Home Top Ad

பொதுவாக கருணாநிதி தான் இருக்கும் இடத்தை கலகலப்பாக வைத்துக் கொள்வார். நகைச்சுவை மற்றும் சிலேடையாக பேசுவது போன்ற அவரது பேச்சின் வெளிப்பாடு ...

காவேரி மருத்துவமனையில் நடந்த சுவாரசியம்! நர்சுகளை அசர வைத்த கருணாநிதி

பொதுவாக கருணாநிதி தான் இருக்கும் இடத்தை கலகலப்பாக வைத்துக் கொள்வார்.

நகைச்சுவை மற்றும் சிலேடையாக பேசுவது போன்ற அவரது பேச்சின் வெளிப்பாடு அவரது அருகில் இருப்பவர்களை சிரிக்கச் செய்துவிடும்.

இந்நிலையில் தான் 2016 ஆம் ஆண்டு காவேரி மருத்துவமனையில் அனுமதித்திருந்தபோது அங்கிருந்த செவிலியர்களிடம் நகைச்சுவையாக பேசியுள்ளார்.

தீவிர சிகிச்சை பெற்று வந்த கருணாநிதியின் உடல் நிலையைக் கருத்தில் கொண்டு அவருக்கு தண்ணீர் அதிகம் கொடுக்கக் கூடாது என்று அவரை கவனித்துக் கொண்டிருந்த நர்சுகளுக்கு டாக்டர்கள் உத்தரவிட்டிருந்தனர்.

அதனால் தொடர்ந்து கருணாநிதி குடிப்பதற்கு தண்ணீர் கேட்டும் பணியில் இருந்த செவிலியர் தண்ணீர் கொடுக்கவில்லை.

ஒரு கட்டத்தில் அந்தசெவிலியரை அழைத்த கருணநிதி , இத்தனை தடவை தண்ணீர் கேட்டும் நீ கொடுக்கவில்லையே ! உன் பேரென்ன காவேரியா ? என கேட்டு தனது நகைச்சுவை உணர்வை வெளிப்படுத்தியுள்ளார்.

0 coment�rios:

பிக்பாஸ் வீட்டில் கமல்ஹாசன் நேற்று நடிகர் பொன்னம்பலத்துடன் நீண்ட நேரம் உரையாடினார். பல குறும்படங்களை போட்டு அது பற்றி விளக்கம் கேட்டார். ...

மன்னிப்பு கேட்ட பொன்னம்பலம்! கழுத்தை பிடித்த கமல்.. அதிர்ச்சியான ரசிகர்கள்

பிக்பாஸ் வீட்டில் கமல்ஹாசன் நேற்று நடிகர் பொன்னம்பலத்துடன் நீண்ட நேரம் உரையாடினார். பல குறும்படங்களை போட்டு அது பற்றி விளக்கம் கேட்டார்.

ஐஸ்வர்யா சர்வாதிகாரியாக இருந்தபோது அவரை கழுத்தை பிடித்து தண்ணீரில் தள்ளியது பற்றி பேசிய பொன்னம்பலம், "அவர் அவராகவே இல்லை, வேறு வழி இல்லை என தெரியும்.. அதனால் தான் அப்படி செய்தேன். அது தவறாக இருந்தால் மன்னிப்பு கேட்கிறேன்" என கூறினார்.

மேலும் தான் ஸ்டண்ட்மேன் என்றும், அடிபடாமல் எப்படி சண்டை போடவேண்டும் என்பது தெரியும் என கூறி ஒரு பெண்ணை அழைத்து ஐஸ்வர்யாவுக்கு செய்தது போலவே மேடையில் செய்துகாட்டினார்.

அதன்பின் கமல் பொன்னம்பலத்தின் கழுத்தை பிடித்து அழுத்துவது போல செய்தார், ஆனால் வலிக்கவே இல்லை என பொன்னம்பலம் கூறிய பிறகு தான் புரிந்தது இருவரும் நடித்தார்கள் என்று.

0 coment�rios:

இயக்கம், நடிப்பு, தயாரிப்பு என பல வேலைகளை செய்து கமல்ஹாசன் வெளியிட்டிருக்கும் படம் விஸ்வரூபம் 2. இப்படத்தின் முதல் பாகத்திற்கு மக்களிடம் ...

பக்கா மாஸ் வசூல் செய்யும் கமல்ஹாசனின் விஸ்வரூபம் 2- மூன்று நாள் அதிரடி வசூல் விவரம்

இயக்கம், நடிப்பு, தயாரிப்பு என பல வேலைகளை செய்து கமல்ஹாசன் வெளியிட்டிருக்கும் படம் விஸ்வரூபம் 2.

இப்படத்தின் முதல் பாகத்திற்கு மக்களிடம் எப்படிபட்ட வரவேற்பு கிடைத்தது என்பது நமக்கே தெரியும். இரண்டாம் பாகத்திற்காக ஆவலாக காத்துக் கொண்டிருந்த மக்கள் இப்போது நல்ல வரவேற்பு கொடுத்து வருகின்றனர்.

விஸ்வரூபம் 2 படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்தாலும் பாக்ஸ் ஆபிஸில் கலக்கிதான் வருகிறது. இப்போது படம் மூன்று நாள் முடிவில் சென்னையில் மட்டும் ரூ. 3.02 கோடி வரை வசூலித்துள்ளதாம்.

முதல் நாள்- ரூ. 0.92
இரண்டாம் நாள்- ரூ. 1.03
மூன்றாம் நாள்- ரூ. 1.07

0 coment�rios: