Home Top Ad

சில ஹார்ட் அட்டாக் வருவதற்கான காரணங்கள் நமக்கு தெரியும். உடல் பருமன், நீரிழிவு என அடுக்கிவிடலாம். ஆனால் நாம் நினைத்தே பார்க்காத பல காரணங்கள...

சில ஹார்ட் அட்டாக் வருவதற்கான காரணங்கள் நமக்கு தெரியும். உடல் பருமன், நீரிழிவு என அடுக்கிவிடலாம். ஆனால் நாம் நினைத்தே பார்க்காத பல காரணங்கள் இருக்கின்றன. அதக்கேட்டாலே பீதியாகிடுவீங்க...

வயிறுமுட்ட சாப்பிட்டா, ஐஸ் வாட்டர் குடிச்சா, காலையில் எழும்போது என நாம்இதுவரை நினைத்துக்கூட பார்க்க முடியாத காரணங்களால் கூட ஹார்ட் அட்டாக் வருமாம். நீங்க இதையெல்லாம் சரிசெய்யலேன்னா, திடீர் ஹார்ட் அட்டாக் வரலாம், ஜாக்கிரதை.!

ஒழுங்கான தூக்கம் இல்லாமல் இருப்பது, மனச்சோர்வையும், எல்லோரிடமும் சிடுசிடுவென எரிச்சலடைய வைப்பதோடு மட்டுமல்லாமல், ஹார்ட் அட்டாக் ஏற்படும் அபாயத்தை, பெருமளவு உண்டாக்கி விடுகிறது.

தினமும் ஆறுமணி மணித்தியாளம் குறைவாக தூங்குபவர்களுக்கு, ஆறிலிருந்து எட்டு மணி நேரம் தூங்குபவர்களைவிட, இருமடங்கு இருதய பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாக, ஒருஆய்வு கூறுகிறது.

மருத்துவர்கள் சரியான காரணத்தை அறியாவிட்டாலும், அதிகநேரம் தூங்காமல் இருப்பதால், இரத்த அழுத்தம் அதிகரித்து, உடல் அழற்சி ஏற்படுவது, இதயத்துக்கு நன்மை தராத ஒன்றாகும்.

ஒற்றைத் தலைவலியும், பிற்காலத்தில், இருதய பாதிப்பை ஏற்படுத்தும் ஆபத்தைத் தரும். ஆரா ஒளிவட்டமுள்ள தியானம் செய்பவர்கள், தலைவலி இல்லாதவர்கள் போன்றோரை பாதிப்பதைவிட, அதிகமாக ஒற்றைத்தலைவலி உள்ளவர்களுக்கு, மாரடைப்பு கோளாறுகள் ஏற்படக்கூடும்.

வினோதமான காட்சிகள், சப்தம், உணர்வுகள் போன்ற தலைவலிக்கு முன் தோன்றும் வித்தியாசமான அனுபவங்கள், இருதய பாதிப்பின் கடுமையான அறிகுறிகளாகக் கருதப்படுகிறது.

குளிர்காலத்தில் அதிகநேரம் வெளியில் இருப்பது, உடல் இரத்த நாளங்களை சுருக்கி, இதயத்துக்கு செல்லும் இரத்த ஓட்டத்தை, தடை செய்கிறது. இதனால், உடலை கதகதப்பாக வைக்க, இதயம் சிரமப்படுகிறது.

    பனிக்காலங்களில், ஐஸ் கட்டியில் விளையாடுவது, பனியில் ஊர் சுற்றுவது, போன்ற வெளிப்புற செயல்களைக் குறைப்பதன் மூலம், மாரடைப்பு உள்ளிட்ட இதய பாதிப்புகளைத் தவிர்க்க முடியும்.

மூக்குமுட்ட சாப்பிடுவதும், இரண்டாவது, மூன்றாவதுமுறை குழம்பு, பாயசம் வாங்கி சாப்பிடுவது, வயிற்றைமட்டும் பாதிக்காது, மனப்பதட்டத்தை ஏற்படுத்தும் நோர்பின்பிரைன் ஹார்மோனை அதிகம் சுரக்கவைத்து, அதனால், இரத்த அழுத்தமும் இதயத்துடிப்பும் அதிகரித்து, ஹார்ட் அட்டாக்கை ஏற்படுத்திவிட வாய்ப்புகள் ஏற்படும்.

கொழுப்புநிறைந்த அசைவ உணவுகள், இரத்தக்கொழுப்பை சட்டென அதிகரித்து, இரத்த நாளங்களை பாதிக்கக்கூடியவை.

தமிழ்நாட்டில் பட்டிமன்றம் என்றாலே ரசிகர்களுக்கு ஞாபகம் வருவது ஒரு சிலர் தான். அதில் முக்கியமானவர் திண்டுக்கல் ஐ.லியோனி. அவரை தான் சிவாஜி ...

தமிழ்நாட்டில் பட்டிமன்றம் என்றாலே ரசிகர்களுக்கு ஞாபகம் வருவது ஒரு சிலர் தான். அதில் முக்கியமானவர் திண்டுக்கல் ஐ.லியோனி.

அவரை தான் சிவாஜி படத்தில் ஸ்ரேயாவுக்கு அப்பாவாக நடிக்க ஷங்கர் அணுகினாராம். ஆனால் சில காரணங்களால் அவர் அந்த வாய்ப்பை மறுத்துவிட்டாராம். அதன்பின்தான் ஷங்கர் பட்டிமன்றம் ராஜாவை அந்த ரோலில் நடிக்க வைத்தாராம்.

இந்நிலையில் அவர் தற்போது அடுத்து வடிவேலுவின் அடுத்த படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடிக்கிறாராம். சீனு ராமசாமியின் அடுத்த படத்திலும் அவர் கமிட் ஆகியுள்ளாராம். 

தளபதி விஜய் உலகம் முழுவதும் லட்சக்கணக்கான தமிழ் நெஞ்சங்களை கவர்ந்தவர். இவர் படங்கள் வருகின்றது என்றால் ரசிகர்கள் மட்டுமின்றி திரையரங்குகளே ...

தளபதி விஜய் உலகம் முழுவதும் லட்சக்கணக்கான தமிழ் நெஞ்சங்களை கவர்ந்தவர். இவர் படங்கள் வருகின்றது என்றால் ரசிகர்கள் மட்டுமின்றி திரையரங்குகளே கொண்டாடும்.

ஏனெனில் ரஜினிக்கு பிறகு விஜய்க்கு தான் அதிக ரசிகர்கள் கூட்டம் இருந்து வருகின்றது, குடும்பத்துடன் பலரும் வந்து இவருடைய படத்தை பார்த்து செல்கின்றனர்.

இந்த நிலையில் மெர்சல் படம் சிறந்த வெளிநாட்டு படம் பிரிவில் பிரிட்டனின் தேசிய விருதை வென்றுள்ளது.

அதே நேரத்தில் விஜய்யை சிறந்த துணை நடிகர் பிரிவில் நாமினி செய்துள்ளனர், மெர்சல் படத்தின் நாயகனே விஜய் தான்.

அப்படியிருக்க அவரை துணை நடிகர் பிரிவில் நாமினி செய்தது அவரை அசிங்கப்படுத்தும் நோக்கமா? என்று விஜய் ரசிகர்கள் செம்ம கோபத்தில் உள்ளனர்.

பப்புவா நியூ கினியா தீவுகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால், அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கம் ...

பப்புவா நியூ கினியா தீவுகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால், அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நிலநடுக்கம்

தென் மேற்கு பசிபிக் நாடுகளில் ஒன்றான பப்புவா நியூ கினியாவில், இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது, ரிக்டர் அளவுகோலில் 6.9 ஆக பதிவாகியுள்ளது. இதன் காரணமாகக் கட்டடங்கள் குலுங்கியதால், பீதியடைந்த மக்கள் சாலைகளுக்கு வந்தனர்.

இந்த நிலநடுக்கத்தினால், பசிபிக் கடல் பகுதியில் பூமிக்கடியில் சுமார் 300 கி.மீ ஆழத்தில் சுனாமி ஏற்பட வாய்ப்புள்ளதாக பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் அறிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேத விவரங்கள்குறித்து இன்னும் அதிகாரபூர்வ தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

"கலைமாமணி" "நகைச்சுவை தென்றல்" திண்டுக்கல் ஐ. லியோனியின் "நகைச்சுவை குதிரையில் என் சிந்தனை பயணம்"நூல் வெளியீட...

"கலைமாமணி" "நகைச்சுவை தென்றல்" திண்டுக்கல் ஐ. லியோனியின் "நகைச்சுவை குதிரையில் என் சிந்தனை பயணம்"நூல் வெளியீட்டு விழா! திரைப்பட நடிகரும், பட்டிமன்றநடுவரும், மேடைபேச்சாளருமான திண்டுக்கல் ஐ. லியோனி ஒரு புத்தகம் எழுதி உள்ளார்.

1992ஆம் ஆண்டு வத்தலக்குண்டு அருகே உள்ள காளி அம்மன் கோவில் மேடையில் முதன் முதலில் நகைச்சுவை பேச்சாளராக அறிமுகமானார்.பின்னர் 1996 ஆம் ஆண்டு முதல் தொலைக்காட்சிகளிலும், வெளிநாடுகளிலும் சுமார் 5000 க்கு‌ம் மே‌ற்ப‌ட்ட பட்டிமன்றங்களை நடத்தி இருக்கிறார்.

கடந்த ஐந்து ஆண்டுகளாக கலைஞர் தொலைக்காட்சிஇவரை நடுவராக்கி "நல்லா பேசுங்க நல்லதையே பேசுங்க" என்ற பேச்சரங்க நிகழ்ச்சியை 250 வாரங்களாக ஞாயிறு தோறும் காலை 10 மணிக்கு ஒளிபரப்பி வருகிறது.

இந்த நிகழ்ச்சியில் இவர் பேசிய நகைச்சுவை ததும்பிய கருத்துக்களை தொகுத்து, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள "அசசி" பதிப்பகத்தார் புத்தகமாக கொண்டு வந்துள்ளனர். இந்த புத்தகத்திற்கு திமுக. செயல் தலைவரும், சட்ட மன்ற எதிர்க்கட்சி தலைவருமான மாண்புமிகு மு. க. ஸ்டாலின், பேராசிரியர் சுப. வீரபாண்டியன், வித்தக கவிஞர் பா. விஜய், உணர்ச்சிக்கவிஞர் யுகபாரதி ஆகியோர் அணிந்துரை வழங்கி உள்ளனர்.

லியோனி எழுதிய அந்த புத்தகத்தின் வெளியீட்டு விழா சென்னையில் தேனாம்பேட்டையில் உள்ள அன்பகம் அரங்கத்தில்திமுக பொதுச்செயலாளர் க. அன்பழகன் புத்தகத்தை வெளியிட திரைப்பட இயக்குநர் சீனுராமசாமி பெற்றுக் கொண்டார். சட்டமன்ற உறுப்பினர் ஜெ. அன்பழகன், கவிஞர்கள் பா. விஜய், யுகபாரதி குமரிஆதவன் வாழ்த்தி பேசினார்கள்.

திண்டுக்கல் ஐ. லியோனி தனது ஏற்புரையில்,  "கங்கா கவுரி படத்துல அருண்குமார், வடிவேல் இருவருக்கும் தந்தை யாக நடித்தேன். ரசிகர்கள் நல்ல வரவேற்பு அளித்தனர். பின்னர் நான் பட்டிமன்றம், மேடைபேச்சு, தொலைக்காட்சி ஆகியவைகளில் பிஸியாக இருந்ததால் சினிமாவில் கவனம் செலுத்த முடியவில்லை.

ரஜினி நடிச்ச" சிவாஜி " படத்துல பட்டிமன்ற பேச்சாளர் ராஜா நடிச்ச கேரக்டர் ல நடிக்க என்னைதான் முதல்ல கேட்டாங்க. அப்ப நேரம் இல்ல.  நீண்ட இடைவெளிக்குப் பிறகு வடிவேல் என்னிடம், நாம மறுபடியும் ஒருபடத்தில் சேர்ந்து நடிக்கலாம் என்று கூறினார். அப்புறம் டைரக்டர் சீனுராமசாமியும் அவரோட படத்துல நடிக்க கேட்டு இருக்கிறார். மறுபடியும் நான் சினிமாவுல நடிக்க அடுத்த ரவுண்டுக்கு தயாராயிட்டேன்.

தொடர்ந்து சினிமா, அரசியல்னு ட்ராவல் பண்ண ரெடியாயிட்டேன். " இவ்வாறு பேசினார். 

கடைசி நிமிஷம் வரைக்கும் ரப்பராக இழுத்துவிட்டு, காவிரி மேலாண்மை வாரிய விவகாரத்தில் புளியேப்பம் விடும் போலிருக்கிறது மத்திய அரசு. ஆட்டுவிக்கி...

கடைசி நிமிஷம் வரைக்கும் ரப்பராக இழுத்துவிட்டு, காவிரி மேலாண்மை வாரிய விவகாரத்தில் புளியேப்பம் விடும் போலிருக்கிறது மத்திய அரசு. ஆட்டுவிக்கிறவன் அவன். ஆடுகிறவன் நான்… என்கிற நிலையிலிருக்கும் மாநில அரசு, என்னதான் ஒப்புக்கு சப்பாணியாக இருந்தாலும் ஒரு முடிவெடுக்க வேண்டுமே?

அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. இந்த நிலையில்தான் பிரஸ்சை சந்தித்தார் கமல்ஹாசன். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கிற விஷயத்தில் மத்திய அரசு நடந்து கொள்ளும் முறையை கண்டித்தவர், அப்படியே மாநில அரசுக்கும் குட்டு வைத்தார். இருந்தாலும் முதல்வர் பழனிச்சாமியை நேரில் சந்தித்து மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க சொல்ல விரும்புகிறாராம். முறைப்படி முதல்வர் அலுவலகத்தில் முன் அனுமதி கோரப்பட்டிருப்பதாக கூறினார்.

ஆனால் நேரம் கிடைக்கும் போதெல்லாம் கமல்ஹாசனையும் ரஜினிகாந்தையும் விமர்சித்து வரும் எடப்பாடி பழனிச்சாமியும், அவரது அமைச்சர் பெருமக்களும், இந்த சந்திப்பை விரும்புவார்களா? முன் அனுமதி கொடுக்கப்படுமா? என்பது டவுட்டுதான். அரசியலில் துளி கூட பெயர் எடுத்துவிடக் கூடாது என்று முனைப்பு காட்டும் இவர்கள், இந்த சந்திப்பினால் கமல்ஹாசனுக்கு நல்ல பெயர் சென்றுவிடக் கூடாது என்று நினைப்பார்கள் அல்லவா?

இது ஒருபுறம் இருக்க, தூத்துத்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்கள் போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக வரும் 1 ந் தேதி ஞாயிற்றுக் கிழமை கமல் அங்கு செல்கிறார்.

நடிகர் ஆர்யாவுக்கு தற்போது பெண்பார்க்கும் படலம் தீவிரமாக நடந்து வருகிறது. இதற்காக புதியதாக வந்துள்ள தமிழ் தொலைக்காட்சி ஒன்று மும்பரமாக இறங்...

நடிகர் ஆர்யாவுக்கு தற்போது பெண்பார்க்கும் படலம் தீவிரமாக நடந்து வருகிறது. இதற்காக புதியதாக வந்துள்ள தமிழ் தொலைக்காட்சி ஒன்று மும்பரமாக இறங்கியுள்ளது.

இதனையடுத்து, முதல் முயற்சியாக ஆர்யா தன் வருங்கால மனைவியை தேடும் விதத்தில் “எங்க வீட்டு மாப்பிள்ளை” என்ற ரியாலிட்டி ஷோவில் பங்கேற்று வருகிறார்.

அதில் துவக்கத்தில் 16 போட்டியாளர்கள் இருந்த நிலையில் தற்போது பலரும் வெளியேற்றப்பட்டு வெறும் 7 பெண்கள் மட்டுமே போட்டியில் உள்ளனர்.

இந்நிலையில், நாளை மேலும் ஒரு போட்டியாளர் வெளியேற்றப்படவுள்ளார். இருவரில் ஒருவர் விட்டு கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கை முன் வைக்கப்படுகின்றது. இதன்போது, ஆர்யாவின் முகமும் திடீர் என்று அதிர்ச்சியடைவது போல காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை, நேற்றைய தினம் அகாதா வெற்றி பெற்றிருந்தார். இதனை பார்த்த மிகுதி ஏழு பெண்களும் சோகத்தில் மூழ்கி விட்டனர்.

இதேவேளை, இவர் ஆர்யாவை திருமணம் செய்துகொள்வதற்காக இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவில்லை என்றும் , கேமரா முன்பு எப்போதும் போலியாக நடிக்கிறார் எனவும் மற்ற பெண்கள் இவர் மீது குற்றம்சாட்டியது குறிப்பிடத்தக்கது.