Home Top Ad

தமிழ் சினிமாவின் பீஷ்மர், இயக்குநர் சிகரம் என அழைக்கப்படும் இயக்குநர் பாலச்சந்தரின் பிறந்தநாள் இன்று. தமிழில் ஏராளமான வெற்றி படங்களை கொடுத்...

தமிழ் சினிமாவின் பீஷ்மர், இயக்குநர் சிகரம் என அழைக்கப்படும் இயக்குநர் பாலச்சந்தரின் பிறந்தநாள் இன்று.

தமிழில் ஏராளமான வெற்றி படங்களை கொடுத்தவர் இயக்குநர் பாலச்சந்தர். கைலாசம் பாலச்சந்தரான இவர் கே பாலச்சந்தர் என அழைக்கப்பட்டார்.

தஞ்சை மாவட்டம் நன்னிலத்தை அடுத்த நல்லமாங்குடியில் 1930ஆம் ஆண்டு ஜூலை 9ஆம் தேதி கைலாசம்- காமாட்சியம்மாள் தம்பதிக்கு மகனாக பிறந்தார் பாலச்சந்தர். மேடை நாடகத்துறையில் இருந்து திரைத்துறைக்கு வந்தார் பாலச்சந்தர்.

ரஜினியை அறிமுகப்படுத்தியவர்

1965ம் ஆண்டு வெளியான நீர்க்குமிழி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானார் பாலச்சந்தர். ரஜினிகாந்த்தை சினிமாவில் அறிமுகப்படுத்தியவர், கமல்ஹாசனை கதாநாயகனாக்கியவர் இந்த பாலச்சந்தர்தான்.

பிடித்த நடிகை சரிதா

இயக்குநர் பாலச்சந்தர் தமது படங்களில் அதிகமாகப் பயன்படுத்திய நடிகர்கள் ஜெமினி கணேசன், நாகேஷ், மேஜர் சுந்தரராஜன், கமலஹாசன் முத்துராமன் ஆகியோர். நாகேஷ் பாலச்சந்தருக்கு மிகவும் பிடித்த ஒரு நடிகராவார். நடிகைகளில் சௌகார் ஜானகி, ஜெயந்தி, சுஜாதா, சரிதா ஆகியோர் பாலச்சந்தருக்கு மிகவும் பிடித்தவர்கள் ஆவார்.

ஏராளமான படங்கள்

குடும்ப உறவு முறைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் படங்களை எடுத்தவர் பாலச்சந்தர். அவர் கைவண்ணத்தில் உருவான படங்களில் மேஜர் சந்திரகாந்த், பூவா தலையா, இருகோடுகள், பாமா விஜயம், எதிர் நீச்சல், சிந்து பைரவி, வறுமையின் நிறம் சிவப்பு, அவள் ஒரு தொடர்கதை, அபூர்வராகங்கள், உன்னால் முடியும் தம்பி உள்ளிட்ட ஏராளமான படங்களை இயக்கியுள்ளார் பாலச்சந்தர்.

கையளவு மனசு சீரியல்

பாலச்சந்தரின் படங்கள் ஒவ்வொன்றும் காலங்கள் கடந்தாலும் அவரின் பெயரை சொல்லும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளன. 1990களுக்குப் பிறகு கையளவு மனசு போன்ற தொலைக்காட்சித் தொடர்களை இயக்கினார். அந்த தொடர்களும் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றன.

பத்மஸ்ரீ விருது

ஏக் தூஜே கே லியே, ஜரா சி ஜிந்தகி, ஏக் நயீ பஹேலி உள்ளிட்ட இந்தி படங்களையும் இயக்கியுள்ளார் பாலச்சந்தர். 1987 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருதையும் 2010ஆம் ஆண்டு தாதா சாகெப் பால்கே விருதையும் வழங்கி மத்திய அரசு பாலச்சந்ரை கவுரப்படுத்தியது.

இன்று பிறந்த நாள்

வயது முதிர்வால் உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த இயக்குநர் சிகரம் பாலசந்தர் 2014ஆம் ஆண்டு டிசம்பர் 23ஆம் தேதி காலாமானார். அவரது 88வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு திரைத்துறை பிரபலங்கள் டிவிட்டரில் தங்களின் வாழ்த்துகளை பகிர்ந்து வருகின்றனர்.

    Remembering the "Iyakkunar Sikaram" K. BALACHANDER on his birth anniversary🎥
    One of the most verstile directors in India. Fond memories of Interacting with him during 'Muriyadi' which he produced and I played the lead in !!#legend#lifelessons pic.twitter.com/sNIyrx9YSo
    — Ganesh Venkatram (@talk2ganesh) July 9, 2019

பிறந்த நாள் வாழ்த்து

அவரது பிறந்த நாளில் "இயக்குநர் சிகரம்" கே. பாலச்சந்தர் நினைவு கூறுகிறேன்.. இந்தியாவில் மிகவும் திறமையான இயக்குநர்களில் ஒருவர். அவர் தயாரித்த 'முரியாடி' படத்தின்போது அவருடன் உரையாடியது மற்றும் அந்த படத்தில் நான் முன்னணி வகித்ததை நினைத்து பார்க்கிறேன் என நடிகர் கணேஷ் வெங்கட்ராம் டிவிட்டியுள்ளார். கே பாலச்சந்தருடன் இணைந்து எடுத்த போட்டோக்களையும் அவர் வெளியிட்டுள்ளர்.

    I miss #KB Sir.. miss talking to him..miss his calls after a debate or an interview..miss having coffee with him..miss going for walks with him..miss barging into his home only to hug him..I know he is there..somewhere..watching..guiding.. ❤️
    — KhushbuSundar ❤️❤️❤️ (@khushsundar) July 9, 2019

மிஸ் யூ கேபி சார்

இதேபோல் குஷ்பு பதிவிட்டுள்ள டிவிட்டில், ஐ மிஸ் யூ கேபி சார்.. அவருடன் பேசுவதை மிஸ் செய்கிறேன்.. இன்டர்வியூ மற்றும் விவாதங்களுக்கு பிறகு வரும் அவருடைய போன்கால்களை மிஸ் செய்கிறேன்.. அவருடன் காபி குடிப்பதை மிஸ் செய்கிறேன்.. அவருடன் நடப்பதை மிஸ் செய்கிறேன்.. அவரை கட்டியணைக்க மட்டுமே அவரது வீட்டிற்கு செல்வதை மிஸ் செய்கிறேன்... எனக்கு தெரியும் அவர் இருக்கிறார்.. எங்கேயோ.. பார்க்கிறார்.. வழிகாட்டுகிறார்.. இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

இரவு தூங்கப்போகும் முன் டிவி பார்த்துக் கொண்டே சூடான காபியை ருசித்து கொண்டிருப்போம்.  காபி, டீ மற்றும் சாக்லேட் போன்ற பானங்கள் உங்களுக்கு ர...

இரவு தூங்கப்போகும் முன் டிவி பார்த்துக் கொண்டே சூடான காபியை ருசித்து கொண்டிருப்போம்.  காபி, டீ மற்றும் சாக்லேட் போன்ற பானங்கள் உங்களுக்கு ருசியாக இருக்கலாம்.  நம் இருக்கக்கூடிய பரபரப்பான வாழ்க்கை சூழலில் சரியான நேரத்திற்கு சாப்பிடுவதோ, தூங்குவதோ நாம் செய்வதில்லை.  இதன் விளைவாக கண்ட நேரத்திலும் நமக்கு பசி ஏற்படுகிறது.  அதற்காக நாம் காபி, டீ போன்றவற்றை குடிக்கிறோம்.  இதுபோன்ற பானங்களில் கஃபைன் அதிகமாக இருக்கிறது.  கஃபைன் நிறைந்த பானங்களை நீங்கள் தவிர்த்து விட்டால் தினமும் ஆழந்த உறக்கத்தை பெறலாம்.  இரவு நேரத்தில் நீங்கள் தவிர்க்க வேண்டிய சில பானங்களை பார்ப்போம்.

தவிர்க்க வேண்டியவை:

காபி

டீ

சாக்லேட் மில்க்‌ஷேக்

சோடா

குளிர் பானங்கள்

மதுபானம்

 கஃபைன் நிறைந்த உணவுகள் உங்கள் மூளையை சுறுசுறுப்பாக வைத்திருக்கும்.  இதனால் தூக்கம் தடைப்படும்.  மேலும் இருதயம் மற்றும் நரம்பு மண்டலத்தை பாதிக்கும்.  இரவு தூங்கப்போகும் முன் பால் குடிப்பதே சிறந்தது.  பாலில் ட்ரிப்டோஃபான் இருப்பதால் மூளை செயல்பாட்டை ஆற்றுப்படுத்தி நல்ல தூக்கத்தை உண்டாக்குகிறது.  ஆகையால், தினமும் இரவு தூங்கப்போகும் முன் பால் குடிக்கலாம்.

உருப்படாமல் இருக்கும் ஒரு அரசு பள்ளியை மாவட்டத்தின் சிறப்பான பள்ளியாக மாற்றும் ஒரு தலைமை ஆசிரியையின் கதை தான் ராட்சசி. ஆர்.புதூர் அரசு மேல்...

உருப்படாமல் இருக்கும் ஒரு அரசு பள்ளியை மாவட்டத்தின் சிறப்பான பள்ளியாக மாற்றும் ஒரு தலைமை ஆசிரியையின் கதை தான் ராட்சசி.

ஆர்.புதூர் அரசு மேல்நிலைப்பள்ளி தான் படத்தின் கதைக்களம். கவனிக்கப்படாத ஒரு அரசு பள்ளி எப்படி இருக்குமோ அதற்கு கொஞ்சமும் தப்பாமல் அப்படியே இருக்கிறது ஆர்.புதூர் பள்ளியும். மோசமான ஆசிரியர்கள், மோசமான கட்டமைப்பு, ஒழுக்கமில்லா மாணவர்கள், பொறுப்பில்லா பெற்றோர்கள் என அந்தப் பள்ளியே சீர்க்குலைந்து கிடக்கிறது.

இப்படிப்பட்ட அந்த பள்ளிக்கு தலைமை ஆசிரியராக வருகிறார் கீதா ராணி (ஜோதிகா). எடுத்ததுமே அதிரடி தான். மிரண்டு போகிறது பள்ளிக்கூடம். வேலை செய்யாத ஆசிரியர்களை வெளுத்து வாங்குகிறார். மாணவர்களை ஒழுங்காக்குகிறார். பெற்றோர்களை பொறுப்பாக்குகிறார். பள்ளியை மேம்படுத்துகிறார். கூடவே ஒன்பதாம் வகுப்பில் பெயிலான 82 மாணவர்களை பத்தாம் வகுப்புக்கு பாஸ் செய்கிறார்.

இதுபோல் நல்லது செய்தால் பகை வராமல் இருக்குமா?. தனியார் பள்ளி நடத்தும் ராஜலிங்கம் (ஹரீஷ் பிதாரி) கீதா ராணியின் முயற்சிகளுக்கு தடைக்கற்களை உருவாக்குகிறார். சக ஆசிரியர்கள் 'ராட்சசி'யை வேலையைவிட்டு காலி செய்ய பார்க்கிறார்கள். இந்த பிரச்சினைகளில் இருந்து தப்பி வந்து, அந்த பள்ளியை கீதா ராணி எப்படி முதன்மை பள்ளியாக மாற்றுகிறார் என்பதே ராட்சசி சொல்லும் உணர்வுப்பூர்வமான மீதிக்கதை. அப்படி இந்த ராட்சசி யார்? எதற்காக இந்த பள்ளிக்கு வந்தார்? என்பதற்கான விடையையும் தருகிறது பின் பாதிப்படம்.

நடிப்பு ராட்சசி ஜோதிகாவுக்கு கீதா ராணி மகுடம் சூட்டி அழகு பார்த்திருக்கிறார் இயக்குனர் கவுதம்ராஜ். ஜோவிடம் இருந்து தனக்கு தேவையானதை மட்டும் கேட்டுவாங்கி படத்தில் வைத்திருக்கிறார். எனவே, இதில் நாம் வித்தியாசமான ஜோவை பார்க்க முடிகிறது.

"டீச்சர்ஸ் கொஞ்சம் அதிகமா வேலை செஞ்சா போலீசுக்கு வேலை குறைஞ்சிடும்", "நீங்க எடுக்குற மார்க்கை வெச்சு இந்த உலகம் உங்களுக்கு மார்க் போட தயாராகிடுச்சு ", தீமை நடப்பதை வேடிக்கை பார்ப்பவர்களும் அதன் பகுதியாகிறார்கள். எதிர்த்து நிற்பவர்களே வரலாறாகிறார்கள்", உள்பட நிறைய சாட்டையடி வசனங்கள் படம் முழுவதும் நிரம்பிக்கிடக்கின்றன. கவுதம்ராஜும், பாரதிதம்பியும் இந்த சமூகத்தின் மீது வைத்திருக்கும் அக்கறை வசனங்களில் வெளிப்பட்டுள்ளது.

'நம்ம ஸ்கூல்லயும் இப்படி ஒரு டீச்சர் இருந்தாங்கள்ல' என ஞாபகப்படுத்துகிறது ஒவ்வொரு கேரக்டரும். பள்ளி பருவத்தில் டீச்சர் மீது ஈர்ப்புக்கொள்ளும் கதிர்கள் தான் எத்தனை எத்தனை. 'நான் உங்கள பொண்ணு பாக்க வரட்டுமா' என கேட்டு ஹைக்கூ கவிதையாய் இடையே வந்துபோகிறான் அந்தக் குட்டி பையன்.

அரசு பள்ளிகளின் இன்றைய நிலையை அப்படியே காட்டுகிறது படம். ஆனால் முதல் பாதி படம் முழுக்க அட்வைஸ் மழை பொழிந்திருக்கிறார்கள். பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு ஒரு ஸ்கூல் எச்எம் ஆர்டர் போடுவது போன்ற சினிமாத்தனமான காட்சிகள் படத்துடன் நம்மை ஒன்றவிடாமல் தடுக்கிறது. இரண்டாம் பாதியில், தனது உணர்வுப்பூர்வமான நடிப்பால் ரசிகர்கள் கட்டிப்போடுகிறார் ஜோதிகா. இருந்தாலும், இதே பின்னணியில் ஏற்கனவே வந்த படங்களை ராட்சசி ஞாபகப்படுத்திக்கொண்டே இருக்கிறாள்.

'ஒரு ஊரில் அழகே உருவாய் ஒரு ராட்சசி இருந்தாலே' என உதடுகள் முணுமுணுக்கின்றன ஜோதிகாவை திரையில் பார்த்ததும். 'காக்க காக்க' மாயா டீச்சருக்கும், ராட்சசி கீதா ராணிக்கும் இடையே உள்ள காலகட்டம் தான் ஜோதிகாவின் நடிப்பில் தெரியும் முதிர்ச்சிக்கு காரணம். ஸ்டிரிக்ட் தலைமை ஆசிரியர், திறமையான ராணுவ அதிகாரி, அன்பான மகள், காதலின் வலியை மனதில் சுமந்து நிற்கும் ஒரு சாதாரண பெண் என பல பரிமாணங்களை ஒரே படத்தில் காட்டியிருக்கிறார் இந்த நடிப்பு ராட்சசி.

அப்பாவின் மறைவுக்கு பிறகான காட்சிகளில் அத்தனை அழுத்தமான நடிப்பு ஜோ. அவருடன் சேர்ந்து நமக்கும் கண்கள் வியர்க்குது. தன்னை சுற்றியே படம் நகர்கிறது என்பதை உணர்ந்து, நடிப்பு நெடியை எங்கும் தூக்காமல் பார்த்துக்கொண்டிருக்கிறார். இருந்தாலும், துறுதுறு ஜோதிகாவின் சீன்களை அதிகப்படித்தியிருந்தால் 'ஜோ' பேன்ஸ் ஹேப்பி எமோடிகான் போட்டிருப்பார்கள். க்ளைமாக்ஸ் காட்சியில் எதுக்கோ அடிபோட்றாப்ல தெரியுதே. ஏதோ நல்லது நடந்து சிஸ்டம் மாறினா சரி.

கொஞ்ச நேரமே வந்தாலும் நம் பழைய பாசமான ஆசிரியரை நினைவுப்படுத்திவிட்டு போகிறார் பூர்ணிமா பாக்யராஜ். ஹரீஷ் பிதாரியும், கவிதா பாரதியும் வில்லன் ரோலுக்கு கச்சிதம். பள்ளி இண்டர்வெல் பிரேக் போல், அவ்வப்போது வந்து சிரிப்புகாட்டிவிட்டு போகிறார் பிடி மாஸ்டர் சத்யன்.

பின்னணி இசையில் செலுத்திய கவனத்தை பாடல்களிலும் செலுத்தியிருக்கலாம் இசையமைப்பாளர் சியன் ரோல்டன். ஜோதிகாவின் அப்பா இறக்கும் காட்சியில் பின்னால் ஒலிக்கும் இசை கல் மனதையும் கரைத்துவிடுகிறது. ஒரு ஆக்ஷன் ஹீரோவுக்கு கொடுக்கும் அத்தனை பில்டப் பீட்சையும் ஜோவுக்காக ஒலிக்க விட்டிருக்கிறார்.

பிராமாண்ட அரசு பள்ளி, ஓட்டு வீடு, ராணுவ பயிற்சி பள்ளி என இடத்துக்கு தகுந்த மாதிரி பயணித்திருக்கிறது கோகுல் பினாயின் கேமரா. பிளோமின்ராஜின் எடிட்டிங்கில் குறையேதும் இல்லை.

பள்ளி பற்றிய படம்னாலே, மாவட்ட விளையாட்டு போட்டிகள், அதில் தனியார் பள்ளிக்கும் அரசு பள்ளிக்கும் இடையே மோதல், கோல்மால் செய்து தான் தனியார் பள்ளிகள் ஜெயிக்கும் என்பது போன்ற டெம்ப்ளேட் காட்சிகளை தவிர்த்திருக்கலாம். தனியார் பள்ளியாக இருந்தாலும், அரசு பள்ளியாக இருந்தாலும் அதில் படிப்பவர்கள் நம்பிள்ளைகள் தானே.

சுற்றி சுற்றி இங்கு சிஸ்டம் சரியில்லை என்பதைத் தான் அழுத்தமாக சொல்லுகிறது படம். ஆனால் ஒரேயொரு கீதா ராணியால் மட்டும் அந்த சிஸ்டத்தை மாற்ற முடியும் என காட்டியிருப்பது ஏற்புடையது தானா இயக்குனரே. படத்தில் சொல்வது போல் கவுரவத்துக்காக தானா நம் பிள்ளைகளை தனியார் பள்ளிகளில் படிக்க வைக்கிறோம்?. அதையும் தாண்டி இங்கு நிறைய விஷயங்கள் இருக்கின்றன. அரசு பள்ளியோ தனியார் பள்ளியோ, குறைந்த கல்விக்கட்டணத்தில் தரமான, சமமான கல்வி கிடைக்க வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பும்.

இருந்தாலும் இதேபோல் இன்னும் நூறு படங்கள் வந்தாலும் இந்த 'ராட்சசி'யை ரசிக்கலாம்.

நடிகர் கமலின் இளைய மகள் அக்ஷரா ஹாசன் தமிழ் பேச தடுமாறியது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. ராஜ்கமல் பிலிம்ஸ் சார்பில் கமல் தயாரிக்கும் படம்...

நடிகர் கமலின் இளைய மகள் அக்ஷரா ஹாசன் தமிழ் பேச தடுமாறியது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.

ராஜ்கமல் பிலிம்ஸ் சார்பில் கமல் தயாரிக்கும் படம் கடாரம் கொண்டான். விக்ரம் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் கமலின் இளையமகள் அக்ஷரா முக்கிய ரோலில் நடித்துள்ளார்.

கடராம் கொண்டான் படத்தின் டிரெய்லர் நேற்று வெளியிடப்பட்டது. இதற்காக சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் கமல், விக்ரம், அக்ஷரா உள்ளிட்டோர் கலந்துகொண்ட பிரமாண்ட விழா நடைபெற்றது.

இவ்விழாவில் அக்ஷரா ஹாசன் தமிழில் பேச மிகவும் கஷ்டப்பட்டார். பேச துவங்கும் முன் தனக்கு தமிழ் சரியாக வராது எனக் கூறிய அவர், ஒன்றிரண்டு தமிழ் வார்த்தைகளை இடையில் சொருகி, 70 சதவீதம் ஆங்கிலம், 30 சதவீதம் தமிழ் என பேசி முடிந்தார்.

அப்பாவுக்கு நன்றி:

"அப்பாவுக்கு பெரிய நன்றி. எனக்குப் பெரிய வாய்ப்பை கொடுத்திருக்கிறார். ராஜேஷ் சார் பெரிய சவாலான ரோலை கொடுத்தார். ரொம்ப நன்றி". விழாவில் அக்ஷரா பேசியது இது தான். இரண்டு வாக்கியங்களைக்கூட ஆங்கிலம் கலக்காமல் தமிழில் பேச முடியவில்லை அவரால். அக்ஷரா பேசுவதை அருகில் அமர்ந்திருந்த கமல் ரசித்து பார்த்தார்.

பல மொழி வித்தகர்:

நடிகர் கமலின் தமிழ் அறிவு பற்றி அனைவருக்கும் தெரியும். பாரதியின் கவிதைகளில் இருந்து பல தமிழ் இலக்கியங்களை கரைத்து குடித்தவர். மேலும், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளை அறிந்தவர். அவருடைய மகளாக இருந்து கொண்டு அக்ஷரா தமிழில் பேச திணறியது, எல்லோருக்கும் வியப்பையே அளித்தது.

மும்பையில் வளர்ந்தவர்:

அக்ஷரா மும்பையில் அவரது தாயுடன் வளர்ந்தவர். எனவே அவருக்கு தமிழ் பேச வராதது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை என சிலர் காரணம் கூறலாம். ஆனால் அக்கா ஸ்ருதி பேசும் அளவுக்கு கூட அக்ஷராவால் தமிழ் பேச தெரியாமல் போனது ஏன் எனும் கேள்விக்கு என்ன பதில் வரப்போகிறது என தெரியவில்லை.

விமர்சனம்:

கமல் இப்போது வெறும் நடிகர் மட்டுமல்ல. மக்கள் நீதி மய்யம் எனும் கட்சியின் தலைவரும் கூட. மேடைகளில் தனித்தமிழில் முழக்கமிடும் கமல், தனது மகளுக்கு தமிழ் கற்றுக்கொடுக்காமல் போனது ஏன் எனும் கேள்விக்கு பதில் கூறிய ஆக வேண்டும். பொதுவாக விமர்சனங்களை காதில் வாங்கிக்கொள்ளாத கமல், அக்ஷராவின் தமிழ் பற்றிய விமர்சனத்துக்கு எப்படி 'ரியாக்ட்' செய்கிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

முதல்வன் இரண்டாம் பாகத்தில் நடிகர் விஜய் நடிப்பதாக தகவல் வெளியாகி வரும் நிலையில் அவருக்கு வில்லனாக நடிக்கபோவதாக பிரபல நடிகரின் பெயர் அடிபட்...

முதல்வன் இரண்டாம் பாகத்தில் நடிகர் விஜய் நடிப்பதாக தகவல் வெளியாகி வரும் நிலையில் அவருக்கு வில்லனாக நடிக்கபோவதாக பிரபல நடிகரின் பெயர் அடிபட்டு வருகிறது.

ஏற்கனவே ஹிட்டான பல படங்களின் இரண்டாம் பாகங்கள் தற்போது வெளியாகி வருகின்றனர். காஞ்சனா, சிங்கம் உள்ளிட்ட படங்கள் மூன்று பாகங்கள் வெளியாகி ஹிட்டானது.

இந்நிலையில் இயக்குநர் ஷங்கர் முதல்வன் இரண்டாம் பாகத்தை எடுக்கவுள்ளதாக கூறினார். இதில் ஏற்கனவே ரஜினி அல்லது கமலை வைத்து எடுக்க திட்டமிட்டிருந்ததாக கூறப்பட்டது.

விஜய் ஹீரோ

ஆனால் அவர்கள் அடுத்தடுத்து படங்கள் மற்றும் அரசியல் என பிஸியாக உள்ளனர். இதனால் முதல்வன் இரண்டாம் பாகத்தை நடிகர் விஜயை வைத்து எடுக்க ஷங்கர் முடிவு செய்திருப்பதாக தெரிகிறது.

அர்ஜுன் நடிக்கிறார்?

இதற்கான கால்ஷீட்டும் விஜய் தரப்பில் ஒதுக்கப்பட்டுவிட்டது.

இந்நிலையில் நடிகர் விஜய்க்கு வில்லனாக ஆக்ஷன் கிங் அர்ஜுன் நடிப்பார் என கூறப்படுகிறது.

வில்லன் கேரக்டர்

இதுதொடர்பாக அர்ஜுனுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. வில்லனாக இல்லாவிட்டாலும் ஏதாவது ஒரு குணச்சித்திர வேடத்திலாவது அர்ஜுன் நிச்சயம் நடிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒருநாள் முதல்வர்

முதல்வன் முதலாம் பாகத்தில் நடிகர் அர்ஜுன் ஒரு நாள் முதல்வராகவும், பின்னர் முதல்வராகவும் நடித்தார். அந்தப் படம் பெரும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

தண்ணீர் பிரச்னை உலகம் முழுவதும் பரவி வரும் நிலையில் , தண்ணீரை சேமிக்க வேண்டும் என்று நகைச்சுவை நடிகர் வடிவேலு வேண்டுகோள் விடுத்துள்ளார். சி...

தண்ணீர் பிரச்னை உலகம் முழுவதும் பரவி வரும் நிலையில் , தண்ணீரை சேமிக்க வேண்டும் என்று நகைச்சுவை நடிகர் வடிவேலு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கலியாந்தூர் அய்யனார் கோயில் புரவி எடுப்பு திருவிழா நடைபெற்றது. ஊரை காவல் காக்கும் அய்யனாருக்கு புரவி எடுப்பு திருவிழா நடத்தினால் மழை பெய்யும் என்பது ஐதீகம்.  இந்த விழாவில் நகைச்சுவை நடிகர் வடிவேலு குடும்பத்துடன் கலந்து கொண்டார்.

வடிவேலுவின் மனைவிக்கு கலியாந்தூர் சொந்த ஊர் என்பதால் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வள்ளி திருமணம் நாடகத்தை தொடங்கி வைத்தார்.

விழாவில் அவர் பேசும் போது ”அய்யனாருக்கு அடிக்கடி திருவிழா நடத்தி மழையை வரவழைக்க வேண்டும், குடிநீர் பிரச்னை எல்லா இடங்களிலும் உள்ளது. அதனை வீணாக்காமல் சேமிக்க இளைஞர்கள் முன் வரவேண்டும் கிராமத்தின் பாரம்பரியமும், பண்பாடும் திருவிழாக்களில் உள்ளது. அதில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.”

பின்னர்,  கிராம மக்கள் வேண்டுகோளை ஏற்று, எட்டணா இருந்தா என்பாட்டை கேட்கும் என்ற பாடலை பாடி, நடனமாடினார்.

ஹைலைட்ஸ்     ஜூலை 5, 2019 காலை 11 மணிக்கு 2019-20 மத்திய பட்ஜெட் தாக்கல்.     நிர்மலா சீதாராமன் முதல் முறையாக பட்ஜெட் உரையாற்றுகிறார். 2019...

ஹைலைட்ஸ்

    ஜூலை 5, 2019 காலை 11 மணிக்கு 2019-20 மத்திய பட்ஜெட் தாக்கல்.
    நிர்மலா சீதாராமன் முதல் முறையாக பட்ஜெட் உரையாற்றுகிறார்.

2019 மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதை முன்னிட்டு பட்ஜெட் உரை தொடங்கும் நேரம், நேரடி ஒளிப்பரப்பு, லைவ் அப்டேட் மற்றும் எதிர்பார்க்கப்படும் அறிவிப்புகள் பற்றிய முழுமையான தகவல்களைப் அறிந்துகொள்ளுங்கள்.

பாஜக தொடர்ந்து இரண்டாவது முறையாக பொதுத்தேர்தலில் அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான புதிய அரசின் முதல் பொது பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய இருக்கிறார்.

வரும் ஜூலை 5ஆம் தேதி இந்த ஆண்டுக்கான பட்ஜெட் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த பட்ஜெட் மீதான எதிர்பார்ப்புகள் சாமானியர்களிடமும் பல துறைகளைச் சேர்ந்தவர்களிடமும் அதிகமாக உள்ளது. பட்ஜெட் தாக்கலுக்கு முன்னதாக பொருளாதார ஆய்வறிக்கை ஜூலை 4ஆம் தேதி (நாளை) சமர்ப்பிக்கப்பட உள்ளது. மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் கே. வி. சுப்ரமணியன் இதனைத் தாக்கல் செய்கிறார்.

2019 பட்ஜெட் உரை தொடங்கும் நேரம்

சுதந்திர இந்தியாவில் முழு நேர நிதி இலாகா பொறுப்பை மட்டும் வகிக்கும் முதல் பெண் நிதி அமைச்சர் என சிறப்பித்துக் கூறப்படுகிறார் நிர்மலா சீதாராமன். 59 வயதாகும் இவர் ஏற்கெனவே வர்த்தகத்துறை, பாதுகாப்புத்துறை என முக்கிய துறைகளின் அமைச்சராக இருந்தவர். பிரதமர் நரேந்திர மோடியின் முதல் மத்திய அமைச்சரவையில் குறிப்பிடத்தக்க அங்கமாகத் திகழ்ந்தார். இவர் வெள்ளிக்கிழமை (ஜூலை 5, 2019) காலை 11 மணிக்கு மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்வார்.

2019 பட்ஜெட் லைவ் அப்பேட்

2019 மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யும் நிகழ்வு தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் நேரடி ஒளிப்பரப்பு செய்யப்படும். அத்துடன் பட்ஜெட் குறித்து சமயம் தமிழ் மூலம் லைவ் அப்பேட் பெறலாம். பட்ஜெட் சிறப்புப் பகுதியில் அனைத்து துறை சார்ந்த அறிவிப்புகளையும் உடனுக்குடன் அறிந்துகொள்ளலாம்.

2019 பட்ஜெட் கேள்வி நேரம்

ஜூலை 26ஆம் தேதி வரை இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும். அப்போது பட்ஜெட் மீதான அவை உறுப்பினர்களின் கேள்விகளுக்கு நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலளிப்பார்.

2019 பட்ஜெட் - முக்கிய எதிர்பார்ப்புகள்

1. வருமான வரி விலக்கு உச்ச வரம்பு 7.5 லட்சம் வரை உயர்த்தப்படலாம்.

2. விவசாயிகளுக்கு கிசான் கிரெடிட் கார்டு மூலம் வட்டியில்லா கடன் வழங்கும் அறிவிப்பு.

3. பெண்கள் தொழில் தொடங்குவதை ஊக்குவிக்க 25 முதல் 50 சதவீதம் வரை வட்டியில்லா கடன் திட்டம்.

4. 2022க்குள் 10,000 விவசாயிகள் உற்பத்திக் குழுக்களை அமைக்கும் பாஜகவின் வாக்குறுதிக்க உறுதுணையாக விவசாய உற்பத்திப பொருட்களுக்கு விலை உயர்வு.

5.மானிய விலையில் சர்க்கரையை மீண்டும் பொது விநியோக திட்டத்தில் கொண்டுவரலாம்.

6. பரம்பரை வரி, விலையில்லா கடன் பத்திரம் ஆகியவை கொண்டுவரப்படலாம். காலி மனை வரி அறிமுகப்படுத்தப்படலாம்.

7. ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் சுகாதார வசதி பெறுபவர்கள் எண்ணிக்கையை அதிகமாக்கும் அறிவிப்பு வெளியாகலாம்.

8. ஜிஎஸ்டியில் பதிவு செய்த நிறுவனங்களுக்கு 10 லட்சம் ரூபாய் விபத்துக் காப்பீடு வழங்கும் திட்டம்.