Home Top Ad

பாட்டு இல்லாத வாழ்வு, பாவப்பட்டது…’ என்பதை மெல்லிசை மன்னர்களும், இசைஞானிகளும், இசைப்புயல்களும் ஒவ்வொரு நிமிஷமும் உணர்த்திக் கொண்டே இருக்கிற...

நான் ஏன் இப்படி சொல்கிறேன் என்றால்? இசையமைப்பாளரை பதற விட்ட கமல்!

பாட்டு இல்லாத வாழ்வு, பாவப்பட்டது…’ என்பதை மெல்லிசை மன்னர்களும், இசைஞானிகளும், இசைப்புயல்களும் ஒவ்வொரு நிமிஷமும் உணர்த்திக் கொண்டே இருக்கிறார்கள். தொண்டர்கள் துள்ளலுடன் வேலை பார்க்க… கட்சிகளுக்கும் பாடல்கள் தேவைதானே? அப்படி துள்ளுகிற இசையை புதிய கட்சியான மக்கள் நீதிமய்யத்திற்கு அமைத்து, கமல்ஹாசனை கவர்ந்திருக்கிறார் இசையமைப்பாளர் தாஜ்நூர்.

சினேகன் வரிகளில் ஆறு அதிரடியான பாடல்களை உருவாக்கியிருக்கிறார் அவர். இந்த பாடல்கள் வெளியீட்டு விழா காமராஜர் அரங்கத்தில் பிரமாண்டமாக நடந்தது. இங்குதான் “மாலை வேண்டாம். பொன்னாடை வேண்டாம். கட் அவுட்டுகள் வேண்டாம். பேனர்கள் வேண்டாம்” என்று ஏகப்பட்ட ‘டாம்’களை அடுக்கினார் கமல். மக்களுக்கு இடையூறு செய்யும் எதுவும் வேண்டாம் என்று சொல்கிற தலைவர்களை பார்ப்பதே அரிதான காலத்தில் கமலின் இந்த …டாம், நிச்சயம் வரவேற்புக்குரியதுதான்.

செம ஜாலி மூடில் இருந்தார் கமல் என்பதை அவரது சிற்றுரையில் உணர முடிந்தது. முக்கியமாக இந்த விழாவின் நாயகர்களான சினேகனையும் தாஜ்நூரையும் பற்றி அவர் பேசியது சம்பந்தப்பட்டவர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தியிருக்கும்.

“எல்லாருக்கும் முன்னாடி வந்தவர் சினேகன். அட்வான்ஸ் புக்கிங் பண்ணிவிட்டார். நான் எந்த ரூட்ல போகப் போறேன் என்பதை பிக்பாஸ் வீட்ல இருக்கும்போதே புரிஞ்சுகிட்டவர் அவர். நான் வெளியில் வந்ததும் முதல் வேலை உங்களோட சேர்வதுதான் என்று சொன்னார்”

“தாஜ்நூரை அவர் ஒல்லியா இருந்த காலத்திலிருந்தே அறிவேன். திறமையும் எடையும் நாளுக்கு நான் கூடிக்கொண்டே போகிறது. அவரை பார்க்கும் போதெல்லாம் நூர்னு கூப்பிடுறதில்ல. இருநூறு… முன்னூறுன்னு கூப்பிடுவேன். இதை இந்த கூட்டத்தில் சொன்னால் எடை குறைப்பார்னு நம்புகிறேன்” என்று கமல் சொல்ல கூட்டத்தில் பெருத்த கரகோஷம்.

ஒரு தலைவர், தன்னை சார்ந்தவர்களை சட்டாம்பிள்ளை மனப்பான்மையோடு அணுகாமல், நண்பனை போல அணுகுவதுதான் சரி என்று நாட்டுக்கு சொல்வதை போல இருந்தது கமலின் பேச்சு.

அமைச்சர்களும் எம்.எல்.ஏக்களும் கார் டயரை விழுந்து கும்பிட்ட ஊரில், இதெல்லாம் புதுசாகவே தெரிகிறது.

தொடரட்டும் கமலின் அன்பும் கேலியும்!

0 coment�rios:

இயற்கையைச் சீரழிக்காத வகையில், இன்று தொடங்கியிருக்கும் இந்த அமர்நாத் புனித யாத்திரை எந்தவிதத் தடங்கலும், பாதிப்பும் இல்லாமல் நடைபெற வேண்டும...

அண்ணாமலையில் அனல், அமர்நாத்தில் பனியாக அருளும் ஈசன்!

இயற்கையைச் சீரழிக்காத வகையில், இன்று தொடங்கியிருக்கும் இந்த அமர்நாத் புனித யாத்திரை எந்தவிதத் தடங்கலும், பாதிப்பும் இல்லாமல் நடைபெற வேண்டும் எனப் பிரார்த்திக்கிறோம்.
அண்ணாமலையில் அனல், அமர்நாத்தில் பனியாக அருளும் ஈசன்!

இயற்கையில் இறைவனின் வடிவத்தை வணங்குவது, இந்தியர்களின் தொன்றுதொட்ட நம்பிக்கை. தூணிலும் துரும்பிலும் உறைபவன் இறைவன் என்பதை நம் புராணங்கள் தெரிவிக்கின்றன. அதிலும் சிவலிங்க வடிவத்தை உணர்த்தும் மலைகளும், பாறைகளும், புற்றுகளும் ஏன் சோற்றுப் பருக்கையும்கூட நம் வழிபாட்டுக்கு உரியவை. அனலாக அண்ணாமலையில் எழுந்த ஈசன், பனியாக எழுந்தருளும் தலமே அமர்நாத். இந்தத் தலத்தில் ஈசன் பனிலிங்க வடிவில் திருக்காட்சி அருள்கிறார். உலகாளும் ஈசனின் இருப்பிடமாக இமயம் இருந்துவருகிறது. அங்குத் தோன்றும் நதிகள், நதியில் கிடைக்கும் கற்கள், விருட்சங்கள் யாவுமே சிவவடிவாகக் காட்சியளிக்கின்றன. இமயத்தின் இதயப் பகுதியில் அமைந்த அமர்நாத் பனிலிங்கக் குகைக்கோவில் 5,000 ஆண்டுகள் பழைமையானது. சிவபெருமான் உமையம்மைக்கு வேத ரகசியங்களை எடுத்துரைத்த புண்ணிய இடம் என்று இது போற்றப்படுகிறது. சக்தி தேவியின் தொண்டை விழுந்த இடம் என்றும், அதனால் இது ஆதி சக்தி பீடங்களில் ஒன்று என்றும் வடநாட்டு பக்தர்களால் கூறப்படுகிறது.

இமயத்தின் அடியிலிருந்து 3,888 மீட்டர் உயரத்திலும், ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரிலிருந்து கிட்டத்தட்ட 141 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது அமர்நாத் பனிக்குகைக் கோயில். கடுமையான வானிலைகள், உயிரை வாட்டும் ஆபத்தான மலையேற்றங்கள், உடலை கிடுகிடுக்க வைக்கும் பனிப்பொழிவு, ஆக்சிஜன் குறைபாடு, தீவிரவாத அச்சுறுத்தல்கள்... என இந்தப் பயணம் முழுக்கவே சவாலாக இருந்தாலும், ஆண்டுதோறும் பக்தர்களின் கூட்டம் அலைமோதிக்கொண்டுதான் இருக்கிறது. இந்த ஆண்டு ஜூன் மாதம் 27-ம் தேதி அதாவது, இன்று அமர்நாத் யாத்திரை தொடங்கி, வரும் ஆகஸ்ட் 21-ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்தப் பயணத்தில் தீவிரவாதத் தாக்குதல்கள் எதுவும் நடைபெறக் கூடாது என்ற எண்ணத்தில், இரு நாள்களுக்கு முன்னர் பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்தப் பகுதியில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பார்வையிட்டார். 

உடலும் மனமும் ஒத்துழைக்கவேண்டிய கடுமையான பயணம் அமர்நாத் பனிலிங்க தரிசனப் பயணம். ஸ்ரீநகரிலிருக்கும் ராணுவ மருத்துவமனை முகாமில் ஒவ்வொரு பக்தரின் உடல்தகுதியைப் பரிசோதிக்கிறார்கள். ரத்த அழுத்தம், சர்க்கரைநோய், இதய நோய் இருப்பவர்களை இந்தப் பயணத்தில் அனுமதிப்பதில்லை. மேலும், இந்த யாத்திரையில் பங்கு பெற ஜம்மு காஷ்மீர் சுற்றுலாத்துறையிடம் காப்பீடு செய்திருக்க வேண்டும் என்பது முக்கிய விதி. பொதுவாக 2,000 முதல் 2,500 எண்ணிக்கையுள்ள பக்தர்களை தனிக்குழுவாக அனுப்பிவைப்பார்கள். ஸ்ரீநகரிலிருந்து பாகல் காவ் என்ற இடத்தைப் பேருந்தில் அடைய வேண்டும். அங்கிருந்து அமர்நாத் நடைப்பயணம் தொடங்கும். வழியெங்கும் கடுமையான பனிப்பொழிவு வாட்டினாலும் இயற்கையின் அழகு, சோர்வைப் போக்கிவிடும். பாகல் காவில் ஓய்வெடுத்துவிட்டுச் செல்லலாம். அங்குச் சுவையான ரொட்டிகள் யாத்ரீகர்களுக்கு இலவசமாக வழங்கப்படுகின்றன.

நடக்க முடியாதவர்கள் இங்கு டோலி அல்லது கோவேறுக் கழுதைகளின் மீது பயணிக்கலாம். சந்தன் வாரி, சேஷநாத் பகுதிகளைக் கடந்து சென்றால் அமர்நாத் குகையை அடையலாம். வழியெங்கும் லங்கர் என்னும் தங்குமிடம் உண்டு. நீருக்குச் சுவையான ஓடைகள் தென்படும். மருத்துவ முகாம்கள் ஆங்காங்கே இருப்பதால், உடல்நிலையை அடிக்கடி பரிசோதித்துக்கொள்ளலாம். மூச்சுத்திணறல் இருப்பவர்கள் பயணத்தை நிறுத்திவிட்டு ஓய்வெடுத்துக் கொள்ள வேண்டும். எல்லா இடங்களிலும் நமது ராணுவ வீரர்கள் இருப்பதால், அவர்களை உதவிக்கு அழைக்கலாம். இந்தப் பயணத்தில் ஆக்சிஜன் குறைவால் சிலர் மரணமடைந்ததும் நிகழ்ந்திருக்கிறது. எனவே, நிதானமாகத் தகுந்த ஆயத்தங்களோடு பயணம் செய்யவேண்டியது அவசியம். கை, கால் உறைகள், குல்லாய், ஷூ, ஸ்வெட்டர், ஜெர்கின் போன்றவற்றை இந்தப் பயணத்தில் அவசியம் உடன் எடுத்துச் செல்ல வேண்டும். ஆங்காங்கே தரப்படும் ஜல்ஜீரா என்ற மருத்துவக் குணம் கொண்ட பானத்தை அருந்துவது நல்லது.

எல்லாக் கஷ்டங்களையும் தாங்கிக்கொண்டு நடந்தால், பனி படர்ந்த மலையின் மத்தியப் பகுதியில் பெரிய குகை தென்படும். குகைக்குள் நுழைந்து உள்ளே சென்றால் அமர்நாத் லிங்கேஸ்வரன் பனிக்கட்டி வடிவில் காட்சியளிப்பார். பெரிய மேடையில் திரிசூலமும், குளிர்ந்த சூழலில் பிரமாண்ட பனிலிங்க வடிவும் காண்பவரை மெய்சிலிர்க்க வைத்துவிடும். தரிசிப்பவர்கள் எல்லோரும் தங்களை மறந்து `ஓம் நமசிவாய', `ஹர ஹர மகாதேவ்', `ஜெய் சிவாய' ,`ஜெய் போலேநாத்'... என்றெல்லாம் பரவசத்துடன் முழங்க ஆரம்பித்துவிடுவார்கள்.

எந்தத் தடையுமின்றி பனிலிங்க நாதரை பக்தர்கள் பரவசத்தோடு தரிசிக்கலாம். அண்டங்களையெல்லாம் ரட்சிக்கும் இந்த ஆதிசிவனின் வடிவத்தைக்கொண்டே பலர் இங்கு ஆரூடம் கணிப்பார்கள். சிவலிங்கம் எத்தனை பிரமாண்டமாக உள்ளதோ, அத்தனை செழிப்பு நாட்டில் உருவாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. 1945-ம் ஆண்டில் அமர்நாத்தில் விஸ்வரூப பனிலிங்கம் உருவானது. அதன் பிறகுதான் இரண்டாம் உலகப்போரின் தாக்கம் குறைந்து, உலகில் அமைதி நிலவியது என்கிறார்கள்.

புராண காலத்திலிருந்தே இந்த அமர்நாத் பனிக்குகை மற்றும் பனிலிங்கம் இருந்து வந்தாலும் காலப்போக்கில் இதன் புகழ் யாருக்கும் தெரியாமல் போனது. 16-ம் நூற்றாண்டில் ஆடு மேய்த்துக்கொண்டிருந்த ஓர் இஸ்லாமியருக்கு இந்தக் குகையும் லிங்கமும் தென்பட்ட பிறகுதான் மீண்டும் வழிபாட்டுக்கு உரியதானது என்கிறார்கள். அதனால் அந்த‌ இஸ்லாமிய‌ குடும்ப‌த்தின் வாரிசுகள்தாம் இன்றும் அமர்நாத் குகையை நிர்வகித்துவருகிறார்கள். இந்துக்களோடு இஸ்லாமியர்களும் இந்த அமர்நாத் பனிலிங்கேஸ்வரனைத் தரிசிக்கிறார்கள். இஸ்லாமியர்கள், `ப‌ர‌ப்பானி பாபா’ அதாவது, `ப‌னிக‌ட்டி பாபா’ என்று ஈசனை வணங்குகிறார்கள்.

பெருகிவரும் கூட்டம், புவி வெப்பமயமாதல், பக்தர்கள் ஏற்றும் தீப தூபங்கள் போன்ற காரணங்களால் ஆண்டுதோறும் இந்தப் பகுதியில் வெம்மை கூடி, பனிலிங்கம் சீக்கிரமே உருகிவிடுகிறது என்றும், இது அந்தப் பகுதியின் இயற்கை வளத்துக்கும் கெடுதியானது என்றும் இயற்கை ஆர்வலர்கள் தெரிவிக்கிறார்கள். இயற்கையைச் சீரழிக்காத வகையில், இன்று தொடங்கியிருக்கும் இந்த அமர்நாத் புனித யாத்திரை எந்தவிதத் தடங்கலும், பாதிப்பும் இல்லாமல் நடைபெற வேண்டும் எனப் பிரார்த்திக்கிறோம். பனிலிங்க நாதரை தரிசிக்கும் சகல பக்தர்களும் எல்லா நலமும் வளமும் பெற வாழ்த்துகிறோம்.  

0 coment�rios:

மிருதன் புகழ்(?) சக்தி சவுந்தர்ராஜனின் மூன்றாவது படம். ஸ்பேஸ் பற்றிய கதையை சில பல ஆங்கில படங்களிலிருந்து அபேஸ் பண்ணி ‘அடித்த’ படம்தான் டிக்...

டிக் டிக் டிக் / விமர்சனம் - அடுத்த படம் எந்த இங்கிலீஷ் படம்ணே…? அதை நினைச்சாதான் டிக்டிக்டிக்குங்குது மனசு!

மிருதன் புகழ்(?) சக்தி சவுந்தர்ராஜனின் மூன்றாவது படம். ஸ்பேஸ் பற்றிய கதையை சில பல ஆங்கில படங்களிலிருந்து அபேஸ் பண்ணி ‘அடித்த’ படம்தான் டிக்டிக்டிக்! ‘அடிச்சதுதான் அடிச்சீங்க. அடிமூளை கிறுகிறுக்கிற அளவுக்கு அடிச்சிருக்க வேணாமா?’ என்று ரசிகர்கள் முணுமுணுத்தாலும், தமிழ்சினிமாவை பொறுத்தவரை இந்தப்படம் புத்தம் புது அனுபவம்தான். மறுப்பதற்கில்லை!

பூமியை நோக்கி வரும் விண்கலம் ஒன்றை வானத்திலேயே வைத்து உடைக்காவிட்டால் தமிழ்நாட்டில் நாலு கோடி மக்கள் காலி. என்ன செய்வது? எப்படி நொறுக்குவது? பலவாறாக மண்டையை குடையும் அதிகாரிகள் குழு, ஐவர் குழுவை தேர்ந்தெடுத்து ஸ்பேஸ்சுக்கு அனுப்புகிறது. (அந்த அதிகாரிகள் விஞ்ஞானிகளா, இராணுவத்தினரா…) அதில் மூவர் திருடர்கள். அதிலும் ஒருவர்தான் ஹீரோ ஜெயம் ரவி.

தானுண்டு தன் ஜெயில் தண்டனை உண்டு என்று இருக்கும் அவருக்கு, மேஜிக்கும் கைவந்த கலை. இப்படியாக கிளம்பிப் போகும் ஐவர் குழு, எப்படி தமிழ்நாட்டை காப்பாற்றுகிறது என்பதுதான் டிக்.டிக்.டிக்.

சரியாக ராக்கெட் மேலே கிளம்புகிற நேரம் பார்த்து “உன் மகனை கடத்திட்டோம். அந்த மிசைல் எங்கிட்ட வந்தாகணும்” என்று வில்லன் எச்சரிக்க, மிசைலை வைத்து விண்கலத்தை உடைப்பதா? வில்லனிடம் கொடுப்பதா? எக்கச்சக்கமாக ஒரு முடிச்சை போடுகிறார் டைரக்டர். அதைவிட பெரிய முடிச்சு நமது மண்டைக்குள். 400 டன் எடையுள்ள அந்த மிசைலை எப்படி யாருக்கும் தெரியாமல் வில்லனிடம் ஒப்படைக்க முடியும்? அந்த வில்லனே ராக்கெட்டின் பெட்ரோல் டேங்கை திறந்துவிடு என்று கூறினால், ராக்கெட் எப்படி மேலே போகும்? போனால்தான் மிசைல் ஹீரோவுக்கு கிடைக்கும்? ஹீரோ வில்லனுக்குக் கொடுப்பான்? அப்படியிருக்க… ஏன் இப்படி சொன்னான் வில்லன்? இப்படியெல்லாம் கேள்விகள் கிளம்பி மண்டை நரம்பு சூடேறுகிறது. போய் தொலையட்டும்…

ஜெயம் ரவியை மட்டுமாவது ரசிக்கலாம் என்றால், மனுஷன் எந்நேரமும் கடுப்பு ராசாவாகவே இருக்கிறார். நல்லவேளை… மொக்கை ஜோக்குகளாக அடித்துத்தள்ளி சற்றே ரிலாக்ஸ் ஆக்குகிறார்கள் ரமேஷ் திலக்கும், அர்ஜுனும்.

இருந்தாலும், ராக்கெட்டில் பயணிக்கிறோம். அதுவும் நாலு கோடி மக்களை காப்பாற்ற என்கிற சிந்தனை சிறிதும் இல்லாமல், டாஸ்மாக் சரக்கோடு அவர்கள் மேலே போகிறார்கள் என்பதெல்லாம் ஜோக்குக்காக என்றாலும், சொரேர் என்கிறது. நல்லா சிந்திக்கிறீங்க சக்தி சவுந்தர்ராஜன். .

படத்தில் ஒரு சீன். ரமேஷ்திலக், அர்ஜுன் காமெடியையெல்லாம் தூக்கி சாப்பிடுகிறது. ‘இந்த சீக்ரெட் ஆபரேஷுனுக்கு ஒரு திருடனை அழைச்சிட்டு போகணுமா?’ என்று கேட்கும் சக அதிகாரிகளுக்கு அவன் திறமையை புரிய வைக்கிறாராம் மேலதிகாரி. எப்படி? பெரிய பெட்டகம் ஒன்றை திறக்கிற பொறுப்பை ஒப்படைக்கிறார் நிவேதா பெத்துராஜ் மற்றும் வின்சென்ட் அசோகனிடம். அவர்கள் மிஷின் கன்களால் சுட்டுமே திறக்காத பெட்டகத்தை அடுத்த அரை நிமிஷத்தில் ஒரு கை அகல வெற்றுத்தாள் மூலம் சாதிக்கிறார் ஜெயம் ரவி. (ஸ்….யப்பா மிடியல)

அந்த விஞ்ஞானிகள் குழுவில் நிவேதா பெத்துராஜும் இருக்கிறார். அந்த ராணுவ உடையும் நச்சென பொருந்தியிருக்கிறது அவருக்கு. மற்றபடி அதிக வேலையில்லை பொண்ணுக்கு.

ஜெயப்ரகாஷ்தான் வில்லன். அவ்ளோ பெரிய அப்பாடக்கர், சின்னூன்டு பையனிடம் அகப்படுவதுதான் இந்தப்படத்தின் ஆகப்பெரிய காமெடி சீன்.

நைந்து போன திரைக்கதைக்கு கோடி கோடியாய் பணத்தைக் கொட்டி உயிர் கொடுத்திருக்கிறார் தயாரிப்பாளர் நேமிசந்த் ஜபக். அதையும் உப்புமா கிண்டி வைக்காமல் அர்ப்பணிப்போடு பணியாற்றி படத்தையே காப்பாற்றியிருக்கிறார் ஆர்ட் டைரக்டர் எஸ்.எஸ்.மூர்த்தி. இவருக்கு சற்றும் சளைக்காத உழைப்பு ஒளிப்பதிவாளர் எஸ்.வெங்கடேஷ் மூலம் அமைந்திருக்கிறது. படம் தப்பித்ததென்றால் அதற்கு முழு முதல் காரணம் இவ்விருவர்தான்.

குறும்பா… பாடலில் மெய்மறக்க வைக்கிறார் டி.இமான். அவருக்கு இது 100 வது படம். வெற்றி நடை தொடர்க…

அரைத்த மாவையே அரைக்கக் கூடாது என்கிற ஒரு கொள்கைக்காக டைரக்டர் சக்தி சவுந்தராஜனை பாராட்டலாம். அடுத்த படம் எந்த இங்கிலீஷ் படம்ணே…? அதை நினைச்சாதான் டிக்டிக்டிக்குங்குது மனசு!

0 coment�rios:

முன்குறிப்பு: இணையத்தின் இருட்டுப் பக்கங்கள் குறித்த இந்தப் பதிவு, உங்களை அலர்ட் செய்ய மட்டுமே! டார்க்வெப் - இணையத்தில் அதி தீவிரமாய் உலவ...

டார்க்வெப் தெரியுமா உங்களுக்கு? தெரியவேண்டாம் ப்ளீஸ்!

முன்குறிப்பு: இணையத்தின் இருட்டுப் பக்கங்கள் குறித்த இந்தப் பதிவு, உங்களை அலர்ட் செய்ய மட்டுமே!

டார்க்வெப் - இணையத்தில் அதி தீவிரமாய் உலவும் ஆட்களுக்கு இந்த வார்த்தை பரிச்சயமாகி இருக்கும். இன்னும் சிலருக்கு சமீபத்தில் கேள்விப்பட்டதை போல இருக்கலாம். கபாலி படம் டார்க்வெப்பில்தான் ரிலீஸுக்கு முன் லீக்கானது. ஆனால் கபாலி பரபரப்பில் இதைப் பற்றி எல்லாரும் மறந்துபோனார்கள். உண்மையில் கபாலியை விட ஆயிரம் மடங்கு திருப்பங்களும் 'திடுக்' குகளும் நிறைந்த இடம் இந்த டார்க்வெப்.

கண்ணுக்குத் தெரியாத இருளுலகம்

நாம் அடிக்கடி விசிட் செய்யும் தளங்களை பட்டியலிட்டால் ஒரு பக்கத்தில் அடங்கிவிடும். ஃபேஸ்புக், ட்விட்டர், ஃப்ளிப்கார்ட், விக்கிப்பீடியா என விரல் விட்டு எண்ணிவிடலாம். இவை எல்லாம் சாதாரணமாக தேடினாலே கிடைத்துவிடும் வகை. இவ்வகை இணையம், Surface web எனப்படுகிறது. அதாவது, எந்த வகை தடையும், மறைப்புமின்றி நீங்கள் தேடியவுடன் சர்ச் ரிசல்ட்டில் வந்து விழும் வகை. இன்னும் சில தளங்கள் உள்ளன. அவற்றை நீங்கள் நார்மல் ப்ரவுசரில் எவ்வளவு தேடினாலும் கண்டுபிடிக்க முடியாது. காரணம், கூகுள் போன்ற சர்ச் என்ஜின்கள் பயன்படுத்தும் அல்காரிதம்கள், க்ராலிங், இன்டெக்ஸிங் டெக்னிக்குகள் எதுவும் இந்த தளங்களிடம் செல்லுபடியாகாது. இவற்றை டார்க்வெப் அல்லது டீப்வெப் என அழைக்கிறார்கள். இந்த தளங்களை Tor போன்ற ஸ்பெஷல் ப்ரவுசர்களின் வழி மட்டுமே அக்சஸ் செய்ய முடியும். 

Tor வரலாறு

Tor சாஃப்ட்வேரை 90களின் மத்தியில் வடிவமைத்தது அமெரிக்க கடற்படையின் ஆராய்ச்சிப் பிரிவு. அமெரிக்க உளவு ரகசியங்களை, இணையத்தில் மற்றவர்களின் பார்வையில் இருந்து மறைத்து வைக்க இந்த சாஃப்ட்வேரை பயன்படுத்தத் தொடங்கினார்கள். 2004-ல் இந்த கோடிங் பொதுவெளியில் வெளியிடப்பட்டது. அதன்பின் The Tor Project, Inc என்ற லாபநோக்கமற்ற நிறுவனம் இந்த சாஃப்ட்வேரை வைத்து ஒரு நெட்வொர்க் உருவாக்கும் முயற்சியில் இறங்கியது. அதில் வெற்றியும் பெற்றுள்ளது.


என்ன ஸ்பெஷல் இந்த ப்ரவுசரில்?

நீங்கள் சாதாரணமாக ப்ரவுஸ் செய்யும்போது ஒரு தகவலை தேடுவது, டைரக்ட் டூ வே ட்ராபிக் எனப்படுகிறது. சிம்பிளாக சொல்லப்போனால், உங்கள் கணினியை A என வைத்துக்கொள்வோம். அதில் நீங்கள் தேடும் தகவல் சர்வர் B- ல் ரிக்வ்ஸ்ட்டாக பதிவாகிறது. பின் அதற்கான டேட்டாவை,  சர்வர் உங்கள் கணினிக்கு அனுப்பும். இது முழுக்க முழுக்க A,B ஆகிய இரண்டுக்கும் இடையில் நடக்கும் நேரடித் தகவல் பரிமாற்றம். இந்த முறையில் தகவல் கேட்டது யார், எங்கிருந்து பெறப்பட்டது போன்ற தகவல்களை எளிதில் ட்ரேஸ் செய்துவிடலாம்.

ஆனால் டார் போன்ற ப்ரவுசரில் இந்த டைரக்ட் செயல்முறை இருக்காது. அதே தகவலை நீங்கள் உங்கள் சிஸ்டம் A-வில் இருந்து தேடினால் அது ரேண்டமாக C,F,J,K,O என ஏகப்பட்ட சர்வர்களின் வழி சென்று B-ஐ அடைகிறது. இதனால் சர்வர் B-யில், ரிக்வஸ்ட் விடுத்த சிஸ்டமை பற்றிய தகவல்கள் எதுவும் பதிவாகாது. நம் சிஸ்டமிலும் எந்த சர்வரில் இருந்து நாம் கேட்ட தகவல் பெறப்பட்டது என்ற தகவல் பதிவாகாது. இப்படி சுத்தி விடுவதை 'virtual tunnel' எனக் கூறுகிறார்கள். இந்த ரகசியத்தன்மைதான் டார் ப்ரவுசரின் பலம். டார்க்வெப்பின் கொள்கை.

யாராலும் கண்டுபிடிக்க முடியாது என்பதால் சிலர் இஷ்டப்பட்டதை இங்கே செய்கிறார்கள். சட்டத்திற்கு புறம்பாக எதையாவது செய்தால் போலீஸ் ஒவ்வொரு சர்வராய் தேடி சம்பந்தப்பட்டவரின் அடையாளத்தை கண்டுபிடிப்பதற்கு மிகுந்த சிரமமாகிவிடும். காரணம், ஒரு தகவலை நான்காயிரம் ரவ்ட்டர்களின் வழிகூட ரிலே செய்ய டார் ப்ரவுசரால் முடியும் என்பதுதான். இதனாலேயே டார்க்வெப்பை onionland எனவும் அழைக்கிறார்கள். வெங்காயத்தை போல பல அடுக்கு பாதுகாப்பு இருப்பதால் இந்தப் பெயர்.

இந்த ப்ரவுசரை இன்ஸ்டால் செய்வது சுலபம். பார்க்க மொஸில்லா ஸர்ச் போலதான் இருக்கும். இதை விண்டோஸில் இன்ஸ்டால் செய்வதை விட லினக்ஸில் இன்ஸ்டால் செய்து பயன்படுத்துவது பாதுகாப்பாக இருக்கும் என்கிறார்கள் வல்லுநர்கள்.

என்னதான் இருக்கிறது டார்க்வெப்பில்?

பொது இணையத்தில் இருப்பது போலவே இங்கும் நல்ல தளங்களும் இருக்கின்றன. தீய தளங்களும் இருக்கின்றன. குறிப்பாக Whistleblowers எனப்படும் அரசாங்கத்தின் அத்துமீறல்களை வெளிக்கொண்டுவரும் நபர்கள், பெரிதும் நம்புவது டார்க்வெப்பைதான். அமெரிக்க சி.ஐ.ஏவின் ரகசியங்களை அம்பலப்படுத்திய எட்வர்ட் ஸ்னோடென்,  டார்க்வெப்பின் அதி தீவிர ஆதரவாளர். பேரரசுகளின் ரகசியங்களை சாமான்யர்களும் வெளிப்படுத்த முடிவது இங்கேதான் என்பது அவரின் வாதம். 

ஜூலியன் அசாஞ்சேயும், விக்கிலீக்ஸும் பலமாக கால் பதிப்பதற்கு உதவியாய் இருந்தது Tor ப்ரவுசரும், டார்க்வெப்பும்தான். இதுபோக, தங்களை மாபெரும் அரசுகள் கண்காணிப்பதை விரும்பாத தொழில்நுட்ப வல்லுநர்களும், சமூக ஆர்வலர்களும் டார்க்நெட்டை பயன்படுத்துகிறார்கள். அதுவும் சீனா போன்ற இணையக் கட்டுபாடுகள் மிகுந்த நாடுகளில் டார்க்வெப் அரசியல் அத்துமீறல்களை வெளிக்கொண்டுவர பெரிதும் பயன்படுகிறது.


இது நாணயத்தின் ஒருபக்கம் மட்டுமே. எல்லாவற்றுக்கும் இருப்பது போல டார்க்வெப்பிற்கும் ஒரு கொடூர முகம் இருக்கிறது. ஆள்கடத்தல், போர்னோக்ராபி, போதை மருந்து வியாபாரம், ஆயுத வியாபாரம், ஹேக்டிவிசம் போன்றவையும் இங்கு எக்கச்சக்கமாக நடக்கின்றன. டார்க்வெப்பில் இருக்கும் டேட்டாக்களில் 15 சதவீதத்திற்கும் மேல் இருப்பது போதைமருந்து வியாபாரம்தான் என்கிறார் கேரத் ஓவன் என்ற ஆராய்ச்சியாளர். 

நாம் ஆன்லைனில் ப்ளிப்கார்ட் போன்ற தளங்களில் பொருட்கள் வாங்குவது போல, வெளி மார்க்கெட்டில் கிடைக்காத போதை மருந்துகள், ஆயுதங்களை விற்க பிரத்யேக தளங்கள் டார்க்வெப்பில் இயங்குகின்றன. இந்த தளங்களில் ஏதாவது ஒன்றை வாங்க விரும்பினால் 'Buy Now' பட்டனை க்ளிக் செய்ய வேண்டும். உடனே அந்த விற்பனையாளர் அவரின் வங்கிக் கணக்கு எண்ணை அனுப்புவார். அதில் அந்த பொருளுக்கான தொகையை பிட்காயின் எனப்படும் டிஜிட்டல் கரன்சி முறையில் செலுத்த வேண்டும். ( இன்றைய தேதியில் ஒரு பிட்காயினின் இந்திய மதிப்பு 42 ஆயிரம் ரூபாய். கரன்சியை பிட்காயினாக மாற்றித் தருவதற்கென்றே ஏராளமான நிறுவனங்கள் உலகளவில் செயல்படுகின்றன ). இந்த பிட்காயின்கள் Escrow எனப்படும் மூன்றாம் நபரின் அக்கவுன்ட்டில் முதலில் வரவு வைக்கப்படும். வாடிக்கையாளருக்கு பொருள் போய் சேர்ந்தவுடன் விற்றவரின் கணக்கிற்கு பிட்காயின் சென்று சேர்ந்துவிடும். இந்த பாதுகாப்பான நடைமுறை காரணமாக ஒரு நாளைக்கு மில்லியன் கணக்கில் பிட்காயின்கள் டார்க்வெப் சந்தைகளில் புழங்குகின்றன.

இதுபோக, இன்னும் ஏராளமான நெட்வொர்க்குகள் இந்த பரந்த பிரதேசத்தில் இயங்குகின்றன. ஹேக்கர்கள், தங்கள் சேவைகளை குறிப்பிட்ட தொகைக்கு விற்பார்கள். சர்வதேச கூலிப்படைகள், ஐ.எஸ் போன்ற தீவிரவாத அமைப்புகள் போன்றவையும் இங்கே இயங்குகின்றன. இதுபோக, Cicada 3301 போன்ற கோட்பிரேக்கர்களின் நெட்வொர்க்களும் இங்கே செயல்படுகின்றன. இங்கு நடைபெறும் வர்த்தகம் அனைத்துமே பிட்காயின்கள் கொண்டுதான். 

சாமான்யனுக்குத் தடா!

டார்க்வெப்பை ஏதோ Tor இன்ஸ்டால் செய்தவுடன், ஜஸ்ட் லைக் தட் அக்சஸ் செய்ய முடியாது. சாதாரணமாக எதையாவது தேடினால் லிங்க்களின் வழி அவற்றை கண்டுபிடிக்கலாம். ஆனால் டார்க்வெப் தளங்கள் Node-களை வைத்து செயல்படுகின்றன. எனவே சும்மா தேடினால் எதுவும் கிடைக்காது. இதற்கென பிரத்யேக டைரக்டரிகள் செயல்படுகின்றன. அவற்றை தேடிக் கண்டுபிடிப்பதும் கடினம்தான். இதுபோக, பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த தளங்கள் ஜாகை மாறிக்கொண்டே இருக்கும். ஒரு தடவை நீங்கள் சென்ற தளம் அடுத்த தடவை காணாமல் போயிருக்கும். அதன் புது நோடை தேடி அலைய வேண்டும். எஃப்.பி.ஐ போன்ற முன்னணி துப்பறியும் நிறுவனங்கள் முடிந்தவரை போர்னோக்ராபி, போதை மருந்து வியாபாரம் போன்றவற்றை தடை செய்யப் போராடுகின்றன. அவர்களின் கையில் மாட்டினால் களிதான். மாட்டமாட்டோம் என அசட்டையாக இருந்த 'சில்க் ரோட்' என்ற பில்லியன் டாலர் நெட்வொர்க்கை 2013-ல் கண்டுபிடித்து, விலங்கு மாட்டியது எஃப்.பி.ஐ. போர்னோக்ராபியை ப்ரவுஸ் செய்தால் நீங்கள் பிளாக்லிஸ்ட் செய்யப்படும் வாய்ப்புகளும் இருக்கின்றன. எனவே சாமான்யர்கள் விலகி இருப்பதே நல்லது.


'டார்க்வெப்பில் யாரையும் நம்பக்கூடாது. வெப் கேமராவை டேப்பால் கவர் செய்துவிடவேண்டும். அங்கிருக்கும் எந்த ஃபைலையும் டவுன்லோட் செய்துவிடக்கூடாது. அதன் உள்ளே இருக்கும் மால்வேர்கள் உங்களின் டிஜிட்டல் தரவுகளை திருடிவிடலாம். கடைசியாக, அங்கிருக்கும் ஃபோரம்களில் யாரையும் தப்பித் தவறி கூட கிண்டல் செய்துவிடக்கூடாது. அவர்கள் கடுப்பில் உங்கள் சிஸ்டமை ஹேக் செய்து, அத்தனை பெர்சனல் சங்கதிகளையும் முடக்கிவிடலாம். எவ்வளவுக்கு எவ்வளவு கவர்ச்சியாக இருக்கிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு ஆபத்தும் இருக்கிறது. ஃபேஸ்புக், ட்விட்டரைவிட டார்க்வெப் நம்மை பயங்கரமாக அடிக்ட் ஆக்கிவிடும். பின் அதிலிருந்து மீள்வது சிரமம். எனவே தேவையில்லாமல் அந்தப்பக்கம் காற்று வாங்கக் கூட போகாதீர்கள்' என எச்சரிக்கிறார் டார்க்வெப்-பை பயன்படுத்தி சலித்துப் போன நண்பர் ஒருவர்.

உண்மைதான். த்ரிலுக்காக அங்கே செல்லத் தொடங்கி வாழ்க்கையைத் தொலைத்தவர்கள் ஏராளம். இவற்றை எல்லாம் தாண்டி டார்க்வெப் மூலம் நடக்கும் நல்ல விஷயங்களுக்காகவே உலகம் முழுவதும் அதற்கு ஆதரவு அலை வீசுகிறது. சுத்தியலை, ஆணி அறையவும் பயன்படுத்தலாம், ஆளைக் காலி செய்யவும் பயன்படுத்தலாம். டார்க்வெப்பும் சுத்தியல் மாதிரிதான். நாம் பயன்படுத்துவதை பொறுத்து நமக்கு அது எதிர்வினையாற்றும்.

0 coment�rios:

தமிழ் திரையுலகம் மட்டுமின்றி பல மொழிகளில் தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தை கொண்டிருப்பவர் பிரபல பாடகி ஜானகி. கடந்த 2014-ஆம் ஆண்டு தனுஷ் ந...

பிரபல பாடகி ஜானகிக்கு என்ன ஆச்சு? அதிர்ச்சியை கிளப்பிய செய்திக்கு வெளியான உண்மை தகவல்

தமிழ் திரையுலகம் மட்டுமின்றி பல மொழிகளில் தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தை கொண்டிருப்பவர் பிரபல பாடகி ஜானகி.

கடந்த 2014-ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான வேலையில்லா பட்டதாரி படத்தில் இவர் பாடியிருந்த வரி பட்டி தொட்டி எங்கும் பரவியது.

    The News Being Spread About #Veteran Playback Singer #SJanaki Amma Is Untrue!

    Kindly Stop Spreading Rumours About Her Health!
    She's doing well & Is Currently In #Hyderabad 🙏👍 pic.twitter.com/hB8EaKCBQS
    — RIAZ K AHMED (@RIAZtheboss) June 25, 2018

அதன் பின் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அடிக்கடி காணப்பட்ட இவர் சமீபகாலமாக எங்கும் காணப்படாததால் இவர் உடல் நலம் குறித்து பல்வேறு வதந்திகள் வந்தன.

இது ரசிகர்கள் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் நடிகர் ரஜினி மற்றும் விஜயின் பி.ஆர். ஓவான ரியாஸ் கே அகமத் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், தயவு செய்து ஜானகி அம்மா குறித்து எந்த வதந்திகளையும் பரப்ப வேண்டாம் எனவும், அவர் ஹைதராபாத்தில் நன்றாக இருக்கிறார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

0 coment�rios:

பிரபல ரிவியில் நடக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி பிரம்மாண்டமாக தொடங்கி மக்களிடையே அதிகமாக சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இந்நிகழ்ச்சியில் கலந்து க...

பிக்பாஸ் போட்டியாளர்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?... ஷாக் ஆகிடாதீங்க

பிரபல ரிவியில் நடக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி பிரம்மாண்டமாக தொடங்கி மக்களிடையே அதிகமாக சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள போட்டியாளர்களின் சம்பளம் விபரம் தற்போது வெளியாகியுள்ளது.
ரூ.2.5 முதல் 3 லட்சம்

    மும்தாஜ்
    பொன்னம்பலம்
    யாஷிகா
    ஜனனி ஐயர்

ரூ. 2 லட்சம்

    பாலாஜி
    டேனியல்
    மமதி சாரி
    மஹத்
    ரித்விகா
    சென்ட்ராயன்
    அனந்த் வைத்தியநாதன்

ரூ. 1 லட்சம்

    நித்யா பாலாஜி
    சாரிக் ஹாசன்
    ஐஸ்வர்யா தத்தா
    NSK ரம்யா
    RJ வைஷ்ணவி

0 coment�rios:

கமல்ஹாசன் பிக்பாஸ் இரண்டாவது சீசனை தற்போது நடத்தி வருகின்றார். இந்த நிகழ்ச்சி மெல்ல ரசிகர்களிடம் சூடுப்பிடிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில...

பிக்பாஸ் வீட்டிலிருந்து கமல்ஹாசன் வெளியேறுவாரா? அதிர்ச்சி தகவல்

கமல்ஹாசன் பிக்பாஸ் இரண்டாவது சீசனை தற்போது நடத்தி வருகின்றார். இந்த நிகழ்ச்சி மெல்ல ரசிகர்களிடம் சூடுப்பிடிக்க தொடங்கியுள்ளது.

இந்நிலையில் பிக்பாஸ் செட்டில் பெரும்பாலும் வட இந்தியர்களை தான் பயன்படுத்தி வருகின்றனர், பெப்சி ஊழியர்கள் இல்லை என்று பெரும் சர்ச்சை நிலவி வருகின்றது.

இதுக்குறித்து இயக்குனர் ஆர்.கே.செல்வமணி பேசுகையில், ‘பெப்சி ஊழியர்கள் நாங்கள் சொன்ன அளவிற்கு அனுமதிக்கவில்லை என்றால், தற்போது வேலைப்பார்த்து வரும் (10 சதவீதம்) 41 பேரும் வெளியேற வேண்டும், நான் கமலையும் சேர்த்து தான் சொல்கின்றேன்’ என அதிரடியாக பேசினார்.

மேலும், கடைசி பிக்பாஸில் இப்படி ஒரு பிரச்சனை வந்த போது கூட கமல் தான் பேசி சுமூகமாக முடித்து வைத்தாராம்.

0 coment�rios:

அரசியலுக்கு யார் எப்போது வருகிறார்கள் என்பது தெரியவில்லை. திடீர் திடீர் என பலரும் நான் அரசியலுக்கு வருகிறேன் என அதிரடியாக கூறுகிறார்கள். ...

ரஜினி, கமல்ஹாசனை தொடர்ந்து அரசியலுக்கு வரும் பிரபல நடிகர்- பரபரப்பு செய்தி

அரசியலுக்கு யார் எப்போது வருகிறார்கள் என்பது தெரியவில்லை. திடீர் திடீர் என பலரும் நான் அரசியலுக்கு வருகிறேன் என அதிரடியாக கூறுகிறார்கள்.

அப்படி ரஜினி, கமல் அரசியல் வருவது குறித்து எடுத்த முடிவு அவரது ரசிகர்களுக்கு கொண்டாட்டத்தை கொடுத்தது. இந்த நேரத்தில் நடிகர் பார்த்திபன் தானும் அரசியல் வர இருப்பதாக பேசியுள்ளார்.

சென்னை பெசன்ட் நகர் எலியேட்ஸ் கடற்கரையில் பிளாஸ்டிக் இல்லா கடற்கரையை உருவாக்கி கடல் வளத்தை காப்போம் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மீனவர்களுக்கான படகுப்போட்டி நடத்தப்பட்டது.

அதில் கலந்துகொண்ட பார்த்திபன் வெற்றியாளர்களுக்கு பரிசு கொடுத்த பின் பேசியபோது, அரசியலுக்கு வர வேண்டும் என்ற எண்ணம் இருப்பதாகவும், நிச்சயமாக அரசியலுக்கு வருவேன் என்றார்.

0 coment�rios:

மாதவன், விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த வருடம் திரைக்கு வந்த படம் விக்ரம் வேதா. இப்படம் செம்ம ஹிட் அடித்தது. விஜய் சேதுபதி, மாதவன் இவர்கள் ...

மீண்டும் விக்ரம் வேதா கூட்டணி, ரசிகர்கள் உற்சாகம்

மாதவன், விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த வருடம் திரைக்கு வந்த படம் விக்ரம் வேதா. இப்படம் செம்ம ஹிட் அடித்தது.

விஜய் சேதுபதி, மாதவன் இவர்கள் இருவர் திரைப்பயணத்தில் அதிகம் வசூல் செய்த படம் விக்ரம் வேதா தான்.

இந்நிலையில் மாதவன் அடுத்து நடிக்கவிருக்கும் படத்தில் இப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடித்த ஷரதா ஸ்ரீநாத்தே நடிக்கவுள்ளதாக கூறப்படுகின்றது.

விக்ரம் வேதாவில் இவர்கள் கெமிஸ்ட்ரி ரசிகர்களுக்கு பிடித்து போனதால், அடுத்தப்படத்திலும் இவர்களே நடிக்க வைக்க முடிவு செய்துள்ளார்களாம்.

0 coment�rios:

காலா படம் பல சர்ச்சைகளை கடந்து தான் வெளிவந்துள்ளது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பில் இருந்தது. ஆனால், படம் ரிலிஸாவதற்கு முன் ர...

காலா இத்தனை கோடி லாபமா? இது தான் உண்மை நிலவரம்

காலா படம் பல சர்ச்சைகளை கடந்து தான் வெளிவந்துள்ளது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பில் இருந்தது.

ஆனால், படம் ரிலிஸாவதற்கு முன் ரஜினி பேசிய பேச்சு ஒன்று அனைவரிடத்திலும் செம்ம கோபத்தை ஏற்படுத்தியது.

அதை தொடர்ந்து இப்படத்திற்கு பெரிய எதிர்ப்பு உருவாகியது, அப்படியிருந்தும் காலா படத்தின் மூலம் தனுஷிற்கு ரூ 60 கோடி வரை லாபம் கிடைத்துள்ளதாம்.

அதுமட்டுமின்றி இப்படம் எவ்வளவு குறைவாக வசூல் செய்தாலும், எங்களுக்கு ஓரளவிற்கு லாபம் கிடைத்துவிடும், தனுஷ் அப்படித்தான் பிஸினஸ் செய்துள்ளார் என முன்னணி திரையரங்க உரிமையாளர் ஒருவரும் தெரிவித்துள்ளார்.

0 coment�rios:

தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியின் அடுத்த சீசன் தற்போது மிகவும் எதிர்பார்ப்பில் இருக்கிறது. யாரெல்லாம் வரபோகிறார்கள் என்ற ஆர்வம் ரசிகர்கள் மத்திய...

தமிழ் பிக்பாஸ் சீசன் 2 ல் இளைஞர்கள் பலருக்கும் பிடித்த கவர்ச்சி நடிகை! உறுதியான தகவல்

தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியின் அடுத்த சீசன் தற்போது மிகவும் எதிர்பார்ப்பில் இருக்கிறது. யாரெல்லாம் வரபோகிறார்கள் என்ற ஆர்வம் ரசிகர்கள் மத்தியில் ஆர்வம் இருக்கிறது.

இதில் பலரின் பெயர்கள் கொண்ட பட்டியல் அண்மையில் சமூக வலைதளங்களை கலக்கி எடுத்தது. ஆனால் ரகசியமாக இருக்கும் இந்த தகவல் விரைவில் தெரிந்துவிடும்.

இதில் நடிகை மும்தாஜின் பெயரும் இருந்தது. இந்நிலையில் அவர் கலந்துகொள்ள இருப்பது அவரின் நட்பு வட்டாரங்கள் மூலம் உறுதியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மும்தாஜ்க்கு ஏற்கனவே முதல் சீசனுக்கு அழைப்பு வந்ததாம். ஆனால் அவர் தான் அதை தவர்த்துவிட்டாராம். ஆனாலும் அவர் அந்த நிகழ்ச்சியை தொடர்ந்து பார்த்துவந்தாராம்.

ஓவியா, பரணிக்கு கிடைத்த புகழால் இந்த முறை தான் கலந்துகொள்ள சம்மதித்து விட்டாராம்.

0 coment�rios:

கடந்த ஜுன் 3 ம் தேதி தமிழ் சினிமாவில் பிரம்மாண்டமாக நடந்து ஒரு விருதுவிழா விஜய் அவார்ட்ஸ். இதில் நயன்தாரா, தனுஷ், விஜய் சேதுபதி என பல முன்ன...

விருது விழாவில் நடிகை நயன்தாராவிடம் ஏடாகூடமாக கேள்வி கேட்ட மாகாபா ஆனந்த்- வெளியான செய்தி

கடந்த ஜுன் 3 ம் தேதி தமிழ் சினிமாவில் பிரம்மாண்டமாக நடந்து ஒரு விருதுவிழா விஜய் அவார்ட்ஸ். இதில் நயன்தாரா, தனுஷ், விஜய் சேதுபதி என பல முன்னணி பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

விருது வாங்கிய நயன்தாராவிடம் தொகுப்பாளர் மாகாபா ஆனந்த் ஏடாகூடமாக கேள்வி கேட்கும் ஒரு வீடியோ வெளியாகியுள்ளது. அவர் நயன்தாராவிடம், மீசை வைத்த பையன் பிடிக்குமா, இல்லை தாடி வைத்த பையன் பிடிக்குமா. கோர்ட் ஷுட் அணிபவர் பிடிக்குமா இல்லை வேஷ்டி சட்டை அணிபவர் பிடிக்குமா என்று கேட்கிறார்.

அதற்கு நயன்தாரா சிரித்தபடியே அந்த வீடியோவில் நிற்கிறார். இந்த கேள்விகளுக்கு நயன்தாரா என்ன பதில் கூறியிருப்பார் என்பதை பொறுத்திருந்து வரும் ஞாயிற்றுக்கிழமை பார்ப்போம்.

1 coment�rios:

காலா தமிழ் சினிமா மட்டுமின்றி இந்திய சினிமாவே எதிர்ப்பார்த்து காத்திருந்த படம். ஒரு யானைக்கு சாப்பாடு வைப்பது என்பது கொஞ்சம் கடினம் தான், அ...

காலா திரை விமர்சனம் - கபாலியில் விட்டதை ரஞ்சித் காலாவில் பிடித்து சூப்பர் ஸ்டாரை கால் மேல் கால் போட வைக்கின்றார்

காலா தமிழ் சினிமா மட்டுமின்றி இந்திய சினிமாவே எதிர்ப்பார்த்து காத்திருந்த படம். ஒரு யானைக்கு சாப்பாடு வைப்பது என்பது கொஞ்சம் கடினம் தான், அந்த வகையில் கபாலியில் ஒரு இயக்குனராக ரஞ்சித் ரஜினி என்ற யானைக்கு சாப்பாடு வைத்து திருப்திப்படுத்தினாலும், ரசிகர்களுக்கு கொஞ்சம் ஏமாற்றமே. அந்த ஏமாற்றத்தை காலாவில் போக்கினாரா? பார்ப்போம்.

கதைக்களம்

நெல்லையில் இருந்து மும்பை தாராவி சென்று அங்கு தன் கண்ட் ரோலில் தாராவியை வைத்து மக்களுக்கு நல்லது செய்து வருகின்றார் காலா சேட்டு.

அப்படியிருக்க தாராவியையே சுத்தமாக்குகிறேன் என்று நானே பட்னேக்கர் உள்ளே வந்து தாராவி மக்களை விரட்டியடிக்க பார்க்கின்றார்.

அதற்காக ரஜினிக்கு எதிராகவும் அவரை நம்பியிருக்கும் மக்களுக்கு எதிராகவும் பல சதி திட்டங்களை நானா பட்னேக்கர் தீட்ட அதை காலா எப்படி முறியடிக்கின்றார் என்பதே மீதிக்கதை.

படத்தை பற்றிய அலசல்

சூப்பர்ஸ்டார் இஸ் பேக் என்று தான் சொல்ல வேண்டும், 67 வயதிலும் அப்படி ஒரு சுறுசுறுப்பு. மனைவியிடம் குறும்பு, ரொமான்ஸ், முன்னாள் காதலியிடம் ஏக்கம், கியாரே செட்டிங்கா என்று அதிர விட்டு மழையில் அடுத்த காட்சியில் இறங்கி அடிப்பது என என்றும் ஒரே சூப்பர்ஸ்டார் என நிரூபித்துவிட்டார்.

ரஜினி படம் என்றால் அவரை சுற்றி மட்டும் கதை இல்லாமல் தாராவி அதை சுற்றி இருக்கும் மக்கள், காலாவின் குடும்பம் என அனைவருக்குமே படத்தில்.முக்கிய பங்கு உள்ளது.

படத்தின் அடிப்படையே நிலம் தான், அதை சுற்றி கதை நகர்கின்றது. அந்த விதத்தில் ரஞ்சித் நிலத்தின் முக்கியதுவத்தை வசனங்கள் மூலம் மக்கள் மனதில் பதிய வைத்துள்ளார்.

ஒரு சிறு குழந்தை காலில் விழ வர, யார் காலிலும் விழக்கூடாது என ரஜினி அட்வைஸ் சொல்வது. காலில் விழுவது சமத்துவம் இல்லை, கைக்கொடுத்து வரவேற்க வேண்டும், அதுதான் ஈகுவாலிட்டி என பாடமே எடுத்துள்ளார்.

அதிலும் முதன் முறையாக இராவணன் ஜெயிக்கிறான், அதை கதை சொல்லி கிளைமேக்ஸாக கொண்டு போன விதம் சூப்பர்.

அதேநேரத்தில் காலா தாராவியையே ஆள்கின்றார் என்பது கார்ட்டூனாக கதை சொல்கின்றனர், அதில் கொஞ்சம் அழுத்தம் இருந்திருக்கலாம். மேலும் ஆளும் கட்சியை ரஜினியை வைத்தே ரஞ்சித் ஆட்டிவைத்தது சாமர்த்தியம் என்றாலும், ரஜினி போராடுவோம் என்று சொல்லும் போது கொஞ்சம் சிரிப்பு வருவதை தடுக்க முடியவில்லை.

ரஜினி சொன்னது போல் ரகுவரனுக்கு பிறகு சரியான வில்லனாக டப் கொடுத்துள்ளார் நானா பட்னேக்கர்.

படத்தின் மிகப்பெரும் பலம் ஒளிப்பதிவு, இசை தான். அதிலும் பின்னணியில் கபாலியில் விட்டதை சந்தோஷ் பிடித்துவிட்டார்.

க்ளாப்ஸ்

ரஞ்சித்தின் திரைக்கதை, நடிகர், நடிகைகளின் பங்களிப்பு, அதிலும் ஈஸ்வரி எல்லாம் சிக்ஸர் அடிக்கின்றார்.

படத்தின் வசனம் மற்றும் டெக்னிக்கல் விஷயங்கள்.

அதிலும் சவுண்ட் இன்ஜினியரிங் அத்தனை யதார்த்தம்.

இடைவேளை மற்றும் கிளைமேக்ஸ்.

நானா பட்னேக்கர்-ரஜினி காட்சி

பல்ப்ஸ்

காலா ஹுமா குரேஷி காதல் கொஞ்சம் கபாலியை நியாபக்கப்படுத்துகின்றது.

இரண்டாம் பாதி முழுவதுமே வன்முறை தான் எங்கும் எதிலும், ஆனால் கதைக்கு தேவையே.

மொத்தத்தில் கபாலியில் விட்டதை ரஞ்சித் காலாவில் பிடித்து சூப்பர் ஸ்டாரை கால் மேல் கால் போட வைக்கின்றார் ஸ்டைலாக கெத்தாக.

0 coment�rios:

மாதந்தோறும் பல லட்சம் ரூபாய் வருமானத்தை வாரி வழங்குகிறது தஞ்சை பெரிய கோயில். ஆனால், இது முறையான பராமரிப்பும் பாதுகாப்பும் இன்றி பல வகைகளிலு...

`ஆபத்துகள் அதிகம்; உடனடியாகத் தடுக்கவும்’ - பெரிய கோயிலுக்குள் அதிர்ச்சியூட்டும் சர்ச்சைகள் கு. ராமகிருஷ்ணன்

மாதந்தோறும் பல லட்சம் ரூபாய் வருமானத்தை வாரி வழங்குகிறது தஞ்சை பெரிய கோயில். ஆனால், இது முறையான பராமரிப்பும் பாதுகாப்பும் இன்றி பல வகைகளிலும் சீரழிந்துகொண்டிருப்பதாகப் பல தரப்பிலிருந்தும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இதுகுறித்து நம்மிடம் பேசிய தஞ்சை பெரிய கோயில் உரிமை மீட்புக்குழுவைச் சேர்ந்த பழ.ராஜேந்திரன், ‘உலகப் புகழ்பெற்ற கோயிலாகத் தஞ்சை பெரிய கோயில் போற்றப்படுகிறது. ஆனால், இக்கோயிலின் நிர்வாகம், இதன் பாதுகாப்பிலும் பராமரிப்பிலும் கொஞ்சம்கூட அக்கறை செலுத்துவதில்லை. இக்கோயிலில் உள்ள இடிதாங்கி பழுதாகிக் கிடக்கிறது. இதனால்தான் லேசான இடியைக்கூட எதிர்கொள்ள முடியாமல், இக்கோயிலின் இரண்டாவது நுழைவாயிலான கேரளாந்தகன் நுழைவாயில் கோபுரம் சேதமடைந்தது. இடிதாங்கி நல்ல நிலையில் இருக்கிறதா என அவ்வப்போது சோதனை செய்திருக்க வேண்டும். ஆங்காங்கே இன்னும் கூடுதலான எண்ணிக்கையில் இடிதாங்கி வைக்க முடியுமா என ஆய்வு செய்ய வேண்டும். சாதாரண இடிக்கே இந்த சேதம் ஏற்பட்டுள்ளதென்றால் பெரிய அளவிலான இடி ஏற்பட்டால் கோயில் கருவறையின் பிரதான கோபுரத்தின் எதிர்காலம் குறித்து கவலை ஏற்படுகிறது.

கோயிலுக்குள் உள்ள கண்காணிப்புக் கேமராக்களும் ஒழுங்காகச் செயல்படவில்லை. ஏற்கெனவே இங்கிருந்து 60-க்கும் மேற்பட்ட சிலைகள் திருடப்பட்டுள்ளன. மீண்டும் திருட்டு சம்பவங்கள் நடக்க வாய்ப்புள்ளது. சமூக விரோதிகளால் கோயிலுக்கு வேறு ஆபத்துகள் நிகழக்கூடும். கோயிலின் அனைத்துப் பகுதிகளிலும் பரவலாகக் கண்காணிப்புக் கேமராக்கள் வைக்க வேண்டும். தற்போது இக்கோயில் தஞ்சை அரண்மனை தேவஸ்தான கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ்தான் அரண்மனை தேவஸ்தானம் உள்ளது. பெரிய கோயில் உண்டியலில் ஒவ்வொரு மாதமும் 10 லட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் வருகிறது. இதுமட்டுமல்லாமல் இக்கோயிலுக்குச் சொந்தமான கடைகள், விவசாய நிலங்கள் மூலமாகப் பல லட்சம் ரூபாய் வருவாய் கிடைக்கிறது. ஆனால், இவற்றில் ஒரு சிறு பகுதிகூட, கோயிலின் பராமரிப்புக்கோ பாதுகாப்புக்கோ செலவிடப்படுவதில்லை. ஊழல் முறைகேடுகள் மலிந்துள்ளன. இங்கிருந்த யானைக்கு ஒழுங்காக உணவு கொடுக்காமல் பட்டினிப் போட்டு பொய் கணக்கு எழுதப்பட்டதாக இங்கு பணியாற்றும் ஊழியர்கள் சொல்கிறார்கள். அந்த யானை உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்தே போய்விட்டது” என்றார்.

தஞ்சை தமிழ்ப் பல்கலைகழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் தென்னன் மெய்ம்மன், ``கருவறையின் வெளிப்புறம் உள்ள தட்டு ஓடுகளைப் பல அடி ஆழத்துக்கு பெயர்த்து எடுத்து, புதிய தட்டு ஓடு பதிப்பதற்கான முயற்சிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இது மிகவும் ஆபத்தான செயல். இது கருவறை கோபுரத்தின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கிவிடும். இதன் எடை ஒன்றரை லட்சம் டன். கருங்கற்களால் இவை அடுக்கப்பட்டுள்ளன. கருவறை கோபுரத்தின் உறுதித்தன்மை என்பது, தரைத்தளத்தையும் சார்ந்துள்ளது. தரைத்தளத்துக்கு கீழே 350 அடி ஆழம் வரை மணல் மட்டுமே உள்ளது. இதன் மீது 6 அடி உயரத்துக்கு செங்கல் பொடி உள்ளது. இதற்கும் மேல் ஒன்றரை அடி உயரத்துக்கு சுண்ணாம்புக் கட்டு உள்ளது. இவை பல அடி ஆழத்துக்கு பெயர்த்து எடுக்கப்பட்டு தினமும் நூற்றுக்கணக்கான லாரிகளில் வெளியற்றப்படுகின்றன.

புதிதாகப் போடப்படும் தட்டு ஓடுகள் பாதுகாப்பானவையாக இருக்காது. மழைநீர் கசிந்து தரையின் அடியில் உள்ள மணலை சேறாக்கிவிடும். இதனால் தரை தளம் உறுதித்தன்மையை இழந்துவிடும். கருவறை கோபுரத்தில் அசைவுகள் ஏற்படுவதற்கான ஆபத்துகள் அதிகம். ஏற்கெனவே உள்ள தட்டு ஓடுகள் பழுதானால், இதைப் பெயர்த்து எடுக்காமல், இதன் மீதுதான் புதிதாகத் தட்டு ஓடுகள் பதிக்க வேண்டும். பெரிய கோயிலின் பாதுகாப்பு நலன் கருதி தற்போது நடைபெற்று வரும் முறையற்ற பணிகளைத் தமிழக அரசு உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும். கோயில் நிர்வாகம்
10 ஆண்டுகளுக்கு முன்பு, இங்கு போர்வெல் அமைக்கும் முயற்சியில் இறங்கியது. தண்ணீர் எடுக்கப்பட்டால் சேறு கிளம்பி அடித்தளம் ஆட்டம் காணும். இதனால் கருவறை கோபுரத்துக்கு ஆபத்து ஏற்படும் என்பதால் நீதிமன்றம் மூலம் தடைவிதிக்கப்பட்டது. அந்தப் போர்வெல் இன்று வரையிலும் முழுமையாக மூடப்படவில்லை. இது ஏன் எனத் தெரியவில்லை. கோயில் நிர்வாகம் எப்போதுமே பொறுப்புடன் நடந்துகொண்டதில்லை. பெரியகோயிலின் மீது உண்மையான அக்கறை கொண்ட வல்லுநர்கள் அடங்கிய ஒரு குழுவை உருவாக்கி, அவர்களின் ஆலோசனையின்படிதான் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும்” என்றார்.

0 coment�rios:

நடிகர் தனுஷ் தற்போது தமிழ் சினிமாவை தாண்டி பாலிவுட், ஹாலிவுட் என உச்சக்கட்ட வளர்ச்சி அடைந்துள்ளார். அவருக்கு நேற்று நடந்த விஜய் விருது விழா...

2014ல் விஜய் பேசியதை அப்படியே இன்று மேடையில் சொன்ன தனுஷ்

நடிகர் தனுஷ் தற்போது தமிழ் சினிமாவை தாண்டி பாலிவுட், ஹாலிவுட் என உச்சக்கட்ட வளர்ச்சி அடைந்துள்ளார். அவருக்கு நேற்று நடந்த விஜய் விருது விழாவில் Best Entertainer விருது வழங்கப்பட்டது.

அது பற்றி பேசிய அவர் "ரசிகர்களின் ஆதரவால் சுமார் மூஞ்சியுடன் நான் இவ்வளவு பெரிய இடத்திற்கு வந்துள்ளேன். என்னை விட திறமையாக, அதிக அழகான நடிகர்கள் உள்ளார்கள்" என கூறினார்.

2014ல் நடந்த விஜய் விருது விழாவில் தலைவா படத்திற்காக விஜய் விருது வாங்க வந்திருந்தார். அடுத்த சூப்பர்ஸ்டார் யார் என ஒரு கலவரமே நடந்துகொண்டிருந்த நேரம் அது. அது பற்றி அவரிடம் கேட்டபோது "நான் எப்போதும் பழையதை மறக்கமாட்டேன். எனக்கு அடுத்த சூப்பர்ஸ்டார் பட்டம் மீது எப்போதும் ஆசையில்லை. என்னை விட திறமையான நடிகர்கள், அதிக அழகான நடிகர்கள் இங்கே உள்ளார்கள்" என பேசினார்.

விஜய் பேசியதை 4 வருடங்கள் கழித்து அப்படியே தனுஷ் இன்று விஜய் விருது விழாவில் பேசியுள்ளார்.

0 coment�rios:

விஜய் அவார்ட்ஸ் 10வது வருடத்தில் நேற்று காலடி எடுத்து வைத்தது. பலரும் இந்த விருது விழாவிற்கு நிறைய நட்சத்திரங்கள் வருவார்கள் என்று எதிர்ப்ப...

பேவரட் நடிகர் மட்டுமில்லை, விஜய் அவார்ட்ஸில் இந்த விருதும் கொடுக்கவில்லை, ரசிகர்கள் கோபம்

விஜய் அவார்ட்ஸ் 10வது வருடத்தில் நேற்று காலடி எடுத்து வைத்தது. பலரும் இந்த விருது விழாவிற்கு நிறைய நட்சத்திரங்கள் வருவார்கள் என்று எதிர்ப்பார்த்தனர்.

ஆனால், எதிர்ப்பார்த்தது போல் பெரிய நட்சத்திரங்கள் யாருமே வரவில்லை, அதிலும் விஜய்க்கு பேவரட் நடிகர் கொடுக்காதது ரசிகர்களை செம்ம கோபத்தில் ஆழ்த்தியது.

அதே நேரத்தில் சிறந்த ஸ்டண்ட் மாஸ்டர் விருதும் வழங்கப்படவே இல்லையாம், கடந்த வருடம் வெளிவந்த தீரன் பட சண்டைக்காட்சிகளை புகழாதவர்கள் யாருமில்லை.

அப்படியிருக்க ஸ்டண்ட் விருது கொடுக்காதது பலருக்கும் அதிர்ச்சி தான்.

0 coment�rios:

கமல்ஹாசன் தொகுத்து வழங்க இருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மீதான எதிர்பார்ப்பு கூடிவிட்டது. நாட்கள் நெருங்கவிட்டது. இரண்டாம் சீசனை நோக்கி நக...

பிரம்மாண்டமாய் ஆரம்பமாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி! அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ

கமல்ஹாசன் தொகுத்து வழங்க இருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மீதான எதிர்பார்ப்பு கூடிவிட்டது. நாட்கள் நெருங்கவிட்டது. இரண்டாம் சீசனை நோக்கி நகரும் இந்த நிகழ்ச்சிக்கு பெரும் ரசிகர்கள் இருக்கிறார்கள்.

முதல் சீசனுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. ஆரவ், ஓவியா, சினேகன், ஜூலி, காயத்திரி என பலரும் ஒரு விதத்தில் ரசிகர்களின் கவனத்தை பெற்றார்கள். சிலர் கடுமையான விமர்சனங்களுக்கும் ஆளானார்கள்.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் சீசன் 2 ன் டீசர் வெளியானது. அதனை தொடர்ந்து அண்மையில் புரமோவும் வெளியானது. நல்லவர் யார் கெட்டவர் யார் என கமலின் கேள்வி கணைகள் தொடங்கிவிட்டது.

ஜூன் இரண்டாம் வாரம் 11 ம் தேதி, 19 ம் தேதி இந்நிகழ்ச்சி வரும் என சொல்லப்பட்டு வந்தது. இந்நிலையில் நிகழ்ச்சி வரும் ஜூன் 17 ல் தான் என அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

0 coment�rios:

“கிள்ளிக் கொடுக்க மாட்டான்... இவன் அள்ளி அள்ளிக் கொடுப்பான்” என்பது தமிழக மாஸ் ஹீரோக்களுக்கான டயலாக்தான். ஆனால், அதை டெலிகாம் நிறுவனங்களில்...

சம்மருக்கு ஜியோ தரும் கூல் கூல் ஆஃபர்... மிஸ் பண்ணாதீங்க!

“கிள்ளிக் கொடுக்க மாட்டான்... இவன் அள்ளி அள்ளிக் கொடுப்பான்” என்பது தமிழக மாஸ் ஹீரோக்களுக்கான டயலாக்தான். ஆனால், அதை டெலிகாம் நிறுவனங்களில் ஜியோவுக்கும் சொல்லலாம்.  மாதம் ஒரு ஆஃபர்; வாரம் ஒரு டிஸ்கவுன்ட் எனத் தள்ளுபடித் தள்ளுவண்டி நடத்தும் ஜியோவின் அடுத்த ஆஃபரின் பெயர், “ஹாலிடே ஹங்காமா.”

இப்போதிருக்கும் பிளான் இதுதான். 84 நாள்களுக்குத் தினமும் 1.5ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் லோக்கல் மற்றும் எஸ்.டி.டி கால்கள் உண்டு. இந்த பிளானில், இப்போது 100 ரூபாய் தள்ளுபடிதருகிறது ஜியோ. அப்படியென்றால், 84 நாள்களுக்கு தடையின்றி மொபைல், கால், டேட்டா பயன்படுத்த வெறும் 299 ரூபாய் மட்டுமே. ஒரு நாளைக்குக் கணக்கிட்டால் ரூபாய் 3.55 மட்டுமே.

இந்த ஆஃபரை  My Jio app அல்லது  Phonepay மூலம் ரீசார்ஜ் செய்யும்போது கிடைக்கும். உடனடித் தள்ளுபடியாக 50 ரூபாயும், ரீசார்ஜ் செய்தபின் கேஷ்பேக்காக 50 ரூபாயும் கிடைக்கும்.

குறைந்த கால ஆஃபரான ஹாலிடே ஹங்காமா, ஜூன் 1 முதல் ஜூன் 15 வரை மட்டுமே என இப்போது சொல்லியிருக்கிறது ஜியோ. அதன்பின், இதே ஆஃபர் நீட்டிக்கப்படலாம் அல்லது இதேபோல வேறு ஒரு ஆஃபர் வரலாம் என்கிறது, ஜியோவின் வரலாறு. இருந்தாலும், ரிஸ்க் எடுக்காமல் இப்போதே இந்த ஆஃபரைப் பயன்படுத்திக்கொள்வது நல்லது.

0 coment�rios:

தொகுப்பாளர்களில் இப்போது பல ரசிகர்களின் பேராதரவோடு முன்னணியில் இருப்பவர் மாகாபா ஆனந்த். இவருக்கு சமீபத்தில் கூட பிரபல தொலைக்காட்சி சிறந்த த...

நிகழ்ச்சிகளில் எப்போதும் கண்ணாடி அணிவது ஏன்- மாகாபா ஆனந்த் சொல்லும் சுவாரஸ்ய விஷயம்

தொகுப்பாளர்களில் இப்போது பல ரசிகர்களின் பேராதரவோடு முன்னணியில் இருப்பவர் மாகாபா ஆனந்த். இவருக்கு சமீபத்தில் கூட பிரபல தொலைக்காட்சி சிறந்த தொகுப்பாளர் என்ற விருதினை கொடுத்திருந்தனர்.

இப்போது என்னவென்றால் மாகாபா ஆனந்த் ஏன் எப்போதும் கண்ணாடி அணிந்து நிகழ்ச்சி செய்கிறார் என்ற பெரிய கேள்வி எழும்பியது. அதற்கு மாகாபா பேட்டியில், ஒரு விஷயமும் கிடையாது. நிகழ்ச்சி செய்யும் போது வெளிச்சம் அதிகமாக இருந்தால் என் கண் சிறிது நேரத்தில் அடிக்க ஆரம்பித்துவிடும்.

அதை தவிர்க்கவே நான் கண்ணாடிகளை அணிகிறேன் மற்றபடி எதுவும் இல்லை என கூறியுள்ளார்.

0 coment�rios: