Home Top Ad

மீண்டும் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். இந்தோனேஷியாவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு, பயங்கர நிலநடுக்கம் ...

இந்தோனேஷியாவில் மீண்டும் பயங்கர நிலநடுக்கம்; பீதியில் பொதுமக்கள்!

மீண்டும் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.

இந்தோனேஷியாவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு, பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். இரண்டு முறை நிலநடுக்கத்தால் தொடர் நில அதிர்வுகள் ஏற்பட்டு, மக்களை அச்சுறுத்தின.

ஆயிரக்கணக்கான வீடுகள், கட்டடங்கள் இடிந்து தரைமட்டமாகின. இந்த சூழலில் இன்று காலை சும்பவா பகுதியில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.5ஆக பதிவானது.

இந்நிலையில் இன்று இரவு மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 6.9ஆக பதிவாகியுள்ளது. இதனால் ஏராளமான கட்டடங்கள் குலுங்கின.

0 coment�rios: