Home Top Ad

டயானா விபத்தில் உயிரிழக்கவில்லை எனவும் திட்டமிட்டே அவர் படுகொலை செய்யப்பட்டார் எனவும் டயானாவின் காதலரின் தந்தை கூறியுள்ளார். பிரித்தானியா...

இறக்கும் போது இஸ்லாமிய வாரிசை வயிற்றில் சுமந்தாரா டயானா?....

டயானா விபத்தில் உயிரிழக்கவில்லை எனவும் திட்டமிட்டே அவர் படுகொலை செய்யப்பட்டார் எனவும் டயானாவின் காதலரின் தந்தை கூறியுள்ளார்.

பிரித்தானியா இளவரசி டயானா தனது காதலர் Dodi Fayed-யுடன் காரில் செல்லும் போது ஏற்பட்ட விபத்தில் கடந்த 1997ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31ஆம் திகதி பலியானார்.

டயானா இறந்து 20 வருடங்கள் ஆகவுள்ள நிலையில் அவர் விபத்தில் தான் இறந்தாரா அல்லது கொல்லப்பட்டாரா என்ற விவாதங்கள் தற்போதும் நடைப்பெற்று வருகின்றது.

இதனிடையில் டயானா - Dodi Fayed காதல் விவகாரத்தை அறிந்து அவர்களுக்கு ஆதரவாக இருந்த Dodiயின் தந்தை Mohamed Al-Fayed ஆரம்பத்திலிருந்தே இது விபத்தல்ல படுகொலை என கூறி வருகிறார்.

இது தொடர்பாக அவர் நீதிமன்றத்தில் சில வருடங்களுக்கு முன்னர் வழக்கு தொடர்ந்த நிலையில் அது தள்ளுபடி செய்யப்பட்டது.

Mohamed கூறுகையில், MI6 ரகசிய புலனாய்வு நிறுவனமும், பிரித்தானியா அரச குடும்பமும் சேர்ந்து தான் திட்டமிட்டு இந்த விபத்தை ஏற்படுத்தினார்கள்.

இது ஒரு படுகொலை என கூறியுள்ளார்.

மேலும் Mohamed கூறுகையில், பிரான்ஸ் புலானாய்வு நிறுவனமும் இதற்கு உதவியுள்ளது.

தன்னிடம் டயானா ஒரு முறை போனில் பேசும் போது தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், தான் கர்ப்பமாக இருப்பதாகவும் கூறியதாக Mohamed தெரிவித்துள்ளார்.

மேலும், இஸ்லாமிய மதத்தை சேர்ந்த குழந்தை டயானாவின் வயிற்றில் வளருவதை அரச குடும்பம் விரும்பவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், தனது கணவர் சார்லஸ் தனது காரின் பிரேக்கை எடுத்து விட்டு விபத்தை ஏற்படுத்த திட்டமிடுவதாகவும் டயானா தான் கைப்பட எழுதியதாக ஒரு கடிதம் முன்னர் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

0 coment�rios:

தீனா என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கால் பதித்தவர் தான் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்.மேலும் அஜித்திற்கு தல என்று பெயர் வர காரணமாகவும்...

இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் மகனா இது?... இதுவரை கண்டிராத புகைப்படம்


தீனா என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கால் பதித்தவர் தான் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்.மேலும் அஜித்திற்கு தல என்று பெயர் வர காரணமாகவும் இருந்த இவர் இதுவரை தமிழில் எடுத்த அனைத்து படங்களுமே ஹிட் என்றே கூறலாம்.

கள்ளக்குறிச்சியில் பிறந்த ஏ. ஆர்.முருகதாஸ் அதே ஊரை சார்ந்த ரம்யா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். மேலும் இவரது மனைவி ரம்யா மிகுந்த தெய்வபக்தி கொண்டவராம். அதனால் இவர்கள் இருவரும் அடிக்கடி கோவில், குளம் என்று தான் செல்வார்களாம்.

தற்போது ஏ. ஆர். முருகதாஸிற்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகளும் இருக்கின்றனர். பெரும்பாலும் பிரபலங்கள் சிலர் தங்களது குடும்ப நபர்களை வெளியுலகிற்கு அறிமுகம் செய்து கொள்வது இல்லை. ஆனால் முருகதாஸ் சற்று வித்தியாசமனவராக இருந்து வருகிறார்.

இவர் எந்த நிகழ்ச்சிக்கு சென்றாளும் பெரும்பாலும் தனது மனைவி மற்றும் தனது பிள்ளைகளுடனே தான் செல்வாராம். அவ்வளவு ஏன் தனது மகன் மற்றும் மகளை அடிக்கடி ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு கூட அழைத்து செல்வாராம். விஜய் நடித்த துப்பாக்கி படத்தின் போது கூட அவர்கள் இருவருமே விஜயயை ஷூட்டிங் ஸ்பாட்டில் சந்தித்துப் பேசியுள்ளார்களாம்.

0 coment�rios:

ராக்ஸ்டார் ரமணியம்மா இவரை தற்போது தெரியாதவர்கள் என்று யாருமே இல்லை. அந்த அளவிற்கு பட்டித்தொட்டியெல்லாம் தன் குரலால் பட்டையை கிளப்பியவர். ...

அதை மட்டும் விடமாட்டேன், நீண்ட நாட்களுக்கு பிறகு மௌனம் கலைத்த ராக்ஸ்டார் ரமணியம்மா- உருக்கமான பதில்

ராக்ஸ்டார் ரமணியம்மா இவரை தற்போது தெரியாதவர்கள் என்று யாருமே இல்லை. அந்த அளவிற்கு பட்டித்தொட்டியெல்லாம் தன் குரலால் பட்டையை கிளப்பியவர்.

இவர் கலந்துக்கொண்ட போட்டியில் இரண்டாம் பரிசை வென்றார், தற்போது பல இசையமைப்பாளார்கள் இவரை பாட வைக்க முயற்சி செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் ரமணியம்மா முதன் முதலாக போட்டிக்கு பிறகு ஒரு உருக்கமான பேட்டியை கொடுத்துள்ளார்.

இதில் ‘எனக்கு தமிழக மக்கள் கொடுத்த அன்பே போதும், இந்த புகழுக்கு மேல் எனக்கு என்ன வேண்டும், இதுவே போதும்.

வீட்டு வேலை செய்து தான் இந்த இடத்திற்கு வந்தேன், சினிமாவில் பிஸியானாலும் அந்த வேலையை ஒரு போதும் விடமாட்டேன்’ என உருக்கமாக பேசியுள்ளார்.

0 coment�rios: