Home Top Ad

சொந்த வீட்லேயே எலியை வச்சுகிட்டு, ஊருக்கே மருந்து தெளித்துக் கொண்டிருக்கிறார் கமல். கமலின் மய்யம் விசில் ஆப், நேற்று கோலாகலமாக துவங்கப்பட...

தமிழகத்தின் அடுத்த முதல்வர் வாட்டாள் நாகராசுவா இருக்குமோ? டவுட் கிளப்பும் சாருஹாசன்!

சொந்த வீட்லேயே எலியை வச்சுகிட்டு, ஊருக்கே மருந்து தெளித்துக் கொண்டிருக்கிறார் கமல்.

கமலின் மய்யம் விசில் ஆப், நேற்று கோலாகலமாக துவங்கப்பட்டுவிட்டது. பல நாள் உழைப்பு. மண்டையை கசக்கியதன் பலன், மிக அற்புதமான செயலியாக வந்திருக்கிறது அது.

அந்தந்த ஊரில் தேவைப்படும் அவசியங்களை, நடக்கும் அநியாயங்களை இதில் வீடியோவாக பதிவிடலாம். அல்லது புகாராக தெரிவிக்கலாம். அதை சம்பந்தப்பட்ட துறைக்கு கொண்டு செல்கிற பொறுப்பை ஏற்றுக் கொண்டிருக்கிறது கமலின் இந்த செயலி. இத்தகைய புகார்களை அரசு கண்டுகொள்ளுமா, விட்டுத் தள்ளுமா? என்பது அடுத்த விஷயம். ஆனால் குறைகளை அரசின் கண் விழிக்கு அருகே கொண்டு செல்கிற இந்த ஒரு திட்டமே, கமலின் புலிவேக பாய்ச்சலுக்கு எடுத்துக்காட்டு.

இந்த நேரத்தில்தான் அவரது அண்ணன் சாருஹாசன் ட்விட்டரில் ஒரு கருத்தை பதிவு செய்திருக்கிறார். கர்நாடகத்தை சேர்ந்த ஒருவர்தான் தமிழகத்தின் அடுத்த முதல்வர் என்று கூறியிருக்கிறார்.

எப்போதும் தாட் பூட்டாக பேசுவதில் சாருஹாசன் யாருக்கும் சளைக்காத ஹாசன். ‘என் தம்பி கமலாவது கடவுள் இருந்தா நல்லாயிருக்கும்னு சொல்றான். நான் இல்லேன்னு சொல்றேன்’ என்றார் ஒருமுறை. அப்படிப்பட்டவர், இப்படி தடாலடியாக பதிவிடுவது ஆச்சர்யமில்லை. ஆனால் ஒரு குழப்பம்.

அவர் சொல்லும் அந்த கர்நாடகாக் காரர் யார்? வாட்டாள் நாகராஜா இருக்குமோ, இல்ல தேவ கவுடாவாக இருக்குமோ? என்றெல்லாம் மயிர் கூச்செரிகிறார்கள் ரசிகர்கள்.

ஏனென்றால், ‘நான் தமிழன்’ என்று ரஜினி சத்தியம் பண்ணி பல வருஷமாச்சே?

0 coment�rios:

வரவர தமிழன் சோம்பேறியாப் போனான் என்பதற்கு உதாரணம்தான், சர்பத் மற்றும் டீ கடைகளில் கூட வட மாநிலத்தானின் ஆக்ரமிப்பு. (நீ ஒழுங்கா வேல பார்த்தா...

முனியாண்டி விலாஸ்ல கூட வட மாநிலத்தவன்தான் வேல பார்க்குறான்!

வரவர தமிழன் சோம்பேறியாப் போனான் என்பதற்கு உதாரணம்தான், சர்பத் மற்றும் டீ கடைகளில் கூட வட மாநிலத்தானின் ஆக்ரமிப்பு. (நீ ஒழுங்கா வேல பார்த்தா அவன் ஏன்யா வர்றான்?) ஆனால் தமிழனின் சோம்பேறித்தனத்தையும், குடிக்கு அடிமை ஆகிவிட்டதை பற்றியும் கவலைப்பட வேண்டிய சூழ்நிலையில் தமிழ்நாடு இருப்பதை மறந்துவிட்டு, பழியை அவன் தலையில் போடுகிற வேலையை சிறப்பாக செய்தது ஒரு பட விழா.

யுரேகா இயக்கிய ‘காட்டுப்பய சார் இந்த காளி’ என்ற படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில்தான் இத்தகைய கார சாரம். சும்மாவே அரசியல் சூடு காணும் களமாகிவிட்ட மேடைகளில், பாரதிராஜா, கவுதமன் போன்றவர்கள் இருந்தால் அது எப்படியிருக்கும். அப்படியே கொதித்தது. முதலில் தீயை மூட்டியவரே யுரேகாதான்.

‘இப்பல்லாம் சரவணபவன்ல சாம்பார் ஊத்துறவன் கூட வட மாநிலத்தவனாதான் இருக்கான். எங்க திரும்பினாலும் அவனைதான் வேலைக்கு வச்சுருக்காங்க. அவன் பேசுற மொழிக்கு நாம மாற வேண்டியிருக்கு. இந்த அநியாயத்தை எங்க போய் சொல்லுவது? அது ஒருபக்கம்னா, வட்டிக்கு விடுற மார்வாடிங்க தமிழனின் கஷ்டத்துக்கு முன்னாடி வந்து நிற்க மாட்டேங்குறான். காவேரி பிரச்சனையில் நாம வீதிக்கு வந்து போராடும்போது, அவன் ஜம்முன்னு மேட்ச் பார்க்க உள்ள போறான். இதையெல்லாம் தட்டிக் கேட்கணும். அதிக வட்டி வாங்குறது. கடனை அடைக்கணும்னு நினைச்சா கூட அடைக்க விடாம அவனை பிழிஞ்சு எடுக்கறது. இதையெல்லாம் விடக் கூடாது’ என்று பொங்கினார்.

உண்மையில் இந்தப்படமே தமிழ்நாட்டில் பிழைக்க வந்த வட மாநிலத்தவர்கள் பற்றிய படம்தானாம். ஜெயவந்த் ஹீரோவாக நடித்திருக்கும் இந்தப்படத்தின் பாடல்களில் ஒரு பாடல் எச்.ராஜா கோஷ்டிகளை வயிறெரிய விடுவது நிச்சயம். காவி உடையுடன் சாமியார்கள் கஞ்சா அடித்தபடி ஆடும் அந்தப்பாடல், ஆன்ட்டி இண்டியன்களின் தேசிய கீதமாக இருக்கப் போவதும் சத்தியம்.

ஆமா… அங்கு வந்த பாரதிராஜா என்ன பேசினாராம்?

அவருக்கென்ன? ரஜினியை கழுவி ஊற்றிவிட்டு கிளம்பினார். ஆல் ஆர் ஆன்ட்டி ரஜினிஸ்…

0 coment�rios:

கர்நாடக தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுலுக்கு சவால் விடுத்திருக்கிறார். கர்நாடகாவில் வீசுவது பா.ஜ.க, மோடியின...

'குறிப்புகள் இல்லாமல் 15 நிமிடங்கள் பேசத் தயாரா?’ - ராகுலுக்குச் சாவல்விட்ட மோடி

கர்நாடக தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுலுக்கு சவால் விடுத்திருக்கிறார். கர்நாடகாவில் வீசுவது பா.ஜ.க, மோடியின் அலை இல்லை, பா.ஜ.க-வின் புயல் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.

கர்நாடக சட்டசபைக்கு வருகிற 12ம் தேதி தேர்தல் நடக்க உள்ளது. இதையொட்டி பிரதமர் மோடி, அமித் ஷா, யோகி ஆதித்யநாத் ஆகியோர் 10 நாள்களில் 60 தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொள்ள திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில், சாமரஜனகார மாவட்டத்தில் உள்ள சாந்தமெராஹள்ளியில் நடந்த பா.ஜ.க பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு பிரதமர் மோடிபேசினார்.

கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகையில், '' நான் இங்கு வந்ததற்கு முன்பு, கர்நாடகாவில் பா.ஜ.கவுக்கு ஒரு 'அலை' உள்ளது என்று கூறப்பட்டது. கர்நாடகாவில் வீசுவது பி.ஜே.பி அலை இல்லை, பி.ஜே.பியின் புயல். கர்நாடக மக்களுக்கு எடியூரப்பா மீது நம்பிக்கை உள்ளது. அவர் இந்த மாநிலத்தின் அடுத்த முதல்வர் ஆவார். கர்நாடகாவில் காங்கிரஸ் செய்த வளர்ச்சி திட்டங்கள் பற்றி 15 நிமிடங்கள் பேப்பர் இல்லாமல் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசத் தயாரா?. பிரதமர் மோடி சவால் விடுத்தார். இந்தக் கூட்டத்தில் கார்வார், உடுப்பி மாவட்டங்களில் உள்ள சட்டசபை தொகுதிகளில் பா.ஜ.க சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி பிரசாரம் செய்தார்.

0 coment�rios:

நடிகரும் பாஜக பிரமுகருமான எஸ்.வி.சேகர் தனது முகநூலில் பெண் பத்திரிகையாளர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்ததால் அவர் மீது வழக்குப்ப...

உளறி கொட்டிய எஸ்.வி. சேகர் - தீவிரம் காட்டும் போலிஸ்....இன்று கைதாக வாய்ப்பு!

நடிகரும் பாஜக பிரமுகருமான எஸ்.வி.சேகர் தனது முகநூலில் பெண் பத்திரிகையாளர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்ததால் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் அவர் எந்த நேரமும் கைது செய்யப்படுவார் என்று கூறப்பட்ட நிலையில் எஸ்.வி.சேகரின் முன் ஜாமீன் மனு விசாரணையில் அவரை கைது செய்ய தடை விதிக்க நீதிமன்றம் மறுத்துவிட்டது.

இதனையடுத்து எஸ்.வி.சேகரை கைது செய்ய சென்னை சைபர் கிரைம் போலீசார் தீவிரம் காட்டி வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

ஆனால் எஸ்.வி.சேகர் தற்போது தலைமறைவாக இருப்பதாக கூறப்படுவதால் அவரை தேடும் பணியில் தனிப்படை போலீசார் ஈடுபட்டிருப்பதாகவும், மிக விரைவில் அவர் கைது செய்யப்படுவார் என்றும் தெரிகிறது.

இந்த நிலையில் எஸ்.வி.சேகர் விவகாரம் குறித்து கருத்து கூறிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, எஸ்.வி.சேகர் மீது அரசு சட்டப்படி நடவடிக்கை எடுக்கும் என்று கூறியுள்ளார்.

0 coment�rios: