Home Top Ad

சொந்த வீட்லேயே எலியை வச்சுகிட்டு, ஊருக்கே மருந்து தெளித்துக் கொண்டிருக்கிறார் கமல். கமலின் மய்யம் விசில் ஆப், நேற்று கோலாகலமாக துவங்கப்பட...

தமிழகத்தின் அடுத்த முதல்வர் வாட்டாள் நாகராசுவா இருக்குமோ? டவுட் கிளப்பும் சாருஹாசன்!

சொந்த வீட்லேயே எலியை வச்சுகிட்டு, ஊருக்கே மருந்து தெளித்துக் கொண்டிருக்கிறார் கமல்.

கமலின் மய்யம் விசில் ஆப், நேற்று கோலாகலமாக துவங்கப்பட்டுவிட்டது. பல நாள் உழைப்பு. மண்டையை கசக்கியதன் பலன், மிக அற்புதமான செயலியாக வந்திருக்கிறது அது.

அந்தந்த ஊரில் தேவைப்படும் அவசியங்களை, நடக்கும் அநியாயங்களை இதில் வீடியோவாக பதிவிடலாம். அல்லது புகாராக தெரிவிக்கலாம். அதை சம்பந்தப்பட்ட துறைக்கு கொண்டு செல்கிற பொறுப்பை ஏற்றுக் கொண்டிருக்கிறது கமலின் இந்த செயலி. இத்தகைய புகார்களை அரசு கண்டுகொள்ளுமா, விட்டுத் தள்ளுமா? என்பது அடுத்த விஷயம். ஆனால் குறைகளை அரசின் கண் விழிக்கு அருகே கொண்டு செல்கிற இந்த ஒரு திட்டமே, கமலின் புலிவேக பாய்ச்சலுக்கு எடுத்துக்காட்டு.

இந்த நேரத்தில்தான் அவரது அண்ணன் சாருஹாசன் ட்விட்டரில் ஒரு கருத்தை பதிவு செய்திருக்கிறார். கர்நாடகத்தை சேர்ந்த ஒருவர்தான் தமிழகத்தின் அடுத்த முதல்வர் என்று கூறியிருக்கிறார்.

எப்போதும் தாட் பூட்டாக பேசுவதில் சாருஹாசன் யாருக்கும் சளைக்காத ஹாசன். ‘என் தம்பி கமலாவது கடவுள் இருந்தா நல்லாயிருக்கும்னு சொல்றான். நான் இல்லேன்னு சொல்றேன்’ என்றார் ஒருமுறை. அப்படிப்பட்டவர், இப்படி தடாலடியாக பதிவிடுவது ஆச்சர்யமில்லை. ஆனால் ஒரு குழப்பம்.

அவர் சொல்லும் அந்த கர்நாடகாக் காரர் யார்? வாட்டாள் நாகராஜா இருக்குமோ, இல்ல தேவ கவுடாவாக இருக்குமோ? என்றெல்லாம் மயிர் கூச்செரிகிறார்கள் ரசிகர்கள்.

ஏனென்றால், ‘நான் தமிழன்’ என்று ரஜினி சத்தியம் பண்ணி பல வருஷமாச்சே?

0 coment�rios: