Home Top Ad

1. சாப்பிடும் அரை மணி நேரம் முன் தண்ணீர் குடிக்க கூடாது. 2. சாப்பிடும் போது நேராக தரையில் உட்கார்ந்து சாப்பிட வேணும் . 3. டிவி பார்த்து...

சாப்பிடும் போது கடைப்பிடிக்க வேண்டியவை..

1. சாப்பிடும் அரை மணி நேரம் முன் தண்ணீர் குடிக்க கூடாது.

2. சாப்பிடும் போது நேராக தரையில் உட்கார்ந்து சாப்பிட வேணும் .

3. டிவி பார்த்து கொண்டு சாப்பிட கூடாது. முடிந்த வரை பற்களால் மென்று தின்ன வேண்டும்.

நாம் மென்று சாப்பிடும் போது நம் வாயீன் உமிழ்நீர் உடன் செல்வதால் நன்கு செரித்து விடும்

4. காலை உணவு 7 – 9 மணிக்குள் சாப்பிட வேண்டும். காலை வயிறு செரிமானம் செய்வதால் கல்லை தின்றாலும் செரித்து விடும்.

5.மதியம் உணவு 1-3 மணிக்குள் சாப்பிட வேண்டும். சிறுகுடல் செரிமானம் செய்வதால் லைட் ஆனா உணவு சாப்பிட வேண்டும்.சிருகுடலை பொருத்த வரை கூழ் ஆனா உணவை விரைவில் செரிக்கும்.

6. இரவு உணவு 7-9 மணிக்குள் சாப்பிட வேண்டும். இந்த நேரத்தில் இதயமேலுறை நேரம் என்பதால் எண்ணை பொருட்கள் சாப்பிட கூடாது. லைட் ஆனா உணவு சாப்பிட வேண்டும்.

7.சாப்பிடும் போது தாகம் எடுத்தல் ஒரு சிறிய மூடி அளவு தண்ணீர் குடிக்கலாம். சாப்பிட்டு அரை மணி நேரம் கழித்து தான், தண்ணீர் நிறைய குடிக்கலாம். நாம் சாப்பிடும் போது உடலில் ஒரு வித அமிலம் சுரக்கும் தண்ணீர் குடித்தால் அது சுரப்பது நின்று விடும்.

8. இந்த அமிலம் இல்லை என்றாலும் உணவு செரிக்கும் ஆனால் சத்துகள் பிரியாமல் அனைத்தும் தங்கி விடும்.

9. இவை தான் உடலி பெரிய நோயிகளை ஏற்படுத்தும். இந்த நோய்களின் முதல் காரணம் நாம் சாப்பிடும் முறைகள் தான்..

10. முறையான நேரத்திலும், முறையான முறையிலும் சாப்பிட்டு மருந்து இல்ல உலகை படைப்போம். இயற்கை யை நோக்கி பயணிப்போம்…

0 coment�rios:

*மலர்களை ரசிக்க மட்டும் தெரிந்த நமக்கு அதன் மருத்துவ குணங்கள்* * தெரிவதில்லை தெரிந்தாலும் அதை எப்படி உபயோகிப்பது என்ற சந்தேகத்திலேயே* *அ...

*மலர்களை ரசிக்க மட்டும் தெரிந்த நமக்கு அதன் மருத்துவ குணங்கள்* *

*மலர்களை ரசிக்க மட்டும் தெரிந்த நமக்கு அதன் மருத்துவ குணங்கள்* *

தெரிவதில்லை
தெரிந்தாலும் அதை எப்படி உபயோகிப்பது என்ற சந்தேகத்திலேயே* *அதனை பயன்படுத்தாமல் விட்டுவிடுகிறோம்.* *அப்படிப்பட்ட மலர்களின் குணங்களும் பயன்களும் இங்கே குறிப்பிடப்பட்டுள்ளன.*

*ஆவாரம் பூ*

ரத்தத்துக்கு மிகவும் பயன் தரும் ஆவாரம் பூவை உலர்த்தி வேளை ஒன்றுக்கு 15 கிராம் நீரில் போட்டு கசாயமாக்கி பால், சர்க்கரை கலந்து காப்பியாக பருகிவர உடல் சூடு, நீரிழிவு, நீர்கடுப்பு போன்ற நோய் தீரும். ஆவாரம்பூவை உலர்த்தி கிழங்கு மாவுடன் கூட்டி, உடலில் தேய்த்து குளிக்க கற்றாழை நாற்றம் நீங்கும். தோல் வியாதிகளும் குணமாகும்.

*அத்திப்பூ*

அத்திப்பூவை சுத்தம் செய்து சிறுசிறு துண்டுகளாக்கி பாலில் காய்ச்சி சர்க்கரை சேர்த்து தினமும் சாப்பிட்டு வர சில நாட்களிலேயே உடல் சூடு, பித்த சூடு நீங்கும்.

*நெல்லிப்பூ*

உடலுக்கு குளிர்ச்சி, இதனுடன் விழுதி இலை, வாத நாராயணா இலை சேர்த்து கசாயம் வைத்து இரவில் சாப்பிட காலையில் சுகபேதி உண்டாகும். மலச் சிக்கலுக்கும் இது உகந்தது.

*செம்பருத்திப்பூ*

இருதய பலவீனம் அடைந்தவர்கள் மற்றும் அடிக்கடி மார்பு வலியால் அவதிப்படுபவர்கள் இந்தப் பூவை தண்ணீரில் போட்டு காய்ச்சி காலையும், மாலையும் குடித்து வந்தால் இருதயம் பலமடையும்.

*ரோஜாப்பூ*

இந்த மலரின் மணம் மனதிற்கு மட்டுமின்றி, இருதயத்திற்கும் வலிமை தரக்கூடியது. பாலில் ரோஜா இதழ்களை தூவி குடித்து வந்தால் நெஞ்சில் இருக்கும் சளி நீங்கும். இரத்த விருத்திக்கும் துணை செய்யும் மலர் இது.

*வேப்பம்பூ*

சிறந்த கிருமி நாசினி இது. இந்தப் பூ வீட்டில் இருந்தால் சின்னஞ்சிறு கிருமிகள் ஓடிவிடும். உடல் குளிர்ச்சிக்கு ஏற்றது இது.

*முருங்கைப்பூ*

ஆண்களுக்கு ஆண்மையை அதிகரித்து தாது பெருக்கம் செய்யும் தன்மையுடையது. வயிற்றில் உள்ள கிருமியை ஒழிக்க கூடியது.

*மல்லிகைப்பூ*

கண் பார்வையை கூர்மையாக்கும் சக்தி இதற்கு உண்டு. காம உணர்ச்சிகளை தூண்டும் தன்மை உண்டு. கிருமி நாசினியாகவும் செயல்படுகிறது.

*குங்குமப்பூ*

கர்ப்பமாக இருக்கும் பெண்கள் ஒருவேளைக்கு 5 முதல் 10 இதழ்களை இரவு பசும் பாலில் போட்டு காய்ச்சி குடித்துவர சீதள சம்பந்தமான நோய்கள் நீங்கும். பிறக்கின்ற குழந்தை நல்ல திடகாத்திரமாக இருக்கவும் குங்குமப்பூ உபயோகப்படுகிறது.

0 coment�rios: