Home Top Ad

பாகுபலி-2 இந்திய சினிமாவின் பாக்ஸ் ஆபிஸில் ஒரு மைல் கல். அப்படியிருக்க எப்படி தோல்வி என்று நீங்கள் கேட்கலாம். ஆனால், உண்மை இது தான், அதே ...

பெரும் தோல்வியை சந்தித்த பாகுபலி-2, உண்மை இது தான்

பாகுபலி-2 இந்திய சினிமாவின் பாக்ஸ் ஆபிஸில் ஒரு மைல் கல். அப்படியிருக்க எப்படி தோல்வி என்று நீங்கள் கேட்கலாம்.

ஆனால், உண்மை இது தான், அதே நேரத்தில் தோல்வி இந்தியாவில் இல்லை, சீனாவில் தான்.

பாகுபலி முதல் பாகம் சீனாவில் ரூ 9 கோடி வசூல் செய்தது, ஆனாலும் இரண்டாம் பாகத்தை அங்கு ரிலிஸ் செய்தனர்.

இப்படம் கண்டிப்பாக ரூ 500 கோடி வரை அங்கு வசூல் செய்யும் என எதிர்ப்பார்க்க, பாகுபலி-2 தற்போது வரை ரூ 70 கோடி வரை தான் சீனாவில் வசூல் செய்துள்ளது.

இதனால், படம் சீனாவில் பெரும் தோல்வியை சந்தித்துள்ளதாக கூறப்படுகின்றது.

0 coment�rios:

ஆர்.ஜே. பாலாஜியும், ஜூலியும் அரசியலுக்கு வருவதாக அடுத்தடுத்து அறிவிப்பு வெளியிட்டதற்கான காரணம் தெரியவந்துள்ளது. நடிகர் ஆர்.ஜே. பாலாஜி தான...

ஜுலி அரசியலுக்கு வருவதற்கு உண்மையான காரணம் என்ன? வெளியான ரகசியம்

ஆர்.ஜே. பாலாஜியும், ஜூலியும் அரசியலுக்கு வருவதாக அடுத்தடுத்து அறிவிப்பு வெளியிட்டதற்கான காரணம் தெரியவந்துள்ளது.

நடிகர் ஆர்.ஜே. பாலாஜி தான் அரசியலுக்கு வருவதாக அறிவிப்பு வெளியிட்டார். அதோடு நிற்கவில்லை. கட்சிக் கொடியை தயார் செய்து ஃபேஸ்புக்கில் வெளியிட்டார். அந்த கொடியை பார்த்து கலாய்க்காதவர்களே இல்லை.

ஆர்.ஜே. பாலாஜி அரசியலுக்கு வருவதை பார்த்து ஒரு கூட்டம் அவரை கலாய்த்தாலும் சிலர் அவரை ஆதரித்துள்ளனர். இந்நிலையில் நான் கட்சி துவங்குகிறேன் என்று கூறி ஒரு பெரிய குண்டை தூக்கிப் போட்டார் ஜூலி.

இது என்னடா தமிழ்நாட்டுக்கு வந்த சோதனை. ஆ, ஊன்னா கட்சி துவங்குகிறேன் என்று கிளம்பிவிடுகிறார்கள் என்று நெட்டிசன்கள் விமர்சித்து வருகிறார்கள்.

ஜூலி கட்சி துவங்குவதாக வெளியான வீடியோவில் அவர் இருந்த கெட்டப், வந்து இறங்கிய காரை பார்த்துவிட்டு மக்களுக்கு லைட்டா டவுட்டு வந்தது. அவர் கட்சி துவங்கவில்லையாம், அரசியல் சார்ந்த படத்தில் நடிக்கிறாராம்.

ஹம்பிள் பொலிடீஷியன் நொக்ராஜ் என்கிற கன்னட படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்கப் போகிறாராம் ஆர்.ஜே. பாலாஜி. அரசியல் சார்ந்த இந்த படத்திற்கு தான் இப்படி பீதியை கிளப்பி அவர் விளம்பரம் தேடியதாக தகவல் வெளியாகியுள்ளது.

படத்திற்கு எப்படி விளம்பரம் தேடலாம் என்று ரூம் போட்டு யோசிப்பார்கள் போல. நல்லா தேடுறாங்கய்யா விளம்பரத்தை. இதற்கிடையே ஜூலி கமல் ஹாஸன் கட்சியில் சேர முயற்சி செய்வதாக வேறு கூறப்படுகிறது.


0 coment�rios:

நடிகர் விஷால் நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் என பிசியாக இருக்கிறார். அவரின் நடிப்பில் கடந்த வாரம் வெளியான இரும்புத்திரை படத்திற்கு மக்க...

விஷாலை விரட்டுவோம்! அடுத்தடுத்து தொடரும் எதிர்ப்புகள்

நடிகர் விஷால் நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் என பிசியாக இருக்கிறார். அவரின் நடிப்பில் கடந்த வாரம் வெளியான இரும்புத்திரை படத்திற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு.

அவர் அரசியலில் இறங்கி போட்டியிட சில தடைகளையும் சந்தித்தனர். இந்நிலையில் தற்போது அவரின் மீது அடுத்தடுத்து எதிர்ப்புகள் சூழத்தொடங்கியுள்ளது.

இதில் தற்போது தயாரிப்பாளர் சங்கத்தை விட்டு விஷால் தானாக செல்ல வேண்டும். இல்லையெனில் நாங்கள் விரட்டுவோம் என நடிகர் ரித்திஷ் கூறியுள்ளார்.

மேலும் அண்மையில் டி.ஆர், இயக்குனர் பாரதிராஜா, ராதா ரவி ஆகியோருடன் சேர்ந்து பேட்டியளித்துள்ளார். அதில் அவர் விஷால் கடுமையாக தாக்கி பேசியுள்ளார்.

0 coment�rios:

தனுஷ் நடித்த துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், யாரடி நீ மோகினி திருவிளையாடல் ஆரம்பம், 3 படங்களை தயாரித்த ஆர்.கே.புரொடக்ஷன் தற்போது தயாரிக்கும...

சாமிக்கும் பேய்க்கும் சண்ட! தனுஷ் அப்பா இனி பிஸியோ பிஸி!

தனுஷ் நடித்த துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், யாரடி நீ மோகினி திருவிளையாடல் ஆரம்பம், 3 படங்களை தயாரித்த ஆர்.கே.புரொடக்ஷன் தற்போது தயாரிக்கும் படத்திற்கு “ பாண்டி முனி “ என்று பெயரிட்டுள்ளனர்.

இந்த படத்தில் முனியாக பிரபல ஹிந்தி நடிகர் ஜாக்கிஷெராப் முனி என்கிற அகோரி வேடத்தில் நடிக்க, புதுமுக நடிகையான மேகாலி பாண்டி என்ற வேடத்திலும் நடிக்கிறார். மற்றும் இன்னொரு நாயகியாக நிக்கிஷாபட்டேல், பெராரே ,சிவசங்கர், ஷாயாஜி ஷிண்டே, அம்பிகா, வாசுவிக்ரம் ஆகியோர் நடிக்கிறார்கள்.

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – கஸ்தூரிராஜா. இது இவர் இயக்கும் 23 வது படம் படம் பற்றி இயக்குனர் கஸ்தூரி ராஜா கூறியதாவது..

இது நான் இயக்கும் வித்தியாசமான படம். இதுவரை கிராம வாழ்வியலையும் காதலையும் குடும்ப உறவுகளையும் மட்டும் பதிவு செய்த நான் இதில் ஹாரர் விஷயத்தை கையிலெடுக்கிறேன். சாமிக்கும் பேய்க்கும் இடையே நடக்கும் போர் தான் பாண்டி முனி அடர்ந்த காட்டுக்குள் இருக்கும் ஒரு ஜமீன் பங்களாவுக்குள் நடக்கும் ஹாரர் படம் இது. சுமார் 70 வருடங்களுக்கு முன்பு நடப்பது மாதிரியான பீரியட் படம் இது.

சாமி பாதி, பேய் பாதி என்று கதையின் போக்கு இருக்கும். இந்த கதையை கேட்டவுடன் ஜாக்கி ஷெராப் ஆர்வத்துடன் உடனே ஓகே சொன்னது இந்த கதைக்கு கிடைத்த முதல் வெற்றி. படத்தின் படப்பிடிப்பு மலேசியா, தாய்லாந்து, குரங்கணி, ஜவ்வாதுமலை போன்ற இடங்களில் நடைபெற உள்ளது.

0 coment�rios: