Home Top Ad

சமீபகாலமாக நடிகர் பிரகாஷ்ராஜ் ஆளும் மத்திய அரசான பிஜேபியை விமர்சித்து வருகிறார். தனது நெருங்கிய தோழியும் பத்திரிக்கையாளருமான கவுரி லங்கேஷ் ...

எந்த நேரத்திலும் நான் கொலை செய்யப்படலாம் - பிரகாஷ் ராஜ்

சமீபகாலமாக நடிகர் பிரகாஷ்ராஜ் ஆளும் மத்திய அரசான பிஜேபியை விமர்சித்து வருகிறார். தனது நெருங்கிய தோழியும் பத்திரிக்கையாளருமான கவுரி லங்கேஷ் கொலைக்கு பிறகு மத்திய அரசை கடுமையான எதிர்த்து பேசினார்.

அதன் பிறகு பிரதமர் என்னை விட சிறந்த நடிகர் என்ற விமர்சனத்தை முன்வைத்தார், இதனால் அவரை எதிர்த்து பல இடங்களில் போராட்டம் வெடித்தன. இந்நிலையில் மைசூருவில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரகாஷ் ராஜ் நிருபர்களிடம் பேசுகையில், நான் பாரதிய ஜனதா மற்றும் இந்து அமைப்பினருக்கு எதிராக பேசி வருவதால், என்னை கொலை செய்ய சதி நடக்கிறது.

சில இந்து அமைப்புகள் என்னை கொலை செய்ய திட்டம் தீட்டி வருகிறார்கள். எந்த நேரத்திலும் நான் கொலை செய்யப்படலாம். அதற்கு நான் அஞ்சவில்லை. என்னிடம் இருந்து உயிரை வேண்டுமானால் பறித்துக் கொள்ளலாம். ஆனால் என்னுடைய அறிவு, நடிப்பு திறமையை யாராலும் பறிக்க முடியாது என கூறினார்

0 coment�rios: