Home Top Ad

சில ஹார்ட் அட்டாக் வருவதற்கான காரணங்கள் நமக்கு தெரியும். உடல் பருமன், நீரிழிவு என அடுக்கிவிடலாம். ஆனால் நாம் நினைத்தே பார்க்காத பல காரணங்கள...

அடக்கொடுமையே! இப்படியெல்லாம்கூட ஹார்ட் அட்டாக் வருமா? படிக்காதீங்க... பயந்துடுவீங்க...

சில ஹார்ட் அட்டாக் வருவதற்கான காரணங்கள் நமக்கு தெரியும். உடல் பருமன், நீரிழிவு என அடுக்கிவிடலாம். ஆனால் நாம் நினைத்தே பார்க்காத பல காரணங்கள் இருக்கின்றன. அதக்கேட்டாலே பீதியாகிடுவீங்க...

வயிறுமுட்ட சாப்பிட்டா, ஐஸ் வாட்டர் குடிச்சா, காலையில் எழும்போது என நாம்இதுவரை நினைத்துக்கூட பார்க்க முடியாத காரணங்களால் கூட ஹார்ட் அட்டாக் வருமாம். நீங்க இதையெல்லாம் சரிசெய்யலேன்னா, திடீர் ஹார்ட் அட்டாக் வரலாம், ஜாக்கிரதை.!

ஒழுங்கான தூக்கம் இல்லாமல் இருப்பது, மனச்சோர்வையும், எல்லோரிடமும் சிடுசிடுவென எரிச்சலடைய வைப்பதோடு மட்டுமல்லாமல், ஹார்ட் அட்டாக் ஏற்படும் அபாயத்தை, பெருமளவு உண்டாக்கி விடுகிறது.

தினமும் ஆறுமணி மணித்தியாளம் குறைவாக தூங்குபவர்களுக்கு, ஆறிலிருந்து எட்டு மணி நேரம் தூங்குபவர்களைவிட, இருமடங்கு இருதய பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாக, ஒருஆய்வு கூறுகிறது.

மருத்துவர்கள் சரியான காரணத்தை அறியாவிட்டாலும், அதிகநேரம் தூங்காமல் இருப்பதால், இரத்த அழுத்தம் அதிகரித்து, உடல் அழற்சி ஏற்படுவது, இதயத்துக்கு நன்மை தராத ஒன்றாகும்.

ஒற்றைத் தலைவலியும், பிற்காலத்தில், இருதய பாதிப்பை ஏற்படுத்தும் ஆபத்தைத் தரும். ஆரா ஒளிவட்டமுள்ள தியானம் செய்பவர்கள், தலைவலி இல்லாதவர்கள் போன்றோரை பாதிப்பதைவிட, அதிகமாக ஒற்றைத்தலைவலி உள்ளவர்களுக்கு, மாரடைப்பு கோளாறுகள் ஏற்படக்கூடும்.

வினோதமான காட்சிகள், சப்தம், உணர்வுகள் போன்ற தலைவலிக்கு முன் தோன்றும் வித்தியாசமான அனுபவங்கள், இருதய பாதிப்பின் கடுமையான அறிகுறிகளாகக் கருதப்படுகிறது.

குளிர்காலத்தில் அதிகநேரம் வெளியில் இருப்பது, உடல் இரத்த நாளங்களை சுருக்கி, இதயத்துக்கு செல்லும் இரத்த ஓட்டத்தை, தடை செய்கிறது. இதனால், உடலை கதகதப்பாக வைக்க, இதயம் சிரமப்படுகிறது.

    பனிக்காலங்களில், ஐஸ் கட்டியில் விளையாடுவது, பனியில் ஊர் சுற்றுவது, போன்ற வெளிப்புற செயல்களைக் குறைப்பதன் மூலம், மாரடைப்பு உள்ளிட்ட இதய பாதிப்புகளைத் தவிர்க்க முடியும்.

மூக்குமுட்ட சாப்பிடுவதும், இரண்டாவது, மூன்றாவதுமுறை குழம்பு, பாயசம் வாங்கி சாப்பிடுவது, வயிற்றைமட்டும் பாதிக்காது, மனப்பதட்டத்தை ஏற்படுத்தும் நோர்பின்பிரைன் ஹார்மோனை அதிகம் சுரக்கவைத்து, அதனால், இரத்த அழுத்தமும் இதயத்துடிப்பும் அதிகரித்து, ஹார்ட் அட்டாக்கை ஏற்படுத்திவிட வாய்ப்புகள் ஏற்படும்.

கொழுப்புநிறைந்த அசைவ உணவுகள், இரத்தக்கொழுப்பை சட்டென அதிகரித்து, இரத்த நாளங்களை பாதிக்கக்கூடியவை.

0 coment�rios:

தமிழ்நாட்டில் பட்டிமன்றம் என்றாலே ரசிகர்களுக்கு ஞாபகம் வருவது ஒரு சிலர் தான். அதில் முக்கியமானவர் திண்டுக்கல் ஐ.லியோனி. அவரை தான் சிவாஜி ...

ரஜினி படத்தில் நான் அப்பாவாக நடித்திருக்க வேண்டும்: திண்டுக்கல் ஐ.லியோனி

தமிழ்நாட்டில் பட்டிமன்றம் என்றாலே ரசிகர்களுக்கு ஞாபகம் வருவது ஒரு சிலர் தான். அதில் முக்கியமானவர் திண்டுக்கல் ஐ.லியோனி.

அவரை தான் சிவாஜி படத்தில் ஸ்ரேயாவுக்கு அப்பாவாக நடிக்க ஷங்கர் அணுகினாராம். ஆனால் சில காரணங்களால் அவர் அந்த வாய்ப்பை மறுத்துவிட்டாராம். அதன்பின்தான் ஷங்கர் பட்டிமன்றம் ராஜாவை அந்த ரோலில் நடிக்க வைத்தாராம்.

இந்நிலையில் அவர் தற்போது அடுத்து வடிவேலுவின் அடுத்த படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடிக்கிறாராம். சீனு ராமசாமியின் அடுத்த படத்திலும் அவர் கமிட் ஆகியுள்ளாராம். 

0 coment�rios:

தளபதி விஜய் உலகம் முழுவதும் லட்சக்கணக்கான தமிழ் நெஞ்சங்களை கவர்ந்தவர். இவர் படங்கள் வருகின்றது என்றால் ரசிகர்கள் மட்டுமின்றி திரையரங்குகளே ...

விஜய்யை அசிங்கப்படுத்திய பிரிட்டன் விருது- ரசிகர்கள் கோபம்

தளபதி விஜய் உலகம் முழுவதும் லட்சக்கணக்கான தமிழ் நெஞ்சங்களை கவர்ந்தவர். இவர் படங்கள் வருகின்றது என்றால் ரசிகர்கள் மட்டுமின்றி திரையரங்குகளே கொண்டாடும்.

ஏனெனில் ரஜினிக்கு பிறகு விஜய்க்கு தான் அதிக ரசிகர்கள் கூட்டம் இருந்து வருகின்றது, குடும்பத்துடன் பலரும் வந்து இவருடைய படத்தை பார்த்து செல்கின்றனர்.

இந்த நிலையில் மெர்சல் படம் சிறந்த வெளிநாட்டு படம் பிரிவில் பிரிட்டனின் தேசிய விருதை வென்றுள்ளது.

அதே நேரத்தில் விஜய்யை சிறந்த துணை நடிகர் பிரிவில் நாமினி செய்துள்ளனர், மெர்சல் படத்தின் நாயகனே விஜய் தான்.

அப்படியிருக்க அவரை துணை நடிகர் பிரிவில் நாமினி செய்தது அவரை அசிங்கப்படுத்தும் நோக்கமா? என்று விஜய் ரசிகர்கள் செம்ம கோபத்தில் உள்ளனர்.

0 coment�rios: