Home Top Ad

குமாரசாமி டிசம்பர் 16, 1969ம் ஆண்டு பிறந்தவர். இவர் தான் இன்று கர்நாடகா அரசியலின் தலைமையை நிர்ணயிக்கும் இடத்தில் உள்ளார். சரி அதை ஏன் நம்...

பிரபல நடிகையுடன் சர்ச்சையில் சிக்கிய குமாரசாமி, இந்த கதையெல்லாம் தெரியுமா?

குமாரசாமி டிசம்பர் 16, 1969ம் ஆண்டு பிறந்தவர். இவர் தான் இன்று கர்நாடகா அரசியலின் தலைமையை நிர்ணயிக்கும் இடத்தில் உள்ளார்.

சரி அதை ஏன் நம் பக்கத்தில் சொல்ல வேண்டும் என்று நீங்கள் நினைப்பது புரிகின்றது. இந்த குமாரசாமி பல சர்ச்சைகளில் சிக்கியுள்ளார்.

இவர் ஏற்கனவே அனிதா என்பவரை திருமணம் செய்திருந்தார், பிறகு கருத்து வேறுபாட்டால் இருவரும் பிரிந்து இருந்தனர்.

அந்த பிரிவிற்கு முக்கிய காரணம் பிரபல நடிகை குட்டி ராதிகா தான், ராதிகா இயற்கை படத்தில் ஹீரோயினாக நடித்தவர்.

இவருக்கும் குமாரசாமிக்கும் பல மாதங்களாக காதல் என்று கன்னட மீடியாக்கள் கோஷமிட, ஆம், நாங்கள் காதலித்தோம், தற்போது திருமணம் செய்துக்கொள்ள போகிறோம் என தைரியமான குட்டி ராதிகாவை திருமணம் செய்துக்கொண்டவர்.

0 coment�rios:

காதலிக்கு ஒண்ணுன்னா கத்திய தூக்குற ஆண்களெல்லாம் அவசியம் பார்க்க வேண்டிய படம். நல்லவேளை… காதலர்கள் சேஃப்! ஒரு வீடியோ கேம்க்குள் நாமே உட்கார்...

இரவுக்கு ஆயிரம் கண்கள் -விமர்சனம்

காதலிக்கு ஒண்ணுன்னா கத்திய தூக்குற ஆண்களெல்லாம் அவசியம் பார்க்க வேண்டிய படம். நல்லவேளை… காதலர்கள் சேஃப்! ஒரு வீடியோ கேம்க்குள் நாமே உட்கார்ந்து கொள்கிற மாதிரி, நமது மூளைக்கு செம வேலை கொடுக்கிறார் அறிமுக இயக்குனர் மு.மாறன். சற்றே குனிந்து நிமிர்ந்தால் கூட, திரையில் யார் யாரை கொன்று விட்டு தப்பினார்கள் என்கிற துரத்தல் கை நழுவக்கூடும். எனவே ஷார்ப்பா லுக்கணும் பாஸ்!

ஹோம் சர்வீஸ் நர்ஸ்சாக பணியாற்றும் மகிமா நம்பியாருக்கும், கால் டாக்ஸி ஓட்டுனர் அருள்நிதிக்கும் லவ். வழக்கமாக ஒரே காரில் பயணிக்கும் மகிமா ஒரு நாள் வேறொரு டாக்சியில் கிளம்ப, அடப்பாவி… அந்த ஓட்டுனன் ஒரு பொறுக்கி. ஸ்பாட்டில் ஓடிவந்து காப்பாற்றும் அஜ்மல், அடப்பாவி… அவரும்தான்! இப்படி சீனுக்கு சீன் திரைக்குள் வரும் அத்தனை பேரும் ஏதோ ஒரு விதத்தில் பொறுக்கிகளாக இருக்க, நடக்கும் கொலைக்கு இவர்தான் காரணம் என துரத்தப்படுகிறார் அருள்நிதி.

கடைசியில் யார் யாரை கொன்றார்கள்? அருள்நிதிக்கும் இதற்கும் சம்பந்தமில்லை என்பது எப்படி தெரியவந்தது? இதெல்லாம்தான் க்ளைமாக்ஸ்.

ஒரு ராஜேஷ்குமார் நாவலை ஒரே மூச்சில் படித்தது போல ஒரு நிறைவு ஏற்பட்டாலும், முடிஞ்சுதுடா என்கிற மூச்சிரைப்பும் வராமல் இல்லை. சற்றே அயற்சி ஏற்படுத்துகிற ஓட்டம் என்பதும் மைனஸ்தான்.

அருள்நிதிக்கு ஏற்ற ரோல். மனிதர் ஓடிக் கொண்டே இருக்கிறார். கைக்கு வாகாக அமைகிற சண்டைக் காட்சிகளில் எல்லாம் பொளந்து கட்டுகிறார். சற்றே குறும்பு தோய்ந்த அந்த முகத்திற்கு, இன்னும் கொஞ்சம் காமெடி கலந்த ரோல்களை தேர்ந்தெடுத்தால் வெற்றி நிச்சயம்.

மகிமா… புது மழையில் நனைந்த சாமந்தியாக ஜொலிக்கிறார். அவ்வளவு கவலையிலும் அந்த முகத்தில் தெரியும் லட்சணம், முன்னணி இடத்திற்கு கொண்டு செல்லும். நோ டவுட்மா!

இந்த அஜ்மலை பார்த்துதான் எத்தனை வருஷமாச்சு? பேட்டரி போட்ட பம்பரம் போல துள்ளுகிறார் மனுஷன். சோஷியல் மீடியாவில் துணை தேடும் பெருசுகளை குறி வைத்து பணம் பறிக்கும் சிலரை, அப்படியே கண்முன் கொண்டு வந்திருக்கிறார்.

இதற்கு முன் சிற்சில படங்களில் நடித்த வித்யாவுக்கு இதில் வில்லி வேஷம். அந்த நல்ல முகத்திற்கு பொருந்தணுமே? ம்ஹூம். அப்புறம் சுஜா, சாயாசிங், லட்சுமி ராமகிருஷ்ணன், ஜான் விஜய் என்று நீள்கிறது பட்டியல். கொடுத்த டயலாக்கை உணர்ச்சியை குழைத்து படித்துவிட்டு போயிருக்கிறார்கள்.

இதுபோன்ற க்ரைம் த்ரில்லர் படங்களுக்கு எது ரொம்ப முக்கியம்? பின்னணி இசையும் ஒளிப்பதிவும். தன் 100 சதவீத உழைப்பை அள்ளிக் கொட்டியிருக்கிறார்கள் இருவரும். முறையோ சாம் சி.எஸ், அரவிந்த்சிங் ஆகியோருக்கு முழு பாராட்டுகள்.

எடிட்டர் சான் லோகேஷ், உடைந்த முறுக்கை ஒட்ட வைத்தது போல மிக சிரமப்பட்டுதான் இந்த கதையை கோர்த்திருக்கிறார். அதற்காகவும் ஒரு அப்ளாஸ்.

இரவு மிக நீளமாக இருப்பதை போல ஒரு பீலிங்ஸ். அதை மட்டும் தயவு பண்ணி குறைத்திருக்கலாம்!

0 coment�rios:

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இருவரும் அரசியல் களத்தில் முக்கிய எதிரிகளாக இருப்பார்கள் என அரசியல் வல்லுநர்கள் கூறுகிறார்கள். ...

ரஜினிக்கு கமல் செய்த போன் கால்! என்ன பேசினார்?

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இருவரும் அரசியல் களத்தில் முக்கிய எதிரிகளாக இருப்பார்கள் என அரசியல் வல்லுநர்கள் கூறுகிறார்கள். ஆனால் ரஜினி இன்னும் அரசியல் கட்சியே துவங்காத நிலையில், இருவரும் ஒருவரை பற்றி ஒருவர் இதுவரை விமர்சனங்கள் எதுவும் முன்வைக்கவில்லை.

இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் ரஜினியை போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். காவிரி பிரச்சனைக்காக தான் நடத்தவுள்ள கூட்டத்தில் கலந்துகொள்ளவேண்டும் என அழைக்கவே கமல் போன் செய்துள்ளார்.

நேற்று மாலை கமல் திமுக செயல் தலைவர் ஸ்டாலினை நேரில் சந்தித்து அழைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 coment�rios:

விஜய் டிவி யின் செல்லப்பிள்ளை திவ்யதர்ஷினி தொகுத்து வழங்கும் ரியாலிட்டி ஷோ தற்போது மிகவும் பிரபலமாகிவருகிறது. அந்தளவு தனது திறமையால் நிகழ...

பிரபல தொலைக்காட்சியில் டிடி அடித்த கூத்து! சர்ச்சையை கிளப்பும் வைரல் காட்சி

விஜய் டிவி யின் செல்லப்பிள்ளை திவ்யதர்ஷினி தொகுத்து வழங்கும் ரியாலிட்டி ஷோ தற்போது மிகவும் பிரபலமாகிவருகிறது.

அந்தளவு தனது திறமையால் நிகழ்ச்சியையே கலகலப்பூட்டுபவர். திருமணம் செய்து பின்னர் கசந்து போனதால் கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்றுக்கொண்டு மீண்டும் சின்னத்திரையில் கலக்கத்தொடங்கி விட்டார் என்று தான் சொல்லவேண்டும்.

தனது உடலழகை மேலும் மெருகேற்றி, புதுப்பொலிவுடன் விஜய் டிவியில் ஷோ ஹோஸ்ட் பண்ணி வருகிறார்.

சமீபத்தில் இடம்பெற்ற ஒரு நிகழ்ச்சியில் திவ்யதர்ஷினியை விஜய் டிவி தொகுப்பாளர் ரியோ தூக்கி இடுப்பில் வைத்து பாடலுக்கு ஆடும் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி சர்ச்சையை கிளப்பியுள்ளது.

இதேவேளை, கோபிநாத் மற்றும் மா.கா.பா.ஆனந்தை பாட்டு பாட சொல்லி, பாட வைத்து அதை வீடியோவாக எடுத்து டிடி, டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். குறித்த காட்சி சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது.

0 coment�rios: