கமல்ஹாசன் நடித்து இயக்கிய படம் விஸ்வரூபம்-2. இப்படத்தின் முதல் பாகம் உலகம் முழுவதும் அடைந்த வெற்றியை நாங்கள் சொல்லி தெரியவேண்டியது இல்லை. ...
கமல்ஹாசன் நடித்து இயக்கிய படம் விஸ்வரூபம்-2. இப்படத்தின் முதல் பாகம் உலகம் முழுவதும் அடைந்த வெற்றியை நாங்கள் சொல்லி தெரியவேண்டியது இல்லை.
இந்நிலையில் விஸ்வரூபம்-2 படத்திற்கு பெரியளவில் எதிர்ப்பார்ப்பு இல்லை, ஆனால், கமல் இந்தியா முழுவதும் இப்படத்தை ப்ரோமோட் செய்தார்.
அப்படியிருந்தும் இப்படம் தற்போது வரை மொத்தம் ரூ 50 கோடி தான் வசூல் செய்துள்ளதாம், இதில் தமிழகத்தில் மட்டும் இப்படம் ரூ 30 கோடி வசூல் செய்துள்ளது.
இதனால், பல இடங்களில் விஸ்வரூபம்-2 கடும் நஷ்டத்தை சந்தித்துள்ளது, சமீபத்தில் வந்த கடைக்குட்டி சிங்கமே ரூ 50 கோடியை தாண்டி தமிழகத்தில் வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.
இப்படி கமல் மார்க்கெட் அதளபாதளத்திற்கு செல்ல அவரின் அரசியல் எண்ட்ரீ ஒரு காரணமா என்றும் சிலர் கூறி வருகின்றனர்.
மீண்டும் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். இந்தோனேஷியாவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு, பயங்கர நிலநடுக்கம் ...
மீண்டும் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.
இந்தோனேஷியாவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு, பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். இரண்டு முறை நிலநடுக்கத்தால் தொடர் நில அதிர்வுகள் ஏற்பட்டு, மக்களை அச்சுறுத்தின.
ஆயிரக்கணக்கான வீடுகள், கட்டடங்கள் இடிந்து தரைமட்டமாகின. இந்த சூழலில் இன்று காலை சும்பவா பகுதியில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.5ஆக பதிவானது.
இந்நிலையில் இன்று இரவு மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 6.9ஆக பதிவாகியுள்ளது. இதனால் ஏராளமான கட்டடங்கள் குலுங்கின.
நடிகர் ரஜினிகாந்த் இன்று நடிகர் சங்க நினைவேந்தல் கூட்டத்தில் கலைஞர் கருணாநிதி பற்றி உருக்கமாக பேசினார். அதுமட்டுமின்றி கலைஞருக்கு உரிய மரிய...
நடிகர் ரஜினிகாந்த் இன்று நடிகர் சங்க நினைவேந்தல் கூட்டத்தில் கலைஞர் கருணாநிதி பற்றி உருக்கமாக பேசினார். அதுமட்டுமின்றி கலைஞருக்கு உரிய மரியாதை அளிக்காத தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
"மெரினாவில் அடக்கம் செய்யலாம் என கோர்ட் தீர்ப்புக்கு பிறகு மேல் முறையீடு செய்யவில்லை, நீங்கள் செய்திருந்தால் நானே போராட்டத்தில் இறங்கியிருப்பேன்" என ரஜினி கூறினார்.
மேலும் "தேசிய தலைவர்கள், மற்ற மாநில முதல்வரகள், ராகுல் காந்தி உள்ளிட்ட பலர் இங்கு கலைஞரை அடக்கம் செய்யும்போது இருந்தனர். நீங்கள் எங்கே போனீர்கள்" என தமிழக முதல்வரை பார்த்து ரஜினி காட்டமாக கேட்டுள்ளார்.
கர்நாடகத்தில் காதல் ஜோடி பேஸ் புக் லைவில் திருமணம் செய்த சம்பவம் நடைபெற்றுள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்தவர் கிரண்குமார். அவரும்...
கர்நாடகத்தில் காதல் ஜோடி பேஸ் புக் லைவில் திருமணம் செய்த சம்பவம் நடைபெற்றுள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்தவர் கிரண்குமார். அவரும் அஞ்சனா என்ற பெண்ணும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இந்த விஷயத்தை அஞ்சனா தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதற்கு அவரது பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
அதற்கு காரணம் கிரண்குமார் ஆதிவாசி சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் தான்.ஆகவே வீட்டிலிருந்து வெளியேறினார் அஞ்சனா.
இதனிடையே தனது மகளை கிரண் கடத்திவிட்டதாக அஞ்சனாவின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இந்நிலையில் கிரண்குமார்-அஞ்சனா தங்களது திருமணத்தை பேஸ்புக் லைவ் வீடியோவாக வெளியிட்டனர். மேலும் தங்களுக்கு பாதுகாப்பு வழங்கக் கோரியும் கேட்டுக்கொண்டுள்ளனர்.
பொதுவாக கருணாநிதி தான் இருக்கும் இடத்தை கலகலப்பாக வைத்துக் கொள்வார். நகைச்சுவை மற்றும் சிலேடையாக பேசுவது போன்ற அவரது பேச்சின் வெளிப்பாடு ...
பொதுவாக கருணாநிதி தான் இருக்கும் இடத்தை கலகலப்பாக வைத்துக் கொள்வார்.
நகைச்சுவை மற்றும் சிலேடையாக பேசுவது போன்ற அவரது பேச்சின் வெளிப்பாடு அவரது அருகில் இருப்பவர்களை சிரிக்கச் செய்துவிடும்.
இந்நிலையில் தான் 2016 ஆம் ஆண்டு காவேரி மருத்துவமனையில் அனுமதித்திருந்தபோது அங்கிருந்த செவிலியர்களிடம் நகைச்சுவையாக பேசியுள்ளார்.
தீவிர சிகிச்சை பெற்று வந்த கருணாநிதியின் உடல் நிலையைக் கருத்தில் கொண்டு அவருக்கு தண்ணீர் அதிகம் கொடுக்கக் கூடாது என்று அவரை கவனித்துக் கொண்டிருந்த நர்சுகளுக்கு டாக்டர்கள் உத்தரவிட்டிருந்தனர்.
அதனால் தொடர்ந்து கருணாநிதி குடிப்பதற்கு தண்ணீர் கேட்டும் பணியில் இருந்த செவிலியர் தண்ணீர் கொடுக்கவில்லை.
ஒரு கட்டத்தில் அந்தசெவிலியரை அழைத்த கருணநிதி , இத்தனை தடவை தண்ணீர் கேட்டும் நீ கொடுக்கவில்லையே ! உன் பேரென்ன காவேரியா ? என கேட்டு தனது நகைச்சுவை உணர்வை வெளிப்படுத்தியுள்ளார்.
பிக்பாஸ் வீட்டில் கமல்ஹாசன் நேற்று நடிகர் பொன்னம்பலத்துடன் நீண்ட நேரம் உரையாடினார். பல குறும்படங்களை போட்டு அது பற்றி விளக்கம் கேட்டார். ...
பிக்பாஸ் வீட்டில் கமல்ஹாசன் நேற்று நடிகர் பொன்னம்பலத்துடன் நீண்ட நேரம் உரையாடினார். பல குறும்படங்களை போட்டு அது பற்றி விளக்கம் கேட்டார்.
ஐஸ்வர்யா சர்வாதிகாரியாக இருந்தபோது அவரை கழுத்தை பிடித்து தண்ணீரில் தள்ளியது பற்றி பேசிய பொன்னம்பலம், "அவர் அவராகவே இல்லை, வேறு வழி இல்லை என தெரியும்.. அதனால் தான் அப்படி செய்தேன். அது தவறாக இருந்தால் மன்னிப்பு கேட்கிறேன்" என கூறினார்.
மேலும் தான் ஸ்டண்ட்மேன் என்றும், அடிபடாமல் எப்படி சண்டை போடவேண்டும் என்பது தெரியும் என கூறி ஒரு பெண்ணை அழைத்து ஐஸ்வர்யாவுக்கு செய்தது போலவே மேடையில் செய்துகாட்டினார்.
அதன்பின் கமல் பொன்னம்பலத்தின் கழுத்தை பிடித்து அழுத்துவது போல செய்தார், ஆனால் வலிக்கவே இல்லை என பொன்னம்பலம் கூறிய பிறகு தான் புரிந்தது இருவரும் நடித்தார்கள் என்று.
இயக்கம், நடிப்பு, தயாரிப்பு என பல வேலைகளை செய்து கமல்ஹாசன் வெளியிட்டிருக்கும் படம் விஸ்வரூபம் 2. இப்படத்தின் முதல் பாகத்திற்கு மக்களிடம் ...
இயக்கம், நடிப்பு, தயாரிப்பு என பல வேலைகளை செய்து கமல்ஹாசன் வெளியிட்டிருக்கும் படம் விஸ்வரூபம் 2.
இப்படத்தின் முதல் பாகத்திற்கு மக்களிடம் எப்படிபட்ட வரவேற்பு கிடைத்தது என்பது நமக்கே தெரியும். இரண்டாம் பாகத்திற்காக ஆவலாக காத்துக் கொண்டிருந்த மக்கள் இப்போது நல்ல வரவேற்பு கொடுத்து வருகின்றனர்.
விஸ்வரூபம் 2 படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்தாலும் பாக்ஸ் ஆபிஸில் கலக்கிதான் வருகிறது. இப்போது படம் மூன்று நாள் முடிவில் சென்னையில் மட்டும் ரூ. 3.02 கோடி வரை வசூலித்துள்ளதாம்.
முதல் நாள்- ரூ. 0.92
இரண்டாம் நாள்- ரூ. 1.03
மூன்றாம் நாள்- ரூ. 1.07
Follow Us