பொதுவாக கருணாநிதி தான் இருக்கும் இடத்தை கலகலப்பாக வைத்துக் கொள்வார். நகைச்சுவை மற்றும் சிலேடையாக பேசுவது போன்ற அவரது பேச்சின் வெளிப்பாடு ...
பொதுவாக கருணாநிதி தான் இருக்கும் இடத்தை கலகலப்பாக வைத்துக் கொள்வார்.
நகைச்சுவை மற்றும் சிலேடையாக பேசுவது போன்ற அவரது பேச்சின் வெளிப்பாடு அவரது அருகில் இருப்பவர்களை சிரிக்கச் செய்துவிடும்.
இந்நிலையில் தான் 2016 ஆம் ஆண்டு காவேரி மருத்துவமனையில் அனுமதித்திருந்தபோது அங்கிருந்த செவிலியர்களிடம் நகைச்சுவையாக பேசியுள்ளார்.
தீவிர சிகிச்சை பெற்று வந்த கருணாநிதியின் உடல் நிலையைக் கருத்தில் கொண்டு அவருக்கு தண்ணீர் அதிகம் கொடுக்கக் கூடாது என்று அவரை கவனித்துக் கொண்டிருந்த நர்சுகளுக்கு டாக்டர்கள் உத்தரவிட்டிருந்தனர்.
அதனால் தொடர்ந்து கருணாநிதி குடிப்பதற்கு தண்ணீர் கேட்டும் பணியில் இருந்த செவிலியர் தண்ணீர் கொடுக்கவில்லை.
ஒரு கட்டத்தில் அந்தசெவிலியரை அழைத்த கருணநிதி , இத்தனை தடவை தண்ணீர் கேட்டும் நீ கொடுக்கவில்லையே ! உன் பேரென்ன காவேரியா ? என கேட்டு தனது நகைச்சுவை உணர்வை வெளிப்படுத்தியுள்ளார்.
பிக்பாஸ் வீட்டில் கமல்ஹாசன் நேற்று நடிகர் பொன்னம்பலத்துடன் நீண்ட நேரம் உரையாடினார். பல குறும்படங்களை போட்டு அது பற்றி விளக்கம் கேட்டார். ...
பிக்பாஸ் வீட்டில் கமல்ஹாசன் நேற்று நடிகர் பொன்னம்பலத்துடன் நீண்ட நேரம் உரையாடினார். பல குறும்படங்களை போட்டு அது பற்றி விளக்கம் கேட்டார்.
ஐஸ்வர்யா சர்வாதிகாரியாக இருந்தபோது அவரை கழுத்தை பிடித்து தண்ணீரில் தள்ளியது பற்றி பேசிய பொன்னம்பலம், "அவர் அவராகவே இல்லை, வேறு வழி இல்லை என தெரியும்.. அதனால் தான் அப்படி செய்தேன். அது தவறாக இருந்தால் மன்னிப்பு கேட்கிறேன்" என கூறினார்.
மேலும் தான் ஸ்டண்ட்மேன் என்றும், அடிபடாமல் எப்படி சண்டை போடவேண்டும் என்பது தெரியும் என கூறி ஒரு பெண்ணை அழைத்து ஐஸ்வர்யாவுக்கு செய்தது போலவே மேடையில் செய்துகாட்டினார்.
அதன்பின் கமல் பொன்னம்பலத்தின் கழுத்தை பிடித்து அழுத்துவது போல செய்தார், ஆனால் வலிக்கவே இல்லை என பொன்னம்பலம் கூறிய பிறகு தான் புரிந்தது இருவரும் நடித்தார்கள் என்று.
இயக்கம், நடிப்பு, தயாரிப்பு என பல வேலைகளை செய்து கமல்ஹாசன் வெளியிட்டிருக்கும் படம் விஸ்வரூபம் 2. இப்படத்தின் முதல் பாகத்திற்கு மக்களிடம் ...
இயக்கம், நடிப்பு, தயாரிப்பு என பல வேலைகளை செய்து கமல்ஹாசன் வெளியிட்டிருக்கும் படம் விஸ்வரூபம் 2.
இப்படத்தின் முதல் பாகத்திற்கு மக்களிடம் எப்படிபட்ட வரவேற்பு கிடைத்தது என்பது நமக்கே தெரியும். இரண்டாம் பாகத்திற்காக ஆவலாக காத்துக் கொண்டிருந்த மக்கள் இப்போது நல்ல வரவேற்பு கொடுத்து வருகின்றனர்.
விஸ்வரூபம் 2 படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்தாலும் பாக்ஸ் ஆபிஸில் கலக்கிதான் வருகிறது. இப்போது படம் மூன்று நாள் முடிவில் சென்னையில் மட்டும் ரூ. 3.02 கோடி வரை வசூலித்துள்ளதாம்.
முதல் நாள்- ரூ. 0.92
இரண்டாம் நாள்- ரூ. 1.03
மூன்றாம் நாள்- ரூ. 1.07
தன் மகளை சில விசயங்களுக்காக அடிக்கடி கடிந்து கொள்வதால் அவள் அப்பாவிடம் கேட்டாள்… ஏம்பா என்னை இப்படி கண்டிப்புடன் நடத்துகிறீர்கள்…??? என்னை ...
தன் மகளை சில விசயங்களுக்காக அடிக்கடி கடிந்து கொள்வதால் அவள் அப்பாவிடம் கேட்டாள்… ஏம்பா என்னை இப்படி கண்டிப்புடன் நடத்துகிறீர்கள்…??? என்னை கொஞ்சம் சுதந்திரமாக விடலாமே என்று..
ஆனால் அதை அப்பா சற்று கஷ்டமாகவே உணர்ந்தார்… இதை எப்படி இவளுக்கு சொல்லிக்கொடுப்பது என யோசித்தார்..
ஒரு நாள் மகள் தன் தகப்பனிடம் வந்து கேட்டாள்.. அப்பா நான் பட்டம் விட்டு விளையாடபோகிறேன், நீங்களும் வாங்க.., என அழைத்துக்கொண்டு வீட்டின் மொட்டை மாடிக்கு சென்றாள்..
பட்டத்தை நூலில் கட்டி பறக்கவிட்டு மகிழ்ந்தாள்… அப்படி மகிழ்திருக்கும் வேளையில் அப்பா கேட்டார்… பட்டம் மேலே பறக்க, பறக்க அழகாய் இருக்கிறது…. ஆனால் அதன் விருப்பம்போல பறக்க முடியவில்லை.. அதற்கு தடையாய் இருப்பது என்னம்மா?? என கேட்டார்..
மகள் பட்டென பதில் சொன்னாள் இந்த நூல் தான் அப்பா அதை தன் இஷ்டத்திற்கு விடாமல் கட்டி வைத்திருக்கிறது என்று சொன்னாள்..
அப்படியா என கேட்டுவிட்டு அந்த நூலை அப்படியே அறுத்து விட்டார்… பட்டமும் தன் இஷ்டபடி பறந்தது. ஆனால் சற்று நேரத்திலேயே கிழிந்த காகிதமாய் கீழே விழுந்தது…
அப்பா சொன்னார்.. மகளே.. இந்த பட்டத்தை தன் இஷ்டபடி பறக்கவிடாமல் தடுக்கவில்லை… நேரான வழியில் இந்த பட்டம் பறந்து உயரங்களை கீழடக்க இந்த நூல் உதவியாய் இருக்கிறது…
இதேபோலத்தான் மகளே உன் அப்பாவாகிய நானும் ஒரு நூல்தான்… நீதான் அந்த பட்டம்… நீ என்னுடைய பேச்சை கேட்டு அதன்படி நடப்பாயெனில் என் பாதுகாவலுடன் உயர பறக்கலாம்… உன் இஷ்டப்படி வாழ நினைத்தால் அந்த பட்டம் கிழிந்து காகிதம் ஆனதுபோல உன் வாழ்க்கையும் சீரழிந்துவிடும்…
இப்போது புரிந்திருப்பாய் ஏன் உன்னை கண்டித்தேன் என்பதனை… நூலாகிய என்னை அறுத்துவிடாதே என்று சொல்லும்போதே மகள் தன் அப்பாவை கட்டி அணைத்துக் கொண்டாள்…!!!
ஆம் அன்பான பிள்ளைகளே… உங்களுக்கு இனிமையாய் தோன்றுகின்ற வழிகள் ஏராளம் இருக்கலாம்.. ஆனால் அவற்றின் முடிவு பயங்கரமானது…
எனவே பெற்றோருக்கு கீழ் படிந்து வாழ கற்றுக் கொள்ளுங்கள் உங்கள் இனிய வாழ்வு உங்களை வரவேற்கும்…!!!
அப்பா அம்மாவின் அன்பும், கண்டிப்பும் இருந்தால் மகள், மகனின் வாழ்வு இனிமையாக அமையும்.
அனைவருக்கும் பகிருங்கள்!
பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக தான் பங்கேற்பது குறித்து நடிகை கஸ்தூரி விளக்கமளித்துள்ளார். கடந்த ஜூன் மாதம் 17-ஆம் தேதி முதல் பிக்பா...
பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக தான் பங்கேற்பது குறித்து நடிகை கஸ்தூரி விளக்கமளித்துள்ளார்.
கடந்த ஜூன் மாதம் 17-ஆம் தேதி முதல் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் பொன்னம்பலம், யாஷிகா, மஹத் உள்ளிட்ட 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். கடந்த முறை போன்றே இம்முறையும் கமல்ஹாசன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். 50 நாட்களை கடந்து ஒளிபரப்பாகி வரும் இந்நிகழ்ச்சியில் இதுவரை நித்யா, ரம்யா, ஷாரிக், மமதி, அனந்த் வைத்தியநாதன் ஆகிய 5 பேர் வெளியேறியுள்ளனர்.
இந்நிலையில் நடிகை கஸ்தூரி பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க இருப்பதாக தகவல் வெளியானது . இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ வெளியிட்டிருக்கும் நடிகை கஸ்தூரி, தான் அமெரிக்காவில் இருப்பதாகவும் , புற்றுநோய் குறித்த ஆய்வில் ஈடுபட்டு இருப்பதாகவும், சுவாரஸ்யத்திற்காக இதுபோன்ற வதந்திகளை பரப்ப வேண்டாம் என்றும் கூறியுள்ளார்.
பிரபல சின்னத்திரை நட்சத்திர தொகுப்பாளினி டிடி என்று செல்லமாக அழைக்கப்படும் திவ்யதர்ஷினி. காபி வித் டிடி மூலம் புகழ்பெற்றவர். பிரமாண்ட நட்...
பிரபல சின்னத்திரை நட்சத்திர தொகுப்பாளினி டிடி என்று செல்லமாக அழைக்கப்படும் திவ்யதர்ஷினி. காபி வித் டிடி மூலம் புகழ்பெற்றவர்.
பிரமாண்ட நட்சத்திர கலை விழாக்கள், விருது வழங்கும் விழாக்களை தொகுத்து வழங்கியவர். முன்னணி திரை நட்சத்திரங்களுக்கு தோழியாக இருப்பவர்.
சமீபகாலமாக திரைப்படங்களிலும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். இந்நிலையில் இவரது ரகசிய காதலன் என்று ஒரு தகவல் இணையத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
அந்த ரகசிய காதலன் யார் என்றால் பகல்நிலவு தொடரில் நடித்து வருகிற மிதுன்ராஜ் தானாம்.
ஆனால் அதை மறுத்துள்ள மிதுன், ‘நான் அவரை அக்கா என்று தான் கூப்பிடுவேன், அவருடன் நான் எடுத்து கொண்ட ஒரு செல்ஃபியை ஃபேஸ்புக்கில் போட்டேன். அதை எடுத்து ஒரு யூடியுப் சேனல் இவ்வாறு பரவ விட்டுள்ளது’ என தனது பேட்டியில் விளக்கியுள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 7 ஆம் தேதி மரணம் அடைந்தார். அவர் ஏற்கனவே, வயது காரணமாகவும், உடல்நலக் குறைவு காரணமாக கடந...
திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 7 ஆம் தேதி மரணம் அடைந்தார். அவர் ஏற்கனவே, வயது காரணமாகவும், உடல்நலக் குறைவு காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தீவிர அரசியலில் ஈடுபடாமல் வீடிலேயே இருந்தார்.
அவ்வப்போது வீட்டிற்கு வெளியே வந்து தனது தொண்டர்களை பார்த்து கையசைப்பார். அவரது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களும் சில நேரங்களில் வெளியாகும். ஓய்வில்லாமல் உழைத்த ஒருவர் ஒன்றரை ஆண்டுகள் வீட்டில் இருந்தபோது அவருக்கு பொழுதுபோக்காக இருந்த ஒருவன் இந்த மகிழன்.
மகிழன் கருணாநிதியின் கொள்ளுப்பேரன். அதாவது நடிகர் அருள்நிதியின் மகன். உடல் நலக்குறைவுக்கு சிகிச்சை எடுத்து வந்தபோதும் மகிழனுடன் எப்படியும் ஒரு மணி நேரமாவது செலவிடுவாராம் கருணாநிதி.
சமீபத்தில், கருணாநிதியின் சமாதிக்கு அவரது குடும்பத்தார் சென்று அஞ்சலி செலுத்தினர். அப்பொழுது மகிழனை கூட்டி வந்தார். அவனை கீழே இறக்கிவிட்டதும் மகிழன் கருணாநிதியின் புகைப்படத்தை பார்த்து சிரித்தபடி அவரை அழைத்துள்ளான்.
கருணாநிதி இறந்தது தெரியாமல் எப்போதும் போல அவரை பார்த்ததும் அவன் மகிழ்ச்சிகொண்டு, அவரை அழைத்தது அங்கிருந்தவர்களை கண் கலங்க வைத்துவிட்டதாம். வீட்டில் இருக்கும் போது கருணாநிதி நிறைய சிரித்ததர்கு மகிழந்தான் காரணம் என கோபாலபுர வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Follow Us