Home Top Ad

தமிழ் சினிமாவிற்கு மட்டுமல்லாமல் உலகிற்கே நாயகனாக இருப்பவர் நடிகர் கமல்ஹாசன். இவரது அந்த காலத்து படங்களுக்கு தனி சிறப்பே இருந்தது. ஆனால் தற...

இந்த விஷயத்திற்காக தானா பிக்பாஸை கமல் தொகுத்து வழங்குகிறாரா? அவரே கூறிய தகவல்கள்

தமிழ் சினிமாவிற்கு மட்டுமல்லாமல் உலகிற்கே நாயகனாக இருப்பவர் நடிகர் கமல்ஹாசன். இவரது அந்த காலத்து படங்களுக்கு தனி சிறப்பே இருந்தது. ஆனால் தற்போது அரசியலில் குதித்து உள்ளதால் அவரது படங்கள் கொஞ்சம் இடைவெளி விட்டே வருகிறது.

மேலும் இதற்கிடையில் பிரபல நிகழ்ச்சி பிக்பாஸையும் தொகுத்து வழங்குகிறார். இந்த நிகழ்ச்சி தேவையில்லாதது இதை ஏன் கமல் தொகுத்து வழங்குகிறார் என பல தரப்பினரிடமிருந்து கேள்விகள் வந்தன.

அதற்கு தற்போது பதில் அளித்துள்ளார் கமல். அதில், ‘நான் அரசியலில் நிலைத்து நிற்க வேண்டுமானல் எனக்கு காசு தேவை அதை கொடுக்கும் வேலையாக தான் நான் பிக்பாஸை பார்க்கிறேன், அரசியல் என்பது எனது கடமை’ என தன் பக்க நியாத்தை சொல்லியுள்ளார்.

0 coment�rios:

வீரம் ப்ளஸ் முட்டாள்தனம் ஈக்குவல் டூ மோடுமுட்டி! ஒரு மோடு முட்டியை பொள்ளாச்சியிலிருந்து மூட்டை கட்டிக் கொண்டு வந்து சென்னையிலும், பாரீசிலும...

ஜுங்கா / விமர்சனம் - வீரம் ப்ளஸ் முட்டாள்தனம் ஈக்குவல் டூ மோடுமுட்டி!

வீரம் ப்ளஸ் முட்டாள்தனம் ஈக்குவல் டூ மோடுமுட்டி! ஒரு மோடு முட்டியை பொள்ளாச்சியிலிருந்து மூட்டை கட்டிக் கொண்டு வந்து சென்னையிலும், பாரீசிலும் விட்டால் என்னாகும்? அப்படியே அந்த கற்பனையில் லைட்டா காதலையும் புழிஞ்சா, கண் மயக்கும், மனம் மயக்கும் ஜுங்கா ரெடி! அட… ஜுங்கான்னா என்னப்பா? படத்தை பாருங்கப்பா… பங்கம் பண்ணியிருக்கானுங்க! (மரியாதை…மரியாதை)

பூர்வீக சொத்தே ஒரு தியேட்டர்தான். அதுவும் சென்னையில். அது தெரியாமல் கண்டக்டர் வேலையை குப்பையாக கொட்டிக் கொண்டிருக்கும் விஜய் சேதுபதிக்கு அதாவது மிஸ்டர் ஜுங்காவுக்கு தெரிய வர… கிளம்புடா சென்னைக்கு. மீளுடா தியேட்டரை என்ற ஆவேசத்தோடு வந்திறங்குகிறார். வந்தால், ரெண்டாயிரத்து சொச்சம் கோடிக்கு அதிபதியான சுரேஷ்மேனனிடம் இருக்கிறது தியேட்டர். ஒரு கோடியை கொடுத்துட்டு தியேட்டரை மீட்கலாம் என்று சின்ன சின்ன தாதாயிசம் பண்ணுகிறார் சேது. (பூர்வீக தொழிலாச்சே?) கிடைக்கிற பணத்தை அப்படியே சேர்த்துக் கொண்டுபோய் அவரிடம் கொடுத்தால், ‘தியேட்டரா? ஒனக்கா? போடா போ’ என்கிறார் அவர். அப்புறம்? வீறு கொண்டு எழும் வி.சே, தாறுமாறாக பிளான் போட்டு தியேட்டரை மீட்பதே க்ளைமாக்ஸ்.

ஆளே மாறியிருக்கிறார் சேது. கொசு குறுக்கே போனால் கூட, டைனோசரே மிரள்கிற அளவுக்கு கத்தி குமிக்கிறார். பாடி லாங்குவேஜ், டயலாக் டெலிவரி, காஸ்ட்யூம், காலர், பட்டன் என்று சகலத்திலும் புது விஜய்சேதுபதி. அவரது ரசிகர்கள் மட்டுமல்ல… அத்தனை பேரும் அள்ளிப்பூசிக் கொள்கிற அளவுக்கு ஜோர் பண்ணுகிறார். ஆனால் முகத்துல போட்ட ஓவர் பவுடரும், கொஞ்சம் தடித்த தோலும் ‘எத்தனாவது பர்த் டே?’ன்னு கேட்க வைக்குது. கவனம் தலைவா… ஆமாம்… லவ் வந்து டூயட் ஆடுற நேரத்திலும் கூட, சாயிஷாவை விட்டு தள்ளியே நிக்குறீங்களே, என்னாத்துக்கு?

அடுத்து யோகிபாபு! உடம்பு வெயிட் மண்டைக்கு டிரான்ஸ்பர் ஆகியிருக்கலாம். நான் சொல்றதுதான் டைமிங். போட்றதுதான் வெடிச்சிரிப்புன்னு நினைத்து பேசுகிறார். பல இடங்களில் சிரிக்க முடிந்தாலும், சில இடங்களில் நாங்க சிரிக்கலேப்பா… என்று இறுக விடுகிறார். கஞ்சனிடம் சிக்கிக் கொண்டு பசி பொறுக்க முடியாமல் அலையும் நேரத்தில் பொங்க விடுவது சிறப்பு.

நம்ம சாயிஷான்னு நாடு கொண்டாடுற நேரம் வந்தாச்சு. தலைநகர் பாரீசில், தளுதளுப்பாக திரியும் அவருக்கு காஸ்ட்யூம் டிசைனர் யாரோ? நல்லாயிருப்ப கண்ணு. எங்கெல்லாம் டிரஸ் தேவை. எங்கெல்லாம் தேவையில்லேன்னு நல்லா புரிஞ்சு வச்சுருக்க! பாரீசின் மைனஸ் குளிரில் அவர் ஆடும் துடுக் துடுக் டான்ஸ், நமக்கு குளிரடிக்கவும் அவருக்கு குளிர் போக்கவும் உதவியிருக்கிறது.

முதல் பாதியை மடோனாவுக்காக ஒதுக்கியிருக்கிறார் இயக்குனர் கோகுல். தமிழை தெலுங்கில் போட்டு குலுக்கிப் பேசும் அந்த ஸ்டைல் யப்பா… செம!

எப்பவும் இஞ்சி தின்ற எபெக்டிலேயே வருகிறார் வில்லன் சுரேஷ் மேனன். வந்திருக்கார்… அதற்கப்புறம் சொல்ல என்ன இருக்கு?

படத்தின் ஐகான், சரண்யா பொன்வண்ணனும் அந்த விஜயா பாட்டியும்தான். தொண்டை தண்ணி வறளும்படி கத்த ஆரம்பிக்கும் சரண்யாவின் டயலாக் மாடுலேஷன் அப்படியே அள்ளூகிறது. பேரன் குறித்து எந்நேரமும் புளகாங்கிதப்படும் விஜயா பாட்டி, அவன் சொதப்பினான் என்று தெரிந்து பம்முவதும் பின்பு ஏறி அடிப்பதும் தியேட்டரே துவம்சமாகிற அளவுக்கு குட்… வெரி குட்!

இசையமைப்பாளர் சித்தார் விபின் இப்படத்தில் நடிக்காதது பெரும் குறை. வாய்ப்பு தராத அந்த கோபத்தை பாடல்களில் காட்டிவிட்டார். நல்லவேளை… அந்த பாரீஸ் டூயட் கைகொடுக்கிறது.

ஒளிப்பதிவாளர் டட்லி ஒரு லிப்ட் போல எல்லாரையும் தூக்கிக் கொண்டுபோய் பாரீசில் இறக்கியிருக்கிறார். கண்ணை அள்ளுது தல…

பிளாக் காமெடி என்ற வஸ்துவை ஜனங்களுக்கு அறிமுகப்படுத்திய புண்ணியவான் எவனோ… அவன் நாசமா போக. வெந்தும் வேகாமலும் கிடைக்கிற அரைவேக்காட்டு சிரிப்பு எவனுக்கு வேணும்? வின்னர் வடிவேலுகளும், வீடு கொள்ளா சிரிப்புமாக இருந்த காலம் போயே போச்.

இயக்குனர் கோகுல் நினைத்தால் பழக்கடையே சாத்தியம். ஆனால் ஜுங்கா, அவுன்சில் அளந்து அண்ணாந்து குடிக்க வைக்கும் புளியங்கா ஜுஸ்!

0 coment�rios:

கல்யாண வயசு தான் வந்திடுச்சு டீ என்று கோலமாவு கோகிலா படத்தில் யோகி பாபு பாடியது அவர்கள் வீட்டில் கேட்டுவிட்டது போல் தெரிகிறது. முன்னணி நட...

யோகி பாபுவிற்கு கல்யாண வயசு வந்திடுச்சு- பெண் யார், எப்போது திருமணம்?

கல்யாண வயசு தான் வந்திடுச்சு டீ என்று கோலமாவு கோகிலா படத்தில் யோகி பாபு பாடியது அவர்கள் வீட்டில் கேட்டுவிட்டது போல் தெரிகிறது.

முன்னணி நடிகர்கள் படங்கள் முதல் சிறிய நடிகர்களின் படங்களை கமிட்டாகி பிஸியாக நடித்து வருகிறார் யோகி பாபு. அதுவும் கோலமாவு கோகிலா படத்தில் வந்த யோகி நடித்த கல்யாண வயசு வந்திடுச்சு டீ பாடல் இளைஞர்களிடம் மிகவும் பிரபலம் ஆகிவிட்டது.

தற்போது யோகி பாபு ஒரு ஜாலியான பேட்டி ஒன்று கொடுத்துள்ளார். அதில் திருமணம் எப்போது யாரையாவது காதலிக்கிறீர்களா என்று கேட்டுள்ளனர். அதற்கு அவர், நான் யாரையும் காதலிக்கவில்லை, ஆனால் வீட்டில் பெண் பார்க்கிறார்கள் என்று கூறியுள்ளார்.

0 coment�rios:

விஜய் சேதுபதி என்றாலே எல்லாருடைய மனதிலும் நினைவிற்கு வருவது அவரது இயல்பான நடிப்பு தான். அந்த அளவிற்கு தான் நடித்த படங்கள் அனைத்திலும் ஒரு ச...

மறுபடியும் கேங்ஸ்டரில் ஜுங்காவாக கலக்க இருக்கும் விஜய்சேதுபதி- ஆனால் அதற்கும் இதற்கும் கொஞ்சம் வித்தியாசம் உள்ளது

விஜய் சேதுபதி என்றாலே எல்லாருடைய மனதிலும் நினைவிற்கு வருவது அவரது இயல்பான நடிப்பு தான். அந்த அளவிற்கு தான் நடித்த படங்கள் அனைத்திலும் ஒரு சிறு பகுதியிலாவது தனது இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.

அந்த அடையாளத்தின் மூலமே தற்போது அவர் முன்னணி நடிகர் பட்டியலில் உள்ளார். அத்தகையவரின் நடிப்பில் அடுத்ததாக வெளியாக இருக்கும் படம் ஜுங்கா. இதற்கு முன் இவரது நடிப்பில் வெளியாகி கவனிக்கத்தக்க படமாக அமைந்த இதற்குதான் ஆசைப்பட்டாயா பாலகுமாராவை இயக்கிய கோகுல் தான் இப்படத்தையும் இயக்கவுள்ளார்.

படத்தில் நடிப்பது மட்டுமில்லாமல் நடிகர் அருண் பாண்டியனுடன் சேர்ந்து இப்படத்தை தயாரிக்கவும் செய்துள்ளார் விஜய்சேதுபதி. படத்தில் இவருக்கு ஜோடியாக தற்போதைய டிரெண்டிங் நடிகை சாயிஷா நடித்துள்ளார். மடோனா செபாஸ்டினும் வருகிறார்.

படத்தின் காமெடிக்காக யோகிபாபுவை சேர்த்தாலும் எப்படியோ அவர் மட்டும் காமெடி பண்ண போவதில்லை கூட விஜய்சேதுபதியும் சிரிக்க வைக்க போகிறார் என்பதை படத்தின் டிரைலரை பார்த்த அனைவருக்கும் தெரியும். என்னதான் படம் முழுக்க வெளிநாட்டில் காட்சிப்படுத்தி இருந்தாலும் கஞ்சதனமான ரௌடியாகவே விஜய்சேதுபதி வருகிறாராம்.

மேலும் படத்தின் இசைவேலையை சித்தார்த் விபின் நன்றாக செய்துள்ளார் என்றே தெரிகிறது. ஏனெனில் இதுவரை வெளியாகியுள்ள அனைத்து பாடல்களுமே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. வெளிநாடாக இருந்தாலும் சென்னை லோக்கல் லெவலுக்கு இறங்கி குத்து போடும் அளவுக்கு கானா பிரபலங்களை எல்லாம் பாட வைத்துள்ளார்.

ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கும் படங்களில் ஒன்றாக உள்ள இந்த படம் வரும் வெள்ளிகிழமை 27ஆம் தேதி ரிலிஸாக உள்ளது.

0 coment�rios:

தமிழக அரசியல்வாதிகள் மேடையிலோ அல்லது பேட்டியின்போதோ உளறுவது என்பது தற்போது சர்வசாதாரணமாக இருந்து வருகிறது. குறிப்பாக ஒரு அரசியல் தலைவர் த...

என்னடா மாண்பு மிகு பிரதமர் எடப்பாடியா?.....உளறி கொட்டிய எம்.பி

தமிழக அரசியல்வாதிகள் மேடையிலோ அல்லது பேட்டியின்போதோ உளறுவது என்பது தற்போது சர்வசாதாரணமாக இருந்து வருகிறது.

குறிப்பாக ஒரு அரசியல் தலைவர் தப்பு தப்பாக பழமொழிகளை கூறி வருவது நெட்டிசன்களின் கிண்டலுக்கு உள்ளாகி வருகிறது.

இந்த நிலையில் அதிமுக எம்பி ஒருவர் பாராளுமன்றத்தில் பேசியபோது பாரத பிரதமர் எடப்பாடி பழனிச்சாமி என்று கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுக மாநிலங்களவை எம்.பி நவநீதகிருஷ்ணன் நேற்று மாநிலங்களவையில் பேசியபோது, மாண்புமிகு பிரதமர் எடப்பாடி பழனிச்சாமியின் திட்டம் என்று கூறி ஒரு திட்டம் குறித்து பேசினார்.

மாண்புமிகு முதல்வர் என்று கூறுவதற்கு பதிலாக அவர் மாண்புமிகு பிரதமர் என்று கூறியதை அவை உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியதும் நவநீதகிருஷ்ணன் எம்பி தனது தவறை திருத்தி அதன் பின்னர் மாண்புமிகு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி என்று கூறினார்.

ஏற்கனவே இதுபோன்ற உளறலுக்காக காத்திருக்கும் நெட்டிசன்களும் மீம்ஸ் கிரியேட்டர்களும் இந்த உளறல் குறித்து கிண்டலடித்து வருகின்றனர். அரசியல் தலைவர்கள் மற்றும் பொருப்பான பதவியில் உள்ளவர்கள் தங்கள் பொருப்பை உணர்ந்து பேச வேண்டும் என்பதே அனைவரின் வேண்டுகோளாக உள்ளது.

0 coment�rios:

ஆவாரை முழுத் தாவரமும், துவர்ப்புக் குணமும், குளிர்ச்சித் தன்மையும் கொண்டது. சிறுநீரக, சிறுநீர்த்தாரை சம்பந்தமான நோய்களையும், ஆண்குறி எரிச்ச...

சர்க்கரை நோயாளிகளின் வரப்பிரசாதம் இந்த பூ....இருந்த தடமே தெரியாதாம்

ஆவாரை முழுத் தாவரமும், துவர்ப்புக் குணமும், குளிர்ச்சித் தன்மையும் கொண்டது. சிறுநீரக, சிறுநீர்த்தாரை சம்பந்தமான நோய்களையும், ஆண்குறி எரிச்சலையும் போக்கும்.

இலை, பூ, பட்டை உடலைப் பலமாக்கும். துவர்ப்புத் தன்மையைக் கூட்டும். பூ, வறட்சி, கற்றாழை நாற்றம் ஆகியவற்றைப் போக்கும். உடம்பிற்கு பொற்சாயலைத் தரும். வேர், இளைத்த உடலைத் தேற்றும். விதை காமம் பெருக்கும், குளிச்சியுண்டாக்கும்.

ஆவாரம் இலையை அம்மியில் அல்லது மிக்ஸியில் போட்டு அரைத்து அதன் விழுதை ஒரு கரண்டியில் இட்டு அதனுடன் சிறிது நல்லெண்ணெய் விட்டு சிறுதனலில் ஆவாரம் விழுதை வதக்கி அதை சுத்தமான காட்டனில் வைத்து கட்டிவிடவேண்டும். இதுபோல் ஒருநாள் விட்டு ஒருநாள் கட்டிவர சர்க்கரை நோயால் ஏற்படும் குழிப்புண்கள் மாயாமாக மறைந்துவிடும்.

வெள்ளைபடுதல், சிறுநீர் எரிச்சல் தீர ஆவாரையின் பூ இதழ்களைச் சேகரித்து, நிழலில் உலர்த்தி, தூள் செய்து கொண்டு, ½ கிராம் அளவு, 2 கிராம் வெண்ணெயில் குழைத்துத் தொடர்ந்து சாப்பிட்டு வர வேண்டும்.

உடல்சூடு, தோல் வறட்சி நீங்கி பலம் பெற ஆவாரை பூச்சூரணத்தை பாலில் கலந்து குடித்துவர வேண்டும் அல்லது பூவைக் குடிநீராக்கியும் சாப்பிட்டு வரலாம் அல்லது பூ இதழ்களைச் சேகரித்து, கூட்டு செய்து, தொடர்ந்து பயன்படுத்த வேண்டும்.

மாதவிடாயின்போது ஏற்படும் அதிக இரத்தப் போக்குக் கட்டுப்பட 20 கிராம் ஆவாரைப் பட்டையைப் பொடி செய்து, ஒரு லிட்டர் நீரில் இட்டு, 200 மி.லி. ஆக சுண்டக் காய்ச்சி, 50 மி.லி. அளவில் காலை, மாலை வேளைகளில் குடித்துவர வேண்டும்.

தோல் அரிப்பு மற்றும் நமைச்சல் குணமாக பசுமையான அல்லது உலர்ந்த பூக்களுடன், சமஅளவு பச்சைப்பயறு சேர்த்து அரைத்து, வெந்நீர் கலந்து பசையாக்கி, உடம்பில் தேய்த்து ஊறவைத்து, சிறிது நேரம் கழித்துக் குளிக்க வேண்டும்.

திருமணமா‌கி பல ஆ‌ண்டுக‌ள் ஆ‌கியு‌‌ம் குழ‌ந்தை இ‌ல்லாத பெ‌ண்க‌ளு‌க்கு ஆவாரை பய‌ன்படு‌கிறது. அதாவது, கருப்பட்டியுடன் ஆவாரை‌ப் பூவை சேர்த்து உ‌ண்டு வ‌ந்தா‌ல், பெ‌ண்களு‌க்கு மல‌ட்டு‌த் த‌ன்மை ‌நீ‌ங்கு‌ம். ‌விரை‌வி‌ல் க‌ர்‌ப்ப‌ம் உண்டாகும் வாய்ப்பு ஏற்படும்.

ஆவாரம்பட்டை, அத்திப்பட்டை, நாவல்படை இவை மூன்றையும் சம அளவு பொடி செய்து தேனில் 5-10 நாட்கள் சாப்பிட வெள்ளை நோய், நீரிழிவு தீரும்.

0 coment�rios:

‘ஆனந்த யாழை மீட்டுகிறேன்’ பாடலை விட ஒரு உசரமான பாடல், ராம்- நா.முத்துகுமார் காம்பினேஷனில் இனி வரப்போவதில்லை. தன் முதல் படத்திலிருந்தே நா.மு...

நா.முத்துகுமார் இடம்! மனைவியை வைத்து நிரப்பிட்டீங்களா ராம்?

‘ஆனந்த யாழை மீட்டுகிறேன்’ பாடலை விட ஒரு உசரமான பாடல், ராம்- நா.முத்துகுமார் காம்பினேஷனில் இனி வரப்போவதில்லை. தன் முதல் படத்திலிருந்தே நா.முத்துகுமாரின் தோழனாகிவிட்ட இயக்குனர் ராம், யுவன் -நா.மு காம்பினேஷனுக்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பார்.

தனக்கு விருது கொடுத்து கவுரவித்த ஆனந்தவிகடன் மேடையிலேயே ‘நா.முத்துகுமாருக்கு ஏன்யா விருது கொடுக்கலே?’ என்று சண்டைப்போட்ட இந்த சாக்லெட் தோழர், அவரில்லாத சினிமாவை எப்படி எதிர்கொள்வார்?

சின்ன வயதிலேயே இந்த உலகத்தை விட்டுப் போன கவிஞர் நா.முத்துகுமாரை திரையுலகம் ஒவ்வொரு நாளும் நினைத்துக் கொள்ளும் என்றாலும், ராம் நிறையவே நினைக்கிறார். ‘பேரன்பு’ படத்தில் நா.முத்துகுமார் இல்லையே என்கிற கவலை அவரை வாட்டி எடுப்பதை புரிந்து கொள்ளவும் முடிகிறது. நா.முத்துகுமார் இடத்தை நிரப்ப யாராலும் முடியாது என்று அந்த விழா மேடையிலேயே சொன்னவரை நோக்கி ஒரு கேள்வியை கேட்கிறார்கள் ரசிகர்கள்.

“ஆமாம்… அவரு இடத்தை யாராலும் நிரப்ப முடியாதுதான். அதற்காக யானைக்கு போர்த்திய அம்பாரியில வடகம் காய வச்சுட்டீங்களே வாத்யாரே…” என்கிறார்கள் அவர்கள்.

ஏன் இப்படி புலம்பணும்?

வேறொன்றுமில்லை. இந்தப்படத்தில் நா.முத்துகுமார் எழுதுகிற அளவுக்கு வெயிட்டான ஒரு பாடலை இயக்குனர் ராமின் மனைவி சுமதியே எழுதிவிட்டாராம்.

0 coment�rios:

தமிழ் சினிமாவை பொறுத்த வரை காலம் காலமாக ஹீரோ புகழ் பாடுவது, ஹீரோயின் மரத்தை சுற்றி ஆடுவது என்பது மாற்ற முடியாத கலாச்சாரமாக இருந்தது. ஹாலிவு...

தமிழ்ப்படம் 2 திரைவிமர்சனம் - ஒரு முறைக்கு மேல் ரிப்பீட் அடிக்க முடியாது.

தமிழ் சினிமாவை பொறுத்த வரை காலம் காலமாக ஹீரோ புகழ் பாடுவது, ஹீரோயின் மரத்தை சுற்றி ஆடுவது என்பது மாற்ற முடியாத கலாச்சாரமாக இருந்தது. ஹாலிவுட்டில் எல்லாம் தரமான படங்களை கூட ஸ்கேரி மூவி என்ற பெயரில் கிழித்து தொங்கவிடுவார்கள்.

ஆனால், தமிழில் தங்களுக்கே தெரியாமல் 1 கிலோமீட்டருக்கு தாண்டுவது, பாலத்தில் இருந்து குதிப்பது என்று ஹீரோக்கள் பல சேட்டைகள் செய்ய, அதை தன் ஸ்டைலில் வைத்து செய்ய அமுதன் இயக்கிய படம் தான் தமிழ் படம், இப்படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து இந்த முறை அதிக கண்டெண்டுடன் களம் இறங்கியுள்ளது தமிழ் படம்-2, இதுவும் முதல் பாகத்தை போல் ரசிகர்களை கவர்ந்ததா? பார்ப்போம்.

கதை:

தமிழ் படத்தில் கதை என்று என்ன சொல்வது. பல படத்தின் காட்சிகளின் தொகுப்பு தான் தமிழ் படம்2.

போன முறை டி என்ற வில்லனை தேடி செல்லும் சிவா இந்த முறை வில்லன் பி யை தேடி செல்கின்றார். அந்த பி யை சிவா பிடித்தாரா என்பதை பல படங்களை பங்கம் செய்து கலாய்த்துள்ளார் சி.எஸ்.அமுதன்.

படத்தை பற்றிய அலசல்

சிவா சிவா சிவா ஒன் மேன் ஆர்மியாக மிரட்டியுள்ளார். படம் முழுவதையும் இவர் ஒருத்தரே தாங்கி நிற்கின்றார். சிவா நடந்தால் சிரித்தால் ஏன் கை அசைத்தால் கூட ஆடியன்ஸிடம் விசில் பறக்கின்றது.

படத்தில் பல படங்களை கலாய்ப்பது தான் கான்செப்ட் என்றால் படத்தின் முதல் காட்சியில் டிபேட்டில் தமிழிசையை காலை வாருவதில் இருந்து ஹெச்.ராஜாவை சோத்துக்கு வந்தேன் என சொல்ல வைப்பது, அதோடு சின்னம்மா சபதம் பன்னீர் செல்வம் சத்தியம் என அரசியல் அட்ராசிட்டி செய்துள்ளனர்.

அதிலும் இதில் சதீஷ் மிரட்டியுள்ளார், வில்லன் கெட்டப் போடலாம் அதற்காக 2.0 அக்‌ஷய்குமார் கெட்டப்பெல்லாம் ரொம்ப ஓவர் சார். சதீஷின் திரைப்பயணத்தில் ஆல் டைம் பெஸ்ட்.

செல்வம் நீங்க பழைய செல்வமா திரும்பி வரனும்னு சொல்றப்ப அது மட்டும் முடியாது சார் ஏன்னா நா செல்வமே இல்ல சிவா, போய் புள்ள குட்டிய படிக்க வைங்கடா...ஆனா இன்ஜினியரிங் மட்டும் படிக்க வைக்க வேண்டாம் போன்ற வசனம் கைத்தட்டல் பறக்கின்றது.

மேலும், படத்தில் தமிழ் படங்கள் மட்டுமின்றி ஸ்பீட், கேம் ஆப் துரோன்ஸ் போன்ற ஹாலிவுட் படங்கள், சீரியஸுகளையும் கலாய்த்துள்ளனர், தமிழில் டோட்டல் டேமேஜ் என்றால் வேதாளம், விவேகம் காட்சிகள் தான் மொத்த திரையரங்கமும் கொண்டாடுகின்றது, அதேபோல் பாகுபலி, கபாலி காட்சிகள் ரசிக்க வைக்கின்றது.

இத்தனை இருந்தும் முதல் பாதி ஒரு சில நேரத்திற்கு பிறகு கொஞ்சம் பொறுமையை சோதிக்கின்றது, ஏனெனில் அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சல்லவா? அதேபோல் தான், இன்னமும் கொஞ்சம் முதல் பாதி சுவாரசியப்படுத்தியிருக்கலாம், அதிலும் அடிக்கடி வரும் பாடல்கள் படத்தின் மைனல் முதல் பாதியில்.

படத்தின் ஒளிப்பதிவு பாராட்டியே ஆகவேண்டும், வேட்டையாடு விளையாடு காட்சியை ஒரு இடத்தில் கலாய்க்கிறார்கள், அதுக்கூட கமலுக்கு எப்படி ஆங்கிள் வைத்தார்களோ அதேபோல் சிவாவிற்கும், கண்ணனின் இசை கலக்கல் குறிப்பாக பின்னணி இசை, பாடல்கள் திருப்திப்படுத்தவில்லை.

க்ளாப்ஸ்

சிவா ஒருவரை மட்டுமே நம்பி பந்தயம் கட்டலாம்.

படங்களை கலாய்ப்பதை தேர்ந்தெடுத்த விதம், இன்றைய ட்ரெண்டிங் வசனங்களை கூட விட்டு வைக்காமல் கலாய்த்தது ஆடியன்ஸுடன் ஈசியாக கனெக்ட் செய்கின்றது.

பல்ப்ஸ்

படத்தின் முதல் பாதி கொஞ்சம் பொறுமையை சோதிக்கின்றது.

ஒரு முறை பார்க்கலாம், அடுத்த முறை சிரிப்பு வருமா என்றால் கேள்விக்குறி தான், அதிலும் அந்த ப்ளாஷ்பேக் காட்சிகள் ஏன் சார் இப்படி.

மொத்தத்தில் சிவா ஒன் மேன் ஆர்மியாக உங்களை கண்டிப்பாக 2.30 மணி நேரம் சந்தோஷப்படுத்துவார், ஆனால், ஒரு முறைக்கு மேல் ரிப்பீட் அடிக்க முடியாது.

0 coment�rios: