Home Top Ad

மறைந்த திமுக தலைவர் கலைஞர் கருணாநிதிக்கு, இந்தியாவில் இதுவரை யாருக்கு கிடைக்காத அளவிற்கு பெருமை கிடைத்துள்ளது. வயது முதிர்ச்சி மற்றும் உட...

இந்தியாவில் கருணாநிதிக்கு மட்டுமே கிடைத்த பெருமை! அப்படி என்ன தெரியுமா?

மறைந்த திமுக தலைவர் கலைஞர் கருணாநிதிக்கு, இந்தியாவில் இதுவரை யாருக்கு கிடைக்காத அளவிற்கு பெருமை கிடைத்துள்ளது.

வயது முதிர்ச்சி மற்றும் உடல்நிலை குறைபாடு காரணமாக கடந்த 11 நாட்களாக சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி நேற்று மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ஒட்டுமொத்த தமிழகத்தையும் சோகத்தை ஆழ்த்தியுள்ள கருணாநிதியின் மறைவுக்கு இந்தியா முழுவதிலிருந்தும் பல்வேறு அரசியல் தலைவர்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். அவரது மறைவினால் 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது.

அதேபோல நாட்டின் முக்கியமான இடங்கள் அனைத்திலும் தேசிய கோடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டு , மத்திய அரசால் துக்கநாள் அனுசரிக்கப்பட்டது வருகிறது. அதன்படி மத்திய அரசின் அனைத்து நிகழ்ச்சிகளும் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன.

கருணாநிதியின் மறைவுக்கு அரசு விடுமுறை அறிவித்து தமிழக அரசு மரியாதை செலுத்தியிருக்கும் வேளையில், கர்நாடக, ஆந்திர, கேரளா, தெலுங்கானா மற்றும் பீகார் உள்ளிட்ட மாநிலங்களிலும் ஒருநாள் துக்கம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

இந்தியாவில் பதவியில் இல்லாத ஒரு தலைவருக்கு இதுபோன்ற பெருமை இதுவரையிலும் கிடைத்ததே இல்லை. அந்த வகையில் மறைந்தும் இத்தகைய பெருமையினை கலைஞர் பெற்றுள்ளார்.

0 coment�rios: