Home Top Ad

நம் வாழ்க்கையின் அங்கமாக மாறிவிட்ட செயலியான வாட்ஸ் அப் -பை உலகம் முழுக்க சுமார் 100 கோடி பேர் தினமும் பயன்படுத்தி வரும் சூழலில் இந்தியாவில்...

வாட்ஸ் அப் செயலியில் பேமென்ட்ஸ் வசதி தயார்!

நம் வாழ்க்கையின் அங்கமாக மாறிவிட்ட செயலியான வாட்ஸ் அப் -பை உலகம் முழுக்க சுமார் 100 கோடி பேர் தினமும் பயன்படுத்தி வரும் சூழலில் இந்தியாவில் யுபிஐ சார்ந்த டிஜிட்டல் பண பரிமாற்றங்களை வழங்கும் சேவைகளுக்கான போட்டியும் நாளுக்கு நாள் அதிகரித்து வகிறது .அதையொட்டி ஃபேஸ்புக் நிறுவனத்தின் வாட்ஸ்அப் செயலியில் பேமென்ட்ஸ் வசதி வரும் நாட்களில் வெளியிடப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்த செயலியில் பேமென்ட்ஸ் வசதி வழங்குவதற்கான பணிகளை செய்து முடிக்கப்பட்டு விட்ட நிலையில், வாட்ஸ்அப் நிறுவனம் ஐசிஐசிஐ வங்கி, ஹெச்டிஎஃப்சி வங்கி, ஆக்சிஸ் வங்கி மற்றும் பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்டவை சேவைகளை வழங்க காத்திருக்கின்றது. இதற்கான பணிகள் முறையான சிஸ்டம்கள் இல்லாததால் தாமதமாகி வருகிறது.அந்த வகையில் தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் முதற்கட்டமாக பாரத ஸ்டேட் வங்கியின் சேவையை மட்டும் சப்போர்ட் செய்யும் படி பேமென்ட்ஸ் வசதியை வழங்க ஃபேஸ்புக் முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து மூன்று நிறுவனங்களுடன் இணைந்து இந்த வசதி வழங்குவதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் கூறப்படுகிறது.

இத்தனைக்கும் 2018 பிப்ரவரி மாதம் முதல் பீட்டா செயலியில் சோதனை செய்யப்பட்டு வரும் நிலையில், வாட்ஸ்அப் பேமென்ட்ஸ் அம்சத்தில் ரிக்வஸ்ட் மனி (request money) ஆப்ஷன் இன்வைட் முறையில் வழங்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. வாட்ஸ்அப் பயனர் எண்ணிக்கையை வைத்து பார்க்கும் போது பேமென்ட்ஸ் அம்சம் பேடிஎம் மற்றும் கூகுள் டெஸ் உள்ளிட்டவற்றுக்கு பலத்த போட்டியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் தற்சமயம் வரை வாட்ஸ்அப் செயலியை சுமார் 20 கோடி பேர் பயன்படுத்தி வருகின்றனர். இது பேடிஎம் சேவையை பயன்படுத்துவோரை விட சுமார் 20 மடங்கு அதிகம் ஆகும். முன்னதாக அலிபாபவின் பேடிஎம் வாட்ஸ்அப் யுபிஐ பேமென்ட் தளம் முறையான பாதுகாப்பு கொண்டிருக்கவில்லை என குற்றஞ்சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது

0 coment�rios:

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் காலா படத்தை தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்தில் நடிக்கிறார். இளம் இயக்குனார் கார்த்திக் இறைவி, ஜிக...

எதிர்பார்ப்பிலிருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினியின் அடுத்த படத்தின் கதை இதுதானாம்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் காலா படத்தை தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்தில் நடிக்கிறார். இளம் இயக்குனார் கார்த்திக் இறைவி, ஜிகர்தண்டா ஆகிய படங்களை இயக்கியவர்.

ஏற்கனவே புதிய படத்தின் அதிகார்ப்பூர்வ தகவல்கள் வெளியாகிவிட்டது. விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார் என்ற தகவலும் உறுதியாகிவிட்டது. மேலும் சிம்ரன் இப்படத்தில் ஜோடியாக நடிக்கிறார் என சொல்லப்பட்டு வந்த நேரத்தில் அவர் இன்னொரு வில்லன் என சொல்லப்பட்டு வருகிறது.

இந்த புதிய படத்தின் ஷூட்டிங் டேராடூனில் ஜூன் 7 அல்லது 9 ம் தேதி முதல் தொடங்கவுள்ளதாம். இதற்காக படக்குழு அங்கு கூடியள்ளது. இப்படம் மதுரையை மையப்படுத்திய இரு நண்பர்களின் கதையாம். இதில் சூப்பர் ஸ்டாருக்கு இணையாக இன்னொரு நடிகர் நடிக்கவுள்ளாராம்.

அதோடு மதுரை சம்மந்தப்பட்ட காட்சிகளை டேராடூனிலேயே படமாக்கவுள்ளார்களாம். மீதமுள்ள நடிகர்கள், நடிகைகள் பட்டியல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

0 coment�rios:

புத்தன் இப்போது இருந்திருந்தால் போதி மரம் கூட விறகாகியிருக்கலாம்! காலம் அவனையும் ‘கரப்ட்’ ஆக்கியிருக்கும் என்பதுதான் நிஜம். அப்படின்னா நாட்...

பழிவாங்கும் விஷால்? பதறும் படவுலகம்!

புத்தன் இப்போது இருந்திருந்தால் போதி மரம் கூட விறகாகியிருக்கலாம்! காலம் அவனையும் ‘கரப்ட்’ ஆக்கியிருக்கும் என்பதுதான் நிஜம். அப்படின்னா நாட்ல நல்லவனே இல்லையா? என்று பொங்குகிற பொதுஜனம், பின்வரும் செய்தியை படித்தால் சூடம் கொளுத்தி சத்தியம் பண்ணும், “இல்ல… இல்லவே இல்ல” என்று!

பல நூறு வாக்குறுதிகளோடு தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட விஷால், அவற்றையெல்லாம் செய்து முடிக்க இன்னும் இரண்டாண்டு கால அவகாசம் கோரி வருவது தனிக்கதை. அதில் பாதியையாவது செய்து முடித்திருக்கிறாரா என்ற கேள்விக்கு பின்னால் ஓடிக் கொண்டிருக்கிறார்கள் சங்க உறுப்பினர்கள். சங்கத்திற்குள் நடக்கும் சண்டை சச்சரவுகள் ஒரு பக்கம் இருக்கட்டும். அதைவிட முக்கியமான பஞ்சாயத்து இது.

தன்னை எதிர்த்து ஆரம்பகாலத்திலிருந்து குரல் கொடுத்து வரும் தயாரிப்பாளர் சுரேஷ்காமாட்சியின் படத்திற்கு சங்கு ஊதுகிற வேலையை முடுக்கி விட்டிருக்கிறாராம் விஷால். சங்க உறுப்பினர்கள் கூடி கூடி விவாதிக்கும் விஷயம் ஆகியிருக்கிறது இது. இதே சுரேஷ் காமாட்சி இயக்கியிருக்கும் ‘மிக மிக அவசரம்’ என்ற படம் கோடம்பாக்கத்திலிருக்கும் அத்தனை நல்ல படைப்பாளிகளையும் ஆச்சர்யப்பட வைத்திருக்கிறது. படம் பார்த்த அத்தனை பேரும் இன்னொரு அருவி அறம் இப்படத்தை கொண்டாடி வருகிறார்கள்.

இப்படியொரு நல்ல படத்தை வாங்கி வெளியிட வேண்டும் என்கிற விருப்பமும் கூடவே எழும் அல்லவா? அப்படிதான் இப்படத்தை ஒரு தயாரிப்பு நிறுவனம் வாங்கி வெளியிட முன் வந்தது. முறையான ஒப்பந்தமும் போடப்பட்டது. அதற்கப்புறம் நடந்ததுதான் பெரும் அதிர்ச்சி. சில தினங்களுக்கு முன் சுரேஷ் காமாட்சிக்கும் தயாரிப்பாளர் சங்கத்திற்கும் ஒரு கடிதம் அனுப்பினார் அந்த தயாரிப்பாளர். ‘மிக மிக அவசரம் படத்தை வெளியிட முடியாமைக்கு வருந்துகிறேன்’ என்பதுதான் கடிதத்தின் சாரம்சம். தனிப்பட்ட முறையில் சுரேஷ் காமாட்சிக்கு போன் அடித்தவர், இந்த படத்தை வெளியிடக்கூடாதுன்னு விஷால் தரப்புல கேட்டுக்கிட்டாங்க. அதனால்தான் மறுக்க வேண்டியதாப் போச்சு என்று கூறியிருக்கிறார்.

இந்த படத்தை வாங்கி வெளியிட முன் வந்த மேலும் இருவரையும் விஷால் தரப்பு தடுத்து வருகிறதாம். நான் சங்கத்தின் பொறுப்புல இருக்கிற வரைக்கும் மிக மிக அவசரம் வருதா பார்த்துடலாம் என்று விஷால் கூறி வருவதாகவும் சொல்கிறார்கள்.

ஒரு நல்ல படத்தை தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்காக தடுப்பது தமிழ்சினிமாவுக்கு செய்கிற துரோகம். அதை விஷால் தன் மனமறிந்து செய்திருக்க மாட்டார் என்று இந்த நிமிஷம் வரைக்கும் நம்புகிறது கோடம்பாக்கம்.

0 coment�rios:

உலகில் உள்ள ஒவ்வொரு நாடுகளும் உணவு உடை கலாச்சாரம் பழக்கவழக்கம் என பல வேறுபாடுகளை கொண்டிருக்கின்றன. ஒரு நாட்டில் சரி என கருதப்படுவது, இன்னொர...

இங்கே இதை பரிசளித்தால் தப்பாம் உங்களுக்கு தெரியுமா? வெளிநாடுகளில் நிலவும் சில விநோத நம்பிக்கைகள்!

உலகில் உள்ள ஒவ்வொரு நாடுகளும் உணவு உடை கலாச்சாரம் பழக்கவழக்கம் என பல வேறுபாடுகளை கொண்டிருக்கின்றன. ஒரு நாட்டில் சரி என கருதப்படுவது, இன்னொரு நாட்டில் தண்டனைக்குரிய குற்றமாக கருதப்படும். இது மாதிரியான விஷயங்கள் கொஞ்சம் தெரிந்திருந்தால் நமக்கு உபயோகப்படும் தானே.

ஃப்ரான்ஸ்

ஃப்ரான்ஸ் நாட்டில் யாரிடமும் அவர்களிடம் எவ்வளவு பணம் இருக்கிறது? என்று மட்டும் கேட்டுவிடாதீர்கள். அது மரியாதை இல்லாத செயலாக அங்கு கருதப்படுகிறது.

உக்ரைன்

உக்ரைன் நாட்டில் உங்களுக்கு காதலி இருந்தால், அவருக்கு பூங்கொத்து கொடுக்கும் போது கொஞ்சம் கவனமாக இருங்கள். அங்கு இரட்டை படை எண்ணிக்கையில் பூக்கள் கொடுப்பது கல்லறையில் வைப்பதற்காக. இது தெரியாமல் நீங்கள் இரட்டைப்படை எண்ணில் பூங்கொத்து கொடுத்து, கடைசியில் அது உங்களுக்கே திரும்பிவிடபோகிறது ஜாக்கிரதை.

ஜப்பான்

உழைப்பிற்கு முக்கியத்துவம் தரும் ஜப்பான் நாட்டில், உணவகங்களில் வெயிட்டருக்கு டிப்ஸ் தருவது அவரின் உழைப்பை அவமானப்படுத்துவதாக கருதப்படுகிறது எனவே ஜப்பானில் சாப்பிட்டுவிட்டு டிப்ஸ் கொடுக்காதீர்கள்.

அமெரிக்கா

அமெரிக்காவில் சாப்பிட்ட பிறகு டிப்ஸ் வைக்காமல் சென்றால் அது மிகப்பெரிய அவமதிப்பாக கருதப்படுகிறது. அங்கு வெயிட்டரின் உபசரிப்பிற்கு ஏற்ப டிப்ஸ் வழங்கப்படும். நீங்கள் டிப்ஸ் தரவில்லை என்றால், அந்த வெயிட்டரின் உபசரிப்பு உங்களுக்கு பிடிக்கவில்லை என்று அர்த்தமாகிவிடும்

ஜெர்மனி

ஜெர்மனியில் யாருக்கும் பிறந்தநாள் வரும் முன்னதாக வாழ்த்துக்கள் கூறாதீர்கள். அவ்வாறு கூறுவது அபசகுணமாக கருதப்படுகிறது. ஒருவேளை அப்படி யாராவது வாழ்த்து கூறினால், பிறந்த நாள் வரும் வரை அந்த நபர் உயிருடன் இருக்க மாட்டார், என்ற மூட நம்பிக்கை அங்கு நிலவுகிறது.

இங்கிலாந்து

இங்கிலாந்தில் யாரிடமாவது போய் நம்மவர்களிடம் விசாரிப்பது போல எவ்வளவு சம்பளம்? என கேட்காதீர்கள். அப்படி விசாரித்தால் நீங்கள் கலாச்சாரமில்லாதவராக கருதப்படுவீர்கள்.

சீனா

சீனாவில் உங்களுக்கு நண்பர்கள் இருந்தால் அவர்களுக்கு குடையோ, கடிகாரமோ பரிசளிக்காதீர்கள். அங்கு கெட்ட சகுனத்தை கொண்டுவரும் பொருட்களாக அவை கருதப்படுகின்றன.

0 coment�rios:

காமெடியில் தனிக் காட்டு ராஜாவாக வலம் வந்து சிறுவர்களையும் பெரியவர்களையும் சிரிக்க வைத்த வடிவேலு வுக்கு புதிய சிக்கல் வந்துள்ளது. இவர் நடித்...

வடிவேலுவின் ‘இம்சைக்கு’ ஒரு வாரம் கெடு!

காமெடியில் தனிக் காட்டு ராஜாவாக வலம் வந்து சிறுவர்களையும் பெரியவர்களையும் சிரிக்க வைத்த வடிவேலு வுக்கு புதிய சிக்கல் வந்துள்ளது. இவர் நடித்து 2006-ல் வெளிவந்த இம்சை அரசன் 23-ம் புலிகேசி படம் நல்ல வசூல் பார்த்ததால் அதன் இரண்டாம் பாகத்தை ‘இம்சை அரசன் 24-ம் புலிகேசி’ என்ற பெயரில் இயக்குனர் ஷங்கர் தயாரிக்க முன்வந்தார்.

இதற்காக வடிவேலுக்கு குறிப்பிட்ட தொகையை சம்பள முன்பணமாக கொடுத்து ஒப்பந்தம் செய்தனர். இந்த படத்தையும் முதல் பாகத்தை இயக்கிய சிம்புதேவனே டைரக்டு செய்ய முடிவானது. சென்னையில் பல கோடி செலவில் அரண்மனை அரங்குகள் அமைத்து படப்பிடிப்பையும் தொடங்கினர். சில நாட்கள் அதில் நடித்த வடிவேலு தொடர்ந்து நடிக்க முடியாது என்று விலகி விட்டார்.

இதனால் படப்பிடிப்பு நின்று போனது. அரங்குகளையும் பிரித்து விட்டனர். இந்த பிரச்சினை தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு போனது. வடிவேலுவிடம் பேசி படப்பிடிப்புக்கு அனுப்பி வைக்கும்படி ஷங்கர் மனு அளித்து இருந்தார். நடிகர் சங்கம் மூலம் வடிவேலுக்கு நோட்டீசு அனுப்பி விளக்கம் கேட்கபட்டது. படத்தில் நடிக்கும்படியும் வற்புறுத்தப்பட்டது.

படப்பிடிப்பை தாமதமாக தொடங்கி தனக்கு பொருளாதார நஷ்டத்தை ஏற்படுத்தியதால் அந்த படத்தில் நடிக்க முடியாது என்று பிடிவாதமாக மறுத்தார் வடிவேல். தொடர்ந்து பேசியும் பிரச்சினைக்கு தீர்வு வரவில்லை. படத்துக்கு செலவழித்த ரூ.9 கோடியை வடிவேலு தனக்கு நஷ்ட ஈடாக அளிக்க வேண்டும் என்று படக்குழு சார்பில் இன்னொரு புகார் மனு அளிக்கப்பட்டது.

இதுகுறித்து தயாரிப்பாளர்கள் சங்க கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டு வடிவேலு இம்சை அரசன் 24-ம் புலிகேசி படத்தில் நடிக்க வேண்டும் என்று கெடு விதித்து ஒரு வாரம் அவகாசம் வழங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதற்கு மறுத்தால் வடிவேல் படங்களில் நடிக்க தடை விதிக்கப்படும் என்று தயாரிப்பாளர்கள் சங்க வட்டாரத்தில் கூறப்படுகிறது.

0 coment�rios:

கும்கி விக்ரம் பிரபு தமிழ் சினிமாவில் அறிமுகமான படம். இப்படம் ரசிகர்கள் மத்தியில் செம்ம வரவேற்பை பெற்றது. பாக்ஸ் ஆபிஸ் மட்டுமின்றி விமர்ச...

கும்கி-2 படத்தில் வளர்ந்து வரும் முன்னணி ஹீரோ கமிட் ஆனார்

கும்கி விக்ரம் பிரபு தமிழ் சினிமாவில் அறிமுகமான படம். இப்படம் ரசிகர்கள் மத்தியில் செம்ம வரவேற்பை பெற்றது.

பாக்ஸ் ஆபிஸ் மட்டுமின்றி விமர்சனங்கள் ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற, தற்போது கும்கி-2 படத்திற்கான வேலைகள் தொடங்கிவிட்டது. இதையும் பிரபுசாலமன் தான் இயக்கி வருகின்றார்.

ஏற்கனவே தாய்லாந்தில் ஒரு சில காட்சிகள் எடுக்க, தற்போது அடுத்தக்கட்ட படப்பிடிப்பு கேரளாவில் நடந்து வருவதாக தெரிகின்றது.

இப்படத்தில் ஹீரோவாக விஷ்ணு விஷால் நடித்து வருவதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

0 coment�rios:

செல்வராகவன் தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரங்களில் ஒருவர். ஒரு படத்தின் வெற்றி, தோல்வி தாண்டி எழுத்து-இயக்கம் செல்வராகவன் என்று திரையி...

தமிழ் சினிமாவின் அத்தனை பார்முலாவையும் குத்தி கிழித்தெறிந்த செல்வராகவன்

செல்வராகவன் தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரங்களில் ஒருவர். ஒரு படத்தின் வெற்றி, தோல்வி தாண்டி எழுத்து-இயக்கம் செல்வராகவன் என்று திரையில் வரும் போது விசில் சத்தம் பறக்கும்.

அப்படி ஒரு புகழுக்கு சொந்தமான செல்வராகவனின் மாஸ்டர் பீஸ் புதுப்பேட்டை வெளிவந்து இன்றுடன் 12 வருடங்கள் ஆகின்றது.

இந்த படம் இப்போது வந்திருந்தால் மெகா ஹிட் ஆகியிருக்கும், சூப்பர் ஹிட் ஆகியிருக்கும், ரூ 100 கோடி வசூல் வந்திருக்கும் என சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஒரு பேச்சு இருக்கும்.

ஆனால், செல்வராகவனோ எப்போது வந்தாலும் புதுப்பேட்டை இப்படித்தான் இருக்கும் என்று சிம்பிளாக முடித்துவிடுவார். படத்தின் தொடக்கத்திலேயே நாயகன் பிச்சை எடுப்பது போல் ஒரு காட்சி.

தீம் மியூஸிக் போட்டு நடிகர்களுக்கு ஸ்லோ மோஷனில் மாஸ் இண்ட்ரோ கொடுத்த தமிழ் சினிமாவில் அம்மாவிடம் அடிவாங்கி கொண்டு பள்ளிக்கு கிளம்பும் ஒரு நாயகனாக தனுஷின் அறிமுகம்.

அம்மா இழப்பு, தெருவில் பிச்சை, அன்புவிடம் அறிமுகம், செல்வியுடன் காதல், காதலுக்காக கொலை, கொலையில் இருந்து பிறக்கும் அரசியல், அரசியல் ஆசையால் வரும் விளைவு என இதைவிட ஒரு கேங்ஸ்டர் வாழ்க்கையை யாரும் அருகில் நின்று படம் பிடித்திட முடியாது.

அதிலும் வேங்கைய மகன் ஒத்தைல நிக்கிறேன் என்பது போல் ஒரே ஆளாக நின்றுக்கொண்டு இரண்டே அடியில் மூர்த்தியின் தம்பியை கொலை செய்து, பின் ஒரு கேங்ஸ்டரிடம் சென்று ட்ரெயினிங் எடுப்பது, அந்த கேங்ஸ்டரும் உள்ளே பயத்தை வைத்துக்கொண்டு தனுஷிடம் தில்லாக பேசுவது.

வேரு ஒருவருக்கு திருமணம் செய்த பெண்ணை, கல்யாண மேடையில் தாலி கட்டுவது என சினிமா பார்முலா அனைத்தையும் குத்தி கிழித்த படம் தான் இந்த புதுப்பேட்டை.

இப்படி ஒவ்வொரு காட்சியிலும் நம்மை பிரமிக்க வைத்த செல்வராகவன் மீண்டும் இதே பலத்துடன் திரும்ப வரவேண்டும் என்பதே அனைவரின் விருப்பமும்.

0 coment�rios:

கமல்ஹாசன் ரசிகர்களுக்கு அவர் நடித்த படங்களில் ரசிகர்களால் அதிகம் ரசிக்கப்படும் படம் தேவர்மகன். அப்படத்தை பற்றிய சில சுவாரஸ்ய விஷயங்களை ரசிக...

தேவர்மகன் படத்தில் கௌதமி வேடத்தில் முதலில் நடிக்க இருந்த நடிகை இவர்தானா? வெளியான தகவல்

கமல்ஹாசன் ரசிகர்களுக்கு அவர் நடித்த படங்களில் ரசிகர்களால் அதிகம் ரசிக்கப்படும் படம் தேவர்மகன். அப்படத்தை பற்றிய சில சுவாரஸ்ய விஷயங்களை ரசிகர்கள் தெரிந்துகொள்ள ஆர்வம் காட்டுகின்றனர்.

இந்த நேரத்தில் தேவர்மகன் படத்தில் கௌதமி வேடத்தில் முதலில் நடிக்க இருந்தது வேறொரு நடிகையாம். அவர் வேறு யாரும் இல்லை ஐஸ்வர்யா தான் முதலில் நடிக்க இருந்தாராம்.

இன்னொரு நாயகியின் கால்ஷீட் பிரச்சனையால் நாயகியையே மாற்றிவிட்டனர், நானும் நடிக்க முடியவில்லை என்று மன வருத்தத்துடன் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

0 coment�rios:

நடிகர் என்பதை தாண்டி தற்போது மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவராக இருக்கும் கமல்ஹாசன் பொதுவாழ்க்கையில் அதிகமாக ஈடுபட்டுவருகிறார். இன்று கா...

இன்று கமல் செய்தது சரியா ?- வறுத்தெடுக்கும் இணையதள போராளிகள்!

நடிகர் என்பதை தாண்டி தற்போது மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவராக இருக்கும் கமல்ஹாசன் பொதுவாழ்க்கையில் அதிகமாக ஈடுபட்டுவருகிறார்.

இன்று காலை தூத்துக்குடி கலவரத்தில் இறந்த, பாதிக்கப்பட்ட குடும்பத்தை நேரில் சென்று ஆறுதல் கூறினார். அதே சமயம் மாலையில் பெங்களூரில் குமாரசாமி பதவியேற்பு விழாவுக்கு நேரில் சென்று வாழ்த்து கூறியுள்ளார் கமல்.

காவேரி விவகாரத்தில் இன்னும் இழுபறி வலுக்கும் சூழலில் தமிழ் மக்களின் உணர்வுகளை மதிச்சு அந்த விழாவை கமல் புறக்கணித்திருக்க வேண்டாமா என்று நெட்டிசன்ஸ் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

0 coment�rios:

ரஜினி-கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியை மிகவும் புதிதானது. ரஞ்சித்தை தொடர்ந்து இளம் இயக்குனருடன் ரஜினி இணைந்திருப்பதால் பெரிய எதிர்ப்பார்ப்பி...

ரஜினி-கார்த்திக் சுப்புராஜ் படத்தில் இணைந்த 2 முக்கிய நடிகர்கள்

ரஜினி-கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியை மிகவும் புதிதானது. ரஞ்சித்தை தொடர்ந்து இளம் இயக்குனருடன் ரஜினி இணைந்திருப்பதால் பெரிய எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்.

படத்தின் இசையமைப்பாளர் அனிருத் என்பது மேலும் ஒரு சிறப்பு. அடுத்தகட்டமாக படத்தை பற்றி எந்த ஒரு தகவலும் வராமல் இருந்த நிலையில் புதிதாக ஒரு விஷயம் வந்துள்ளது.

அதாவது படத்தில் முக்கிய நடிகர்களாக பாபி சிம்ஹா மற்றும் சனந்த் ரெட்டி இணைந்துள்ளார்களாம்.

0 coment�rios:

இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே நீண்டகாலமாக எல்லைப்பிரச்சனை இருந்து வருகிறது. இதனால், எல்லையில் அவ்வப்போது அசாதரண சூல்நிலையும் ஏற்பட்டு ...

தோண்ட தோண்ட கொட்டிக் கிடக்கும் தங்கம்! இதன் மதிப்பு 60 பில்லியன் அமெரிக்க டொலர்களாம்!

இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே நீண்டகாலமாக எல்லைப்பிரச்சனை இருந்து வருகிறது. இதனால், எல்லையில் அவ்வப்போது அசாதரண சூல்நிலையும் ஏற்பட்டு வருகிறது.

இதற்கு காரணம், இந்தியாவிற்கு சொந்தமான அருணாசலபிரதேசத்தை தங்களது தெற்கு திபெத்தின் ஒரு பகுதி என்று சீனா உரிமை கொண்டாடி வருவது தான்.

இந்நிலையில், அருணாச்சல பிரதேச எல்லயை ஒட்டிய லூன்சே எனும் பகுதியில் சீன அரசாங்கம் தங்கச் சுரங்கம் தோண்டி வருவதாக செய்திகள் வந்தன.

இதில், சுமார் 60 பில்லியன் அமெரிக்க டொலர்கள் அளவிர்கு தங்கம், வெள்ளி மற்றும் விலை உயர்ந்த உலோக தாதுப் பொருட்கள் இருப்பதாக தனியார் செய்தி நிறுவனம் அண்மையில் தகவல் வெளியிட்டிருந்தது.

இந்நிலையில், இது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் லூ காங் கூறியதாவது, சீனா தனது எல்லைக்கு உட்பட்ட பகுதியில் அவ்வப்போது பூமிக்கு அடியில் ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது.

இப்படியிருக்கையில், தற்போது தங்கச் சுரங்கம் தோண்டப்படும் பகுதி முழுக்க முழுக்க சீனாவின் இறையாண்மைக்கு சொந்தமானது. இந்த பகுதியை அனுபவிக்க எங்களுக்கு முழு உரிமை உள்ளது. என்று தெரிவித்துள்ளார்.

0 coment�rios:

காலம்காலமாக மற்ற மொழிப்படங்களில் சில நம் ரசிகர்களை ஈர்த்து விடுகிறது. அவை நம் மொழியிலும் பார்த்தால் நன்றாக இருக்குமே என்ற எதிர்பார்ப்பும் இ...

பாஸ்கர் ஒரு ராஸ்கல் திரைவிமர்சனம் - பாஸ்கர் ஒரு ராஸ்கல் நல்ல எண்டர்டெயின்மெண்டான ஃபேமிலி பேக்கேஜ்.

காலம்காலமாக மற்ற மொழிப்படங்களில் சில நம் ரசிகர்களை ஈர்த்து விடுகிறது. அவை நம் மொழியிலும் பார்த்தால் நன்றாக இருக்குமே என்ற எதிர்பார்ப்பும் இருக்கும்.

அப்படி ஒரு ரசனையுடன் மலையாளத்தில் இருந்து வந்திருக்கிறான் இந்த பாஸ்கர் ஒரு ராஸ்கல். யார் இவன், மக்களிடம் இடம் பிடிப்பானா என உள்ளே சென்று பார்க்கலாம்.

கதைக்களம்

அரவிந்த் சாமி ஒரு சாதாரண பிசினஸ் மேன். ஆனால் இவர் வம்பு என வந்துவிட்டால் முரடன். இவருக்கு ஆகாஷ் என்ற பையனும், அப்பா நாசரும் இருக்கிறார்கள். அப்பா மீது பாசமாக இருந்தாலும் சில விசயங்களால் அவனுக்கு அரவிந்த் சாமியை பிடிக்கவில்லை.

நடிகை அமலா பால் ஒரு எதிர்பாராத விதமாக ஒரு கட்டத்தில் தன் காதல் கணவரை இழக்கிறார். பின் வேறொரு ஊரில் தன் மகள் நைனிகாவுடன் தனியே வாழ்கிறார். இந்நிலையில் அரவிந்த் சாமிக்கு தன் மகன் மூலம் அமலா பாலின் அறிமுகம் கிடைக்கிறது. பின் இரு குடும்பமும் ஒன்றாக நட்புறவாக மாறுகிறார்கள்.

பின் அரவிந்த் சாமி, அமலா பால் இருவரும் வாழ்க்கையில் இணைய விரும்பும் நேரத்தில் பயங்கர அதிர்ச்சி. தன்னை தேடி வந்த ஒரு நபரால் பெரும் அதிர்ச்சியாகிறார் அமலா.

மேலும் முக்கிய அறிவியல் விஞ்ஞானி ஒருவர் கொல்லப்படுகிறார். அவரின் கொலைக்கு காரணமானவர்கள் யார்? மர்ம பின்னணி என்ன? அமலா பாலை தேடி வந்த நபர் யார்? அவரின் கணவர் என்ன ஆனார்?

அரவிந்த் சாமி, அமலா பால் இருவரும் வாழ்க்கையில் இணைந்தார்களா என்பதே இந்த படத்தின் கதை.

படத்தை பற்றிய அலசல்

அரவிந்த் சாமி அண்மைகாலமாக படங்களில் வில்லன் வேடங்களில் நடித்து வருகிறார். மீண்டும் அவர் ஹீரோவாக பாஸ்கர் படத்தில் வந்திருக்கிறார். அவருக்கு இன்னும் அந்த காலத்து ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பதை தியேட்டரில் காணமுடிகிறது. அவர்களின் எதிர்பார்ப்பை அவரும் இப்படத்தில் பூர்த்தி செய்கிறார். முரட்டுத்தனமாக இருக்கும் இவர் தன் மகனுக்காக வேறுவிதமாக மாறுகிறார்.

அமலா பால் மீண்டும் ஹீரோயினாக இப்படத்தின் மூலம் இறங்கியுள்ளார். படத்தில் அவரை பார்க்கும் போது முன்பு இருந்த அமலா பாலை அப்படியே பார்க்க முடிந்தது. தான் விரும்பும் யோகாவையும் கூடவே கூட்டி வந்திருக்கிறார். விரும்பிய ஒன்றுக்காக வாழ்க்கையை விட்ட கதை அவரின் ரியல் லைஃப் போலிருந்தது.

விஜய் சேதுபதியுடன் நடித்த குட்டி பையன் மாஸ்டர் ராகவன் படத்தில் ஆகாஷாக தன் திறமையை காட்டியிருக்கிறார். இவரை சும்மா சொல்லக்கூடாதுங்க. நடனம், நடிப்பு என அசத்துகிறார். எதிர்காலத்தில் திறமையான நடிகராக வருவார் என தெரிகிறது.

தெறி படத்திற்கு பிறகு பேபி நைனிகா மீண்டும் இப்படத்தில் இறங்கியுள்ளார். சொல்லப்போனால் ஒரு குட்டி ஹீரோயின் போல தான். சில நேரத்தில் பிள்ளைகள் விரும்பும் சிலவற்றில் பெரிய விசயம் இருக்கும் என அவர் படத்தில் தெளிவுபடுத்துகிறார்.

படத்தில் காமெடிக்கு மூன்று பேர் கூட்டணியாக, ரமேஷ் கண்ணா, ரோபோ சங்கர், சூரி என ஒன்று கூடியுள்ளார்கள். யாரும் யாருக்கும் சளைத்தவர்கள் கிடையாது என காட்டியிருக்கிறார்கள்.

மலையாளத்தில் ஹிட்டான இப்படத்தை தமிழ் படம் போல அழகாக கொடுத்திருக்கிறார் இயக்குனர் சித்திக். இந்த படம் எப்படியிருக்குமோ என நினைப்பவர்களை படம் முழுக்க உட்கார்ந்து பார்த்து ரசிக்கும் படி செய்திருக்கிறார்.

நிகிஷா படேல், நடிகர் ரியாஸ் கான், பாலிவுட் நடிகர் அஃப்தப் சிவ்தஸனி என பலர் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள். ஆனால் என்ன ரியாஸ்கானா இது என உருவத்தால் அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்.

சிம்பிளான ஸ்டோரி, மலையாள பட ஸ்டைலில் அழகான எடிட்டிங், கேட்கும் படியான பாடல்கள் என படம் ஒரு அழகான படைப்பு. கல்யாணி என ஓரே ஒரு சின்ன விசயத்தால் வந்த பிரச்சனை.

மது வா இல்லை மாது வா, என்ன அது என்பதை படத்தில் பாருங்கள்..

கிளாப்ஸ்

மாஸ்டர் ராகவன், பேபி நைனிகா இருவரும் படம் முழுக்க ஸ்கோர் அள்ளுகிறார்கள்.

அரவிந்த் சாமி, அமலா பால் ஜோடி நன்றாக தான் இருக்கிறது.

ரோபோ சங்கர், சூரி, ரமேஷ் கண்ணா என தங்கள் பங்குக்கு ஆடியன்ஸிடம் கிளாப்ஸ் பெறுகிறார்கள்.

பல்ப்ஸ்

எதற்காக கதை ஆரம்பித்தார்களோ அதை ஒரு இடத்தில் சொல்லாமல் விட்டது போல ஒரு ஃபீல்.

மொத்தத்தில் பாஸ்கர் ஒரு ராஸ்கல் நல்ல எண்டர்டெயின்மெண்டான ஃபேமிலி பேக்கேஜ். 

0 coment�rios:

காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பின்படி, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கத் தயார் என மத்திய அரசு தெரிவித்ததை அடுத்து, திருத்தப்பட்ட வரைவு திட்டத்த...

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் - இவுங்கள நம்பமுடியலையே....எங்கயோ இடிக்குதே!

காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பின்படி, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கத் தயார் என மத்திய அரசு தெரிவித்ததை அடுத்து, திருத்தப்பட்ட வரைவு திட்டத்தை நாளை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வரைவு திட்டத்தை, கடந்த 14ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மத்திய அரசு, காவிரி அமைப்பின் தலைமையகம் பெங்களூரில் அமைக்கப்படும் என தெரிவித்திருந்தது.

இது தொடர்பாக, தமிழகம், கர்நாடகா, புதுச்சேரி மற்றும் கேரள அரசுகள் பதிலளிக்க, உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.இந்த வழக்கு, இன்று மீண்டும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா முன்பு விசாரணைக்கு வந்தபோது, கர்நாடக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், மத்திய அரசின் காவிரி வரைவு திட்டத்தை ஏற்றுக் கொள்வதாக தெரிவித்தார்.

ஆனால், அணைகளில் உள்ள நீரை பயன்படுத்த, காவிரி அமைப்பிடம் அனுமதி பெற வேண்டும் என்ற ஷரத்து ஏற்புடையதல்ல என்று கூறிய அவர், மத்திய அரசின் வரைவு திட்டத்தில் சில மாற்றங்கள் செய்ய வேண்டும் என்றும் வாதிட்டார்.

மேலும், கர்நாடகாவில் தற்போது, புதிய அரசு இன்னும் பொறுப்பேற்கவில்லை என்பதால், வழக்கு விசாரணையை ஜூன் மாதத்திற்கு ஒத்திவைக்குமாறு கோரிக்கை விடுத்தது. அப்போது, தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பின்படி, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்றும், அதன் தலைமையகத்தை பெங்களூருக்குப் பதிலாக டெல்லிக்கு மாற்ற வேண்டும் என்றும் கோரப்பட்டிருந்தது.

மேலும், காவிரி நதிநீர் பங்கீடு அமைப்புக்கு ஓய்வுபெற்ற நீதிபதியை தலைவராக நியமிக்க வேண்டும் என்றும் தமிழக அரசு கோரியிருந்தது. இந்த கோரிக்கைகளை நிராகரித்த உச்சநீதிமன்றம், காவிரி நதிநீர் பங்கீட்டு அமைப்புக்கான பெயரை மத்திய அரசே முடிவு செய்ய வேண்டும் என உத்தரவிட்டது.

அப்போது ஆஜரான மத்திய அரசு வழக்கறிஞர், காவிரி நதிநீர் பங்கீட்டுக்கு குழுவுக்கு, காவிரி மேலாண்மை வாரியம் என பெயரிட ஆட்சேபனை இல்லை என கூறினார்.இதையடுத்து, திருத்தப்பட்ட வரைவு அறிக்கையை நாளை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும், வாரியத்தின் அனுமதியின்றி காவிரியின் குறுக்கே தமிழகமோ, கர்நாடகமோ அணைக் கட்டக் கூடாது என்றும், நதிநீர் பங்கீட்டில் பிரச்சனை ஏற்பட்டால் மத்திய அரசிடம் முறையிடலாம் என்ற அம்சத்தை ஏற்க முடியாது எனக் கூறிய உச்சநீதிமன்றம், காவிரி அமைப்புக்கு முழு அதிகாரம் வழங்கும் வகையில் வரைவுத் திட்டத்தில் திருத்தம் செய்யவும் உத்தரவிட்டது.

இதையடுத்து, கேரளா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், காவிரி நீரில் கேரளாவுக்கு 4 சதவீத நீர் மட்டுமே வழங்க உத்தரவிடப்பட்ட நிலையில், காவிரி அமைப்புக்கான செலவில் 15 சதவீதத்தை ஏற்க முடியாது என்றும் வாதிட்டார். இது தொடர்பாகவும் பதிலளிக்க உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்தது.

0 coment�rios:

குமாரசாமி டிசம்பர் 16, 1969ம் ஆண்டு பிறந்தவர். இவர் தான் இன்று கர்நாடகா அரசியலின் தலைமையை நிர்ணயிக்கும் இடத்தில் உள்ளார். சரி அதை ஏன் நம்...

பிரபல நடிகையுடன் சர்ச்சையில் சிக்கிய குமாரசாமி, இந்த கதையெல்லாம் தெரியுமா?

குமாரசாமி டிசம்பர் 16, 1969ம் ஆண்டு பிறந்தவர். இவர் தான் இன்று கர்நாடகா அரசியலின் தலைமையை நிர்ணயிக்கும் இடத்தில் உள்ளார்.

சரி அதை ஏன் நம் பக்கத்தில் சொல்ல வேண்டும் என்று நீங்கள் நினைப்பது புரிகின்றது. இந்த குமாரசாமி பல சர்ச்சைகளில் சிக்கியுள்ளார்.

இவர் ஏற்கனவே அனிதா என்பவரை திருமணம் செய்திருந்தார், பிறகு கருத்து வேறுபாட்டால் இருவரும் பிரிந்து இருந்தனர்.

அந்த பிரிவிற்கு முக்கிய காரணம் பிரபல நடிகை குட்டி ராதிகா தான், ராதிகா இயற்கை படத்தில் ஹீரோயினாக நடித்தவர்.

இவருக்கும் குமாரசாமிக்கும் பல மாதங்களாக காதல் என்று கன்னட மீடியாக்கள் கோஷமிட, ஆம், நாங்கள் காதலித்தோம், தற்போது திருமணம் செய்துக்கொள்ள போகிறோம் என தைரியமான குட்டி ராதிகாவை திருமணம் செய்துக்கொண்டவர்.

0 coment�rios:

காதலிக்கு ஒண்ணுன்னா கத்திய தூக்குற ஆண்களெல்லாம் அவசியம் பார்க்க வேண்டிய படம். நல்லவேளை… காதலர்கள் சேஃப்! ஒரு வீடியோ கேம்க்குள் நாமே உட்கார்...

இரவுக்கு ஆயிரம் கண்கள் -விமர்சனம்

காதலிக்கு ஒண்ணுன்னா கத்திய தூக்குற ஆண்களெல்லாம் அவசியம் பார்க்க வேண்டிய படம். நல்லவேளை… காதலர்கள் சேஃப்! ஒரு வீடியோ கேம்க்குள் நாமே உட்கார்ந்து கொள்கிற மாதிரி, நமது மூளைக்கு செம வேலை கொடுக்கிறார் அறிமுக இயக்குனர் மு.மாறன். சற்றே குனிந்து நிமிர்ந்தால் கூட, திரையில் யார் யாரை கொன்று விட்டு தப்பினார்கள் என்கிற துரத்தல் கை நழுவக்கூடும். எனவே ஷார்ப்பா லுக்கணும் பாஸ்!

ஹோம் சர்வீஸ் நர்ஸ்சாக பணியாற்றும் மகிமா நம்பியாருக்கும், கால் டாக்ஸி ஓட்டுனர் அருள்நிதிக்கும் லவ். வழக்கமாக ஒரே காரில் பயணிக்கும் மகிமா ஒரு நாள் வேறொரு டாக்சியில் கிளம்ப, அடப்பாவி… அந்த ஓட்டுனன் ஒரு பொறுக்கி. ஸ்பாட்டில் ஓடிவந்து காப்பாற்றும் அஜ்மல், அடப்பாவி… அவரும்தான்! இப்படி சீனுக்கு சீன் திரைக்குள் வரும் அத்தனை பேரும் ஏதோ ஒரு விதத்தில் பொறுக்கிகளாக இருக்க, நடக்கும் கொலைக்கு இவர்தான் காரணம் என துரத்தப்படுகிறார் அருள்நிதி.

கடைசியில் யார் யாரை கொன்றார்கள்? அருள்நிதிக்கும் இதற்கும் சம்பந்தமில்லை என்பது எப்படி தெரியவந்தது? இதெல்லாம்தான் க்ளைமாக்ஸ்.

ஒரு ராஜேஷ்குமார் நாவலை ஒரே மூச்சில் படித்தது போல ஒரு நிறைவு ஏற்பட்டாலும், முடிஞ்சுதுடா என்கிற மூச்சிரைப்பும் வராமல் இல்லை. சற்றே அயற்சி ஏற்படுத்துகிற ஓட்டம் என்பதும் மைனஸ்தான்.

அருள்நிதிக்கு ஏற்ற ரோல். மனிதர் ஓடிக் கொண்டே இருக்கிறார். கைக்கு வாகாக அமைகிற சண்டைக் காட்சிகளில் எல்லாம் பொளந்து கட்டுகிறார். சற்றே குறும்பு தோய்ந்த அந்த முகத்திற்கு, இன்னும் கொஞ்சம் காமெடி கலந்த ரோல்களை தேர்ந்தெடுத்தால் வெற்றி நிச்சயம்.

மகிமா… புது மழையில் நனைந்த சாமந்தியாக ஜொலிக்கிறார். அவ்வளவு கவலையிலும் அந்த முகத்தில் தெரியும் லட்சணம், முன்னணி இடத்திற்கு கொண்டு செல்லும். நோ டவுட்மா!

இந்த அஜ்மலை பார்த்துதான் எத்தனை வருஷமாச்சு? பேட்டரி போட்ட பம்பரம் போல துள்ளுகிறார் மனுஷன். சோஷியல் மீடியாவில் துணை தேடும் பெருசுகளை குறி வைத்து பணம் பறிக்கும் சிலரை, அப்படியே கண்முன் கொண்டு வந்திருக்கிறார்.

இதற்கு முன் சிற்சில படங்களில் நடித்த வித்யாவுக்கு இதில் வில்லி வேஷம். அந்த நல்ல முகத்திற்கு பொருந்தணுமே? ம்ஹூம். அப்புறம் சுஜா, சாயாசிங், லட்சுமி ராமகிருஷ்ணன், ஜான் விஜய் என்று நீள்கிறது பட்டியல். கொடுத்த டயலாக்கை உணர்ச்சியை குழைத்து படித்துவிட்டு போயிருக்கிறார்கள்.

இதுபோன்ற க்ரைம் த்ரில்லர் படங்களுக்கு எது ரொம்ப முக்கியம்? பின்னணி இசையும் ஒளிப்பதிவும். தன் 100 சதவீத உழைப்பை அள்ளிக் கொட்டியிருக்கிறார்கள் இருவரும். முறையோ சாம் சி.எஸ், அரவிந்த்சிங் ஆகியோருக்கு முழு பாராட்டுகள்.

எடிட்டர் சான் லோகேஷ், உடைந்த முறுக்கை ஒட்ட வைத்தது போல மிக சிரமப்பட்டுதான் இந்த கதையை கோர்த்திருக்கிறார். அதற்காகவும் ஒரு அப்ளாஸ்.

இரவு மிக நீளமாக இருப்பதை போல ஒரு பீலிங்ஸ். அதை மட்டும் தயவு பண்ணி குறைத்திருக்கலாம்!

0 coment�rios:

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இருவரும் அரசியல் களத்தில் முக்கிய எதிரிகளாக இருப்பார்கள் என அரசியல் வல்லுநர்கள் கூறுகிறார்கள். ...

ரஜினிக்கு கமல் செய்த போன் கால்! என்ன பேசினார்?

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இருவரும் அரசியல் களத்தில் முக்கிய எதிரிகளாக இருப்பார்கள் என அரசியல் வல்லுநர்கள் கூறுகிறார்கள். ஆனால் ரஜினி இன்னும் அரசியல் கட்சியே துவங்காத நிலையில், இருவரும் ஒருவரை பற்றி ஒருவர் இதுவரை விமர்சனங்கள் எதுவும் முன்வைக்கவில்லை.

இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் ரஜினியை போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். காவிரி பிரச்சனைக்காக தான் நடத்தவுள்ள கூட்டத்தில் கலந்துகொள்ளவேண்டும் என அழைக்கவே கமல் போன் செய்துள்ளார்.

நேற்று மாலை கமல் திமுக செயல் தலைவர் ஸ்டாலினை நேரில் சந்தித்து அழைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 coment�rios:

விஜய் டிவி யின் செல்லப்பிள்ளை திவ்யதர்ஷினி தொகுத்து வழங்கும் ரியாலிட்டி ஷோ தற்போது மிகவும் பிரபலமாகிவருகிறது. அந்தளவு தனது திறமையால் நிகழ...

பிரபல தொலைக்காட்சியில் டிடி அடித்த கூத்து! சர்ச்சையை கிளப்பும் வைரல் காட்சி

விஜய் டிவி யின் செல்லப்பிள்ளை திவ்யதர்ஷினி தொகுத்து வழங்கும் ரியாலிட்டி ஷோ தற்போது மிகவும் பிரபலமாகிவருகிறது.

அந்தளவு தனது திறமையால் நிகழ்ச்சியையே கலகலப்பூட்டுபவர். திருமணம் செய்து பின்னர் கசந்து போனதால் கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்றுக்கொண்டு மீண்டும் சின்னத்திரையில் கலக்கத்தொடங்கி விட்டார் என்று தான் சொல்லவேண்டும்.

தனது உடலழகை மேலும் மெருகேற்றி, புதுப்பொலிவுடன் விஜய் டிவியில் ஷோ ஹோஸ்ட் பண்ணி வருகிறார்.

சமீபத்தில் இடம்பெற்ற ஒரு நிகழ்ச்சியில் திவ்யதர்ஷினியை விஜய் டிவி தொகுப்பாளர் ரியோ தூக்கி இடுப்பில் வைத்து பாடலுக்கு ஆடும் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி சர்ச்சையை கிளப்பியுள்ளது.

இதேவேளை, கோபிநாத் மற்றும் மா.கா.பா.ஆனந்தை பாட்டு பாட சொல்லி, பாட வைத்து அதை வீடியோவாக எடுத்து டிடி, டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். குறித்த காட்சி சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது.

0 coment�rios:

பள்ளி, கல்லூரிகளுக்கு இது கோடை விடுமுறை. அதனாலேயே பலரும் குடும்பம் குடும்பமாகப் பல சுற்றுலாத் தலங்களுக்கும் வழிபாட்டுத் தலங்களுக்கும் போய் ...

`திருப்பதி போறீங்களா? ஆதார் அட்டை போதும்... பெருமாளைப் பார்க்கிறது ரொம்ப ஈஸி!’

பள்ளி, கல்லூரிகளுக்கு இது கோடை விடுமுறை. அதனாலேயே பலரும் குடும்பம் குடும்பமாகப் பல சுற்றுலாத் தலங்களுக்கும் வழிபாட்டுத் தலங்களுக்கும் போய் வருகிறார்கள். அப்படிப் பலர் விரும்பிப் போகுமிடங்களில் திருப்பதியும் ஒன்று. ஆனாலும், அவசரப்பட்டுப் போய்விடுவார்களேயொழிய சுவாமி தரிசனம் செய்ய 18 மணி நேரம், 24 மணி நேரம் காத்திருக்க வேண்டும். அதற்கான பிரத்யேகக் கூண்டுகளில் அடைப்பட்டுக் கிடக்க வேண்டும். `ஏன்டா சுவாமியைக் கும்பிட வந்தோம்' எனப் பலரும் நம் காதுபட பேசக் கேட்டிருப்போம்.

ஆனால், அந்தச் சிரமம் இனி இல்லை. 'ஆதார் அட்டை', 'வாக்காளர் அடையாள அட்டை' இவற்றில் ஏதேனும் ஒன்றைக் கொண்டு சென்றால் போதும். நீங்கள் சுவாமி தரிசனம் செய்ய வேண்டிய நேரத்தைக் குறித்துத் தந்துவிடுவார்கள். குறிப்பிட்ட நேரத்தில் 'நாராயணகிரி கார்டன் நுழைவு வாயிலு'க்குச் சென்றால் போதும்... அதிகபட்சம் மூன்று மணி நேரத்தில் பெருமாளை தரிசனம் செய்துவிட்டுத் திரும்பிவிடலாம்.

இந்த இலவச சர்வ தரிசன டோக்கன் முறை கடந்த வாரம் அறிமுகப்படுத்தப்பட்டு சிறப்பாகச் செயல்பட்டுவருகிறது. திருப்பதி ரயில் நிலையம் அருகிலுள்ள விஷ்ணு நிவாசம், கோவிந்தராஜ சுவாமிசத்திரம், ஸ்ரீனிவாசம் காம்ப்ளக்ஸ், ஆர்.டி.சி பஸ் ஸ்டாண்டு, அலிபிரி ஆகிய இடங்களில் இதற்கான டோக்கன்கள் விநியோகிக்கப்படுகின்றன.

நமக்கான  தரிசன நேரம் வரும்வரை, கீழ்த் திருப்பதியில் ஸ்ரீனிவாச மங்காபுரம், அலமேலு மங்காபுரம், கோவிந்தராஜ பெருமாள் கோயில் ஆகிய பகுதிகளுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்து வரலாம். மேல் திருப்பதியில் பாபநாசம், விஷ்ணுபாதம், ஜபாலி, ஆகாஷ் கங்கா ஆகிய பகுதிகளுக்குச் சென்று திருமலையின் முக்கிய இடங்களைப் பார்த்து வரலாம். அடையாள அட்டையைக் கொண்டு வராதவர்கள் வழக்கம்போல் வைகுண்டம் காம்ப்ளக்ஸ் வழியாக அனுமதிக்கப்படுவார்கள். இந்த வழிமுறையைத் திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்திருக்கிறது.

0 coment�rios:

நாகினி சீரியல் இன்றும் மற்ற தொடர்களுடன் ஒப்பிடும் போது உச்சத்தில் தான் இருக்கிறது. ஹிந்தியிலிருந்து டப்பிங் செய்யப்பட்டு தமிழில் பெரும் வரவ...

நாகினி சீரியல் இளம் நடிகையின் தற்கொலை முடிவுக்கு அந்த பிரபல நடிகர் தான் காரணமாம்!

நாகினி சீரியல் இன்றும் மற்ற தொடர்களுடன் ஒப்பிடும் போது உச்சத்தில் தான் இருக்கிறது. ஹிந்தியிலிருந்து டப்பிங் செய்யப்பட்டு தமிழில் பெரும் வரவேற்பை பெற்றது.

இதில் ஹிந்தியில் 3வது சீசனை நெருங்கிவிட்டது. நாகினி சீரியலில் முக்கிய ரோலில் நடித்தவர் நடிகை அடா கான். சமூகவலைதளங்களில் அடிக்கடி கவர்ச்சி படங்களை வெளியிட்டு வருகிறார்.

அவரின் சமூகவலைதள பக்கத்தில் தற்கொலை மனப்பான்மையில் இருக்கும் படியான பதிவுகள் இருந்ததாக சொல்லப்படுகிறது. இது பலரையும் அதிர்ச்சியாக்கியது.

அண்மையில் அவர் ஒரு விவாத நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போது மனம் திறந்து பேசினார். அப்போது அவர் தன் நண்பன் Ankit Gera தன்னை மூன்று முறை ஏமாற்றிவிட்டதாக கூறி அழுதார்.

மேலும் அவரின் பதிவுக்கு காரணம் அவர் தான் என சொல்லப்படுகிறது.

0 coment�rios:

பாகுபலி-2 இந்திய சினிமாவின் பாக்ஸ் ஆபிஸில் ஒரு மைல் கல். அப்படியிருக்க எப்படி தோல்வி என்று நீங்கள் கேட்கலாம். ஆனால், உண்மை இது தான், அதே ...

பெரும் தோல்வியை சந்தித்த பாகுபலி-2, உண்மை இது தான்

பாகுபலி-2 இந்திய சினிமாவின் பாக்ஸ் ஆபிஸில் ஒரு மைல் கல். அப்படியிருக்க எப்படி தோல்வி என்று நீங்கள் கேட்கலாம்.

ஆனால், உண்மை இது தான், அதே நேரத்தில் தோல்வி இந்தியாவில் இல்லை, சீனாவில் தான்.

பாகுபலி முதல் பாகம் சீனாவில் ரூ 9 கோடி வசூல் செய்தது, ஆனாலும் இரண்டாம் பாகத்தை அங்கு ரிலிஸ் செய்தனர்.

இப்படம் கண்டிப்பாக ரூ 500 கோடி வரை அங்கு வசூல் செய்யும் என எதிர்ப்பார்க்க, பாகுபலி-2 தற்போது வரை ரூ 70 கோடி வரை தான் சீனாவில் வசூல் செய்துள்ளது.

இதனால், படம் சீனாவில் பெரும் தோல்வியை சந்தித்துள்ளதாக கூறப்படுகின்றது.

0 coment�rios:

ஆர்.ஜே. பாலாஜியும், ஜூலியும் அரசியலுக்கு வருவதாக அடுத்தடுத்து அறிவிப்பு வெளியிட்டதற்கான காரணம் தெரியவந்துள்ளது. நடிகர் ஆர்.ஜே. பாலாஜி தான...

ஜுலி அரசியலுக்கு வருவதற்கு உண்மையான காரணம் என்ன? வெளியான ரகசியம்

ஆர்.ஜே. பாலாஜியும், ஜூலியும் அரசியலுக்கு வருவதாக அடுத்தடுத்து அறிவிப்பு வெளியிட்டதற்கான காரணம் தெரியவந்துள்ளது.

நடிகர் ஆர்.ஜே. பாலாஜி தான் அரசியலுக்கு வருவதாக அறிவிப்பு வெளியிட்டார். அதோடு நிற்கவில்லை. கட்சிக் கொடியை தயார் செய்து ஃபேஸ்புக்கில் வெளியிட்டார். அந்த கொடியை பார்த்து கலாய்க்காதவர்களே இல்லை.

ஆர்.ஜே. பாலாஜி அரசியலுக்கு வருவதை பார்த்து ஒரு கூட்டம் அவரை கலாய்த்தாலும் சிலர் அவரை ஆதரித்துள்ளனர். இந்நிலையில் நான் கட்சி துவங்குகிறேன் என்று கூறி ஒரு பெரிய குண்டை தூக்கிப் போட்டார் ஜூலி.

இது என்னடா தமிழ்நாட்டுக்கு வந்த சோதனை. ஆ, ஊன்னா கட்சி துவங்குகிறேன் என்று கிளம்பிவிடுகிறார்கள் என்று நெட்டிசன்கள் விமர்சித்து வருகிறார்கள்.

ஜூலி கட்சி துவங்குவதாக வெளியான வீடியோவில் அவர் இருந்த கெட்டப், வந்து இறங்கிய காரை பார்த்துவிட்டு மக்களுக்கு லைட்டா டவுட்டு வந்தது. அவர் கட்சி துவங்கவில்லையாம், அரசியல் சார்ந்த படத்தில் நடிக்கிறாராம்.

ஹம்பிள் பொலிடீஷியன் நொக்ராஜ் என்கிற கன்னட படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்கப் போகிறாராம் ஆர்.ஜே. பாலாஜி. அரசியல் சார்ந்த இந்த படத்திற்கு தான் இப்படி பீதியை கிளப்பி அவர் விளம்பரம் தேடியதாக தகவல் வெளியாகியுள்ளது.

படத்திற்கு எப்படி விளம்பரம் தேடலாம் என்று ரூம் போட்டு யோசிப்பார்கள் போல. நல்லா தேடுறாங்கய்யா விளம்பரத்தை. இதற்கிடையே ஜூலி கமல் ஹாஸன் கட்சியில் சேர முயற்சி செய்வதாக வேறு கூறப்படுகிறது.


0 coment�rios:

நடிகர் விஷால் நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் என பிசியாக இருக்கிறார். அவரின் நடிப்பில் கடந்த வாரம் வெளியான இரும்புத்திரை படத்திற்கு மக்க...

விஷாலை விரட்டுவோம்! அடுத்தடுத்து தொடரும் எதிர்ப்புகள்

நடிகர் விஷால் நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் என பிசியாக இருக்கிறார். அவரின் நடிப்பில் கடந்த வாரம் வெளியான இரும்புத்திரை படத்திற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு.

அவர் அரசியலில் இறங்கி போட்டியிட சில தடைகளையும் சந்தித்தனர். இந்நிலையில் தற்போது அவரின் மீது அடுத்தடுத்து எதிர்ப்புகள் சூழத்தொடங்கியுள்ளது.

இதில் தற்போது தயாரிப்பாளர் சங்கத்தை விட்டு விஷால் தானாக செல்ல வேண்டும். இல்லையெனில் நாங்கள் விரட்டுவோம் என நடிகர் ரித்திஷ் கூறியுள்ளார்.

மேலும் அண்மையில் டி.ஆர், இயக்குனர் பாரதிராஜா, ராதா ரவி ஆகியோருடன் சேர்ந்து பேட்டியளித்துள்ளார். அதில் அவர் விஷால் கடுமையாக தாக்கி பேசியுள்ளார்.

0 coment�rios:

தனுஷ் நடித்த துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், யாரடி நீ மோகினி திருவிளையாடல் ஆரம்பம், 3 படங்களை தயாரித்த ஆர்.கே.புரொடக்ஷன் தற்போது தயாரிக்கும...

சாமிக்கும் பேய்க்கும் சண்ட! தனுஷ் அப்பா இனி பிஸியோ பிஸி!

தனுஷ் நடித்த துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், யாரடி நீ மோகினி திருவிளையாடல் ஆரம்பம், 3 படங்களை தயாரித்த ஆர்.கே.புரொடக்ஷன் தற்போது தயாரிக்கும் படத்திற்கு “ பாண்டி முனி “ என்று பெயரிட்டுள்ளனர்.

இந்த படத்தில் முனியாக பிரபல ஹிந்தி நடிகர் ஜாக்கிஷெராப் முனி என்கிற அகோரி வேடத்தில் நடிக்க, புதுமுக நடிகையான மேகாலி பாண்டி என்ற வேடத்திலும் நடிக்கிறார். மற்றும் இன்னொரு நாயகியாக நிக்கிஷாபட்டேல், பெராரே ,சிவசங்கர், ஷாயாஜி ஷிண்டே, அம்பிகா, வாசுவிக்ரம் ஆகியோர் நடிக்கிறார்கள்.

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – கஸ்தூரிராஜா. இது இவர் இயக்கும் 23 வது படம் படம் பற்றி இயக்குனர் கஸ்தூரி ராஜா கூறியதாவது..

இது நான் இயக்கும் வித்தியாசமான படம். இதுவரை கிராம வாழ்வியலையும் காதலையும் குடும்ப உறவுகளையும் மட்டும் பதிவு செய்த நான் இதில் ஹாரர் விஷயத்தை கையிலெடுக்கிறேன். சாமிக்கும் பேய்க்கும் இடையே நடக்கும் போர் தான் பாண்டி முனி அடர்ந்த காட்டுக்குள் இருக்கும் ஒரு ஜமீன் பங்களாவுக்குள் நடக்கும் ஹாரர் படம் இது. சுமார் 70 வருடங்களுக்கு முன்பு நடப்பது மாதிரியான பீரியட் படம் இது.

சாமி பாதி, பேய் பாதி என்று கதையின் போக்கு இருக்கும். இந்த கதையை கேட்டவுடன் ஜாக்கி ஷெராப் ஆர்வத்துடன் உடனே ஓகே சொன்னது இந்த கதைக்கு கிடைத்த முதல் வெற்றி. படத்தின் படப்பிடிப்பு மலேசியா, தாய்லாந்து, குரங்கணி, ஜவ்வாதுமலை போன்ற இடங்களில் நடைபெற உள்ளது.

0 coment�rios:

உலகெங்கும் சாதனையாளர்களின் வாழ்க்கையை மையப்படுத்தி பல பயோபிக் திரைப்படங்கள் வெளிவந்திருக்கின்றன. அதில் பெண்களுக்கான பிரத்யேக பயோபிக்குகளி...

''வாவ்... சாவித்திரி ஒப்பிட முடியாத ஒரு துருவ நட்சத்திரம்தான்!" - நடிகையர் திலகம் விமர்சனம்

உலகெங்கும் சாதனையாளர்களின் வாழ்க்கையை மையப்படுத்தி பல பயோபிக் திரைப்படங்கள் வெளிவந்திருக்கின்றன. அதில் பெண்களுக்கான பிரத்யேக பயோபிக்குகளின் எண்ணிக்கை மிகவும் குறைவுதான். `நடிகையர் திலகம்' சாவித்திரி கணேசனின் வாழ்க்கை வரலாற்றை அசத்தலாக தெலுங்கில் மகாநடி'யாகவும், தமிழில் நடிகையர் திலகம் எனவும் பதிவு செய்திருக்கிறார்கள்.

நடிகை சாவித்திரியின் வாழ்க்கையை எழுதும் அசைன்மென்ட் மதுரவாணிக்குக் (சமந்தா) கிடைக்கிறது. சாவித்திரியின் வாழ்க்கையை எழுத விரும்பாத சமந்தாவை, கொஞ்சம் கொஞ்சமாக கன்வின்ஸ் செய்கிறார் ஆன்டனி (விஜய் தேவரகொண்டா). இருவருக்குமான காதல், சமந்தா சந்திக்கும் சூழல்கள், சாவித்திரியின் வாழ்க்கை, சாவித்திரி சந்திக்கும் சூழல் போன்றவற்றை கச்சிதமாகச் சொல்லி, கதையை நகர்த்தியிருக்கிறார்கள்.


பொதுவாக பயோபிக் என்றால், முழுக்க முழுக்க முதன்மை கதாபாத்திரத்தின் வாழ்க்கையை மட்டுமே மையப்படுத்தி திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கும். அதைக் காட்சிப்படுத்த நினைக்கும் எழுத்தாளர் அல்லது இயக்குநரின் வாழ்க்கையைச் சற்று குறைவான காட்சிகளே திரைக்கதையில் சேர்த்திருப்பார்கள். இதில் இரு கதைக்கும் தேவையான அளவு காட்சிகளை வைத்திருக்கிறார்கள். 1980 களில் சாவித்திரியின் கோமா ஸ்டேஜில் ஆரம்பிக்கும் கதை, சாவித்திரியின் அத்தை துர்காம்பா (பானுப்பிரியாவின் ) வரிகளில் விரிகிறது.


இருபதாம் நூற்றாண்டில் தென்னிந்திய சினிமாவின் ஆளுமையாகக் கருதப்படும் சாவித்திரியாக, அச்சு அசலாக நடித்திருக்கிறார் கீர்த்தி சுரேஷ்.  தோழி சுஷீலா (ஷாலினி பாண்டே ) வுடன் சுற்றித் திரிவது, வெகுளித்தனமாக விஜயவாஹிணி ஸ்டுடியோவில் உலா வருவது, இறுதி வரை உதவிக் கொண்டே இருப்பது, மருத்துவமனைக் காட்சிகள், மதுக்கோப்பைகளுடன் வாழ்வது, முதல் முறை கேமராவைப் பார்க்கும் போது வெட்கப்படுவது,  இத்தனை ஆண்டுகளாக கீர்த்தி சுரேஷ் நடித்த படங்களை எல்லாம், இந்த ஒற்றைப் படத்தின் பெர்ஃபாமன்ஸ் மூலம் ஓவர்டேக் செய்கிறார் கீர்த்தி சுரேஷ். 14 வயது முதல் 43 வயதில் மரணப் படுக்கையில் தள்ளப்படும் வரை, ஒவ்வொரு ஃபிரேமிலும் கீர்த்தி நடிப்பும், உடல்மொழியும், அபாரம். அதிலும் ஜெமினி கணேசனின் பிரிவுக்குப் பின்னான காட்சிகளில் அத்தனை தத்ரூபமான நடிப்பு. உடல் எடை அதிகமாகத் தோன்றும் காட்சிகளில், அப்படியே சாவித்திரியை பிரதிபலிக்கிறார் கீர்த்தி. ஹேட்ஸ் ஆஃப்!


ஜெமினி கணேசனின் கதாபாத்திரத்தில் ஒரு நடிகனாக ஜெமினியை விடவும் சிறப்பாகவே நடித்திருக்கிறார் துல்கர் சல்மான். ``என்னோட எல்லா கிரெடிட்டையும் நீயே எடுத்துக்கற... தோல்விக்கான கிரெடிட்டையாவது எனக்குக் கொடு " என போதையில் இயலாமையின் உச்சத்தில் உதாசீனப்படுத்தப்பட்ட ஒரு மனிதராக அசத்துகிறார் துல்கர் சல்மான். ஒவ்வொரு காட்சியிலும், தான் ஒதுக்கப்படுவதை, `மக்களுக்கு ருசிக்காத சாம்பார் கணேசனாக 'தான் இருப்பதாக மீடியாக்கள் எழுதுவதை எரிச்சலுடன் கடந்து செல்கிறார். ஆனால், அது ஜெமினியை நினைவுக்குக் கொண்டு வருகிறதா என்றால், அது சற்று சந்தேகம்தான். முழு படத்திலும் ஜெமினி பாத்திரத்தின் மேக்கப்பும் அதீத யதார்த்தமான நடிப்பும் ஏனோ உறுத்துகிறது.


சாவித்திரிக்கும் ஜெமினிக்குமான வாழ்க்கையை `உனக்கு வெட்கம் இல்ல... எனக்கு புத்தி இல்லை ' என ஒற்றை வரியில் கடத்துகிறார் வசனகர்த்தா மதன் கார்க்கி. வசன வரிகளில் ஈர்க்கும் மதன் கார்க்கி, ஏனோ பாடல் வரிகளில் பெரிதாக ஈர்க்கவில்லை.

சாவித்திரியாக கீர்த்தி வரும் காட்சிகள் ஒரு கலர்; படத்துக்குள் வரும் படமாக்கப்படும் காட்சிகள் ஒரு கலர்; சமந்தாவின் காட்சிகள் வேறொரு கலர் என மூன்று டோன்களில் பயணிக்கும் கதையில், டானி சா லோவின் ஒளிப்பதிவு கச்சிதம். அதே போல், ஜெமினி சாவித்திரி கணேசனின் காதல் காட்சிகள், படமாக்கப்பட்ட விதமும் அழகு. மெட்ராஸ் சென்ட்ரலின் முகப்பு, MCP நம்பருடன் சாலையில் நகரும் கார்கள், விஜய வாஹிணி ஸ்டுடியோஸ், சந்திரலேகா போஸ்டர், டிராம், பழைய கால கேமரா, மைக் என ஆர்ட் டிரைக்ஷனின் உழைப்பு அபாரம். அதிலும், அந்த மாயாபஜார் காட்சியின் மறுஉருவாக்கம் டாப் கிளாஸ். பின்னால் இருக்கும் நடிகைகளின் இடைவெளி வரை பார்த்துப் பார்த்து அப்படியே மறுஉருவாக்கம் செய்திருக்கிறார்கள். ஜெமினியுடனான சண்டைக்குப் பின்னர், கதவை மூடுகிறார் சாவித்திரி. அது அப்படியே நாகேஷ்வர ராவுடன் நடிக்கும் காட்சியில் தொடர்கிறது. ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட படத்தின் க்ளைமாக்ஸ் எனப் பல காட்சிகள் அதி அற்புதம்.

சாவித்திரி எப்பேர்ப்பட்ட நடிகை என்பதைக் காட்ட, ஒரு காட்சி விவரிக்கப்படுகிறது. 'செட்'டில் அசிஸ்டென்ட் டீம் சொதப்ப , அந்தக் காட்சியை சாவித்திரி ஒரே 'டேக்'கில் ஓக்கே செய்ய வேண்டும். அது தான் படத்தில், கீர்த்தி சுரேஷின் அறிமுகக் காட்சி. அவ்வளவு சிறப்புமிக்க காட்சியை , ஏனோ அசால்ட்டாக எடுத்து சொதப்பிவிட்டார் இயக்குநர் நாக் அஷ்வின் என்றே தோன்றுகிறது.

சாவித்திரியின் வெற்றிகளையும், கருணையுள்ளத்தையும் அதீதமாக காட்சிப்படுத்தியிருக்கும் அதே வேளையில், தோல்விகளுக்கும், மதுப் பழக்கத்திற்கும் முழுவதுமாக பிறரையே குற்றம் சாட்டி புனிதத் தன்மைக் கொடுத்து, இது உண்மையிலேயே பயோபிக் சினிமாவா இல்லை, ஒரு தலைபட்சமான போற்றதலுக்குரிய சினிமாவா ? என்னும் கேள்வியை எழுப்புகிறது. அதே போல், டப்பிங் என்றாலும் கூட, படத்தில் வரும் தமிழ் காட்சிகளில் கூட , லிப் சிங் இல்லாமல் இருப்பது பெரிய உறுத்தல்.

இப்படி சிற்சில குறைகள் இருந்தாலும், கீர்த்தி சுரேஷின் நடிப்புக்காகவும், பார்வையாளனை வியக்க வைக்கும் சாவித்திரி பற்றிய நெகிழ்ச்சி தொகுப்புகளுக்காகவும், இந்த ' நடிகையர் திலகத்தை ' கண்டு மகிழலாம். 

0 coment�rios:

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் செம்ம ஹிட் அடித்தது, அதை தொடர்ந்து இரண்டாவது சீசனையும் அவர் தான் தொகுத்து வழங்கியுள்ளார். முதலில் கமல...

வெளிவந்தது அனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்த பிக்பாஸ்-2 டீசர் இதோ

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் செம்ம ஹிட் அடித்தது, அதை தொடர்ந்து இரண்டாவது சீசனையும் அவர் தான் தொகுத்து வழங்கியுள்ளார்.

முதலில் கமல் இந்த போட்டியை தொகுத்து வழங்கவில்லை என்று கூறினார், ஆனால், தற்போது என்ன நினைத்தார் என்று தெரியவில்லை, அவரே முன்வந்துள்ளார்.

மேலும், இந்த பிக்பாஸ் களத்தை தான் கமல் முதன் முறையாக தன் அரசியல் மேடையாக மாற்றினார், சமூகத்தில் நடக்கும் பல குறைகளை பிக்பாஸ் மேடையில் பேசினார்.

தற்போது கட்சியே தொடங்கிவிட்டார், அதனால், அவர் என்ன வேண்டுமானாலும் பேசலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

இதோ எல்லோரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்த பிக்பாஸ்-2 டீசர் வெளிவந்துள்ளது, இதோ..

0 coment�rios:

ஒரு நேரத்தில் வெள்ளித்திரை நடிகர்கள் சின்னத்திரை நிகழ்ச்சி என்றாலே தவிர்த்து விடுவார்கள். எதோ மார்க்கெட் சரிந்த நடிகர்கள் தான் சின்னத்திரைக...

கமலை தொடர்ந்து களத்தில் குதித்த மோகன்லால் - ரசிகர்கள் உற்சாகம் !

ஒரு நேரத்தில் வெள்ளித்திரை நடிகர்கள் சின்னத்திரை நிகழ்ச்சி என்றாலே தவிர்த்து விடுவார்கள். எதோ மார்க்கெட் சரிந்த நடிகர்கள் தான் சின்னத்திரைக்குள் வருவார்கள் என்று எண்ணி இருந்தனர். ஆனால் அமீர் கான், சல்மான்கான் போன்ற நடிகர்கள் அந்த பிம்பத்தை உடைத்தனர், கடந்த ஆண்டு கூட கமல் பிக் பாஸ் மூலம் மேலும் பல ரசிகர்களை சம்பாதித்தார்.

அதுமட்டுமில்லாமல் மீண்டும் கமல் சீசன் 2 வை தொகுத்து வழங்கவுள்ளார், இந்நிலையில் மலையாளத்தில் ஆசியாநெட் சேனல் பிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்த உள்ளது. இந்த நிகழ்ச்சியை நடத்தும் பொறுப்பை மோகன்லால் ஏற்றுள்ளார். இதற்கான அதிரப்பூர்வ அறிவிப்பை வெளியிடும் விதமாக இந்த நிகழ்ச்சிக்கான துவக்கவிழா நேற்று நடைபெற்றது.

மோகன்லால் அவ்வப்போது சின்னத்திரையில் சில சமூக நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியிருந்தாலும், இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி தான் அவர் நடத்த இருக்கும் மிகப்பெரிய நிகழ்ச்சி என்பது குறிப்பிடத்தக்கது. இதை அறிந்த மோகன்லால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர் 

0 coment�rios:

கடந்த ஆண்டு கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழ் தொலைக்காட்சியில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. ஆரம்பத்தில் சீசன் 2-வை கமல் தொகுத்...

கமலின் பிக் பாஸ் 2 டீஸர் , ரசிகர்களுக்கு சந்தோஷமான செய்தி !

கடந்த ஆண்டு கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழ் தொலைக்காட்சியில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. ஆரம்பத்தில் சீசன் 2-வை கமல் தொகுத்து வழங்கமாட்டார் என்று தெரிவித்தனர்.

ஆனால் மீண்டும் கமலே தொகுத்து வழங்கவுள்ளார், அதற்கான டீஸர் வேலைகளையும் கடந்த வாரம் நடந்து முடிந்தது, இந்நிலையில் நாளை முதல் விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் 2 நிகழ்ச்சியின் டீஸர் வெளிவரவுள்ளது, முதல் சீசன் போலவே இரண்டவது சீசன் மிக பிரமாண்டமாக செட் அமைப்புடன் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது வரை கிடைத்த தகவல்படி பிரபல முன்னணி பிரபலங்கள் பிக் பாஸ் 2 வில் கலந்து கொள்ளவுள்ளனர் . ஆனால் யாரெல்லாம் என்பது ரகசியமாக வைத்துள்ளது பிக்பாஸ் குழு .

0 coment�rios:

சினிமாவில் இப்போதெல்லாம் ஏதேதோ கதைகளை வைத்து படங்கள் எடுக்கப்படுகிறது. பேய் படங்கள் காலங்கள் போய் அடல்ட் படங்கள் அடியெடுத்து வைக்க தொடங்கிவ...

நடிகையர் திலகம் - திரை விமர்சனம் - களங்கம் சுமத்தபடும் நடிகைகளுக்கு பின்னால் களங்கமில்லா ஒரு நல்ல மனது இருக்கிறது என நடிகையர் திலகம் காட்டுகிறது.

சினிமாவில் இப்போதெல்லாம் ஏதேதோ கதைகளை வைத்து படங்கள் எடுக்கப்படுகிறது. பேய் படங்கள் காலங்கள் போய் அடல்ட் படங்கள் அடியெடுத்து வைக்க தொடங்கிவிட்டது.

அதற்கிடையில் சினிமா வட்டாரமே நடிப்புக்காக ஏங்கிய பழம்பெரும் நடிகையான சாவித்திரியின் வாழ்க்கை படமாக வெளிவந்துள்ளது.

என்ன சொல்கிறார் இந்த நடிகையர் திலகம்? மகாநதியாக உருமாறிய இவரின் பயணம் பக்கம் நாமும் போகலாம்..

கதைக்களம்

ஒரு காலகட்டத்தில் சினிமா வட்டாரமே கர்ஜித்த பெயர் நடிகை சாவித்திரி. நடிகையர் திலகமாக நடிகை கீர்த்தி சுரேஷ். ஒரு சிறுமியாக, வளர்ந்த பெண்ணாக பின் ஒரு நடிகையாக மாறுகிறார்.

இந்த பயணத்தில் அவரின் வாழ்க்கையில் பல திருப்பங்கள். சாதாரண பெண்ணாக சினிமா துறையில் நுழைந்து நூற்றுக்கும் அதிகமான படங்களில் நடித்து ஒரு பெரும் புகழை பெற்றவர்.

அப்படியான புகழ் பெற்ற அவரின் வாழ்வில் ஒரு காதல் இவரையும் கடந்து போகிறது. இதில் மற்றொரு பிரபல நடிகர் ஜெமினி கணேசனும் முக்கிய பங்காற்றுகிறார்.

பிரபலங்களுக்கான காதல் கிசுகிசுக்களில் சிக்கிய இவர்கள் நிஜ வாழ்க்கையில் எப்படியிருந்தார்கள், கடைசி வரை காதல் ஜோடியாக இணை பிரியாமல் இருந்தார்களா?

மேலும் சாவித்திரியின் கடைசி ஆசையை யார் நிறைவேற்றினார்கள் என்பது படத்தின் மீதிக்கதை.

படத்தை பற்றிய அலசல்

கீர்த்தி சுரேஷ் படத்தின் மிக முக்கிய கேரக்டர். தமிழ், தெலுங்கு என பல படங்களில் நடித்த இவர் ஒரு பிரபல நடிகையின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்குமளவிற்கு உயர்ந்திருக்கிறார்.

சாவித்திரி சாதாரணமானவர் அல்ல. சகாப்தம் படைத்தவர். அப்படியான ஒருவராக இப்படத்தில் தன்னையே மாற்றியிருக்கிறார். ஏற்கனவே படங்களில் கீர்த்தி சுரேஷின் சில ரியாக்சனை கேலி கிண்டல் செய்தார்கள்.

ஆனால் இப்படத்தின் மூலம் அவருக்கு அந்த நிலை மாறலாம். இனிவரும் காலத்தில் இதே பெயர் அவருக்கு பொருந்தினாலும் ஆட்சேபனையில்லை என சொல்லலாம்.

ஜெமினி கணேசனாக மலையாள சினிமாவின் பிரபல நடிகர் துல்கர் சல்மான். இவருடன் கீர்த்திக்கும் காதல் மலர்கிறது. ஒரு நடிகரின் மேனரிசத்தை உள்வாங்கி அதை பிரதிபலிப்பது சாதாரணமான விசயமல்ல.

அவ்வகையில் துல்கர் தைரியமாக இறங்கியிருக்கிறார். மேலும் ஒரு தமிழ் படத்திற்காக அவர் முதன்முறையாக தனது சொந்த குரலில் டப்பிங் பேசியிருக்கிறார். ஆனால் முழுமையான ஜெமினி கணேசனாக எல்லாரிடமும் இடம் பெற்றாரா என்றால் கொஞ்சம் சந்தேகம் தான். சில அம்சங்கள் குறைந்து போல இருந்தது.

ஆனால் குடிப்பது போன்ற காட்சியில் கீர்த்தியுடன் இவர் பேசும் போது பார் (மதுக்கடை) பற்றி ரைமிங்காக ஒரு டையலாக் சொல்வார். அதற்கு நல்ல ரீச் இருந்தது.

நடிகை சமந்தா மதுரவாணியாக ஒரு பெண் பத்திரிக்கையாளராக வந்திருக்கிறார். சாவித்திரியை பற்றி விசயங்கள் பெரிதளவில் தெரியாவிட்டாலும் பின் தன் ஆராய்ச்சியால் ரசிகையாக மாறிப்போகிறார்.

இவருக்கும் விஜய் அந்தோனியாக வரும் விஜய் தேவரகொண்டாவுக்கும் காதல் மலர்கிறது. இவர்களுக்கிடையில் காதல் ஓடுகிறது. கலாச்சாரம் ஜெயித்ததா, காதல் வென்றதா என்பது ரகசியம் (படத்தில் பாருங்க).

மேலும் படத்தில் நடிகர் பிரகாஷ் ராஜ், பானுமதி ஆகியோரும், தெலுங்கு சினிமாவின் முக்கிய நடிகர்களும் இதில் இருக்கிறார்கள். ஒவ்வொருவரும் கதாபாத்திரமாக மாறி இடம் பிடித்திருக்கிறார்கள்.

படத்திற்கான காட்சிகள் அக்காலம் போல அருமையாக காட்டியிருக்கிறார் ஒளிப்பதிவாளர். படத்திற்கான பின்னணி இசை, பாடல் வரிகள் என மனதோடு ஒன்றிவிடுகிறது.

கிளாப்ஸ்

கீர்த்தி சுரேஷ் சாவித்திரியாக மாறிய தைரியத்தை பாராட்டலாம்.

அக்கால காதலை இக்கால தலைமுறைக்கு இயல்பாக எடுத்து சொன்னவிதம் நன்று.

வாழ்க்கை வரலாற்று படத்தை அழகாக கொடுத்த இயக்குனரின் அழகான முயற்சி.

நிறைவான காட்சிகளால் சிலிர்ப்புடன் வரும் சிரிப்பு.

பல்பஸ்

சில இடங்களில் கீர்த்தி சுரேஷ் வழக்கமான அசைவுகள் ஃபிளாஷாக தெரிந்தது.

டப்பிங் சில இடங்களில் பொருந்தவில்லை என தோன்றவைத்தது.

மொத்தத்தில் களங்கம் சுமத்தபடும் நடிகைகளுக்கு பின்னால் களங்கமில்லா ஒரு நல்ல மனது இருக்கிறது என நடிகையர் திலகம் காட்டுகிறது.

0 coment�rios:

ஹெல்மெட் போடாமலோ அல்லது கைவசம் லைசென்ஸ் இல்லாமல் அல்லது குடித்து விட்டு வாகனங்களை ஓட்டி  டிராஃபிக் விதிகளை மீறுபவர்களிடம், டிராஃபிக் போலீசா...

டிராஃபிக் விதிகளை மீறுபவர்களுக்கு பணமில்லா முறையில் அபராதம்! – சென்னையில் அறிமுகம்

ஹெல்மெட் போடாமலோ அல்லது கைவசம் லைசென்ஸ் இல்லாமல் அல்லது குடித்து விட்டு வாகனங்களை ஓட்டி  டிராஃபிக் விதிகளை மீறுபவர்களிடம், டிராஃபிக் போலீசார் லஞ்சம் வசூலிப்பதாகவும், அதேபோல் சாலை விதிகளை மீறுபவர்களும் தங்கள் குற்றங்களிலிருந்து தப்பிக்க லஞ்சம் கொடுப்பதாகவும், அதிக அளவில் புகார்கள் வந்தன.  இதையடுத்து, இதை தடுக்கும் விதமாக,  மின்னணு முறையில் -அதாவது பணமில்லா அபராதம்   அபராதம் செலுத்தும் வசதியை சென்னை மாநகர போலீஸ் அறிமுகப்படுத்தியுள்ளது.



தற்போதுள்ள தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப வாகன ஓட்டிகள் நேரடி அபராத தொகையை டிஜிட்டல் கட்டண முறைகளில் செலுத்த ஏதுவாகவும் பணமில்லா அபராதம் செலுத்தும் முறையை கொண்டு வந்துள்ளது.

போக்குவரத்து விதிமீறல்களுக்கான நேரடி அபாராத தொகையை பெறும் முறையில் வெளிப்படை தன்மையை உறுதி செய்யவும், சென்னை மாநகரபோக்குவரத்து காவல் துறை, நேரடி பணமில்லா அபராதம் செலுத்து முறையை இன்று முதல் நடைமுறைப்படுத்தி உள்ளது.

போக்குவரத்து போலீசார், ஸ்பாட் ஃபைன் பொதுமக்களிடம் வாங்குவதால் பல்வேறு மனக்கசப்புகள் ஏற்பட்டன.

போக்குவரத்து போலீசார் லஞ்சம் வாங்குவதுபோன்ற தோற்றத்தை ஏற்படுத்தியது. இதனால் தேவையில்லாத வாக்குவாதம் வீண் பிரச்சனைகள் ஏற்பட்டன.

இதனால், ஸ்பாட் பைன் முறையை நிறுத்துவதாகவும், நேரடி பணமில்லா அபராதம் செலுத்து முறை நடைமுறைபடுத்தப்பட்டுள்ளதாகவும் போக்குவரத்து காவல் துறை தெரிவித்துள்ளது.

போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராத தொகையை, பணமில்லா அபராத தொகை மூலம் செலுத்துவதற்கு கிரெடிட் கார்ட் / டெபிட் கார்டு, பாரத ஸ்டேட் வங்கி ஆன்லைன் பணபரிவர்த்தனை, போஸ்ட் ஆபிஸ், இ-சேவை மையம், PAYTM இதுபோன்று பல்வேறு வகையில் பணம்செலுத்த வகை செலுத்தப்பட்டுள்ளது.

பணம்தான் கொடுக்க வேண்டும் என்றால் நீதிமன்றம் சென்று செலுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எக்காரணம் கொண்டும் போலீசாரிடம் பணம் கொடுக்க வேண்டாம் என்று கூறப்பட்டுள்ளது.

கடந்த 2017 ஆம் ஆண்டு மட்டும் வாகன விபத்தில் 1347 பேர் உயிரிழந்துள்ளனர். குடும்ப உறுப்பினரை இழந்து வாடும் நிலையை அறிந்த பின்னரே போக்குவரத்து காவல் துறை இதுபோன்ற நடவடிக்கைகளை எடுத்து வருவதாக போக்குவரத்து காவல் அதிகாரி ஒருவர் கூறினார்.

0 coment�rios:

நடிகர் ரஜினிகாந்த் இன்று நடந்த காலா படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடந்தது. அதில் பேசிய சூப்பர்ஸ்டார் மிக உருக்கமாக பேசினார். முதலில்...

ரசிகர்களுக்கு பொறுமை இல்லை, அரசியல் கிடையாது: ரஜினி பேச்சு

நடிகர் ரஜினிகாந்த் இன்று நடந்த காலா படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடந்தது. அதில் பேசிய சூப்பர்ஸ்டார் மிக உருக்கமாக பேசினார்.

முதலில் கபாலி படத்தின் ஸ்கிரிப்டை படித்துவிட்டு கதை மிக மெதுவாக நகர்வதாக எனக்கு தோன்றியது. ரஞ்சித்தை அழைத்து இது பற்றி பேசினேன். ரசிகர்களுக்கு இவ்வளவு பொறுமை கிடையாது, நான் கதை கேட்கும்போது ஒரு ரசிகன் என்ன எதிர்பார்ப்பான் என்ற கண்ணோட்டத்தில் தான் கேட்பேன்.

காலா படத்தை மும்பையில் உள்ள தாராவியில் தமிழர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுத்துள்ளோம். ரஞ்சித் 85 நாட்களில் படத்தை முடித்துவிட்டார்.. அடுத்த கே.எஸ்.ரவிக்குமார் அவர்தான் என நினைக்கிறேன்.

"காலாவில் அரசியல் இருக்கும்; ஆனால் காலா அரசியல் படம் கிடையாது" என சூப்பர்ஸ்டார் மேலும் கூறினார்.

0 coment�rios:

நடிகர் ரஜினிகாந்த் இன்று நடந்த காலா படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடந்தது. அதில் பேசிய சூப்பர்ஸ்டார் மிக உருக்கமாக பேசினார். முதலில்...

ரசிகர்களுக்கு பொறுமை இல்லை, அரசியல் கிடையாது: ரஜினி பேச்சு

நடிகர் ரஜினிகாந்த் இன்று நடந்த காலா படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடந்தது. அதில் பேசிய சூப்பர்ஸ்டார் மிக உருக்கமாக பேசினார்.

முதலில் கபாலி படத்தின் ஸ்கிரிப்டை படித்துவிட்டு கதை மிக மெதுவாக நகர்வதாக எனக்கு தோன்றியது. ரஞ்சித்தை அழைத்து இது பற்றி பேசினேன். ரசிகர்களுக்கு இவ்வளவு பொறுமை கிடையாது, நான் கதை கேட்கும்போது ஒரு ரசிகன் என்ன எதிர்பார்ப்பான் என்ற கண்ணோட்டத்தில் தான் கேட்பேன்.

காலா படத்தை மும்பையில் உள்ள தாராவியில் தமிழர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுத்துள்ளோம். ரஞ்சித் 85 நாட்களில் படத்தை முடித்துவிட்டார்.. அடுத்த கே.எஸ்.ரவிக்குமார் அவர்தான் என நினைக்கிறேன்.

"காலாவில் அரசியல் இருக்கும்; ஆனால் காலா அரசியல் படம் கிடையாது" என சூப்பர்ஸ்டார் மேலும் கூறினார்.

0 coment�rios:

சமீபகாலமாக நடிகர் பிரகாஷ்ராஜ் ஆளும் மத்திய அரசான பிஜேபியை விமர்சித்து வருகிறார். தனது நெருங்கிய தோழியும் பத்திரிக்கையாளருமான கவுரி லங்கேஷ் ...

எந்த நேரத்திலும் நான் கொலை செய்யப்படலாம் - பிரகாஷ் ராஜ்

சமீபகாலமாக நடிகர் பிரகாஷ்ராஜ் ஆளும் மத்திய அரசான பிஜேபியை விமர்சித்து வருகிறார். தனது நெருங்கிய தோழியும் பத்திரிக்கையாளருமான கவுரி லங்கேஷ் கொலைக்கு பிறகு மத்திய அரசை கடுமையான எதிர்த்து பேசினார்.

அதன் பிறகு பிரதமர் என்னை விட சிறந்த நடிகர் என்ற விமர்சனத்தை முன்வைத்தார், இதனால் அவரை எதிர்த்து பல இடங்களில் போராட்டம் வெடித்தன. இந்நிலையில் மைசூருவில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரகாஷ் ராஜ் நிருபர்களிடம் பேசுகையில், நான் பாரதிய ஜனதா மற்றும் இந்து அமைப்பினருக்கு எதிராக பேசி வருவதால், என்னை கொலை செய்ய சதி நடக்கிறது.

சில இந்து அமைப்புகள் என்னை கொலை செய்ய திட்டம் தீட்டி வருகிறார்கள். எந்த நேரத்திலும் நான் கொலை செய்யப்படலாம். அதற்கு நான் அஞ்சவில்லை. என்னிடம் இருந்து உயிரை வேண்டுமானால் பறித்துக் கொள்ளலாம். ஆனால் என்னுடைய அறிவு, நடிப்பு திறமையை யாராலும் பறிக்க முடியாது என கூறினார்

0 coment�rios:

நடிகை கீர்த்தி சுரேஷ் தான் தற்போது டாக் ஆஃப் தி டவுன் என்று சொல்லலாம். அவருக்கான பட வாய்ப்புகள் அடுத்தடுத்து குவிந்து வருகிறது. தற்போது மகா...

பலரையும் அசரவைத்த கீர்த்தி சுரேஷ்! குவியும் பாராட்டுக்கள்

நடிகை கீர்த்தி சுரேஷ் தான் தற்போது டாக் ஆஃப் தி டவுன் என்று சொல்லலாம். அவருக்கான பட வாய்ப்புகள் அடுத்தடுத்து குவிந்து வருகிறது. தற்போது மகாநதி படத்திற்கு தமிழில் எதிர்பார்ப்புகள் கூடியுள்ளது.

நடிகையர் திலகம் சாவித்திரியாக இப்படத்தில் அவர் நடித்துள்ளார். தெலுங்கில் இப்படத்தின் முன்னோட்ட காட்சியை பார்த்த பலரும் படத்தை மிகவும் பாராட்டியுள்ளார்கள்.

மேலும் பல ஊடகங்கள் 3 க்கும் அதிகமான ரேட்டிங்ஸ் கொடுத்துள்ளன. கீர்த்தியை தெலுங்கு சினிமாவை சேர்ந்த நடிகைகள், நடிகர்கள் பலரும் வாழ்த்தியுள்ளனர். ட்விட்டரில் ரசிகர்கள், ரசிகைகளும் மாஸ் காட்டியுள்ளனர்.

சாவித்திரியின் மகளும் படத்தை பார்த்துவிட்டு தன் அம்மாவை மீண்டும் பார்த்தது போல இருந்ததாக கீர்த்திக்கு போன் மூலம் மெசேஜ் அனுப்பி பாராட்டியுள்ளார். தமிழில் நாளை பிரிமியர் காட்சிகள் காண்பிக்கப்படவுள்ளது.

மேலும் தமிழக ரசிகர்களை இப்படம் ஈர்க்குமா என பொறுத்திருந்து பார்ப்போம்...

பலரையும் அசரவைத்த கீர்த்தி சுரேஷ்! குவியும் பாராட்டுக்கள் 

0 coment�rios:

பாண்டியராஜனே தனது மகன் குறித்து கவலைப்பட்டால் நான் எங்கே போவது என்று இயக்குநர் கே.பாக்யராஜ் வருத்தம் தெரிவித்தார். ஜெ.எஸ்.அபூர்வா புரொடக...

பாண்டியராஜனே கவலைப்பட்டால் நான் எங்கே போவது? மேடையில் வருத்தப்பட்ட பாக்யராஜ்

பாண்டியராஜனே தனது மகன் குறித்து கவலைப்பட்டால் நான் எங்கே போவது என்று இயக்குநர் கே.பாக்யராஜ் வருத்தம் தெரிவித்தார்.

ஜெ.எஸ்.அபூர்வா புரொடக்ஷன்ஸ் சார்பில் ஜெய்சந்திரா சரவணக்குமார் தயாரித்துள்ள படம் `தொட்ரா’. இயக்குநர் பாக்யராஜின் சீடரான மதுராஜ் இந்தப்படத்திற்கு கதை, திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார்.

பிருத்வி ராஜன் நாயகனாகவும், மலையாள நடிகை வீணா நாயகியாகவும் நடித்துள்ளா இந்தப்படத்தில், இயக்குநர் ஏ.வெங்கடேஷ், எம்.எஸ்.குமார், கார்த்திக் சுப்புராஜின் தந்தை கஜராஜ், தீப்பெட்டி கணேசன், மைனா சூஸன், கூல் சுரேஷ், குழந்தை நட்சத்திரம் அபூர்வா சஹானா, ராஜேஷ் ஆகியோர் நடித்துள்ளனர். உத்தமராஜா இசையமைத்துள்ளார்.

தொட்ரா படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர்கள் கே.பாக்யராஜ், பாண்டியராஜன், ஆர்.கே.செல்வமணி, பேரரசு, ஏ.வெங்கடேஷ், ​மீரா கதிரவன், தயாரிப்பாளர்கள் கலைப்புலி எஸ்.தாணு, ஜே எஸ் கே, சுரேஷ் காமாட்சி, விடியல் ராஜூ, கனியமுதன், நடிகர்கள் பரத், ஸ்ரீகாந்த், கலையரசன், அரீஷ் குமார்,​ நடிகை நமீதாவின் கணவரும் நடிகருமான வீரா, ​ஷரண், போஸ் வெங்கட், லொள்ளு சபா ஜீவா, நடிகைகள் நமீதா, வசுந்தரா, கோமல் ஷர்மா தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்க தலைவர் டி.எஸ்.ஆர்.சுபாஷ், பி. டி. செல்வகுமார் உள்ளிட்ட பலரும் மற்றும் படக்குழுவினரும் கலந்துகொண்டனர்.

நடிகர் பரத் பேசும்போது, “தொட்ரா படம் டைட்டிலிலேயே பாஸ்மார்க் வாங்கிவிட்டது. எனக்கு காதல் படம் பிரேக் கொடுத்தது போல பிருத்விக்கு இந்த ‘தொட்ரா’ படம் அமையும் என சொல்கிறார்கள். உண்மைதான் அந்தப்படம் எனக்கு மட்டுமல்லாமல் அதில் பணியாற்றிய பலருக்கு பெயர் வாங்கிக் கொடுத்தது. அதேபோல இந்தப்படமும் ஒரு காவியமாக அமையும் என நம்புகிறேன்” என்றார்.

நடிகர் கூல் சுரேஷ் பேசும்போது, “இந்தப்படத்தில் ஹீரோ ஹீரோயின் கையைப் பிடித்துக்கொண்டு ஓடவேண்டும்.. அவர்களை நானும் இயக்குநர் ஏ.வெங்கடேஷும் துரத்த வேண்டும். இப்படி ஒரு காட்சியை படமாக்கியபோது, இயக்குநர் கட் சொன்னபின்னும் கூட ஹீரோவின் கையை விடாமல் பிடித்து ஓடிக்கொண்டே இருந்தார் நாயகி வீணா. அப்புறம் உதவி இயக்குநர்கள் பின்னாலேயே ஓடிப்போய்த்தான் நிறுத்தவேண்டி இருந்தது” என படப்பிடிப்பின் சுவாரஸ்யங்களை பகிர்ந்துகொண்டார்.

அடுத்ததாக பிரபல இயக்குநரும், படத்தின் நாயகன் பிருத்வியின் தந்தையுமான பாண்டியராஜன் பேசியபோது, “பிருத்வி இவ்வளவு நண்பர்களை சேர்த்து வைத்திருப்பான் என நினைத்தே பார்க்கவில்லை. என் கவலையெல்லாம் இன்னும் அவன் சினிமாவில் ஒரு நல்ல நிலைக்கு வரவில்லையே என்பதுதான். வெற்றி அவ்வளவு சாதாரணமாக வந்துவிடாது. உடனே வந்துவிட்டால் அதற்கு மரியாதையும் கிடையாது. எதற்கும் ஒரு நல்ல நேரம் வரவேண்டும். ஆனால் இந்தப் படத்தை பார்த்ததும் பிருத்விக்கு அந்த நல்ல நேரம் வந்துவிட்டது என்றே தோன்றுகிறது. அந்த அளவுக்கு இந்தப் படத்தில் பிருத்வியை பார்க்கும்போது புது தேஜஸ் தெரிகிறது.” என ஒரு தகப்பனாக தனது உணர்வுகளை நெகிழ்ச்சியுடன் கூறி கண் கலங்கினார்.

படத்தின் இயக்குநர் மதுராஜ் பேசும்போது, “இந்தப் படத்தை பார்த்துவிட்டு என் குருநாதர் பாக்யராஜ் சார், என் பெயரைக் காப்பாற்றிவிட்டாய் எனக் கூறினார். இதைவிட பெரிய விருது வேறொன்றும் இருக்க முடியாது. கதாநாயகி வீணாவை படப்பிடிப்பின் போது அடித்துவிட்டதற்காக அவரிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். படத்தின் தயாரிப்பாளர் சந்திரா எனக்கு இன்னொரு அம்மா போல” என நெகிழ்வுடன் குறிப்பிட்டார்.

தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பேசும்போது, “சமீபத்தில் நடைபெற்று முடிந்த வேலைநிறுத்தம் வெற்றி என எல்லோரும் பாராட்டிப் பேசுகிறார்கள்.. அதற்கு ஒரு பிரஸ்மீட்டும் வைத்து அறிவித்துவிட்டார்கள். அதனால் நான் குறை ஏதும் சொன்னால் அது தவறாகப் போய்விடும்.. ஆர்.கே.செல்வமணி அண்ணன் இந்த சமயத்தில் இயக்குநராக படம் இயக்கவேண்டும் என வேண்டுகோள் வைக்கிறேன்.. அப்போதுதான் எங்கள் கஷ்டம் உங்களுக்கு புரியும். சினிமாவில் எப்போதும் பெரிய நடிகர்களை சுற்றிக்கொண்டே இல்லாமல் புது ஆட்களும் வளரட்டும். அதனால் இந்த நடிகரை வைத்து இவ்வளவு சம்பளம் கொடுத்து இந்த பட்ஜெட்டுக்குள் தான் படம் எடுக்கவேண்டும் என தயாரிப்பாளர்களின் சுதந்திரத்தை நசுக்க வேண்டாம். கோடிகளைக் கொட்டி படம் எடுக்கும் தயாரிப்பாளர்களுக்கு யாரை வைத்து படமெடுக்க வேண்டும் எனத் தீர்மானிக்கும் உரிமை கூட இல்லையா..?” என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்..

அவருக்கு பதில் கொடுக்கும் விதமாக மீண்டும் மைக் பிடித்த இயக்குநர் ஆர்.கே.செல்வமணி, “தயாரிப்பாளர்களுக்குள் புரிதல் இல்லை என இதைத்தான் நாங்கள் சொல்கிறோம். மீண்டும் மீண்டும் விவாதத்திற்கு நாங்கள் தயாராக இல்லை. பணம் இருக்கிறதே என நீங்கள் விரும்பிய ஆட்களுக்கு சம்பளத்தை அள்ளிக்கொடுத்து விட்டால், பின்னால் வரும் தயாரிப்பாளர்களை அது பாதிக்கும்.. அதற்காகத்தான் இந்த கட்டுப்பாடுகள். படம் எடுக்கும்போது உள்ள பிரச்சனைகளை சொல்லுங்கள்.. சரி பண்ணுகிறோம்.. கடந்த வருடம் வரை நடந்த விஷயங்களை இனி பேசவேண்டாம்.. கோடிகளைக் கொட்டி படம் எடுக்கிறீர்கள்.. டெக்னீசியன்களுக்கு கொடுத்த சம்பளம் போக மீதிப்பணம் உங்களுக்கு திரும்பி வந்துவிட்டதா..? நஷ்டம் தானே.. இனி அது இன்னொரு தயாரிப்பாளருக்கு நேரக்கூடாது.. அதுதான் எங்கள் நோக்கம்”. என்றார்..

நிகழ்ச்சியின் இறுதியில் இயக்குநர் கே.பாக்யராஜ் பேசும்போது, “பாண்டியராஜன் தனது மகனைப் பற்றி ரொம்பவே ஃபீல் பண்ணிப் பேசினார். அவரே ஃபீல் பண்ணினால், அவருக்கு முன்னாடி வந்த நான் என் மகன் சாந்தனுவை பற்றி எவ்வளவு ஃபீல் பண்ணியிருப்பேன். பத்து வருடங்களுக்கு முன் ‘காதல்’ படத்தில் நடிக்கச்சொல்லி சாந்தனுவுக்குத்தான் அந்த வாய்ப்பு வந்தது. படம் நிச்சயம் ஹிட்டாகும் என நன்றாகவே தெரிந்தது. ஆனாலும் அப்போது அந்தப்படத்தில் நடிக்கும் அளவுக்கு அவருக்கான வயது இல்லை என மறுத்துவிட்டேன். அதற்குப்பின் அந்த வாய்ப்பு பரத்திற்குப் போய், படமும் மிகப்பெரிய ஹிட்டாகி விட்டது.

அதனால் யாருக்கு என்ன கிடைக்கவேண்டுமோ அது எல்லாமே வரும் நேரத்தில் தான் வரும். அதற்காக நாம் கவலைப்பட வேண்டியதில்லை. என்னுடைய உதவி இயக்குநர் என்பதற்காகவே மதுராஜுக்கு படம் கொடுத்ததாக தயாரிப்பாளர் சொன்னார். அந்தவகையில் இந்தப்படத்தை நல்லபடியாக முடித்து ஆடியோ ரிலீஸ் அளவுக்கு கொண்டு வந்ததிலும் தயாரிப்பாளருடன் எந்தவித பிரச்சனையும் இல்லாமல் படத்தை முடித்ததிலும் இயக்குநர் மதுராஜ் என் பெயரைக் காப்பாற்றி விட்டார். சினிமாவில் பலரும் வில்லனாக நடித்து ஹீரோவாக உயர்ந்தவர்கள் தான். அதனால் இந்தப்படத்தில் நடித்த எம்.எஸ்.குமாரும் ஹீரோவாக மாற வாழ்த்துகள்” என வாழ்த்திப் பேசினார்.

0 coment�rios:

ஹாலிவுட் நடிகர் ஜாக்கிசானின் மகள் ஓரினச்சேர்க்கையாளருடன் இருப்பதற்கு இடமில்லாமல் தெருவோரம் வசித்து வருவதால் உதவி கேட்டு தனது தோழியுடன் இருக...

தோழியுடன் தெரு ஓரம் வசிக்கும் ஜாக்கிசான் மகள்

ஹாலிவுட் நடிகர் ஜாக்கிசானின் மகள் ஓரினச்சேர்க்கையாளருடன் இருப்பதற்கு இடமில்லாமல் தெருவோரம் வசித்து வருவதால் உதவி கேட்டு தனது தோழியுடன் இருக்கும் படத்தை வெளியிட்டுள்ளார்.

ஹாலிவுட் நடிகர் ஜாக்கிசான் 1998-ம் ஆண்டு ஆசிய அழகி பட்டம் வென்ற எலைன் இ லீ என்ற பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்தார். இவர்களுக்கு பிறந்த மகள் எட்டா சோக் லாம் (18). இதை ஜாக்கிசான் பகிரங்கமாக ஒப்புக்கொண்டார். தாயுடன் வசித்து வந்த எட்டா சோக் லாமை காணவில்லை என்று அவருடைய தாய் எலைன் போலீசில் புகார் செய்தார்.

இந்த நிலையில் எட்டா சோக்லாம் நான் ஒரு ஓரின சேர்க்கையாளர் என பகிரங்கமாக அறிவித்தார். தனது தோழி ஆன்டி ஆன்டுடன் ஜோடியாக இருக்கும் படத்தையும் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந்த நிலையில் எட்டா ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் கூறி இருப்பதாவது:-

நானும் என் தோழி ஆன்டி ஆன்டும் செலவுக்கு பணம் இல்லாமல், இருக்க இடம் இல்லாமல் ஹாங்காங்கில் கஷ்டப்படுகிறோம். வீடு இல்லாமல் தெரு ஓரத்தில், பாலத்தின் அடியில் எல்லாம் தூங்க வேண்டியது இருக்கிறது. தயவு செய்து எங்களுக்கு இருக்க இடம் கொடுத்து உதவி செய்யுங்கள்.

எங்கள் இருவருக்கும் இடையே இருப்பது புனிதமான அன்பு. பெற்றோர் நண்பர்கள், உறவினர்கள் என பலரிடம் உதவி கேட்டோம். யாரும் உதவ முன்வரவில்லை. என் தந்தை 395 மில்லியன் டாலர்களுக்கு சொந்தகாரர் அவரும் எங்களை கண்டுகொள்ளவில்லை. நாங்கள் ஓரின சேர்க்கையாளர்களாக இருப்பதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். தயவு செய்து எங்களுக்கு இருக்க இடம் கொடுங்கள். அரசு நடத்தும் ஆதரவற்றோர் இல்லங்களுக்கு சென்றால் எங்களை பிரித்து விடுவார்கள். தயவு செய்து யாராவது உதவுங்கள்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார். 

0 coment�rios:

என் இனிய தமிழ் மக்களுக்கு, தினந்தோறும் தட்டு நிறைய திட்டுகளை வழங்கிக் கொண்டிருக்கிறார் பாரதிராஜா. “சும்மா சிகரெட்டை தூக்கிப் போட்டு பிடிச்ச...

இனி ரஜினியை பற்றி பேசப் போவதில்லை! பாரதிராஜா திடுக் முடிவு!

என் இனிய தமிழ் மக்களுக்கு, தினந்தோறும் தட்டு நிறைய திட்டுகளை வழங்கிக் கொண்டிருக்கிறார் பாரதிராஜா. “சும்மா சிகரெட்டை தூக்கிப் போட்டு பிடிச்ச ஆளோட கட் அவுட்டுக்கு எதுக்குய்யா பாலாபிஷேகம் பண்ற? சி.எம் ஆகுறதுக்கு அதுவே தகுதியாகிடுமா? என்றெல்லாம் அவர் ரஜினியை வார வார…. ரஜினி மக்கள் மன்றம் படு சூடாகி வருகிறது.

பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த ‘கொடிபறக்குது’ படத்தில் ரஜினி சிகரெட் பிடிக்கும் காட்சியை திரும்ப ரிப்பீட் பண்ணி, ‘இப்படி சீன் வச்சவரு எப்படி பேசுறார் பாருங்க?’ என்று ரிப்பீட் அடிக்கிறார்கள். அது போதாது என்று பாரதிராஜாவின் திரைப்பட கல்லூரியை திறந்து வைக்க வந்த ரஜினியின் போட்டோவை போட்டு, அப்ப மட்டும் இவர் உங்களுக்கு தேவைப்படுகிறாரா? என்று கேள்வி கேட்கிறார்கள். இதெல்லாம் பாரதிராஜாவின் பார்வைக்கு போகிறதோ, இல்லையோ?

‘நாம ஏன் அவரை தேவையில்லாமல் விமர்சிக்கணும்?’ என்ற முடிவுக்கு வந்திருக்கிறாராம் அவர். ‘இன்னும் கட்சியே ஆரம்பிக்கல. இன்னும் கொடியை கூட அறிமுகப்படுத்தல. இரண்டையும் செஞ்சுட்டு முழு நேர அரசியல்வாதியா ரஜினி வரட்டும். அப்ப விமர்சிக்கலாம். இப்ப விமர்சிக்கறது அவ்வளவு நல்லாயிருக்காது’ என்று திடீர் முடிவை எடுத்திருக்கிறாராம்.

இனி சினிமா விழாக்களில் மைக்கை பிடிக்கும் பாரதிராஜாவிடம், ரஜினி பற்றி கேள்வி கேட்பவர்களுக்கு ஒரே பதில்தான் வைத்திருப்பார்.

“ஸாரிய்யா… நெக்ஸ்ட் கொஸ்டீன்!”

0 coment�rios:

டயானா விபத்தில் உயிரிழக்கவில்லை எனவும் திட்டமிட்டே அவர் படுகொலை செய்யப்பட்டார் எனவும் டயானாவின் காதலரின் தந்தை கூறியுள்ளார். பிரித்தானியா...

இறக்கும் போது இஸ்லாமிய வாரிசை வயிற்றில் சுமந்தாரா டயானா?....

டயானா விபத்தில் உயிரிழக்கவில்லை எனவும் திட்டமிட்டே அவர் படுகொலை செய்யப்பட்டார் எனவும் டயானாவின் காதலரின் தந்தை கூறியுள்ளார்.

பிரித்தானியா இளவரசி டயானா தனது காதலர் Dodi Fayed-யுடன் காரில் செல்லும் போது ஏற்பட்ட விபத்தில் கடந்த 1997ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31ஆம் திகதி பலியானார்.

டயானா இறந்து 20 வருடங்கள் ஆகவுள்ள நிலையில் அவர் விபத்தில் தான் இறந்தாரா அல்லது கொல்லப்பட்டாரா என்ற விவாதங்கள் தற்போதும் நடைப்பெற்று வருகின்றது.

இதனிடையில் டயானா - Dodi Fayed காதல் விவகாரத்தை அறிந்து அவர்களுக்கு ஆதரவாக இருந்த Dodiயின் தந்தை Mohamed Al-Fayed ஆரம்பத்திலிருந்தே இது விபத்தல்ல படுகொலை என கூறி வருகிறார்.

இது தொடர்பாக அவர் நீதிமன்றத்தில் சில வருடங்களுக்கு முன்னர் வழக்கு தொடர்ந்த நிலையில் அது தள்ளுபடி செய்யப்பட்டது.

Mohamed கூறுகையில், MI6 ரகசிய புலனாய்வு நிறுவனமும், பிரித்தானியா அரச குடும்பமும் சேர்ந்து தான் திட்டமிட்டு இந்த விபத்தை ஏற்படுத்தினார்கள்.

இது ஒரு படுகொலை என கூறியுள்ளார்.

மேலும் Mohamed கூறுகையில், பிரான்ஸ் புலானாய்வு நிறுவனமும் இதற்கு உதவியுள்ளது.

தன்னிடம் டயானா ஒரு முறை போனில் பேசும் போது தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், தான் கர்ப்பமாக இருப்பதாகவும் கூறியதாக Mohamed தெரிவித்துள்ளார்.

மேலும், இஸ்லாமிய மதத்தை சேர்ந்த குழந்தை டயானாவின் வயிற்றில் வளருவதை அரச குடும்பம் விரும்பவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், தனது கணவர் சார்லஸ் தனது காரின் பிரேக்கை எடுத்து விட்டு விபத்தை ஏற்படுத்த திட்டமிடுவதாகவும் டயானா தான் கைப்பட எழுதியதாக ஒரு கடிதம் முன்னர் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

0 coment�rios:

தீனா என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கால் பதித்தவர் தான் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்.மேலும் அஜித்திற்கு தல என்று பெயர் வர காரணமாகவும்...

இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் மகனா இது?... இதுவரை கண்டிராத புகைப்படம்


தீனா என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கால் பதித்தவர் தான் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்.மேலும் அஜித்திற்கு தல என்று பெயர் வர காரணமாகவும் இருந்த இவர் இதுவரை தமிழில் எடுத்த அனைத்து படங்களுமே ஹிட் என்றே கூறலாம்.

கள்ளக்குறிச்சியில் பிறந்த ஏ. ஆர்.முருகதாஸ் அதே ஊரை சார்ந்த ரம்யா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். மேலும் இவரது மனைவி ரம்யா மிகுந்த தெய்வபக்தி கொண்டவராம். அதனால் இவர்கள் இருவரும் அடிக்கடி கோவில், குளம் என்று தான் செல்வார்களாம்.

தற்போது ஏ. ஆர். முருகதாஸிற்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகளும் இருக்கின்றனர். பெரும்பாலும் பிரபலங்கள் சிலர் தங்களது குடும்ப நபர்களை வெளியுலகிற்கு அறிமுகம் செய்து கொள்வது இல்லை. ஆனால் முருகதாஸ் சற்று வித்தியாசமனவராக இருந்து வருகிறார்.

இவர் எந்த நிகழ்ச்சிக்கு சென்றாளும் பெரும்பாலும் தனது மனைவி மற்றும் தனது பிள்ளைகளுடனே தான் செல்வாராம். அவ்வளவு ஏன் தனது மகன் மற்றும் மகளை அடிக்கடி ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு கூட அழைத்து செல்வாராம். விஜய் நடித்த துப்பாக்கி படத்தின் போது கூட அவர்கள் இருவருமே விஜயயை ஷூட்டிங் ஸ்பாட்டில் சந்தித்துப் பேசியுள்ளார்களாம்.

0 coment�rios:

ராக்ஸ்டார் ரமணியம்மா இவரை தற்போது தெரியாதவர்கள் என்று யாருமே இல்லை. அந்த அளவிற்கு பட்டித்தொட்டியெல்லாம் தன் குரலால் பட்டையை கிளப்பியவர். ...

அதை மட்டும் விடமாட்டேன், நீண்ட நாட்களுக்கு பிறகு மௌனம் கலைத்த ராக்ஸ்டார் ரமணியம்மா- உருக்கமான பதில்

ராக்ஸ்டார் ரமணியம்மா இவரை தற்போது தெரியாதவர்கள் என்று யாருமே இல்லை. அந்த அளவிற்கு பட்டித்தொட்டியெல்லாம் தன் குரலால் பட்டையை கிளப்பியவர்.

இவர் கலந்துக்கொண்ட போட்டியில் இரண்டாம் பரிசை வென்றார், தற்போது பல இசையமைப்பாளார்கள் இவரை பாட வைக்க முயற்சி செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் ரமணியம்மா முதன் முதலாக போட்டிக்கு பிறகு ஒரு உருக்கமான பேட்டியை கொடுத்துள்ளார்.

இதில் ‘எனக்கு தமிழக மக்கள் கொடுத்த அன்பே போதும், இந்த புகழுக்கு மேல் எனக்கு என்ன வேண்டும், இதுவே போதும்.

வீட்டு வேலை செய்து தான் இந்த இடத்திற்கு வந்தேன், சினிமாவில் பிஸியானாலும் அந்த வேலையை ஒரு போதும் விடமாட்டேன்’ என உருக்கமாக பேசியுள்ளார்.

0 coment�rios:

சொந்த வீட்லேயே எலியை வச்சுகிட்டு, ஊருக்கே மருந்து தெளித்துக் கொண்டிருக்கிறார் கமல். கமலின் மய்யம் விசில் ஆப், நேற்று கோலாகலமாக துவங்கப்பட...

தமிழகத்தின் அடுத்த முதல்வர் வாட்டாள் நாகராசுவா இருக்குமோ? டவுட் கிளப்பும் சாருஹாசன்!

சொந்த வீட்லேயே எலியை வச்சுகிட்டு, ஊருக்கே மருந்து தெளித்துக் கொண்டிருக்கிறார் கமல்.

கமலின் மய்யம் விசில் ஆப், நேற்று கோலாகலமாக துவங்கப்பட்டுவிட்டது. பல நாள் உழைப்பு. மண்டையை கசக்கியதன் பலன், மிக அற்புதமான செயலியாக வந்திருக்கிறது அது.

அந்தந்த ஊரில் தேவைப்படும் அவசியங்களை, நடக்கும் அநியாயங்களை இதில் வீடியோவாக பதிவிடலாம். அல்லது புகாராக தெரிவிக்கலாம். அதை சம்பந்தப்பட்ட துறைக்கு கொண்டு செல்கிற பொறுப்பை ஏற்றுக் கொண்டிருக்கிறது கமலின் இந்த செயலி. இத்தகைய புகார்களை அரசு கண்டுகொள்ளுமா, விட்டுத் தள்ளுமா? என்பது அடுத்த விஷயம். ஆனால் குறைகளை அரசின் கண் விழிக்கு அருகே கொண்டு செல்கிற இந்த ஒரு திட்டமே, கமலின் புலிவேக பாய்ச்சலுக்கு எடுத்துக்காட்டு.

இந்த நேரத்தில்தான் அவரது அண்ணன் சாருஹாசன் ட்விட்டரில் ஒரு கருத்தை பதிவு செய்திருக்கிறார். கர்நாடகத்தை சேர்ந்த ஒருவர்தான் தமிழகத்தின் அடுத்த முதல்வர் என்று கூறியிருக்கிறார்.

எப்போதும் தாட் பூட்டாக பேசுவதில் சாருஹாசன் யாருக்கும் சளைக்காத ஹாசன். ‘என் தம்பி கமலாவது கடவுள் இருந்தா நல்லாயிருக்கும்னு சொல்றான். நான் இல்லேன்னு சொல்றேன்’ என்றார் ஒருமுறை. அப்படிப்பட்டவர், இப்படி தடாலடியாக பதிவிடுவது ஆச்சர்யமில்லை. ஆனால் ஒரு குழப்பம்.

அவர் சொல்லும் அந்த கர்நாடகாக் காரர் யார்? வாட்டாள் நாகராஜா இருக்குமோ, இல்ல தேவ கவுடாவாக இருக்குமோ? என்றெல்லாம் மயிர் கூச்செரிகிறார்கள் ரசிகர்கள்.

ஏனென்றால், ‘நான் தமிழன்’ என்று ரஜினி சத்தியம் பண்ணி பல வருஷமாச்சே?

0 coment�rios:

வரவர தமிழன் சோம்பேறியாப் போனான் என்பதற்கு உதாரணம்தான், சர்பத் மற்றும் டீ கடைகளில் கூட வட மாநிலத்தானின் ஆக்ரமிப்பு. (நீ ஒழுங்கா வேல பார்த்தா...

முனியாண்டி விலாஸ்ல கூட வட மாநிலத்தவன்தான் வேல பார்க்குறான்!

வரவர தமிழன் சோம்பேறியாப் போனான் என்பதற்கு உதாரணம்தான், சர்பத் மற்றும் டீ கடைகளில் கூட வட மாநிலத்தானின் ஆக்ரமிப்பு. (நீ ஒழுங்கா வேல பார்த்தா அவன் ஏன்யா வர்றான்?) ஆனால் தமிழனின் சோம்பேறித்தனத்தையும், குடிக்கு அடிமை ஆகிவிட்டதை பற்றியும் கவலைப்பட வேண்டிய சூழ்நிலையில் தமிழ்நாடு இருப்பதை மறந்துவிட்டு, பழியை அவன் தலையில் போடுகிற வேலையை சிறப்பாக செய்தது ஒரு பட விழா.

யுரேகா இயக்கிய ‘காட்டுப்பய சார் இந்த காளி’ என்ற படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில்தான் இத்தகைய கார சாரம். சும்மாவே அரசியல் சூடு காணும் களமாகிவிட்ட மேடைகளில், பாரதிராஜா, கவுதமன் போன்றவர்கள் இருந்தால் அது எப்படியிருக்கும். அப்படியே கொதித்தது. முதலில் தீயை மூட்டியவரே யுரேகாதான்.

‘இப்பல்லாம் சரவணபவன்ல சாம்பார் ஊத்துறவன் கூட வட மாநிலத்தவனாதான் இருக்கான். எங்க திரும்பினாலும் அவனைதான் வேலைக்கு வச்சுருக்காங்க. அவன் பேசுற மொழிக்கு நாம மாற வேண்டியிருக்கு. இந்த அநியாயத்தை எங்க போய் சொல்லுவது? அது ஒருபக்கம்னா, வட்டிக்கு விடுற மார்வாடிங்க தமிழனின் கஷ்டத்துக்கு முன்னாடி வந்து நிற்க மாட்டேங்குறான். காவேரி பிரச்சனையில் நாம வீதிக்கு வந்து போராடும்போது, அவன் ஜம்முன்னு மேட்ச் பார்க்க உள்ள போறான். இதையெல்லாம் தட்டிக் கேட்கணும். அதிக வட்டி வாங்குறது. கடனை அடைக்கணும்னு நினைச்சா கூட அடைக்க விடாம அவனை பிழிஞ்சு எடுக்கறது. இதையெல்லாம் விடக் கூடாது’ என்று பொங்கினார்.

உண்மையில் இந்தப்படமே தமிழ்நாட்டில் பிழைக்க வந்த வட மாநிலத்தவர்கள் பற்றிய படம்தானாம். ஜெயவந்த் ஹீரோவாக நடித்திருக்கும் இந்தப்படத்தின் பாடல்களில் ஒரு பாடல் எச்.ராஜா கோஷ்டிகளை வயிறெரிய விடுவது நிச்சயம். காவி உடையுடன் சாமியார்கள் கஞ்சா அடித்தபடி ஆடும் அந்தப்பாடல், ஆன்ட்டி இண்டியன்களின் தேசிய கீதமாக இருக்கப் போவதும் சத்தியம்.

ஆமா… அங்கு வந்த பாரதிராஜா என்ன பேசினாராம்?

அவருக்கென்ன? ரஜினியை கழுவி ஊற்றிவிட்டு கிளம்பினார். ஆல் ஆர் ஆன்ட்டி ரஜினிஸ்…

0 coment�rios:

கர்நாடக தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுலுக்கு சவால் விடுத்திருக்கிறார். கர்நாடகாவில் வீசுவது பா.ஜ.க, மோடியின...

'குறிப்புகள் இல்லாமல் 15 நிமிடங்கள் பேசத் தயாரா?’ - ராகுலுக்குச் சாவல்விட்ட மோடி

கர்நாடக தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுலுக்கு சவால் விடுத்திருக்கிறார். கர்நாடகாவில் வீசுவது பா.ஜ.க, மோடியின் அலை இல்லை, பா.ஜ.க-வின் புயல் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.

கர்நாடக சட்டசபைக்கு வருகிற 12ம் தேதி தேர்தல் நடக்க உள்ளது. இதையொட்டி பிரதமர் மோடி, அமித் ஷா, யோகி ஆதித்யநாத் ஆகியோர் 10 நாள்களில் 60 தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொள்ள திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில், சாமரஜனகார மாவட்டத்தில் உள்ள சாந்தமெராஹள்ளியில் நடந்த பா.ஜ.க பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு பிரதமர் மோடிபேசினார்.

கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகையில், '' நான் இங்கு வந்ததற்கு முன்பு, கர்நாடகாவில் பா.ஜ.கவுக்கு ஒரு 'அலை' உள்ளது என்று கூறப்பட்டது. கர்நாடகாவில் வீசுவது பி.ஜே.பி அலை இல்லை, பி.ஜே.பியின் புயல். கர்நாடக மக்களுக்கு எடியூரப்பா மீது நம்பிக்கை உள்ளது. அவர் இந்த மாநிலத்தின் அடுத்த முதல்வர் ஆவார். கர்நாடகாவில் காங்கிரஸ் செய்த வளர்ச்சி திட்டங்கள் பற்றி 15 நிமிடங்கள் பேப்பர் இல்லாமல் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசத் தயாரா?. பிரதமர் மோடி சவால் விடுத்தார். இந்தக் கூட்டத்தில் கார்வார், உடுப்பி மாவட்டங்களில் உள்ள சட்டசபை தொகுதிகளில் பா.ஜ.க சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி பிரசாரம் செய்தார்.

0 coment�rios:

நடிகரும் பாஜக பிரமுகருமான எஸ்.வி.சேகர் தனது முகநூலில் பெண் பத்திரிகையாளர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்ததால் அவர் மீது வழக்குப்ப...

உளறி கொட்டிய எஸ்.வி. சேகர் - தீவிரம் காட்டும் போலிஸ்....இன்று கைதாக வாய்ப்பு!

நடிகரும் பாஜக பிரமுகருமான எஸ்.வி.சேகர் தனது முகநூலில் பெண் பத்திரிகையாளர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்ததால் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் அவர் எந்த நேரமும் கைது செய்யப்படுவார் என்று கூறப்பட்ட நிலையில் எஸ்.வி.சேகரின் முன் ஜாமீன் மனு விசாரணையில் அவரை கைது செய்ய தடை விதிக்க நீதிமன்றம் மறுத்துவிட்டது.

இதனையடுத்து எஸ்.வி.சேகரை கைது செய்ய சென்னை சைபர் கிரைம் போலீசார் தீவிரம் காட்டி வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

ஆனால் எஸ்.வி.சேகர் தற்போது தலைமறைவாக இருப்பதாக கூறப்படுவதால் அவரை தேடும் பணியில் தனிப்படை போலீசார் ஈடுபட்டிருப்பதாகவும், மிக விரைவில் அவர் கைது செய்யப்படுவார் என்றும் தெரிகிறது.

இந்த நிலையில் எஸ்.வி.சேகர் விவகாரம் குறித்து கருத்து கூறிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, எஸ்.வி.சேகர் மீது அரசு சட்டப்படி நடவடிக்கை எடுக்கும் என்று கூறியுள்ளார்.

0 coment�rios: