Home Top Ad

தற்போது மிகப் பரவலாக காணப்படும் பிரச்சனை தான் சிறுநீர் குழாய் தொற்று. பெண்களின் இந்த பிரச்சனைக்கு காரணம், சிறுநீர் பையை முழுமையாக காலியாக...

தற்போது மிகப் பரவலாக காணப்படும் பிரச்சனை தான் சிறுநீர் குழாய் தொற்று.

பெண்களின் இந்த பிரச்சனைக்கு காரணம், சிறுநீர் பையை முழுமையாக காலியாகாமை, உடல் வறட்சி, மலச்சிக்கல், சர்க்கரை நோய் போன்றவை.

இது தவிர மாதவிடாய் நாட்களில் பயன்படுத்தும் பொருட்கள் மற்றும் உள்ளாடைகளில் சிறுநீர் தங்குவதாலும் சிறுநீர் குழாய் தொற்று ஏற்படுகிறது.

இதன் அறிகுறிகள்

சிறுநீர் கழிக்கும் பொழுது வலித்தல்
அடிக்கடி சிறுநீர் கழிக்கும் எண்ணம் வருதல்
சிறுநீர் கழிக்கும் பொழுது எரிதல்
சிறுநீரில் சளி அல்லது ரத்தம் கசிதல்
உடலுறவின் போது வலித்தல்
கடும் நாற்றத்துடன் சிறுநீர் கழித்தல்
கழிவறைக்கு அடிக்கடி செல்லுதல்
சிறுநீர் பை அருகே வலித்தல்
குளிர் மற்றும் காய்ச்சல்

இப்பிரச்சனை இருக்கும் பட்சத்தில் மருந்து, மாத்திரைகளுக்கு பதிலாக கீழுள்ள குறிப்புகளின் மூலம் தொற்றை தவிர்க்கலாம்.

நாள் ஒன்றுக்கு 6 முதல் 8 குவளை நீரை அருந்த வேண்டும்.
நெல்லிக்காய், ஆரஞ்சு, எலுமிச்சை உட்பட விட்டமின் சி மற்றும் சிட்ரிக் அமிலம் அதிகம் நிறைந்துள்ள பழங்களை உண்ண வேண்டும்.
தயிர் போன்ற ப்ரோபயாட்டிக் உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ளலாம்.
வெள்ளரியில் உள்ள நீர்ச்சத்து நச்சுப்பொருட்களை வெளியேற்ற உதவுகிறது.
பூண்டில் உள்ள ஆன்டி ஆக்சிடன்ட் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் சிறுநீர் குழாய் தொற்றை குணப்படுத்துகின்றன.
சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற எண்ணம் வந்தால் உடனடியாக கழித்து விடவும், அடக்கி வைக்க வேண்டாம்.

குறிப்பாக இப்பிரச்சனையால் அவதிப்படும் போது காபி, மது மற்றும் கார்பன் உள்ள குளிர்பானங்களை அருந்த வேண்டாம்.

கரு: அப்பாவும், தாத்தாவும் தங்களது தாதா தனத்தால் இழந்த தனது பூர்வீக சொத்தான ஒரு தியேட்டரை மீட்க, காமெடியாகதாதா தனத்தை கையிலெடுக்கும் ஹீரோவே...

கரு: அப்பாவும், தாத்தாவும் தங்களது தாதா தனத்தால் இழந்த தனது பூர்வீக சொத்தான ஒரு தியேட்டரை மீட்க, காமெடியாகதாதா தனத்தை கையிலெடுக்கும் ஹீரோவே "ஜுங்கா" படக்கரு.


கதை: "டான் " எனும் கெத்தில் பந்தா தாதாக்களாகவாழ்ந்த டான் லிங்கா வின் பேரனும், டான் ரங்காவின் மகனுமாகிய ஜுங்காவிற்கு. தன் அப்பா தாத்தா, தங்களது டம்மி டான் தனத்தால் ஒரு வசதியான செட்டியாரிடம் விற்று இழந்த தங்களது பூர்வீக சொத்தான "சினிமா பாரடைஸ் "தியேட்டரை மீட்டெடுக்க., தன் தந்தையும் தாத்தாவும் செய்யாத டான் தனத்தை எல்லாம் செய்து ஒரு கோடி ரூபாய்சம்பாதித்தும் தியேட்டரை மீட்க முடியாது தவிக்கிறார் ஜுங்கா - விஜய் சேதுபதி ஒரு கட்டத்தில் பாரீஸில் வசிக்கும் செட்டியாரின் செல்ல மகள் யாழினி எனும் சாயிஷாவை கடத்தி தியேட்டரை மீட்க நண்பன் யோகி பாபுவுடன்பாரீஸ் போய் இறங்குகிறார். அங்கு இவர் சாயிஷாவை கடத்துவதற்கு முன்பே., இத்தாலிய போதை மருந்து கடத்தல் கும்பல் சாயிஷாவை கடத்த அவர்களிடமிருந்து யாழினி - சாயிஷாவை ஜுங்கா - விஜய் சேதுபதி காப்பாற்றி கடத்தி, செட்டியாரை தன் வழிக்கு கொண்டு வந்து, தன் லட்சியமான தியேட் டரை கைப்பற்றினாரா? இல்லையா...? என்பது தான் ஜுங்கா. படத்தின் கதை யும் களமும்.



காட்சிப்படுத்தல்: டாக்டர் ஐசரி வி.கணேஷ், அருண்பாண்டியன், ஆர.எம். ராஜேஷ்குமார் ஆகிய மூவருடன் இணைந்து நடிகர் விஜய் சேதுபதியேதயாரித்து நடித்திருக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதியுடன் சாயிஷா, மடோனா செபாஸ்டின், ராதாரவி, சரண்யா, "நான் கடவுள் "ராஜேந்திரன், சுரேஷ் மேனன்உள்ளிட்ட பலரும் நடிக்க., :"இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா "நாயகர்விஜய் சேதுபதியும், இயக்குனர் கோகுலும் மீண்டும் இணைந்திருக்கும் "ஜுங்கா". படத்தில் இயக்குனர் சாமான்யரசிகர்களுக்கு அவ்வளவு எளிதில் புரியாத வகையில் பல காமெடி காட்சிகளை காட்சிப்படுத்தியிருப்பதும், ஆரம்ப காட்சிகளில்., "தமிழ் படம் -1 & 2" சாயலில் பிறபடங்களைநக்கல், நையாண்டி செய்யத்துணிந்து, அதில்ஒரு தெளிவு இல்லாமல் பல காட்சிகளை காட்சிப்படுத்தியிருப்பதும்., பிறகு அப்பாணியில் இருந்து விலகி, படம் முழுக்க விஜய் சேதுபதி கத்தும்படியாக காட்சிகள் அமைத்திருப்பதும் பெரும் பலவீனம்.




கதாநாயகர்: பேரன் ஜுங்காவாக முக்கால்வாசிப் படத்திலும், தாத்தா லிங்கா, தந்தை ரங்காவாக இரண்டொரு சீன்களிலும் வெவ்வேறு கெட்-அப்களில் வரும் விஜய்சேதுபதி படம் முழுக்க பேசிக் கொண்டேயிருக்கிறார்.

"யாதும் ஊரே யாவரும் கேளீர்", "புதிய இந்தியா பிறந்துடுச்சு" என்று சம்பந்தா சம்பந்தமில்லாமல் "பன்ச் " அடித்தபடி ,தன்னை என்கவுண்டருக்கு தான் போலீஸ் அழைத்து செல்கிறது எனத் தெரிந்தும் அலட்டிக் கொள்ளாமல் அவர்களுடன் செல்வதில் தொடங்கி., அவர்களுக்கு சொல்வது மாதிரி தன் ப்ளாஷ்பேக் "டான்" தனம் மொத்தத்துடன், கூடவே தன் கண்ணாமூச்சி காதல் மற்றும் ,கஞ்சத்தனத்தையும்ரசிகர்களுக்கும்காட்சிகளாக சொல்ல ஆரம்பித்து, இறுதியில் போலீஸிடமிருந்து தப்பிப்பது வரை விஜய்சேதுபதி, வழக்கம் போல வெளுத்துகட்டியிருக்கிறார். அதிலும், "என்னை தேடி வர்றவங்களுக்கு நான் எவ்ளோ வேணும்னு இறங்கி வருவேன்...", "ஹேய் நண்பனை சாப்பிட்டே சாகடிக்காதே...." என்றெல்லாம் அவர் அடிக்கும் டயலாக் "பன்ச் " கள்பர்ஸ்னலாய் யாரையோ குறிவைத்து குத்துவது போன்றே தெரிவது படத்திற்கு பலமா? பலவீனமா சேதுபதிக்கே வெளிச்சம்!




கதாநாயகியர்: யாழினியாக, நாயகியாக 2547 கோடி சொத்துக்கு சொந்தக்காரியாகசாயிஷா பாரீஸ் வாழ் இந்திய பெண்ணாகசெம சாய்ஸ்.

சாயிஷா மாதிரியே., ஆரம்ப காட்சிகளில் கோவை பஸ் கண்டக்டர்சேதுபதியின் மற்றொரு நாயகியாக வரும்
மடோனா செபாஸ்டின், தெலுங்கு பேசும் பெண்ணாக மிரட்டியிருக்கிறார்.




காமெடியன்: "நாங்க ராயபுரம், நீங்க ஆர்ஏ புரம்... நடுவுல ஒய் ஏ மட்டும் தான் மேடம் மிஸ்ஸிங்... சாரி மேடம்... என நாயகியையும், பல காட்சிகளில் நாயகரையும் ஓட்டும் யோகி பாபு செம கிளாஸ் அப்பு!




பிற நட்சத்திரங்கள்: மாஜி தாதா சோப்ராஜாகராதாரவி, சேதுபதியின் 'தொணதொண' தாயாக சரண்யா, அந்த கெத்து காட்டும் பாட்டியம்மா ,
சேதுபதியிடம் ஜீப்பிலேயே ப்ளாஷ்பேக் கேட்கும் போலீஸ் "நான் கடவுள் "ராஜேந்திரன், காஸ்ட்லி செட்டியார் சுரேஷ் மேனன் உள்ளிட்டோரில் எல்லோரும் மிரட்டல் என்றாலும், அந்த பாட்டியம்மா செம மிரட்டல்.

டட்லியின் ஒளிப்பதிவு பனி படர்ந்த பாரீஸ் அழகை பக்காவாக படம் பிடித்து வந்திருப்பது ஆறுதல்!.

சித்தார்த் விபினின் இசையில்., "ஏய் இப்படி சூடண்டி", "ஜொலிக்கிறியா கலாய்க்கிறாயா.", "ஜுங்கா ஜுங்கா...", "நீ யாரோ யாரோ ...." உள்ளிட்ட பாடல்களும். பின்னணி இசையும் ஒஹோ இல்லை... ஒகே!




பலம்: சாயிஷாவும், யோகி பாபுவும் அந்த பாட்டியம்மாவும் மட்டுமே..
பெரும் பலம்.




பலவீனம்: "ஜுங்கா" எனும் டைட்டிலும்., விஜய் சேதுபதியின் நடை, உடை, பாவனை மற்றும் பேச்சு, வீச்சு உள்ளி ட்டவை ஒவர் அலட்டலாக தெரிவது பெரும் பலவீனம்!




இயக்கம்: கோகுலின் எழுத்து, இயக்கத்தில்., "நமக்கு சொந்தமான ஒண்ணு ஒருத்தன் கையில இருக்குன்னா, அவனுக்கு சொந்தமான ஒண்ணு நம்ம கையில இருக்கணும்.", "இதுலேயிருந்து என்ன தெரியுதுன்னா, ஒரு ' டான், ' டாவடிக்கக் கூடாதுன்னு தெரியுது....", "எங்க தமிழ் சினிமாவுல ,நாங்க புரடக்ஷன் மேனேஜருக்குதான்ரொம்ப முக்கியத்துவம் கொடுப்போம்... " ஆகிய வசனங்களும் செம காமெடி டச்சிங் ... என்பது இப்படத்திற்குகொஞ்சம் வலு சேர்க்கிறது!

ஆனாலும், பாரீஸ் போலீஸ் ஹெட்- குவாட்டர்ஸில் அத்தனை போலீஸுக்கும் போக்கு காட்டி விட்டுநாயகி சாயிஷாவுடன் நாயகர் விஜய் சேதுபதி காரில் தப்புவதும், மைனஸ் ஐந்து டிகிரி நதி நீரில் (தேம்ஸ்?) காசு மிச்சம் என்பதற்காக ஹீரோநீ ந்தி சென்றே ஹீரோயினை காப்பாற்ற முற்படுவதும் உ ள்ளிட்ட நம்ப முடியாதகாட்சிகள்... படம் முழுக்க நிரம்பியிருப்பது ரசிகனை பெரிதாய் படுத்துகின்றன.

அதே நேரம், விஜய் சேதுபதியின் "சினிமா பாரடைஸ்" தியேட்டரில் அன்று, "பாட்சா" படம் தோல்வியை தழுவியதற்குசொல்லப்பட்ட காரணம், "ஜுங்கா" பெயர் காரணம் .... உள்ளிட்ட கிண்டல், கேலி வசனங்களிலும், சம்பந்தப்பட்ட காட்சிகளிலும்... தூக்கலாகத் தெரியும்காமெடி சென்ஸ் சற்றே ஆறுதல்!

பைனல் பன்ச்: "அப்படி, இப்படி , எப்படி கூட்டிக் கழித்தாலும்., 'ஜுங்கா' - 'கிங்கா'க நினைத்த விஜய் சேதுபதியை 'தொங்க' லிலேயே விட்டிருக்கிறது!

1) என்றும் 16 வயது மார்க்கண்டையனாக வாழ ஓர் \"\"நெல்லிக்கனி.\"\" 2) இதயத்தை வலுப்படுத்த \"\"செம்பருத்திப் பூ\...

1) என்றும் 16 வயது மார்க்கண்டையனாக வாழ ஓர் \"\"நெல்லிக்கனி.\"\"
2) இதயத்தை வலுப்படுத்த \"\"செம்பருத்திப் பூ\"\".
3) மூட்டு வலியை போக்கும் \"\"முடக்கத்தான் கீரை.\"\"
4) இருமல், மூக்கடைப்பு குணமாக்கும் \"\"கற்பூரவல்லி\"\" (ஓமவல்லி).
5) நீரழிவு நோய் குணமாக்கும் \"\"அரைக்கீரை.\"\"
6) வாய்ப்புண், குடல்புண்களை குணமாக்கும் \"\"மணத்தக்காளி கீரை\"\".
7) உடலை பொன்னிறமாக மாற்றும் \"\"பொன்னாங்கண்ணி கீரை.\"\"
8) மாரடைப்பு நீங்கும் \"\"மாதுளம் பழம்.\"\"
9) ரத்தத்தை சுத்தமாகும் \"\"அருகம்புல்.\"\"
10) கேன்சர் நோயை குணமாக்கும் \"\" சீதா பழம்.\"\"
11) மூளை வலிமைக்கு ஓர் \"\"பப்பாளி பழம்.\"\"
12) நீரிழிவு நோயை குணமாக்கும் \"\" முள்ளங்கி.\"\"
13) வாயு தொல்லையிலிருந்து விடுபட \"\"வெந்தயக் கீரை.\"\"
14) நீரிழிவு நோயை குணமாக்க \"\" வில்வம்.\"\"
15) ரத்த அழுத்தத்தை குணமாக்கும் \"\"துளசி.\"\"
16) மார்பு சளி நீங்கும் \"\"சுண்டைக்காய்.\"\"
17) சளி, ஆஸ்துமாவுக்கு \"\"ஆடாதொடை.\"\"
18) ஞாபகசக்தியை கொடுக்கும் \"\"வல்லாரை கீரை.\"\"
19) ரத்த அழுத்தத்தை குணமாக்கும் \"\"பசலைக்கீரை.\"\"
20) ரத்த சோகையை நீக்கும் \"\" பீட்ரூட்.\"\"
21) ஜீரண சக்தியை அதிகப்படுத்தும் \"\" அன்னாசி பழம்.\"\"
22) முடி நரைக்காமல் இருக்க கல்யாண முருங்கை (முள் முருங்கை)
23) கேரட் மல்லிகீரை தேங்காய் ஜூஸ் கண்பார்வை அதிகரிக்கும் கேட்ராக்ட் வராது.
24) மார்புசளி, இருமலை குணமாக்கும் \"\"தூதுவளை\"\"
25) முகம் அழகுபெற \"\"திராட்சை பழம்.\"\"
26) அஜீரணத்தை போக்கும் \"\" புதினா.\"\"
27) மஞ்சள் காமாலை விரட்டும் “கீழாநெல்லி”
28) சிறுநீரக கற்களno ை தூள் தூளாக ஆக்கும் “வாழைத்தண்டு”.

 வீட்டில் �� தனியாக இருக்கும் போது மாரடைப்பு ��

�� வீட்டில் தனியாக இருக்கும் போது மாரடைப்பு வந்தால் உங்களை நீங்களே எப்படி காப்பாற்றிக்கொள்வது ❓

�� வேலை பளுவின் காரணமாக, மற்றும் இதர சில �� பிரச்சனைகள் காரணமாக உங்கள் �� மனம் மிகவும் அழுத்தத்துடன் உள்ளது,
�� நீங்கள் மிகவும் �� படபடப்பாகவும், �� தொய்வாகவும் உள்ளீர்கள்.
�� திடீரென்று உங்கள் �� இதயத்தில் அதிக "வலி" ஏற்படுவதை உணர்கிறீர்கள்.
�� அந்த வலியானது மேல் கை முதல்தோள்பட்டை வரைபரவுவதை உணருகிறீர்கள்.
�� உங்கள் வீட்டில் இருந்து �� மருத்துவமனை ஒரு ஐந்து
மைல் தூரத்தில் இருப்பதாக வைத்துக்கொள்வோம்.
�� ஆனால் உங்களால் அந்த ஐந்து மையில் தூரத்தை கடக்க முடியாது என உங்கள் �� மூளை உங்களுக்கு சொல்கிறது
�� இந்த நேரத்தில் நம் உயிரை நாமே காக்க என்ன செய்யலாம்...??
�� துரதிஷ்ட வசமாக �� மாரடைப்பு ஏற்படும் போதெல்லாம் இறப்பவர்கள் அதிகமாக தனியாக இருந்திருப்பவராக உள்ளனர்..!
✊ உங்கள் இதயம் தாறுமாறாக துடிக்கிறது..
�� நீங்கள் சுயநினைவை இழக்க வெறும் 10 நொடிகள் தான் உள்ளது.
�� இப்போது நீங்கள் செய்ய வேண்டியது:
"தொடர்ச்சியாக மிக ஆக்ரோஷமாக �� இரும்ப வேண்டும்,
�� ஒவ்வொரு முறை இரும்புவதர்க்கு முன்னரும் �� மூச்சை இழுத்து விட வேண்டும்,
�� இருமல் மிக ஆழமானதாக இருக்க வேண்டும்,
�� இருதயம் இயல்பு நிலை திரும்பும் வரையில அல்லது �� வேறொருவர் உதவிக்கு வரும் வரையிலோ
�� ஒவ்வொரு இரண்டு நொடிக்கும் மூச்சை இழுத்து விட்டு இரும்பிக்கொண்டே இருக்க வேண்டும்.
�� மூச்சை இழுத்து விடுவதினால் நுரை ஈரலுக்கு ஆச்சிஜன் சீராக செல்ல வழி வகுக்கிறது,
�� இருமுவதால் இருதயம் நிற்பதில் இருந்து தொடர்ச்சியாக துடித்துக்கொண்டே இருக்க உதவும்,
���� இதனால் ரத்த ஓட்டம் சீரடையும்.
�� இரும்புவதால் ஏற்படும்
அதிர்வினால் இதயம் சீராக துடிக்கும்"..
�� பின்னர் இருதயம் சீரடைந்ததும், அருகில் உள்ள �� மருத்துவமனைக்கு செல்லலாம்..

1. சாப்பிடும் அரை மணி நேரம் முன் தண்ணீர் குடிக்க கூடாது. 2. சாப்பிடும் போது நேராக தரையில் உட்கார்ந்து சாப்பிட வேணும் . 3. டிவி பார்த்து...

1. சாப்பிடும் அரை மணி நேரம் முன் தண்ணீர் குடிக்க கூடாது.

2. சாப்பிடும் போது நேராக தரையில் உட்கார்ந்து சாப்பிட வேணும் .

3. டிவி பார்த்து கொண்டு சாப்பிட கூடாது. முடிந்த வரை பற்களால் மென்று தின்ன வேண்டும்.

நாம் மென்று சாப்பிடும் போது நம் வாயீன் உமிழ்நீர் உடன் செல்வதால் நன்கு செரித்து விடும்

4. காலை உணவு 7 – 9 மணிக்குள் சாப்பிட வேண்டும். காலை வயிறு செரிமானம் செய்வதால் கல்லை தின்றாலும் செரித்து விடும்.

5.மதியம் உணவு 1-3 மணிக்குள் சாப்பிட வேண்டும். சிறுகுடல் செரிமானம் செய்வதால் லைட் ஆனா உணவு சாப்பிட வேண்டும்.சிருகுடலை பொருத்த வரை கூழ் ஆனா உணவை விரைவில் செரிக்கும்.

6. இரவு உணவு 7-9 மணிக்குள் சாப்பிட வேண்டும். இந்த நேரத்தில் இதயமேலுறை நேரம் என்பதால் எண்ணை பொருட்கள் சாப்பிட கூடாது. லைட் ஆனா உணவு சாப்பிட வேண்டும்.

7.சாப்பிடும் போது தாகம் எடுத்தல் ஒரு சிறிய மூடி அளவு தண்ணீர் குடிக்கலாம். சாப்பிட்டு அரை மணி நேரம் கழித்து தான், தண்ணீர் நிறைய குடிக்கலாம். நாம் சாப்பிடும் போது உடலில் ஒரு வித அமிலம் சுரக்கும் தண்ணீர் குடித்தால் அது சுரப்பது நின்று விடும்.

8. இந்த அமிலம் இல்லை என்றாலும் உணவு செரிக்கும் ஆனால் சத்துகள் பிரியாமல் அனைத்தும் தங்கி விடும்.

9. இவை தான் உடலி பெரிய நோயிகளை ஏற்படுத்தும். இந்த நோய்களின் முதல் காரணம் நாம் சாப்பிடும் முறைகள் தான்..

10. முறையான நேரத்திலும், முறையான முறையிலும் சாப்பிட்டு மருந்து இல்ல உலகை படைப்போம். இயற்கை யை நோக்கி பயணிப்போம்…

*மலர்களை ரசிக்க மட்டும் தெரிந்த நமக்கு அதன் மருத்துவ குணங்கள்* * தெரிவதில்லை தெரிந்தாலும் அதை எப்படி உபயோகிப்பது என்ற சந்தேகத்திலேயே* *அ...

*மலர்களை ரசிக்க மட்டும் தெரிந்த நமக்கு அதன் மருத்துவ குணங்கள்* *

தெரிவதில்லை
தெரிந்தாலும் அதை எப்படி உபயோகிப்பது என்ற சந்தேகத்திலேயே* *அதனை பயன்படுத்தாமல் விட்டுவிடுகிறோம்.* *அப்படிப்பட்ட மலர்களின் குணங்களும் பயன்களும் இங்கே குறிப்பிடப்பட்டுள்ளன.*

*ஆவாரம் பூ*

ரத்தத்துக்கு மிகவும் பயன் தரும் ஆவாரம் பூவை உலர்த்தி வேளை ஒன்றுக்கு 15 கிராம் நீரில் போட்டு கசாயமாக்கி பால், சர்க்கரை கலந்து காப்பியாக பருகிவர உடல் சூடு, நீரிழிவு, நீர்கடுப்பு போன்ற நோய் தீரும். ஆவாரம்பூவை உலர்த்தி கிழங்கு மாவுடன் கூட்டி, உடலில் தேய்த்து குளிக்க கற்றாழை நாற்றம் நீங்கும். தோல் வியாதிகளும் குணமாகும்.

*அத்திப்பூ*

அத்திப்பூவை சுத்தம் செய்து சிறுசிறு துண்டுகளாக்கி பாலில் காய்ச்சி சர்க்கரை சேர்த்து தினமும் சாப்பிட்டு வர சில நாட்களிலேயே உடல் சூடு, பித்த சூடு நீங்கும்.

*நெல்லிப்பூ*

உடலுக்கு குளிர்ச்சி, இதனுடன் விழுதி இலை, வாத நாராயணா இலை சேர்த்து கசாயம் வைத்து இரவில் சாப்பிட காலையில் சுகபேதி உண்டாகும். மலச் சிக்கலுக்கும் இது உகந்தது.

*செம்பருத்திப்பூ*

இருதய பலவீனம் அடைந்தவர்கள் மற்றும் அடிக்கடி மார்பு வலியால் அவதிப்படுபவர்கள் இந்தப் பூவை தண்ணீரில் போட்டு காய்ச்சி காலையும், மாலையும் குடித்து வந்தால் இருதயம் பலமடையும்.

*ரோஜாப்பூ*

இந்த மலரின் மணம் மனதிற்கு மட்டுமின்றி, இருதயத்திற்கும் வலிமை தரக்கூடியது. பாலில் ரோஜா இதழ்களை தூவி குடித்து வந்தால் நெஞ்சில் இருக்கும் சளி நீங்கும். இரத்த விருத்திக்கும் துணை செய்யும் மலர் இது.

*வேப்பம்பூ*

சிறந்த கிருமி நாசினி இது. இந்தப் பூ வீட்டில் இருந்தால் சின்னஞ்சிறு கிருமிகள் ஓடிவிடும். உடல் குளிர்ச்சிக்கு ஏற்றது இது.

*முருங்கைப்பூ*

ஆண்களுக்கு ஆண்மையை அதிகரித்து தாது பெருக்கம் செய்யும் தன்மையுடையது. வயிற்றில் உள்ள கிருமியை ஒழிக்க கூடியது.

*மல்லிகைப்பூ*

கண் பார்வையை கூர்மையாக்கும் சக்தி இதற்கு உண்டு. காம உணர்ச்சிகளை தூண்டும் தன்மை உண்டு. கிருமி நாசினியாகவும் செயல்படுகிறது.

*குங்குமப்பூ*

கர்ப்பமாக இருக்கும் பெண்கள் ஒருவேளைக்கு 5 முதல் 10 இதழ்களை இரவு பசும் பாலில் போட்டு காய்ச்சி குடித்துவர சீதள சம்பந்தமான நோய்கள் நீங்கும். பிறக்கின்ற குழந்தை நல்ல திடகாத்திரமாக இருக்கவும் குங்குமப்பூ உபயோகப்படுகிறது.

கார்த்தி நடிப்பில் கடைக்குட்டி சிங்கம் படம் செம்ம வரவேற்பை பெற்றது. இப்படம் வெளிவந்து 3 வாரம் ஆகிய நிலையிலும் பல இடங்களில் ஹவுஸ்புல் காட்சி...

கார்த்தி நடிப்பில் கடைக்குட்டி சிங்கம் படம் செம்ம வரவேற்பை பெற்றது. இப்படம் வெளிவந்து 3 வாரம் ஆகிய நிலையிலும் பல இடங்களில் ஹவுஸ்புல் காட்சிகளாக வெற்றி நடைப்போடுகின்றது.

இந்நிலையில் கடைக்குட்டி சிங்கம் உலகம் முழுவதும் ரூ 63 கோடி வசூல் செய்து விட்டதாம், கார்த்தியின் திரைப்பயணத்தில் பெஸ்ட் இது தான்.

மேலும், இப்படம் தமிழகத்தில் மட்டுமே ரூ 45 கோடியை எட்டிவிட்டதாம், இந்த வருடத்தில் அதிக லாபம் கொடுத்தது கடைக்குட்டி சிங்கம் தானாம்.

விஜய் சேதுபதி தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரம். இவர் கையில் தற்போது குறைந்தது அரை டஜன் படங்கள் இருக்கும். அந்த அளவிற்கு பல படங்களில...

விஜய் சேதுபதி தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரம். இவர் கையில் தற்போது குறைந்தது அரை டஜன் படங்கள் இருக்கும்.

அந்த அளவிற்கு பல படங்களில் கமிட் ஆகி வரும் இவர் சமீபத்தில் யுவன் தயாரித்த பியார் பிரேமா காதல் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துக்கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் விஜய் சேதுபதியை ’நீங்க தற்போது ஒரு ப்ரோபோஸ் செய்ய வேண்டும்!’ என்று தொகுப்பாளர் கேட்க, விஜய் சேதுபதி சில நொடி சங்கடமானார்.

அதை தொடர்ந்து உடனே ‘இதற்கெல்லாம் என் தலைவன் சிம்பு தான் சரியான ஆள், அவர் செய்வார்’ என்று கூறி எஸ்கேப் ஆகிவிட்டார்.