Home Top Ad

நடிகர் ஆர்யாவுக்கு தற்போது பெண்பார்க்கும் படலம் தீவிரமாக நடந்து வருகிறது. இதற்காக புதியதாக வந்துள்ள தமிழ் தொலைக்காட்சி ஒன்று மும்பரமாக இறங்...

ஏழு பெண்களுக்கும் காத்திருந்த சோகம்! இவர் வெற்றியாளரா? ஆர்யா முகத்தில் ஏற்பட்ட திடீர் மாற்றம்

நடிகர் ஆர்யாவுக்கு தற்போது பெண்பார்க்கும் படலம் தீவிரமாக நடந்து வருகிறது. இதற்காக புதியதாக வந்துள்ள தமிழ் தொலைக்காட்சி ஒன்று மும்பரமாக இறங்கியுள்ளது.

இதனையடுத்து, முதல் முயற்சியாக ஆர்யா தன் வருங்கால மனைவியை தேடும் விதத்தில் “எங்க வீட்டு மாப்பிள்ளை” என்ற ரியாலிட்டி ஷோவில் பங்கேற்று வருகிறார்.

அதில் துவக்கத்தில் 16 போட்டியாளர்கள் இருந்த நிலையில் தற்போது பலரும் வெளியேற்றப்பட்டு வெறும் 7 பெண்கள் மட்டுமே போட்டியில் உள்ளனர்.

இந்நிலையில், நாளை மேலும் ஒரு போட்டியாளர் வெளியேற்றப்படவுள்ளார். இருவரில் ஒருவர் விட்டு கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கை முன் வைக்கப்படுகின்றது. இதன்போது, ஆர்யாவின் முகமும் திடீர் என்று அதிர்ச்சியடைவது போல காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை, நேற்றைய தினம் அகாதா வெற்றி பெற்றிருந்தார். இதனை பார்த்த மிகுதி ஏழு பெண்களும் சோகத்தில் மூழ்கி விட்டனர்.

இதேவேளை, இவர் ஆர்யாவை திருமணம் செய்துகொள்வதற்காக இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவில்லை என்றும் , கேமரா முன்பு எப்போதும் போலியாக நடிக்கிறார் எனவும் மற்ற பெண்கள் இவர் மீது குற்றம்சாட்டியது குறிப்பிடத்தக்கது. 

0 coment�rios: