Home Top Ad

நீங்கள் புகைப்படத்தில் காணவிருக்கும் விலங்கினம் எங்கிருந்து வந்தது என கண்டு பிடிக்க முடியவில்லையாம். அதன் ஸ்டெம்செல் எடுத்து ஆராய்ந்த போது ...

நீங்கள் புகைப்படத்தில் காணவிருக்கும் விலங்கினம் எங்கிருந்து வந்தது என கண்டு பிடிக்க முடியவில்லையாம். அதன் ஸ்டெம்செல் எடுத்து ஆராய்ந்த போது அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

அது ஆயிரம் வருடங்களுக்கு முற்பட்டதாம். மேலும் பூமியிலுள்ள எந்த ஒரு உயிரின செல்லோடும் ஒத்துப்போகவில்லையாம்.

நாம் உண்ணும் எதையும் அது உண்பதில்லையாம். சூரியனிலிருந்து ஆற்றலை கிரகித்துக் கொள்கிறதாம். இரவில் பறக்கிறதாம். இன்னும் ஆய்வுகள் நடந்து வருகிறது.

இந்த தகவலினை வெளியிட்டால் மக்கள் பீதி அடைவார்கள் என மத்திய உள்துறை அமைச்சகம் ரகசியம் காக்கிறதாம். அடுத்த வாரம் நாசாவிலிருந்து வருகிறார்களாம்.

இதன் செல்லை எடுத்து சாகாவரம் பெற்ற மனிதர்களை உருவாக்க முயல்கிறார்களாம். இதை விலைக்கு வாங்க 7500 டிரில்லியன் டொலர்களை இந்தியாவிற்கு கொடுக்க அமெரிக்கா முன் வந்துள்ளதாம்

ஆனால் இந்தியா 18575 டிரில்லியன் கேட்கிறதாம். இந்த தொகை கிடைத்தால் இந்தியர்கள் அனைவரும் கோடீஸ்வரர்கள் ஆகிவிடுவார்களாம்.

இந்த அதிசய உயிரினம் கேரளா நீலம்பூரியில் சிக்கியுள்ளது.


சிலருக்கு ஒரு கண் மட்டும் அடிக்கடி துடிக்கும். அவ்வாறு துடிக்கும் போது, ஒருசில மூடநம்பிக்கைகளானது மக்கள் மத்தியில் உள்ளது. அது என்னவென்றா...

சிலருக்கு ஒரு கண் மட்டும் அடிக்கடி துடிக்கும். அவ்வாறு துடிக்கும் போது, ஒருசில மூடநம்பிக்கைகளானது மக்கள் மத்தியில் உள்ளது.

அது என்னவென்றால், ஆண்களுக்கு வலது கண் துடித்தால், நல்லது நடக்கும், அதுவே பெண்களுக்கென்றால் தீமை ஏற்படும் என்றும், ஆண்களுக்கு இடது கண் துடித்தால் கெட்டது நடக்கப் போகிறது, அதுவே பெண்களுக்கானால் நல்லது நடக்கும் என்று நம்புகின்றனர்.

    உண்மையில் இது மிகப்பெரிய முட்டாள்தனமான ஒரு மூடநம்பிக்கை என்று தான் சொல்ல வேண்டும். ஆம், நல்லது கெட்டது நடப்பதற்கும், கண்களுக்கும் எப்படி தொடர்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று சிந்திக்காமல், குருட்டுத்தனமாக பலர் நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் உண்மையில் இந்த மாதிரி கண்கள் துடிப்பதற்கு, உடலில் ஒருசில பிரச்சனைகள் உள்ளது என்பதற்கான அறிகுறியாகும்.

அதுமட்டுமல்லாமல், கண்கள் துடிப்பதற்கு ம்யோகிமியா (myokymia) என்று பெயர். இத்தகைய கண் துடிப்பு அல்லது தசைச் சுருக்கம் ஏற்படுவதற்கு அதிகப்படியான மன அழுத்தம், தூக்கமின்மை, அதிகமாக காப்ஃபைன் உட்கொள்ளுதல் மற்றும் பல காரணங்களாகும். சிலருக்கு கண் துடிப்பானது ஒரு வாரம் அல்லது ஒரு மாதம் கூட இருக்கலாம்.
கண்கள் துடிப்பது ஏன்?

உடம்பில் உள்ள புறநரம்புகளின் இயல்புக்கு மீறிய மிகையான தூண்டலின் காரணமாக சில நேரங்களில் கண்களின் நரம்புகளும், அதனைச் சார்ந்த தசைகளும் துடிக்கும். இந்த கண்கள் துடிப்பிற்கு மயோகீமியா என்று மருத்துவ துறையில் கூறுவார்கள்.

குடிப்பழக்கம்,சோர்வு, கண்கள் வறட்சி, மன அழுத்தம், அதிக காபி குடிப்பது, சரிவிகித சத்துக்களின் பற்றாக்குறை, அலர்ஜி, அதிக நேரம் புத்தகம் படிப்பது போன்ற செயல்பாடுகள் கண்களின் ஆரோக்கியத்தைக் குறைத்து கண் துடிப்புகளை ஏற்படுத்துகிறது.

ஆனால் நீண்ட நாள் கண் துடிப்பு அல்லது வெட்டி இழுப்பது போன்ற பிரச்சனைகள் இருந்தால், அது மூளை தொடர்பான கோளாறாகவும் இருக்கலாம்.
கண் துடிப்பை தடுப்பது எப்படி?

    கண் துடிப்பினை தடுக்க, நன்றாக உறங்குவதுடன், கண்களுக்கு போதிய ஓய்வினைக் கொடுக்க வேண்டும். அல்லது கண்களுக்கு வெதுவெதுப்பான ஒத்தடம் கொடுத்தால், கண் நரம்புகளின் இறுக்கம் தளர்ந்து கண் துடிப்பது நிற்கும்.

சினிமா என்றாலே தற்போது மக்களுக்கு கொஞ்சம் வெறுப்பாகவே உள்ளது. ஆனால், சினிமாவையும் தமிழகத்தையும் ஒரு போதும் பிரிக்க முடியாது. ஏனெனில், திர...

சினிமா என்றாலே தற்போது மக்களுக்கு கொஞ்சம் வெறுப்பாகவே உள்ளது. ஆனால், சினிமாவையும் தமிழகத்தையும் ஒரு போதும் பிரிக்க முடியாது.

ஏனெனில், திரையரங்க டிக்கெட் விலையால் தான் ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளார்களே தவிர, சினிமா பார்ப்பதையே யாரும் தவிர்க்கவில்லை.

அப்படி சினிமா மீது ஆர்வம் உள்ள ரசிகர்களுக்கு சென்னையில் உள்ள பிரபல திரையரங்கம் ஒன்று செம்ம தகவல் ஒன்றை கூறியுள்ளது.

ரூ 349 கட்டினால் அந்த திரையரங்கில் எத்தனை படம் வேண்டுமானாலும் ஒரு மாதத்திற்கு பார்த்துக்கொள்ளலாம்.

அதேபோல் ரூ 1749 கட்டினால் 6 மாதத்திற்கு எத்தனை படம் வேண்டுமானாலும் பார்க்கலாம் என்று ஸ்பெஷல் தகவல் ஒன்றை அறிவித்துள்ளது.

செல்வராகவன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் தமிழ் சினிமாவே கொண்டாடும் படம் ஆயிரத்தில் ஒருவன். பாகுபலிக்கு முன்பே இப்படி ஒரு கதைக்களத்தை எடுத...

செல்வராகவன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் தமிழ் சினிமாவே கொண்டாடும் படம் ஆயிரத்தில் ஒருவன். பாகுபலிக்கு முன்பே இப்படி ஒரு கதைக்களத்தை எடுத்து செல்வராகவன் மிரட்டியிருப்பார்.

ஆனால், அப்போது அந்த படம் ஒரு சில காரணங்களால் எதிர்ப்பார்த்த வெற்றியை பெறவில்லை, இந்நிலையில் ஆயிரத்தில் ஒருவன் படத்தின் பார்த்திபன் கதாபாத்திரத்தை நாங்கள் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியது இல்லை.

ஒரு வாக்கு வித்தியாசத்தில் தேசிய விருதை தவறவிட்ட கதாபாத்திரம், அப்படியிருக்கையில் பார்த்திபன் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்கவிருந்த நடிகரே வேறு ஒருவர் தானாம்.

அது செல்வராகவன் தம்பி பிரபல நடிகர் தனுஷ் தான் நடிப்பதாக இருந்ததாம், சோழர்களின் இளவரசராக தனுஷை நடிக்க வைக்க செல்வராகவன் முயற்சி செய்ய, ஒரு சில கால்ஷிட் பிரச்சனையால் அதில் தனுஷ் நடிக்க முடியாமல் போனதாம்.

ரஜினிகாந்தை இனி சூப்பர் ஸ்டார் என்று அழைக்க வேண்டாம் என கூறி காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளார். ...

ரஜினிகாந்தை இனி சூப்பர் ஸ்டார் என்று அழைக்க வேண்டாம் என கூறி காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளார்.

"ரஜினிகாந்த் அவர்களை முதல் முறையாக நான் சந்தித்தபோது, தமிழகத்தின் சூப்பர் ஸ்டாரைச் சந்திக்கப் போகிறேன் என்ற நினைப்புடன்தான் சென்றேன். என் முதல் சந்திப்பில் அவர் நடிகர் என்கிற மாயை மறைந்தது. அவரை அடுத்தடுத்து சந்தித்த போது அவர் நடிகர் என்ற நினைப்பே எனக்கு இல்லாமல் போனது. அடுத்த முறை சந்தித்த போது, அவரை மிகச் சிறந்த மனிதனாகப் பார்த்தேன்" என தமிழருவி மணியன் கூறியுள்ளார்.

"உங்கள் லட்சியம் என்ன என்ற கேள்விக்கு ரஜினிகாந்த் சொன்னார் 'ஒரு நடிகனாக என் வாழ்வைத் தொடங்கினேன். நடிகனாகவே முடிந்துவிடுவது என் வாழ்வின் லட்சியம் அல்ல,' என்றார். உங்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள். தயவு செய்து இனிமேல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்று அவரை அழைக்க வேண்டாம். அந்தக் கட்டம் முடிந்துவிட்டது. இனி நீங்கள் சொல்ல வேண்டியது தமிழகத்தின் முதல்வர் ரஜினிகாந்த் என்று" என தமிழருவி மணியன் மேலும் கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் நடிகையாக இருப்பவர் நயன்தாரா. அனைத்து தென்னிந்திய மொழிப் படங்களிலும் நடித்து முன்னணி நடிகையாக திகழ்கிறார். நய...


தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் நடிகையாக இருப்பவர் நயன்தாரா. அனைத்து தென்னிந்திய மொழிப் படங்களிலும் நடித்து முன்னணி நடிகையாக திகழ்கிறார்.

நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் காதலித்து வருகிறார்கள். கடந்த மாதம் காதலர் தினத்தன்று இருவரும் ஒன்றாக சேர்ந்து ஒருவருக்கொருவர் வாழ்த்து தெரிவித்து கொண்டாடினார்கள்.

அதன் பிறகு இருவரும் வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்றனர். பிறந்த நாள் வாழ்த்து தெரிப்பது, காதலர் தின கொண்டாட்டம் என வெளிநாடு சென்ற படங்கள் இணைய தங்களில் வெளியானது. என்றாலும் இருவரும் தங்களது காதல் பற்றி வெளிப்படையாக தெரிவிக்கவில்லை.

இந்த நிலையில் முதல் முறையாக விக்னேஷ் சிவனை தனது வருங்கால கணவர் என்று நயன்தாரா குறிப்பிட்டுள்ளார். சென்னையில் நடந்த விருது வழங்கும் நிகழ்ச்சியில் நயன்தாரா பங்கேற்று பேசினார்.

அப்போது அவர் அம்மா, அப்பா, சகோதரர், என் வருங்கால கணவர் ஆகிய அனைவருக்கும் முதலில் நன்றி என்று குறிப்பிட்டார். இதன் மூலம் காதலரான விக்னேஷ் சிவனை வருங்கால கணவர் என்று நயன்தாரா தெரிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

நயன்தாரா முதலில் நடிகர் பிரபுதேவாவை காதலித்து திருமணம் செய்யவும் முடிவு செய்தார். இதற்காக கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த நயன்தாரா இந்து மதத்துக்கு மாறினார். ஆனால் கடைசி நேரத்தில் இருவருக்கும் இடையேயான உறவு முறிந்து விட்டது.

அதன் பிறகு ராமராஜ்ஜியம் படத்தில் சீதையாக நயன்தாரா நடித்தபோது இந்து முறைப்படி விரதம் இருந்து நடித்ததாக ஒரு பேட்டியில் தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடலிலுள்ள உப்பையெல்லாம் எடுத்து நிலத்தில் சமமாக பரப்பினால் எவ்வளவு உயரமாக இருக்கும் தெரியுமா? சுமார் 150 மீட்டர் உயரமாக இருக்கும். அதாவது...

கடலிலுள்ள உப்பையெல்லாம் எடுத்து நிலத்தில் சமமாக பரப்பினால் எவ்வளவு உயரமாக இருக்கும் தெரியுமா? சுமார் 150 மீட்டர் உயரமாக இருக்கும்.

அதாவது ஏறக்குறைய 45 மாடி கட்டடத்தின் உயரத்திற்கு இருக்கும்! ஏராளமான ஆறுகளும் நன்னீர் ஓடைகளும்தானே கடலில் கலக்கின்றன.

அப்படியிருக்க இவ்வளவு அதிகமான உப்பு எங்கிருந்து வந்தது? அது பல இடங்களிலிருந்து வந்து சேர்வதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

அதில் ஒரு இடம், நாம் நின்றுகொண்டிருக்கும் நிலமாகும். நிலத்திலுள்ள மண் வழியாகவும், பாறைகள் வழியாகவும் மழைநீர் கசிந்து செல்கையில் சில உப்புகளையும் அவற்றின் பாகமான இரசாயனங்கள் உட்பட சிறிதளவு தாதுப் பொருள்களையும் கரைத்துச் செல்கிறது.

அந்த நீர், ஓடைகள், ஆறுகள் வழியாக கடலில் கலக்கையில் இந்த உப்புகளையும் எடுத்துச் செல்கிறது. ஆனால், நன்னீரில் உப்பின் சதவிகிதம் மிகவும் குறைவாக இருப்பதால் அது நமக்கு தெரிவதில்லை.

மற்றொரு இடத்திலிருந்தும் உப்பு வருகிறது. அதுவே, கடலுக்கு அடியிலிருக்கும் புவி மேலோட்டிலுள்ள தாதுப் பொருள்கள் ஆகும்.

கடல் தரையிலுள்ள வெடிப்புகள் வழியாக தண்ணீர் புவி ஓட்டிற்குள் செல்கிறது. அங்கு பயங்கரமாக சூடாக்கப்பட்டு, தாதுப் பொருள்களையும் தன்னோடு எடுத்துக்கொண்டு, கடலடி வெந்நீர் ஊற்றுகள் வடிவில் மீண்டும் வெளியே வந்து கடலோடு கலக்கிறது. இதுபோன்ற வெந்நீர் ஊற்றுகளில் சில, ஆழ்கடலில் உள்ளன.