Home Top Ad

நீண்ட நாட்களாக விமானத்தை இயக்கி வந்த 5 பைலட்கள் குறித்து தற்போது திடுக்கிடும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இந்த தகவல் உலகையே அதிர்ச்சியில் ...

இவ்வளவு நாட்களாக விமானத்தை இயக்கியது இவர்கள்தான்... உலகை அதிர்ச்சியில் உறைய வைத்த திடுக் தகவல்...

நீண்ட நாட்களாக விமானத்தை இயக்கி வந்த 5 பைலட்கள் குறித்து தற்போது திடுக்கிடும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இந்த தகவல் உலகையே அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.


பாகிஸ்தான் நாட்டின் கராச்சி நகரை தலைமையிடமாக கொண்டு, பாகிஸ்தான் அரசுக்கு சொந்தமான பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் (Pakistan International Airlines-PIA) விமான நிறுவனம் செயல்பட்டு வருகிறது.


இந்த நிறுவனம் கடந்த சில ஆண்டுகளாகவே நஷ்டத்தில் இயங்கி கொண்டுள்ளது. அரசுகள் மாறினாலும் கூட, இந்த நிறுவனத்தை நஷ்டத்தில் இருந்து மீட்க எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.


கடந்த ஜூன் மாத இறுதியில், பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் நஷ்டம் 36 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரித்தது. பாகிஸ்தான் நாட்டின் நிதி அமைச்சகம் மூலம் இந்த தகவல் தெரியவந்தது குறிப்பிடத்தக்கது.


இந்த சூழலில், பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் பலர் கல்வி சான்றிதழ்களில் முறைகேடு செய்திருப்பதாக புகார்கள் எழுந்தது. இதுதொடர்பான வழக்கு விசாரணை, பாகிஸ்தான் நாட்டின் உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

பாகிஸ்தான் நாட்டு உச்சநீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு இந்த விசாரணையை மேற்கொண்டு வருகிறது. இந்த சூழலில் சமீபத்தில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அதிர்ச்சிகரமான சில தகவல்கள் தெரியவந்தன.


பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தில் பணியாற்றும் 7 பைலட்களின் சான்றிதழ்கள் போலியாக இருக்கலாம் என சமீபத்தில் சந்தேகம் எழுந்தது. இது தொடர்பாக பாகிஸ்தான் நாட்டின் சிவில் விமான போக்குவரத்து ஆணையம் விசாரணை நடத்தியது.


இதில், 5 பைலட்கள் பள்ளி படிப்பையே தாண்டாதவர்கள் என்ற அதிர்ச்சிகரமான தகவல் தெரியவந்தது. சமீபத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, சிவில் விமான போக்குவரத்து ஆணையம் இந்த தகவலை உச்சநீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் அமர்வு முன்பு தெரிவித்தது.

இதன்மூலமாக இந்த தகவல் தற்போது வெளியே தெரியவந்துள்ளது. சிவில் விமான போக்குவரத்து ஆணையம் கூறிய தகவலை கேட்டு அதிர்ச்சியடைந்த மூன்று நீதிபதிகளில் ஒருவரான இஜாசுல் அஹ்ஸான், இவர்கள் பஸ்ஸை இயக்க கூட தகுதியற்றவர்கள் என்று விமர்சித்தார்.

ஆனால் அவர்கள் தற்போது விமானத்தையே இயக்கி கொண்டுள்ளனர். இதன்மூலம் பயணிகளின் பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தல் நிலவுகிறது எனவும் அவர் தெரிவித்தார். தற்போது இந்த சம்பவம் பாகிஸ்தான் மட்டுமின்றி உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விமானத்தின் பைலட் ஆக வேண்டும் என்ற ஆசை பலருக்கும் உள்ளது. என்றாலும் அதற்கு உரிய கல்வி தகுதி மற்றும் இதர பிற தகுதிகளும் கட்டாயம் அவசியம். ஆனால் பாகிஸ்தானில் உரிய கல்வி தகுதி இல்லாமலேயே 5 பேர் பைலட் ஆக வேலைக்கே சேர்ந்து விட்டனர்.

என்றாலும் பயணிகளின் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால், இந்தியாவில் இதுபோன்ற விஷயங்கள் சற்று கடுமையாகவே பின்பற்றப்படுகின்றன. இந்தியாவில் பைலட் ஆக வேண்டும் என்றால், சில அடிப்படையான தகுதிகளை பெற்றிருக்க வேண்டும். இதுகுறித்து இனி தெரிந்து கொள்ளலாம்.
இவ்வளவு நாட்களாக விமானத்தை இயக்கியது இவர்கள்தான்... உலகை அதிர்ச்சியில் உறைய வைத்த திடுக் தகவல்...

முதலில் பள்ளி மேல்நிலைப் படிப்பில் கணிதம், இயற்பியல் போன்ற பாடங்களை படித்திருக்க வேண்டும். அத்துடன் அவற்றில் குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களையும் பெற்று தேர்ச்சி அடைந்திருக்க வேண்டும். மாணவர் பைலட் லைசென்ஸ் பெற வேண்டும் என்றால் குறைந்த பட்சம் 16 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும்.

அதே சமயம் தனியார் பைலட் லைசென்ஸ் பெற 17 வயதும், கமர்ஷியல் பைலட் லைசென்ஸ் பெற 18 வயதும் பூர்த்தியடைந்திருக்க வேண்டும். அதே சமயம் 17 வயது பூர்த்தியாகியிருந்தால், நேரடியாக பிரைவேட் பைலட் லைசென்சுக்கு விண்ணப்பிக்க முடியும்.

ஆனால் இதற்கு 17 வயது பூர்த்தியாகி இருந்தால் மட்டும் போதாது. 12ம் வகுப்பிலும் தேர்ச்சியும் பெற்றிருக்க வேண்டும். இதன்பின் இந்திய சிவில் போக்குவரத்து ஆணையத்தின் இயக்குனரகம் தேர்வு ஒன்றை நடத்தும்.

இந்த தேர்வானது விமான வழித்தடங்கள், விமான வானியல் மற்றும் தொழில்நுட்ப அம்சங்கள் ஆகியவை சார்ந்ததாக இருக்கும். அதே சமயம் ஒரு கண்ணில் பார்வை மிகவும் தெளிவாக இருக்க வேண்டும்.

மருத்துவ மொழியில் இதனை 66 கண்பார்வை என்று அழைக்கின்றனர். அதே சமயம் மற்றொரு கண்ணில் 69 என்ற அளவில் குறைபாடு இருக்கலாம். என்றாலும் 66 என்ற நிலைக்கு இது சரி செய்யப்பட வேண்டும். அதேபோல் பொதுவான உடற்தகுதி என்பதும் கட்டாயமாக தேவை. தினசரி வாழ்க்கை முறையை பாதிக்கும் எந்த வியாதியும் இருக்கக்கூடாது என்பது குறிப்பிடத்தக்கது. இதுபோன்ற பல்வேறு அடிப்படையான விஷயங்கள் இங்கு பின்பற்றப்பட்டு வருகின்றன.

0 coment�rios: