Home Top Ad

கமல்ஹாசன் பிக்பாஸ் இரண்டாவது சீசனை தற்போது நடத்தி வருகின்றார். இந்த நிகழ்ச்சி மெல்ல ரசிகர்களிடம் சூடுப்பிடிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில...

பிக்பாஸ் வீட்டிலிருந்து கமல்ஹாசன் வெளியேறுவாரா? அதிர்ச்சி தகவல்

கமல்ஹாசன் பிக்பாஸ் இரண்டாவது சீசனை தற்போது நடத்தி வருகின்றார். இந்த நிகழ்ச்சி மெல்ல ரசிகர்களிடம் சூடுப்பிடிக்க தொடங்கியுள்ளது.

இந்நிலையில் பிக்பாஸ் செட்டில் பெரும்பாலும் வட இந்தியர்களை தான் பயன்படுத்தி வருகின்றனர், பெப்சி ஊழியர்கள் இல்லை என்று பெரும் சர்ச்சை நிலவி வருகின்றது.

இதுக்குறித்து இயக்குனர் ஆர்.கே.செல்வமணி பேசுகையில், ‘பெப்சி ஊழியர்கள் நாங்கள் சொன்ன அளவிற்கு அனுமதிக்கவில்லை என்றால், தற்போது வேலைப்பார்த்து வரும் (10 சதவீதம்) 41 பேரும் வெளியேற வேண்டும், நான் கமலையும் சேர்த்து தான் சொல்கின்றேன்’ என அதிரடியாக பேசினார்.

மேலும், கடைசி பிக்பாஸில் இப்படி ஒரு பிரச்சனை வந்த போது கூட கமல் தான் பேசி சுமூகமாக முடித்து வைத்தாராம்.

0 coment�rios: