Home Top Ad

தென்னிந்தியா அளவில் மிக பிரபலமான நடிகையாக திகழ்ந்தார் நடிகை ஸ்ரீவித்யா. இவர் தமிழ் சினிமாவில் ரஜினி , கமல் முதல் அனைத்து முன்னணி ஹீரோக்களுக...

பழம்பெரும் நடிகை ஸ்ரீவித்யா வீட்டுக்கு வந்த சோதனை !

தென்னிந்தியா அளவில் மிக பிரபலமான நடிகையாக திகழ்ந்தார் நடிகை ஸ்ரீவித்யா. இவர் தமிழ் சினிமாவில் ரஜினி , கமல் முதல் அனைத்து முன்னணி ஹீரோக்களுக்கும் அம்மா வேடத்தில் நடித்திருந்தார். சில வருடங்களுக்கு முன்பு கேன்சர் நேயால் இறந்தார்.

இந்நிலையில் இவர் பெயரில் சென்னையில் உள்ள அபிராமிபுரத்தில் ஒரு விடு உள்ளது, அந்த வீட்டில் தற்போது ஒரு குடும்பம் வாடகைக்கு தங்கியிருந்தது, இடையில் இந்த நிர்வாகத்தை ஸ்ரீவித்யா வின் தம்பி பார்த்து வந்தார், ஸ்ரீவித்யா இறப்பதற்கு முன் வருமானவரித்துறையில் 45 லட்சம் பாக்கி வைத்திருந்தார். இதனால் வருமானவரித்துறை அபிராமிபுரத்தில் உள்ள அந்த வீட்டை கைப்பற்றியுது, வாடகைதாரர் வருமானவைத்துறையிடம் வாடகை செலுத்தி வந்தார்.

இந்த வீட்டை ஏலத்தில் விடுவது என்று முடிவு செய்தது வருமானவரித்துறை. அதன் படி ஒரு கோடியை 17 லட்சத்துக்கு ஏலத்துக்கு விடலாம் என்று முடிவு செய்து நேற்று அதற்க்கான வேலைகள் நடத்துவந்தது. பலரும் வீட்டை சுற்றி பார்த்தார்கள் தவிர யாரும் ஏலத்துக்கு வீட்டை வாங்க வரவில்லை. இதனால் வருமானவரித்துறை மீண்டும் ஏலத்துக்கான தேதியை தள்ளிவைத்துள்ளது.

0 coment�rios: