Home Top Ad

செல்வராகவன் தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரங்களில் ஒருவர். ஒரு படத்தின் வெற்றி, தோல்வி தாண்டி எழுத்து-இயக்கம் செல்வராகவன் என்று திரையி...

தமிழ் சினிமாவின் அத்தனை பார்முலாவையும் குத்தி கிழித்தெறிந்த செல்வராகவன்

செல்வராகவன் தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரங்களில் ஒருவர். ஒரு படத்தின் வெற்றி, தோல்வி தாண்டி எழுத்து-இயக்கம் செல்வராகவன் என்று திரையில் வரும் போது விசில் சத்தம் பறக்கும்.

அப்படி ஒரு புகழுக்கு சொந்தமான செல்வராகவனின் மாஸ்டர் பீஸ் புதுப்பேட்டை வெளிவந்து இன்றுடன் 12 வருடங்கள் ஆகின்றது.

இந்த படம் இப்போது வந்திருந்தால் மெகா ஹிட் ஆகியிருக்கும், சூப்பர் ஹிட் ஆகியிருக்கும், ரூ 100 கோடி வசூல் வந்திருக்கும் என சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஒரு பேச்சு இருக்கும்.

ஆனால், செல்வராகவனோ எப்போது வந்தாலும் புதுப்பேட்டை இப்படித்தான் இருக்கும் என்று சிம்பிளாக முடித்துவிடுவார். படத்தின் தொடக்கத்திலேயே நாயகன் பிச்சை எடுப்பது போல் ஒரு காட்சி.

தீம் மியூஸிக் போட்டு நடிகர்களுக்கு ஸ்லோ மோஷனில் மாஸ் இண்ட்ரோ கொடுத்த தமிழ் சினிமாவில் அம்மாவிடம் அடிவாங்கி கொண்டு பள்ளிக்கு கிளம்பும் ஒரு நாயகனாக தனுஷின் அறிமுகம்.

அம்மா இழப்பு, தெருவில் பிச்சை, அன்புவிடம் அறிமுகம், செல்வியுடன் காதல், காதலுக்காக கொலை, கொலையில் இருந்து பிறக்கும் அரசியல், அரசியல் ஆசையால் வரும் விளைவு என இதைவிட ஒரு கேங்ஸ்டர் வாழ்க்கையை யாரும் அருகில் நின்று படம் பிடித்திட முடியாது.

அதிலும் வேங்கைய மகன் ஒத்தைல நிக்கிறேன் என்பது போல் ஒரே ஆளாக நின்றுக்கொண்டு இரண்டே அடியில் மூர்த்தியின் தம்பியை கொலை செய்து, பின் ஒரு கேங்ஸ்டரிடம் சென்று ட்ரெயினிங் எடுப்பது, அந்த கேங்ஸ்டரும் உள்ளே பயத்தை வைத்துக்கொண்டு தனுஷிடம் தில்லாக பேசுவது.

வேரு ஒருவருக்கு திருமணம் செய்த பெண்ணை, கல்யாண மேடையில் தாலி கட்டுவது என சினிமா பார்முலா அனைத்தையும் குத்தி கிழித்த படம் தான் இந்த புதுப்பேட்டை.

இப்படி ஒவ்வொரு காட்சியிலும் நம்மை பிரமிக்க வைத்த செல்வராகவன் மீண்டும் இதே பலத்துடன் திரும்ப வரவேண்டும் என்பதே அனைவரின் விருப்பமும்.

0 coment�rios: