Home Top Ad

சிவகார்த்திகேயன் தொடர் வெற்றியால் உச்சத்தை நோக்கி செல்கின்றார். இவர் நடிப்பில் எந்த படம் வந்தாலும் அதை பார்க்க பலரும் ஆவலுடன் இருக்கின்றனர்...

அப்போ அந்த பையன் இல்லை- மேடையிலேயே கலாய்த்த சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன் தொடர் வெற்றியால் உச்சத்தை நோக்கி செல்கின்றார். இவர் நடிப்பில் எந்த படம் வந்தாலும் அதை பார்க்க பலரும் ஆவலுடன் இருக்கின்றனர்.

இந்த நிலையில் தற்போது சிவகார்த்திகேயன் ‘இன்று நேற்று நாளை’ இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகின்றார்.

இப்படத்திற்கு இசை ஏ.ஆர்.ரகுமான், ஹீரோயினாக ராகுல் ப்ரீத் சிங் நடிக்கவுள்ளார், சிவகார்த்திகேயன் சமீபத்தில் ஒரு பத்திரிகையாளர் கேள்வி-பதில் கூட்டத்தில் கலந்துக்கொண்டார்.

அதில் நயன்தாரா பற்றி கேட்க ‘ஒரு காலத்தில் அவரை நேரில் பார்க்க முடியுமா? என்று ஏங்கியுள்ளேன், சின்னத்திரையில் இருக்கும் போது அவரை பார்க்கும் வாய்ப்பு வந்தது.

அவர் எப்போது வருவார் என நானும் காத்திருந்தேன், ஆனால், அப்போது அந்த பையன் அவருடன் இல்லை(விக்னேஷ் சிவனை குறிப்பிடுகின்றார்)’ என்று சொல்ல அனைவருமே சிரித்துவிட்டனர்.

0 coment�rios:

டெல்லி உயர் நீதிமன்றம் டிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கியதற்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்து தீர்ப்பளித்துள்ளது. ஆர்.கே.நகர் தொகு...

டிடிவி தினகரன் குக்கர் சின்னத்திற்கு ஆப்படித்த நீதிமன்றம் - திமுகாவுடன் கூட்டணியா? - அப்போ அதிமுக!

டெல்லி உயர் நீதிமன்றம் டிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கியதற்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

ஆர்.கே.நகர் தொகுதியில் குக்கர் சின்னத்தில் சுயேட்சையாக நின்று வெற்றி பெற்றார் டிடிவி தினகரன். எனவே செண்டிமெண்டாக தனக்கு குக்கர் சின்னத்தையே அடுத்து வரும் உள்ளாட்சி தேர்தலில் பயன்படுத்த அனுமதிக்குமாறு தினகரன் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.

அந்த வழக்கில், டிடிவி தினகரன் அணிக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்குமாறு கடந்த 9ம் தேதி நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இது தினகரன் தரப்பிற்கு கிடைத்த வெற்றியாகவே கருதப்பட்டது. எனவே, உள்ளாட்சி தேர்தலில் தினகரன் அணியினர் குக்கர் சின்னத்திலேயே போட்டியிடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில், இந்த தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி-ஓபிஎஸ் தரப்பு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், இன்று தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், டெல்லி உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு இடைக்காலத்தடை விதித்து உத்தரவிட்டது.

மேலும், தினகரனின் வழக்கில் 2 நீதிபதிகள் அமர்வு முடிவு எடுக்க வேண்டும் எனவும், இரட்டை இலை வழக்கை 3 வாரத்திற்குள் டெல்லி உயர் நீதிமன்றம் விசாரித்து முடிக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

எனவே, வழக்கின் இறுதி தீர்ப்பு வெளியாகும் வரை குக்கர் சின்னத்தை தினகரன் தரப்பு பயன்படுத்தக் கூடாது. இது தினகரனுக்கு கிடைத்த பின்னடைவாக கருதப்படுகிறது.

பொதுமக்களின் பிரச்சனைகளுக்காக திமுக உள்பட எந்த கட்சியுடனும் இணைந்து போராட்டம் நடத்த தயார் என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைவர் டிடிவி தினகரன் இன்று தஞ்சையில் அறிவித்துள்ளார்.

    இதனையடுத்து வரும் தேர்தலிலும் திமுகவுடன் தினகரன் கூட்டணி வைக்க வாய்ப்பு இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து கூறி வருகின்றனர்.

0 coment�rios:

நடிகர் ஆர்யா தனது திருமணத்துக்காக பெண் தேடி வருகிறார். அதற்காக ‘எங்க வீட்டு மாப்பிள்ளை’ என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். தற்போது ப...

நடிகர் ஆர்யாவின் ஜோடி இவர்தான்!? வைரலாகும் புகைப்படங்கள்

நடிகர் ஆர்யா தனது திருமணத்துக்காக பெண் தேடி வருகிறார். அதற்காக ‘எங்க வீட்டு மாப்பிள்ளை’ என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.

தற்போது போட்டியும் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. அதில் துவக்கத்தில் 16 போட்டியாளர்கள் இருந்த நிலையில் தற்போது பலரும் வெளியேற்றப்பட்டு வெறும் 8 பெண்கள் மட்டுமே உள்ளனர்.

இந்த நிகழ்ச்சியில், 8 பெண்களில் பார்வையாளர்களின் அதிக வரவேற்பை பெற்றவர் அபர்னதி என்றுதான் கூற வேண்டும்.

அபர்னதிக்கும் ஆர்யாவிற்கும் உள்ள பொருத்தம் பற்றி நீங்களே பாருங்கள்.அ வரின் இயல்பான குணம், இயல்பான பேச்சு, பழகும் விதம் என அனைத்தும் பார்வையாளர்களை கவர்ந்துள்ளது.

ஆர்யாவின் வருங்கால மனைவியாக இவர் இருந்தால் சிறப்பாக இருக்கும் என்பது பலரின் விருப்பமாக இருக்கின்றது.

இந்த புகைப்படங்களை பார்க்கும் போது அது புலப்படுகின்றது. அது மட்டும் இன்றி ஆர்யாவிற்காக அபர்னதி அவரின் குணாதிசியங்களையும் மாற்றி கொண்டுள்ளது இறுதி இரண்டு நிகழ்சியிலும் காண்பிக்கப்பட்டுள்ளது.

0 coment�rios:

பிரசாந்த் ஒரு காலத்தில் விஜய், அஜித்தை விட உச்சத்தில் இருந்தவர். இவருக்கு என்று பெரிய ரசிகர்கள் கூட்டமே இருந்தது. இதில் குறிப்பாக இளைஞர்க...

நடிகர் பிரசாந்தின் மாஜி மனைவிக்கு நடந்த கொடுமை- அதிர்ச்சி தகவல்

பிரசாந்த் ஒரு காலத்தில் விஜய், அஜித்தை விட உச்சத்தில் இருந்தவர். இவருக்கு என்று பெரிய ரசிகர்கள் கூட்டமே இருந்தது.

இதில் குறிப்பாக இளைஞர்கள், பெண்கள் ரசிகர்கள் இவருக்கு அதிகம், இந்நிலையில் இவரின் திருமண வாழ்க்கை இவரை புரட்டி போட்டது.

அதன் பின் எந்த படமும் ஓடவில்லை, மேலும், இவருடைய திருமண வாழ்வும் நிம்மதியாக இல்லாமல், விவாகரத்து வரை சென்றார்.

தற்போது பிரசாந்தின் மாஜி மனைவி கிரகலட்சுமி வீட்டில் இருந்து 170 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாம், இந்த செய்தி எல்லோரிடத்திலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், இவர் பிரசாந்தை விட அதிக வயதானவர், ஏமாற்றி திருமணம் செய்துக்கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

0 coment�rios:

ராஜமௌலி படங்கள் என்றாலே பிரமாண்டங்களுக்கு பஞ்சம் இருக்காது. இவரின் பாகுபலியை தொடர்ந்து அடுத்து என்ன கதையை கையில் எடுப்பார் என்று ரசிகர்கள் ...

யாருமே செல்லாத இடத்திற்கு முதன் முறையாக செல்லும் ராஜமௌலி- ரசிகர்கள் ஆச்சரியம்

ராஜமௌலி படங்கள் என்றாலே பிரமாண்டங்களுக்கு பஞ்சம் இருக்காது. இவரின் பாகுபலியை தொடர்ந்து அடுத்து என்ன கதையை கையில் எடுப்பார் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

அந்த வகையில் தற்போது ஒரு பாக்ஸிங் கதைக்களத்தை ராஜமௌலி கையில் எடுத்துள்ளதாக கூறப்படுகின்றது.

இந்த நிலையில் ராஜமௌலியின் பாகுபலி படம் பாகிஸ்தான் சினிமா விழாவில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாம்.

அதற்காக அவரை அங்கு அழைத்துள்ளார்கள், இதனால், ராஜமௌலி மிகவும் சந்தோஷமாக உள்ளதாகவும், அங்கு செல்ல ஆர்வமாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், தென்னிந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு அழைப்பு வந்த முதல் பிரபலம் ராஜமௌலி தான்.

0 coment�rios:

பரத் தமிழ் சினிமாவில் பாய்ஸ் படத்தின் மூலம் அறிமுகமானவர். இவர் தொடர்ந்து காதல், பட்டியல், எம் மகன் என வெற்றி படங்களாக கொடுத்தவர். சமீப கா...

இன்னும் அந்த அளவிற்கு நான் கீழே போகவில்லை- எப்படி இருந்த பரத் இப்படி சொல்லிவிட்டாரே!

பரத் தமிழ் சினிமாவில் பாய்ஸ் படத்தின் மூலம் அறிமுகமானவர். இவர் தொடர்ந்து காதல், பட்டியல், எம் மகன் என வெற்றி படங்களாக கொடுத்தவர்.

சமீப காலமாக இவர் எந்த படத்திலும் பெரிதும் கமிட் ஆகவில்லை, ஸ்பைடர் படத்தின் மூலம் ரீஎண்ட்ரி கொடுத்தார்.

தற்போது சிம்பா, காளிதாஸ் ஆகிய படங்களில் நடித்து வரும் இவர், சமீபத்தில் ஒரு பேட்டியில் மனம் நொந்து சில விஷயங்களை கூறியுள்ளார்.

இதில் குறிப்பாக ’நான் டபுள் ஹீரோ படங்கள் செய்தால், அதில் என் கதாபாத்திரமும் பேசப்படும், சின்ன கேரக்டர் ரோல் மட்டும் செய்ய, நான் இன்னும் அந்த அளவிற்கு கீழே போகவில்லை’ என வருத்தமாக கூறியுள்ளார்.

0 coment�rios: