Home Top Ad

நம்மில் பெரும்பாலானோர் பஸ் பயணம் செய்யும் போது வழியிலுள்ள ஹைவேஸ் ஓட்டல்கள் மற்றும் பேருந்து நிலையங்களில் உள்ள கடைகள் ஆகியவற்றில், உணவு பொரு...

முன்னாள் நிதியமைச்சர் ஏர்போர்ட்டில் டீ வாங்கி குடிக்க முடியாத சோக ட்வீட் ட்ரெண்டிங் ஆனது!

நம்மில் பெரும்பாலானோர் பஸ் பயணம் செய்யும் போது வழியிலுள்ள ஹைவேஸ் ஓட்டல்கள் மற்றும் பேருந்து நிலையங்களில் உள்ள கடைகள் ஆகியவற்றில், உணவு பொருட்களின் விலை யைக் கேட்டு நொந்து போயிருக்கிறோம்.. அப்போதெல்லாம் இந்த விலை சர்ச்சையை சீண்ட ஆளாளில்லாத நிலையில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்த்துக்கு நேர்ந்த ஓர் அதிர்ச்சியால் அந்த விலைவாசி விஷயம் ட்ரெண்டிங் ஆகி விட்டது ..

அதாவது சென்னை விமான நிலையத்தில் உள்ள காபிடே கடையில் ஒரு டீ கேட்டதாகவும், அந்த கடையின் ஊழியர் ஒரு கப் வென்னீர் மற்றும் ஒரு டீ பேக் எடுத்து வந்து வைத்து விட்டு ரூ.135 பில் கொடுத்ததாகவும், தான் மறுத்துவிட்டதாகவும் தன் ட்விட்டர் பேஜ்-ஜில் கூறியுள்ளார். மேலும் நான் செய்தது சரியா அல்லது தவறா? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

அந்த ட்வீட்டில், சென்னை விமான நிலையத்தில் உள்ள ஒரு காஃபி கடையில், டீ கேட்டேன். சுடு தண்ணீரும், ஒரு டீயும் கொடுத்தனர். விலை ரூ.135. விலையை கேட்டு அதிர்ச்சியடைந்த நான், டீ வேண்டாம் என்று கூறிவிட்டேன். நான் செய்தது சரியா? தவறா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் காபியின் விலை என்னவென்று கொஞ்சம் அதிர்ந்து போய் தான் கேட்டதாகவும் அதற்கு அந்த ஊழியர் ரூ.180 என்று கூறியதாகவும், இவ்வளவு விலைக்கு யார் வாங்கி குடிக்கின்றார்கள் என்று கேட்ட கேள்விக்கு ‘நிறைய பேர்’ என்று அந்த நபர் பதில் கூறியதாகவும் தெரிவித்துள்ளார். ஒருவேளை நான் தான் அப்டேட்டில் இல்லையா? என்றும் சிதம்பரம் கூறியுள்ளார்.

முன்னாள் நிதியமைச்சரின் இந்த ஏர்போர்ட்டில் டீ வாங்கி குடிக்க முடியாத சோக ட்வீட் ட்ரெண்டிங் ஆகி போச்சு!

0 coment�rios: