Home Top Ad

 மேலைநாட்டு தீர்க்கதரிசிகளில் மிகவும் பிரபலமானவர் 'மிஷெல் தெநாத்ருதாம்'(Michel de Notredame).ஆங்கிலத்தில் நாஸ்ட்ரடாமஸ் (Nostradamus...

நாஸ்ட்ரடாமஸ் : ஒரு புரியாத புதிர்

 மேலைநாட்டு தீர்க்கதரிசிகளில் மிகவும் பிரபலமானவர் 'மிஷெல் தெநாத்ருதாம்'(Michel de Notredame).ஆங்கிலத்தில் நாஸ்ட்ரடாமஸ் (Nostradamus) என்று கூறுவார்கள். வருங்காலத்தைப் பற்றி அவர் எழுதிவைத்தவற்றில் பல நிகழ்ச்சிகள் நடந்துவிட்டிருக்கின்றன. சில நிகழ்ச்சிகளின் துவக்கம் ஏற்பட்டிருக்கிறது. சில நிகழ்ச்சிகள், சில வாரங்களிலோ சில மாதங்களிலோ உருவாகக்கூடும். தீராத நோய்களைத் தீர்த்தவர்.


யார் இந்த நாஸ்ட்ரடாமஸ்?

நாஸ்ட்ரடாமஸ் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர். இவர்களது குடும்பம் வருங்காலம் உரைத்தலில் திறமை பெற்றிருந்தது. அதன் வழி இவருக்கும் அந்த ஆற்றல் வந்தது. பாரம்பரிய ஜோதிட முறையை தனது முன்னோர்களிடம் பயின்ற இவர், “கப்பாலா” முறை எனப்படும் ரகசிய ஆருட முறையையும் பயின்றார். ஆனாலும் அவற்றை எல்லாம் விடுத்து மருத்துவத்தை முறையாகப் பயின்று டாக்டர் ஆனார். தம்மை பிரச்சனை என்று நாடி வந்தவர்களது பிரச்சனைகளைப் போக்கினார். அவர்களது நோய்களைக் குணப்படுத்தினார். மனத் தெளிவை ஏற்படுத்தினார். வருங்காலத்தில் நிகழ இருக்கும் செயல்களை முன்னரே கூறி அவர்களை எச்சரிக்கை செய்தார். அதனால் மக்களுக்கு அவர் மீது பெரிய மதிப்பும் மரியாதையும் ஏற்பட்டது

நாஸ்ட்ரடமஸ்நாளடைவில் ரசவாதம், மாந்த்ரீகம், இறந்தவர்களுடன் பேசுதல், உடலை விடுத்து வெளியே சென்று வருதல் போன்ற பல ஆற்றல்கள் கை வரப் பெற்றார். ஆனால் மதவாதிகள் எதிர்த்ததால் தலைமறைவு வாழ்க்கை நடத்தினார். பின் பிரான்ஸின் தெற்குப் பகுதிக்குக் குடியேறினார். ஒரு பெண்ணை மணம் செய்து கொண்டு வாழ்க்கை நடத்த ஆரம்பித்தார். நாளடைவில் தனது ஆரூடங்களினால் அவருக்கு புகழும் ஆதரவும் பெருகியது. மக்களிடையே செல்வாக்கு வளர்ந்தது.

சைத்தானின் சீடரா?

அதன்பின்னர் நாஸ்ட்ரடாமஸ் ஐரோப்பா முழுவதும் புகழ் பெற்றார். ஆனாலும்கூட அவரை சைத்தனின் சீடர் என்று கருதியவர்களும் பலர் இருந்தனர். மருத்துவர் என்ற ஹோதாவைவிட சோதிடர் என்ற முறையிலேயே பொன்னும் பொருளும் புகழும் பெற்றார்.

இன்னும் இவருடைய புத்தகத்தை படித்தால் நிறைய புரியாத புதிர்கள் நிறைய இருக்கும்

கறுப்பா, வெள்ளையா?

ஒருமுறை ஒரு பெரிய பிரபுவின் வீட்ட்க்கு விருந்துக்குச் சென்றார். அவருடைய அரண்மனையின் பின்புறம் ஓரிடத்தில் இரண்டு பன்றிகள் இருந்தன. ஒன்று கறுப்பு; இன்னொன்று வெள்ளை. அவற்றைக் காட்டி, "இந்த இரண்டு பன்றிகளில் எதை நாம் இன்றிரவு விருந்தில் சாப்பிடப்போகிறோம்?", என்று அந்தப் பிரபு நாஸ்ட்ரடாமஸை வினவினார்.

"கறுப்புப் பன்றியை நாம் சாப்பிடுவோம். வெள்ளைப் பன்றியை ஓநாய் சாப்பிட்டுவிடும்," என்றார் நாஸ்ட்ரடாமஸ்.

"என்னுடைய அரண்மனை எல்லைக்குள் எங்கிருந்து ஐயா, ஓநாய் வரும்?" என்று எள்ளி நகையாடினார், பிரபு.

அதன் பிறகு நாஸ்ட்ரடாமஸுக்கே தெரியாமல் சமையற்காரரை அழைத்து அந்த வெள்ளைப் பன்றியைக் கொன்று சமைக்கச் சொல்லிவிட்டுப் போனார் அந்தப பிரபு.

அன்றிரவு விருந்தில் பன்றிக்கறி பரிமாறப்பட்டு உண்டுமுடிந்தபின், பிரபு மீண்டும் நாஸ்ட்ரடாமஸை வினவினார்.

"நாம் சற்றுமுன்பு எந்தப் பன்றியைச் சாப்பிட்டோம்?"

"கறுப்பு" என்று சற்றும் சளைக்காமல் கூறினார் நாஸ்ட்ரடாமஸ்.

உடனே அப்பிரபு, சமையற்காரரை அழைத்து, விருந்தினர் முன்னிலையில் விசாரித்தார்.

"எந்தப் பன்றியைப் பரிமாறியிருக்கிறாய், என்று இவர்கள் எல்லாரிடமும் சொல்"

"கறுப்புப்பன்றி"

பிரபு அதிர்ந்து போனார்.

"வெள்ளைப் பன்றியை அல்லவா சமைக்கச் சொன்னேன்? என் கண் முன்னால்தானே அதைக் கொன்றாய்?"

"ஆம்! பிரபோ. ஆனால் அடுப்பில் வைத்திருந்த பன்றியை உங்கள் வேட்டை நாய் கெளவி இழுத்துச்சென்று விட்டது. ஆகையால் வேறு வழியின்றி கறுப்புப் பன்றியைக் கொன்று சமைத்துப் பரிமாறினேன்", என்று கூறினார் சமையற்காரர்.

அந்தப் பிரபுவின் வேட்டைநாய் உண்மையிலேயே ஒரு வளர்ப்பு ஓநாய்க்குப் பிறந்தது.

நல்ல புகழின் உச்சியில் இருந்த நாஸ்ட்ரடாமஸ் கி.பி.1566-ஆம் ஆண்டு இறந்தார். அவரைப் புதைத்துவிட்டார்கள்.

மண்டை ஓட்டில் மது ஊற்றினான்!

நாஸ்ட்ரடாமஸான் இறப்புக்குப் பின்னர் அவருடைய மண்டையோட்டில் மதுவை ஊற்றி யார் அருந்துகிறார்களோ அவர்களுக்கு நாஸ்ட்ரடாமஸின் சக்திகள் அனைத்தும் வந்துவிடும் என்றும், ஆனால் அவ்வாறு செய்பவர்கள் உடனேயே இறந்துவிடுவார்கள் என்றும் நம்பப்பட்டது. நாஸ்ட்ரடாமஸ் இறந்து இருநூற்று இருபத்தைந்து ஆண்டுகளுக்குப் பின்னர் கி.பி. 1791-ஆம் ஆண்டு மே மாதத்தில் ஒருநாள் நள்ளிரவில் நாஸ்ட்ரடாமஸான் புதைகுழியைத் தோண்டி அவருடைய சவப்பெட்டியை மூன்றுபேர் திறந்தார்கள். அவர்கள் பிரெஞ்சுப் போர்வீரர்கள். அன்று அவர்கள் மிதமிஞ்சி குடிதிருந்தார்கள். போதை ஏறியநிலையில் அவர்கள் நாஸ்ட்ரடாமஸின் கல்லறையைத் தேடிச்சென்று திறந்தார்கள்.

அந்த சமயத்தில் பிரெஞ்சுப்புரட்சியின் தொடர்பாகக் கலவரம் நடந்து கொண்டிருந்தது.

சவப்பெட்டிக்குள் நாஸ்ட்ரடாமஸின் எலும்புக்கூடு இருந்தது. அதன் கழுத்தில் 'மே, 1791' என்று பொறிக்கப்பட்டிருந்த பித்தளைப்பட்டயம் ஒன்று விளங்கியது. நாஸ்ட்ரடாமஸை 225 ஆண்டுகளுக்கு முன்னர் அடக்கம் செய்யும்போது அந்தப் பட்டயம் அவருடைய கழுத்தில் மாட்டப்பட்டிருக்கவேண்டும்.

அம்மூவரில் ஒருவன் நாஸ்ட்ரடாமஸான் மண்டையோட்டை எடுத்து அதில் மதுவை ஊற்றிக் குடித்தான். அப்போது எங்கிருந்தோ வந்த துப்பாக்கிக் குண்டு ஒன்று அவனுடைய கழுத்தில் பாய்ந்தது. உடனே நாஸ்ட்ரடாமஸான் புதைகுழிக்குள்ளேயே அவன் விழுந்து மாண்டுபோனான்.

சுற்றி நிகழ்ந்துகொண்டிருந்த கலவரத்தில் யாரோ யாரையோ நோக்கிச் சுட்ட குண்டு அவனுடைய கழுத்தில் பாய்ந்துவிட்டது!

மற்ற இருவருக்கும் 'மே 1791' என்று பட்டயத்தில் எழுதியிருந்த காரணமும் அப்போதுதான் புலப்பட்டது. இன்ன ஆண்டு இன்ன மாதத்தில் தன்னுடைய புதைகுழியை யாராவது திறப்பார்கள் என்று நாஸ்ட்ரடாமஸுக்கு 225 ஆண்டுகளுக்கு முன்னமேயே தெரிந்திருந்திருக்கிறது. ஆகவேதான் தன்னுடைய கழுத்தில் அந்தப் பட்டயத்தைக் கட்டிக்கொண்டு இறந்திருக்கிறார்.

"புதைகுழியை யார் திறக்கிறார்களோ, அவர்கள் உடனடியாக அதை மூடவில்லையென்றால் பெருங்கெடுதல் நேரிடும்" என்று அவருடைய தீர்க்கதரிசனங்களின் 907-ஆவது பாடலில் கூறியிருந்தார்.

அவருடைய புதைகுழியைத் திறந்தவர்களில் மற்றவர்களும் திரும்பிச் சென்றுகொண்டிருந்தபோது எதிரிகளால் சுடப்பட்டு இறந்தார்கள்.

இலவச இணைப்பு:

இம்ஹோட்டெப் (Imhotep). இவர் நாலாயிரத்து எழுநூறு ஆண்டுகளுக்கு முன்னர் எகிப்தில் தோன்றியவர். எகிப்தியப் பேரரசன் ஜோஸரின் மதிமந்திரி; பொறியியல் வல்லுனர்; மருத்துவ நிபுணர்; சோதிட ஞானி. இப்படிப்பட்ட பேரறிஞர்தான் அவர். பெரும்பெரும் கற்களைக்கொண்டு பிரம்மாண்டமான பிரமிடுகளைக் கட்டும் முறையைக் கண்டுபிடித்தவர். தம்முடைய மருத்துவ ஆற்றலால் பெரும் வியாதிகளை நீக்கியவர். இறப்புக்குப் பின் மீண்டும் உயிர் பெறக்கூடிய ரகசியத்தை அறிந்தவர். இறந்தபின் உடலை பதனப்படுத்திப் பாதுக்காத்துவைக்கும் விதத்தைக் கண்டுபிடித்தவர். பிரமிடுகளும் அவற்றுள் வைக்கப்பட்ட மம்மி(Mummy) எனப்படும் சடலங்களும் இவருடைய ஆற்றலின் விளைவுகளே. 

0 coment�rios:

பிரச்னைகள் எப்போதும் தனித்து வருவது இல்லை’ என்பார்கள். உடல் பருமன் பிரச்னை வந்தாலே, நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், முதுகு வலி, குழந்தைப்பேறு...

தொப்பையைக் குறைக்க சில முக்கிய குறிப்புகள் !!!

பிரச்னைகள் எப்போதும் தனித்து வருவது இல்லை’ என்பார்கள். உடல் பருமன் பிரச்னை வந்தாலே, நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், முதுகு வலி, குழந்தைப்பேறு இன்மை, மூட்டு வலி, உளவியல் சிக்கல் மற்றும் மன அழுத்தம், மாரடைப்பு என அடுத்தடுத்து இதரப் பிரச்னைகளும் போனஸாக வரிசை கட்டும்.

உடல் எடை ஒரே நாளில் கூடிவிடுவது கிடையாது.

ஆனால், உடல் எடைக் குறைப்பு மட்டும் சில நாட்களில் நிகழ்ந்துவிட வேண்டும் என்று நாம் பேராசைப்படுகிறோம். ஒரே வாரத்தில் உடலை இளைக்கவைக்கும் பயிற்சி ஏதாவது இருக்கிறதா? என விளம்பரங்களைத் தேடி அலைகிறோம். உடல்பருமனில் இருந்து அபரிமிதமான உடற்பருமனுக்கு செல்லும்போது உடல் ஆரோக்கியத்தில் பாதிப்பு ஏற்படும். இந்தியர்களின் சராசரி பாஸல் மெட்டபாலிக் ரேட் (பி.எம்.ஆர்.) என்பது 1800 கலோரி. ஆனால், சராசரியாக இந்தியர்கள் எடுத்துக்கொள்ளும் உணவில் 3000 கலோரி உள்ளது. நம் உடல்வாகையும், உணவுப் பழக்கத்தையும் முறையாக ஆராய்ந்து, படிப்படியான மாற்றங்களை நமக்குள் நிகழ்த்தினால், நிச்சயம் உடல் பருமன் பிரச்னையை சரி செய்துவிட முடியும். இதோ, உங்களை நீங்களே அலசுவதற்கான அற்புத வழிகள்…

உங்கள் உடலில் உள்ள கொழுப்பின் அளவைப் பொறுத்து மட்டுமே நோய் அபாயம் அதிகரிப்பது கிடையாது. எங்கே, எவ்வளவு இருக்கிறது என்பதைப் பொறுத்து அது மாறும். ஈஸியாகப் புரிந்து கொள்வதற்காக, கொழுப்பு சேரும் இடத்தை ஆப்பிள் மாடல், பேரிக்காய் மாடல் என்று இரண்டு விதமாக வகைப்படுத்துகிறார்கள் மருத்துவர்கள். வயிற்றுப் பகுதியில் சேரும் கொழுப்பை ஆப்பிள் மாடல் என்றும், இடுப்பு மற்றும் பின்புறத்தில் சேரும் கொழுப்பை பேரிக்காய் மாடல் என்றும் கூறுவார்கள். இரண்டுமே மோசம்தான். பேரிக்காய் வடிவத்தினரைவிட ஆப்பிள் வடிவத்தினர்தான் அதிக ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். குறிப்பாக, இதய நோய் வருவதற்கான வாய்ப்புகள் அவர்களைவிட இவர்களுக்கு அதிகம்!

இடுப்பை அளவிடுங்கள்… அபாயத்தைக் கணக்கிடுங்கள்…

நீங்கள் (ஆப்பிள்) ஆணாக இருந்தால் இடுப்பின் அளவு 94 செ.மீ-க்கு (37 இன்ச்) அதிகமாகவும், பெண்ணாக இருந்தால் 80 செ.மீ-க்கு (32 இன்ச்) அதிகமாகவும் இருந்தால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று அர்த்தம். (பேரிக்காய்) ஆண்கள் 102 செ.மீ-க்கு (40 இன்ச்) அதிகமாகவும், பெண்கள் 88 செ.மீ-க்கு (35 இன்ச்) அதிகமாகவும் இருந்தால் கூடுதல் எச்சரிக்கை தேவை. இடுப்பு அளவைக் குறைக்கும் முயற்சியில் உடனடியாக ஈடுபட வேண்டியது அவசியம்!

திட்டமிட்ட ஆரோக்கிய உணவு

 ஆரோக்கியமான உணவு உங்கள் உடலுக்குத் தேவையான ஊட்டச் சத்தைக் கொடுப்பதுடன், உடல் எடையைக் குறைக்கவும் வழிவகுக்கும். இதனால் இதய நோய் மற்றும் சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்புகள் குறையும். ஆரோக்கியமான உணவுத் திட்டமிடல் என்பதில், கார்போஹைட்ரேட் மற்றும் கொழுப்புச் சத்து உள்ள உணவின் அளவைக் குறைத்து, அதிகக் காய்கறிகள், பழங்களை எடுத்துக்கொள்ளுதல், கொழுப்பு நீக்கப்பட்ட அல்லது குறைந்த அளவு கொழுப்பு உள்ள பால் எடுத்துக்கொள்ளுதல், இறைச்சி, மீன், முட்டை, பாதாம், முந்திரி ஆகியவற்றைக் குறைவாக எடுத்துக்கொள்ளுதல் போன்றவை அடங்கும். உணவில் சர்க்கரை மற்றும் உப்பின் அளவைக் குறைத்துக்கொள்ளவேண்டும். இப்படி சமச்சீரான உணவுப் பழக்கத்தைக் கடைப்பிடித்தாலே, உடல் எடை கட்டுப்படத் தொடங்கிவிடும்.

உடல் எடையைக் குறைக்க அதிக கலோரிகள் உள்ள உணவு மற்றும் பானங்கள் உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். சாப்பிடும் உணவில் இருந்து எந்த அளவு சக்தி கிடைக்கிறதோ, அதை உடம்பில் சேர்த்துவைக்காமல் அவ்வப்போது எரித்துவிட வேண்டும். அதாவது, உடல் உழைப்பின் மூலம் அவற்றைப் பயன்படுத்த வேண்டும். விளக்கமாகச் சொன்னால்… உண்ணுகிற உணவுக்கு ஏற்ப நடைப்பயிற்சி, உடற்பயிற்சி, நீச்சல் பயிற்சி என்று எது முடிகிறதோ, அதைச் செய்ய வேண்டும்.

உடல்பருமனால் அவதிப்படும் அதே நேரம், நீரிழிவு போன்ற பிரச்னை இல்லை என்றால் அவர்களுக்கு புதிய ஸ்லீவ் கேஸ்ட்ரக்டமி (Sleeve gastrectomy) அறுவைச் சிகிச்சை உள்ளது. இந்த அறுவைச் சிகிச்சையில், பசியைத் தூண்டும் க்ரெலின் (Ghrelin)) என்ற ஹார்மோன் அகற்றப்படும். மேலும், இரைப்பையின் அளவும் குறைக்கப்படும். இதனால் சாப்பிடும் அளவு மட்டுமே குறையும், ஊட்டச்சத்து கிரகிப்பது குறைக்கப்படாது. இந்த அறுவைச் சிகிச்சை முடித்த ஒரே ஆண்டில், உடல் எடை 70 சதவிகிதம் வரை குறைந்துவிடும். அபரிமிதமான உடல்பருமன் உள்ளவர்களுக்கு பை பாஸ் அறுவைச் சிகிச்சை தான் சிறந்தது. இதில் இரைப்பையின் அளவு குறைக்கப்படுவதுடன், ஊட்டச்சத்து கிரகிக்கப்படும் அளவும் குறைக்கப்படுகிறது. இதுதவிர, ரோபோட்டிக் அல்லது எண்டோஸ்கோப்பி மூலமாகவும் உடல்பருமன் அறுவைச் சிகிச்சை செய்யும் முறை இந்தியாவில் முதன்முறையாக சென்னையில் அறிமுகமாகியுள்ளது’ என்றார்.

உடல் எடை குறைய டாக்டர்கள், டயட்டீஷியன் அளிக்கும் உற்சாக வழிகள்…

காலை உணவு கண்டிப்பாகத் தேவை. குறைந்தது மூன்று வேளை உணவு அவசியம். ஆவியில் வேகவைத்த இட்லி, இடியாப்பம் போன்ற உணவுகளைச் சாப்பிடலாம்.

குறைந்தது நாள் ஒன்றுக்கு மூன்று லிட்டர் வரை தண்ணீர் குடிக்க வேண்டும். பசியுடன் இருக்காமல், ஆரோக்கிய உணவை நேரத்துடன், அளவோடு சாப்பிடுவது நல்லது.

உடல் பருமனுக்கு முக்கியக் காரணமான சாதத்தைக் குறைத்து, ஒரு பங்கு சாதம், இரண்டு பங்கு வேகவைத்த காய்கறிகள் என்று அளவாகச் சாப்பிடலாம். இரவில் சாதத்தைத் தவிர்த்து, தோசை, சப்பாத்தி போன்ற டிஃபன் வகைகள் பெட்டர்.

முட்டைக்கோஸ், வாழைத்தண்டு, பாகற்காய் போன்றவற்றை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்வது நல்லது.

பழ வகைகளில் மா, பலா, வாழை, சப்போட்டா ஆகிவற்றைத் தவிர்த்து, மிதமான இனிப்பு உள்ள சாத்துக்குடி, கொய்யாப் பழங்களைச் சாப்பிடலாம்.

அசைவப் பிரியர்கள் தோல் மற்றும் கொழுப்பு நீக்கப்பட்ட கோழி இறைச்சியைக் குழம்பு வைத்துச் சாப்பிடலாம். மீனை எண்ணெயில் பொரிக்காமல், குழம்புவைத்து சேர்த்துக்கொள்ளலாம். முட்டையின் வெள்ளைக் கருவை மட்டும் சாப்பிடலாம்.

குழந்தைகள் குறைந்தது ஒரு மணி நேரத்துக்காவது விளையாட்டு, உடற்பயிற்சிகளில் ஈடுபட வேண்டும்.

பெரியவர்கள் குறைந்தது 30 நிமிடங்கள் பிரிஸ்க் வாக்கிங் செய்ய வேண்டும்.

குடும்பமே தொலைக்காட்சியில் மூழ்கிக்கிடக்காமல், எல்லோரும் சேர்ந்து ஈடுபடும் ஏதாவது ஒரு விளையாட்டு அல்லது தோட்ட வேலை போன்ற கூட்டு வேலைகளில் ஈடுபடலாம்.

காலையில் எழுந்ததும் டீ, காபி குடிப்பதைத் தவிர்க்க முயற்சிக்கலாம். முடியாதவர்கள் பிளாக் டீ அல்லது பிளாக் காபியில் சர்க்கரையின் அளவைக் குறைத்து அருந்தலாம்.

கிழங்கு வகைகளில் மாவுச்சத்து அதிகமாக இருப்பதால், அவற்றை முற்றிலுமாகத் தவிர்ப்பது நல்லது.

லிபோசக்ஷன் என்ற கொழுப்பு உறிதல் சிகிச்சையும் உள்ளது. இது, உடலின் எந்தப் பகுதியில் உள்ள அதிகப்படியான கொழுப்பை அகற்ற வேண்டும் என்று நினைக்கிறோமோ, அந்த இடத்தில் செய்யப்படும்.

பொதுவாக, நாவை அடக்குவது என்பது மிகவும் கடினமான செயல். இனிப்பு, கொழுப்பு உணவுகளும் நிச்சயம் மகிழ்ச்சி அளிக்கக் கூடியதுதான். இவை அனைத்தையும் ஒரேயடியாகத் தவிர்த்தாலும், மனதளவில் தடுமாற்றமும், உற்சாகக் குறைவும் ஏற்படும். ‘எடுத்தேன் கவிழ்த்தேன்’ என்று உடல் எடையைக் குறைப்பதற்காக, உணவு மற்றும் உடற்பயிற்சியை மிக வேகமாக மாற்றிவிடக் கூடாது. கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும்தானே… அதே பாணியில் பருமனையும் கரைப்போம்.

0 coment�rios:

Our Chicago motorcycle accident lawyers know there are many reasons why riding a motorcycle beats traveling by car. A ride on a motorcycle ...

Chicago Motorcycle Accident Lawyer - We Will Take Your Crash Seriously

Our Chicago motorcycle accident lawyers know there are many reasons why riding a motorcycle beats traveling by car. A ride on a motorcycle provides a sense of freedom as you take to the open road. It's also an economical and practical way to get around. But any motorcyclist knows that riding carries risks. That's why most riders, as a matter of survival, almost always ride defensively.

Unfortunately, too many motorists don’t safely share the road with motorcycle riders, and that puts people at serious risk. A motorcyclist’s body just doesn’t have the same amount of protection as a person inside an enclosed vehicle, even if the biker is wearing a helmet or other protective gear. If you are involved in a motor vehicle accident and you are on a motorcycle, you are three times more likely to be injured and 14 times more likely to be killed.

Now, here's what the numbers don't say about motorcycle accidents in Illinois. In an instant, your life or the life of a loved one can change forever. Suddenly, you may no longer be able to walk or be confined to a wheelchair. A loved one may even sustain a serious head or neck injury, resulting in paralysis or a traumatic brain injury. A motorcycle accident can even result in death. The risks are serious. The danger is real.
What are the common causes of motorcycle accidents?

Insurance companies might want to make you think that motorcycle riders are reckless, but we know that accidents often are traced back to the careless action of someone driving a car. In many cases, inattentive drivers crash into motorcyclists. Many drivers claim they never saw the motorcyclist or insist the rider was doing something reckless on the road. The truth is many drivers simply don't look when changing lanes or stopping. And in recent years, many drivers fiddling with their cellphones or texting while driving cause many serious motorcycle accidents.

Proving the other driver caused your motorcycle accident is not as easy as you might think. Even if the other driver clearly caused the accident, you must compile enough evidence to support your case. At Coplan & Crane, we know how to investigate motorcycle accidents in the Chicago area. We know what information to look for and how to organize this data to build a strong case.
What are common motorcycle accident injuries?

Motorcycle accident injuries in Illinois can be severe, even fatal. Some of the most common injuries include:

    Broken bones
    Road rash
    Traumatic brain injury
    Spinal cord injury
    Paralysis

Again, people involved in motorcycle accidents are very likely to sustain serious, disabling injuries. You may be unable to work for an extended period of time. Your life may change – and it’s likely another driver’s responsibility.
Expect More. Contact Oak Park motorcycle accident lawyers Coplan & Crane

Since motorcyclists have little protection around them, collisions with cars, trucks and other large vehicles often result in serious, sometimes fatal injuries, which may lead to a wrongful death claim.

Whatever kind of motorcycle injury you're dealing with, we can help. Our attorneys have years of experience investigating and litigating serious motorcycle accident injury cases. We know how to find evidence to support your case and use this information to obtain the compensation you rightfully deserve.
Chicago motorcycle accident law firm that puts injury victims' rights first

At Coplan & Crane, we can help your family deal with the aftermath of your motorcycle accident. We represent clients in Chicago and all of Illinois. The lawyers at Coplan & Crane have dedicated their careers to helping victims, including those injured in serious motorcycle accidents in Chicago. We realize most motorcycle accidents are caused by the other driver. We realize most motorcyclists are safe, responsible people who follow the rules and don't take unnecessary risks.

0 coment�rios:

எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சி இப்போது தமிழ்நாட்டு மக்களிடம் மிகவும் பிரபலம். ஆர்யா இந்நிகழ்ச்சி மூலம் தன்னுடைய வருங்கால மனைவியை தேர...

ஆர்யா மனதை கவர்ந்த அந்த மூன்று பெண்கள்?- யார் யார் தெரியுமா? எங்க வீட்டு மாப்பிள்ளை ஸ்பெஷல்

எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சி இப்போது தமிழ்நாட்டு மக்களிடம் மிகவும் பிரபலம். ஆர்யா இந்நிகழ்ச்சி மூலம் தன்னுடைய வருங்கால மனைவியை தேர்ந்தெடுக்க இருக்கிறார்.

இந்த நிலையில் இப்போது வரை நீங்கள் பார்த்ததில் யாரை முதலில் தேர்ந்தெடுப்பீர்கள் என்று தொகுப்பாளினி ஆர்யாவை கேட்டார். அதற்கு ஆர்யா,

    அகதா
    சூசானா
    ஸ்வேதா

மூவரையும் தற்போது பிடித்திருப்பதாக முதல் இடத்தில் தேர்ந்தெடுத்திருப்பதாக கூறியுள்ளார்.

0 coment�rios:

நடிகர் சதீஷ் நடிகை சுனு லட்சுமி இயக்குனர் பவித்ரன் இசை அபே பவித்ரன் ஓளிப்பதிவு மணிகண்டன் நாயகி சுனு லட்சுமியும் தமிழ்நாட்டில் இருக்கு...

தாராவி – விமர்சனம்

நடிகர் சதீஷ்
நடிகை சுனு லட்சுமி
இயக்குனர் பவித்ரன்
இசை அபே பவித்ரன்
ஓளிப்பதிவு மணிகண்டன்

நாயகி சுனு லட்சுமியும் தமிழ்நாட்டில் இருக்கும் போது அவர்கள் வீட்டில் வேலை செய்து வருகிறார் நாயகன் சதீஷ். திடீர் என்று தமிழ்நாட்டில் இருந்து மும்பைக்கு படிக்க செல்கிறார் சுனு லட்சுமி. சில நாட்களில் சுனு லட்சுமியை பார்ப்பதற்காக மும்பை செல்கிறார் சதீஷ். இருவரும் மும்பையில் பேசி பழகி காதலித்து வருகிறார்கள்.

ஒரு நாள் இவர்கள் பேசுவதை பார்க்கும் சுனு லட்சுமியின் அண்ணன், சதீஷை தன் வீட்டின் கெஸ்ட் ஹவுஸில் தங்க வைக்கிறார். இந்நிலையில், மும்பையில் சுனு லட்சுமியை காதலிப்பதாக பின்னாடியே சுற்றி வரும் பாலா, சுனுவும், சதீஷும் காதலிப்பதை அண்ணனிடம் போட்டு கொடுத்து விடுகிறார்.

இதனால், சுனு லட்சுமி, சதீஷ் காதலை பிரிக்க நினைக்கிறார் சுனு லட்சுமியின் அண்ணன். ஆனால், சுனு லட்சுமி அண்ணன் கட்டுப்பாட்டில் இருந்து தப்பித்து சதீஷிடம் தஞ்சமடைகிறார்.

இதே சமயம், மும்பை-புனே தேசிய நெடுஞ்சாலையில் சமீப காலமாக சரக்கு லாரிகள் கடத்தப்படுவது அதிகரித்து வருகிறது. இதைக் கண்டுபிடிக்க ஒரு ஸ்பெஷல் போலீஸ் டீம் அமைக்கப்படுகிறது. இந்த டீமின் விசாரணையில் சிக்குகிறார் சுனு லட்சுமியின் அண்ணன்.

இறுதியில் சதீஷும், சுனு லட்சுமியும் காதலில் ஒன்று சேர்ந்தார்களா? சுனு லட்சுமியின் அண்ணன் என்ன ஆனார்? என்பதே படத்தின் மீதிக்கதை.

நாயகனாக நடித்திருக்கும் சதீஷ், பாலா கிருஷ்ணா, பிரபு சதீஷ், லிங்கம் சிவா, லியோ ஆகிய புதுமுகங்கள் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள். புதுமுகங்கள் என்பதால் இவர்களிடம் நடிப்பை எதிர்பார்க்க முடியவில்லை. ‘அறம்’ படத்தில் நடித்த சுனு லட்சுமி தான் இதில் முகம்தெரிந்தவர். இன்னும் நடிப்பில் கவனம் செலுத்தி இருக்கலாம்.

`வசந்த காலப் பறவை’,` சூரியன்’, `ஐ லவ் இந்தியா’, `இந்து’, `திருமூர்த்தி’, `கல்லூரி வாசல்’ போன்ற படங்களை இயக்கிய பவித்ரன் இப்படத்தை இயக்கி இருக்கிறார். இந்த படங்களை இயக்கிய இயக்குனரா என்று ஆச்சரியத்தில் அனைவரையும் ஆழ்த்தி இருக்கிறார். மிகவும் பழைய கதை, திரைக்கதையில் தெளிவு இல்லை.

பவித்ரனின் மகன் அபே பவித்ரன் தான் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். சாலக்குடியில் ஒலிக்கும் பாடல் ஓகேதான். ஆனால் நடனம்..? பின்னணி இசையும் பெரிதாக எடுபடவில்லை. மணி கண்டனின் ஒளிப்பதிவில் மும்பையை அழகாகக் காட்டுவார்கள் என்று பார்த்தால் அதுவும் இல்லை. மும்பையின் மிகப் பெரிய திருவிழாவான விநாயகர் ஊர்வலத் திருவிழாவிலும் ஒரு காட்சியை திணித்து படமாக்கியிருக்கிறார்கள்.

மொத்தத்தில் ‘தாராவி’ ரொம்ப பழைய இடம்.

0 coment�rios:

இப்போது மருத்துவ உலகத்தில் மட்டுமல்ல… உணவுச் சந்தையிலும் பெரும் பேசுபொருளாக மாறி இருப்பது எண்ணெயும் கொலஸ்ட்ராலும்தான். அப்படி என்ன மாற்றம் ...

எண்ணெயும் கொலஸ்ட்ராலும்: வெளிச்சத்துக்கு வந்த மருத்துவ அரசியல்!

இப்போது மருத்துவ உலகத்தில் மட்டுமல்ல… உணவுச் சந்தையிலும் பெரும் பேசுபொருளாக மாறி இருப்பது எண்ணெயும் கொலஸ்ட்ராலும்தான். அப்படி என்ன மாற்றம் நடந்துவிட்டது எண்ணெய்ப் பயன்பாட்டில்?

எண்ணெயும் கொலஸ்ட்ராலும்

பண மதிப்பிழப்பு விவகாரத்தில், நாமெல்லாம் புதிய இரண்டாயிரம் ரூபாய்க்காக ஏ.டி.எம் வாசலில் நின்றுகொண்டிருந்தபோது, மருத்துவ உலகம் கொலஸ்ட்ரால் பற்றி, தான் ஏற்படுத்தி வந்த விழிப்புஉணர்வை வாபஸ் பெற்றுக்கொண்டது. மருத்துவ ஆராய்ச்சி இதழ்களில், கொலஸ்ட்ரால் பற்றிய தொடர் விவாதங்கள் உருவாகவும், கொழுப்பு பயமுறுத்தலை வாபஸ் பெறவும் காரணம் 2015-ம் ஆண்டின் யு.எஸ்.டயட்ரி அட்வைசரி கமிட்டியின் (USDA) அறிவிப்புதான்.

நாற்பது ஆண்டுகளாக உலகம் முழுவதும் குதிரை வண்டியில் மைக் கட்டி பிரசாரம் செய்யும் அளவுக்கு `கொலஸ்ட்ரால் உடம்புக்கு நல்லது அல்ல. எண்ணெய் மோசமானது’ என்று சொல்லிக்கொண்டிருந்த அமெரிக்க உணவியல் நிபுணர்கள், தலைகீழாக பல்டியடித்தார்கள். அமெரிக்காவின் பிரதான உணவாக இருந்த கொழுப்பு உணவுகள், இதய நோய் பயத்தால் ஒரு கட்டத்தில் தீவிர பிரசாரம் மூலம் கைவிடப்பட்டன. முட்டைகளையும், இறைச்சியையும் மிகக் குறைவாக அமெரிக்க மக்கள் பயன்படுத்தத் தொடங்கினர். கொழுப்பு பற்றிய அச்சத்தை அமெரிக்காதான் உலகம் முழுவதும் பரவச்செய்தது.

`எங்கு மருத்துவர்கள் அதிகமாக இருக்கிறார்களோ, அங்கு நோய்களும் அதிகமாக இருக்கின்றன’ என்று கூறுவதாக எழுதியிருக்கிறார் அக்கு ஹீலர் அ.உமர் பாரூக்மணிப்பால் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரும், இதய நோய் நிபுணருமான டாக்டர் ஹெக்டே.

`மருந்து மயக்கத்தில் அமெரிக்கா’ (Over Dosed America) என்ற நூலில், மருத்துவ நிறுவனங்களின் தவறான நம்பிக்கைகள் எப்படி பரப்பப்படுகின்றன என்பதையும், அது எப்படி வியாபாரமாக மாறுகிறது என்பதையும் விவரிக்கிறார் அமெரிக்க மருத்துவர் டாக்டர் ஜான் அப்ரோம்சன். `நிறுவனங்களின் லாப வேட்டைக்காக மக்களின் நல்வாழ்வு பலியிடப்படுகிறது’ என்று உரத்துக் கூறுகிறது மருத்துவ அரசியலைப் பேசும் இந்த நூல்.

உலக மருத்துவச் சந்தை மற்றும் உணவுப் பரிந்துரைகளின் தலைமையகம் அமெரிக்காதான். அங்கு செய்யப்படும் ஆய்வுகளும் பரிந்துரைகளும் எதிர் கேள்வியின்றி உலக நாடுகளால் ஏற்றுக்கொள்ளப்படும். இந்த நடைமுறை பல ஆண்டுகளாகவே தொடர்கிறது. ஆய்வுகளில் வியாபாரம் மேலோங்குவதற்கும், தவறான முடிவுகள் வெளியிடப்படுவதற்கும் பல காரணங்களைக் கண்டுபிடித்திருக்கின்றனர் மருத்துவ அரசியலுக்கு எதிரான சில அமெரிக்க மருத்துவர்கள். குத்து மதிப்பாக செய்யப்படும் உதிரி ஆய்வுகள், பாதிப்பு அம்சத்தை கவனத்தில்கொள்ளாத முடிவுகள், புள்ளிவிவரங்களின் அடிப்படையிலேயே முடிவுகளை அறிவிப்பது… என்று பல சிக்கலான விவரங்களை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்துள்ளனர். இதில் ஆபத்தான விஷயம் என்னெவென்றால், மருந்து கம்பெனிகளின் நிதி உதவியோடுதான் அரசு ஆய்வுகளே மேற்கொள்ளப்படுகின்றன என்பதுதான்.

மருத்துவத்தின் தவறான ஆய்வு முடிவுகளைப் பற்றிய எதிர்க் கருத்துள்ள ஆய்வுக் கட்டுரைகள் மட்டும் இதுவரை 7,000-க்கும் அதிகமாக ஐரோப்பிய மருத்துவ ஆய்விதழ்களில் வெளிவந்துள்ளன. இது குறித்த கலந்துரையாடல்களோ, விவாதங்களோ நடைபெறுவதே இல்லை. ஆய்வு முடிவுகள் ஆகப்பெரும் விளைவை மக்களிடையே ஏற்படுத்திய பிறகுதான் படிப்படியாக விவாதம் தொடங்குகிறது. அப்படித்தான், நாற்பதாண்டு கொழுப்பு பற்றிய அச்சம் இப்போது விவாதப் பொருளாக மாறியுள்ளது.

கொலஸ்ட்ரால் அல்லது கொழுப்பு பற்றி இந்த அமெரிக்க ஆய்வு வெளியாவதற்கு முன்பிருந்தே பல விஷயங்கள் அவ்வப்போது வெளிவந்து கொண்டேயிருந்தன. அவற்றை டாக்டர் ஹெக்டே தொகுத்துத் தருகிறார். அவற்றில் சிலவற்றைப் பார்க்கலாம்…

* ரத்தக் கொழுப்பைக் குறைப்பதற்கும் மாரடைப்புக்கும் தொடர்பில்லை. ஏனெனில், மாரடைப்பை உருவாக்குவது மெல்லிய குழாயை அடைக்கும் சிறு உறைகட்டிதான் (Clot). இது எதனால் உருவாகிறது என்பதை இன்னும் உறுதிப்படுத்தாத நிலையில், மாரடைப்புக்கும் கொழுப்புக்கும் தொடர்பை உருவாக்கியதே மருத்துவ அரசியல்தான்.

* கொழுப்பு குறைப்புக்காக அரை நூற்றாண்டுகளாக பரிந்துரைக்கப்பட்டு வந்த எந்த மருந்துகளும் கொழுப்பைக் குறைக்கவில்லை.

* நம் உடலில் உள்ள கோடிக்கணக்கான செல்களும் கொழுப்பினால் ஆன சுவர் கொண்டவைதான். நாம் மாரடைப்புக்கு பயந்து கொழுப்பு உணவைக் குறைத்தால், செல்களின் சுவர்களில் சிக்கல் வரும்; புற்றுநோய் ஆபத்து அதிகம்.

* கொழுப்பைக் கட்டுப்படுத்தும் மருந்துகள் கல்லீரலின் என்சைம்களைத் தடுத்துவிடுகின்றன. நம் உடலின் ரசாயனத் தொழிற்சாலைதான் கல்லீரல். அதன் இயக்கத்தின் குறுக்கீடு உடலில் எப்படிப் பிரதிபலிக்கும் என்பதை எந்த மருத்துவராலும் அனுமானிக்க முடியாது.

* கொழுப்பைக் கட்டுப்படுத்தும் மருத்துவம் என்பதே, பெரு நிறுவனங்களின் லாபங்களுக்காக உருவாக்கப்பட்ட செயல் திட்டமே…

இப்படி நூற்றுக்கணக்கான அதிர்ச்சிகளை தன் கட்டுரைகள் மூலம் தெரிவிக்கும் ஹெக்டே ஓர் இதய நோய் நிபுணர் மட்டுமல்ல; மருத்துவப் பேராசிரியர்; இந்திய அரசின் உயர் விருதான பத்ம பூஷண் விருது பெற்ற மருத்துவர்களில் ஒருவர்.

கொழுப்பு பற்றிய வியாபார நோக்குள்ள, உண்மைக்கு மாறான செய்திகள் சாதாரண மக்கள் வாழ்வில் என்ன மாற்றத்தை ஏற்படுத்தும்?

மருத்துவமனைக்குச் செல்லாத நம் அன்றாட வாழ்க்கையிலும் ஏராளமான மாற்றங்களை அமெரிக்காவின் ஆய்வு முடிவுகளால் செய்ய முடியும். நம்முடைய எண்ணெய்ப் பயன்பாட்டைக் கவனியுங்கள்…

நம்முடைய எல்லா உணவுகளிலும் எண்ணெய் இன்று முக்கியமான இடத்தைப் பிடித்துக்கொண்டிருக்கிறது. இயற்கையான முறையில் பிரித்தெடுக்கப்பட்ட தூய்மையான எண்ணெயைக்கூட நம் முன்னோர்கள் மிக மிகக் குறைந்த அளவிலேயே பயன்படுத்தி இருக்கின்றனர். நாம் சமையல் செய்வதற்கு, நல்லெண்ணெய், கடலை எண்ணெய், கடுகு எண்ணெய் சிறந்தவையா? நிச்சயமாக. சோயா, சூரியகாந்தி, தேங்காய் எண்ணெய்களும் உகந்தவையே. ஆனால், இவற்றை பின்னுக்குத் தள்ளிவிட்டு சோயா எண்ணெயை முன்னிறுத்தியது அமெரிக்காவின் பிரசாரம். சோயா எண்ணெய் வியாபாரம் அமோகமாக இருக்க வேண்டும் என்கிற பேராசையே காரணம். அதற்காக மானியமும் வழங்கியது அமெரிக்கா.

செக்கில் இருந்து நாம் பெறும் எண்ணெயைப் பயன்படுத்தினால் கொழுப்பு கூடும் என்கிற பயத்தையும் உருவாக்கினார்கள். நம்மை ரீஃபைண்டு எண்ணெயைப் பயன்படுத்தச் சொன்ன அதே அமெரிக்கா, தனக்கென பல நாடுகளில் இருந்து இறக்குமதி செய்வது தேங்காய் எண்ணெயை. அதற்குக் காரணம் அந்த எண்ணெயில் இருந்து கிடைக்கும் மோனாலாரின். இதன் மற்றொரு பெயர் லாரிக் அமிலம்… அற்புதமான நோய் எதிர்ப்பு சக்தியைக் கொண்ட சத்துமிக்க அமிலம். இது, எல்லா உணவுப் பொருட்களிலும் கிடைப்பதில்லை, தாய்ப்பாலிலும் தேங்காய்ப்பாலிலும் மட்டுமே கிடைக்கும். ஆயுள் முழுக்க நாம் நோய் எதிர்ப்பு சக்தியோடு இருக்க தாய்ப்பால் அவசியத் தேவை; அதேபோல தேங்காய் எண்ணெயும் முக்கியமானது.

இது மட்டுமல்ல… இயற்கையாகக் கிடைக்கும் அனைத்து தாவர எண்ணெய்களும் சிறந்தவையே. இவற்றைப் பயன்படுத்தினால், நம் உடலில் கொலஸ்ட்ரால் அதிகமாகாது. உண்மையில், இந்த எண்ணெய்கள் நம் ரத்த நாளக் குறைபாடுகளைப் போக்கும் தன்மைகொண்டவை. இதை, சமீபத்தில் சில ஆய்வுகளும் நிரூபித்துள்ளன.

சமையல் தொடங்கி தங்களின் அத்தனை தேவைகளுக்கும் கேரள மக்கள் உபயோகிப்பது தேங்காய் எண்ணெயை. ஆனால், கொலஸ்ட்ராலாலோ, இதய நோய்களாலோ பாதிக்கப்பட்ட மாநிலங்களின் பட்டியலில் இடம் பெறாத ஒரே மாநிலம் கேரளா.

மருத்துவ ஆய்வுகளுக்குள்ளும், அதன் முடிவுகளுக்குள்ளும் போவதற்குப் பதிலாக, நம்முடைய சாதாரண வாழ்வை உற்றுக் கவனித்தால் அதில் பல உண்மைகள் புலனாகும். ஏ.சி அறைகளில் முடிவுசெய்யப்படும் பரிசோதனைகளில் பெரும்பாலானவை பயன்பாட்டு அடிப்படையில் பரிசீலிக்கப்படாதவை.

கொழுப்பு பற்றி நாம் ஒரு முடிவுக்கு வருவதற்கு இரண்டு விஷயங்களைப் பார்க்கலாம்.

மிகச் சமீபத்தில் பரவலாகிவரும், `பேலியோ டயட்’. இது முழுக்க முழுக்க கொழுப்பை அடிப்படையாகக்கொண்ட உணவு முறை. லட்சக்கணக்கான நபர்கள் பின்பற்றும் இந்த உணவு முறையில் கொழுப்பை மட்டுமே தினமும் சாப்பிட வேண்டும் என்பதுதான் முக்கியமானது. ஏன் இப்படி கொழுப்பைச் சாப்பிடச் சொல்கிறார்கள்?

நம்முடைய செல்கள் தங்களுக்குத் தேவையான குளூக்கோஸை சாதாரணமாக நாம் சாப்பிடும் இனிப்புப் பொருட்களில் இருந்து பெறுகின்றன. அதாவது, மாவுப் பொருட்களில் இருக்கும் கார்போஹைட்ரேட்டுகளில் இருந்து குளூக்கோஸை உருவாக்கிக்கொள்கின்றன. நம் செல்களுக்கு இன்னொருவிதத்திலும் குளூக்கோஸை உருவாக்கத் தெரியும். எங்கிருந்து தெரியுமா..? கொழுப்பில் இருந்து. நம் உடலில் உருவாகும் கொழுப்பில் இருந்து நம் செல்கள் குளூக்கோஸை உருவாக்கும் தன்மையைக்கொண்டிருக்கின்றன. கார்போஹைட்ரேட் இல்லாத நிலையில், கொழுப்பில் இருந்து செல்கள் குளுக்கோஸைப் பிரிக்கத் தொடங்கும்.

எனவேதான், பேலியோ டயட்டை பின்பற்றும் நபர்கள் முழுமையாக மாவு, இனிப்புப் பொருட்களைத் தவிர்த்துவிட்டு, முற்றிலும் கொழுப்பை மட்டுமே உண்கிறார்கள். அவர்களுக்கு எவ்விதமான கொழுப்பால் உருவாகும் நோய்களும் வந்துவிடவில்லை. மாறாக, ஸ்லிம்மான, வலுவான உடற்கட்டு உருவாகிறது. உடல்பருமனால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் இப்படிக் கொழுப்பைச் சாப்பிட்டு, சாப்பிட்டே தங்கள் உடலைக் குறைத்துக்கொள்கிறார்கள். நம்மிடம் இருந்த கொழுப்பு பயம் உண்மையாக இருந்தால், இது எப்படி சாத்தியமாகும்?

கொழுப்பு நல்லது என்பதால் பேலியோ ஆட்கள்போல, எல்லோரும் கூடுதலாக கொழுப்பு உணவைச் சாப்பிடலாமா?

எப்போதுமே எல்லா உணவிலும் அளவு மிக முக்கியமானது. கொழுப்பைக் கண்டு அச்சப்படவும் அவசியமில்லை. அதே நேரம், அளவை மீறி அதிகப்படுத்தவும் தேவையில்லை.

ஆட்டுக் கறிக்கடையில் உரித்து தொங்கவிடப்பட்டுள்ள ஆட்டை கவனித்திருக்கிறீர்களா? தசை இருக்கும் அளவுக்கு கொழுப்பு படிந்திருக்கும்.

நம்முடைய உடலில் கொழுப்பு உருவாகாமல் இருப்பதற்கு நம்முடைய மருத்துவர்கள் என்னென்ன ஆலோசனைகள் சொன்னார்கள் நினைவில் இருக்கிறதா? அசைவம் சாப்பிடக் கூடாது, எண்ணெயைக் குறைவாகப் பயன்படுத்த வேண்டும், கொழுப்பு உள்ள உணவுகளை உட்கொள்ளக் கூடாது. இவைதானே?

மறுபடியும் ஆட்டைக் கவனியுங்கள். எண்ணெயை வாழ்நாளில் பார்த்திராத ஆடு, அசைவம் சாப்பிட்டிருக்காத சைவப் பிராணியான ஆடு, கொழுப்புள்ள உணவை அறிந்திராத ஆடு இவ்வளவு கொழுப்பை எங்கிருந்து பெற்றது?

இதுதான் நம் உடலின் ரகசியம். நம் உடலுக்கு என்னவிதமான பொருள் தேவையோ அதனை உடலே தயாரித்துக்கொள்கிறது. உணவுகளின் துணையோடு உடல் தேவையானதை தயாரித்தாலும், உணவை மட்டுமே நம்பித் தயாரிக்கவில்லை. நம் உணவில் என்ன இருக்கிறதோ, அதை மட்டுமே நம் உடலால் தயாரித்துக்கொள்ள முடியும் என்று தவறாக நினைத்துக்கொள்கிறோம். மக்சீனியத்தில் இருந்து கால்சியத்தை மாடுகள் உருவாக்கிக்கொள்கின்றன. நமக்கு பாலைத் தருகின்றன. நாம் கால்சியம் தேவை என்று கால்சியம் உள்ள பொருட்களையே தேடிக்கொண்டிருக்கிறோம்.

உடலுக்கு என்ன வேண்டும் என்பதை உடல் பார்த்துக்கொள்ளும். கிடைக்கிற உணவை, விருப்பத்தோடு, அளவோடு உண்பது மட்டுமே நம்முடைய வேலை. மனிதர்களைப் பார்க்காத, விலங்குவழி ஆய்வுகளின் வழியே வெளிவரும் ஆய்வு முடிவுகளை எப்போதும் நாம் பின்பற்றத் தேவையில்லை. அது, மிகப் பெரும் வியாபார வலையில் நம்மை சிக்கவைக்கக்கூடும்.

`தெரிந்ததைத் திரும்பச் சொல்வதல்ல அறிவு; தவறான நம்பிக்கைகளைத் தவிர்ப்பதே அறிவு!’ – கார்ல் பாப்பர்.

0 coment�rios:

ஐயா கண்ணுவுக்கு ஒரு உருண்டை… அரக்கனா இருந்தா மலையே உருண்டை! இப்படிதான் அமைகிறது பெரிய படங்களின் வரவு. ரஜினி, விஜய், அஜீத் படங்கள் வரும்போதெ...

ரஜினி அஜீத் விஜய் படமா இருந்தாலும் இனி 300 தியேட்டர்தான்! சங்கம் எடுத்த அதிரடி முடிவு?

ஐயா கண்ணுவுக்கு ஒரு உருண்டை… அரக்கனா இருந்தா மலையே உருண்டை! இப்படிதான் அமைகிறது பெரிய படங்களின் வரவு. ரஜினி, விஜய், அஜீத் படங்கள் வரும்போதெல்லாம் ஒரு சூறாவளி போல மொத்த தியேட்டர்களும் ஒரே ஸ்வாகா! தமிழ்நாட்டிலிருக்கிற ஆயிரத்து சொச்ச தியேட்டர்களிலும் ஒரே படம். வேறு படங்களுக்கு கதவு திறக்க விரும்புவதில்லை தியேட்டர் காரர்கள்.

அந்த நேரத்தில் திரைக்கு வருகிற படம் ஓடி முடிந்து கல்லா கணக்கு செட்டில் ஆகிற வரைக்கும் வேறு படங்கள் உள்ளே நுழையவே முடியாது. இந்த கொடூரத்திற்குதான் ஒரு முடிவு கட்ட வேண்டும் என்று துடியாய் துடித்தார்கள் தயாரிப்பாளர்கள். தமிழ்சினிமா பெரு முதலாளிகளின் கையில் சிக்கிக் கொண்டு தவிப்பதை, விஷால் பீரியடிலாவது நிறுத்திவிட வேண்டும் என்று துடித்தவர்களுக்கு ஒரு நல்ல முடிவு கிட்டியிருக்கிறது.

தயாரிப்பாளர் சங்கம் அண்மையில் கூடியது அல்லவா? செயலாளர்கள் கதிரேசன், எஸ்.எஸ்.துரைராஜ், பொருளாளர் எஸ்.ஆர்.பிரபு மற்றும் பிரபல தயாரிப்பாளர்கள் தாணு, எஸ்.ஏ.சி, போன்றவர்கள் கூடிய கூட்டம் காரசாராமாகவே இருந்திருக்கிறது. அதில்தான் இனி ரஜினி, விஜய், அஜீத் உள்ளிட்ட பெரிய ஹீரோக்களின் படங்களை 300 தியேட்டர்களுக்கு மேல் திரையிடக் கூடாது என்ற அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் ரிலீஸ் ஆகிற மற்ற படங்களுக்கும் தியேட்டர்கள் அமைய வேண்டும் என்கிற நல்ல எண்ணத்தில் எடுக்கப்பட்ட இந்த முடிவுக்கு சலசலப்புகள் எழுந்தாலும், உறுதியாக இதை நடைமுறை படுத்திவிட வேண்டும் என்று சங்கம் நினைக்கிறது. இதுபோன்ற இன்னும் நிறைய நல்ல திட்டங்களை இந்த கூட்டத்தில் எடுத்திருக்கிறார்கள்.

இவை எல்லாம் பேச்சளவில் முடியாமல் செயல் அளவிலும் தொடர்ந்தால், தமிழ்சினிமா பொங்கும் பூம்புனல் ஆகிவிடும். அதில் சந்தேகமே இல்லை. ஆனால் வில்லன்கள் மனசு வைக்கணுமே?

0 coment�rios:

அமேஸான், ஃப்ளிப்கார்ட் போன்ற இணையதள வர்த்தக நிறுவனங்களின் வளர்ச்சி இந்தியாவில் அதிகமாகிக்கொண்டே போகிறது. பொருள்களை ஆன்லைனில் ஆர்டர் செய்தால...

ஐந்தே மாதத்தில் 1.3 கோடி... அமேஸானை இப்படி ஏமாற்றிக்காட்டிய பெங்களூரு இளைஞர்!

அமேஸான், ஃப்ளிப்கார்ட் போன்ற இணையதள வர்த்தக நிறுவனங்களின் வளர்ச்சி இந்தியாவில் அதிகமாகிக்கொண்டே போகிறது. பொருள்களை ஆன்லைனில் ஆர்டர் செய்தால் டோர் டெலிவரி, கையில் பொருளை பெற்றுக்கொண்டு பணத்தைச் செலுத்துவது எனப் பல்வேறு வசதிகளை நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு அளிக்கின்றன. இது போன்ற வசதிகளில் இருக்கும் ஓட்டைகளைப் பயன்படுத்தி சில சமயங்களில் முறைகேடுகளும் நடைபெறத்தான் செய்கின்றன. சில சமயங்களில் வாடிக்கையாளர்கள் ஆர்டர் செய்த பொருள்களுக்குப் பதிலாக சோப்பு, செங்கல் என வேறு சில அனுப்பி வைக்கப்படுவதாகக் குற்றச்சாட்டுகள் அவ்வப்போது எழுவதுண்டு. சில நேரங்களில் நிறுவனங்களே ஏமாறுவதுண்டு. அப்படி கர்நாடக மாநிலத்தில் இளைஞர் ஒருவர் செய்த மோசடி அமேஸான் நிறுவனத்தையே அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

அமேஸான் நிறுவனம் வாடிக்கையாளர்கள் ஆர்டர் செய்த பொருள்களை டெலிவரி செய்வதற்காக பல கூரியர் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. அப்படி கர்நாடக மாநிலம் சிக்மகளூர் பகுதியில் பொருள்களை டெலிவரி செய்வதற்காக அங்குள்ள ஏக்தந்தா கூரியர் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்திருந்தது. அந்த கூரியர் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த தர்ஷன் என்று அழைக்கப்படும் துருவா என்ற இளைஞரும் அவரது நண்பர்களும் சேர்ந்து இந்த மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளனர். தற்போது இணையதள வர்த்தக நிறுவனங்கள் மூலமாக டெலிவரி செய்பவர்களுக்கு ஒரு மின்னணு கருவி வழங்கப்பட்டிருக்கிறது. இந்தக் கருவி மூலமாகப் பொருள்களை டெலிவரி செய்ததையும், பணத்தைப் பெற்றுக்கொண்டதையும் அந்தந்த நிறுவனங்களுக்கு உடனுக்குடன் அப்டேட் செய்ய முடியும். இந்தக் கருவியில் கார்டுகள் மூலம் பணப்பரிமாற்றம் செய்யும் வசதியும் கொடுக்கப்பட்டிருக்கும். அதைப்போன்ற ஒரு மின்னணு கருவிதான் ஏக்தந்தா கூரியரில் பணிபுரிந்து வந்த தர்ஷனுக்கும் கொடுக்கப்பட்டிருந்தது. அதைத்தான் அவர் நூதனமான முறையில் பயன்படுத்தி பணத்தைத் திருடியிருக்கிறார்.

ஸ்வைப்பிங் கருவி

2017 செப்டம்பர் மாதம் முதல் கடந்த பிப்ரவரி மாதம் வரையிலான காலகட்டத்தில், சிக்மகளூர் நகரத்தில் இருந்து மட்டும் கிட்டத்தட்ட 4,604 ஆர்டர்களை அமேஸான் நிறுவனம் பெற்றிருக்கிறது. அந்த ஆர்டர்கள் அனைத்தையும் டெலிவரி செய்தது தர்ஷன்தான். அந்தப் பொருள்களை டெலிவரிக்கு வெளியே எடுத்துச் செல்லும் தர்ஷன் டெலிவரி செய்த பின்னர் கார்டு மூலமாகப் பொருளுக்கான பணத்தைக் பெற்றுக்கொண்டதாக ஒரு போலியான தகவலை உருவாக்கி அமேஸான் நிறுவனத்திற்கு அனுப்பியிருக்கிறார். ஆனால், வாடிக்கையாளரிடமிருந்து பெறப்பட்ட பணம் தனது வங்கிக்கணக்கிற்குச் செல்லுமாறு மின்னணு கருவியில் மாற்றம் செய்திருக்கிறார். இதே வழியைப் பின்பற்றி ஐந்து மாதங்களில் தர்ஷன் சுருட்டிய தொகை கிட்டத்தட்ட 1.3 கோடி ரூபாய். தர்ஷனின் நண்பர்களும் இந்த மோசடியில் அவருக்கு உடந்தையாக இருந்துள்ளார்கள். அவர்களிடமும் விலை உயர்ந்த பொருள்களை அமேஸானில் ஆர்டர் செய்யச் சொல்லி பணத்தைப் பெற்றுவிட்டதைப் போல அப்டேட் செய்திருக்கிறார் தர்ஷன்.

கடந்த பிப்ரவரியில் அமேஸான் நிறுவனத்தில் நடந்த காலாண்டு தணிக்கையின் பொழுதுதான் இப்படி ஒரு மோசடி அமேஸான்நடந்ததைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். தர்ஷன் மோசடி செய்தது உறுதி செய்யப்பட்டாலும் இவ்வளவு பெரிய தொகையை எப்படி அவரால் சுருட்ட முடிந்தது என்ற முழு விவரம் இன்னும் கண்டறியப்படவில்லை. கார்டுகளை ஸ்வைப்பிங் செய்யும் கருவியில் அவர் ஏதாவது மாற்றம் செய்திருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். மின்னணு கருவியை தர்ஷனிடமிருந்து கைப்பற்றியவர்கள் அதைத் தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பியுள்ளார்கள். இந்த மோசடி தொடர்பாக அமேஸான் நிறுவனம் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளது. வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் தர்ஷன் மற்றும் அவரது நண்பர்கள் நான்கு பேரைக் கைது செய்திருக்கிறார்கள். அவர்களிடமிருந்து 21 ஸ்மார்ட்போன்கள், ஒரு லேப்டாப், ஐபோன், ஐவாட்ச் மற்றும் நான்கு பைக்குகள் கைப்பற்றப்பட்டுள்ளன. கைப்பற்றப்பட்ட பொருட்களின் மொத்த மதிப்பு 25 லட்சம் எனக் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மோசடியில் ஈடுபட்ட தர்ஷனின் வயது 25-தான், அதுவும் அவர் பத்தாம் வகுப்பைக்கூட தாண்டவில்லை என்ற விவரமும் வெளியாகியுள்ளது. 

0 coment�rios: