை விமர்சனம் - ராஜா பேமிலி ஆடியன்ஸை டார்கெட் செய்தி திருப்திப்படுத்துகின்றார்.

தமிழ் சினிமாவில் ஒரு சிலருக்கு மட்டுமே தொட்டதெல்லாம் வெற்றியாகும். அப்படி தொடர்ந்து வெற்றியை மட்டுமே ருசித்து வரும் சிவகார்த்திகேயன், ஹாட்ரிக் கூட்டணியாக பொன்ராமுடன் சீமராஜாவை களத்தில் இறக்கியுள்ளார், இந்த படமும் சிவகார்த்திகேயனின் வெற்றி மகுடத்தில் இணைந்ததா? பார்ப்போம்.

கதைக்களம்

ராஜா வம்சத்தில் இருக்கும் சிவகார்த்திகேயன் வழக்கம் போல் வேலை இல்லாமல் சுற்றினாலும் ஊரே மதிக்கின்றது. அவரும் பல நிகழ்வுகளுக்கு சிறப்பு விருந்தினராக செல்கின்றார், அப்போது சமந்தாவை பார்த்தவுடன் காதல் வயப்படுகின்றார்.

அதை தொடர்ந்து சமந்தா புலியம்பட்டியை சார்ந்தவர், சிவகார்த்திகேயன் சிங்கம்பட்டியை சார்ந்தவர் இந்த இரண்டு ஊருக்கும் ஒரு மார்க்கெட் தான் பஞ்சாயத்து. அது மட்டுமின்றி சில விவசாய நிலங்களை லால் மிரட்டி பறித்துள்ளார்.

முதலில் மார்கெட்டை அடைய லால்,சிம்ரனும் மற்றும் சிவகார்த்திகேயனும் மோத யாருக்கு மார்க்கெட் என்பதற்காக ஒரு மல்யுத்த போட்டி நடக்கின்றது.

அதில் சிவகார்த்திகேயன் வெற்றிபெற பிறகு தான் தெரிய வருகின்றது சமந்தா லாலின் முதல் மனைவி மகள் என்பது. பிறகு என்ன இவர்கள் காதல் இணைந்ததா? சீமராஜா, லாலின் அதிகாரத்தை அடக்கினாரா? மக்களின் நிலத்தை மீட்டாரா? என்பதே மீதிக்கதை.

படத்தை பற்றிய அலசல்

சீமராஜாவாக சிவகார்த்திகேயன் தன்னால் எவ்வளவு உழைப்பை கொடுக்க முடியுமோ, அதாவது காமெடி, ஆடல், பாடல் தாண்டி ராஜா வேஷத்திலும் மிரட்டியுள்ளார், ஒரு முழு கமர்ஷியல் ஹீரோவாகவே மாறிவிட்டார், மாஸ் இண்ட்ரோ, பன்ச் வசனம் என ரஜினி, விஜய்க்கு அடுத்த இடத்தை இப்போது பிடிக்க ரெடியாகிவிட்டார், இதில் அரசியலுக்கு போய்டலாம் வா என்று சூரி சிவகார்த்திகேயனை கூப்பிடுவது போல கூட வசனம் உள்ளது, சரி ஏதோ ப்ளானில் இருக்கிறார் SK.

படத்தின் மிகப்பெரும் பலம் எல்லோரும் எதிர்ப்பார்த்த சிவகார்த்திகேயன், சூரி காம்போ தான், ஒரு இடத்தில் கூட நம்மை ஏமாற்றவில்லை, காமெடியில் அசத்துகின்றனர், அதிலும் சிறுத்தையிடம் மாட்டிக்கொண்டு சூரி அடிக்கும் கலாட்டா, இப்போது எல்லாம் படம் பார்க்க தானே லாப்டாப் வச்சுருக்காங்க என கொடுக்கும் கவுண்டர் என எப்போதும் போல் இந்த கூட்டணி பாஸ்மார்க்.

இதை தவிர படத்தில் எந்த ஒரு கதாபாத்திரமும் மனதில் நிற்கவில்லை, சிம்ரனுக்கும் அவருடைய டப்பிங் குரலுக்கும் கொஞ்சம் கூட மேட்ச் ஆகவில்லை, சமந்தா படத்தில் கொடுக்கும் ரியாக்ஸனை விரல் விட்டு எண்ணிவிடலாம், சிறுத்தை வந்தால் கூட நிதானமாக ‘சிறுத்தை வந்துடுச்சுனு’ ரியாக்ஸன் காட்டாமல் நிற்கின்றார்.

லால், நெப்போலியன் என பலரும் ஏமாற்றமே, காமெடியா, கதையா என்ற இடத்தில் பொன்ராம் மிகவும் தடுமாறியுள்ளார், காமெடியை வைத்து கதையை நகர்த்திய முதல் பாதி ஓரளவிற்கு ஓகே என்றாலும், இரண்டாம் பாதி தொடங்கியதுமே ராஜா கதைக்கு சென்று, சிவகார்த்திகேயன் களத்தில் இறங்கியிருந்தால் சூடுப்பிடித்திருக்கும்.

ஆனால், படம் எப்போது முடியும் என்ற மனநிலையில் ராஜா கதை வருகின்றது, சிஜி வேலைகள் உண்மையாகவே சூப்பர், இந்த பட்ஜெட்டில் மிரட்டியுள்ளனர், அப்படியிருந்தும் அந்த காட்சிகள் வந்த இடம் தான் கொஞ்சம் பொறுமையை சோதித்தது.

டி.இமானின் இசையில் பாடல்கள் ஓகே, ஆனால் பின்னணி ஏன் சார் இவ்வளவு ரிப்பீட் டியூன்ஸ், ஒளிப்பதிவு கலக்கல், அதிலும் ராஜா போஷன் சூப்பர்.

க்ளாப்ஸ்

படத்தின் முதல் பாதி.

சிவகார்த்திகேயன், சூரி காம்போ சிரிப்பிற்கு கேரண்டி.

பல்ப்ஸ்

வலுவே இல்லாத திரைக்கதை, அதிலும் இரண்டாம் பாதி பொறுமையை சோதிக்கின்றது.

நெகட்டிவ் கதாபாத்திரம் இன்னும் கொஞ்சம் கூட அழுத்தமாக இருந்திருக்கலாம், கடைசி வரை எந்த ஒரு இடத்திலும் நமக்கு அவர்களை வில்லனாக பார்க்க முடியவில்லை.

மொத்தத்தில் ராஜா பேமிலி ஆடியன்ஸை டார்கெட் செய்தி திருப்திப்படுத்துகின்றார்.

0 coment�rios:

ரஜினிகாந்த் நடிப்பில் மிகவும் எதிர்ப்பார்த்து காத்திருக்கும் படம் 2.0. இப்படத்தின் பட்ஜெட் சுமார் ரூ 400 கோடி இருக்கும் என கூறப்படுகின்றது....

2.0 டீசர் தேதி வெளிவந்தது, அதிகாரப்பூர்வமாக ஷங்கரே அறிவித்தார், ரசிகர்கள் கொண்டாட்டம்

ரஜினிகாந்த் நடிப்பில் மிகவும் எதிர்ப்பார்த்து காத்திருக்கும் படம் 2.0. இப்படத்தின் பட்ஜெட் சுமார் ரூ 400 கோடி இருக்கும் என கூறப்படுகின்றது.

இந்த நிலையில் தற்போது இப்படத்தின் டீசர் தேதி பலரும் எதிர்ப்பார்க்க, அதை ஷங்கரே தெரிவித்துள்ளார், 2.0 டீசர் செப்டம்பர் 13ம் தேதி வரவுள்ளதாக அவர் அறிவித்துள்ளார், இதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

0 coment�rios:

அதர்வா, நயன்தாரா ஆகியோர் நடித்துள்ள இமைக்கா நொடிகள் படம் சென்ற வாரம் ரிலீஸ் ஆனது. முதல் நாளில் சில சிக்கல்களால் பல காட்சிகள் ரத்தாகி இரவு க...

இமைக்கா நொடிகள் 7 நாள் வசூல் விவரம் - மேடையில் அதிகாரபூர்வமாக அறிவித்த தயாரிப்பாளர்

அதர்வா, நயன்தாரா ஆகியோர் நடித்துள்ள இமைக்கா நொடிகள் படம் சென்ற வாரம் ரிலீஸ் ஆனது. முதல் நாளில் சில சிக்கல்களால் பல காட்சிகள் ரத்தாகி இரவு காட்சிகள் மட்டும் ஓடியது.

நல்ல விமர்சனம் பெற்றதால் இமைக்கா நொடிகள் நல்ல வசூல் ஈட்டிவருகிறது. தற்போது படம் 360 திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிவருவதாக இன்று நடந்த நன்றி தெரிவிக்கும் விழாவில் கூறப்பட்டுள்ளது.

மேலும் 7 நாட்களில் 16 கோடி ருபாய் வசூலித்துள்ளதாக தயாரிப்பாளர் மேடையிலேயே அறிவித்துள்ளார்.

0 coment�rios:

செக்கச்சிவந்த வானம் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட கவிஞா் வைரமுத்து, முன்னாள் முதல்வா் ஜெயலலிதா விரும்பி கேட்ட பாடல் குறித்த...

முதல்வா் ஜெயலலிதா விரும்பி கேட்ட பாடல் - வைரமுத்து வெளியிட்ட ருசீகரம்

செக்கச்சிவந்த வானம் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட கவிஞா் வைரமுத்து, முன்னாள் முதல்வா் ஜெயலலிதா விரும்பி கேட்ட பாடல் குறித்த தகவலை ரசிகா்களுடன் பகிா்ந்து கொண்டா்ா.

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் செக்கச்சிவந்த வானம். இப்படத்தில் அரவிந்த் சாமி, அருண் விஜய், சிம்பு, விஜய் சேதுபதி, ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி ராவ் உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் நடித்துள்ளனா்.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா புதன் கிழமை சென்னையில் நடைபெற்றது. விழாவில் இசைப்புயல் ஏ.ஆா்.ரகுமான் பாடல்களை பாடி ரசிகா்களை உற்சாகப்படுத்தினாா். இதனைத் தொடா்ந்து அரவிந்த் சாமி, அருண் விஜய், அதிதி ராவ், ஐஸ்வா்யா ராஜேஷ் உள்ளிட்டோா் படம் குறித்தும், படக் குழு குறித்தும் பேசினா்.

இதனைத் தொடா்ந்து கவிஞா் வைரமுத்து பேசுகையில், மணிரத்னம் இயக்கத்தில் எனது பாடல் வரிகள் ஏ.ஆா்.ரகுமான் இசையமைத்த பாடல்களில் எனக்கு பிடித்தது பம்பாய் படத்தில் இடம் பெற்ற “கண்ணாலனே” என்ற பாடல் தான். இந்த பாடல் மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதா அவா்களால் ஏ.ஆா்.ரகுமான் ஸ்டுடியோவிற்கு வந்து ரசித்து கேட்ட பாடல் என்று கூறினாா்.

0 coment�rios:

டிமாண்டி காலனி என்ற வித்தியாசமான பேய் படத்தை கொடுத்து அசத்தியவர் அஜய் ஞானமுத்து. இவரின் இரண்டாவது படம் என்னவாக இருக்கும் என்று நீண்ட நாள் எ...

இமைக்கா நொடிகள் திரை விமர்சனம் - உங்களை கண் இமைக்காமல் பார்க்க வைக்கும் இந்த இமைக்கா நொடிகள்.

டிமாண்டி காலனி என்ற வித்தியாசமான பேய் படத்தை கொடுத்து அசத்தியவர் அஜய் ஞானமுத்து. இவரின் இரண்டாவது படம் என்னவாக இருக்கும் என்று நீண்ட நாள் எதிர்ப்பார்ப்பு ரசிகர்களிடம் இருந்து வர, இரண்டாவது படத்திலேயே நயன்தாரா, அதர்வா, அனுராக் காஷ்யூப் என பல நட்சத்திரங்களை வைத்து பிரமாண்ட படைப்பை கொடுத்துள்ளார், இதிலும் அஜய் தேர்ச்சி பெற்றாரா? பார்ப்போம்.

கதைக்களம்

படத்தின் ஆரம்பத்திலேயே கொலை நடக்கின்றது, கொலையும் செய்துவிட்டு பணத்தையும் கேட்டு மிரட்டுகின்றார் அனுராக் காஷ்யப். நயன்தாரா CBI-யில் வேலைப்பார்க்கின்றார்.

இந்த விஷயம் தெரிந்து பணத்தை கொடுக்காதீர்கள் என்று நயன்தாரா சொல்லியும் அவர்கள் கொடுக்க, வழக்கம் போல் பிணம் தான் அவர்கள் வீட்டிற்கு செல்கின்றது.

இதை தொடர்ந்து இந்த கேஸின் தீவிரத்தை அறிந்து நயன்தாரா களத்தில் இறங்க, இதற்குள் அதர்வா எப்படி சிக்குகின்றார், அனுராக் யார்? எதற்காக இப்படியெல்லாம் செய்கின்றார்? என்பதன் சுவாரஸ்ய திரைக்கதையே இந்த இமைக்கா நொடிகள்.

படத்தை பற்றிய அலசல்

நயன்தாரா வாரம் வாரம் இவரை திரையில் பார்த்துவிடலாம் போல, அந்த அளவிற்கு பல படங்கள் வருகின்றது, அதிலும் தரமான கதையாக தேர்ந்தெடுத்து நடிக்கின்றார், இதிலும் அப்படியே CBI ஆபிஸராக மிரட்டியுள்ளார், அதே நேரத்தில் விஜய் சேதுபதியுடனான காதல் காட்சியிலும் மெய் மறக்க வைக்கின்றார், இனி தைரியமாக அடுத்தப்படத்தில் லேடி சூப்பர் ஸ்டார் என்றே டைட்டில் கார்டே போடலாம்.

அனுராக் காஷ்யப் தமிழில் முதன் முறையாக காலடி எடுத்து வைத்துள்ளார், பாலிவுட்டில் மிகச்சிறந்த இயக்குனராக இருக்கும் இவர் நடிப்பிலும் தனி முத்திரை பதித்துள்ளார், அதிலும் வித்தியாசமாக இரத்தம் உறையாமல் அவர் கொலை செய்வது நமக்கே பகீர் என்று இருக்கின்றது.

அதர்வா-ராஷி கண்ணா திரையில் நன்றாக இருந்தாலும், படத்திற்கு இவர்கள் காதல் கதை பெரிதும் ஒன்றவில்லை, படத்திற்கு இவ்வளவு நேரம் காதல் காட்சிகள் தேவையா? என்பது போல் தான் தோன்றுகின்றது.

படத்தின் இரண்டாம் பாதியில் வரும் டுவிஸ்ட் காட்சிகள் நம்மை சீட்டின் நுனிக்கு வர வைக்கின்றது, நாம் யூகிக்கும் எந்த டுவிஸ்டும் படத்தில் இல்லை, நம்மை அசர வைக்கும்படி தான் டுவிஸ்ட் காட்சிகள் உள்ளது.

பாடல்களில் பெரிதும் ஸ்கோர் செய்யாத ஹிப்ஹாப் ஆதி பின்னணியில் மிரட்டி எடுத்துள்ளார், ஒரு விறுவிறுப்பான திரைக்கதைக்கு ஏற்ற பின்னணியை கொடுத்து அசத்தியுள்ளார், அதே நேரம் ராஜசேகரின் ஒளிப்பதிவும் பக்க பலமாக உள்ளது.

க்ளாப்ஸ்

படத்தின் திரைக்கதை, இரண்டாம் பாதியில் அடுத்தடுத்து வரும் டுவிஸ்ட் காட்சிகள்.

அனுராஜ், நயன்தாராவிற்கான Cat and mouse போன்ற காட்சிகள் விறுவிறுப்பை ஏற்படுத்துகின்றது.

படத்தின் பின்னணி இசை, ஒளிப்பதிவு மற்றும் டெக்னிக்கல் விஷயங்கள்.

பல்ப்ஸ்

படத்தின் அதர்வா-ராஷி கண்ணா காதல் காட்சிகள், 2.50 மணி நேரம் ஓடும் இப்படத்தில் இவர்கள் வரும் காட்சிகள் கொஞ்சம் பொறுமையை சோதிக்கின்றது. நேரத்தையும் கொஞ்சம் குறைத்திருக்கலாம்.

மொத்தத்தில் உங்களை கண் இமைக்காமல் பார்க்க வைக்கும் இந்த இமைக்கா நொடிகள்.

0 coment�rios:

இந்தியா முழுவதும் பிரபலமாக பயன்படுத்தப்பட்டு வரும் ‘வாட்ஸ் அப்’பிற்கு போட்டியாக பாபா ராம் தேவ் கடந்த மே மாதம் ‘கிம்போ ஆப்’பை அறிமுகப்படுத்த...

‘வாட்ஸ் அப்’க்கு போட்டியாக மீண்டும் களம் இறங்கும் ‘கிம்போ ஆப்’

இந்தியா முழுவதும் பிரபலமாக பயன்படுத்தப்பட்டு வரும் ‘வாட்ஸ் அப்’பிற்கு போட்டியாக பாபா ராம் தேவ் கடந்த மே மாதம் ‘கிம்போ ஆப்’பை அறிமுகப்படுத்தினார். ஆனால் சில கோளாறுகள் காரணமாக அந்த அப் மறு நாளே திரும்ப பெற்றுக்கொள்ளப்பட்டது. இந்நிலையில் கிம்போ ஆப் வருகிற 27ம் தேதி மீண்டும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

பதஞ்சலி நிறுவனத்தின் செய்தி தொடா்பாளா் திஜாரவாலா கிம்போ ஆப்பை யோகா குரு ராம்தேவ் வருகிற 27ம் தேதி மீண்டும் அறிமுகப்படுத்துவார் என்று தெரிவித்துள்ளார்.

கிம்போ என்ற சமஸ்கிருத வார்த்தைக்கு “என்ன நடக்கிறது, என்ன செய்தி” என்று பொருளாம்.

இந்த ஆப்பில் வீடியோ, ஆடியோ, ஸ்டிக்கா், டூடுள், ஜிஃப் பைல் என அனைத்து வகையான தொழில்நுட்பங்களையும் பிறருக்கு அனுப்ப முடியும்.

இதில் வீடியோ கால், குரூப் கால், வீடியோ குரூப் கால் போன்ற வசதிகள் இடம் பெற்றுள்ளன.

நாம் இருக்கும் இடத்தின் முகவரியை இந்த ஆப் மூலம் நமது நண்பா்களுக்கு எளிதில் பகிர்ந்து கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆப் மூலம் ஒரு தகவலை அனுப்புபவரும், பெறுபவரும் மட்டுமே அந்த தகவலை பார்க்க முடியும். மூன்றாவது நபரால் அந்த தகவலை பார்க்க முடியாது என்று தெரிவித்துள்ளனா்.

கிம்போ ஆப்பில் ஒரு தகவல் பறிமாறப்பட்ட பின்னா் அந்த தகவல் குறிப்பிட்ட காலத்திற்கு பின்னா் தானாகவே அழிந்து விடும் தன்மை கொண்டது.

கிம்போ ஆப்பில் வாட்ஸ் அப்பில் இருப்பது போன்று போட்டோ அனுப்புதல், தொலைபேசி எண், வீடியோ உள்ளிட்ட பதிவுகளை எளிதில் பரிமாறிக்கொள்ள முடியும்.

கடந்த மே மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த ஆப் தொழில்நுட்ப கோளாறு காரணமாக 24 மணி நேரத்திற்குள் திரும்ப பெற்றுக் கொள்ளப்பட்டது. இந்நிலையில் மீண்டும் வருகிற 27ம் தேதி கிம்போ ஆப் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

1 coment�rios:

கரு: பழைய பெருமையில் வாழும் இறந்த கால தாதாவுக்கும், கஞ்சா கடத்தல்… என சிட்டியை கைக்குள் வைத்திருக்கும் நிகழ்கால தாதாவுக்கும், அண்ணன் விட்டத...

ஓடு ராஜா ஓடு மினி விமர்சனம்

கரு: பழைய பெருமையில் வாழும் இறந்த கால தாதாவுக்கும், கஞ்சா கடத்தல்… என சிட்டியை கைக்குள் வைத்திருக்கும் நிகழ்கால தாதாவுக்கும், அண்ணன் விட்டதை பிடிக்க நினைக்கும் வருங்கால தாதாவான தம்பி, இவர்கள் மூவருக்கும் இடையிலான ஈகோ மோதலில் சிக்கித் தவிக்கும் நாயகர் மற்றும் நண்பர்களே ஓடு ராஜா ஓடு படக்கரு.

கதை: சென்னையில் சினிமா கதாசிரியராக வேண்டும் என்ற லட்சியத்தோடு இருக்கிறார் நாயகன் குருசோமசுந்தரம். இவரது மனைவி லட்சுமி பிரியா மருத்துவமனையில் வேலை பார்த்து வருகிறார். தங்கள் திருமண நாளில் வீட்டில் செட்-அப் பாக்ஸ் வாங்கி வைத்து புருஷனுடன் படம் பார்க்க ஆசைப்படுகிறார் லட்சுமிபிரியா. இதற்காக குருசோம சுந்தரத்திடம் பணம் கொடுத்து செட்-அப் பாக்ஸ் வாங்கி வரச் சொல்லுகிறார்.

அந்த பகுதியில் கஞ்சா விற்று வரும் தனது நண்பருடன் சேர்ந்து செட்-அப் பாக்ஸ் வாங்க செல்லுகிறார் குரு சோமசுந்தரம். அங்கு எதிர்பாராத விதமாக மனைவி கொடுத்த பணத்தை இழக்கிறார். மேலும் சிக்கலில் மாட்டிக் கொள்கிறார். இது ஒரு பக்கம் நடக்க, மற்றொரு பக்கம் அந்தப் பகுதியில் பெரிய தாதாவாக இருக்கும் சாருஹாசன், கவலைக்கிடமான நிலையில், இனிமேல் ரவுடி தொழில் செய்யக் கூடாது என்று அவரது மகன் நாசரிடம் சத்தியம் வாங்கி விட்டு இறந்து போகிறார். ஆனால், நாசரின் தம்பி ரவீந்திர விஜய்யோ நாசரை கொன்று விட்டு, தாதாவாக முயற்சி செய்கிறார். இச்சூழலில் நாசரால் ஏமாற்றப்பட்ட மற்றொரு நாயகர் ஆனந்தசாமி 5 வருடம் சிறை தண்டனை பெற்று வெளியில் வருகிறார். நாசரை கடத்தி அவரிடம் பணம் பறிக்க முயற்சி செய்கிறார்.

அதே பகுதியில் ஆதரவற்ற சிறுவர்கள், சிறு சிறு திருட்டு தொழில்கள் செய்து வருகிறார்கள். இவர்கள் எல்லோரும் ஒரு அசாதாரண சூழலில் சந்திக்கிறார்கள். இறுதியில் என்ன ஆனது? குருசோம சுந்தரம் செட்-அப் பாக்ஸ் வாங்கினாரா? நாசர் ஆனந்தசாமி, ரவீந்திர விஜயால் கொல்லப்பட்டாரா? இல்லையா...? இப்படத்தில், சிம்ரன் அவரது கணவர் திபக்பாஹா ஆகியோரின் ரோல் என்ன...? என்பது உள்ளிட்ட இன்னும் பல வினாக்களுக்கு வித்தியாசமாகவும், விறுவிறுப்பாகவும் விடை சொல்கிறது... "ஓடு ராஜா ஓடு" படத்தின் மீதிக்கதையும், களமும்!

காட்சிப்படுத்தல்: விஜய் மூலன் டாக்கிஸ் வழங்கும் கேன்டல் லைட் புரொடக்சன்ஸின் தயாரிப்பில் "ஜோக்கர்" குருசோமசுந்தரம், ஆனந்தசாமி, ப்ரியா சந்திரமெளலி, ஆஷிகா செல்வம், நாசர், சிம்ரன்,தீபக் பாஹா, சோனா ஹைடன், ரவீந்திர விஜய், மெல்வின் எம்.ரஞ்சன், அபிஷேக் கே.எஸ் வெங்கடேஷ், ஹரிநாத், வினுஜான், அருண்மொழி சிவப்பிரகாசம், அமுதன், பேபி ஆர். ஹரணி, மாஸ்டர் ஏ.ராகுல் உள்ளிட்ட ரசிகர்களுக்கு நன்கு தெரிந்த தெரியாத, ரசிகர்கள் அறிந்த அறியாத ஒரு பெரும் நட்சத்திர பட்டாளம் நடிக்க டோஷ் நந்தாவின் இசையில், நிஷாந்த் ரவீந்திரன் மற்றும் ஜத்தின் ஷங்கர் ராஜ் இருவரது இயக்கத்தில் வெளிவந்திருக்கும் படம் "ஒடு ராஜா ஓடு." படத்தில், "எவ்ளோ பெரிய வாயி...", " 500 ரூபாக்கு உன் வாயில தான் வைப்பேன்... துப்பாக்கிய...", "காலையில நான் டெய்லி எழுந்ததும் பயப்படுற விஷயம் ஒண்ணே ஒன்னு தான் வேற யார் கூடயும் என் பொண்டாட்டி ஒடிப்போயிடுவாளோங்கற பயம் தான், அது..." , "இம்ரான் நீ எங்க வந்த? இதுல ப்ரண்ட்லியா பண்ண என்ன இருக்கு?"ரொம்ப நாள் ஆச்சு இப்படி நடந்து இன்னொரு ரவுண்ட் போலாமா? "என் ஜாவ உடைச்சுட்டான்...." "ஹெல்ப் தானடா பண்ண சொன்னேன்... " , "நீங்க 2 பேரும் எனக்கு ஒண்னு தான் ... " என்பது உள்ளிட்ட டபுள், ட்ரிபிள் மீனிங் வசனங்களை நடிகைசோனா உள்ளிட்ட இப்படப் பாத்திரங்கள் ஆங்காங்கே பேசியிருக்கும் காட்சிகளை விரசமில்லாமல் காட்சிப்படுத்தியிருக்கும் விதம் இப்படத்திற்கு கூடுதல் பலம்.

கதாநாயகர்: படத்தின் முதல் நாயகனாக நடித்திருக்கும் குருசோம சுந்தரம் யதார்த்தமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். கதாசிரியராக கிளைமாக்ஸ் கிடைக்காமல் தவிப்பது, நண்பருடன் சேர்ந்து செட்-அப் பாக்ஸ் பணத்தை இழந்து தவிப்பது. அதை மீட்க போராடுவது, மனைவிக்கு பயப்படுவது என சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

மொத்தத்தில், சினிமா டைரக்ஷன் லட்சியத்தில், மனைவி சம்பாத்யத்தில்வீட்டோட புருஷனாக இருக்கும் மனோகராக "ஜோக்கர்" குருசோமசுந்தரம், அந்த பாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார்.

அவரை மாதிரியே அண்ணன் நாசர் கைவிட்ட, தாதாயிஸத்தை கையிலெடுக்கத் துடிக்கும் நாசரின் தம்பி செல்லமுத்து - ரவீந்திர விஜய்யும். ரவீந்திர விஜய் செய்த கொலைக்காக, தான் செய்யாத கொலைக்கு சிறை சென்று, காதலியை நண்பனிடம் பங்கு வைத்த ஆனந்தசாமியும்.... கூட அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கின்றனர்.

கதாநாயகியர் ப்ரியா சந்திரமெளலி, ஆஷிகா செல்வம், இருவரில் குருசோமசுந்தரத்திற்கு மனைவியாக வரும் பிரியா சந்திரமெளலி, புருஷனை அதிகம் கடிந்து கொள்ளும் பாசக்கார மனைவியாக அசத்தியிருக்கிறார் என்றால், ஆஷிகா செல்வம் காதலர் ஜெயிலுக்கு போனதால் அவரது நண்பருடன் சல்லாபிக்கும் நாயகியாக நன்றாகவே நடித்திருக்கிறார்.

பிற நட்சத்திரங்கள்: கஞ்சா கஜபதியாக வரும் மெல்வின் எம்ரஞ்சன், மெல்வினின் பாஸ் நிகழ்கால தாதா தீபக் பாஹா (நிஜத்தில் மாஜி நாயகி சிம்ரனின் வீட்டுக்காரர்...) இவர்கள் எல்லோருக்கும் முன்னாள் தாதா இறந்த கால தாதா காளிமுத்து - நாசர். குருவின் கஞ்சா பொட்டல நண்பர் பீட்டர், பீட்டருக்கு பொட்டலம் சப்ளை செய்யும் கஞ்சா ஹோல்சேல் கஜபதி - மெல்வின் எம் .ரஞ்சன் மற்றும் அபிஷேக் கே.எஸ் வெங்கடேஷ், ஹரிநாத், வினுஜான், அருண்மொழி சிவப்பிரகாசம், துப்பாக்கி சப்ளை செய்யும் மாற்றுத்திறனாளி அமுதன், குப்பத்து பிக்பாக்கெட் பொடிசுகள்...சிறுமி மலர் - பேபி ஆர். ஹரணி, சிறுவன் சத்யா - மாஸ்டர் ஏ. ராகுல்… அவர்களுக்கு உதவும் லயன் - கால பைரவியாக வரும் சிம்ரன், நாசரின் ஆசை மனைவி சோனா ஹைடன், உள்ளிட்ட ஒவ்வொருவரும் பாத்திரமறிந்து பளிச்சிட்டுள்ளனர்.

தொழில் நுட்பகலைஞர்கள்: இப்பட இரட்டை இயக்குனர்களில் ஒருவரான நிஷாந்த் ரவீந்திரனின் திரைக்கதை மற்றும் படத்தொகுப்பாகட்டும், மற்றொரு இயக்குனரான ஜித்தின் ஷங்கர் ராஜ் மற்றும், சுனில் சி.கே.வின் ஒளிப்பதிவாகட்டும் இவை மூன்றிலும் பெரிய குறையேதுமில்லை. டோஷ் நந்தாவின் இசையில், "ம்பளக்கடி ஜும்பா... ஹேப்பி லைப்பு செம ஹேப்பி....","தமாசு தமாசு வேடிக்கை நீ பாரடா. "உள்ளிட்ட பாடல்களும் பின்னணி இசையும் படத்திற்கு பெரும் பலம்.

பலம்: டார்க் காமெடி ஸ்டைலில் இப் படத்தை இயக்கி இருக்கிறார்கள் இரட்டை இயக்குனர்கள் ஜத்தின் மற்றும் நிஷாந்த். படம் ஆரம்பத்தில் வெவ்வேறு கதைகளுடன் அங்கும் இங்குமாக அலை பாயும் திரைக்கதையாகஅமைந்தாலும், பிற்பாதியில் சரியாக ஒன்று சேர்த்திருக்கிறார்கள். பல இடங்களில் டார்க் காமெடி செமயாக ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது. ஒரு செட்-அப் பாக்சில் ஆரம்பித்து அதை வாங்குவதற்கு இடையே நடக்கும் பல சிக்கல்களை ரசிக்கும்படி கொடுத்திருக்கிறார்கள்....என்பது பெரும் பலம்.

பலவீனம்: பல இடங்களில் ‘ஓடு ராஜா ஓடு படத்தில் சில இடங்களில்தேவையில்லாத ஓட்டம் சற்றே இழுவையாக ஜாஸ்தியாக தெரிவது பெரும் பலவீனம்.

இயக்கம்: நிஷாந்த் ரவீந்திரன் மற்றும் ஜித்தின் ஷங்கர் ராஜ் இருவரதுஇயக்கத்தில், ஒரு டயலாக் ஒரு இடத்தில் முடியும் சொல்லில் அடுத்த காட்சி வேறொரு இடத்தில் ஆரம்பமாகும் புதுமை மற்றும் , "அடுப்புக்கு பயந்து நெருப்பில் விழுந்த கதை... " பழமொழிகள் ,ஜப்பான் காரன் டொயாட்டோ கார் மொக்க ஜோக் கு, "எங்க கிட்டேயும் இருக்குபெருசு பெருசா .. கன்னு" , என்பது உள்ளிட்ட காம நெடி டயலாக்குகள் எல்லாவற்றிலும் இப்படம் திரும்பி பார்க்க வைக்கிறது.

இவை எல்லாவற்றுக்கும் மேல், "ஒப்புக்கு சப்பான்ஸ் கொசுறு" , "அன்புள்ள அரிப்பு" , "ஏ 2 இசட் கல பொறுக்கி" , "நகுல் - கட்டத்துல சனி" , "மேரி ஆசை நாயகி" , "இம்ரான் துணை காதலன்" , "இறந்த கால தாதா" ,"நிகழ்கால தாதா", "வருங்கால தாதா, "கீழ்பாக்கம் அங்கம்மாள் போதை மாமி மேரி" , " பேன்ட் சட்டை கேங்கு" , "மொரட்டு பீஸ் பேன்ட் சர்ட் கேங்” , "கொலைகாரன் பேட்டையின் வேறிடத்தில்...."உள்ளிட்ட ஒவ்வொரு பாத்திர அறிமுகத்திற்காக திரையில் மிளிரும் சப்-டைட்டில்கள் இந்த இரட்டையர்களின் இயக்கத்தில் செம புதுசாக இருக்கிறது. வாவ்!

பைனல் "பன்ச்": ஆக மொத்தத்தில், ஒரு சில, லாஜிக் மீறல்கள், தேவையில்லாத ஓட்டங்கள் உள்ளிட்டவற்றை இன்னும் சற்றே குறைத்திருக்கலாம்... என்றாலும், நவீன காமெடி, சஸ்பென்ஸ் மற்றும் த்ரில்லர் படமாகவந்திருக்கும் "ஒடு ராஜா ஓடு' - நிச்சயம், 'தியேட்டரில் சக்கை போடு போடுகிறதோ, இல்லையோ., ஓரளவிற்கு ஓடும்... என நம்பலாம்!"

1 coment�rios:

சமீபத்தில் பெய்த கனமழை காரணமாக கிட்டத்தட்ட கேரள மாநிலமே வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. லட்சக்கணக்கானோர் அடிப்படை தேவையான உணவு, உடை கூட இல்லாமல்...

வாயை கொடுத்து மாட்டிக் கொண்ட டிடி.... இப்ப இது தேவையா? வருத்தெடுக்கும் மக்கள்!

சமீபத்தில் பெய்த கனமழை காரணமாக கிட்டத்தட்ட கேரள மாநிலமே வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. லட்சக்கணக்கானோர் அடிப்படை தேவையான உணவு, உடை கூட இல்லாமல் முகாம்களில் அகதிபோல் தங்கியுள்ளனர். கேரள அரசு போர்க்கால அடிப்படையில் நிவாரண உதவிகளை செய்து வருகின்றது.

மக்கள் பலர் கேரளா மக்களுக்கு உதவ முன்வந்துள்ளனர். தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களை சேர்ந்த பொது மக்கள், வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களும் நிதியுதவி அளித்துள்ளனர்.

இந்நிலையில், துபாயில் வேலை பார்க்கும் பாகிஸ்தானியர்கள் தங்களின் ஒரு நாள் சம்பளத்தை கேரள வெள்ள நிவாரண நிதிக்கு அளித்துள்ளனர். இது குறித்த செய்தியை பார்த்த டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினியான டிடி ட்விட்டரில் வாவ் என்று கூறி அவர்களை பாராட்டியுள்ளார்.

இதனால், அவரை நெட்டிசன்கள் திட்டி வருகின்றனர். முப்படைகள் செய்யும் வேலையை பாராட்டாமல் பாகிஸ்தானியர்களை பாராட்டுவதா? கேரளாவுக்கு நீங்கள் என்ன உதவி செய்தீர்கள்? என கேட்டு டிடியை திட்டி வருகின்றனர்.

0 coment�rios:

கேரள மக்கள் கடும் மழை மற்றும் வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கு நிவாரணம் அளிக்கும் விதத்தில் முதலமைச்சர் நிவாரண நி...

கேரளாவுக்கு தோனி பட நடிகர் கொடுத்த பிரம்மாண்ட தொகை! விஜய்யை விட மிக அதிகம்

கேரள மக்கள் கடும் மழை மற்றும் வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கு நிவாரணம் அளிக்கும் விதத்தில் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு பல்வேறு பிரபலங்கள் நிதி அளித்து வருகின்றனர்.

தற்போது தோனி படத்தில் ஹீரோவக நடித்திருந்த சுஷாந்த் சிங் ராஜ்புட் கேரளவுக்காக 1 கோடி ரூபாய் அளித்துள்ளார்.

ரசிகர் ஒருவர் ட்விட்டரில் கேட்ட கேள்வியை பார்த்த அவர், ரசிகரின் பெயரிலேயே அந்த நிதியினை அளித்துள்ளார்.

நடிகரின் இந்த செயல் ரசிகருக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

0 coment�rios:

பா.ரஞ்சித் அட்டக்கத்தி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தவர். அதை தொடர்ந்து மெட்ராஸ், கபாலி, காலா என தரமான படங்களாக தந்தவர...

பா.ரஞ்சிதின் அடுத்தப்படம் திரையில் இல்லை, புதிய முயற்சி, சர்ச்சையான களம்

பா.ரஞ்சித் அட்டக்கத்தி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தவர். அதை தொடர்ந்து மெட்ராஸ், கபாலி, காலா என தரமான படங்களாக தந்தவர்.

இவர் அடுத்து ஹிந்தி படம் எடுக்கப்போவதாகவும், ரஜினியுடன் மீண்டும் இணைவதாகவும் பல செய்திகள் வந்துக்கொண்டே இருக்கின்றது.

ஆனால், நமக்கு கிடைத்த தகவலின்படி ரஞ்சித் அடுத்து வெப் சீரியஸ் ஒன்றை எடுக்கப்போகின்றாராம், அவை பிரபல நடிகையாக இருந்து தனக்கு ஏற்பட்ட சில பிரச்சனைகளால் தற்கொலை செய்துக்கொண்ட சில்க் ஸ்மிதா வாழ்க்கையை வெப் சீரியஸாக எடுக்கவுள்ளாராம்.

0 coment�rios:

‘இவரு மட்டும் மாட்டேன்னு சொல்லியிருந்தா இந்தப்படத்தையே எடுத்திருக்க மாட்டேன்’ என்று ஒவ்வொரு பிரஸ்மீட்டிலும் யாராவது ஒரு நடிகரை புகழ்ந்து வை...

பசுபதி இல்லேன்னா இந்தப்படமே இல்ல! -டைரக்டர் சரண்டர்!

‘இவரு மட்டும் மாட்டேன்னு சொல்லியிருந்தா இந்தப்படத்தையே எடுத்திருக்க மாட்டேன்’ என்று ஒவ்வொரு பிரஸ்மீட்டிலும் யாராவது ஒரு நடிகரை புகழ்ந்து வைப்பார்கள் இயக்குனர்கள். கடைசியில் படத்தை பார்த்தால், அந்த நடிகர் நடிக்காமலிருந்தால் கூட இன்னும் சிறப்பாக இருந்திருக்குமே என்று தோன்றும். ‘அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா’ படத்திலும் அப்படியொரு புகழ்ச்சி.

தன்னை நோக்கிய அந்த புகழ்ச்சியை தக்க வைத்துக் கொள்வாரா பசுபதி?

‘ஒரு பேச்சுக்கெல்லாம் சொல்லல. நிஜமாகவே இந்தப்படத்தில் பசுபதியின் பர்பாமென்ஸ் பிரமாதம்’ என்று பேச ஆரம்பித்தார் அ.இ.சா படத்தின் இயக்குனர் அவினாஷ் ஹரிகரன். அதிலும் கொஞ்சம் உண்மை இருக்கதான் செய்கிறது. வதவதவென படங்களில் நடித்துத் தள்ளுபவரல்ல பசுபதி. அவர் மனசுக்கு ஒட்டாத படங்களை, இடது கையால் புறம் தள்ளிவிட்டு குப்புறடித்து தூங்கக் கூட செய்கிற ஆள்தான்.

இதுவரைக்கும் 30 படங்களுக்கு மேல் விநியோகம் செய்திருக்கும் ஆரா சினிமாஸ் நிறுவனம்தான் இந்தப்படத்தை முதன் முறையாக தயாரித்திருக்கிறது. இந்த 30 படத்திலும் ஆரா நிறுவனம் கற்றுக் கொண்டது என்ன தெரியுமா? ஆடியன்ஸ் எதை சொன்னா ரசிப்பான். எதை சொன்னா ரசிக்க மாட்டான் என்பதை. “இந்தப்படத்தை நான் தயாரிக்க காரணமே அந்த கணக்குதான்” என்றார் ஆரா சினிமாஸ் மகேஷ் கோவிந்தராஜ்.

‘சரி… இது முழு நீள அரசியல் படமா?’ என்றால், “ஐயய்யோ. அதெல்லாம் இல்ல” என்கிறார் இயக்குனர் அவினாஷ். மூன்று பேரின் வாழ்வில் ஒரு அரசியல்வாதி ஏற்படுத்துகிற திருப்பம் என்னவாக முடிகிறது என்பதுதானாம்.

படம் மட்டும் நல்லாயில்லேன்னா, வீட்டுக்கு ஆட்டோவ அனுப்பிர வேண்டியதுதான்!

0 coment�rios:

சமயங்களில், பூட்டிய அறைக்குள் இருப்பது கன்னுக்குட்டி என்று நினைத்திருப்போம். கதவை திறந்தால் காட்டு யானை பிளிரும்! அப்படியொரு முரட்டுப்படம்த...

மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன / விமர்சனம் - பளபளப்பை பாராட்டி விடுவோம்!

சமயங்களில், பூட்டிய அறைக்குள் இருப்பது கன்னுக்குட்டி என்று நினைத்திருப்போம். கதவை திறந்தால் காட்டு யானை பிளிரும்! அப்படியொரு முரட்டுப்படம்தான் ம.பா.ம.எ! துருவா, ஐஸ்வர்யா தத்தா, அஞ்சனா, சரண்யா பொன்வண்ணன் என்று சல்லி விலையில் கிடைக்கும் திருவிழா ரிப்பன்கள்தான் இப்படத்தின் தாம்பு கயிறுகள். பார்த்தால்… தியேட்டரை விட்டு எழுந்து ஓட விடாமல் இறுக்கிக் கட்டுகிறார்கள். ஆஹா…!

வயதான மற்றும் திருமணமான பெண்களிடம் தாலியறுக்கும் தடியன்கள் சிலர். இந்த துயரத்தில் சிக்குகிற ஹீரோ அந்த கும்பலை கண்டறிந்து எப்படி வேரறுக்கிறான் என்பதுதான் கதை. பின்புலத்தில் தங்க மாஃபியா பற்றிய ஏராளமான டீட்டெயில்கள். கடைசியில் தங்கம் யார் கைக்கு போகிறது என்பதை அறியும்போது, ‘அடப்பாவிகளா, எவனைதான் நம்ப சொல்றீங்க?’ என்று அதிர்ச்சியாகிறோம்.

சுமார் நான்கு படங்களிலாவது நடித்திருப்பார் இப்படத்தின் ஹீரோ துருவா. இன்னமும் மனசுக்குள் ஒட்டாத முகம். அழுத்தமான காட்சிகளில் நடிக்க அநியாயத்துக்கு முக்குகிறார். பேஸ்கட்டு கவுத்தாலும், ஓங்குதாங்கான அவரது உடற்கட்டு ஆக்ஷன் காட்சிகளில் துவம்சம் பண்ணுகிறது. படத்தில் இவர் குறித்த சஸ்பென்சை முன்பே யூகிக்க முடிவதும் கூட சற்றே சப்!

படத்தின் முதுகெலும்பே சரண்யா பொன்வண்ணனின் நடிப்புதான். எந்த அழகான பெண்ணை பார்த்தாலும், ‘என் புள்ளைய கட்டிக்கிறீயா?’ என்று அப்பாவியாக கேட்டு அலற விடுகிறார் அவர்களை. வெகு தூர கோவில்களை இலவச தரிசனம் செய்ய அவர் போடும் தந்திரத் திட்டங்கள், ஜாலியாக்குகிறது தியேட்டரை. அவ்வளவு சந்தோஷமும் புறாக் கூட்டுக்குள் பூகம்பம் வந்தது போல நொறுங்கும் போது, தியேட்டரும் சப்தநாடியை அடக்கிக் கொள்கிறது.

பிக்பாஸ்2 ல் கலக்கிக் கொண்டிருக்கும் ஐஸ்வர்யா தத்தா இதில் ஒரு ஹீரோயின். அழகு இருக்கிறதே ஒழிய, நடிப்பு நாலு பைசாவுக்கு கூட நம்பும்படி இல்லை. அதுவும் திடீரென இவர் போலீஸ் ஆகி, ஃபுல் சல்யூட் அடிப்பதெல்லாம் ட்ராமா!

மற்றொரு ஹீரோயின் அஞ்சனாவுக்கு சற்றே வெயிட் ரோல். நம்பியவர்களை நட்டாற்றில் விடவில்லை இவர்! அந்த வில்லன் கூட்டத்தில் அறம் படத்தில் நடித்த ராமச்சந்திரனின் நடிப்பு தனி கவனம் பெறுகிறது. ராதாரவிக்கு ஒரு நாள் கால்ஷீட்தான் போல. வந்தவரைக்கும் பெடல் மிதித்துவிட்டு போகிறார்.

பி.ஜி.முத்தையாவின் ஒளிப்பதிவு மனசை ரம்மியமாக்குகிறது. சண்டைக்காட்சிகளில் ஸ்பெஷல் மெனகெடல். பலே. இசை அச்சு. இன்னும் நாலைந்து முறை கேட்டால் பாடல்கள் மனசில் நிற்குமோ என்னவோ?

செயின் பறிப்பு திருடர்கள் பற்றிய டிக்ஷனரியாகவே ஒரு படம் வந்தது. ‘மெட்ரோ’! அப்படத்தின் ‘கவரிங்’தான் இப்படம் என்றாலும், பெண்களுக்கு விழிப்புணர்வை தந்திருக்கிறதே!

வேறு வழியேயில்லை… இயக்குனர் ராகேஷின் முயற்சியால் கிடைத்த இந்த  இமிடேஷன் பளபளப்பை பாராட்டி விடுவோம்!

0 coment�rios:

கமல்ஹாசன் நடித்து இயக்கிய படம் விஸ்வரூபம்-2. இப்படத்தின் முதல் பாகம் உலகம் முழுவதும் அடைந்த வெற்றியை நாங்கள் சொல்லி தெரியவேண்டியது இல்லை. ...

அதல பாதளத்திற்கு போன விஸ்வரூபம்-2 வசூல், கமல் மார்க்கெட் இப்படியானதே!

கமல்ஹாசன் நடித்து இயக்கிய படம் விஸ்வரூபம்-2. இப்படத்தின் முதல் பாகம் உலகம் முழுவதும் அடைந்த வெற்றியை நாங்கள் சொல்லி தெரியவேண்டியது இல்லை.

இந்நிலையில் விஸ்வரூபம்-2 படத்திற்கு பெரியளவில் எதிர்ப்பார்ப்பு இல்லை, ஆனால், கமல் இந்தியா முழுவதும் இப்படத்தை ப்ரோமோட் செய்தார்.

அப்படியிருந்தும் இப்படம் தற்போது வரை மொத்தம் ரூ 50 கோடி தான் வசூல் செய்துள்ளதாம், இதில் தமிழகத்தில் மட்டும் இப்படம் ரூ 30 கோடி வசூல் செய்துள்ளது.

இதனால், பல இடங்களில் விஸ்வரூபம்-2 கடும் நஷ்டத்தை சந்தித்துள்ளது, சமீபத்தில் வந்த கடைக்குட்டி சிங்கமே ரூ 50 கோடியை தாண்டி தமிழகத்தில் வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.

இப்படி கமல் மார்க்கெட் அதளபாதளத்திற்கு செல்ல அவரின் அரசியல் எண்ட்ரீ ஒரு காரணமா என்றும் சிலர் கூறி வருகின்றனர்.

0 coment�rios:

மீண்டும் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். இந்தோனேஷியாவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு, பயங்கர நிலநடுக்கம் ...

இந்தோனேஷியாவில் மீண்டும் பயங்கர நிலநடுக்கம்; பீதியில் பொதுமக்கள்!

மீண்டும் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.

இந்தோனேஷியாவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு, பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். இரண்டு முறை நிலநடுக்கத்தால் தொடர் நில அதிர்வுகள் ஏற்பட்டு, மக்களை அச்சுறுத்தின.

ஆயிரக்கணக்கான வீடுகள், கட்டடங்கள் இடிந்து தரைமட்டமாகின. இந்த சூழலில் இன்று காலை சும்பவா பகுதியில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.5ஆக பதிவானது.

இந்நிலையில் இன்று இரவு மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 6.9ஆக பதிவாகியுள்ளது. இதனால் ஏராளமான கட்டடங்கள் குலுங்கின.

0 coment�rios:

நடிகர் ரஜினிகாந்த் இன்று நடிகர் சங்க நினைவேந்தல் கூட்டத்தில் கலைஞர் கருணாநிதி பற்றி உருக்கமாக பேசினார். அதுமட்டுமின்றி கலைஞருக்கு உரிய மரிய...

நானே போராட்டத்தில் இறங்கியிருப்பேன்! தமிழக முதல்வருக்கு கண்டனம் தெரிவித்த ரஜினி

நடிகர் ரஜினிகாந்த் இன்று நடிகர் சங்க நினைவேந்தல் கூட்டத்தில் கலைஞர் கருணாநிதி பற்றி உருக்கமாக பேசினார். அதுமட்டுமின்றி கலைஞருக்கு உரிய மரியாதை அளிக்காத தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

"மெரினாவில் அடக்கம் செய்யலாம் என கோர்ட் தீர்ப்புக்கு பிறகு மேல் முறையீடு செய்யவில்லை, நீங்கள் செய்திருந்தால் நானே போராட்டத்தில் இறங்கியிருப்பேன்" என ரஜினி கூறினார்.

மேலும் "தேசிய தலைவர்கள், மற்ற மாநில முதல்வரகள், ராகுல் காந்தி உள்ளிட்ட பலர் இங்கு கலைஞரை அடக்கம் செய்யும்போது இருந்தனர். நீங்கள் எங்கே போனீர்கள்" என தமிழக முதல்வரை பார்த்து ரஜினி காட்டமாக கேட்டுள்ளார்.

0 coment�rios:

கர்நாடகத்தில் காதல் ஜோடி பேஸ் புக் லைவில் திருமணம் செய்த சம்பவம் நடைபெற்றுள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்தவர் கிரண்குமார். அவரும்...

காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்... இதுவரை யாரும் செய்திராத சுவாரசியமான திருமணம்

கர்நாடகத்தில் காதல் ஜோடி பேஸ் புக் லைவில் திருமணம் செய்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்தவர் கிரண்குமார். அவரும் அஞ்சனா என்ற பெண்ணும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இந்த விஷயத்தை அஞ்சனா தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதற்கு அவரது பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

அதற்கு காரணம் கிரண்குமார் ஆதிவாசி சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் தான்.ஆகவே வீட்டிலிருந்து வெளியேறினார் அஞ்சனா.

இதனிடையே தனது மகளை கிரண் கடத்திவிட்டதாக அஞ்சனாவின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இந்நிலையில் கிரண்குமார்-அஞ்சனா தங்களது திருமணத்தை பேஸ்புக் லைவ் வீடியோவாக வெளியிட்டனர். மேலும் தங்களுக்கு பாதுகாப்பு வழங்கக் கோரியும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

0 coment�rios:

பொதுவாக கருணாநிதி தான் இருக்கும் இடத்தை கலகலப்பாக வைத்துக் கொள்வார். நகைச்சுவை மற்றும் சிலேடையாக பேசுவது போன்ற அவரது பேச்சின் வெளிப்பாடு ...

காவேரி மருத்துவமனையில் நடந்த சுவாரசியம்! நர்சுகளை அசர வைத்த கருணாநிதி

பொதுவாக கருணாநிதி தான் இருக்கும் இடத்தை கலகலப்பாக வைத்துக் கொள்வார்.

நகைச்சுவை மற்றும் சிலேடையாக பேசுவது போன்ற அவரது பேச்சின் வெளிப்பாடு அவரது அருகில் இருப்பவர்களை சிரிக்கச் செய்துவிடும்.

இந்நிலையில் தான் 2016 ஆம் ஆண்டு காவேரி மருத்துவமனையில் அனுமதித்திருந்தபோது அங்கிருந்த செவிலியர்களிடம் நகைச்சுவையாக பேசியுள்ளார்.

தீவிர சிகிச்சை பெற்று வந்த கருணாநிதியின் உடல் நிலையைக் கருத்தில் கொண்டு அவருக்கு தண்ணீர் அதிகம் கொடுக்கக் கூடாது என்று அவரை கவனித்துக் கொண்டிருந்த நர்சுகளுக்கு டாக்டர்கள் உத்தரவிட்டிருந்தனர்.

அதனால் தொடர்ந்து கருணாநிதி குடிப்பதற்கு தண்ணீர் கேட்டும் பணியில் இருந்த செவிலியர் தண்ணீர் கொடுக்கவில்லை.

ஒரு கட்டத்தில் அந்தசெவிலியரை அழைத்த கருணநிதி , இத்தனை தடவை தண்ணீர் கேட்டும் நீ கொடுக்கவில்லையே ! உன் பேரென்ன காவேரியா ? என கேட்டு தனது நகைச்சுவை உணர்வை வெளிப்படுத்தியுள்ளார்.

0 coment�rios:

பிக்பாஸ் வீட்டில் கமல்ஹாசன் நேற்று நடிகர் பொன்னம்பலத்துடன் நீண்ட நேரம் உரையாடினார். பல குறும்படங்களை போட்டு அது பற்றி விளக்கம் கேட்டார். ...

மன்னிப்பு கேட்ட பொன்னம்பலம்! கழுத்தை பிடித்த கமல்.. அதிர்ச்சியான ரசிகர்கள்

பிக்பாஸ் வீட்டில் கமல்ஹாசன் நேற்று நடிகர் பொன்னம்பலத்துடன் நீண்ட நேரம் உரையாடினார். பல குறும்படங்களை போட்டு அது பற்றி விளக்கம் கேட்டார்.

ஐஸ்வர்யா சர்வாதிகாரியாக இருந்தபோது அவரை கழுத்தை பிடித்து தண்ணீரில் தள்ளியது பற்றி பேசிய பொன்னம்பலம், "அவர் அவராகவே இல்லை, வேறு வழி இல்லை என தெரியும்.. அதனால் தான் அப்படி செய்தேன். அது தவறாக இருந்தால் மன்னிப்பு கேட்கிறேன்" என கூறினார்.

மேலும் தான் ஸ்டண்ட்மேன் என்றும், அடிபடாமல் எப்படி சண்டை போடவேண்டும் என்பது தெரியும் என கூறி ஒரு பெண்ணை அழைத்து ஐஸ்வர்யாவுக்கு செய்தது போலவே மேடையில் செய்துகாட்டினார்.

அதன்பின் கமல் பொன்னம்பலத்தின் கழுத்தை பிடித்து அழுத்துவது போல செய்தார், ஆனால் வலிக்கவே இல்லை என பொன்னம்பலம் கூறிய பிறகு தான் புரிந்தது இருவரும் நடித்தார்கள் என்று.

0 coment�rios:

இயக்கம், நடிப்பு, தயாரிப்பு என பல வேலைகளை செய்து கமல்ஹாசன் வெளியிட்டிருக்கும் படம் விஸ்வரூபம் 2. இப்படத்தின் முதல் பாகத்திற்கு மக்களிடம் ...

பக்கா மாஸ் வசூல் செய்யும் கமல்ஹாசனின் விஸ்வரூபம் 2- மூன்று நாள் அதிரடி வசூல் விவரம்

இயக்கம், நடிப்பு, தயாரிப்பு என பல வேலைகளை செய்து கமல்ஹாசன் வெளியிட்டிருக்கும் படம் விஸ்வரூபம் 2.

இப்படத்தின் முதல் பாகத்திற்கு மக்களிடம் எப்படிபட்ட வரவேற்பு கிடைத்தது என்பது நமக்கே தெரியும். இரண்டாம் பாகத்திற்காக ஆவலாக காத்துக் கொண்டிருந்த மக்கள் இப்போது நல்ல வரவேற்பு கொடுத்து வருகின்றனர்.

விஸ்வரூபம் 2 படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்தாலும் பாக்ஸ் ஆபிஸில் கலக்கிதான் வருகிறது. இப்போது படம் மூன்று நாள் முடிவில் சென்னையில் மட்டும் ரூ. 3.02 கோடி வரை வசூலித்துள்ளதாம்.

முதல் நாள்- ரூ. 0.92
இரண்டாம் நாள்- ரூ. 1.03
மூன்றாம் நாள்- ரூ. 1.07

0 coment�rios:

தன் மகளை சில விசயங்களுக்காக அடிக்கடி கடிந்து கொள்வதால் அவள் அப்பாவிடம் கேட்டாள்… ஏம்பா என்னை இப்படி கண்டிப்புடன் நடத்துகிறீர்கள்…??? என்னை ...

தன் மகளை அளவுக்கு அதிகமாக நேசிக்கும் ஒரு தகப்பனின் உணர்வுப் பூர்வமான எச்சரிக்கை!

தன் மகளை சில விசயங்களுக்காக அடிக்கடி கடிந்து கொள்வதால் அவள் அப்பாவிடம் கேட்டாள்… ஏம்பா என்னை இப்படி கண்டிப்புடன் நடத்துகிறீர்கள்…??? என்னை கொஞ்சம் சுதந்திரமாக விடலாமே என்று..

ஆனால் அதை அப்பா சற்று கஷ்டமாகவே உணர்ந்தார்… இதை எப்படி இவளுக்கு சொல்லிக்கொடுப்பது என யோசித்தார்..

ஒரு நாள் மகள் தன் தகப்பனிடம் வந்து கேட்டாள்.. அப்பா நான் பட்டம் விட்டு விளையாடபோகிறேன், நீங்களும் வாங்க.., என அழைத்துக்கொண்டு வீட்டின் மொட்டை மாடிக்கு சென்றாள்..

பட்டத்தை நூலில் கட்டி பறக்கவிட்டு மகிழ்ந்தாள்… அப்படி மகிழ்திருக்கும் வேளையில் அப்பா கேட்டார்… பட்டம் மேலே பறக்க, பறக்க அழகாய் இருக்கிறது…. ஆனால் அதன் விருப்பம்போல பறக்க முடியவில்லை.. அதற்கு தடையாய் இருப்பது என்னம்மா?? என கேட்டார்..

மகள் பட்டென பதில் சொன்னாள் இந்த நூல் தான் அப்பா அதை தன் இஷ்டத்திற்கு விடாமல் கட்டி வைத்திருக்கிறது என்று சொன்னாள்..

அப்படியா என கேட்டுவிட்டு அந்த நூலை அப்படியே அறுத்து விட்டார்… பட்டமும் தன் இஷ்டபடி பறந்தது. ஆனால் சற்று நேரத்திலேயே கிழிந்த காகிதமாய் கீழே விழுந்தது…

அப்பா சொன்னார்.. மகளே.. இந்த பட்டத்தை தன் இஷ்டபடி பறக்கவிடாமல் தடுக்கவில்லை… நேரான வழியில் இந்த பட்டம் பறந்து உயரங்களை கீழடக்க இந்த நூல் உதவியாய் இருக்கிறது…

இதேபோலத்தான் மகளே உன் அப்பாவாகிய நானும் ஒரு நூல்தான்… நீதான் அந்த பட்டம்… நீ என்னுடைய பேச்சை கேட்டு அதன்படி நடப்பாயெனில் என் பாதுகாவலுடன் உயர பறக்கலாம்… உன் இஷ்டப்படி வாழ நினைத்தால் அந்த பட்டம் கிழிந்து காகிதம் ஆனதுபோல உன் வாழ்க்கையும் சீரழிந்துவிடும்…

இப்போது புரிந்திருப்பாய் ஏன் உன்னை கண்டித்தேன் என்பதனை… நூலாகிய என்னை அறுத்துவிடாதே என்று சொல்லும்போதே மகள் தன் அப்பாவை கட்டி அணைத்துக் கொண்டாள்…!!!

ஆம் அன்பான பிள்ளைகளே… உங்களுக்கு இனிமையாய் தோன்றுகின்ற வழிகள் ஏராளம் இருக்கலாம்.. ஆனால் அவற்றின் முடிவு பயங்கரமானது…

எனவே பெற்றோருக்கு கீழ் படிந்து வாழ கற்றுக் கொள்ளுங்கள் உங்கள் இனிய வாழ்வு உங்களை வரவேற்கும்…!!!

அப்பா அம்மாவின் அன்பும், கண்டிப்பும் இருந்தால் மகள், மகனின் வாழ்வு இனிமையாக அமையும்.

அனைவருக்கும் பகிருங்கள்!

0 coment�rios:

பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக தான் பங்கேற்பது குறித்து நடிகை கஸ்தூரி விளக்கமளித்துள்ளார். கடந்த ஜூன் மாதம் 17-ஆம் தேதி முதல் பிக்பா...

பிக்பாஸ் வீட்டில் நானா? வீடியோ வெளியிட்ட கஸ்தூரி

பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக தான் பங்கேற்பது குறித்து நடிகை கஸ்தூரி விளக்கமளித்துள்ளார்.

கடந்த ஜூன் மாதம் 17-ஆம் தேதி முதல் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.  இந்த நிகழ்ச்சியில் பொன்னம்பலம், யாஷிகா, மஹத் உள்ளிட்ட 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். கடந்த முறை போன்றே இம்முறையும் கமல்ஹாசன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். 50 நாட்களை கடந்து ஒளிபரப்பாகி வரும் இந்நிகழ்ச்சியில் இதுவரை நித்யா, ரம்யா, ஷாரிக், மமதி, அனந்த் வைத்தியநாதன் ஆகிய 5 பேர் வெளியேறியுள்ளனர்.

இந்நிலையில் நடிகை கஸ்தூரி பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க இருப்பதாக தகவல் வெளியானது . இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ வெளியிட்டிருக்கும் நடிகை கஸ்தூரி, தான் அமெரிக்காவில் இருப்பதாகவும் , புற்றுநோய் குறித்த ஆய்வில் ஈடுபட்டு இருப்பதாகவும், சுவாரஸ்யத்திற்காக இதுபோன்ற வதந்திகளை பரப்ப வேண்டாம் என்றும் கூறியுள்ளார்.

0 coment�rios:

பிரபல சின்னத்திரை நட்சத்திர தொகுப்பாளினி டிடி என்று செல்லமாக அழைக்கப்படும் திவ்யதர்ஷினி. காபி வித் டிடி மூலம் புகழ்பெற்றவர். பிரமாண்ட நட்...

உடைந்து போன திருமண வாழ்வின் பின்னர் டிடிக்கு சிக்கிய ரகசிய காதலன்! மனம் திறந்த நடிகர்? அதிர்ச்சியில் ரசிகர்கள்

பிரபல சின்னத்திரை நட்சத்திர தொகுப்பாளினி டிடி என்று செல்லமாக அழைக்கப்படும் திவ்யதர்ஷினி. காபி வித் டிடி மூலம் புகழ்பெற்றவர்.

பிரமாண்ட நட்சத்திர கலை விழாக்கள், விருது வழங்கும் விழாக்களை தொகுத்து வழங்கியவர். முன்னணி திரை நட்சத்திரங்களுக்கு தோழியாக இருப்பவர்.

சமீபகாலமாக திரைப்படங்களிலும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். இந்நிலையில் இவரது ரகசிய காதலன் என்று ஒரு தகவல் இணையத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.


அந்த ரகசிய காதலன் யார் என்றால் பகல்நிலவு தொடரில் நடித்து வருகிற மிதுன்ராஜ் தானாம்.

ஆனால் அதை மறுத்துள்ள மிதுன், ‘நான் அவரை அக்கா என்று தான் கூப்பிடுவேன், அவருடன் நான் எடுத்து கொண்ட ஒரு செல்ஃபியை ஃபேஸ்புக்கில் போட்டேன். அதை எடுத்து ஒரு யூடியுப் சேனல் இவ்வாறு பரவ விட்டுள்ளது’ என தனது பேட்டியில் விளக்கியுள்ளார்.

0 coment�rios:

திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 7 ஆம் தேதி மரணம் அடைந்தார். அவர் ஏற்கனவே, வயது காரணமாகவும், உடல்நலக் குறைவு காரணமாக கடந...

கருணாநிதி இறுதி சடங்கில் சிரித்துக்கொண்டிருந்து இந்த குட்டி பையன் யார்?

திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 7 ஆம் தேதி மரணம் அடைந்தார். அவர் ஏற்கனவே, வயது காரணமாகவும், உடல்நலக் குறைவு காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தீவிர அரசியலில் ஈடுபடாமல் வீடிலேயே இருந்தார்.

அவ்வப்போது வீட்டிற்கு வெளியே வந்து தனது தொண்டர்களை பார்த்து கையசைப்பார். அவரது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களும் சில நேரங்களில் வெளியாகும். ஓய்வில்லாமல் உழைத்த ஒருவர் ஒன்றரை ஆண்டுகள் வீட்டில் இருந்தபோது அவருக்கு பொழுதுபோக்காக இருந்த ஒருவன் இந்த மகிழன்.

மகிழன் கருணாநிதியின் கொள்ளுப்பேரன். அதாவது நடிகர் அருள்நிதியின் மகன். உடல் நலக்குறைவுக்கு சிகிச்சை எடுத்து வந்தபோதும் மகிழனுடன் எப்படியும் ஒரு மணி நேரமாவது செலவிடுவாராம் கருணாநிதி.

சமீபத்தில், கருணாநிதியின் சமாதிக்கு அவரது குடும்பத்தார் சென்று அஞ்சலி செலுத்தினர். அப்பொழுது மகிழனை கூட்டி வந்தார். அவனை கீழே இறக்கிவிட்டதும் மகிழன் கருணாநிதியின் புகைப்படத்தை பார்த்து சிரித்தபடி அவரை அழைத்துள்ளான்.

கருணாநிதி இறந்தது தெரியாமல் எப்போதும் போல அவரை பார்த்ததும் அவன் மகிழ்ச்சிகொண்டு, அவரை அழைத்தது அங்கிருந்தவர்களை கண் கலங்க வைத்துவிட்டதாம். வீட்டில் இருக்கும் போது கருணாநிதி நிறைய சிரித்ததர்கு மகிழந்தான் காரணம் என கோபாலபுர வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

0 coment�rios:

தொழிலதிபர் விஜய் மல்லையாவின் லண்டன் மேன்சனில் தங்க கழிப்பறை இருப்பது தெரியவந்துள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய தொழிலதிபரான விஜய் மல்லையா இந...

லண்டனில் உள்ள விஜய் மல்லையா வீட்டில் இருக்கும் தங்க கழிப்பறை: என்ன விலை தெரியுமா?

தொழிலதிபர் விஜய் மல்லையாவின் லண்டன் மேன்சனில் தங்க கழிப்பறை இருப்பது தெரியவந்துள்ளது.

இந்தியாவின் மிகப்பெரிய தொழிலதிபரான விஜய் மல்லையா இந்திய வங்கிகள் பலவற்றில் ரூ.9000 கோடிகள் அளவுக்கு கடன் வாங்கிவிட்டு பிரித்தானியாவுக்கு தப்பிசென்றார்.

இந்தியாவில் உள்ள மல்லையாவின் சொத்துக்களை அமலாக்க துறையினர் கைப்பற்றி வருகிறார்கள்.

இதோடு நீதிமன்றத்திலும் அவர் மீதான வழக்குகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் லண்டனில் உள்ள மல்லையாவின் மேன்சனில் தங்கத்தால் ஆன கழிப்பறை இருப்பது தெரியவந்துள்ளது.

பிரபல எழுத்தாளரான ஜேம்ஸ் கிராப்ட்ரீ மல்லையா மேன்சனுக்கு சென்ற நிலையில் இதை பார்த்துள்ளார், இந்த தகவலை அவரே வெளியிட்டுள்ளார்.

இந்த கழிப்பறையின் சரியான விலை குறித்த விபரம் வெளியாகவில்லை என்றாலும் இதன் விலை கோடிகளில் இருக்கும் என தெரியவந்துள்ளது

0 coment�rios:

கருணாநிதி அவர்களுக்கு செல்லப் பிராணிகள் என்றால் அலாதி பிரியம், தினமும் தான் வளர்க்கும் நாய்களுடன் நேரம் செலவழிப்பார். அவர் அசைவ பிரியரும்...

நாய் இறந்ததால் சைவத்துக்கு மாறிய கருணாநிதி: நெகிழ்ச்சி சம்பவம்

கருணாநிதி அவர்களுக்கு செல்லப் பிராணிகள் என்றால் அலாதி பிரியம், தினமும் தான் வளர்க்கும் நாய்களுடன் நேரம் செலவழிப்பார்.

அவர் அசைவ பிரியரும் கூட, தினமும் அவரது உணவில் அசைவம் இருக்கும், தனது உணவையே நாய்களுக்கும் கொடுத்து உண்ணும் வழக்கம் உடையவர்.

ஆனால் திடீரென தான் பாசமாக வளர்த்த கருப்பு நாய் இறந்து விடவே, சைவத்துக்கு மாறினாராம்.

இதுகுறித்து கனிமொழி கூறுகையில், கருப்பு நாய் இறந்ததால் கலைஞர் சோகம் அடைந்தார், அதன் உடலை ஆலிவர் சாலையில் இருந்த வீட்டின் பின்புறம் புதைத்தோம்.

இதனால் கலைஞர் இரண்டு ஆண்டுகளாக அசைவம் சாப்பிடுவதையே நிறுத்தி விட்டார், ஆனால் மருத்துவ காரணங்களுக்காக அசைவம் சாப்பிட மருத்துவர்கள் அறிவுரை வழங்கினார்கள் என தெரிவித்துள்ளார்.

0 coment�rios:

எதிரியைத் தேடிப் போய் திருப்பி அடிக்கும் இந்திய உளவுத்துறை அதிகாரியின் கதையே ’விஸ்வரூபம் 2’. அமெரிக்காவிலிருந்து தப்பித்துச் செல்லும் தீவ...

முதல் பார்வை: விஸ்வரூபம் 2

எதிரியைத் தேடிப் போய் திருப்பி அடிக்கும் இந்திய உளவுத்துறை அதிகாரியின் கதையே ’விஸ்வரூபம் 2’.

அமெரிக்காவிலிருந்து தப்பித்துச் செல்லும் தீவிரவாதிகள் குழுத் தலைவன் ராகுல் போஸைத் தேடும் பயணத்தை மேற்கொள்கிறார் கமல். உடன் சேகர் கபூர், ஆண்ட்ரியா, பூஜாகுமார் ஆகியோர் பயணிக்கின்றனர். லண்டனில் கமல் அண்ட் கோவைப் பழிதீர்க்க ராகுல் போஸ் சதித் தீட்டம் தீட்ட, அதை வெற்றிகரமாக முறியடிக்கிறார் கமல். 1500 டன் எடை கொண்ட வெடிகுண்டுகளைச் செயலிழக்கச் செய்யும் சவாலை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயமும் அவருக்கு ஏற்படுகிறது. டபுள் கேம் ஆடும் உயர் அதிகாரி ஒருவரால் தன் உயிருக்கே ஆபத்து நேர்கிறது. ராகுல் போஸாலும் பேராபத்து தொடர்கிறது. இவற்றை கமல் எப்படி சந்திக்கிறார், அதனால் ஏற்படும் இழப்புகள் என்ன என்பதற்கு ’விஸ்வரூபம் 2’ விடை சொல்கிறது.

இயக்குநராகவும், நடிகராகவும் கமல் தன்னை மிகச் சரியாக நிறுவியிருக்கும் படம் என்று சொல்லலாம். நளினம் மிகுந்த கதக் நடன ஆசிரியராக இருக்கும் விஸ்வநாத்தின் நதிமூலம், ரிஷிமூலம் இதில் சரியாக வெளிப்படுகிறது. ராணுவ அதிகாரியாக இருந்து தீவிரவாதியாகக் கட்டமைக்கப்பட்டு சாவின் விளிம்பு வரை சென்று மீண்டு வந்து இந்திய உளவுத்துறை அதிகாரியாகும் பரிமாணம் அடையும் காட்சிகள் திரைக்கதை நகர்த்தலுக்கு வினையூக்கியாக வேகமுகம் காட்டுகிறது.

கமல் அசரடிக்கிறார். வார்த்தைக்கு வார்த்தை பதிலடி கொடுத்து நகைச்சுவைத் தரன்மையிலும் தெறிக்க விடுகிறார். நாட்டின் மீதான பற்று, சக பணியாளர் மீதான அன்பு, மனைவி மீதான அக்கறை, தொழில் மீதான பக்தி என்று எல்லா முகங்களிலும் மிகச் சரியாகப் பொருந்துகிறார். எதிரிக்கும் நல்லது செய்கிற அந்தப் பண்பிலும் கமலின் கதாபாத்திரம் உயர்ந்து நிற்கிறது.

கமல் மீதான காதலில் கிறங்குவதிலும், கணவனுக்காக ரிஸ்க் எடுத்து 1500 எடை கொண்ட வெடிகுண்டின் தன்மையைப் பரிசோதிப்பதிலும் பூஜாகுமார் கவனிக்க வைக்கிறார். பூஜாகுமார் மீதான பொறாமையை லேசுபாசாக வெளிப்படுத்துவது, கமல் மீதான அன்பை திடமாக உணர்த்துவது, ஆக்‌ஷன் காட்சிகளில் அசத்துவது என ஆண்ட்ரியா ஆச்சர்யப்படுத்துகிறார்.

கமலின் மிகச் சிறந்த வழிகாட்டியாக தன்னை வடிவமைத்துக்கொண்ட சேகர் கபூர் தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். குண்டுகள் பாய்ந்த நிலையில் கமலுக்கு தன்னம்பிக்கை கொடுக்கும் அக்காட்சி செம்ம.

நின்று நிதானித்து ஸ்கோர் செய்கிறார் ராகுல் போஸ். எதற்கும் அலட்டிக்கொள்ளாமல் கச்சிதமான நடிப்பை வழங்கியிருக்கிறார். சூழ்ச்சியில் சிக்கவைத்து நாடகமாடும் ஆனந்த மகாதேவனும், கமலின் அம்மாவாக அழுத்தமான நடிப்பைத் தந்த வகீதா ரஹ்மானும் கவன ஈர்ப்பை ஏற்படுத்தி இருக்கிறார்கள்.

ஷாம்தத் சைனுதீன் லண்டன், ஆப்கானிஸ்தான், டெல்லியின் பரப்பைக் கண்களுக்குள் கடத்துகிறார். லால்குடி என்.இளையராஜாவின் ஆப்கானிஸ்தான் தீவிரவாதக் கும்பல் குறித்த செட், தண்ணீருக்குள் நிகழும் சண்டைக்காட்சி ஆகியவை தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஜிப்ரானின் இசையில் நானாகிய நதிமூலமே ரசிக்க வைக்கிறது. நான் யாரென்று தெரிகிறதா பாடலை உல்டாவாக்கிய ஞாபகம் வருகிறதா பாடல் மெதுவான பீட்டாக இருப்பதால் வெறுமனே கடந்துபோகிறது. பின்னணி இசையில் ஜிப்ரானின் உழைப்பு பளிச்சிடுகிறது. இந்தக் காட்சி தேவையே இல்லை என்று சொல்லாத அளவுக்கு நறுக்கென்று காட்சிகளைக் கோத்த விதத்தில் மகேஷ் நாராயணனும், விஜய் சங்கரும் வியக்க வைக்கிறார்கள்.

முதல் பாகத்தை நினைவூட்டுவதற்காக இரண்டாம் பாகத்தில் கூறியது கூறல் இருக்கும். ஆனால், இப்படத்தில் அப்படி எந்த அம்சமும் இல்லை. திரைக்கதை எந்தக் குழப்பமும் இல்லாமல் நேர்த்தியாகச் செல்கிறது. ஆனால், படத்தில் சவால்கள் குறைவாக உள்ளதால் அதை எதிர்கொள்ள வேண்டிய நிர்பந்தமும் நாயகனுக்கு குறைவாகவே உள்ளது. இதனால் இரண்டாம் பாதி பெரிதாக ஈர்க்கவில்லை. அதை முட்டுக்கொடுப்பதற்காக கமல் அம்மா போர்ஷன் சேர்க்கப்பட்டுள்ளது. ஆனால், அது போதுமானதாக இல்லை. நாயகன் எந்த சாகசத்தையும் செய்யாமல், புத்திசாலித்தனத்தையும் வெளிப்படுத்தாமல் எதிரிகளை சாதாரணமாகவே அணுகுவது எடுபடவில்லை. 64 வெடிகுண்டுகளை செயலிழக்கச் செய்வது காட்சியாக இல்லாமல் வசனமாக நகர்வதால் ஏமாற்றமே மிஞ்சுகிறது. அதுவும் அந்த கிளைமாக்ஸ் பலவீனம்.

இவற்றைத் தவிர்த்துப் பார்த்தால், தீவிரவாதம், வன்முறை ஆகியவற்றை எதிர்த்துக் களமாடுவதோடு நில்லாமல், அஹிம்சை, அன்பை மட்டும் முன்னிறுத்தும் கமலின் நோக்கம் ராகுல் போஸ் வாரிசுகள் வழியாக இப்படத்தில் சரியாக நிறைவேறி இருக்கிறது.

0 coment�rios:

மறைந்த தி.மு.க தலைவர் கருணாநிதி நல்லடக்கம் செய்யப்பட்டுள்ள மெரினா கடற்கரையில் இன்று காலை கவிஞர் வைரமுத்து அஞ்சலி செலுத்தினார். வயது மூப்ப...

மறைந்த கலைஞர் எழுதிவைத்துச் சென்ற 3 உயில்கள்: வைரமுத்து மேல் கொந்தளிப்பில் ஸ்டாலின் குடும்பம்!

மறைந்த தி.மு.க தலைவர் கருணாநிதி நல்லடக்கம் செய்யப்பட்டுள்ள மெரினா கடற்கரையில் இன்று காலை கவிஞர் வைரமுத்து அஞ்சலி செலுத்தினார்.

வயது மூப்பின் காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தி.மு.க தலைவர் கருணாநிதி கடந்த 7-ம் தேதியன்று மாலை அவர் அனுமதிக்கப்பட்டிருந்த காவேரி மருத்துவமனையிலேயே உயிரிழந்தார். இவரின் மரணம் அவரின் குடும்பத்தார் மற்றும் தொண்டர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

சென்னை ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் உடலுக்கு அரசியல் தலைவர்கள், திரையுலகினர், தொண்டர்கள் என பல்வேறு தரப்பினரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.

அப்போது அங்கு வந்திருந்த கவிஞர் வைரமுத்து கருணாநிதியின் உடலுக்கு அருகில் நின்று கதறி அழுதபடி அஞ்சலி செலுத்தினார். அவரின் தாங்கமுடியாத துக்கத்தை அழுகையின் மூலம் வெளிப்படுத்தினார். இந்தக் காட்சியைப் பார்த்த அனைவரும் பெரும் சோகத்தில் ஆழ்ந்தனர்.

இதற்கு முன்னதாக கருணாநிதி உடல்நலம் பாதிக்கப்பட்டு கோபாலபுரம் வீட்டில் இருந்தபோதும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோதும் வைரமுத்து அடிக்கடி வந்து கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரித்துச் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.


இந்நிலையில், சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா சமாதிக்கு அருகில் கருணாநிதி அடக்கம் செய்யப்பட்ட இடத்துக்கு இன்று காலையிலேயே தன் மகன்களுடன் வந்த வைரமுத்து, கருணாநிதியின் சமாதியில் மலர் தூவி பால் ஊற்றி அஞ்சலி செலுத்தினார்.

பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், சூரியன் இல்லாமல் ஒரு விடியல் வருமா. அதேபோன்று கருணாநிதி இல்லாத தமிழகத்தை என்னால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. என் தந்தைக்குச் செய்யவேண்டிய இறுதி மரியாதையை செய்யவே நான் இங்கு வந்தேன். தமிழக மக்கள் நன்றியுள்ளவர்கள் என நான் நம்புகிறேன்.

கருணாநிதியின் லட்சியங்கள், கொள்கைகளை முன்னெடுத்துச் செல்வது நம் கடமை. அவர் இலக்கியங்கள், சொற்பொழிவு, செயல் ஆகியவற்றில் என்றும் வாழ்ந்துகொண்டுதான் இருப்பார். அவரின் போர் குணத்தை இந்த கால இளைஞர் கற்றுக்கொள்ள வேண்டும்.

கருணாநிதியை எதிரி என நினைத்தவர்கள் கூட அவரின் போர்குணத்தைக் கண்டு வியந்துள்ளனர். கருணாநிதி நம் சமூகத்துக்கு எழுதி வைத்துச் சென்றுள்ள மிகப்பெரிய உயில் சுயமரியாதை, தமிழ், இன அடையாளம் ஆகியவை. இவற்றைக் கட்டிக்காப்பாற்ற வேண்டியது தமிழர்களின் பெரும் கடமை எனக் கூறினார்.


மேலும், இன்று அதிகாலை முதல் கருணாநிதி அடக்கம் செய்யப்பட்டுள்ள இடத்துக்கு நூற்றுக்கணக்கான பொதுமக்கள் வந்து அஞ்சலி செலுத்திய வண்ணம் உள்ளனர்.

இது ஒரு புறமிருக்க, வைரமுத்து கலைஞர் சமாதிக்கு பாலூற்றி வழிபட்டுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது. அதாவது, பொதுவாக ஒருவர் இறந்து விட்டால் மூன்றாம் நாள் காலையில் இறந்தவரின் குடும்பத்தினர் மட்டுமே சமாதியில் பாலூற்றி வழிபடுவார்கள்.

ஆனால் ஸ்டாலின், அழகிரி என கருணாநிதியின் மகன்களை கலந்தாலோசிக்காமல் வைரமுத்து பாலூற்றி வணங்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்துக்காக கவிஞர் வைரமுத்து மேல் கருணாநிதி குடும்பத்தினர் அதிருப்தியிலும், கோபத்திலும் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

0 coment�rios:

திமுக தலைவராக இருந்த மு.கருணாநிதி காலமானதை அடுத்து அக்கட்சியின் செயல் தலைவராக இருக்கும் மு.க.ஸ்டாலின் விரைவில் திமுக தலைவராக பதவியேற்க உள்ள...

அடுத்த தலைவர் யார்? முதல்வர் பதவிக்கு போட்டி... ஸ்டாலினின் திட்டம் இதுதானாம்!

திமுக தலைவராக இருந்த மு.கருணாநிதி காலமானதை அடுத்து அக்கட்சியின் செயல் தலைவராக இருக்கும் மு.க.ஸ்டாலின் விரைவில் திமுக தலைவராக பதவியேற்க உள்ளதாக திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதே நேரத்தில் கனிமொழி மற்றும் அழகிரியை சமாளிக்க இருவருக்கும் திமுகவில் முக்கிய பதவிகள் வழங்கவும் ஸ்டாலின் சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் திமுகவில் இருந்து விலக்கப்பட்ட அழகிரி, மீண்டும் கட்சியில் சேர்த்துக்கொள்ளப்படுவார் என்றும், அவருக்கு கட்சியில் முக்கிய பதவி கொடுப்பதோடு வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பும் வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

ஒருவேளை ஸ்டாலின் கொடுக்கும் பதவியை அழகிரி விரும்பாவிட்டால் அவருக்கு பதிலாக அவருடைய மகன் தயாநிதி அழகிரிக்கு கட்சியில் முக்கியத்துவம் தரும் வகையில் ஒரு பதவியும், முரசொலி அறக்கட்டளையில் ஒரு பதவியும் வழங்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது

அதேபோல் கனிமொழிக்கும் கட்சியில் மேலும் முக்கியத்துவம் கிடைக்கும் என்றும், அவர் வழக்கம்போல் ராஜ்யசபா எம்பி பதவியில் தொடர்ந்து இருப்பார் என்றும் கூறப்படுகிறது. அழகிரி, கனிமொழி ஆகிய இருவரையும் டெல்லி பக்கம் அனுப்பிவிட்டால்தான், முதலமைச்சர் பதவிக்கு போட்டி இருக்காது என்பதே ஸ்டாலின் எண்ணமாக இருப்பதாக திமுகவினர் கூறி வருகின்றனர்.

0 coment�rios:

திமுக தலைவராக இருந்த மு.கருணாநிதி காலமானதை அடுத்து அக்கட்சியின் செயல் தலைவராக இருக்கும் மு.க.ஸ்டாலின் விரைவில் திமுக தலைவராக பதவியேற்க உள்ள...

அடுத்த தலைவர் யார்? முதல்வர் பதவிக்கு போட்டி... ஸ்டாலினின் திட்டம் இதுதானாம்!

திமுக தலைவராக இருந்த மு.கருணாநிதி காலமானதை அடுத்து அக்கட்சியின் செயல் தலைவராக இருக்கும் மு.க.ஸ்டாலின் விரைவில் திமுக தலைவராக பதவியேற்க உள்ளதாக திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதே நேரத்தில் கனிமொழி மற்றும் அழகிரியை சமாளிக்க இருவருக்கும் திமுகவில் முக்கிய பதவிகள் வழங்கவும் ஸ்டாலின் சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் திமுகவில் இருந்து விலக்கப்பட்ட அழகிரி, மீண்டும் கட்சியில் சேர்த்துக்கொள்ளப்படுவார் என்றும், அவருக்கு கட்சியில் முக்கிய பதவி கொடுப்பதோடு வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பும் வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

ஒருவேளை ஸ்டாலின் கொடுக்கும் பதவியை அழகிரி விரும்பாவிட்டால் அவருக்கு பதிலாக அவருடைய மகன் தயாநிதி அழகிரிக்கு கட்சியில் முக்கியத்துவம் தரும் வகையில் ஒரு பதவியும், முரசொலி அறக்கட்டளையில் ஒரு பதவியும் வழங்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது

அதேபோல் கனிமொழிக்கும் கட்சியில் மேலும் முக்கியத்துவம் கிடைக்கும் என்றும், அவர் வழக்கம்போல் ராஜ்யசபா எம்பி பதவியில் தொடர்ந்து இருப்பார் என்றும் கூறப்படுகிறது. அழகிரி, கனிமொழி ஆகிய இருவரையும் டெல்லி பக்கம் அனுப்பிவிட்டால்தான், முதலமைச்சர் பதவிக்கு போட்டி இருக்காது என்பதே ஸ்டாலின் எண்ணமாக இருப்பதாக திமுகவினர் கூறி வருகின்றனர்.

0 coment�rios:

இந்திய மாநிலம் ராஜஸ்தானில் உள்ள ஒரு கிராமத்தில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக திருமணம் நடைபெறாததை கண்டு, அந்த கிராமத்தின் பெயரை அங்குள்ள மக்கள் ம...

திருமணம் நடப்பதில் சிக்கல்: கிராமத்தின் பெயரை மாற்றிய மக்கள்

இந்திய மாநிலம் ராஜஸ்தானில் உள்ள ஒரு கிராமத்தில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக திருமணம் நடைபெறாததை கண்டு, அந்த கிராமத்தின் பெயரை அங்குள்ள மக்கள் மாற்றியுள்ள சம்பவம் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பார்மெர் மாவட்டத்தின் மியான் கா பாரா கிராமத்தின் பெயர், மகேஷ் நகர் என மாற்றப்பட்டுள்ளது.

இஸ்லாமியர்களின் வீடு எனப் பொருள்படும் மியான் கா பாரா கிராமத்தில் உள்ள 2000 குடும்பத்தில், வெகு சிலரே இஸ்லாமியர்கள்.

ஆனால், இந்தப் பெயரைப் பார்த்ததுமே இங்குள்ளவர்களைத் திருமணம் செய்ய யாருமே முன்வருவதில்லை.


இதனால் கடும் அதிருப்தியடைந்த இப்பகுதி மக்கள் அரசாங்கத்திற்கு கோரிக்கை முன்வைத்தனர். இதனையடுத்து தற்போது இந்த கிராமத்திற்கு மகேஷ் நகர் என பெயர் மாற்றப்பட்டுள்ளது.

ஆனால், ராஜஸ்தானில் சட்டசபை தேர்தல் வரவிருப்பதால் மக்களை பிளவுப்படுத்தும் நோக்கில் அங்கு ஆட்சியில் இருக்கும் பாரதிய ஜனதா கட்சி செயல்படுகிறது என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அந்த மாநிலத்தில் இஸ்லாமியப் பெயர்களைப்போல உள்ள கிராமங்களின் பெயர்கள் மாற்றம் செய்யப்பட்டுவருகின்றன. அந்த வகையில், ஜூஞ்ஹூனா மாவட்டத்தின் இஸ்மாயில்பூர் கிராமம் தற்போது, பிச்சான்வா குர்த் என மாற்றப்பட்டது.

அத்துடன், ஜலோர் மாவட்டத்தின் நார்பாரா என்ற கிராமத்தின் பெயர், நார்புரா என மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஓராண்டில் மட்டும் நாடு முழுவதும் உள்ள 27 கிராமங்களின் பெயர்களை மாற்ற மத்திய உள்விவகார அமைச்சகம் பரிசீலித்துவருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

0 coment�rios:

விஸ்வரூபம் 2 படத்தின் முத்தக்காட்சிகளை நீக்கிவிட்டு, அதற்கு பதிலாக நாயகனும் நாயகியும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ளும்காட்சிகள் மட்டும் பட...

விஸ்வரூபம்-2 திரைப்படத்தின் வெட்டப்பட்ட காட்சிகள் ஓரு பார்வை !


விஸ்வரூபம் 2 படத்தின் முத்தக்காட்சிகளை நீக்கிவிட்டு, அதற்கு பதிலாக நாயகனும் நாயகியும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ளும்காட்சிகள் மட்டும் படத்தில் இடம் பிடித்துள்ளது.

கடந்த 2013 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் விஸ்வ ரூபம் திரைப்படத்தின் முதல் பாகம்வெளியானது. அப்போது விஷ்வரூபம் முதல் பாகத்தில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகள் போல் சித்தரித்து உள்ளதாகவும், அது இஸ்லாமியர்களை இழிவுபடுத்துவதால் படத்தை வெளியிடக் கூடாது என்று பல எதிர்ப்புகள் எழுந்தன.

இந்த நிலையில் விஸ்வரூபம் திரைப்படத்தின் 2-ம் பாகம்இன்று வெளியாகி உள்ளது. இந்த திரைப்படத்தின் இந்தி வெர்ஷனில் 14 இடங்களில்வரும் காட்சிகளை சென்சார் போர்டு வெட்டியுள்ளது. படுக்கை அறையில்கமல் பூஜாகுமாருக்கு கொடுக்கும் உதட்டு முத்த காட்சியை சென்சார்போர்டுவெட்டியுள்ளது. அதற்கு பதிலாகஇருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொளும் காட்சிகள்இடம் பெற்றுள்ளது,

மேலும் தமிழ் வெர்ஷனில் மொத்தம் 22 இடங்களில் வரும் காட்சிகளை வெட்டியுள்ளது சென்சார் போர்டு .

0 coment�rios:

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சூர்யா. தனது தந்தை மிகப்பெரிய நடிகராக இருந்தாலும் அவரிடம் எந்தவொரு உதவியையும் நாடாமல் தனது சொந்...

நடிகர் சூர்யா எம்.எல்.ஏ ஆகிறாராம்! அரசியல் எண்டிரி

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சூர்யா. தனது தந்தை மிகப்பெரிய நடிகராக இருந்தாலும் அவரிடம் எந்தவொரு உதவியையும் நாடாமல் தனது சொந்த முயற்சியாலயே இந்த இடத்தை அடைந்துள்ளார்.

இவர் தற்போது செல்வராகவன் இயக்கத்தில் NGK படத்தில் நடித்து கொண்டிருக்கிறார். பிரபல போராளி சேக்குவாரின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து இந்த படம் உருவாகுவதாக செய்திகள் வரும் நிலையில் இப்படத்தில் என்.ஜி.குமரன் என்கிற எம்.எல்.ஏ.வாக சூர்யா நடித்துள்ளாராம்.

மேலும் காக்கும் முன்னேற்ற கழகம் என்கிற கட்சியின் இளைஞர் அணி தலைவராகவும் நடித்துள்ளாராம். அயுத எழுத்து படத்திற்கு பிறகு சூர்யா நடிக்கும் இந்த NGK அரசியல் படத்திற்க்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

0 coment�rios:

கருப்பட்டி என்னும் பனைவெல்லத்தின் மருத்துவ பயன்கள் *சீனி நமக்கு எவ்வளவு பகையோ அதற்கு நேர் மாறாக கருப்பட்டி நம் நெருங்கிய நண்பன். பனங்கருப...

கருப்பட்டி என்னும் பனைவெல்லத்தின் மருத்துவ பயன்கள்

கருப்பட்டி என்னும் பனைவெல்லத்தின் மருத்துவ பயன்கள்

*சீனி நமக்கு எவ்வளவு பகையோ அதற்கு நேர் மாறாக கருப்பட்டி நம் நெருங்கிய நண்பன். பனங்கருப்பட்டி யின் மருத்துவ பயன்கள் அளவில்லாதது*

*இப்படி சர்க்கரை மற்றும் பல நோய்களின் தாக்கத்தில் இருந்து விடுபட நமக்கு கிடைத்த அருமருந்து தான் கருப்பட்டி*

*சர்க்கரைக்கு மாற்றாக சரியாக கருப்பட்டியை பயன்படுத்தினாலே இன்று உள்ள பெரும்பாலான நோய்கள் இல்லாமலும் அதற்கான மருத்துவ செலவுகள் மற்றும் மருந்துகள் அவசியமில்லாமலே போகும்*

*“உணவே மருந்து” என்னும் நியதிப்படி, கால சூழலுக்கு ஏற்றார்போல உடலுக்கு தேவையானதை தேவைப் படும் நேரத்தில் வழங்குகிறது*

*பனங்கருப்பட்டியின் மருத்துவ பயன்கள்:-*

*1.பனங்கருப்பட்டியில் இரும்பு மற்றும் கால்சியம் சத்து அதிகமாக உள்ளது. இதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது*

*2.விட்டமின்-பி, மற்றும் அமினோ அமிலங்கள் நிறைந்துள்ள கருப்பட்டி நீரிழிவு நோயை கட்டுப்படுத்துகிறது*

*3.பருவம் அடைந்த பெண்களுக்கு கருப்பட்டியையும், உளுந்தையும் சேர்த்து உளுந்தங்களி செய்து கொடுத் தால் கருப்பை ஆரோக்கியமாக இருக்கும். நார்ச்சத்தும் இதில் அதிகம்*
*4.குப்பைமேனிக் கீரையுடன் கருப்பட்டியைச் சேர்த்து வதக்கிச் சாப்பிட்டால் வறட்டு இருமல், நாள்பட்ட சளித் தொல்லை நீங்கும்*

*5.கருப்பட்டி மற்றும் பனங்கல்கண்டில் எண்ணற்ற விட்டமின்களும், மினரல் சத்துக்களும் உள்ளன*

*6.கருப் பட்டி இயற்கையாகவே உடலை குளிர்ச்சியடையச் செய்யும். அதில் உள்ள ‘கிளைசீமி இன்டெக்ஸ்’ உடலில் கலக்கும் சர்க்கரை அளவை, வெள்ளை சர்க்கரையை விட பாதிக்கும் கீழாக குறைக்கிறது*

*7.சர்க்கரைக்குப் பதிலாக கருப்பட்டி காபி குடிக்கலாம். இதில் சுண்ணாம்பு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி அதி கமாக இருக்கிறது. மேலும் இதை சர்க்கரை நோயாளிகளும் குடிக்கலாம்*

*8.கருப்பட்டி பணியாரம் குழந்தைகளுக்கு ஏற்றது. கருப்பட்டியை பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை விரும்புகின்றனர்*

*9.கருப்பட்டிஇரத்தத்தை சுத்திகரித்துஉடலுக்கு சுறுசுறுப்பை கொடுக்கும்*

*10. மேனிபளபளப்பை பெறும்*

*11.கருப்பட்டியில் சுண்ணாம்பு கலந்து சாப்பிட்டால் உடல் சுத்தமடையும்*

*12.சீரகத்தை வறுத்து கருப்பட்டியுடன் சேர்த்து சாப்பிட்டால் நன்கு பசி எடுக்கும்*

*13.ஓமத்தை கருப்பட்டியுடன் சேர்த்து சாப்பிட்டால் வாயு தொல்லை நீங்கும்*

*14.கரும்புசக்கரைக்கு பதிலாக கருப்பட்டியை பயன்படுத்தினால் பற்களும்எலும்புகளும் உறுதியாகும்*

*15.நீரிழிவு நோயாளிகள் (சக்கரை நோயாளிகள்) கைகுத்தல்அரிசிசாதத்துடன் கருப்பட்டி கலந்து சாப்பிட்டுவந்தால் சக்கரையின் அளவு கட்டுபாட்டில் இருப்பதுடன் அடிக்கடி சிறுநீர் போவது குறையும்*

*16.குழந்தைகள் முதல்பெரியவர்கள் வரை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நம்உடலுக்கு தேவையான கால்சியம் கிடைக்கிறது*

*17.சுக்குகருப்பட்டி பெண்களின் கர்ப்பப பைக்கு மிகவும் ஏற்றது*
.

*18.சுக்கு,மிளகு கலந்து கருப்பட்டியை குழந்தை பெற்ற பெண்கள் சாப்பிட்டால் பால் நன்றாகசுரக்கும்*

*19.அந்ததாய் பாலை குடிக்கும் குழந்தைக்கு நல்ல ஊட்டசத்துக்கள் கிடைக்கபெறும்*.

*20.உடல்இயக்கத்தையும் சீரான சக்தியையும் சமநிலையில் செய்கிறது*

0 coment�rios:

கருணாநிதி தனது கண்ணின் கருவிழி என்று அழைத்தது ஒருவரைத்தான். அவர் வேற யாருமில்லை கருணாநிதியின் மருமகான முரசொலி மாறன். கருணாநிதியின் மறு வட...

கருணாநிதியை உலுக்கிய மரணம்: அவரின் மனசாட்சி யார் தெரியுமா?

கருணாநிதி தனது கண்ணின் கருவிழி என்று அழைத்தது ஒருவரைத்தான். அவர் வேற யாருமில்லை கருணாநிதியின் மருமகான முரசொலி மாறன்.

கருணாநிதியின் மறு வடிவம் என்று திமுக தொண்டர்களால் அழைக்கப்பட்டவர் முரசொலி மாறன்.

அரசியலில் தொடங்கி கட்சி, கூட்டணி என அனைத்திலும் கருணாநிதி அடுத்து என்ன முடிவு எடுப்பார் என்பது முரசொலி மாறனுக்கு தெரியும். அந்த அளவுக்கு கருணாநிதியின் எண்ணமாகவும், நிழலாகவும் திகழ்ந்தார் முரசொலி மாறன்.

திமுக நிர்வாகிகள் பலரும் முரசொலி மாறனை செல்லமாக கருணாநிதியின் மனசாட்சி என்று தான் அழைப்பார்கள்.

திமுகவின் அரசியல் தேசிய அளவிலும், சர்வதேச அரங்கிலும் உயர்ந்திட மிக முக்கிய காரணமாக இருந்துள்ளார் முரசொலி மாறன்.

ஒருமுறை தோஹா மாநாட்டில் முரசொலி மாறன் நீண்ட உரை ஒன்றை நிகழ்த்தினார். அவரின் உரையை கேட்டு மெய் மறந்த கருணாநிதி, முரசொலி மாறனை கட்டி அணைத்து பாராட்டினார். அதன் பின்பு தான் கருணாநிதி வாழ்க்கையில் தவிர்க்க முடியாத நிழலாக முரசொலி மாறன் உருவெடுத்தார்.

கடந்த 2003 ஆம் ஆண்டு உடல்நலக் குறைவு காரணமாக முரசொலி மாறன் காலமானர். மாறனின் மரணத்தின் போது கருணாநிதி அவருடன் இருந்தார்.

மாறனின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது என்ற செய்தி தெரிந்ததும் கலைஞர் அடுத்தக்கணமே மருத்துவமனைக்கு விரைந்தார்.

மாறன் மரணமடைந்ததும், கருணாநிதி மருத்துவமனையிலியே கண்ணீர் விட்டு அழுதார். முதலில் முரசொலி மாறனின் உடல் அவரின் இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.

அதன் பின்பு இரவு 9 மணிக்கு மேல் தான் கருணாநிதியின் இல்லத்திற்கு எடுத்து வரப்பட்டது. அதுவரை மாறனின் உடலுக்கு அருகில் கருணாநிதி அமர்ந்திருந்தார்.

முரசொலி மாறனின் பிரிவுக்கு பிறகு கருணாநிதி மனதளவிலும், உடல் அளவிலும் பலவீனம் ஆனார். கருணாநிதியின் உடல்நிலை சற்று மோசமானது.

முரசொலி மாறனின் பிரிவு தான் கருணாநிதியை இந்த நிலையில் தள்ளிவிட்டது என்று திமுக தொண்டர்கள் பலர் வருத்தப்பட்டனர். மாறனின் மறைவு கருணாநிதியின் நெஞ்சில் இடி போல் விழுந்தது.

அதன் பின்பு கருணாநிதி அளித்த பல பேட்டியில் அவரால் மறக்க முடியாத மரணம் என்று முரசொலி மாறனின் மரணத்தை தான் குறிப்பிடுவார்

0 coment�rios:

ஆப்பிளிள் சத்துக்கள் நிறைந்து காணப்பட்டாலும் அதன் விதைகளில் விஷத்தன்மை வாய்ந்த ஒரு சயனைடு உள்ளது. ஒரு கிராம் ஆப்பிள் விதையில் 0.06-0.24 கிர...

ஆப்பிள் விதையில் விஷம்! சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?

ஆப்பிளிள் சத்துக்கள் நிறைந்து காணப்பட்டாலும் அதன் விதைகளில் விஷத்தன்மை வாய்ந்த ஒரு சயனைடு உள்ளது. ஒரு கிராம் ஆப்பிள் விதையில் 0.06-0.24 கிராம் அளவிற்கு சயனைடு எனும் நச்சுக்கள் உள்ளது.

அத்தகைய ஆப்பிள் பழத்தின் விதைகளையும் நாம் சேர்த்து சாப்பிட்டால் பலவிதமான பக்கவிளைவுகள் ஏற்படுத்தும்.

ஆப்பிள் விதையை சாப்பிட்டால் என்ன நடக்கும்?

ஆப்பிள் விதைகளில் இருக்கும் அமிக்டாலின் என்ற சயனைடு மிகவும் நச்சு தன்மை கொண்டது. அத்தகைய ஆப்பிள் விதைகளை நாம் உண்ணும் போது அவை முதலில் செரிமான மண்டலத்தை சென்றடைந்து அந்த சயனைடு நச்சாக மாறி, உடலின் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்.
ஆப்பிள் விதைகளை நாம் சாப்பிடும் போது அவை முதலில் நம் உடலில் உள்ள சுவாச உறுப்புகளுக்கு செல்லும் ஆக்ஸிஜனை தடுத்து, இதயம், மூளை மற்றும் ரத்த அழுத்தத்தை அதிகரித்து, உயிருக்கு ஆபத்தை விளைவிக்க கூடியதாக அமைகிறது.

தெரியாமல் ஆப்பிள் விதைகளை உண்டால் அவை அவர்களின் நோய் எதிர்ப்பு திறனை பொறுத்தே பாதிப்பை ஏற்படுத்தும். இதனால் அவர்களுக்கு சில நேரங்களில் வாந்தி, மயக்கம், தலை சுத்தல், வயிற்றில் வலி போன்றவை ஏற்படும்.

ஆப்பிள் விதையில் 0.3-0.35 மிகி வரையிலான சயனைடு ஆபத்தை விளைவிக்கும். மேலும் ஆப்பிள் விதையில் உள்ள சயனைடின் அளவு ஒவ்வொருவரின் உடல் எடைக்கு ஏற்றது போல வேறுபடும்.

ஆப்பிள் விதைகளை ஒரு கப் அளவிற்கு எடுத்துக் கொண்டால் கோமா நிலை ஏற்பட்டு இறப்புகள் கூட நடைபெற வாய்ப்பு உள்ளது.

எச்சரிக்கை!

ஆப்பிள் சாப்பிடும் முன்னர் அதன் விதைகளை முற்றிலும் அகற்றிவிட்டு சாப்பிடுவது நல்லது.
அதன் விதைகளை அப்படியே சாப்பிட்டுவிட்டால் அதை வெளியில் உடனடியாக உமிழ்ந்துவிடுவது நல்லது.
மேலும் செரிமான மண்டலத்தை சென்றடைந்தால் தான் சயனைடாக மாறும் என்பதால், அதனை உமிழ்ந்துவிடுவதால் எதுவும் ஆகாது.

0 coment�rios:

கமல்ஹாசன் இயக்கி நடித்துள்ள ’விஸ்வரூபம் 2’ படத்திற்கு பிரபல சினிமா பத்திரிக்கையாளர் உமைர் சந்து அளித்துள்ள ரேட்டிங் விபரங்கள் சமூகவலைதளங்கள...

Vishwaroopam 2: ரேட்டிங் இதுதான்- விமர்சகர் உமைர் சந்து சினிமா விமர்சனம்

கமல்ஹாசன் இயக்கி நடித்துள்ள ’விஸ்வரூபம் 2’ படத்திற்கு பிரபல சினிமா பத்திரிக்கையாளர் உமைர் சந்து அளித்துள்ள ரேட்டிங் விபரங்கள் சமூகவலைதளங்களில் டிரென்டிங்கில் உள்ளன.

2013ம் ஆண்டில் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் வெளியான திரைப்படம் ’விஸ்வரூபம்’. கமல்ஹாசன் இயக்கி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்த இப்படம், இந்திய உளவாளியின் அதிரடி சாகசங்களை பற்றிய படமாக தயாராகியிருந்தது.

தற்போது 5 ஆண்டுகளுக்கு பிறகு இந்த படத்தின் இரண்டாம் பாகம் ‘விஸ்வரூபம்- 2’ என்ற பெயரில் தயாராகியுள்ளது. முதல் பாகத்தின் தொடர்ச்சியாக உருவாகியுள்ள இந்த படத்தை கமல்ஹாசன் இயக்கி நடித்துள்ளார்.

முதல் பாகத்தில் நடித்திருந்த ஆண்ட்ரியா, பூஜா குமார், சேகர் கபூர், ராகுல் போஸ் போன்றோர் விஸ்வரூபம்- 2விலும் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் பல புதிய கதாபாத்திரங்களும் இந்த படத்தில் அறிமுகம் செய்யப்படுகிறது.

குறிப்பாக விஸ்வரூபம்- 2வில் கமல்ஹாசனின் தாயார் கதாபாத்திரம் முக்கிய இடம் பிடித்துள்ளது. அந்த கதாபாத்திரத்தில் பாலிவுட்டின் முன்னாள் கதாநாயகியும் தமிழகத்தை சேர்ந்தவருமான வகீதா ரஹ்மான் நடித்துள்ளார்.

EXCLUSIVE First Review #Vishwaroopam2 from #UAE ! A Well Made Thriller in all Respects ! @ikamalhaasan Stole the Sh… https://t.co/M0p7PYNmRO

— Umair Sandhu (@sandhumerry) 1533802594000


இந்தியாவில் நாளை அதிகாரப்பூர்வமாக வெளிவரவுள்ள ’விஸ்வரூபம்- ’படம், முன்னதாக மத்திய கிழக்கு பகுதியின் சில நாடுகளில் வெளியானது. அதை பார்த்த பிரபல சினிமா பத்திரிக்கையாளர் உமைர் சந்து ’விஸ்வரூபம்- 2’ படத்திற்கு தனது ரேட்டிங்கை அளித்துள்ளார்.

”விஸ்வரூபம் - 2 அதிரடியாகவும், ரசிக்கும்படியான த்ரில்லிங் அனுபவம் தரும் விதத்தில் தயாராகியுள்ளது. கமலின் நடிப்பு மற்றும் இயக்கம் அருமை. படத்தில் இடம்பெற்றுள்ள அதிரடி காட்சிகள் பிரமிப்பை தருகின்றன”. என தனது ட்விட்டரில் உமைர் சந்து பதிவிட்டுள்ளார்.

அத்துடன் 5 / 3.5 என தனது ரேட்டிங்கை விஸ்வரூபம்- 2 படத்திற்கு அவர் வழங்கியுள்ளார். இவரது இந்த பதிவு, சமூக வலைதளங்களில் டிரென்டிங்கில் உள்ளன. இது இந்திய ரசிகர்கள் மத்தியிலும் படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. 

0 coment�rios:

நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசனின் விஸ்வரூபம் திரைப்படம் நாளை ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியாக உள்ளது. நடிகர் கமல்ஹாசன...

'விஸ்வரூபம்' முதல் ‘விஸ்வரூபம் 2’ வரை- ரசிகனையும் தொண்டனையும் திருப்திபடுத்துவாரா கமல்ஹாசன்?

நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசனின் விஸ்வரூபம் திரைப்படம் நாளை ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியாக உள்ளது.

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில், அவரே இயக்கி, தயாரித்து கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘விஸ்வரூபம்’. சர்வதேச தீவிரவாதத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படம், வெளியீட்டிற்கு முன் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்தது.

தடைகளை உடைத்து சரித்திரம் படைத்தவன்:

படத்தில் முஸ்லீம் மதத்தவர்களை தவறாக சித்தரித்ததாக தெரிவித்து, சில முஸ்லீம் அமைப்பினர் படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், தமிழ்நாடு மற்றும் ஆந்திராவில் சில நாட்களுக்கு பின்னரே விஸ்வரூபம் வெளியிடப்பட்டது. இருப்பினும், படம் திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களின் பேராதரவை பெற்று, மிகப்பெரிய அளவில் வெற்றிப் பெற்றது. படத்தின் இறுதியில் அதன் இரண்டாம் பாகத்தில் சில காட்சிகள் டிரைலராக காட்டப்பட்டு, விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டது.



2015 இல் கலக்கிய கமல்:

ஆனால், நிதிப் பிரச்சனையால் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு அடிக்கடி தடைப்பட்டது. இதனிடையில், நடிகர் கமல்ஹாசன் ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் உத்தமவில்லன் (2015), ஜித்து ஜோசப் இயக்கத்தில் பாபநாசம் (2015), சி.கே.திவாகர் இயக்கத்தில் தூங்கா வனம் (2015) உள்ளிட்ட படங்களில் நடித்தார். அதில் பாபநாசம் திரைப்படம் மட்டும் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வெற்றியைப் பெற்றது.

சபாஷ் நாயுடு:

இந்தப் படங்களைத் தொடர்ந்து நடிகர் கமல்ஹாசன் தசாவதாரம் படத்தில் வந்த காமெடி கதாபாத்திரமான நாயுடுவை வைத்து சபாஷ் நாயுடு படத்தை இயக்க முயற்சித்தார். ஆனால், அந்தப் படமும் நிதிப்பிரச்சனையால் பாதியிலேயே தடைப்பட்டது.

பிக்பாஸும் பிரச்சனைகளும்:

பிக்பாஸ் கமல்ஹாசன்

இதற்கிடையில்தான் வெளியானது பிக்பாஸ் என்ற ரியாலிட்டு ஷோ. ஏற்கனவே பல மொழிகளில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியடைந்த இந்த ஷோவை, தமிழில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார், அவரின் பேச்சுப் புலமை இந்த நிகழ்ச்சி வெற்றிப் பெற மிகப்பெரிய அளவில் உதவியது.

அதுவரையில், சமூகப் பிரச்சனைகளுக்கு நடிகனாக குரல் கொடுத்து வந்த கமல்ஹாசன். அந்த சமூகத்தில் உள்ளவர்களில் ஒருவராக, அரசாங்கத்திற்கு எதிரான கருத்துகளை வைக்கத் தொடங்கியது இந்த நிகழ்ச்சியில்தான்.

முதலில், தமிழ் கலாச்சாராத்திற்கு எதிராக உள்ளது என ஆரம்பித்த பிக்பாஸ் பிரச்சனை, படிப்படியாக உருவெடுத்து, கமலுக்கும் மற்றும் அரசாங்கத்திற்கும் இடையேயான பிரச்சனையாக மாறியது. இதனால், கமலுக்கும் தமிழக அமைச்சர்களுக்கும் இடையே கருத்துப் போர் உண்டானது. இதன் விளைவாக, நடிகர் கமல்ஹாசன் கட்சி தொடங்கப்போவதாக அறிவித்து, அதற்கான பணிகளில் ஈடுபட்டார்.

விஸ்வரூபத்துடன் விஸ்வரூபம் எடுத்த மக்கள் நீதி மய்யம்:

இதையடுத்து, கடந்த ஜனவரி மாதம் பாதியில் நிறுத்தப்பட்ட ‘விஸ்வரூபம் 2’ படத்தின் படப்பிடிப்பை மீண்டும் தொடங்கினார். அதே வேளையில் பிப்ரவரி மாதம் 21 ஆம் தேதி, மதுரையில் நடந்த மாநாட்டில், சொன்னபடி ‘மக்கள் நீதி மய்யம்’ என்ற கட்சியைத் தொடங்கி, அதன் கொடியையும் அறிமுகப்படுத்தினார். ஒருபுறம் ‘விஸ்வரூபம் 2’ மறுபுறம் மக்கள் நீதி மய்யம் இரண்டையும் ஒருசேர கட்டமைத்தார் கமல்ஹாசன்.


தற்போது, ‘விஸ்வரூபம் 2’ படத்தின் டிரைலர், பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கும் நிலையில், ஆகஸ்ட் 10 ஆம் தேதி(நாளை) வெளியாகிறது. கடந்த முறையை போல் இல்லாமல், இம்முறை படத்திற்கு பிரச்சனைகள் அந்த அளவிற்கு இல்லை என்றாலும், படம் வெளியான பின் பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளன என எதிர்பார்க்கப்படுகிறது.


முதல்வர் வேட்பாளராக தன்னை முன்னிறுத்தியுள்ள நடிகர் கமல்ஹாசன், அரசியலுக்கு வந்த பின் வெளியாகும் முதல் திரைப்படம் ‘விஸ்வரூபம் 2’. தற்போது கமல்ஹாசனுக்கு நடிகனாக தனது ரசிகனை மட்டுமில்லாமல், ஒரு தலைவனாக தனது தொண்டனையும் இப்படத்தில் திருப்தி படுத்த வேண்டியுள்ளது. அதை அவர் எந்த அளவிற்கு செய்கிறார் என்பதை படம் வெளியான பின்னரே அறிய முடியும். 

0 coment�rios: