Home Top Ad

நடிகரும் பாஜக பிரமுகருமான எஸ்.வி.சேகர் தனது முகநூலில் பெண் பத்திரிகையாளர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்ததால் அவர் மீது வழக்குப்ப...

உளறி கொட்டிய எஸ்.வி. சேகர் - தீவிரம் காட்டும் போலிஸ்....இன்று கைதாக வாய்ப்பு!

நடிகரும் பாஜக பிரமுகருமான எஸ்.வி.சேகர் தனது முகநூலில் பெண் பத்திரிகையாளர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்ததால் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் அவர் எந்த நேரமும் கைது செய்யப்படுவார் என்று கூறப்பட்ட நிலையில் எஸ்.வி.சேகரின் முன் ஜாமீன் மனு விசாரணையில் அவரை கைது செய்ய தடை விதிக்க நீதிமன்றம் மறுத்துவிட்டது.

இதனையடுத்து எஸ்.வி.சேகரை கைது செய்ய சென்னை சைபர் கிரைம் போலீசார் தீவிரம் காட்டி வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

ஆனால் எஸ்.வி.சேகர் தற்போது தலைமறைவாக இருப்பதாக கூறப்படுவதால் அவரை தேடும் பணியில் தனிப்படை போலீசார் ஈடுபட்டிருப்பதாகவும், மிக விரைவில் அவர் கைது செய்யப்படுவார் என்றும் தெரிகிறது.

இந்த நிலையில் எஸ்.வி.சேகர் விவகாரம் குறித்து கருத்து கூறிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, எஸ்.வி.சேகர் மீது அரசு சட்டப்படி நடவடிக்கை எடுக்கும் என்று கூறியுள்ளார்.

0 coment�rios: