Home Top Ad

”இனி பூமி 100 ஆண்டுகளுக்கு மேல் நிச்சயம் தாங்காது. மாற்று கிரகத்தைத் தேடி மனித இனம் நகர வேண்டிய காலகட்டம் இது…”ஸ்டீபன் வில்லியம் ஹோக்கிங்கி...

ஸ்டீபன் ஹாக்கிங்கின் அழகான காதல் கதை!

”இனி பூமி 100 ஆண்டுகளுக்கு மேல் நிச்சயம் தாங்காது. மாற்று கிரகத்தைத் தேடி மனித இனம் நகர வேண்டிய காலகட்டம் இது…”ஸ்டீபன் வில்லியம் ஹோக்கிங்கின் மறக்க முடியாத, மறுக்க முடியாத வரிகள் இவை.

உலகத்தின் தலை சிறந்த அறிவியல் ஆராய்ச்சியாளர்களில் மிக முக்கியமானவர் இவர். அமையோட்ரோபிக் லேட்டரல் ஸ்க்லெரோசிஸ் (Amyotrophic Lateral Sclerosis ALS) என்னும் நரம்பு நோயால் தாக்கப்பட்டவர். ஒவ்வொரு உறுப்புகளாக செயல் இழந்து நடமாடவும் பேசவும் முடியாத நிலையில், இன்னும் இரண்டு வருடங்களுக்கு மேல் தாங்காது என மருத்துவர்களால் கைவிடபட்டவர்.

இந்நோயினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு, பேச்சையும் இழந்த நிலையில் கணினியூடாகப் பேச்சுத் தொகுப்பி மூலம் மற்றவர்களுடன் எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டு அதன் மூலமே பல்வேறு சாதனைகளைப் படைத்தவர்.

உலகின் சிறந்த அறிவியல் ஆல்பர்ட் ஐன்ஸ்டீனுக்கு நிகராகனவர் ஸ்டீபன் ஹாக்கிங். இந்த அறிவியல் ஜாம்பவானின் வாழ்க்கையிலும் அழகான காதல் கதைகள் இருந்தது எவ்வளவு பேருக்குத் தெரியும்?

ஆக்ஸ்ஃபோர்ட்டில் இயற்பியல் பயின்று முதல் வகுப்பில் ஹானர்ஸ் பட்டம் பெற்றார். பின்னர் கேம்பிரிட்ஜில் Ph.D பயின்று வந்த ஹோக்கிங்குக்கு ஜேன் வீல்ட் அறிமுகமானார்.இருவரும் நட்பில் இணைந்தனர் பின் காதலாக மாறியது.

வாழ்க்கையில் மிகுந்த சந்தோஷத்தில் இருக்கும்போது தான் ALS நோயின் தாக்கம் அதிகரித்து இன்னும் இரண்டு வருடங்களுக்கு மேல் உயிர் வாழ இயாலாது என மருத்துவர்கள் கூறியதை கேட்டு மிகுந்த சோகத்திற்கு ஆளானார்.

ஆனால் ஜேன் தளரவில்லை ஹோக்கிங்கை விட்டு விலகவுமில்லை. இந்த நோயை நாம் சேர்ந்தே எதிர்கொள்வோம் என்றார். இந்த வார்த்தை அவரை உற்சாகபடுத்தி படிப்பைத் தொடர்ந்துமுனைவர் பட்டம் பெற்றார். பின் அவர்களது திருமணமும் நடந்தது.

நாள்களை எண்ணிக் கொண்டிருந்த இருவரும் தங்களது நேரத்தை சந்தோஷமாக மட்டுமே கழிப்பது என உறுதியாயிருந்தனர். குழந்தைகள், இன்னும் கொஞ்சம் நீடி த்த வாழ்க்கை என நாள்கள் வளர அவரது நோயின் தீவிரமும் வளர்ந்தது.

நாளடைவில் எழுந்து நடமாட முடியாத, கை கால்களை அசைக்க முடியாத, பேசும் திறன் இழந்தவரானார். ஆனாலும் அவரது சிந்திக்கும் திறனுக்கும் அறிவியல் சாதனைகளுக்கும் முட்டுக்கட்டை போட அந்தக் கொடிய நோயால் முடியவில்லை.பின் கருத்துவேறுப்பாட்டால் இருவரும் பிரிந்தனர்.

1990 இல் தனக்கு சேவை புரிந்த செவிலியர் எலைன் மேசனைக் காதலித்து மணந்து கொண்டார். வயது, உடல் கடந்த மனப்பூர்வமான காதலாக இருந்திருக்க வேண்டும். ஜேனும் ஜோனத்தன் ஹெல்லர் என்பவரை மணந்து கொண்டார். 5 வருடங்களாக சிறப்பாகத் தொடர்ந்த ஹோக்கிங்மேசன் திருமண உறவில் விரிசல் விழ ஆரம்பித்தது.

பின் சில காரணங்களால் 2006ம் வருடம் இருவரும் விவாகரத்து பெற்றனர். இதன் பிறகு ஹோக்கிங்க மீண்டும் ஜேனிடம் வந்து சேர்ந்தார். அவரது கடைசி 10 வருடங்களை ஜேன்- ஜோனத்தன் மற்றும் தன் மகன், மகள்கள் பேரப் பிள்ளைகளோடு கழித்தார்.

வெவ்வேறு நபர்களைத் திருமணம் செய்து வெவ்வேறு வழியில் சென்றாலும், வாழ்வின் கடைசி சில வருடங்களில் மீண்டும் இணைந்து, எவ்வித எதிர்பார்ப்புமில்லா அன்பை முதுமையிலும் பகிர்ந்து கொண்டு, வாழ்க்கையை இவ்வளவு அழகான முதிர்ச்சியோடு கடந்து சென்ற இவர்கள் உண்மையாகவே காலத்தையும் காதலையும் ஒருசேர வென்றிருக்கிறார்கள் என்றால் அது மிகையல்ல!

எதை இழந்த போதிலும் இழந்ததைப் பற்றி கவலைகொள்ளாமல் நம்மிடம் மிச்சம் என்ன இருக்கிறது என்று பார்க்கவேண்டும் என சொல்லிக்கொடுத்த ஹோக்கிங் அறிவியலில் மட்டுமல்ல அன்பிலும் அரசனே!

0 coment�rios:

பிரபல தொலைக்காட்சி மூலம் தன் வருங்கால மனைவியை தேர்தெடுக்க எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார் நடிகர் ஆர்யா. இதற்காக ப...

ஆர்யாவிற்கு ஷாக் கொடுத்த மலையாள இளம்பெண்... அதிர்ச்சியில் பெற்றோர்

பிரபல தொலைக்காட்சி மூலம் தன் வருங்கால மனைவியை தேர்தெடுக்க எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார் நடிகர் ஆர்யா. இதற்காக பல பெண்கள் போட்டிபோட 16 பெண்களை நிகழ்ச்சி குழு தேர்தெடுத்திருந்தது.

இந்நிலையில் சில போட்டியாளர்கள் வெளியேறினாலும் நிகழ்ச்சியில் இன்னும் இருக்கின்ற இளம்பெண்கள் ஆர்யாவை எப்படியாவது கவர வேண்டும் என்ற எண்ணத்தோடு உள்ளார்கள்.

தற்போது சீத்தாலட்சுமி என்ற இளம்பெண் தன்னுடைய வாழ்க்கையில் நடந்த ஒன்றை ஆர்யாவிடம் கூறியுள்ளார்.

அவர் கூறியது, 'நான் என் பெற்றோருக்கு தாமதமாக பிறந்த பெண்குழந்தை, 8 வயது இடைவெளியில் நான் என் சகோதரருக்கு அடுத்து பிறந்துள்ளேன். நான் 12 வகுப்பு படிக்கும்போது என்னுடன் ஒரு பெண் தோழி இருந்தால், அவள் என்னுடன் தவறாக நடக்க முற்பட்டால், இதனால் நான் மிகவும் மனமுடைந்து மன அழுத்தத்தில் இருந்தேன். அப்போது இதைப்பற்றி என் குடும்பத்தினரிடம் சொல்ல சிரமப்பட்டேன்’. இதை கேட்ட ஆர்யா என்ன சொல்வதென்று புரியாமல் இருந்துள்ளார்.

0 coment�rios:

நடிகர் கமல்ஹாசனை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் நடிகர் விஷால் சந்தித்து பேசினார். சுமார் 10 நிமிடங்கள் அவர்கள் பேசிக் கொண்டிருந்தன...

கமலுடன் சந்தித்தது குறித்து விஷால் விளக்கம்

நடிகர் கமல்ஹாசனை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் நடிகர் விஷால் சந்தித்து பேசினார். சுமார் 10 நிமிடங்கள் அவர்கள் பேசிக் கொண்டிருந்தனர்.

பின்னர் வெளியே வந்த விஷால் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதன் விவரம் வருமாறு:-

கேள்வி:- அரசியலில் கமல் பரபரப்பாக உள்ள நிலையில் அவரை சந்தித்தது ஏன்?

பதில்: கமல் சினிமாதுறை சார்ந்த முக்கியமான பிரமுகர். இப்போது ஸ்டிரைக் நடந்து வரும் வேளையில் என்ன நடக்கிறது என்பதை கமலிடம் சொல்ல வேண்டியது என்னுடைய பொறுப்பு. எதற்காக ஸ்டிரைக்கில் ஈடுபடுகிறோம். எந்தெந்த வி‌ஷயங்களுக்காக போராடுகிறோம் என்பதை விலாவாரியாக அவரிடம் தெரிவித்தேன். நான் சொன்னதை அவர் தெளிவாக கேட்டுக் கொண்டார். அவர் சினிமாவின் முன்னோடி.

சினிமா உலகம் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர். எனவே அவருடைய ஒத்துழைப்பு எங்களுக்கு 100 சதவீதம் இருக்கும். தமிழ் சினிமாவை பொறுத்தவரை அவர் குரல் கொடுத்துள்ளார். எந்த பிரச்சினையாக இருந்தாலும் அவர் பக்க பலமாக இருந்துள்ளார்.

அவரது ஆதரவு வேண்டும் என்ற அடிப்படையில் நான் இதை சொல்லவில்லை. இதுபோன்ற நேரங்களில் அவருடைய ஈடுபாடு கண்டிப்பாக இருக்கும்.


கேள்வி:- கமல் அரசியலுக்கு வந்த பிறகு இது போன்ற பிரச்சினைகளில் குரல் கொடுப்பாரா?

பதில்:- அவர் பார்த்துக் கொண்ட ஒரு துறைதான் சினிமா. சினிமா எப்படி ஒரு துறையோ அப்படித்தான் அரசியல் இன்னொரு துறை. அவர் இப்போது 2-வது துறையை தேர்ந்தெடுத்துள்ளார். சினிமாதுறை பிரச்சினைகளை நான் நடிகர் சங்க பொதுச் செயலாளர் என்ற முறையிலும், தயாரிப்பாளர் சங்க தலைவர் என்ற முறையிலும் கமலிடம் சென்று சொல்வது எனது கடமை. அதனால் போய் சொன்னேன்.

இப்போது நடக்கும் ஸ்டிரைக்கை வேலைநிறுத்தம் என்று சொல்வதை விட சினிமா துறையை புதுப்பிக்கிறோம் என்றுதான் சொல்ல வேண்டும். இதில் நிறைய வி‌ஷயங்களை மாற்ற வேண்டும் என்பது எல்லோருடைய உணர்வு. எனவே இதில் எதிர்காலத்தில் அவருடைய பங்களிப்பும் இருக்கும் என்று நம்புகிறேன்.

கேள்வி:- தயாரிப்பாளர் சங்க போராட்டம் எப்போது முடிவுக்கு வரும்?

பதில்:- தொடர்ந்து பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. நாளை (திங்கட்கிழமை) டைரக்டர்களுடன் பேச்சு நடத்த உள்ளோம். செவ்வாய்க்கிழமை கேமராமேன்களுடன் பேச்சு வார்த்தை. அதன்பிறகு நடிகர் சங்கத்தினர் பேச்சு வார்த்தை நடத்துவோம். எங்கள் பிரச்சினைகளை தியேட்டர் அதிபர்கள் புரிந்து கொள்ளும்போது அவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்துவோம்.

சினிமாதுறை சார்ந்த அனைத்து அமைப்புகளுடனும் பேச்சு வார்த்தை தொடரும். இது ஈகோ வினாலோ, அவசரப்பட்டோ எடுத்த முடிவு அல்ல. இந்த நேரத்தில் தயாரிப்பாளர்கள் படம் எடுக்கும்போது ஒரு கஷ்டம் வருகிறது. படம் ரிலீஸ் ஆகும் போது இன்னொரு கஷ்டம் இருக்கிறது. நாங்கள் கேட்பது அடிப்படை வி‌ஷயங்கள்.

டிக்கெட் விற்பனையை கம்ப்யூட்டர் மயமாக்குங்கள் என்று சொல்லும்போது அதை அவர்கள் கண்டிப்பாக செய்தாக வேண்டும். ஒரு வண்டி வாங்குகிறோம் என்றால் 36 தவணை அல்லது 48 தவணை இருக்கும். 48-வது தவணைக்கு பிறகு எனக்கு ஒரு தெளிவு வரும். வண்டி எனக்கு சொந்தம். 49-வது மாதம் நான் கட்டத் தேவையில்லை. ஆனால் சினிமாவில் என்னவென்றால் நாங்கள் கட்டிக் கொண்டே இருக்கிறோம். கட்டக்கூடாத கட்டணத்தை இன்னும் கட்டிக் கொண்டே இருக்கிறோம்.

இன்னொன்று, மக்கள் தியேட்டருக்கு வந்து படம் பார்க்க வேண்டும். பாப்கார்ன் செலவிலும், உணவு பொருட்கள் செலவிலும் விஷால் ஏன் மூக்கை நுழைக்கிறார் என்றால் நான் அதற்கு வரவில்லை. மக்கள் சந்தோ‌ஷமாக வந்து படம் பார்க்க வேண்டும். அவர்கள் அமைதியாக இருக்க வேண்டும். அது ரொம்ப ஆடம்பரமான வி‌ஷயமாக தெரியும்போது அதை எப்படி முறைப்படுத்தி அவர்களை தியேட்டருக்கு வரவழைக்க வேண்டும் என்பதுதான் எங்களின் முயற்சி.

இதுதொடர்பாக நிறைய வி‌ஷயங்களை நாங்கள் பேசுகிறோம். ஆன்லைன் முன்பதிவுக்கு 1 டிக்கெட்டுக்கு கூடுதலாக 30 ரூபாய் வசூலிக்கிறார்கள். நான் குடும்பத்துடன் படம் பார்க்க செல்லும்போது 1 டிக்கெட்டுக்கு 30 ரூபாய் கூடுதல் என்பது எனக்கு அதிகமாக தெரிகிறது. அதைத்தான் சொல்கிறோம். ஏன் 30 ரூபாய் போடுகிறீர்கள், 5 ரூபாய் போடுங்கள். 25 ரூபாயை சலுகையாக கொடுங்கள். அவர்கள் படம் பார்க்க தியேட்டருக்கு வருவார்கள். இதைத்தான் நாங்கள் விண்ணப்பமாக வைக்கிறோம். இது அவர்களுடன் சண்டை போடுவதற்காக அல்ல.

ஏனென்றால் தயாரிப்பாளர்களால் முடியாது. இதையெல்லாம் செய்யும் போதுதான் மக்கள் படம் பார்க்க வருவார்கள். இதுபோல கிடைக்கும் சேமிப்பை தயாரிப்பாளர் இன்னொரு படம் எடுக்கத்தான் பயன்படுத்துவார்.

கேள்வி:- இது தொடர்பாக ரஜினியை சந்தித்து பேசினீர்களா?

பதில்:- இதுவரை சந்திக்க வில்லை. கண்டிப்பாக அவருக்கும் தகவல் தெரியப்படுத்துவோம்.

கேள்வி:- டிஜிட்டல் ஒளிபரப்பில் தமிழக அரசு தலையிட வேண்டும் என்று நினைக்கிறீர்களா?

பதில்:- இது சினிமா துறை சார்ந்த ஒரு வி‌ஷயம். மாநகராட்சியை பற்றி எல்லோருக்கும் தெரியுமா? இந்தியாவிலேயே முதல் மாநிலமாக நாம்தான் 2 முறை வரி செலுத்துகிறோம். அதை 30 சதவீதத்தில் இருந்து 8 சதவீதத்துக்கு கொண்டு வந்தார்கள். அதுவே இப்போது எங்களால் முடியாத சூழ்நிலையில் இருக்கிறோம்.

ஜி.எஸ்.டி. உள்பட அனைத்து வரிகளையும் மக்கள் மீது திணிக்கும்போது டிக்கெட் விலை அதிகரிக்கிறது. அது பெரிய படங்களுக்கு தாங்குகிறது. சிறிய பட்ஜெட் படங்களுக்கு தாங்கவில்லை. இதையெல்லாம் பேசி சரி செய்யும் போதுதான் நல்ல தீர்வு ஏற்படும்.

கேள்வி:- உங்களுடைய இரும்புத்திரை உள்ளிட்ட பல படங்கள் வெளியாக தயார் நிலையில் உள்ளது. இந்த போராட்டத்தால் நஷ்டம் ஏற்படுமா?

பதில்:- இரும்புத்திரை ரிலீஸ் செய்யும்போது டிக்கெட் விற்பனை கம்ப்யூட்டர் மயமானால்தான் எத்தனைபேர் பார்த்துள்ளனர். என்பது எனக்கு தெரியவரும். தியேட்டர் அதிபர்கள் அந்த கணக்கை கொடுத்தால்தான் நடிகர்களின் சம்பளத்தை குறைக்க முடியும். இது ஈகோ சண்டை அல்ல. எங்களால் முடியவில்லை. இதை சரி கட்டிய பிறகுதான் தயாரிப்பாளர்கள் மேற்கொண்டு படம் எடுப்பதிலோ, வெளியிடுவதிலோ நல்ல சூழ்நிலை ஏற்படும் என்று நம்புகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

0 coment�rios:

‘ஆளு எப்படியிருந்தாலும் ஓகே. நாளும் நட்சத்திரமும் நல்லாயிருந்தா ஒரே ஜம்ப்தான்’ என்பதற்கு அனிருத் ஹீரோவாகிவிட்டார் என்பதே பெரிய எக்சாம்பிள்....

என்ன… அனிருத்துக்கு நயன்தாரா ஜோடியா?

‘ஆளு எப்படியிருந்தாலும் ஓகே. நாளும் நட்சத்திரமும் நல்லாயிருந்தா ஒரே ஜம்ப்தான்’ என்பதற்கு அனிருத் ஹீரோவாகிவிட்டார் என்பதே பெரிய எக்சாம்பிள். இசையில் ஜீன்ஸ் போட்ட சரஸ்வதியாக இருந்தாலும், நடிப்பதற்கு சர்வ லட்சணமும் பொருந்தியவரா அனிருத்? என்றால், அரை தூக்கத்தில் எழுப்பிக் கேட்டாலும் ‘ஆளை விடு சாமி’யாகிவிடும் உலகம். ஆனாலும் இமேஜ் இருந்தால் எல்லாமே சாத்தியம் என்பதும் இங்கு சாத்தியம்தான்.

யெஸ்… கோலமாவு கோகிலா என்றொரு படத்தில் நடித்து வரும் நயன்தாராவுக்கு அனிருத்துதான் ஜோடி என்கிறார்கள் இன்டஸ்ட்ரியில். எண்ணி ஐந்தே நிமிஷம் வரக்கூடிய அந்த கேரக்டரில் அனிருத்தை நடிக்க வைக்க திட்டமிட்டிருக்கிறாராம் படத்தின் இயக்குனர் நெல்சன்.

இந்த நெல்சன் சிம்புவின் கிளாஸ்மெட். அதுமட்டுமல்ல… அவரை வைத்து வேட்டை மன்னன் என்கிற படத்தை இயக்கியவர். இவர், அனிருத், சிம்பு மூவரும் திக் பிரண்ட்ஸ் என்பதால், இப்படியொரு முடிவை அவர் எடுத்திருக்கலாம்.

எனிவே… ஐந்து நிமிஷம்தானே? அதற்குள் கேன்ட்டீன்ல ஒரு கேக் வாங்கிட்டு திரும்பிடுறோம்… நடத்துங்க நெல்சன்.

0 coment�rios:

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் காலா படம் அடுத்த மாதம் வெளியாகுமா என்பது தற்போது வரை கேள்விக்குறியாகவே உள்ளது. தற்போது தயாரிப்பாளர் சங்கம் நடத்...

ரஜினியின் காலா வசூலுக்கு வந்த புதிய பிரச்சனை!

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் காலா படம் அடுத்த மாதம் வெளியாகுமா என்பது தற்போது வரை கேள்விக்குறியாகவே உள்ளது. தற்போது தயாரிப்பாளர் சங்கம் நடத்திவரும் வேலைநிறுத்தம் முடிந்தபிறகுதான் காலா ரிலீஸ் தேதி பற்றி தெளிவு கிடைக்கும்.

தற்போது காலா படத்தின் வசூலுக்கு புது பிரச்சனையாக வந்துள்ளது அவெஞ்சர்ஸ்: இன்பினிட்டி வார் படம். மார்வெலின் 22 சூப்பர்ஹீரோக்கள் தோன்றவுள்ள இந்த படத்தின் இரண்டாவது ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி உலகம் முழுவதும் பிரம்மாண்ட வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் படம் ஏப்ரல் 27ம் தேதி வெளியாகும் என அதில் அறிவித்திருந்தனர்.

இந்த படத்திற்கு இந்தியாவிலும் பெரிய எதிர்பார்ப்பு உள்ளதால் காலா படத்தின் வசூலுக்கு பெரிய பாதிப்பு இருக்கும் என சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது.

0 coment�rios:

ரஜினி, கமல் தமிழ் சினிமாவை தங்கள் கண்ட்ரோலில் வைத்திருந்த நாயகர்கள். இதில் ரஜினி இன்றும் அவர் தான் நம்பர் 1-ஆக இருக்கின்றார். அந்த வகையில...

நட்பில் ஏற்பட்ட விரிசல், ரஜினியை இப்படி தாக்கிவிட்டாரே கமல், ரசிகர்கள் சோகம்

ரஜினி, கமல் தமிழ் சினிமாவை தங்கள் கண்ட்ரோலில் வைத்திருந்த நாயகர்கள். இதில் ரஜினி இன்றும் அவர் தான் நம்பர் 1-ஆக இருக்கின்றார்.

அந்த வகையில் கமல் தற்போது முழு நேர அரசியல்வாதியாக, ரஜினி விரைவில் அரசியலில் களம் இறங்கவுள்ளார்.

சினிமாவில் ரஜினி, என்னை போல் நண்பர்கள் வேறு யாருமில்லை என்று கமல் வெளிப்படையாக பேசினார், இதனால் நல்ல நட்பிற்கு உதாரணமாக இவர்களை தான் சொல்வார்கள்.

ஆனால், சமீபத்தில் கமல் ‘நான் ரஜினி நடிக்கும் படங்களை நான் நடிக்க வேண்டும் என்று ஒரு போதும் விரும்பியது இல்லை.

எனக்கும் அவருக்கும் நல்ல நட்பு இருந்தது, அந்த நட்பு அரசியலால் கண்டிப்பாக பிளவு ஏற்படலாம், அவரின் சில கொள்கைகளை மாற்றினால் ரஜினியுடன் இணைவது குறித்து முடிவெடுப்பேன்’ என்று கூறியுள்ளார்.

எல்லோரும் புகழும் நண்பர்களாக இருந்த ரஜினி, கமல் நட்பிற்குள் திடீரென்று அரசியலால் ஏற்படும் பிளவு ரசிகர்களுக்கே வருத்தம் தான்.

0 coment�rios: