Home Top Ad

பப்புவா நியூ கினியா தீவுகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால், அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கம் ...

சுனாமி எச்சரிக்கை அறிவிப்பு..!சக்திவாய்ந்த நிலநடுக்கம்

பப்புவா நியூ கினியா தீவுகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால், அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நிலநடுக்கம்

தென் மேற்கு பசிபிக் நாடுகளில் ஒன்றான பப்புவா நியூ கினியாவில், இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது, ரிக்டர் அளவுகோலில் 6.9 ஆக பதிவாகியுள்ளது. இதன் காரணமாகக் கட்டடங்கள் குலுங்கியதால், பீதியடைந்த மக்கள் சாலைகளுக்கு வந்தனர்.

இந்த நிலநடுக்கத்தினால், பசிபிக் கடல் பகுதியில் பூமிக்கடியில் சுமார் 300 கி.மீ ஆழத்தில் சுனாமி ஏற்பட வாய்ப்புள்ளதாக பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் அறிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேத விவரங்கள்குறித்து இன்னும் அதிகாரபூர்வ தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

0 coment�rios:

"கலைமாமணி" "நகைச்சுவை தென்றல்" திண்டுக்கல் ஐ. லியோனியின் "நகைச்சுவை குதிரையில் என் சிந்தனை பயணம்"நூல் வெளியீட...

வடிவேலு, ரோபோ சங்கர், சூரிக்கு அப்பாவாக நடிக்கும் திண்டுக்கல் ஐ.லியோனி

"கலைமாமணி" "நகைச்சுவை தென்றல்" திண்டுக்கல் ஐ. லியோனியின் "நகைச்சுவை குதிரையில் என் சிந்தனை பயணம்"நூல் வெளியீட்டு விழா! திரைப்பட நடிகரும், பட்டிமன்றநடுவரும், மேடைபேச்சாளருமான திண்டுக்கல் ஐ. லியோனி ஒரு புத்தகம் எழுதி உள்ளார்.

1992ஆம் ஆண்டு வத்தலக்குண்டு அருகே உள்ள காளி அம்மன் கோவில் மேடையில் முதன் முதலில் நகைச்சுவை பேச்சாளராக அறிமுகமானார்.பின்னர் 1996 ஆம் ஆண்டு முதல் தொலைக்காட்சிகளிலும், வெளிநாடுகளிலும் சுமார் 5000 க்கு‌ம் மே‌ற்ப‌ட்ட பட்டிமன்றங்களை நடத்தி இருக்கிறார்.

கடந்த ஐந்து ஆண்டுகளாக கலைஞர் தொலைக்காட்சிஇவரை நடுவராக்கி "நல்லா பேசுங்க நல்லதையே பேசுங்க" என்ற பேச்சரங்க நிகழ்ச்சியை 250 வாரங்களாக ஞாயிறு தோறும் காலை 10 மணிக்கு ஒளிபரப்பி வருகிறது.

இந்த நிகழ்ச்சியில் இவர் பேசிய நகைச்சுவை ததும்பிய கருத்துக்களை தொகுத்து, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள "அசசி" பதிப்பகத்தார் புத்தகமாக கொண்டு வந்துள்ளனர். இந்த புத்தகத்திற்கு திமுக. செயல் தலைவரும், சட்ட மன்ற எதிர்க்கட்சி தலைவருமான மாண்புமிகு மு. க. ஸ்டாலின், பேராசிரியர் சுப. வீரபாண்டியன், வித்தக கவிஞர் பா. விஜய், உணர்ச்சிக்கவிஞர் யுகபாரதி ஆகியோர் அணிந்துரை வழங்கி உள்ளனர்.

லியோனி எழுதிய அந்த புத்தகத்தின் வெளியீட்டு விழா சென்னையில் தேனாம்பேட்டையில் உள்ள அன்பகம் அரங்கத்தில்திமுக பொதுச்செயலாளர் க. அன்பழகன் புத்தகத்தை வெளியிட திரைப்பட இயக்குநர் சீனுராமசாமி பெற்றுக் கொண்டார். சட்டமன்ற உறுப்பினர் ஜெ. அன்பழகன், கவிஞர்கள் பா. விஜய், யுகபாரதி குமரிஆதவன் வாழ்த்தி பேசினார்கள்.

திண்டுக்கல் ஐ. லியோனி தனது ஏற்புரையில்,  "கங்கா கவுரி படத்துல அருண்குமார், வடிவேல் இருவருக்கும் தந்தை யாக நடித்தேன். ரசிகர்கள் நல்ல வரவேற்பு அளித்தனர். பின்னர் நான் பட்டிமன்றம், மேடைபேச்சு, தொலைக்காட்சி ஆகியவைகளில் பிஸியாக இருந்ததால் சினிமாவில் கவனம் செலுத்த முடியவில்லை.

ரஜினி நடிச்ச" சிவாஜி " படத்துல பட்டிமன்ற பேச்சாளர் ராஜா நடிச்ச கேரக்டர் ல நடிக்க என்னைதான் முதல்ல கேட்டாங்க. அப்ப நேரம் இல்ல.  நீண்ட இடைவெளிக்குப் பிறகு வடிவேல் என்னிடம், நாம மறுபடியும் ஒருபடத்தில் சேர்ந்து நடிக்கலாம் என்று கூறினார். அப்புறம் டைரக்டர் சீனுராமசாமியும் அவரோட படத்துல நடிக்க கேட்டு இருக்கிறார். மறுபடியும் நான் சினிமாவுல நடிக்க அடுத்த ரவுண்டுக்கு தயாராயிட்டேன்.

தொடர்ந்து சினிமா, அரசியல்னு ட்ராவல் பண்ண ரெடியாயிட்டேன். " இவ்வாறு பேசினார். 

0 coment�rios:

கடைசி நிமிஷம் வரைக்கும் ரப்பராக இழுத்துவிட்டு, காவிரி மேலாண்மை வாரிய விவகாரத்தில் புளியேப்பம் விடும் போலிருக்கிறது மத்திய அரசு. ஆட்டுவிக்கி...

முதல்வர் எடப்பாடி கமல்ஹாசன் சந்திப்பு நடக்குமா?

கடைசி நிமிஷம் வரைக்கும் ரப்பராக இழுத்துவிட்டு, காவிரி மேலாண்மை வாரிய விவகாரத்தில் புளியேப்பம் விடும் போலிருக்கிறது மத்திய அரசு. ஆட்டுவிக்கிறவன் அவன். ஆடுகிறவன் நான்… என்கிற நிலையிலிருக்கும் மாநில அரசு, என்னதான் ஒப்புக்கு சப்பாணியாக இருந்தாலும் ஒரு முடிவெடுக்க வேண்டுமே?

அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. இந்த நிலையில்தான் பிரஸ்சை சந்தித்தார் கமல்ஹாசன். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கிற விஷயத்தில் மத்திய அரசு நடந்து கொள்ளும் முறையை கண்டித்தவர், அப்படியே மாநில அரசுக்கும் குட்டு வைத்தார். இருந்தாலும் முதல்வர் பழனிச்சாமியை நேரில் சந்தித்து மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க சொல்ல விரும்புகிறாராம். முறைப்படி முதல்வர் அலுவலகத்தில் முன் அனுமதி கோரப்பட்டிருப்பதாக கூறினார்.

ஆனால் நேரம் கிடைக்கும் போதெல்லாம் கமல்ஹாசனையும் ரஜினிகாந்தையும் விமர்சித்து வரும் எடப்பாடி பழனிச்சாமியும், அவரது அமைச்சர் பெருமக்களும், இந்த சந்திப்பை விரும்புவார்களா? முன் அனுமதி கொடுக்கப்படுமா? என்பது டவுட்டுதான். அரசியலில் துளி கூட பெயர் எடுத்துவிடக் கூடாது என்று முனைப்பு காட்டும் இவர்கள், இந்த சந்திப்பினால் கமல்ஹாசனுக்கு நல்ல பெயர் சென்றுவிடக் கூடாது என்று நினைப்பார்கள் அல்லவா?

இது ஒருபுறம் இருக்க, தூத்துத்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்கள் போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக வரும் 1 ந் தேதி ஞாயிற்றுக் கிழமை கமல் அங்கு செல்கிறார்.

0 coment�rios:

நடிகர் ஆர்யாவுக்கு தற்போது பெண்பார்க்கும் படலம் தீவிரமாக நடந்து வருகிறது. இதற்காக புதியதாக வந்துள்ள தமிழ் தொலைக்காட்சி ஒன்று மும்பரமாக இறங்...

ஏழு பெண்களுக்கும் காத்திருந்த சோகம்! இவர் வெற்றியாளரா? ஆர்யா முகத்தில் ஏற்பட்ட திடீர் மாற்றம்

நடிகர் ஆர்யாவுக்கு தற்போது பெண்பார்க்கும் படலம் தீவிரமாக நடந்து வருகிறது. இதற்காக புதியதாக வந்துள்ள தமிழ் தொலைக்காட்சி ஒன்று மும்பரமாக இறங்கியுள்ளது.

இதனையடுத்து, முதல் முயற்சியாக ஆர்யா தன் வருங்கால மனைவியை தேடும் விதத்தில் “எங்க வீட்டு மாப்பிள்ளை” என்ற ரியாலிட்டி ஷோவில் பங்கேற்று வருகிறார்.

அதில் துவக்கத்தில் 16 போட்டியாளர்கள் இருந்த நிலையில் தற்போது பலரும் வெளியேற்றப்பட்டு வெறும் 7 பெண்கள் மட்டுமே போட்டியில் உள்ளனர்.

இந்நிலையில், நாளை மேலும் ஒரு போட்டியாளர் வெளியேற்றப்படவுள்ளார். இருவரில் ஒருவர் விட்டு கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கை முன் வைக்கப்படுகின்றது. இதன்போது, ஆர்யாவின் முகமும் திடீர் என்று அதிர்ச்சியடைவது போல காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை, நேற்றைய தினம் அகாதா வெற்றி பெற்றிருந்தார். இதனை பார்த்த மிகுதி ஏழு பெண்களும் சோகத்தில் மூழ்கி விட்டனர்.

இதேவேளை, இவர் ஆர்யாவை திருமணம் செய்துகொள்வதற்காக இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவில்லை என்றும் , கேமரா முன்பு எப்போதும் போலியாக நடிக்கிறார் எனவும் மற்ற பெண்கள் இவர் மீது குற்றம்சாட்டியது குறிப்பிடத்தக்கது. 

0 coment�rios:

சினிமாவில் திறமை மற்றும் கடின உழைப்பால் ஜெயித்து விடலாம் என்பதற்கு நிறைய நடிகர்கள் உதாரணம். மக்களுக்கு இன்னும் தெளிவாக சொல்ல வேண்டும் என்றா...

அரசியலில் ரஜினி, கமல் யாருக்கு ஆதரவு- சிவகார்த்திகேயன் கூறிய அதிரடி பதில்

சினிமாவில் திறமை மற்றும் கடின உழைப்பால் ஜெயித்து விடலாம் என்பதற்கு நிறைய நடிகர்கள் உதாரணம். மக்களுக்கு இன்னும் தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் நடிகர் சிவகார்த்திகேயனை கூறலாம்.

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலக்கி ஒவ்வொரு படியாக அந்த துறையில் முன்னேறி மக்களின் பார்வைக்கு வந்தவர். இப்போது சினிமாவிலும் ரசிகர்களுக்கு ஒரு உதாரணமாக இருக்கிறார். படங்களில் தண்ணி அடிப்பது, சிகரெட் பிடிப்பது, பெண்களை கிண்டல் செய்வது போன்ற விஷயங்களை தவிர்த்து வருகிறார்.

அண்மையில் சினிமா பயணம் குறித்து பேட்டி கொடுத்தவரிடம் அரசியலில் ரஜினி, கமல் இதில் யாருக்கு ஆதரவு என கேட்டுள்ளனர். அதற்கு சிவகார்த்திகேயன், இருவரும் அவர்களின் நிலைப்பாடு என்ன என்பதை இன்னும் சொல்லவில்லை. நான் ஓட்டு போடுவதை என் வீட்டில் கூட சொல்ல மாட்டேன். ஓட்டு போடுவது என்பது மிகப்பெரிய பொறுப்பு. அது யாருக்கு என்பது எனக்கு மட்டுமே தெரிஞ்ச உண்மை, ரகசியம் என்று கூறியுள்ளார்.

0 coment�rios: