Home Top Ad

விஜய் சேதுபதி என்றாலே எல்லாருடைய மனதிலும் நினைவிற்கு வருவது அவரது இயல்பான நடிப்பு தான். அந்த அளவிற்கு தான் நடித்த படங்கள் அனைத்திலும் ஒரு ச...

விஜய் சேதுபதி என்றாலே எல்லாருடைய மனதிலும் நினைவிற்கு வருவது அவரது இயல்பான நடிப்பு தான். அந்த அளவிற்கு தான் நடித்த படங்கள் அனைத்திலும் ஒரு சிறு பகுதியிலாவது தனது இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.

அந்த அடையாளத்தின் மூலமே தற்போது அவர் முன்னணி நடிகர் பட்டியலில் உள்ளார். அத்தகையவரின் நடிப்பில் அடுத்ததாக வெளியாக இருக்கும் படம் ஜுங்கா. இதற்கு முன் இவரது நடிப்பில் வெளியாகி கவனிக்கத்தக்க படமாக அமைந்த இதற்குதான் ஆசைப்பட்டாயா பாலகுமாராவை இயக்கிய கோகுல் தான் இப்படத்தையும் இயக்கவுள்ளார்.

படத்தில் நடிப்பது மட்டுமில்லாமல் நடிகர் அருண் பாண்டியனுடன் சேர்ந்து இப்படத்தை தயாரிக்கவும் செய்துள்ளார் விஜய்சேதுபதி. படத்தில் இவருக்கு ஜோடியாக தற்போதைய டிரெண்டிங் நடிகை சாயிஷா நடித்துள்ளார். மடோனா செபாஸ்டினும் வருகிறார்.

படத்தின் காமெடிக்காக யோகிபாபுவை சேர்த்தாலும் எப்படியோ அவர் மட்டும் காமெடி பண்ண போவதில்லை கூட விஜய்சேதுபதியும் சிரிக்க வைக்க போகிறார் என்பதை படத்தின் டிரைலரை பார்த்த அனைவருக்கும் தெரியும். என்னதான் படம் முழுக்க வெளிநாட்டில் காட்சிப்படுத்தி இருந்தாலும் கஞ்சதனமான ரௌடியாகவே விஜய்சேதுபதி வருகிறாராம்.

மேலும் படத்தின் இசைவேலையை சித்தார்த் விபின் நன்றாக செய்துள்ளார் என்றே தெரிகிறது. ஏனெனில் இதுவரை வெளியாகியுள்ள அனைத்து பாடல்களுமே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. வெளிநாடாக இருந்தாலும் சென்னை லோக்கல் லெவலுக்கு இறங்கி குத்து போடும் அளவுக்கு கானா பிரபலங்களை எல்லாம் பாட வைத்துள்ளார்.

ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கும் படங்களில் ஒன்றாக உள்ள இந்த படம் வரும் வெள்ளிகிழமை 27ஆம் தேதி ரிலிஸாக உள்ளது.

தமிழக அரசியல்வாதிகள் மேடையிலோ அல்லது பேட்டியின்போதோ உளறுவது என்பது தற்போது சர்வசாதாரணமாக இருந்து வருகிறது. குறிப்பாக ஒரு அரசியல் தலைவர் த...

தமிழக அரசியல்வாதிகள் மேடையிலோ அல்லது பேட்டியின்போதோ உளறுவது என்பது தற்போது சர்வசாதாரணமாக இருந்து வருகிறது.

குறிப்பாக ஒரு அரசியல் தலைவர் தப்பு தப்பாக பழமொழிகளை கூறி வருவது நெட்டிசன்களின் கிண்டலுக்கு உள்ளாகி வருகிறது.

இந்த நிலையில் அதிமுக எம்பி ஒருவர் பாராளுமன்றத்தில் பேசியபோது பாரத பிரதமர் எடப்பாடி பழனிச்சாமி என்று கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுக மாநிலங்களவை எம்.பி நவநீதகிருஷ்ணன் நேற்று மாநிலங்களவையில் பேசியபோது, மாண்புமிகு பிரதமர் எடப்பாடி பழனிச்சாமியின் திட்டம் என்று கூறி ஒரு திட்டம் குறித்து பேசினார்.

மாண்புமிகு முதல்வர் என்று கூறுவதற்கு பதிலாக அவர் மாண்புமிகு பிரதமர் என்று கூறியதை அவை உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியதும் நவநீதகிருஷ்ணன் எம்பி தனது தவறை திருத்தி அதன் பின்னர் மாண்புமிகு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி என்று கூறினார்.

ஏற்கனவே இதுபோன்ற உளறலுக்காக காத்திருக்கும் நெட்டிசன்களும் மீம்ஸ் கிரியேட்டர்களும் இந்த உளறல் குறித்து கிண்டலடித்து வருகின்றனர். அரசியல் தலைவர்கள் மற்றும் பொருப்பான பதவியில் உள்ளவர்கள் தங்கள் பொருப்பை உணர்ந்து பேச வேண்டும் என்பதே அனைவரின் வேண்டுகோளாக உள்ளது.

ஆவாரை முழுத் தாவரமும், துவர்ப்புக் குணமும், குளிர்ச்சித் தன்மையும் கொண்டது. சிறுநீரக, சிறுநீர்த்தாரை சம்பந்தமான நோய்களையும், ஆண்குறி எரிச்ச...

ஆவாரை முழுத் தாவரமும், துவர்ப்புக் குணமும், குளிர்ச்சித் தன்மையும் கொண்டது. சிறுநீரக, சிறுநீர்த்தாரை சம்பந்தமான நோய்களையும், ஆண்குறி எரிச்சலையும் போக்கும்.

இலை, பூ, பட்டை உடலைப் பலமாக்கும். துவர்ப்புத் தன்மையைக் கூட்டும். பூ, வறட்சி, கற்றாழை நாற்றம் ஆகியவற்றைப் போக்கும். உடம்பிற்கு பொற்சாயலைத் தரும். வேர், இளைத்த உடலைத் தேற்றும். விதை காமம் பெருக்கும், குளிச்சியுண்டாக்கும்.

ஆவாரம் இலையை அம்மியில் அல்லது மிக்ஸியில் போட்டு அரைத்து அதன் விழுதை ஒரு கரண்டியில் இட்டு அதனுடன் சிறிது நல்லெண்ணெய் விட்டு சிறுதனலில் ஆவாரம் விழுதை வதக்கி அதை சுத்தமான காட்டனில் வைத்து கட்டிவிடவேண்டும். இதுபோல் ஒருநாள் விட்டு ஒருநாள் கட்டிவர சர்க்கரை நோயால் ஏற்படும் குழிப்புண்கள் மாயாமாக மறைந்துவிடும்.

வெள்ளைபடுதல், சிறுநீர் எரிச்சல் தீர ஆவாரையின் பூ இதழ்களைச் சேகரித்து, நிழலில் உலர்த்தி, தூள் செய்து கொண்டு, ½ கிராம் அளவு, 2 கிராம் வெண்ணெயில் குழைத்துத் தொடர்ந்து சாப்பிட்டு வர வேண்டும்.

உடல்சூடு, தோல் வறட்சி நீங்கி பலம் பெற ஆவாரை பூச்சூரணத்தை பாலில் கலந்து குடித்துவர வேண்டும் அல்லது பூவைக் குடிநீராக்கியும் சாப்பிட்டு வரலாம் அல்லது பூ இதழ்களைச் சேகரித்து, கூட்டு செய்து, தொடர்ந்து பயன்படுத்த வேண்டும்.

மாதவிடாயின்போது ஏற்படும் அதிக இரத்தப் போக்குக் கட்டுப்பட 20 கிராம் ஆவாரைப் பட்டையைப் பொடி செய்து, ஒரு லிட்டர் நீரில் இட்டு, 200 மி.லி. ஆக சுண்டக் காய்ச்சி, 50 மி.லி. அளவில் காலை, மாலை வேளைகளில் குடித்துவர வேண்டும்.

தோல் அரிப்பு மற்றும் நமைச்சல் குணமாக பசுமையான அல்லது உலர்ந்த பூக்களுடன், சமஅளவு பச்சைப்பயறு சேர்த்து அரைத்து, வெந்நீர் கலந்து பசையாக்கி, உடம்பில் தேய்த்து ஊறவைத்து, சிறிது நேரம் கழித்துக் குளிக்க வேண்டும்.

திருமணமா‌கி பல ஆ‌ண்டுக‌ள் ஆ‌கியு‌‌ம் குழ‌ந்தை இ‌ல்லாத பெ‌ண்க‌ளு‌க்கு ஆவாரை பய‌ன்படு‌கிறது. அதாவது, கருப்பட்டியுடன் ஆவாரை‌ப் பூவை சேர்த்து உ‌ண்டு வ‌ந்தா‌ல், பெ‌ண்களு‌க்கு மல‌ட்டு‌த் த‌ன்மை ‌நீ‌ங்கு‌ம். ‌விரை‌வி‌ல் க‌ர்‌ப்ப‌ம் உண்டாகும் வாய்ப்பு ஏற்படும்.

ஆவாரம்பட்டை, அத்திப்பட்டை, நாவல்படை இவை மூன்றையும் சம அளவு பொடி செய்து தேனில் 5-10 நாட்கள் சாப்பிட வெள்ளை நோய், நீரிழிவு தீரும்.

‘ஆனந்த யாழை மீட்டுகிறேன்’ பாடலை விட ஒரு உசரமான பாடல், ராம்- நா.முத்துகுமார் காம்பினேஷனில் இனி வரப்போவதில்லை. தன் முதல் படத்திலிருந்தே நா.மு...

‘ஆனந்த யாழை மீட்டுகிறேன்’ பாடலை விட ஒரு உசரமான பாடல், ராம்- நா.முத்துகுமார் காம்பினேஷனில் இனி வரப்போவதில்லை. தன் முதல் படத்திலிருந்தே நா.முத்துகுமாரின் தோழனாகிவிட்ட இயக்குனர் ராம், யுவன் -நா.மு காம்பினேஷனுக்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பார்.

தனக்கு விருது கொடுத்து கவுரவித்த ஆனந்தவிகடன் மேடையிலேயே ‘நா.முத்துகுமாருக்கு ஏன்யா விருது கொடுக்கலே?’ என்று சண்டைப்போட்ட இந்த சாக்லெட் தோழர், அவரில்லாத சினிமாவை எப்படி எதிர்கொள்வார்?

சின்ன வயதிலேயே இந்த உலகத்தை விட்டுப் போன கவிஞர் நா.முத்துகுமாரை திரையுலகம் ஒவ்வொரு நாளும் நினைத்துக் கொள்ளும் என்றாலும், ராம் நிறையவே நினைக்கிறார். ‘பேரன்பு’ படத்தில் நா.முத்துகுமார் இல்லையே என்கிற கவலை அவரை வாட்டி எடுப்பதை புரிந்து கொள்ளவும் முடிகிறது. நா.முத்துகுமார் இடத்தை நிரப்ப யாராலும் முடியாது என்று அந்த விழா மேடையிலேயே சொன்னவரை நோக்கி ஒரு கேள்வியை கேட்கிறார்கள் ரசிகர்கள்.

“ஆமாம்… அவரு இடத்தை யாராலும் நிரப்ப முடியாதுதான். அதற்காக யானைக்கு போர்த்திய அம்பாரியில வடகம் காய வச்சுட்டீங்களே வாத்யாரே…” என்கிறார்கள் அவர்கள்.

ஏன் இப்படி புலம்பணும்?

வேறொன்றுமில்லை. இந்தப்படத்தில் நா.முத்துகுமார் எழுதுகிற அளவுக்கு வெயிட்டான ஒரு பாடலை இயக்குனர் ராமின் மனைவி சுமதியே எழுதிவிட்டாராம்.

தமிழ் சினிமாவை பொறுத்த வரை காலம் காலமாக ஹீரோ புகழ் பாடுவது, ஹீரோயின் மரத்தை சுற்றி ஆடுவது என்பது மாற்ற முடியாத கலாச்சாரமாக இருந்தது. ஹாலிவு...

தமிழ் சினிமாவை பொறுத்த வரை காலம் காலமாக ஹீரோ புகழ் பாடுவது, ஹீரோயின் மரத்தை சுற்றி ஆடுவது என்பது மாற்ற முடியாத கலாச்சாரமாக இருந்தது. ஹாலிவுட்டில் எல்லாம் தரமான படங்களை கூட ஸ்கேரி மூவி என்ற பெயரில் கிழித்து தொங்கவிடுவார்கள்.

ஆனால், தமிழில் தங்களுக்கே தெரியாமல் 1 கிலோமீட்டருக்கு தாண்டுவது, பாலத்தில் இருந்து குதிப்பது என்று ஹீரோக்கள் பல சேட்டைகள் செய்ய, அதை தன் ஸ்டைலில் வைத்து செய்ய அமுதன் இயக்கிய படம் தான் தமிழ் படம், இப்படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து இந்த முறை அதிக கண்டெண்டுடன் களம் இறங்கியுள்ளது தமிழ் படம்-2, இதுவும் முதல் பாகத்தை போல் ரசிகர்களை கவர்ந்ததா? பார்ப்போம்.

கதை:

தமிழ் படத்தில் கதை என்று என்ன சொல்வது. பல படத்தின் காட்சிகளின் தொகுப்பு தான் தமிழ் படம்2.

போன முறை டி என்ற வில்லனை தேடி செல்லும் சிவா இந்த முறை வில்லன் பி யை தேடி செல்கின்றார். அந்த பி யை சிவா பிடித்தாரா என்பதை பல படங்களை பங்கம் செய்து கலாய்த்துள்ளார் சி.எஸ்.அமுதன்.

படத்தை பற்றிய அலசல்

சிவா சிவா சிவா ஒன் மேன் ஆர்மியாக மிரட்டியுள்ளார். படம் முழுவதையும் இவர் ஒருத்தரே தாங்கி நிற்கின்றார். சிவா நடந்தால் சிரித்தால் ஏன் கை அசைத்தால் கூட ஆடியன்ஸிடம் விசில் பறக்கின்றது.

படத்தில் பல படங்களை கலாய்ப்பது தான் கான்செப்ட் என்றால் படத்தின் முதல் காட்சியில் டிபேட்டில் தமிழிசையை காலை வாருவதில் இருந்து ஹெச்.ராஜாவை சோத்துக்கு வந்தேன் என சொல்ல வைப்பது, அதோடு சின்னம்மா சபதம் பன்னீர் செல்வம் சத்தியம் என அரசியல் அட்ராசிட்டி செய்துள்ளனர்.

அதிலும் இதில் சதீஷ் மிரட்டியுள்ளார், வில்லன் கெட்டப் போடலாம் அதற்காக 2.0 அக்‌ஷய்குமார் கெட்டப்பெல்லாம் ரொம்ப ஓவர் சார். சதீஷின் திரைப்பயணத்தில் ஆல் டைம் பெஸ்ட்.

செல்வம் நீங்க பழைய செல்வமா திரும்பி வரனும்னு சொல்றப்ப அது மட்டும் முடியாது சார் ஏன்னா நா செல்வமே இல்ல சிவா, போய் புள்ள குட்டிய படிக்க வைங்கடா...ஆனா இன்ஜினியரிங் மட்டும் படிக்க வைக்க வேண்டாம் போன்ற வசனம் கைத்தட்டல் பறக்கின்றது.

மேலும், படத்தில் தமிழ் படங்கள் மட்டுமின்றி ஸ்பீட், கேம் ஆப் துரோன்ஸ் போன்ற ஹாலிவுட் படங்கள், சீரியஸுகளையும் கலாய்த்துள்ளனர், தமிழில் டோட்டல் டேமேஜ் என்றால் வேதாளம், விவேகம் காட்சிகள் தான் மொத்த திரையரங்கமும் கொண்டாடுகின்றது, அதேபோல் பாகுபலி, கபாலி காட்சிகள் ரசிக்க வைக்கின்றது.

இத்தனை இருந்தும் முதல் பாதி ஒரு சில நேரத்திற்கு பிறகு கொஞ்சம் பொறுமையை சோதிக்கின்றது, ஏனெனில் அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சல்லவா? அதேபோல் தான், இன்னமும் கொஞ்சம் முதல் பாதி சுவாரசியப்படுத்தியிருக்கலாம், அதிலும் அடிக்கடி வரும் பாடல்கள் படத்தின் மைனல் முதல் பாதியில்.

படத்தின் ஒளிப்பதிவு பாராட்டியே ஆகவேண்டும், வேட்டையாடு விளையாடு காட்சியை ஒரு இடத்தில் கலாய்க்கிறார்கள், அதுக்கூட கமலுக்கு எப்படி ஆங்கிள் வைத்தார்களோ அதேபோல் சிவாவிற்கும், கண்ணனின் இசை கலக்கல் குறிப்பாக பின்னணி இசை, பாடல்கள் திருப்திப்படுத்தவில்லை.

க்ளாப்ஸ்

சிவா ஒருவரை மட்டுமே நம்பி பந்தயம் கட்டலாம்.

படங்களை கலாய்ப்பதை தேர்ந்தெடுத்த விதம், இன்றைய ட்ரெண்டிங் வசனங்களை கூட விட்டு வைக்காமல் கலாய்த்தது ஆடியன்ஸுடன் ஈசியாக கனெக்ட் செய்கின்றது.

பல்ப்ஸ்

படத்தின் முதல் பாதி கொஞ்சம் பொறுமையை சோதிக்கின்றது.

ஒரு முறை பார்க்கலாம், அடுத்த முறை சிரிப்பு வருமா என்றால் கேள்விக்குறி தான், அதிலும் அந்த ப்ளாஷ்பேக் காட்சிகள் ஏன் சார் இப்படி.

மொத்தத்தில் சிவா ஒன் மேன் ஆர்மியாக உங்களை கண்டிப்பாக 2.30 மணி நேரம் சந்தோஷப்படுத்துவார், ஆனால், ஒரு முறைக்கு மேல் ரிப்பீட் அடிக்க முடியாது.

பாட்டு இல்லாத வாழ்வு, பாவப்பட்டது…’ என்பதை மெல்லிசை மன்னர்களும், இசைஞானிகளும், இசைப்புயல்களும் ஒவ்வொரு நிமிஷமும் உணர்த்திக் கொண்டே இருக்கிற...

பாட்டு இல்லாத வாழ்வு, பாவப்பட்டது…’ என்பதை மெல்லிசை மன்னர்களும், இசைஞானிகளும், இசைப்புயல்களும் ஒவ்வொரு நிமிஷமும் உணர்த்திக் கொண்டே இருக்கிறார்கள். தொண்டர்கள் துள்ளலுடன் வேலை பார்க்க… கட்சிகளுக்கும் பாடல்கள் தேவைதானே? அப்படி துள்ளுகிற இசையை புதிய கட்சியான மக்கள் நீதிமய்யத்திற்கு அமைத்து, கமல்ஹாசனை கவர்ந்திருக்கிறார் இசையமைப்பாளர் தாஜ்நூர்.

சினேகன் வரிகளில் ஆறு அதிரடியான பாடல்களை உருவாக்கியிருக்கிறார் அவர். இந்த பாடல்கள் வெளியீட்டு விழா காமராஜர் அரங்கத்தில் பிரமாண்டமாக நடந்தது. இங்குதான் “மாலை வேண்டாம். பொன்னாடை வேண்டாம். கட் அவுட்டுகள் வேண்டாம். பேனர்கள் வேண்டாம்” என்று ஏகப்பட்ட ‘டாம்’களை அடுக்கினார் கமல். மக்களுக்கு இடையூறு செய்யும் எதுவும் வேண்டாம் என்று சொல்கிற தலைவர்களை பார்ப்பதே அரிதான காலத்தில் கமலின் இந்த …டாம், நிச்சயம் வரவேற்புக்குரியதுதான்.

செம ஜாலி மூடில் இருந்தார் கமல் என்பதை அவரது சிற்றுரையில் உணர முடிந்தது. முக்கியமாக இந்த விழாவின் நாயகர்களான சினேகனையும் தாஜ்நூரையும் பற்றி அவர் பேசியது சம்பந்தப்பட்டவர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தியிருக்கும்.

“எல்லாருக்கும் முன்னாடி வந்தவர் சினேகன். அட்வான்ஸ் புக்கிங் பண்ணிவிட்டார். நான் எந்த ரூட்ல போகப் போறேன் என்பதை பிக்பாஸ் வீட்ல இருக்கும்போதே புரிஞ்சுகிட்டவர் அவர். நான் வெளியில் வந்ததும் முதல் வேலை உங்களோட சேர்வதுதான் என்று சொன்னார்”

“தாஜ்நூரை அவர் ஒல்லியா இருந்த காலத்திலிருந்தே அறிவேன். திறமையும் எடையும் நாளுக்கு நான் கூடிக்கொண்டே போகிறது. அவரை பார்க்கும் போதெல்லாம் நூர்னு கூப்பிடுறதில்ல. இருநூறு… முன்னூறுன்னு கூப்பிடுவேன். இதை இந்த கூட்டத்தில் சொன்னால் எடை குறைப்பார்னு நம்புகிறேன்” என்று கமல் சொல்ல கூட்டத்தில் பெருத்த கரகோஷம்.

ஒரு தலைவர், தன்னை சார்ந்தவர்களை சட்டாம்பிள்ளை மனப்பான்மையோடு அணுகாமல், நண்பனை போல அணுகுவதுதான் சரி என்று நாட்டுக்கு சொல்வதை போல இருந்தது கமலின் பேச்சு.

அமைச்சர்களும் எம்.எல்.ஏக்களும் கார் டயரை விழுந்து கும்பிட்ட ஊரில், இதெல்லாம் புதுசாகவே தெரிகிறது.

தொடரட்டும் கமலின் அன்பும் கேலியும்!

இயற்கையைச் சீரழிக்காத வகையில், இன்று தொடங்கியிருக்கும் இந்த அமர்நாத் புனித யாத்திரை எந்தவிதத் தடங்கலும், பாதிப்பும் இல்லாமல் நடைபெற வேண்டும...

இயற்கையைச் சீரழிக்காத வகையில், இன்று தொடங்கியிருக்கும் இந்த அமர்நாத் புனித யாத்திரை எந்தவிதத் தடங்கலும், பாதிப்பும் இல்லாமல் நடைபெற வேண்டும் எனப் பிரார்த்திக்கிறோம்.
அண்ணாமலையில் அனல், அமர்நாத்தில் பனியாக அருளும் ஈசன்!

இயற்கையில் இறைவனின் வடிவத்தை வணங்குவது, இந்தியர்களின் தொன்றுதொட்ட நம்பிக்கை. தூணிலும் துரும்பிலும் உறைபவன் இறைவன் என்பதை நம் புராணங்கள் தெரிவிக்கின்றன. அதிலும் சிவலிங்க வடிவத்தை உணர்த்தும் மலைகளும், பாறைகளும், புற்றுகளும் ஏன் சோற்றுப் பருக்கையும்கூட நம் வழிபாட்டுக்கு உரியவை. அனலாக அண்ணாமலையில் எழுந்த ஈசன், பனியாக எழுந்தருளும் தலமே அமர்நாத். இந்தத் தலத்தில் ஈசன் பனிலிங்க வடிவில் திருக்காட்சி அருள்கிறார். உலகாளும் ஈசனின் இருப்பிடமாக இமயம் இருந்துவருகிறது. அங்குத் தோன்றும் நதிகள், நதியில் கிடைக்கும் கற்கள், விருட்சங்கள் யாவுமே சிவவடிவாகக் காட்சியளிக்கின்றன. இமயத்தின் இதயப் பகுதியில் அமைந்த அமர்நாத் பனிலிங்கக் குகைக்கோவில் 5,000 ஆண்டுகள் பழைமையானது. சிவபெருமான் உமையம்மைக்கு வேத ரகசியங்களை எடுத்துரைத்த புண்ணிய இடம் என்று இது போற்றப்படுகிறது. சக்தி தேவியின் தொண்டை விழுந்த இடம் என்றும், அதனால் இது ஆதி சக்தி பீடங்களில் ஒன்று என்றும் வடநாட்டு பக்தர்களால் கூறப்படுகிறது.

இமயத்தின் அடியிலிருந்து 3,888 மீட்டர் உயரத்திலும், ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரிலிருந்து கிட்டத்தட்ட 141 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது அமர்நாத் பனிக்குகைக் கோயில். கடுமையான வானிலைகள், உயிரை வாட்டும் ஆபத்தான மலையேற்றங்கள், உடலை கிடுகிடுக்க வைக்கும் பனிப்பொழிவு, ஆக்சிஜன் குறைபாடு, தீவிரவாத அச்சுறுத்தல்கள்... என இந்தப் பயணம் முழுக்கவே சவாலாக இருந்தாலும், ஆண்டுதோறும் பக்தர்களின் கூட்டம் அலைமோதிக்கொண்டுதான் இருக்கிறது. இந்த ஆண்டு ஜூன் மாதம் 27-ம் தேதி அதாவது, இன்று அமர்நாத் யாத்திரை தொடங்கி, வரும் ஆகஸ்ட் 21-ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்தப் பயணத்தில் தீவிரவாதத் தாக்குதல்கள் எதுவும் நடைபெறக் கூடாது என்ற எண்ணத்தில், இரு நாள்களுக்கு முன்னர் பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்தப் பகுதியில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பார்வையிட்டார். 

உடலும் மனமும் ஒத்துழைக்கவேண்டிய கடுமையான பயணம் அமர்நாத் பனிலிங்க தரிசனப் பயணம். ஸ்ரீநகரிலிருக்கும் ராணுவ மருத்துவமனை முகாமில் ஒவ்வொரு பக்தரின் உடல்தகுதியைப் பரிசோதிக்கிறார்கள். ரத்த அழுத்தம், சர்க்கரைநோய், இதய நோய் இருப்பவர்களை இந்தப் பயணத்தில் அனுமதிப்பதில்லை. மேலும், இந்த யாத்திரையில் பங்கு பெற ஜம்மு காஷ்மீர் சுற்றுலாத்துறையிடம் காப்பீடு செய்திருக்க வேண்டும் என்பது முக்கிய விதி. பொதுவாக 2,000 முதல் 2,500 எண்ணிக்கையுள்ள பக்தர்களை தனிக்குழுவாக அனுப்பிவைப்பார்கள். ஸ்ரீநகரிலிருந்து பாகல் காவ் என்ற இடத்தைப் பேருந்தில் அடைய வேண்டும். அங்கிருந்து அமர்நாத் நடைப்பயணம் தொடங்கும். வழியெங்கும் கடுமையான பனிப்பொழிவு வாட்டினாலும் இயற்கையின் அழகு, சோர்வைப் போக்கிவிடும். பாகல் காவில் ஓய்வெடுத்துவிட்டுச் செல்லலாம். அங்குச் சுவையான ரொட்டிகள் யாத்ரீகர்களுக்கு இலவசமாக வழங்கப்படுகின்றன.

நடக்க முடியாதவர்கள் இங்கு டோலி அல்லது கோவேறுக் கழுதைகளின் மீது பயணிக்கலாம். சந்தன் வாரி, சேஷநாத் பகுதிகளைக் கடந்து சென்றால் அமர்நாத் குகையை அடையலாம். வழியெங்கும் லங்கர் என்னும் தங்குமிடம் உண்டு. நீருக்குச் சுவையான ஓடைகள் தென்படும். மருத்துவ முகாம்கள் ஆங்காங்கே இருப்பதால், உடல்நிலையை அடிக்கடி பரிசோதித்துக்கொள்ளலாம். மூச்சுத்திணறல் இருப்பவர்கள் பயணத்தை நிறுத்திவிட்டு ஓய்வெடுத்துக் கொள்ள வேண்டும். எல்லா இடங்களிலும் நமது ராணுவ வீரர்கள் இருப்பதால், அவர்களை உதவிக்கு அழைக்கலாம். இந்தப் பயணத்தில் ஆக்சிஜன் குறைவால் சிலர் மரணமடைந்ததும் நிகழ்ந்திருக்கிறது. எனவே, நிதானமாகத் தகுந்த ஆயத்தங்களோடு பயணம் செய்யவேண்டியது அவசியம். கை, கால் உறைகள், குல்லாய், ஷூ, ஸ்வெட்டர், ஜெர்கின் போன்றவற்றை இந்தப் பயணத்தில் அவசியம் உடன் எடுத்துச் செல்ல வேண்டும். ஆங்காங்கே தரப்படும் ஜல்ஜீரா என்ற மருத்துவக் குணம் கொண்ட பானத்தை அருந்துவது நல்லது.

எல்லாக் கஷ்டங்களையும் தாங்கிக்கொண்டு நடந்தால், பனி படர்ந்த மலையின் மத்தியப் பகுதியில் பெரிய குகை தென்படும். குகைக்குள் நுழைந்து உள்ளே சென்றால் அமர்நாத் லிங்கேஸ்வரன் பனிக்கட்டி வடிவில் காட்சியளிப்பார். பெரிய மேடையில் திரிசூலமும், குளிர்ந்த சூழலில் பிரமாண்ட பனிலிங்க வடிவும் காண்பவரை மெய்சிலிர்க்க வைத்துவிடும். தரிசிப்பவர்கள் எல்லோரும் தங்களை மறந்து `ஓம் நமசிவாய', `ஹர ஹர மகாதேவ்', `ஜெய் சிவாய' ,`ஜெய் போலேநாத்'... என்றெல்லாம் பரவசத்துடன் முழங்க ஆரம்பித்துவிடுவார்கள்.

எந்தத் தடையுமின்றி பனிலிங்க நாதரை பக்தர்கள் பரவசத்தோடு தரிசிக்கலாம். அண்டங்களையெல்லாம் ரட்சிக்கும் இந்த ஆதிசிவனின் வடிவத்தைக்கொண்டே பலர் இங்கு ஆரூடம் கணிப்பார்கள். சிவலிங்கம் எத்தனை பிரமாண்டமாக உள்ளதோ, அத்தனை செழிப்பு நாட்டில் உருவாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. 1945-ம் ஆண்டில் அமர்நாத்தில் விஸ்வரூப பனிலிங்கம் உருவானது. அதன் பிறகுதான் இரண்டாம் உலகப்போரின் தாக்கம் குறைந்து, உலகில் அமைதி நிலவியது என்கிறார்கள்.

புராண காலத்திலிருந்தே இந்த அமர்நாத் பனிக்குகை மற்றும் பனிலிங்கம் இருந்து வந்தாலும் காலப்போக்கில் இதன் புகழ் யாருக்கும் தெரியாமல் போனது. 16-ம் நூற்றாண்டில் ஆடு மேய்த்துக்கொண்டிருந்த ஓர் இஸ்லாமியருக்கு இந்தக் குகையும் லிங்கமும் தென்பட்ட பிறகுதான் மீண்டும் வழிபாட்டுக்கு உரியதானது என்கிறார்கள். அதனால் அந்த‌ இஸ்லாமிய‌ குடும்ப‌த்தின் வாரிசுகள்தாம் இன்றும் அமர்நாத் குகையை நிர்வகித்துவருகிறார்கள். இந்துக்களோடு இஸ்லாமியர்களும் இந்த அமர்நாத் பனிலிங்கேஸ்வரனைத் தரிசிக்கிறார்கள். இஸ்லாமியர்கள், `ப‌ர‌ப்பானி பாபா’ அதாவது, `ப‌னிக‌ட்டி பாபா’ என்று ஈசனை வணங்குகிறார்கள்.

பெருகிவரும் கூட்டம், புவி வெப்பமயமாதல், பக்தர்கள் ஏற்றும் தீப தூபங்கள் போன்ற காரணங்களால் ஆண்டுதோறும் இந்தப் பகுதியில் வெம்மை கூடி, பனிலிங்கம் சீக்கிரமே உருகிவிடுகிறது என்றும், இது அந்தப் பகுதியின் இயற்கை வளத்துக்கும் கெடுதியானது என்றும் இயற்கை ஆர்வலர்கள் தெரிவிக்கிறார்கள். இயற்கையைச் சீரழிக்காத வகையில், இன்று தொடங்கியிருக்கும் இந்த அமர்நாத் புனித யாத்திரை எந்தவிதத் தடங்கலும், பாதிப்பும் இல்லாமல் நடைபெற வேண்டும் எனப் பிரார்த்திக்கிறோம். பனிலிங்க நாதரை தரிசிக்கும் சகல பக்தர்களும் எல்லா நலமும் வளமும் பெற வாழ்த்துகிறோம்.