Home Top Ad

இந்தியா முழுவதும் பிரபலமாக பயன்படுத்தப்பட்டு வரும் ‘வாட்ஸ் அப்’பிற்கு போட்டியாக பாபா ராம் தேவ் கடந்த மே மாதம் ‘கிம்போ ஆப்’பை அறிமுகப்படுத்த...

இந்தியா முழுவதும் பிரபலமாக பயன்படுத்தப்பட்டு வரும் ‘வாட்ஸ் அப்’பிற்கு போட்டியாக பாபா ராம் தேவ் கடந்த மே மாதம் ‘கிம்போ ஆப்’பை அறிமுகப்படுத்தினார். ஆனால் சில கோளாறுகள் காரணமாக அந்த அப் மறு நாளே திரும்ப பெற்றுக்கொள்ளப்பட்டது. இந்நிலையில் கிம்போ ஆப் வருகிற 27ம் தேதி மீண்டும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

பதஞ்சலி நிறுவனத்தின் செய்தி தொடா்பாளா் திஜாரவாலா கிம்போ ஆப்பை யோகா குரு ராம்தேவ் வருகிற 27ம் தேதி மீண்டும் அறிமுகப்படுத்துவார் என்று தெரிவித்துள்ளார்.

கிம்போ என்ற சமஸ்கிருத வார்த்தைக்கு “என்ன நடக்கிறது, என்ன செய்தி” என்று பொருளாம்.

இந்த ஆப்பில் வீடியோ, ஆடியோ, ஸ்டிக்கா், டூடுள், ஜிஃப் பைல் என அனைத்து வகையான தொழில்நுட்பங்களையும் பிறருக்கு அனுப்ப முடியும்.

இதில் வீடியோ கால், குரூப் கால், வீடியோ குரூப் கால் போன்ற வசதிகள் இடம் பெற்றுள்ளன.

நாம் இருக்கும் இடத்தின் முகவரியை இந்த ஆப் மூலம் நமது நண்பா்களுக்கு எளிதில் பகிர்ந்து கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆப் மூலம் ஒரு தகவலை அனுப்புபவரும், பெறுபவரும் மட்டுமே அந்த தகவலை பார்க்க முடியும். மூன்றாவது நபரால் அந்த தகவலை பார்க்க முடியாது என்று தெரிவித்துள்ளனா்.

கிம்போ ஆப்பில் ஒரு தகவல் பறிமாறப்பட்ட பின்னா் அந்த தகவல் குறிப்பிட்ட காலத்திற்கு பின்னா் தானாகவே அழிந்து விடும் தன்மை கொண்டது.

கிம்போ ஆப்பில் வாட்ஸ் அப்பில் இருப்பது போன்று போட்டோ அனுப்புதல், தொலைபேசி எண், வீடியோ உள்ளிட்ட பதிவுகளை எளிதில் பரிமாறிக்கொள்ள முடியும்.

கடந்த மே மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த ஆப் தொழில்நுட்ப கோளாறு காரணமாக 24 மணி நேரத்திற்குள் திரும்ப பெற்றுக் கொள்ளப்பட்டது. இந்நிலையில் மீண்டும் வருகிற 27ம் தேதி கிம்போ ஆப் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

கரு: பழைய பெருமையில் வாழும் இறந்த கால தாதாவுக்கும், கஞ்சா கடத்தல்… என சிட்டியை கைக்குள் வைத்திருக்கும் நிகழ்கால தாதாவுக்கும், அண்ணன் விட்டத...

கரு: பழைய பெருமையில் வாழும் இறந்த கால தாதாவுக்கும், கஞ்சா கடத்தல்… என சிட்டியை கைக்குள் வைத்திருக்கும் நிகழ்கால தாதாவுக்கும், அண்ணன் விட்டதை பிடிக்க நினைக்கும் வருங்கால தாதாவான தம்பி, இவர்கள் மூவருக்கும் இடையிலான ஈகோ மோதலில் சிக்கித் தவிக்கும் நாயகர் மற்றும் நண்பர்களே ஓடு ராஜா ஓடு படக்கரு.

கதை: சென்னையில் சினிமா கதாசிரியராக வேண்டும் என்ற லட்சியத்தோடு இருக்கிறார் நாயகன் குருசோமசுந்தரம். இவரது மனைவி லட்சுமி பிரியா மருத்துவமனையில் வேலை பார்த்து வருகிறார். தங்கள் திருமண நாளில் வீட்டில் செட்-அப் பாக்ஸ் வாங்கி வைத்து புருஷனுடன் படம் பார்க்க ஆசைப்படுகிறார் லட்சுமிபிரியா. இதற்காக குருசோம சுந்தரத்திடம் பணம் கொடுத்து செட்-அப் பாக்ஸ் வாங்கி வரச் சொல்லுகிறார்.

அந்த பகுதியில் கஞ்சா விற்று வரும் தனது நண்பருடன் சேர்ந்து செட்-அப் பாக்ஸ் வாங்க செல்லுகிறார் குரு சோமசுந்தரம். அங்கு எதிர்பாராத விதமாக மனைவி கொடுத்த பணத்தை இழக்கிறார். மேலும் சிக்கலில் மாட்டிக் கொள்கிறார். இது ஒரு பக்கம் நடக்க, மற்றொரு பக்கம் அந்தப் பகுதியில் பெரிய தாதாவாக இருக்கும் சாருஹாசன், கவலைக்கிடமான நிலையில், இனிமேல் ரவுடி தொழில் செய்யக் கூடாது என்று அவரது மகன் நாசரிடம் சத்தியம் வாங்கி விட்டு இறந்து போகிறார். ஆனால், நாசரின் தம்பி ரவீந்திர விஜய்யோ நாசரை கொன்று விட்டு, தாதாவாக முயற்சி செய்கிறார். இச்சூழலில் நாசரால் ஏமாற்றப்பட்ட மற்றொரு நாயகர் ஆனந்தசாமி 5 வருடம் சிறை தண்டனை பெற்று வெளியில் வருகிறார். நாசரை கடத்தி அவரிடம் பணம் பறிக்க முயற்சி செய்கிறார்.

அதே பகுதியில் ஆதரவற்ற சிறுவர்கள், சிறு சிறு திருட்டு தொழில்கள் செய்து வருகிறார்கள். இவர்கள் எல்லோரும் ஒரு அசாதாரண சூழலில் சந்திக்கிறார்கள். இறுதியில் என்ன ஆனது? குருசோம சுந்தரம் செட்-அப் பாக்ஸ் வாங்கினாரா? நாசர் ஆனந்தசாமி, ரவீந்திர விஜயால் கொல்லப்பட்டாரா? இல்லையா...? இப்படத்தில், சிம்ரன் அவரது கணவர் திபக்பாஹா ஆகியோரின் ரோல் என்ன...? என்பது உள்ளிட்ட இன்னும் பல வினாக்களுக்கு வித்தியாசமாகவும், விறுவிறுப்பாகவும் விடை சொல்கிறது... "ஓடு ராஜா ஓடு" படத்தின் மீதிக்கதையும், களமும்!

காட்சிப்படுத்தல்: விஜய் மூலன் டாக்கிஸ் வழங்கும் கேன்டல் லைட் புரொடக்சன்ஸின் தயாரிப்பில் "ஜோக்கர்" குருசோமசுந்தரம், ஆனந்தசாமி, ப்ரியா சந்திரமெளலி, ஆஷிகா செல்வம், நாசர், சிம்ரன்,தீபக் பாஹா, சோனா ஹைடன், ரவீந்திர விஜய், மெல்வின் எம்.ரஞ்சன், அபிஷேக் கே.எஸ் வெங்கடேஷ், ஹரிநாத், வினுஜான், அருண்மொழி சிவப்பிரகாசம், அமுதன், பேபி ஆர். ஹரணி, மாஸ்டர் ஏ.ராகுல் உள்ளிட்ட ரசிகர்களுக்கு நன்கு தெரிந்த தெரியாத, ரசிகர்கள் அறிந்த அறியாத ஒரு பெரும் நட்சத்திர பட்டாளம் நடிக்க டோஷ் நந்தாவின் இசையில், நிஷாந்த் ரவீந்திரன் மற்றும் ஜத்தின் ஷங்கர் ராஜ் இருவரது இயக்கத்தில் வெளிவந்திருக்கும் படம் "ஒடு ராஜா ஓடு." படத்தில், "எவ்ளோ பெரிய வாயி...", " 500 ரூபாக்கு உன் வாயில தான் வைப்பேன்... துப்பாக்கிய...", "காலையில நான் டெய்லி எழுந்ததும் பயப்படுற விஷயம் ஒண்ணே ஒன்னு தான் வேற யார் கூடயும் என் பொண்டாட்டி ஒடிப்போயிடுவாளோங்கற பயம் தான், அது..." , "இம்ரான் நீ எங்க வந்த? இதுல ப்ரண்ட்லியா பண்ண என்ன இருக்கு?"ரொம்ப நாள் ஆச்சு இப்படி நடந்து இன்னொரு ரவுண்ட் போலாமா? "என் ஜாவ உடைச்சுட்டான்...." "ஹெல்ப் தானடா பண்ண சொன்னேன்... " , "நீங்க 2 பேரும் எனக்கு ஒண்னு தான் ... " என்பது உள்ளிட்ட டபுள், ட்ரிபிள் மீனிங் வசனங்களை நடிகைசோனா உள்ளிட்ட இப்படப் பாத்திரங்கள் ஆங்காங்கே பேசியிருக்கும் காட்சிகளை விரசமில்லாமல் காட்சிப்படுத்தியிருக்கும் விதம் இப்படத்திற்கு கூடுதல் பலம்.

கதாநாயகர்: படத்தின் முதல் நாயகனாக நடித்திருக்கும் குருசோம சுந்தரம் யதார்த்தமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். கதாசிரியராக கிளைமாக்ஸ் கிடைக்காமல் தவிப்பது, நண்பருடன் சேர்ந்து செட்-அப் பாக்ஸ் பணத்தை இழந்து தவிப்பது. அதை மீட்க போராடுவது, மனைவிக்கு பயப்படுவது என சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

மொத்தத்தில், சினிமா டைரக்ஷன் லட்சியத்தில், மனைவி சம்பாத்யத்தில்வீட்டோட புருஷனாக இருக்கும் மனோகராக "ஜோக்கர்" குருசோமசுந்தரம், அந்த பாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார்.

அவரை மாதிரியே அண்ணன் நாசர் கைவிட்ட, தாதாயிஸத்தை கையிலெடுக்கத் துடிக்கும் நாசரின் தம்பி செல்லமுத்து - ரவீந்திர விஜய்யும். ரவீந்திர விஜய் செய்த கொலைக்காக, தான் செய்யாத கொலைக்கு சிறை சென்று, காதலியை நண்பனிடம் பங்கு வைத்த ஆனந்தசாமியும்.... கூட அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கின்றனர்.

கதாநாயகியர் ப்ரியா சந்திரமெளலி, ஆஷிகா செல்வம், இருவரில் குருசோமசுந்தரத்திற்கு மனைவியாக வரும் பிரியா சந்திரமெளலி, புருஷனை அதிகம் கடிந்து கொள்ளும் பாசக்கார மனைவியாக அசத்தியிருக்கிறார் என்றால், ஆஷிகா செல்வம் காதலர் ஜெயிலுக்கு போனதால் அவரது நண்பருடன் சல்லாபிக்கும் நாயகியாக நன்றாகவே நடித்திருக்கிறார்.

பிற நட்சத்திரங்கள்: கஞ்சா கஜபதியாக வரும் மெல்வின் எம்ரஞ்சன், மெல்வினின் பாஸ் நிகழ்கால தாதா தீபக் பாஹா (நிஜத்தில் மாஜி நாயகி சிம்ரனின் வீட்டுக்காரர்...) இவர்கள் எல்லோருக்கும் முன்னாள் தாதா இறந்த கால தாதா காளிமுத்து - நாசர். குருவின் கஞ்சா பொட்டல நண்பர் பீட்டர், பீட்டருக்கு பொட்டலம் சப்ளை செய்யும் கஞ்சா ஹோல்சேல் கஜபதி - மெல்வின் எம் .ரஞ்சன் மற்றும் அபிஷேக் கே.எஸ் வெங்கடேஷ், ஹரிநாத், வினுஜான், அருண்மொழி சிவப்பிரகாசம், துப்பாக்கி சப்ளை செய்யும் மாற்றுத்திறனாளி அமுதன், குப்பத்து பிக்பாக்கெட் பொடிசுகள்...சிறுமி மலர் - பேபி ஆர். ஹரணி, சிறுவன் சத்யா - மாஸ்டர் ஏ. ராகுல்… அவர்களுக்கு உதவும் லயன் - கால பைரவியாக வரும் சிம்ரன், நாசரின் ஆசை மனைவி சோனா ஹைடன், உள்ளிட்ட ஒவ்வொருவரும் பாத்திரமறிந்து பளிச்சிட்டுள்ளனர்.

தொழில் நுட்பகலைஞர்கள்: இப்பட இரட்டை இயக்குனர்களில் ஒருவரான நிஷாந்த் ரவீந்திரனின் திரைக்கதை மற்றும் படத்தொகுப்பாகட்டும், மற்றொரு இயக்குனரான ஜித்தின் ஷங்கர் ராஜ் மற்றும், சுனில் சி.கே.வின் ஒளிப்பதிவாகட்டும் இவை மூன்றிலும் பெரிய குறையேதுமில்லை. டோஷ் நந்தாவின் இசையில், "ம்பளக்கடி ஜும்பா... ஹேப்பி லைப்பு செம ஹேப்பி....","தமாசு தமாசு வேடிக்கை நீ பாரடா. "உள்ளிட்ட பாடல்களும் பின்னணி இசையும் படத்திற்கு பெரும் பலம்.

பலம்: டார்க் காமெடி ஸ்டைலில் இப் படத்தை இயக்கி இருக்கிறார்கள் இரட்டை இயக்குனர்கள் ஜத்தின் மற்றும் நிஷாந்த். படம் ஆரம்பத்தில் வெவ்வேறு கதைகளுடன் அங்கும் இங்குமாக அலை பாயும் திரைக்கதையாகஅமைந்தாலும், பிற்பாதியில் சரியாக ஒன்று சேர்த்திருக்கிறார்கள். பல இடங்களில் டார்க் காமெடி செமயாக ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது. ஒரு செட்-அப் பாக்சில் ஆரம்பித்து அதை வாங்குவதற்கு இடையே நடக்கும் பல சிக்கல்களை ரசிக்கும்படி கொடுத்திருக்கிறார்கள்....என்பது பெரும் பலம்.

பலவீனம்: பல இடங்களில் ‘ஓடு ராஜா ஓடு படத்தில் சில இடங்களில்தேவையில்லாத ஓட்டம் சற்றே இழுவையாக ஜாஸ்தியாக தெரிவது பெரும் பலவீனம்.

இயக்கம்: நிஷாந்த் ரவீந்திரன் மற்றும் ஜித்தின் ஷங்கர் ராஜ் இருவரதுஇயக்கத்தில், ஒரு டயலாக் ஒரு இடத்தில் முடியும் சொல்லில் அடுத்த காட்சி வேறொரு இடத்தில் ஆரம்பமாகும் புதுமை மற்றும் , "அடுப்புக்கு பயந்து நெருப்பில் விழுந்த கதை... " பழமொழிகள் ,ஜப்பான் காரன் டொயாட்டோ கார் மொக்க ஜோக் கு, "எங்க கிட்டேயும் இருக்குபெருசு பெருசா .. கன்னு" , என்பது உள்ளிட்ட காம நெடி டயலாக்குகள் எல்லாவற்றிலும் இப்படம் திரும்பி பார்க்க வைக்கிறது.

இவை எல்லாவற்றுக்கும் மேல், "ஒப்புக்கு சப்பான்ஸ் கொசுறு" , "அன்புள்ள அரிப்பு" , "ஏ 2 இசட் கல பொறுக்கி" , "நகுல் - கட்டத்துல சனி" , "மேரி ஆசை நாயகி" , "இம்ரான் துணை காதலன்" , "இறந்த கால தாதா" ,"நிகழ்கால தாதா", "வருங்கால தாதா, "கீழ்பாக்கம் அங்கம்மாள் போதை மாமி மேரி" , " பேன்ட் சட்டை கேங்கு" , "மொரட்டு பீஸ் பேன்ட் சர்ட் கேங்” , "கொலைகாரன் பேட்டையின் வேறிடத்தில்...."உள்ளிட்ட ஒவ்வொரு பாத்திர அறிமுகத்திற்காக திரையில் மிளிரும் சப்-டைட்டில்கள் இந்த இரட்டையர்களின் இயக்கத்தில் செம புதுசாக இருக்கிறது. வாவ்!

பைனல் "பன்ச்": ஆக மொத்தத்தில், ஒரு சில, லாஜிக் மீறல்கள், தேவையில்லாத ஓட்டங்கள் உள்ளிட்டவற்றை இன்னும் சற்றே குறைத்திருக்கலாம்... என்றாலும், நவீன காமெடி, சஸ்பென்ஸ் மற்றும் த்ரில்லர் படமாகவந்திருக்கும் "ஒடு ராஜா ஓடு' - நிச்சயம், 'தியேட்டரில் சக்கை போடு போடுகிறதோ, இல்லையோ., ஓரளவிற்கு ஓடும்... என நம்பலாம்!"

சமீபத்தில் பெய்த கனமழை காரணமாக கிட்டத்தட்ட கேரள மாநிலமே வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. லட்சக்கணக்கானோர் அடிப்படை தேவையான உணவு, உடை கூட இல்லாமல்...

சமீபத்தில் பெய்த கனமழை காரணமாக கிட்டத்தட்ட கேரள மாநிலமே வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. லட்சக்கணக்கானோர் அடிப்படை தேவையான உணவு, உடை கூட இல்லாமல் முகாம்களில் அகதிபோல் தங்கியுள்ளனர். கேரள அரசு போர்க்கால அடிப்படையில் நிவாரண உதவிகளை செய்து வருகின்றது.

மக்கள் பலர் கேரளா மக்களுக்கு உதவ முன்வந்துள்ளனர். தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களை சேர்ந்த பொது மக்கள், வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களும் நிதியுதவி அளித்துள்ளனர்.

இந்நிலையில், துபாயில் வேலை பார்க்கும் பாகிஸ்தானியர்கள் தங்களின் ஒரு நாள் சம்பளத்தை கேரள வெள்ள நிவாரண நிதிக்கு அளித்துள்ளனர். இது குறித்த செய்தியை பார்த்த டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினியான டிடி ட்விட்டரில் வாவ் என்று கூறி அவர்களை பாராட்டியுள்ளார்.

இதனால், அவரை நெட்டிசன்கள் திட்டி வருகின்றனர். முப்படைகள் செய்யும் வேலையை பாராட்டாமல் பாகிஸ்தானியர்களை பாராட்டுவதா? கேரளாவுக்கு நீங்கள் என்ன உதவி செய்தீர்கள்? என கேட்டு டிடியை திட்டி வருகின்றனர்.

கேரள மக்கள் கடும் மழை மற்றும் வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கு நிவாரணம் அளிக்கும் விதத்தில் முதலமைச்சர் நிவாரண நி...

கேரள மக்கள் கடும் மழை மற்றும் வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கு நிவாரணம் அளிக்கும் விதத்தில் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு பல்வேறு பிரபலங்கள் நிதி அளித்து வருகின்றனர்.

தற்போது தோனி படத்தில் ஹீரோவக நடித்திருந்த சுஷாந்த் சிங் ராஜ்புட் கேரளவுக்காக 1 கோடி ரூபாய் அளித்துள்ளார்.

ரசிகர் ஒருவர் ட்விட்டரில் கேட்ட கேள்வியை பார்த்த அவர், ரசிகரின் பெயரிலேயே அந்த நிதியினை அளித்துள்ளார்.

நடிகரின் இந்த செயல் ரசிகருக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பா.ரஞ்சித் அட்டக்கத்தி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தவர். அதை தொடர்ந்து மெட்ராஸ், கபாலி, காலா என தரமான படங்களாக தந்தவர...

பா.ரஞ்சித் அட்டக்கத்தி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தவர். அதை தொடர்ந்து மெட்ராஸ், கபாலி, காலா என தரமான படங்களாக தந்தவர்.

இவர் அடுத்து ஹிந்தி படம் எடுக்கப்போவதாகவும், ரஜினியுடன் மீண்டும் இணைவதாகவும் பல செய்திகள் வந்துக்கொண்டே இருக்கின்றது.

ஆனால், நமக்கு கிடைத்த தகவலின்படி ரஞ்சித் அடுத்து வெப் சீரியஸ் ஒன்றை எடுக்கப்போகின்றாராம், அவை பிரபல நடிகையாக இருந்து தனக்கு ஏற்பட்ட சில பிரச்சனைகளால் தற்கொலை செய்துக்கொண்ட சில்க் ஸ்மிதா வாழ்க்கையை வெப் சீரியஸாக எடுக்கவுள்ளாராம்.

‘இவரு மட்டும் மாட்டேன்னு சொல்லியிருந்தா இந்தப்படத்தையே எடுத்திருக்க மாட்டேன்’ என்று ஒவ்வொரு பிரஸ்மீட்டிலும் யாராவது ஒரு நடிகரை புகழ்ந்து வை...

‘இவரு மட்டும் மாட்டேன்னு சொல்லியிருந்தா இந்தப்படத்தையே எடுத்திருக்க மாட்டேன்’ என்று ஒவ்வொரு பிரஸ்மீட்டிலும் யாராவது ஒரு நடிகரை புகழ்ந்து வைப்பார்கள் இயக்குனர்கள். கடைசியில் படத்தை பார்த்தால், அந்த நடிகர் நடிக்காமலிருந்தால் கூட இன்னும் சிறப்பாக இருந்திருக்குமே என்று தோன்றும். ‘அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா’ படத்திலும் அப்படியொரு புகழ்ச்சி.

தன்னை நோக்கிய அந்த புகழ்ச்சியை தக்க வைத்துக் கொள்வாரா பசுபதி?

‘ஒரு பேச்சுக்கெல்லாம் சொல்லல. நிஜமாகவே இந்தப்படத்தில் பசுபதியின் பர்பாமென்ஸ் பிரமாதம்’ என்று பேச ஆரம்பித்தார் அ.இ.சா படத்தின் இயக்குனர் அவினாஷ் ஹரிகரன். அதிலும் கொஞ்சம் உண்மை இருக்கதான் செய்கிறது. வதவதவென படங்களில் நடித்துத் தள்ளுபவரல்ல பசுபதி. அவர் மனசுக்கு ஒட்டாத படங்களை, இடது கையால் புறம் தள்ளிவிட்டு குப்புறடித்து தூங்கக் கூட செய்கிற ஆள்தான்.

இதுவரைக்கும் 30 படங்களுக்கு மேல் விநியோகம் செய்திருக்கும் ஆரா சினிமாஸ் நிறுவனம்தான் இந்தப்படத்தை முதன் முறையாக தயாரித்திருக்கிறது. இந்த 30 படத்திலும் ஆரா நிறுவனம் கற்றுக் கொண்டது என்ன தெரியுமா? ஆடியன்ஸ் எதை சொன்னா ரசிப்பான். எதை சொன்னா ரசிக்க மாட்டான் என்பதை. “இந்தப்படத்தை நான் தயாரிக்க காரணமே அந்த கணக்குதான்” என்றார் ஆரா சினிமாஸ் மகேஷ் கோவிந்தராஜ்.

‘சரி… இது முழு நீள அரசியல் படமா?’ என்றால், “ஐயய்யோ. அதெல்லாம் இல்ல” என்கிறார் இயக்குனர் அவினாஷ். மூன்று பேரின் வாழ்வில் ஒரு அரசியல்வாதி ஏற்படுத்துகிற திருப்பம் என்னவாக முடிகிறது என்பதுதானாம்.

படம் மட்டும் நல்லாயில்லேன்னா, வீட்டுக்கு ஆட்டோவ அனுப்பிர வேண்டியதுதான்!

சமயங்களில், பூட்டிய அறைக்குள் இருப்பது கன்னுக்குட்டி என்று நினைத்திருப்போம். கதவை திறந்தால் காட்டு யானை பிளிரும்! அப்படியொரு முரட்டுப்படம்த...

சமயங்களில், பூட்டிய அறைக்குள் இருப்பது கன்னுக்குட்டி என்று நினைத்திருப்போம். கதவை திறந்தால் காட்டு யானை பிளிரும்! அப்படியொரு முரட்டுப்படம்தான் ம.பா.ம.எ! துருவா, ஐஸ்வர்யா தத்தா, அஞ்சனா, சரண்யா பொன்வண்ணன் என்று சல்லி விலையில் கிடைக்கும் திருவிழா ரிப்பன்கள்தான் இப்படத்தின் தாம்பு கயிறுகள். பார்த்தால்… தியேட்டரை விட்டு எழுந்து ஓட விடாமல் இறுக்கிக் கட்டுகிறார்கள். ஆஹா…!

வயதான மற்றும் திருமணமான பெண்களிடம் தாலியறுக்கும் தடியன்கள் சிலர். இந்த துயரத்தில் சிக்குகிற ஹீரோ அந்த கும்பலை கண்டறிந்து எப்படி வேரறுக்கிறான் என்பதுதான் கதை. பின்புலத்தில் தங்க மாஃபியா பற்றிய ஏராளமான டீட்டெயில்கள். கடைசியில் தங்கம் யார் கைக்கு போகிறது என்பதை அறியும்போது, ‘அடப்பாவிகளா, எவனைதான் நம்ப சொல்றீங்க?’ என்று அதிர்ச்சியாகிறோம்.

சுமார் நான்கு படங்களிலாவது நடித்திருப்பார் இப்படத்தின் ஹீரோ துருவா. இன்னமும் மனசுக்குள் ஒட்டாத முகம். அழுத்தமான காட்சிகளில் நடிக்க அநியாயத்துக்கு முக்குகிறார். பேஸ்கட்டு கவுத்தாலும், ஓங்குதாங்கான அவரது உடற்கட்டு ஆக்ஷன் காட்சிகளில் துவம்சம் பண்ணுகிறது. படத்தில் இவர் குறித்த சஸ்பென்சை முன்பே யூகிக்க முடிவதும் கூட சற்றே சப்!

படத்தின் முதுகெலும்பே சரண்யா பொன்வண்ணனின் நடிப்புதான். எந்த அழகான பெண்ணை பார்த்தாலும், ‘என் புள்ளைய கட்டிக்கிறீயா?’ என்று அப்பாவியாக கேட்டு அலற விடுகிறார் அவர்களை. வெகு தூர கோவில்களை இலவச தரிசனம் செய்ய அவர் போடும் தந்திரத் திட்டங்கள், ஜாலியாக்குகிறது தியேட்டரை. அவ்வளவு சந்தோஷமும் புறாக் கூட்டுக்குள் பூகம்பம் வந்தது போல நொறுங்கும் போது, தியேட்டரும் சப்தநாடியை அடக்கிக் கொள்கிறது.

பிக்பாஸ்2 ல் கலக்கிக் கொண்டிருக்கும் ஐஸ்வர்யா தத்தா இதில் ஒரு ஹீரோயின். அழகு இருக்கிறதே ஒழிய, நடிப்பு நாலு பைசாவுக்கு கூட நம்பும்படி இல்லை. அதுவும் திடீரென இவர் போலீஸ் ஆகி, ஃபுல் சல்யூட் அடிப்பதெல்லாம் ட்ராமா!

மற்றொரு ஹீரோயின் அஞ்சனாவுக்கு சற்றே வெயிட் ரோல். நம்பியவர்களை நட்டாற்றில் விடவில்லை இவர்! அந்த வில்லன் கூட்டத்தில் அறம் படத்தில் நடித்த ராமச்சந்திரனின் நடிப்பு தனி கவனம் பெறுகிறது. ராதாரவிக்கு ஒரு நாள் கால்ஷீட்தான் போல. வந்தவரைக்கும் பெடல் மிதித்துவிட்டு போகிறார்.

பி.ஜி.முத்தையாவின் ஒளிப்பதிவு மனசை ரம்மியமாக்குகிறது. சண்டைக்காட்சிகளில் ஸ்பெஷல் மெனகெடல். பலே. இசை அச்சு. இன்னும் நாலைந்து முறை கேட்டால் பாடல்கள் மனசில் நிற்குமோ என்னவோ?

செயின் பறிப்பு திருடர்கள் பற்றிய டிக்ஷனரியாகவே ஒரு படம் வந்தது. ‘மெட்ரோ’! அப்படத்தின் ‘கவரிங்’தான் இப்படம் என்றாலும், பெண்களுக்கு விழிப்புணர்வை தந்திருக்கிறதே!

வேறு வழியேயில்லை… இயக்குனர் ராகேஷின் முயற்சியால் கிடைத்த இந்த  இமிடேஷன் பளபளப்பை பாராட்டி விடுவோம்!