Home Top Ad

டயானா விபத்தில் உயிரிழக்கவில்லை எனவும் திட்டமிட்டே அவர் படுகொலை செய்யப்பட்டார் எனவும் டயானாவின் காதலரின் தந்தை கூறியுள்ளார். பிரித்தானியா...

இறக்கும் போது இஸ்லாமிய வாரிசை வயிற்றில் சுமந்தாரா டயானா?....

டயானா விபத்தில் உயிரிழக்கவில்லை எனவும் திட்டமிட்டே அவர் படுகொலை செய்யப்பட்டார் எனவும் டயானாவின் காதலரின் தந்தை கூறியுள்ளார்.

பிரித்தானியா இளவரசி டயானா தனது காதலர் Dodi Fayed-யுடன் காரில் செல்லும் போது ஏற்பட்ட விபத்தில் கடந்த 1997ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31ஆம் திகதி பலியானார்.

டயானா இறந்து 20 வருடங்கள் ஆகவுள்ள நிலையில் அவர் விபத்தில் தான் இறந்தாரா அல்லது கொல்லப்பட்டாரா என்ற விவாதங்கள் தற்போதும் நடைப்பெற்று வருகின்றது.

இதனிடையில் டயானா - Dodi Fayed காதல் விவகாரத்தை அறிந்து அவர்களுக்கு ஆதரவாக இருந்த Dodiயின் தந்தை Mohamed Al-Fayed ஆரம்பத்திலிருந்தே இது விபத்தல்ல படுகொலை என கூறி வருகிறார்.

இது தொடர்பாக அவர் நீதிமன்றத்தில் சில வருடங்களுக்கு முன்னர் வழக்கு தொடர்ந்த நிலையில் அது தள்ளுபடி செய்யப்பட்டது.

Mohamed கூறுகையில், MI6 ரகசிய புலனாய்வு நிறுவனமும், பிரித்தானியா அரச குடும்பமும் சேர்ந்து தான் திட்டமிட்டு இந்த விபத்தை ஏற்படுத்தினார்கள்.

இது ஒரு படுகொலை என கூறியுள்ளார்.

மேலும் Mohamed கூறுகையில், பிரான்ஸ் புலானாய்வு நிறுவனமும் இதற்கு உதவியுள்ளது.

தன்னிடம் டயானா ஒரு முறை போனில் பேசும் போது தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், தான் கர்ப்பமாக இருப்பதாகவும் கூறியதாக Mohamed தெரிவித்துள்ளார்.

மேலும், இஸ்லாமிய மதத்தை சேர்ந்த குழந்தை டயானாவின் வயிற்றில் வளருவதை அரச குடும்பம் விரும்பவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், தனது கணவர் சார்லஸ் தனது காரின் பிரேக்கை எடுத்து விட்டு விபத்தை ஏற்படுத்த திட்டமிடுவதாகவும் டயானா தான் கைப்பட எழுதியதாக ஒரு கடிதம் முன்னர் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

0 coment�rios: