Home Top Ad

தமிழனுக்கு பிறப்பிலிருந்தே வீரம் வளர்கிறது என்பதற்கான வெளிப்பாடு தம்பி என்றும் உம் வீரதீர செயல் தொடங்கட்டும் தமிழா வீழ்வது நாமாக இருந்தாலு...

தீரன் சூர்யா : சிங்கம் சூர்யாவை மிஞ்சிய சிறுவன் சூர்யா #SpecialStoryAboutSuriya

தமிழனுக்கு பிறப்பிலிருந்தே வீரம் வளர்கிறது என்பதற்கான வெளிப்பாடு தம்பி என்றும் உம் வீரதீர செயல் தொடங்கட்டும் தமிழா வீழ்வது நாமாக இருந்தாலும் வாழ்வது நம்முடைய எதிர்கால சந்ததியாக இருக்கட்டும் வெல்லட்டும் தமிழன் முயற்சிகள்.

தம்பி பெருமையாக இருக்கிறது உங்களை நினைத்து. உங்கள் வயதில் உள்ளவர்கள் பாக்கெட் மணிக்காக, உல்லாச வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு திருடிக்கொண்டிருக்கையில் நீ அதிசயமானவன்.


0 coment�rios:

மாணவிகளை பாலியல் ரீதியாக பெரிய மனிதர்களுக்கு கட்டிலுக்கு அனுப்ப முயற்சித்ததால் கைதாகி சிறையில் இருக்கும் நிர்மலா தேவி 10 ஆண்டு கால கதையை ஒர...

சிபிசிஐடி-யை ஒற்ற வார்த்தையால் அலற வைத்த பேராசிரியை நிர்மலா... அப்படியென்ன வார்த்தை அது?

மாணவிகளை பாலியல் ரீதியாக பெரிய மனிதர்களுக்கு கட்டிலுக்கு அனுப்ப முயற்சித்ததால் கைதாகி சிறையில் இருக்கும் நிர்மலா தேவி 10 ஆண்டு கால கதையை ஒரே நாளில் சொல்லிவிட முடியாது என்று கூறி பொலிசாரை அலறவிட்டுள்ளார்.

அருப்புக்கோட்டை மகளிர் பொலிஸ் நிலையத்தில் நிர்மலா தேவியிடம் விசாரணை நடத்திய ஆவணங்கள் சிபிசிஐடி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டன. அதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் உள்ளன.

நிர்மலா தேவி அளித்த வாக்குமூலத்தில் 10 ஆண்டு கால கதையை ஒரே நாளில் சொல்லிவிட முடியாது என்று கூறியுள்ளார். இதை கேட்டு போலீஸார் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

பேராசிரியை நிர்மலா தேவி, விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள தேவாங்கர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கணிதப் பேராசிரியை நிர்மலா மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் உயரதிகாரிகளுடன் ஆசைக்கு இணங்க கல்லூரி மாணவிகள் 4 பேரிடம் தொலைபேசியில் புரோக்கராக பேசி சிக்கிய ஆடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த கைதான நிலையில், பின்னர் விருதுநகர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதியின் வீட்டில் நிர்மலா ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்து அவரை ஏப்ரல் 28ம் திகதி வரை நீதிமன்ற காவலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார். பின்னர் அவர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

நிர்மலா தேவி விவகாரத்தை அருப்புக்கோட்டை நகர காவல் நிலையத்திலிருந்து சிபிசிஐடி விசாரணைக்கு தமிழக டிஜிபி ராஜேந்திரன் உத்தரவிட்டார். இதையடுத்து பேராசிரியை பணியாற்றிய அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரியில் 5 பேர் கொண்ட சிபிசிஐடி விசாரணை நடத்தியுள்ளனர்.

இந்த விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதில், நிர்மலா தேவி 2008ம் ஆண்டில் கல்லூரியில் உதவி பேராசிரியையாக சேர்ந்தார். அப்போது மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்துக்கு பல்வேறு பணிகளுக்காக அவர் சென்று வந்தபோது தொலைநிலைக் கல்வி இயக்ககத்தில் 2 பேராசிரியர்களுடன் பணி ரீதியில் நிர்மலாவுக்கு பழக்கம் உருவானது.

இந்நிலையில் தான் கடந்த மாதம் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்துக்கு பேராசிரியர்களுக்கான புத்தாக்கப் பயிற்சிக்காக அவர் சென்றுள்ளார். அப்போது அந்த இரு பேராசிரியர்களின் தூண்டுதலின் பேரிலேயே மாணவிகளை பாலியல் தொழிலுக்கு அழைத்துள்ளார். விரைவில் இதுதொடர்பாக அந்த இரு பேராசிரியர்கள் விசாரணை நடத்தப்படவுள்ளதாக அந்த காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

0 coment�rios:

நடிகர் ராதாரவி தளபதி விஜய்யின் அடுத்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். மேலும் அவர் சமீபத்தில் விஜய்யுடன் எடுத்த ஒரு புகைப்...

ஜெயலலிதாவிற்கு பிறகு விஜய் மட்டுமே- நடிகர் ராதாரவி

நடிகர் ராதாரவி தளபதி விஜய்யின் அடுத்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். மேலும் அவர் சமீபத்தில் விஜய்யுடன் எடுத்த ஒரு புகைப்படம் வெளியாகி வைரலானது.

இந்நிலையில் தற்போது விஜய்62 பற்றி ஒரு பேட்டியில் பேசிய ராதாரவி "ஜெயலலிதாவிற்கு பிறகு நடிகர் விஜய்யின் வீட்டிற்க்கு நான் குடும்பத்துடன் சென்று புகைப்படம் எடுத்துக்கொண்டோம். என் பேரன் விஜய் மீது பைத்தியமாக இருப்பான். நான் சுறா படம் நடிக்கும்போதே அவருடன் போட்டோ எடுக்கவேண்டும் என கேட்டான். அந்த ஆசை முருகதாஸ் படத்தில் நடிக்கும்போது தான் நிறைவேறியுள்ளது" என கூறியுள்ளார்.

மேலும் விஜய் அரசியலுக்கு வருவது பற்றி பேசிய அவர், "விஜய் இந்த மண்ணின் மைந்தர், ரசிகர்கள் ஆதரவளித்து அவர் அரசியலுக்கு வந்தால் நான் வரவேற்பேன். ஆனால் அவரின் கொள்கை பற்றி கேள்வி கேட்பதை தவிர்க்க முடியாது" என குறிப்பிட்டுள்ளார்.

0 coment�rios:

தமிழ் சினிமாவை பொறுத்தவரை தற்போதெல்லாம் பிஸினஸ் பல கோடிகளில் தான் நடக்கின்றது. ஹீரோக்களும் படத்திற்கு படம் தங்கள் சம்பளங்களை ஏற்றிக்கொண்டே ...

உங்கள் பேவரட் நடிகர்களின் லேட்டஸ்ட் சம்பள விவரங்கள்- இத்தனை கோடிகளா! முழு லிஸ்ட் இதோ

தமிழ் சினிமாவை பொறுத்தவரை தற்போதெல்லாம் பிஸினஸ் பல கோடிகளில் தான் நடக்கின்றது. ஹீரோக்களும் படத்திற்கு படம் தங்கள் சம்பளங்களை ஏற்றிக்கொண்டே செல்கின்றனர்.

இதையே ஒரு குறையாக பல தயாரிப்பாளர்கள் கூறி வருகின்றனர், இந்நிலையில் பிரபல நடிகர்கள் சம்பளங்கள் எவ்வளவு என்று ஒரு சில தகவல்கள் வெளிவந்துள்ளது. இதோ...(பிரபல ஆங்கிலத்தளத்தில் வெளியிடப்பட்ட தகவல்).

    ரஜினிகாந்த்- ரூ 50 கோடி
    விஜய்- ரூ 35 கோடி
    அஜித்- ரூ 32 கோடி
    கமல்ஹாசன்- ரூ 20 கோடி
    சூர்யா- ரூ 20 கோடி
    சிவகார்த்திகேயன்- ரூ 15 கோடி
    விக்ரம்- ரூ 12 கோடி
    தனுஷ்- ரூ 10 கோடி
    கார்த்தி- ரூ 8 கோடி
    விஜய் சேதுபதி- ரூ 6 கோடி
    விஷால்- ரூ 6 கோடி
    ஜெயம் ரவி- ரூ 5 கோடி
    சிம்பு- ரூ 5 கோடி
    ஆர்யா- ரூ 2 கோடி
    மாதவன்- ரூ 2 கோடி

0 coment�rios: