Home Top Ad

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது உறுதி என்று ஏற்கனவே அறிவித்து விட்டார். அரசியல் பயணம் தொடங்குவதற்கு முன்பு இமயமலைக்கு செல்லவேண...

பத்திரிக்கையாளர்களின் கேள்விகளுக்கு ஏன் பதிலளிக்கவில்லை - ரஜினிகாந்த் கொடுத்த விளக்கம் !

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது உறுதி என்று ஏற்கனவே அறிவித்து விட்டார். அரசியல் பயணம் தொடங்குவதற்கு முன்பு இமயமலைக்கு செல்லவேண்டும் என்பது அவரது திட்டம். இதனையொட்டி கடந்த 2 தினங்களுக்கு முன்பு இமயமலைக்கு புறப்பட்டு சென்றார்.

அங்கு டேராடூனில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, "நான் ஏன் பத்திரிக்கையாளர்கள் எழுப்பும் பல கேள்விகளுக்கு பதிலளிக்காமல் செல்கிறேன் என்றால் இன்னும் நான் முழுநேர அரசியல்வாதியாக மாறவில்லை, எனது கட்சிப்பெயரையும் அறிவிக்கவில்லை. அப்படியிருக்கும் சமயத்தில் எப்படி பதிலளிக்க முடியும் இந்த பயணம் கூட ஆன்மீகப் பயணமாகவே கருதி இமயமலை வந்துள்ளேன் என்று கூறினார்.

அதுமட்டுமில்லாமல் நடிகர் அமிதாப் பச்சன் விரைவில் குணமடைய ஆண்டவனை வேண்டுகிறேன் என தெரிவித்தார்.

0 coment�rios: