Home Top Ad

உலகெங்கும் சாதனையாளர்களின் வாழ்க்கையை மையப்படுத்தி பல பயோபிக் திரைப்படங்கள் வெளிவந்திருக்கின்றன. அதில் பெண்களுக்கான பிரத்யேக பயோபிக்குகளி...

உலகெங்கும் சாதனையாளர்களின் வாழ்க்கையை மையப்படுத்தி பல பயோபிக் திரைப்படங்கள் வெளிவந்திருக்கின்றன. அதில் பெண்களுக்கான பிரத்யேக பயோபிக்குகளின் எண்ணிக்கை மிகவும் குறைவுதான். `நடிகையர் திலகம்' சாவித்திரி கணேசனின் வாழ்க்கை வரலாற்றை அசத்தலாக தெலுங்கில் மகாநடி'யாகவும், தமிழில் நடிகையர் திலகம் எனவும் பதிவு செய்திருக்கிறார்கள்.

நடிகை சாவித்திரியின் வாழ்க்கையை எழுதும் அசைன்மென்ட் மதுரவாணிக்குக் (சமந்தா) கிடைக்கிறது. சாவித்திரியின் வாழ்க்கையை எழுத விரும்பாத சமந்தாவை, கொஞ்சம் கொஞ்சமாக கன்வின்ஸ் செய்கிறார் ஆன்டனி (விஜய் தேவரகொண்டா). இருவருக்குமான காதல், சமந்தா சந்திக்கும் சூழல்கள், சாவித்திரியின் வாழ்க்கை, சாவித்திரி சந்திக்கும் சூழல் போன்றவற்றை கச்சிதமாகச் சொல்லி, கதையை நகர்த்தியிருக்கிறார்கள்.


பொதுவாக பயோபிக் என்றால், முழுக்க முழுக்க முதன்மை கதாபாத்திரத்தின் வாழ்க்கையை மட்டுமே மையப்படுத்தி திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கும். அதைக் காட்சிப்படுத்த நினைக்கும் எழுத்தாளர் அல்லது இயக்குநரின் வாழ்க்கையைச் சற்று குறைவான காட்சிகளே திரைக்கதையில் சேர்த்திருப்பார்கள். இதில் இரு கதைக்கும் தேவையான அளவு காட்சிகளை வைத்திருக்கிறார்கள். 1980 களில் சாவித்திரியின் கோமா ஸ்டேஜில் ஆரம்பிக்கும் கதை, சாவித்திரியின் அத்தை துர்காம்பா (பானுப்பிரியாவின் ) வரிகளில் விரிகிறது.


இருபதாம் நூற்றாண்டில் தென்னிந்திய சினிமாவின் ஆளுமையாகக் கருதப்படும் சாவித்திரியாக, அச்சு அசலாக நடித்திருக்கிறார் கீர்த்தி சுரேஷ்.  தோழி சுஷீலா (ஷாலினி பாண்டே ) வுடன் சுற்றித் திரிவது, வெகுளித்தனமாக விஜயவாஹிணி ஸ்டுடியோவில் உலா வருவது, இறுதி வரை உதவிக் கொண்டே இருப்பது, மருத்துவமனைக் காட்சிகள், மதுக்கோப்பைகளுடன் வாழ்வது, முதல் முறை கேமராவைப் பார்க்கும் போது வெட்கப்படுவது,  இத்தனை ஆண்டுகளாக கீர்த்தி சுரேஷ் நடித்த படங்களை எல்லாம், இந்த ஒற்றைப் படத்தின் பெர்ஃபாமன்ஸ் மூலம் ஓவர்டேக் செய்கிறார் கீர்த்தி சுரேஷ். 14 வயது முதல் 43 வயதில் மரணப் படுக்கையில் தள்ளப்படும் வரை, ஒவ்வொரு ஃபிரேமிலும் கீர்த்தி நடிப்பும், உடல்மொழியும், அபாரம். அதிலும் ஜெமினி கணேசனின் பிரிவுக்குப் பின்னான காட்சிகளில் அத்தனை தத்ரூபமான நடிப்பு. உடல் எடை அதிகமாகத் தோன்றும் காட்சிகளில், அப்படியே சாவித்திரியை பிரதிபலிக்கிறார் கீர்த்தி. ஹேட்ஸ் ஆஃப்!


ஜெமினி கணேசனின் கதாபாத்திரத்தில் ஒரு நடிகனாக ஜெமினியை விடவும் சிறப்பாகவே நடித்திருக்கிறார் துல்கர் சல்மான். ``என்னோட எல்லா கிரெடிட்டையும் நீயே எடுத்துக்கற... தோல்விக்கான கிரெடிட்டையாவது எனக்குக் கொடு " என போதையில் இயலாமையின் உச்சத்தில் உதாசீனப்படுத்தப்பட்ட ஒரு மனிதராக அசத்துகிறார் துல்கர் சல்மான். ஒவ்வொரு காட்சியிலும், தான் ஒதுக்கப்படுவதை, `மக்களுக்கு ருசிக்காத சாம்பார் கணேசனாக 'தான் இருப்பதாக மீடியாக்கள் எழுதுவதை எரிச்சலுடன் கடந்து செல்கிறார். ஆனால், அது ஜெமினியை நினைவுக்குக் கொண்டு வருகிறதா என்றால், அது சற்று சந்தேகம்தான். முழு படத்திலும் ஜெமினி பாத்திரத்தின் மேக்கப்பும் அதீத யதார்த்தமான நடிப்பும் ஏனோ உறுத்துகிறது.


சாவித்திரிக்கும் ஜெமினிக்குமான வாழ்க்கையை `உனக்கு வெட்கம் இல்ல... எனக்கு புத்தி இல்லை ' என ஒற்றை வரியில் கடத்துகிறார் வசனகர்த்தா மதன் கார்க்கி. வசன வரிகளில் ஈர்க்கும் மதன் கார்க்கி, ஏனோ பாடல் வரிகளில் பெரிதாக ஈர்க்கவில்லை.

சாவித்திரியாக கீர்த்தி வரும் காட்சிகள் ஒரு கலர்; படத்துக்குள் வரும் படமாக்கப்படும் காட்சிகள் ஒரு கலர்; சமந்தாவின் காட்சிகள் வேறொரு கலர் என மூன்று டோன்களில் பயணிக்கும் கதையில், டானி சா லோவின் ஒளிப்பதிவு கச்சிதம். அதே போல், ஜெமினி சாவித்திரி கணேசனின் காதல் காட்சிகள், படமாக்கப்பட்ட விதமும் அழகு. மெட்ராஸ் சென்ட்ரலின் முகப்பு, MCP நம்பருடன் சாலையில் நகரும் கார்கள், விஜய வாஹிணி ஸ்டுடியோஸ், சந்திரலேகா போஸ்டர், டிராம், பழைய கால கேமரா, மைக் என ஆர்ட் டிரைக்ஷனின் உழைப்பு அபாரம். அதிலும், அந்த மாயாபஜார் காட்சியின் மறுஉருவாக்கம் டாப் கிளாஸ். பின்னால் இருக்கும் நடிகைகளின் இடைவெளி வரை பார்த்துப் பார்த்து அப்படியே மறுஉருவாக்கம் செய்திருக்கிறார்கள். ஜெமினியுடனான சண்டைக்குப் பின்னர், கதவை மூடுகிறார் சாவித்திரி. அது அப்படியே நாகேஷ்வர ராவுடன் நடிக்கும் காட்சியில் தொடர்கிறது. ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட படத்தின் க்ளைமாக்ஸ் எனப் பல காட்சிகள் அதி அற்புதம்.

சாவித்திரி எப்பேர்ப்பட்ட நடிகை என்பதைக் காட்ட, ஒரு காட்சி விவரிக்கப்படுகிறது. 'செட்'டில் அசிஸ்டென்ட் டீம் சொதப்ப , அந்தக் காட்சியை சாவித்திரி ஒரே 'டேக்'கில் ஓக்கே செய்ய வேண்டும். அது தான் படத்தில், கீர்த்தி சுரேஷின் அறிமுகக் காட்சி. அவ்வளவு சிறப்புமிக்க காட்சியை , ஏனோ அசால்ட்டாக எடுத்து சொதப்பிவிட்டார் இயக்குநர் நாக் அஷ்வின் என்றே தோன்றுகிறது.

சாவித்திரியின் வெற்றிகளையும், கருணையுள்ளத்தையும் அதீதமாக காட்சிப்படுத்தியிருக்கும் அதே வேளையில், தோல்விகளுக்கும், மதுப் பழக்கத்திற்கும் முழுவதுமாக பிறரையே குற்றம் சாட்டி புனிதத் தன்மைக் கொடுத்து, இது உண்மையிலேயே பயோபிக் சினிமாவா இல்லை, ஒரு தலைபட்சமான போற்றதலுக்குரிய சினிமாவா ? என்னும் கேள்வியை எழுப்புகிறது. அதே போல், டப்பிங் என்றாலும் கூட, படத்தில் வரும் தமிழ் காட்சிகளில் கூட , லிப் சிங் இல்லாமல் இருப்பது பெரிய உறுத்தல்.

இப்படி சிற்சில குறைகள் இருந்தாலும், கீர்த்தி சுரேஷின் நடிப்புக்காகவும், பார்வையாளனை வியக்க வைக்கும் சாவித்திரி பற்றிய நெகிழ்ச்சி தொகுப்புகளுக்காகவும், இந்த ' நடிகையர் திலகத்தை ' கண்டு மகிழலாம். 

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் செம்ம ஹிட் அடித்தது, அதை தொடர்ந்து இரண்டாவது சீசனையும் அவர் தான் தொகுத்து வழங்கியுள்ளார். முதலில் கமல...

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் செம்ம ஹிட் அடித்தது, அதை தொடர்ந்து இரண்டாவது சீசனையும் அவர் தான் தொகுத்து வழங்கியுள்ளார்.

முதலில் கமல் இந்த போட்டியை தொகுத்து வழங்கவில்லை என்று கூறினார், ஆனால், தற்போது என்ன நினைத்தார் என்று தெரியவில்லை, அவரே முன்வந்துள்ளார்.

மேலும், இந்த பிக்பாஸ் களத்தை தான் கமல் முதன் முறையாக தன் அரசியல் மேடையாக மாற்றினார், சமூகத்தில் நடக்கும் பல குறைகளை பிக்பாஸ் மேடையில் பேசினார்.

தற்போது கட்சியே தொடங்கிவிட்டார், அதனால், அவர் என்ன வேண்டுமானாலும் பேசலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

இதோ எல்லோரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்த பிக்பாஸ்-2 டீசர் வெளிவந்துள்ளது, இதோ..

ஒரு நேரத்தில் வெள்ளித்திரை நடிகர்கள் சின்னத்திரை நிகழ்ச்சி என்றாலே தவிர்த்து விடுவார்கள். எதோ மார்க்கெட் சரிந்த நடிகர்கள் தான் சின்னத்திரைக...

ஒரு நேரத்தில் வெள்ளித்திரை நடிகர்கள் சின்னத்திரை நிகழ்ச்சி என்றாலே தவிர்த்து விடுவார்கள். எதோ மார்க்கெட் சரிந்த நடிகர்கள் தான் சின்னத்திரைக்குள் வருவார்கள் என்று எண்ணி இருந்தனர். ஆனால் அமீர் கான், சல்மான்கான் போன்ற நடிகர்கள் அந்த பிம்பத்தை உடைத்தனர், கடந்த ஆண்டு கூட கமல் பிக் பாஸ் மூலம் மேலும் பல ரசிகர்களை சம்பாதித்தார்.

அதுமட்டுமில்லாமல் மீண்டும் கமல் சீசன் 2 வை தொகுத்து வழங்கவுள்ளார், இந்நிலையில் மலையாளத்தில் ஆசியாநெட் சேனல் பிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்த உள்ளது. இந்த நிகழ்ச்சியை நடத்தும் பொறுப்பை மோகன்லால் ஏற்றுள்ளார். இதற்கான அதிரப்பூர்வ அறிவிப்பை வெளியிடும் விதமாக இந்த நிகழ்ச்சிக்கான துவக்கவிழா நேற்று நடைபெற்றது.

மோகன்லால் அவ்வப்போது சின்னத்திரையில் சில சமூக நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியிருந்தாலும், இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி தான் அவர் நடத்த இருக்கும் மிகப்பெரிய நிகழ்ச்சி என்பது குறிப்பிடத்தக்கது. இதை அறிந்த மோகன்லால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர் 

கடந்த ஆண்டு கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழ் தொலைக்காட்சியில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. ஆரம்பத்தில் சீசன் 2-வை கமல் தொகுத்...

கடந்த ஆண்டு கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழ் தொலைக்காட்சியில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. ஆரம்பத்தில் சீசன் 2-வை கமல் தொகுத்து வழங்கமாட்டார் என்று தெரிவித்தனர்.

ஆனால் மீண்டும் கமலே தொகுத்து வழங்கவுள்ளார், அதற்கான டீஸர் வேலைகளையும் கடந்த வாரம் நடந்து முடிந்தது, இந்நிலையில் நாளை முதல் விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் 2 நிகழ்ச்சியின் டீஸர் வெளிவரவுள்ளது, முதல் சீசன் போலவே இரண்டவது சீசன் மிக பிரமாண்டமாக செட் அமைப்புடன் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது வரை கிடைத்த தகவல்படி பிரபல முன்னணி பிரபலங்கள் பிக் பாஸ் 2 வில் கலந்து கொள்ளவுள்ளனர் . ஆனால் யாரெல்லாம் என்பது ரகசியமாக வைத்துள்ளது பிக்பாஸ் குழு .

சினிமாவில் இப்போதெல்லாம் ஏதேதோ கதைகளை வைத்து படங்கள் எடுக்கப்படுகிறது. பேய் படங்கள் காலங்கள் போய் அடல்ட் படங்கள் அடியெடுத்து வைக்க தொடங்கிவ...

சினிமாவில் இப்போதெல்லாம் ஏதேதோ கதைகளை வைத்து படங்கள் எடுக்கப்படுகிறது. பேய் படங்கள் காலங்கள் போய் அடல்ட் படங்கள் அடியெடுத்து வைக்க தொடங்கிவிட்டது.

அதற்கிடையில் சினிமா வட்டாரமே நடிப்புக்காக ஏங்கிய பழம்பெரும் நடிகையான சாவித்திரியின் வாழ்க்கை படமாக வெளிவந்துள்ளது.

என்ன சொல்கிறார் இந்த நடிகையர் திலகம்? மகாநதியாக உருமாறிய இவரின் பயணம் பக்கம் நாமும் போகலாம்..

கதைக்களம்

ஒரு காலகட்டத்தில் சினிமா வட்டாரமே கர்ஜித்த பெயர் நடிகை சாவித்திரி. நடிகையர் திலகமாக நடிகை கீர்த்தி சுரேஷ். ஒரு சிறுமியாக, வளர்ந்த பெண்ணாக பின் ஒரு நடிகையாக மாறுகிறார்.

இந்த பயணத்தில் அவரின் வாழ்க்கையில் பல திருப்பங்கள். சாதாரண பெண்ணாக சினிமா துறையில் நுழைந்து நூற்றுக்கும் அதிகமான படங்களில் நடித்து ஒரு பெரும் புகழை பெற்றவர்.

அப்படியான புகழ் பெற்ற அவரின் வாழ்வில் ஒரு காதல் இவரையும் கடந்து போகிறது. இதில் மற்றொரு பிரபல நடிகர் ஜெமினி கணேசனும் முக்கிய பங்காற்றுகிறார்.

பிரபலங்களுக்கான காதல் கிசுகிசுக்களில் சிக்கிய இவர்கள் நிஜ வாழ்க்கையில் எப்படியிருந்தார்கள், கடைசி வரை காதல் ஜோடியாக இணை பிரியாமல் இருந்தார்களா?

மேலும் சாவித்திரியின் கடைசி ஆசையை யார் நிறைவேற்றினார்கள் என்பது படத்தின் மீதிக்கதை.

படத்தை பற்றிய அலசல்

கீர்த்தி சுரேஷ் படத்தின் மிக முக்கிய கேரக்டர். தமிழ், தெலுங்கு என பல படங்களில் நடித்த இவர் ஒரு பிரபல நடிகையின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்குமளவிற்கு உயர்ந்திருக்கிறார்.

சாவித்திரி சாதாரணமானவர் அல்ல. சகாப்தம் படைத்தவர். அப்படியான ஒருவராக இப்படத்தில் தன்னையே மாற்றியிருக்கிறார். ஏற்கனவே படங்களில் கீர்த்தி சுரேஷின் சில ரியாக்சனை கேலி கிண்டல் செய்தார்கள்.

ஆனால் இப்படத்தின் மூலம் அவருக்கு அந்த நிலை மாறலாம். இனிவரும் காலத்தில் இதே பெயர் அவருக்கு பொருந்தினாலும் ஆட்சேபனையில்லை என சொல்லலாம்.

ஜெமினி கணேசனாக மலையாள சினிமாவின் பிரபல நடிகர் துல்கர் சல்மான். இவருடன் கீர்த்திக்கும் காதல் மலர்கிறது. ஒரு நடிகரின் மேனரிசத்தை உள்வாங்கி அதை பிரதிபலிப்பது சாதாரணமான விசயமல்ல.

அவ்வகையில் துல்கர் தைரியமாக இறங்கியிருக்கிறார். மேலும் ஒரு தமிழ் படத்திற்காக அவர் முதன்முறையாக தனது சொந்த குரலில் டப்பிங் பேசியிருக்கிறார். ஆனால் முழுமையான ஜெமினி கணேசனாக எல்லாரிடமும் இடம் பெற்றாரா என்றால் கொஞ்சம் சந்தேகம் தான். சில அம்சங்கள் குறைந்து போல இருந்தது.

ஆனால் குடிப்பது போன்ற காட்சியில் கீர்த்தியுடன் இவர் பேசும் போது பார் (மதுக்கடை) பற்றி ரைமிங்காக ஒரு டையலாக் சொல்வார். அதற்கு நல்ல ரீச் இருந்தது.

நடிகை சமந்தா மதுரவாணியாக ஒரு பெண் பத்திரிக்கையாளராக வந்திருக்கிறார். சாவித்திரியை பற்றி விசயங்கள் பெரிதளவில் தெரியாவிட்டாலும் பின் தன் ஆராய்ச்சியால் ரசிகையாக மாறிப்போகிறார்.

இவருக்கும் விஜய் அந்தோனியாக வரும் விஜய் தேவரகொண்டாவுக்கும் காதல் மலர்கிறது. இவர்களுக்கிடையில் காதல் ஓடுகிறது. கலாச்சாரம் ஜெயித்ததா, காதல் வென்றதா என்பது ரகசியம் (படத்தில் பாருங்க).

மேலும் படத்தில் நடிகர் பிரகாஷ் ராஜ், பானுமதி ஆகியோரும், தெலுங்கு சினிமாவின் முக்கிய நடிகர்களும் இதில் இருக்கிறார்கள். ஒவ்வொருவரும் கதாபாத்திரமாக மாறி இடம் பிடித்திருக்கிறார்கள்.

படத்திற்கான காட்சிகள் அக்காலம் போல அருமையாக காட்டியிருக்கிறார் ஒளிப்பதிவாளர். படத்திற்கான பின்னணி இசை, பாடல் வரிகள் என மனதோடு ஒன்றிவிடுகிறது.

கிளாப்ஸ்

கீர்த்தி சுரேஷ் சாவித்திரியாக மாறிய தைரியத்தை பாராட்டலாம்.

அக்கால காதலை இக்கால தலைமுறைக்கு இயல்பாக எடுத்து சொன்னவிதம் நன்று.

வாழ்க்கை வரலாற்று படத்தை அழகாக கொடுத்த இயக்குனரின் அழகான முயற்சி.

நிறைவான காட்சிகளால் சிலிர்ப்புடன் வரும் சிரிப்பு.

பல்பஸ்

சில இடங்களில் கீர்த்தி சுரேஷ் வழக்கமான அசைவுகள் ஃபிளாஷாக தெரிந்தது.

டப்பிங் சில இடங்களில் பொருந்தவில்லை என தோன்றவைத்தது.

மொத்தத்தில் களங்கம் சுமத்தபடும் நடிகைகளுக்கு பின்னால் களங்கமில்லா ஒரு நல்ல மனது இருக்கிறது என நடிகையர் திலகம் காட்டுகிறது.

ஹெல்மெட் போடாமலோ அல்லது கைவசம் லைசென்ஸ் இல்லாமல் அல்லது குடித்து விட்டு வாகனங்களை ஓட்டி  டிராஃபிக் விதிகளை மீறுபவர்களிடம், டிராஃபிக் போலீசா...

ஹெல்மெட் போடாமலோ அல்லது கைவசம் லைசென்ஸ் இல்லாமல் அல்லது குடித்து விட்டு வாகனங்களை ஓட்டி  டிராஃபிக் விதிகளை மீறுபவர்களிடம், டிராஃபிக் போலீசார் லஞ்சம் வசூலிப்பதாகவும், அதேபோல் சாலை விதிகளை மீறுபவர்களும் தங்கள் குற்றங்களிலிருந்து தப்பிக்க லஞ்சம் கொடுப்பதாகவும், அதிக அளவில் புகார்கள் வந்தன.  இதையடுத்து, இதை தடுக்கும் விதமாக,  மின்னணு முறையில் -அதாவது பணமில்லா அபராதம்   அபராதம் செலுத்தும் வசதியை சென்னை மாநகர போலீஸ் அறிமுகப்படுத்தியுள்ளது.



தற்போதுள்ள தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப வாகன ஓட்டிகள் நேரடி அபராத தொகையை டிஜிட்டல் கட்டண முறைகளில் செலுத்த ஏதுவாகவும் பணமில்லா அபராதம் செலுத்தும் முறையை கொண்டு வந்துள்ளது.

போக்குவரத்து விதிமீறல்களுக்கான நேரடி அபாராத தொகையை பெறும் முறையில் வெளிப்படை தன்மையை உறுதி செய்யவும், சென்னை மாநகரபோக்குவரத்து காவல் துறை, நேரடி பணமில்லா அபராதம் செலுத்து முறையை இன்று முதல் நடைமுறைப்படுத்தி உள்ளது.

போக்குவரத்து போலீசார், ஸ்பாட் ஃபைன் பொதுமக்களிடம் வாங்குவதால் பல்வேறு மனக்கசப்புகள் ஏற்பட்டன.

போக்குவரத்து போலீசார் லஞ்சம் வாங்குவதுபோன்ற தோற்றத்தை ஏற்படுத்தியது. இதனால் தேவையில்லாத வாக்குவாதம் வீண் பிரச்சனைகள் ஏற்பட்டன.

இதனால், ஸ்பாட் பைன் முறையை நிறுத்துவதாகவும், நேரடி பணமில்லா அபராதம் செலுத்து முறை நடைமுறைபடுத்தப்பட்டுள்ளதாகவும் போக்குவரத்து காவல் துறை தெரிவித்துள்ளது.

போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராத தொகையை, பணமில்லா அபராத தொகை மூலம் செலுத்துவதற்கு கிரெடிட் கார்ட் / டெபிட் கார்டு, பாரத ஸ்டேட் வங்கி ஆன்லைன் பணபரிவர்த்தனை, போஸ்ட் ஆபிஸ், இ-சேவை மையம், PAYTM இதுபோன்று பல்வேறு வகையில் பணம்செலுத்த வகை செலுத்தப்பட்டுள்ளது.

பணம்தான் கொடுக்க வேண்டும் என்றால் நீதிமன்றம் சென்று செலுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எக்காரணம் கொண்டும் போலீசாரிடம் பணம் கொடுக்க வேண்டாம் என்று கூறப்பட்டுள்ளது.

கடந்த 2017 ஆம் ஆண்டு மட்டும் வாகன விபத்தில் 1347 பேர் உயிரிழந்துள்ளனர். குடும்ப உறுப்பினரை இழந்து வாடும் நிலையை அறிந்த பின்னரே போக்குவரத்து காவல் துறை இதுபோன்ற நடவடிக்கைகளை எடுத்து வருவதாக போக்குவரத்து காவல் அதிகாரி ஒருவர் கூறினார்.

நடிகர் ரஜினிகாந்த் இன்று நடந்த காலா படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடந்தது. அதில் பேசிய சூப்பர்ஸ்டார் மிக உருக்கமாக பேசினார். முதலில்...

நடிகர் ரஜினிகாந்த் இன்று நடந்த காலா படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடந்தது. அதில் பேசிய சூப்பர்ஸ்டார் மிக உருக்கமாக பேசினார்.

முதலில் கபாலி படத்தின் ஸ்கிரிப்டை படித்துவிட்டு கதை மிக மெதுவாக நகர்வதாக எனக்கு தோன்றியது. ரஞ்சித்தை அழைத்து இது பற்றி பேசினேன். ரசிகர்களுக்கு இவ்வளவு பொறுமை கிடையாது, நான் கதை கேட்கும்போது ஒரு ரசிகன் என்ன எதிர்பார்ப்பான் என்ற கண்ணோட்டத்தில் தான் கேட்பேன்.

காலா படத்தை மும்பையில் உள்ள தாராவியில் தமிழர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுத்துள்ளோம். ரஞ்சித் 85 நாட்களில் படத்தை முடித்துவிட்டார்.. அடுத்த கே.எஸ்.ரவிக்குமார் அவர்தான் என நினைக்கிறேன்.

"காலாவில் அரசியல் இருக்கும்; ஆனால் காலா அரசியல் படம் கிடையாது" என சூப்பர்ஸ்டார் மேலும் கூறினார்.