Home Top Ad

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரசியல் களத்தில் குதித்துள்ளது அனைவரும் அறிந்ததே. தனது ரசிகர்கள் மாவட்ட வாரியாக நிர்வாகிகளை தேர்ந்துடக்கும் பணி ந...

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரசியல் களத்தில் குதித்துள்ளது அனைவரும் அறிந்ததே. தனது ரசிகர்கள் மாவட்ட வாரியாக நிர்வாகிகளை தேர்ந்துடக்கும் பணி நடந்துவருகிறது. அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் நிர்வாகிகளை நியமித்து வருகின்றனர்.ஆனால் இரு தினங்களுக்கு முன்பாக மன்றத்தின் விதிகளை மீறி செயல்பட்டு வருவதாக ரஜினி மக்கள் மன்றம் திண்டுக்கல் மாவட்ட செயலாளர் தம்பிராஜை இடைநீக்கம் செய்தது, இதை எதிர்க்கும் விதத்தில் ஒட்டுமொத்த ரஜனி மக்கள் மன்ற nநிர்வாகி கள் ராஜினாமா செய்வதாக கூடி பேசி நேற்று அறிவித்தனர்

இந்நிலையில் திண்டுக்கல் மாவட்ட நிர்வாகிகளுக்கு, ரஜினியின் அறிவுரைப்படி, ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி விஎம்.சுதாகர் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ரஜினி மக்கள் மன்றத்தின் தலைமை வெளியிட்டுள்ள செய்தியில்,

தம்புராஜ் மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்திற்கு அனைவரையும் அழைக்காமல் தனக்கு விருப்பமானவர்களை மட்டும் அழைத்து பேசியிருக்கிறார். இதுதொடர்பாக அவரை தொடர்பு கொண்டபோது சரியான விளக்கம் அளிக்கவில்லை. நியமிக்கப்பட்ட அனைத்து நிர்வாகிகளுடன் ஒற்றுமையா செயல்பட அறிவுறுத்தியது. சென்னை தலைமை மன்றத்திற்கு இரண்டு முறை அழைத்தபோதும் அவர் வராமல் வேறு ஒருவரை அனுப்பி வைத்தார்.

தன்னலமற்ற மக்கள் சேவை என்ற புனிதமான உயர்ந்த எண்ணத்தோடும், மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக நாம் இருக்க வேண்டும் என்ற நோக்கத்துடனும் துவங்கப்பட்ட ரஜினி மக்கள் மன்றத்தில் இதுபோன்ற செயல்கள் ஒருபோதும் அனுமதிக்கப்படமாட்டாது.

பொதுநலம் விடுத்து தங்கள் சுயநலத்திற்காக சிலர் செயல்பட முயற்சி செய்வதும், அத்தகைய முயற்சி நிறைவேறாத பட்சத்தில் மன்றத்தில் நற்பெருக்கு களங்கம் கற்பிக்க முயல்வதும் மக்கள் விரோத செயல் என்பதால் அவை ஒருபோதும் அனுமதிக்கப்படமாட்டாது. அத்தகைய செயல்களில் ஈடுபட நினைப்பவர்களுக்கு மன்றத்தில் இடமில்லை.

மன்றத்தின் உள் விவகாரங்களை நமக்குள் விவாதிப்பதை விடுத்து, அதை பிரச்சாரம் செய்து அதில் ஆதாயம் தேட முயற்சிப்பது ஆரோக்கியமான செயல் அல்ல. தலைமை எடுத்த முடிவுக்கு அனைவரும் கட்டுப்பட்டு நடக்க வேண்டும். ஒழுக்கத்திற்கும், கட்டுப்பாட்டிற்கும் பெயர்போன ரசிகர்கள் இத்தகைய செயல்களில் ஈடுபடுவது இதுவே கடைசி முறையாக இருக்க வேண்டும்.

ஒற்றுமையாக செயல்பட்டு கொடுக்கப்பட்ட பணியை செய்வதே நமக்கும், மன்றத்திற்கும் நல்லது. என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

நம் நாட்டின் ஆக்ரா நகரில் யமுனை ஆற்றின் கரையில் அமைந்திருக்கும் தாஜ் மஹாலுக்கு இணையான அழகுடைய கட்டிடம் இந்த உலகத்திலேயே வேறு இருக்க முடிய...



நம் நாட்டின் ஆக்ரா நகரில் யமுனை ஆற்றின் கரையில் அமைந்திருக்கும் தாஜ் மஹாலுக்கு இணையான அழகுடைய கட்டிடம் இந்த உலகத்திலேயே வேறு இருக்க முடியாது. கட்டிடக்கலையின் உச்சமென திகழும் இந்த தாஜ் மஹால் போன்றொரு கட்டிடத்தை காண்பது கூட அரிதே. சில இடங்களை பகலில் சென்று பார்ப்பதை விடவும் இரவு நேரத்தில், மின் விளக்குகளின் ஒளியில் பார்க்கையில் அவை அதி அற்புதமாக காட்சியளிக்கும். அதிலும் குறிப்பாக சில இடங்களை பவுர்ணமி நாளில் நிலவொளியில் பார்ப்பதற்கு இணையான விஷயம் வேறெதுவுமே இருக்க முடியாது என்பதால் இந்த அதிசயத்தைக் கண ஆண்டுக்கு 50 லட்சத்துக்கும் அதிகமானோர் வந்து கண்டு கழிப்பார்கள். இதனிடையே இந்த தாஜ்மகாலை தனியார் நிறுவனங்கள் தத்து எடுத்துக்கொள்ள வேண்டும் என்று உத்தர பிரதேச அரசு கோரிக்கை வைத்து இருக்கிறது.

முன்னதாக உத்தர பிரதேசத்தில் உள்ள சுற்றுலாதலங்களின் பட்டியலில் இருந்து தாஜ்மஹாலை நீக்க சொல்லி அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் சில மாதங்களுக்கு முன் உத்தரவிட்டார். இந்த உத்தரவு உலகம் முழுக்க பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த தாஜ்மஹால் முகாலய அரசால் கட்டப்பட்டது அது இந்தியக் கட்டிடக் கலை இல்லை என்பதால், பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதாக கூறப்பட்டது. அரசு வெளியிட்ட அதிகாரப்பூர்வ பட்டியலில் இருந்தும் தாஜ்மஹால் நீக்கப்பட்டது. அதே சமயத்தில் சில பா.ஜ.க தலைவர்கள் அது ஒரு இந்து கோவில் என்றும் குறிப்பிட்டு வந்தனர். தற்போது இதன் பராமரிப்பை அம்மாநில அரசு கைவிட்டு விட்டது.

இனி தாஜ்மஹாலில் அரசு நியமித்து இருக்கும் துப்புரவு பணியாளர்களும் வெளியேற்றப்பட இருக்கிறார்கள். காரணம் தற்போது பா.ஜ.க அரசு கொண்டு வந்துள்ள சட்டத்தின் படி முக்கியமான சுற்றுலாதலங்களை தனியாருக்கு கொடுக்க முடிவு செய்யப் பட்டுள்ளது. அந்த வகையில் தற்போது தாஜ்மகாலை தனியாருக்கு கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஐ.டி.சி மற்றும் ஜி.எம்.ஆர் என்ற இரண்டு நிறுவனங்கள் தங்கள் ஆண்டு வருமானத்தில் 2 சதவிகிதத்தை தாஜ்மகால் பராமரிப்பிற்கு கொடுக்க வேண்டும். இதற்கான ஏலம் இன்னும் சில தினங்களில் நடைபெறவுள்ளது என்பதுதான் லேட்டஸ்ட் ரிப்போர்ட்.

தமிழகத்தில் வெற்றிடம் உள்ளது என்று தமிழக அரசியலில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் களமிறங்கவுள்ளார். ரஜினியின் அரசியல் வருகையை பலரும் விமர்சித்து...

தமிழகத்தில் வெற்றிடம் உள்ளது என்று தமிழக அரசியலில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் களமிறங்கவுள்ளார். ரஜினியின் அரசியல் வருகையை பலரும் விமர்சித்து வரும் வேளையில் முன்னாள் பா.ஜ.க மகளிர் அணி தலைவி ஜமீலாவும் விமர்சித்துள்ளார்.

அவர் பேசுகையில், ரஜினி முதலில் தனித்துவமான அரசியல்வாதியாக வரவேண்டும், இத்தனை காலகட்டத்துக்கு பிறகு அவர் அரசியலுக்கு வரும் நிலையில் டென்ஷனான உடனே இமயமலைக்கு சென்றுவிடுகிறார். பின்பு மக்கள் எப்படி ஏற்றுக்கொள்வார்கள்.

அன்றாட அரசியல் நிகழ்வுகளை பற்றி பேசமாட்டேன்னு சொல்றாரு, நான் குளத்துல குதிக்கல, நான் நீந்தும் போது தான் நீந்துவேன்னு சொல்றாரு, நாடே பற்றி எரியும் போது நான் இன்னும் அரசியலுக்கு வரலங்க, வரும்போது தான் பேசுவேன்னு சொன்னா எப்படிங்க மக்கள் ஏற்பார்கள்.

சினிமா வேறு, அரசியல் வேறு, நாட்டை ஆள வேண்டும் என்றால் நல்ல தலைவனுக்குரிய தகுதிகள் மக்கள் எதிர்பார்ப்பது மிகமிக அதிகம், வெற்றிடம் இருக்கிறது என்று சினிமா பாணியில் பேசுகிறார்.

வயசான காலத்தில் எதுக்கு இவர்களுக்கு முதல்வர் ஆசை, இங்கு நல்ல தலைவர்களே இல்லையா, 25 ஆண்டு காலமாக ஒதுக்கப்பட்ட மக்களுக்காக திருமாவளவன் போராடி வருகிறார். அவரை பார்த்தால் நல்ல தலைவராக தெரியவில்லையா. இந்த சினிமா நடிகர்களின் போக்கு மிகவும் கண்டிக்கத்தக்கது என்று கூறினார்.

நடிகர் ஆர்யா தற்போது எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற டிவி நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார். அவருக்கு பெண் தேடுவதற்காக இந்த ரியாலிட்டி ஷோ நடத்த...

நடிகர் ஆர்யா தற்போது எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற டிவி நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார். அவருக்கு பெண் தேடுவதற்காக இந்த ரியாலிட்டி ஷோ நடத்தப்பட்டு வருகிறது.

ஆர்யாவை இம்ப்ரெஸ் செய்ய பல போட்டியாளர்கள் முயன்று வருகின்றனர். அதில் முக்கியமானவராக கருதப்பட்ட தேவசூர்யாவை எலிமினேட் செய்வதாக ஆர்யா இன்று அவரிடமே நேரடியாக அழைத்து கூறினார்.

"கல்யாணம் செய்தால் அது வாழ்நாள் முழுவதும் சேர்ந்து இருக்கவேண்டும். பின்னர் பிடிக்கவில்லை என டைவர்ஸ் செய்வது எனக்கு வேண்டாம். நாம் நட்போடு இருப்பது ஓகே ஆனால் லைப் பார்ட்னராக இருப்பது கஷ்டம் என எனக்கு தோன்றுகிறது" என கூறி தேவசூர்யாவை நிகழ்ச்சியில் இருந்து அனுப்பிவைத்தார்.

சசிகலா புஷ்பா எம்.பி. மறுமணம் செய்யப்போவதாக கூறப்படும் வழக்கறிஞர் ராமசாமியின் முதல் மனைவி சத்யபிரியா கைக்குழந்தையுடன் கண்ணீர் மல்க ஆட்சியர்...

சசிகலா புஷ்பா எம்.பி. மறுமணம் செய்யப்போவதாக கூறப்படும் வழக்கறிஞர் ராமசாமியின் முதல் மனைவி சத்யபிரியா கைக்குழந்தையுடன் கண்ணீர் மல்க ஆட்சியர் அலுவலகத்தில் புகார் தெரிவித்துள்ளார்.

அதிமுக ராஜ்யசபா எம்.பி. சசிகலா புஷ்பா டெல்லியில் வழக்கறிஞர் ராமசாமியை திருமணம் செய்யப் போவதாக தகவல்கள் வெளியாகின. இது தொடர்பான அழைப்பிதழ்கள், புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வெளியாகின.

ஆனால் சசிகலா புஷ்பா தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வமான தகவல் எதுவும் வரவில்லை. இந்த நிலையில் இன்று சத்யபிரியா என்ற பெண் கைக்குழந்தையுடன் மதுரை ஆட்சியரை சந்தித்து மனு கொடுத்துள்ளார்.

அம்மனுவில், தமக்கும் சசிகலா புஷ்பா எம்.பி. திருமணம் செய்ய இருப்பதாக சொல்லப்படும் ராமசாமிக்கும் 2014ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. என்னை நீதிபதி என கூறி திருமணம் செய்தார்.

நாங்கள் இருவரும் ஓராண்டுதான் வாழ்ந்தோம். இருவருக்கும் மன வருத்தம் ஏற்பட்ட நிலையில் தந்தை வீட்டுக்குச் சென்றுவிட்டேன். இருந்தபோதும் என்னிடம் செல்போனில் ராமசாமி பேசி வந்தார்.

இந்நிலையில்தான் தற்போது சசிகலா புஷ்பா எம்.பி.யை ராமசாமி திருமணம் செய்யப் போவதாக பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன. இது குறித்து விசாரிக்க வேண்டுகிறேன். என் கணவர் ராமசாமியுடன் வாழ விரும்புவதாக சத்யபிரியா கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆர்யா தற்போது தனியார் தொலைக்காட்சியில் எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சி நடத்தி வருகிறார். இதில் இறுதியில் வெற்றி பெறும் பெண்ணை ஆர்யா த...

ஆர்யா தற்போது தனியார் தொலைக்காட்சியில் எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சி நடத்தி வருகிறார். இதில் இறுதியில் வெற்றி பெறும் பெண்ணை ஆர்யா திருமணம் செய்வார் என சொல்லப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இந்த நிகழ்ச்சியை சுற்றி சில சர்ச்சைகள் இருந்து வருகிறது. பெண்களின் மாண்பை சிதைப்பதாகவும், கலாச்சாரத்தை கெடுப்பதாகவும் இருப்பதாக கூறி மதுரையை சேர்ந்த ஜானகியம்மாள் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு தடை விதிக்க கோரி அவர் மனு தாக்கல் செய்துள்ளார்.

மதுரை உயர்நீதிமன்றத்தில் இது விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அதை விசாரித்த நீதிபதிகள் சினிமா தணிக்கை வாரிய தலைவர், மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகத்தின் செயலர் ஆகியோர்க்கு நோட்டிஸ் அனுப்பு உத்தரவு பிறப்பித்துள்ளார்கள்.

அதிமுகவில் இருந்து ஜெயலலிதா இருக்கும்போதே நீக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பாவுக்கு வரும் மார்ச் 26ஆம் தேதி திருமணம் நடைபெற இர...

அதிமுகவில் இருந்து ஜெயலலிதா இருக்கும்போதே நீக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பாவுக்கு வரும் மார்ச் 26ஆம் தேதி திருமணம் நடைபெற இருப்பதாக வாட்ஸ்அப்பில் பரவி வருகிறது. ஓர் அழைப்பிதழும், அடுத்து சசிகலா புஷ்பாவிற்கும் அவரது கணவருக்கும் விவாகரத்து ஆன சான்றிதழ் வெளியாகியிருக்கிறது.

அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் சசிகலா புஷ்பா. டெல்லி நார்த் அவென்யூ பகுதியில் வசிக்கிறார். ஜெயலலிதாவின் மறைவுக்கு முன் அதிமுக கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டவர். தற்போது நாடாளுமன்றத்தில் அதிமுகவுக்கு ஆதரவாகவும் இல்லாமல், ஆதரித்து பேசாமலும் தன்னிச்சையாக செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில் அவருடைய சொந்த வாழ்க்கை பற்றி ஒரு தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சசிகலா புஷ்பாவுக்கும், அவரது கணவருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்னை காரணமாக அவர் தனிமையில் டெல்லியில் வசித்து வந்தார்.

இந்நிலையில், இந்த நிலையில், சசிகலா புஷ்பாவுக்கும் ஓரியண்டல் அறிவியல் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் இணை துணைவேந்தர் ராமசாமி என்பவருக்கும் திருமணம் வரும் மார்ச் 26ஆம் தேதி டெல்லியில் நடைபெறுவதாகத் திருமண அழைப்பிதழ் பரவி வருகிறது. இது அரசியல் வட்டாரங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. சசிகலா புஷ்பாவின் நெருக்கமான அரசியல் வட்டாரங்களில் இதுபற்றி விசாரித்தபோது, ‘ஆமாம் உண்மைதான்’ என சொல்லுகிறார்கள். இந்த திருமண அழைப்பிதழ் தற்போது சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது.

இதுகுறித்து உண்மை நிலவரத்தை அறிய சசிகலா புஷ்பாவிடம் கேட்டபோது, அவர் சரியான பதில் ஏதும் தெரிவிக்கவில்லை. அதே நேரத்தில் இதை மறுக்கவும் இல்லை.

இதுகுறித்து அவரது உதவியாளர் கூறுகையில், சசிகலா புஷ்பாவுக்கும், அவரது கணவருக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளாக கருத்து வேறுபாடு இருந்து வந்தது. இதையடுத்து இருவரும் விவாகரத்து செய்து கொள்வதற்காக நீதிமன்றத்தை நாடினர். கடந்த 7 மாதங்களுக்கும் மேலாக நடந்து வந்த நீதிமன்ற விசாரணையில், நேற்று முன்தினம் துவாரகா மாவட்ட நீதிமன்றம் அவர்களுக்கு விவாகரத்து வழங்கி உத்தரவிட்டுள்ளது.

ஆனால், சமூக வலைதளங்களில் வந்து கொண்டிருக்கும் சசிகலா புஷ்பாவின் திருமண அழைப்பிதழ் பற்றி இன்னும் யாரும் உறுதியாக சொல்லவில்லை, அந்த அழைப்பிதழில் இருக்கும் அலைபேசி என்னை தொடர்புகொள்ள முயன்றோம் ஆனால் தொடர்புகொள்ள முடியவில்லை இன்னும் அடங்காத இந்த செய்தி சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.