Home Top Ad

இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே நீண்டகாலமாக எல்லைப்பிரச்சனை இருந்து வருகிறது. இதனால், எல்லையில் அவ்வப்போது அசாதரண சூல்நிலையும் ஏற்பட்டு ...

தோண்ட தோண்ட கொட்டிக் கிடக்கும் தங்கம்! இதன் மதிப்பு 60 பில்லியன் அமெரிக்க டொலர்களாம்!

இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே நீண்டகாலமாக எல்லைப்பிரச்சனை இருந்து வருகிறது. இதனால், எல்லையில் அவ்வப்போது அசாதரண சூல்நிலையும் ஏற்பட்டு வருகிறது.

இதற்கு காரணம், இந்தியாவிற்கு சொந்தமான அருணாசலபிரதேசத்தை தங்களது தெற்கு திபெத்தின் ஒரு பகுதி என்று சீனா உரிமை கொண்டாடி வருவது தான்.

இந்நிலையில், அருணாச்சல பிரதேச எல்லயை ஒட்டிய லூன்சே எனும் பகுதியில் சீன அரசாங்கம் தங்கச் சுரங்கம் தோண்டி வருவதாக செய்திகள் வந்தன.

இதில், சுமார் 60 பில்லியன் அமெரிக்க டொலர்கள் அளவிர்கு தங்கம், வெள்ளி மற்றும் விலை உயர்ந்த உலோக தாதுப் பொருட்கள் இருப்பதாக தனியார் செய்தி நிறுவனம் அண்மையில் தகவல் வெளியிட்டிருந்தது.

இந்நிலையில், இது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் லூ காங் கூறியதாவது, சீனா தனது எல்லைக்கு உட்பட்ட பகுதியில் அவ்வப்போது பூமிக்கு அடியில் ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது.

இப்படியிருக்கையில், தற்போது தங்கச் சுரங்கம் தோண்டப்படும் பகுதி முழுக்க முழுக்க சீனாவின் இறையாண்மைக்கு சொந்தமானது. இந்த பகுதியை அனுபவிக்க எங்களுக்கு முழு உரிமை உள்ளது. என்று தெரிவித்துள்ளார்.

0 coment�rios: