Home Top Ad

கருணாநிதி அவர்களுக்கு செல்லப் பிராணிகள் என்றால் அலாதி பிரியம், தினமும் தான் வளர்க்கும் நாய்களுடன் நேரம் செலவழிப்பார். அவர் அசைவ பிரியரும்...

நாய் இறந்ததால் சைவத்துக்கு மாறிய கருணாநிதி: நெகிழ்ச்சி சம்பவம்

கருணாநிதி அவர்களுக்கு செல்லப் பிராணிகள் என்றால் அலாதி பிரியம், தினமும் தான் வளர்க்கும் நாய்களுடன் நேரம் செலவழிப்பார்.

அவர் அசைவ பிரியரும் கூட, தினமும் அவரது உணவில் அசைவம் இருக்கும், தனது உணவையே நாய்களுக்கும் கொடுத்து உண்ணும் வழக்கம் உடையவர்.

ஆனால் திடீரென தான் பாசமாக வளர்த்த கருப்பு நாய் இறந்து விடவே, சைவத்துக்கு மாறினாராம்.

இதுகுறித்து கனிமொழி கூறுகையில், கருப்பு நாய் இறந்ததால் கலைஞர் சோகம் அடைந்தார், அதன் உடலை ஆலிவர் சாலையில் இருந்த வீட்டின் பின்புறம் புதைத்தோம்.

இதனால் கலைஞர் இரண்டு ஆண்டுகளாக அசைவம் சாப்பிடுவதையே நிறுத்தி விட்டார், ஆனால் மருத்துவ காரணங்களுக்காக அசைவம் சாப்பிட மருத்துவர்கள் அறிவுரை வழங்கினார்கள் என தெரிவித்துள்ளார்.

0 coment�rios: