தம்பி பெருமையாக இருக்கிறது உங்களை நினைத்து. உங்கள் வயதில் உள்ளவர்கள் பாக்கெட் மணிக்காக, உல்லாச வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு திருடிக்கொண்டிருக்கையில் நீ அதிசயமானவன்.
தமிழனுக்கு பிறப்பிலிருந்தே வீரம் வளர்கிறது என்பதற்கான வெளிப்பாடு தம்பி என்றும் உம் வீரதீர செயல் தொடங்கட்டும் தமிழா வீழ்வது நாமாக இருந்தாலு...
தீரன் சூர்யா : சிங்கம் சூர்யாவை மிஞ்சிய சிறுவன் சூர்யா #SpecialStoryAboutSuriya
தம்பி பெருமையாக இருக்கிறது உங்களை நினைத்து. உங்கள் வயதில் உள்ளவர்கள் பாக்கெட் மணிக்காக, உல்லாச வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு திருடிக்கொண்டிருக்கையில் நீ அதிசயமானவன்.
மாணவிகளை பாலியல் ரீதியாக பெரிய மனிதர்களுக்கு கட்டிலுக்கு அனுப்ப முயற்சித்ததால் கைதாகி சிறையில் இருக்கும் நிர்மலா தேவி 10 ஆண்டு கால கதையை ஒர...
சிபிசிஐடி-யை ஒற்ற வார்த்தையால் அலற வைத்த பேராசிரியை நிர்மலா... அப்படியென்ன வார்த்தை அது?
அருப்புக்கோட்டை மகளிர் பொலிஸ் நிலையத்தில் நிர்மலா தேவியிடம் விசாரணை நடத்திய ஆவணங்கள் சிபிசிஐடி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டன. அதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் உள்ளன.
நிர்மலா தேவி அளித்த வாக்குமூலத்தில் 10 ஆண்டு கால கதையை ஒரே நாளில் சொல்லிவிட முடியாது என்று கூறியுள்ளார். இதை கேட்டு போலீஸார் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
பேராசிரியை நிர்மலா தேவி, விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள தேவாங்கர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கணிதப் பேராசிரியை நிர்மலா மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் உயரதிகாரிகளுடன் ஆசைக்கு இணங்க கல்லூரி மாணவிகள் 4 பேரிடம் தொலைபேசியில் புரோக்கராக பேசி சிக்கிய ஆடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த கைதான நிலையில், பின்னர் விருதுநகர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதியின் வீட்டில் நிர்மலா ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்து அவரை ஏப்ரல் 28ம் திகதி வரை நீதிமன்ற காவலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார். பின்னர் அவர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
நிர்மலா தேவி விவகாரத்தை அருப்புக்கோட்டை நகர காவல் நிலையத்திலிருந்து சிபிசிஐடி விசாரணைக்கு தமிழக டிஜிபி ராஜேந்திரன் உத்தரவிட்டார். இதையடுத்து பேராசிரியை பணியாற்றிய அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரியில் 5 பேர் கொண்ட சிபிசிஐடி விசாரணை நடத்தியுள்ளனர்.
இந்த விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதில், நிர்மலா தேவி 2008ம் ஆண்டில் கல்லூரியில் உதவி பேராசிரியையாக சேர்ந்தார். அப்போது மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்துக்கு பல்வேறு பணிகளுக்காக அவர் சென்று வந்தபோது தொலைநிலைக் கல்வி இயக்ககத்தில் 2 பேராசிரியர்களுடன் பணி ரீதியில் நிர்மலாவுக்கு பழக்கம் உருவானது.
இந்நிலையில் தான் கடந்த மாதம் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்துக்கு பேராசிரியர்களுக்கான புத்தாக்கப் பயிற்சிக்காக அவர் சென்றுள்ளார். அப்போது அந்த இரு பேராசிரியர்களின் தூண்டுதலின் பேரிலேயே மாணவிகளை பாலியல் தொழிலுக்கு அழைத்துள்ளார். விரைவில் இதுதொடர்பாக அந்த இரு பேராசிரியர்கள் விசாரணை நடத்தப்படவுள்ளதாக அந்த காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
நடிகர் ராதாரவி தளபதி விஜய்யின் அடுத்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். மேலும் அவர் சமீபத்தில் விஜய்யுடன் எடுத்த ஒரு புகைப்...
ஜெயலலிதாவிற்கு பிறகு விஜய் மட்டுமே- நடிகர் ராதாரவி
இந்நிலையில் தற்போது விஜய்62 பற்றி ஒரு பேட்டியில் பேசிய ராதாரவி "ஜெயலலிதாவிற்கு பிறகு நடிகர் விஜய்யின் வீட்டிற்க்கு நான் குடும்பத்துடன் சென்று புகைப்படம் எடுத்துக்கொண்டோம். என் பேரன் விஜய் மீது பைத்தியமாக இருப்பான். நான் சுறா படம் நடிக்கும்போதே அவருடன் போட்டோ எடுக்கவேண்டும் என கேட்டான். அந்த ஆசை முருகதாஸ் படத்தில் நடிக்கும்போது தான் நிறைவேறியுள்ளது" என கூறியுள்ளார்.
மேலும் விஜய் அரசியலுக்கு வருவது பற்றி பேசிய அவர், "விஜய் இந்த மண்ணின் மைந்தர், ரசிகர்கள் ஆதரவளித்து அவர் அரசியலுக்கு வந்தால் நான் வரவேற்பேன். ஆனால் அவரின் கொள்கை பற்றி கேள்வி கேட்பதை தவிர்க்க முடியாது" என குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவை பொறுத்தவரை தற்போதெல்லாம் பிஸினஸ் பல கோடிகளில் தான் நடக்கின்றது. ஹீரோக்களும் படத்திற்கு படம் தங்கள் சம்பளங்களை ஏற்றிக்கொண்டே ...
உங்கள் பேவரட் நடிகர்களின் லேட்டஸ்ட் சம்பள விவரங்கள்- இத்தனை கோடிகளா! முழு லிஸ்ட் இதோ
இதையே ஒரு குறையாக பல தயாரிப்பாளர்கள் கூறி வருகின்றனர், இந்நிலையில் பிரபல நடிகர்கள் சம்பளங்கள் எவ்வளவு என்று ஒரு சில தகவல்கள் வெளிவந்துள்ளது. இதோ...(பிரபல ஆங்கிலத்தளத்தில் வெளியிடப்பட்ட தகவல்).
ரஜினிகாந்த்- ரூ 50 கோடி
விஜய்- ரூ 35 கோடி
அஜித்- ரூ 32 கோடி
கமல்ஹாசன்- ரூ 20 கோடி
சூர்யா- ரூ 20 கோடி
சிவகார்த்திகேயன்- ரூ 15 கோடி
விக்ரம்- ரூ 12 கோடி
தனுஷ்- ரூ 10 கோடி
கார்த்தி- ரூ 8 கோடி
விஜய் சேதுபதி- ரூ 6 கோடி
விஷால்- ரூ 6 கோடி
ஜெயம் ரவி- ரூ 5 கோடி
சிம்பு- ரூ 5 கோடி
ஆர்யா- ரூ 2 கோடி
மாதவன்- ரூ 2 கோடி
சில ஹார்ட் அட்டாக் வருவதற்கான காரணங்கள் நமக்கு தெரியும். உடல் பருமன், நீரிழிவு என அடுக்கிவிடலாம். ஆனால் நாம் நினைத்தே பார்க்காத பல காரணங்கள...
அடக்கொடுமையே! இப்படியெல்லாம்கூட ஹார்ட் அட்டாக் வருமா? படிக்காதீங்க... பயந்துடுவீங்க...
வயிறுமுட்ட சாப்பிட்டா, ஐஸ் வாட்டர் குடிச்சா, காலையில் எழும்போது என நாம்இதுவரை நினைத்துக்கூட பார்க்க முடியாத காரணங்களால் கூட ஹார்ட் அட்டாக் வருமாம். நீங்க இதையெல்லாம் சரிசெய்யலேன்னா, திடீர் ஹார்ட் அட்டாக் வரலாம், ஜாக்கிரதை.!
ஒழுங்கான தூக்கம் இல்லாமல் இருப்பது, மனச்சோர்வையும், எல்லோரிடமும் சிடுசிடுவென எரிச்சலடைய வைப்பதோடு மட்டுமல்லாமல், ஹார்ட் அட்டாக் ஏற்படும் அபாயத்தை, பெருமளவு உண்டாக்கி விடுகிறது.
தினமும் ஆறுமணி மணித்தியாளம் குறைவாக தூங்குபவர்களுக்கு, ஆறிலிருந்து எட்டு மணி நேரம் தூங்குபவர்களைவிட, இருமடங்கு இருதய பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாக, ஒருஆய்வு கூறுகிறது.
மருத்துவர்கள் சரியான காரணத்தை அறியாவிட்டாலும், அதிகநேரம் தூங்காமல் இருப்பதால், இரத்த அழுத்தம் அதிகரித்து, உடல் அழற்சி ஏற்படுவது, இதயத்துக்கு நன்மை தராத ஒன்றாகும்.
ஒற்றைத் தலைவலியும், பிற்காலத்தில், இருதய பாதிப்பை ஏற்படுத்தும் ஆபத்தைத் தரும். ஆரா ஒளிவட்டமுள்ள தியானம் செய்பவர்கள், தலைவலி இல்லாதவர்கள் போன்றோரை பாதிப்பதைவிட, அதிகமாக ஒற்றைத்தலைவலி உள்ளவர்களுக்கு, மாரடைப்பு கோளாறுகள் ஏற்படக்கூடும்.
வினோதமான காட்சிகள், சப்தம், உணர்வுகள் போன்ற தலைவலிக்கு முன் தோன்றும் வித்தியாசமான அனுபவங்கள், இருதய பாதிப்பின் கடுமையான அறிகுறிகளாகக் கருதப்படுகிறது.
குளிர்காலத்தில் அதிகநேரம் வெளியில் இருப்பது, உடல் இரத்த நாளங்களை சுருக்கி, இதயத்துக்கு செல்லும் இரத்த ஓட்டத்தை, தடை செய்கிறது. இதனால், உடலை கதகதப்பாக வைக்க, இதயம் சிரமப்படுகிறது.
பனிக்காலங்களில், ஐஸ் கட்டியில் விளையாடுவது, பனியில் ஊர் சுற்றுவது, போன்ற வெளிப்புற செயல்களைக் குறைப்பதன் மூலம், மாரடைப்பு உள்ளிட்ட இதய பாதிப்புகளைத் தவிர்க்க முடியும்.
மூக்குமுட்ட சாப்பிடுவதும், இரண்டாவது, மூன்றாவதுமுறை குழம்பு, பாயசம் வாங்கி சாப்பிடுவது, வயிற்றைமட்டும் பாதிக்காது, மனப்பதட்டத்தை ஏற்படுத்தும் நோர்பின்பிரைன் ஹார்மோனை அதிகம் சுரக்கவைத்து, அதனால், இரத்த அழுத்தமும் இதயத்துடிப்பும் அதிகரித்து, ஹார்ட் அட்டாக்கை ஏற்படுத்திவிட வாய்ப்புகள் ஏற்படும்.
கொழுப்புநிறைந்த அசைவ உணவுகள், இரத்தக்கொழுப்பை சட்டென அதிகரித்து, இரத்த நாளங்களை பாதிக்கக்கூடியவை.
தமிழ்நாட்டில் பட்டிமன்றம் என்றாலே ரசிகர்களுக்கு ஞாபகம் வருவது ஒரு சிலர் தான். அதில் முக்கியமானவர் திண்டுக்கல் ஐ.லியோனி. அவரை தான் சிவாஜி ...
ரஜினி படத்தில் நான் அப்பாவாக நடித்திருக்க வேண்டும்: திண்டுக்கல் ஐ.லியோனி
அவரை தான் சிவாஜி படத்தில் ஸ்ரேயாவுக்கு அப்பாவாக நடிக்க ஷங்கர் அணுகினாராம். ஆனால் சில காரணங்களால் அவர் அந்த வாய்ப்பை மறுத்துவிட்டாராம். அதன்பின்தான் ஷங்கர் பட்டிமன்றம் ராஜாவை அந்த ரோலில் நடிக்க வைத்தாராம்.
இந்நிலையில் அவர் தற்போது அடுத்து வடிவேலுவின் அடுத்த படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடிக்கிறாராம். சீனு ராமசாமியின் அடுத்த படத்திலும் அவர் கமிட் ஆகியுள்ளாராம்.
தளபதி விஜய் உலகம் முழுவதும் லட்சக்கணக்கான தமிழ் நெஞ்சங்களை கவர்ந்தவர். இவர் படங்கள் வருகின்றது என்றால் ரசிகர்கள் மட்டுமின்றி திரையரங்குகளே ...
விஜய்யை அசிங்கப்படுத்திய பிரிட்டன் விருது- ரசிகர்கள் கோபம்
ஏனெனில் ரஜினிக்கு பிறகு விஜய்க்கு தான் அதிக ரசிகர்கள் கூட்டம் இருந்து வருகின்றது, குடும்பத்துடன் பலரும் வந்து இவருடைய படத்தை பார்த்து செல்கின்றனர்.
இந்த நிலையில் மெர்சல் படம் சிறந்த வெளிநாட்டு படம் பிரிவில் பிரிட்டனின் தேசிய விருதை வென்றுள்ளது.
அதே நேரத்தில் விஜய்யை சிறந்த துணை நடிகர் பிரிவில் நாமினி செய்துள்ளனர், மெர்சல் படத்தின் நாயகனே விஜய் தான்.
அப்படியிருக்க அவரை துணை நடிகர் பிரிவில் நாமினி செய்தது அவரை அசிங்கப்படுத்தும் நோக்கமா? என்று விஜய் ரசிகர்கள் செம்ம கோபத்தில் உள்ளனர்.
Follow Us