Home Top Ad

பேராசிரியர்கள் கேட்டதால் மாணவிகளை பாலியல் தொழிலுக்கு அழைத்ததாக சர்ச்சைக்குள்ளான பேராசிரியை நிர்மலா தேவி தெரிவித்துள்ளார். மாணவிகளை பாலியல...

பேராசிரியர்கள் கேட்டதால் மாணவிகளை பாலியல் தொழிலுக்கு அழைத்ததாக சர்ச்சைக்குள்ளான பேராசிரியை நிர்மலா தேவி தெரிவித்துள்ளார்.

மாணவிகளை பாலியல் தொழிலுக்கு அழைத்ததாக கைதான அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி மதுரை சிறையில் அடைக்கப்பட்டார். அவரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் நேற்று முதல் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் விருதுநகர் சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில், விசாரணை அதிகாரியான சூப்பிரண்டு ராஜேஸ்வரி, உதவி அதிகாரியான துணை சூப்பிரண்டு சாஜிதா பேகம் ஆகியோர், பேராசிரியை நிர்மலா தேவியிடம் விசாரணை நடத்தினர். இரவு 8.30 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை இந்த விசாரணை நடந்தது.

அப்போது பெரும்பாலான கேள்விகளுக்கு நிர்மலா தேவி மவுனமாகவே இருந்துள்ளார். மாணவிகளிடம் யாருடைய தூண்டுதலின் பேரில் பேசினீர்கள் என கேட்டபோது, காமராஜர் பல்கலைக்கழக உதவி பேராசிரியர்கள் கருப்பசாமி, முருகன் ஆகியோர் தான் ஆசை வார்த்தை கூறி தன்னை தூண்டியதாக திடுக்கிடும் தகவலை தெரிவித்துள்ளார்.

அவரது வாக்குமூலத்தை பொலிசார் வீடியோவில் பதிவு செய்தனர். இதனிடையே பேராசிரியை நிர்மலா தேவியிடம் முழுமையாக விசாரணை நடத்திய பிறகே, வழக்கின் முழு விவரம், அதில் தொடர்புடையவர்கள் பற்றி தெரியவரும் என சிபிசிஐடி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அவர் பல்கலைக்கழகம் வந்து சென்றபோது பதிவு ,செய்யப்பட்ட சி.சி.டி.வி. கமெரா பதிவுகளை சேகரித்து வருகிறோம் என்றும் அந்த அதிகாரி கூறினார். பேராசிரியை நிர்மலா தேவிக்கு வேறு யாருடன் தொடர்பு உள்ளது? என்பது குறித்தும் விசாரித்து வருகிறோம் என்றும் சிபிசிஐடி அதிகாரி கூறியுள்ளார்.

பேராசிரியை நிர்மலா தேவியிடம் 2-வது நாளாக இன்றும் சி.பி.சி.ஐ.டி. பொலிசார் விசாரணை நடத்தினர். அவர் கொடுக்கும் தகவலின் அடிப்படையில் மதுரை அழைத்துச் செல்ல இருப்பதாக சி.பி.சி.ஐ.டி. துணை சூப்பிரண்டு முத்து சங்கரலிங்கம் தெரிவித்துள்ளார்.

இவர் மாணவிகளை எவ்வாறு மூளைச் சலவை செய்கிறார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. 'நிர்மலா தேவி, கல்லூரியில் எல்லோரிடமும் அன்பாகப் பழகுவார். குறிப்பாக மாணவிகளிடம் உரிமையோடு பேசுவார். அப்போது, மாணவிகளின் குடும்பப் பின்னணிகுறித்தும் விசாரிப்பார். அதன்பிறகு, அதில் சில மாணவிகளின் செல்போன் நம்பர்களை வாங்கிப் பேசுவார். அதனால், அவரை எளிதில் நம்பிப் பழகிவிடுவார்களாம்.

தினமும் மெஸேஜ் அனுப்புவார். பதில் அனுப்பாதவர்களிடம் உரிமையாகப் பேசி பதில் அனுப்பச்சொல்வார். அவர்களுடைய எதிர்காலத்தில் அக்கறை கொண்டவர்போல அட்வைஸ் செய்வார். இப்படி சில வாரப் பழக்கத்துக்குப் பிறகு, வாட்ஸ்அப், சாட்டிங் என வேறு ரூட்டில் உரையாடல் பயணிக்கும். அதற்கு எதிர்த்தரப்பிலிருந்து வரும் ரியாக்‌ஷனைப் பொறுத்து, நிர்மலா தேவி தன் பேச்சுவார்த்தைத் தொனியை அமைத்துக்கொள்வாராம்.

கல்லூரி வளாகத்துக்குள், நிர்மலா தேவியைத் தெரியாதவர்கள் யாருமே இல்லை என்ற அளவுக்கு தகவல்கள் கிடைத்திருக்கின்றன. மேடம், அந்த அளவுக்கு கல்லூரியில் பிரபலம். எப்போதும் அவரைச் சுற்றி ஒரு கூட்டம் இருக்கும். எப்போதுமே, ’கண்ணுங்களா’ என்றுதான் மாணவிகளை அழைப்பார் என்று தெரியவந்துள்ளது.

கம்பு, கேழ்வரகு, தினை, சாமை உள்ளிட்ட சிறுதானியங்களை, கடந்த பல ஆண்டுகளாகவே மத்திய அரசு கண்டுகொள்ளாமலே இருந்தது. இவற்றின் உற்பத்தி, விலை நிர்...

கம்பு, கேழ்வரகு, தினை, சாமை உள்ளிட்ட சிறுதானியங்களை, கடந்த பல ஆண்டுகளாகவே மத்திய அரசு கண்டுகொள்ளாமலே இருந்தது. இவற்றின் உற்பத்தி, விலை நிர்ணயம், சந்தை வாய்ப்புகள் உள்ளிட்ட எதிலும் ஆட்சியாளர்கள் ஆர்வம் காட்டாமலே இருந்துவந்தார்கள். தற்போது, பொதுமக்களிடம் சிறுதானியங்கள்குறித்த விழிப்புஉணர்வு நாளுக்குநாள் அதிகரித்துவருவதால், தற்போது மத்திய அரசு இதில் சிறப்புக் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளது. பொது விநியோகத் திட்டத்தில் கம்பு, கேழ்வரகு, சோளம், தினை உள்ளிட்ட சிறுதானியங்களைச் சேர்க்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது என சமீபத்தில் மத்திய வேளாண்மைத் துறை அமைச்சர் ராதாமோகன் சிங் அறிவித்தார். பொது விநியோகத் திட்டத்தில் சிறுதானியங்களைச் சேர்ப்பது தொடர்பாக, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நிதி ஆயோக் மற்றும் மத்திய வேளாண்மைத் துறையின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் சிறுதானியங்கள்குறித்த பல்வேறு அம்சங்கள் விவாதிக்கப்பட்டன. நிதி ஆயோக் அளித்த பரிந்துரைகளின் அடிப்படையில், பொது விநியோகத் திட்டத்தில் சிறுதானியங்களை வழங்க மத்திய வேளாண்மைத் துறை திட்டமிட்டுள்ளது. 2018-ம் ஆண்டை சிறுதானிய ஆண்டாகவும் அறிவித்துள்ளது. 


சிறுதானியம்

இதற்கு, பல்வேறு தரப்பினரிடமிருந்தும் வரவேற்பு பெருகிவருகிறது. தமிழ்நாட்டில் சிறுதானியம் சாகுபடியை மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள பாமரர் ஆட்சியர் கூடத்தின் ஒருங்கிணைப்பாளர் சரவணன் இதுகுறித்து நம்மிடம் பேசும்போது, ‘50 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டில் பரவலாக அதிக அளவில் சிறுதானியங்கள் சாகுபடிசெய்யப்பட்டு வந்தது. நம் முன்னோர்களின் முதன்மை உணவாகவே கம்பு, கேழ்வரகு உள்ளிட்ட சிறுதானியங்கள் திகழ்ந்தன. காலப்போக்கில், அடுத்தடுத்த தலைமுறையினரின் உணவுப் பழக்கம் மாறியதால், விவசாயிகள் இவற்றை சாகுபடிசெய்வதைக் கைவிடத் தொடங்கினார்கள். தமிழ்நாட்டில் சிறுதானிய பயிர்களைப் பார்ப்பதே அரிது என்ற நிலை உருவாகிக்கொண்டிருந்தது. இந்நிலையில்தான் நம்மாழ்வார் மற்றும் பசுமை விகடனின் தொடர் முயற்சிகளால் சிறுதானியச் சாகுபடி புத்துயிர் பெறத் தொடங்கியது. கம்பு, கேழ்வரகு, சாமை, தினை, குதிரை வாலி, வரகு ஆகியவற்றின் சாகுபடி முறைகள்குறித்தும் இதன் மகத்துவம்குறித்தும் விரிவான கட்டுரைகள் வெளியாகின. சிறுதானியங்களை எப்படியெல்லாம் விதவிதமாக சமைக்கலாம் என அவள் விகடன் ஆர்வத்தை உருவாக்கியது. சிறுதானிய உணவுத் திருவிழாவும் நடத்தி, மக்களின் கவனத்தை ஈர்த்தது. தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், சமூக ஆர்வலர்களின் முயற்சிகளாலும் சிறுதானியம்குறித்த விழிப்புஉணர்வு அதிகரித்துவருகிறது. இதனால், மத்திய மாநில அரசுகளின் கவனம் சிறுதானியங்களின் பக்கம் திரும்பியுள்ளது. ரேஷன் கடைகளில் சிறுதானியம் வழங்கப்பட்டால், இதைப் பயிர்செய்யும் விவசாயிகளுக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலை கிடைக்கும். வெளிச் சந்தையிலும் சிறுதானியங்களின் கொள்முதல் விலை உயர்வதோடு, சந்தை வாய்ப்புகளும் பெருகும். இதனால், சிறுதானிய சாகுபடி பரப்பு அதிகரிக்கும்” என்றார்.

பாதுகாப்பான உணவுக்கான கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அனந்து, ‘சிறுதானியங்கள் ஏழைகளின் உணவாக இருந்தது. அவர்களிடம் அரிசியைப் புகுத்தி. சத்துக்கள் நிறைந்த சிறுதானியங்கள் நாளடைவில் கைப்பற்றப்பட்டன. தற்போது, பணக்காரர்களின் உணவாக இவை உள்ளன. பொது விநியோகத் திட்டத்தில் சிறுதானியங்கள் வழங்கப்பட்டால், மீண்டும் ஏழைகளின் உணவாக இவை மாறும். இதனால், அனைத்து தரப்பு மக்களுக்கும் எளிதாக சிறுதானியங்கள் கிடைக்கும். மத்திய அரசின் நடவடிக்கை பாராட்டத்தக்கது.” என்றார்.

சிறுதானியங்கள் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள ஆராய்ச்சியாளர் ஒருவர், ’’நாளுக்குநாள் வெப்பம் அதிகரித்துவருவதால், நெல் சாகுபடியில் மகசூல் குறைந்துகொண்டேவருகிறது. சிறுதானியங்கள் மட்டுமே வறட்சியைத் தாங்கி வளரக்கூடியன. அதே சமயம், மக்களிடம் சத்துக் குறைபாடுகள் அதிகரித்து, பல்வேறு நோய்கள் தாக்குகின்றன. இதனால்தான், சிறுதானியங்களை மத்திய மாநில அரசுகள் கையில் எடுக்கத் தொடங்கியுள்ளன. இவற்றை சாகுபடிசெய்யும் முறைகள்குறித்து விவசாயிகளுக்குப் பயிற்சி அளிப்பதோடு மட்டுமல்லாமல், இவற்றை மதிப்புக்கூட்டுவதற்கான இயந்திரங்கள் எல்லா இடங்களிலும் பரவலாகக் கிடைக்கவும் அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்.” என்றார்.  

தமிழனுக்கு பிறப்பிலிருந்தே வீரம் வளர்கிறது என்பதற்கான வெளிப்பாடு தம்பி என்றும் உம் வீரதீர செயல் தொடங்கட்டும் தமிழா வீழ்வது நாமாக இருந்தாலு...

தமிழனுக்கு பிறப்பிலிருந்தே வீரம் வளர்கிறது என்பதற்கான வெளிப்பாடு தம்பி என்றும் உம் வீரதீர செயல் தொடங்கட்டும் தமிழா வீழ்வது நாமாக இருந்தாலும் வாழ்வது நம்முடைய எதிர்கால சந்ததியாக இருக்கட்டும் வெல்லட்டும் தமிழன் முயற்சிகள்.

தம்பி பெருமையாக இருக்கிறது உங்களை நினைத்து. உங்கள் வயதில் உள்ளவர்கள் பாக்கெட் மணிக்காக, உல்லாச வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு திருடிக்கொண்டிருக்கையில் நீ அதிசயமானவன்.


மாணவிகளை பாலியல் ரீதியாக பெரிய மனிதர்களுக்கு கட்டிலுக்கு அனுப்ப முயற்சித்ததால் கைதாகி சிறையில் இருக்கும் நிர்மலா தேவி 10 ஆண்டு கால கதையை ஒர...

மாணவிகளை பாலியல் ரீதியாக பெரிய மனிதர்களுக்கு கட்டிலுக்கு அனுப்ப முயற்சித்ததால் கைதாகி சிறையில் இருக்கும் நிர்மலா தேவி 10 ஆண்டு கால கதையை ஒரே நாளில் சொல்லிவிட முடியாது என்று கூறி பொலிசாரை அலறவிட்டுள்ளார்.

அருப்புக்கோட்டை மகளிர் பொலிஸ் நிலையத்தில் நிர்மலா தேவியிடம் விசாரணை நடத்திய ஆவணங்கள் சிபிசிஐடி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டன. அதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் உள்ளன.

நிர்மலா தேவி அளித்த வாக்குமூலத்தில் 10 ஆண்டு கால கதையை ஒரே நாளில் சொல்லிவிட முடியாது என்று கூறியுள்ளார். இதை கேட்டு போலீஸார் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

பேராசிரியை நிர்மலா தேவி, விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள தேவாங்கர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கணிதப் பேராசிரியை நிர்மலா மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் உயரதிகாரிகளுடன் ஆசைக்கு இணங்க கல்லூரி மாணவிகள் 4 பேரிடம் தொலைபேசியில் புரோக்கராக பேசி சிக்கிய ஆடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த கைதான நிலையில், பின்னர் விருதுநகர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதியின் வீட்டில் நிர்மலா ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்து அவரை ஏப்ரல் 28ம் திகதி வரை நீதிமன்ற காவலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார். பின்னர் அவர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

நிர்மலா தேவி விவகாரத்தை அருப்புக்கோட்டை நகர காவல் நிலையத்திலிருந்து சிபிசிஐடி விசாரணைக்கு தமிழக டிஜிபி ராஜேந்திரன் உத்தரவிட்டார். இதையடுத்து பேராசிரியை பணியாற்றிய அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரியில் 5 பேர் கொண்ட சிபிசிஐடி விசாரணை நடத்தியுள்ளனர்.

இந்த விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதில், நிர்மலா தேவி 2008ம் ஆண்டில் கல்லூரியில் உதவி பேராசிரியையாக சேர்ந்தார். அப்போது மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்துக்கு பல்வேறு பணிகளுக்காக அவர் சென்று வந்தபோது தொலைநிலைக் கல்வி இயக்ககத்தில் 2 பேராசிரியர்களுடன் பணி ரீதியில் நிர்மலாவுக்கு பழக்கம் உருவானது.

இந்நிலையில் தான் கடந்த மாதம் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்துக்கு பேராசிரியர்களுக்கான புத்தாக்கப் பயிற்சிக்காக அவர் சென்றுள்ளார். அப்போது அந்த இரு பேராசிரியர்களின் தூண்டுதலின் பேரிலேயே மாணவிகளை பாலியல் தொழிலுக்கு அழைத்துள்ளார். விரைவில் இதுதொடர்பாக அந்த இரு பேராசிரியர்கள் விசாரணை நடத்தப்படவுள்ளதாக அந்த காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

நடிகர் ராதாரவி தளபதி விஜய்யின் அடுத்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். மேலும் அவர் சமீபத்தில் விஜய்யுடன் எடுத்த ஒரு புகைப்...

நடிகர் ராதாரவி தளபதி விஜய்யின் அடுத்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். மேலும் அவர் சமீபத்தில் விஜய்யுடன் எடுத்த ஒரு புகைப்படம் வெளியாகி வைரலானது.

இந்நிலையில் தற்போது விஜய்62 பற்றி ஒரு பேட்டியில் பேசிய ராதாரவி "ஜெயலலிதாவிற்கு பிறகு நடிகர் விஜய்யின் வீட்டிற்க்கு நான் குடும்பத்துடன் சென்று புகைப்படம் எடுத்துக்கொண்டோம். என் பேரன் விஜய் மீது பைத்தியமாக இருப்பான். நான் சுறா படம் நடிக்கும்போதே அவருடன் போட்டோ எடுக்கவேண்டும் என கேட்டான். அந்த ஆசை முருகதாஸ் படத்தில் நடிக்கும்போது தான் நிறைவேறியுள்ளது" என கூறியுள்ளார்.

மேலும் விஜய் அரசியலுக்கு வருவது பற்றி பேசிய அவர், "விஜய் இந்த மண்ணின் மைந்தர், ரசிகர்கள் ஆதரவளித்து அவர் அரசியலுக்கு வந்தால் நான் வரவேற்பேன். ஆனால் அவரின் கொள்கை பற்றி கேள்வி கேட்பதை தவிர்க்க முடியாது" என குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவை பொறுத்தவரை தற்போதெல்லாம் பிஸினஸ் பல கோடிகளில் தான் நடக்கின்றது. ஹீரோக்களும் படத்திற்கு படம் தங்கள் சம்பளங்களை ஏற்றிக்கொண்டே ...

தமிழ் சினிமாவை பொறுத்தவரை தற்போதெல்லாம் பிஸினஸ் பல கோடிகளில் தான் நடக்கின்றது. ஹீரோக்களும் படத்திற்கு படம் தங்கள் சம்பளங்களை ஏற்றிக்கொண்டே செல்கின்றனர்.

இதையே ஒரு குறையாக பல தயாரிப்பாளர்கள் கூறி வருகின்றனர், இந்நிலையில் பிரபல நடிகர்கள் சம்பளங்கள் எவ்வளவு என்று ஒரு சில தகவல்கள் வெளிவந்துள்ளது. இதோ...(பிரபல ஆங்கிலத்தளத்தில் வெளியிடப்பட்ட தகவல்).

    ரஜினிகாந்த்- ரூ 50 கோடி
    விஜய்- ரூ 35 கோடி
    அஜித்- ரூ 32 கோடி
    கமல்ஹாசன்- ரூ 20 கோடி
    சூர்யா- ரூ 20 கோடி
    சிவகார்த்திகேயன்- ரூ 15 கோடி
    விக்ரம்- ரூ 12 கோடி
    தனுஷ்- ரூ 10 கோடி
    கார்த்தி- ரூ 8 கோடி
    விஜய் சேதுபதி- ரூ 6 கோடி
    விஷால்- ரூ 6 கோடி
    ஜெயம் ரவி- ரூ 5 கோடி
    சிம்பு- ரூ 5 கோடி
    ஆர்யா- ரூ 2 கோடி
    மாதவன்- ரூ 2 கோடி

சில ஹார்ட் அட்டாக் வருவதற்கான காரணங்கள் நமக்கு தெரியும். உடல் பருமன், நீரிழிவு என அடுக்கிவிடலாம். ஆனால் நாம் நினைத்தே பார்க்காத பல காரணங்கள...

சில ஹார்ட் அட்டாக் வருவதற்கான காரணங்கள் நமக்கு தெரியும். உடல் பருமன், நீரிழிவு என அடுக்கிவிடலாம். ஆனால் நாம் நினைத்தே பார்க்காத பல காரணங்கள் இருக்கின்றன. அதக்கேட்டாலே பீதியாகிடுவீங்க...

வயிறுமுட்ட சாப்பிட்டா, ஐஸ் வாட்டர் குடிச்சா, காலையில் எழும்போது என நாம்இதுவரை நினைத்துக்கூட பார்க்க முடியாத காரணங்களால் கூட ஹார்ட் அட்டாக் வருமாம். நீங்க இதையெல்லாம் சரிசெய்யலேன்னா, திடீர் ஹார்ட் அட்டாக் வரலாம், ஜாக்கிரதை.!

ஒழுங்கான தூக்கம் இல்லாமல் இருப்பது, மனச்சோர்வையும், எல்லோரிடமும் சிடுசிடுவென எரிச்சலடைய வைப்பதோடு மட்டுமல்லாமல், ஹார்ட் அட்டாக் ஏற்படும் அபாயத்தை, பெருமளவு உண்டாக்கி விடுகிறது.

தினமும் ஆறுமணி மணித்தியாளம் குறைவாக தூங்குபவர்களுக்கு, ஆறிலிருந்து எட்டு மணி நேரம் தூங்குபவர்களைவிட, இருமடங்கு இருதய பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாக, ஒருஆய்வு கூறுகிறது.

மருத்துவர்கள் சரியான காரணத்தை அறியாவிட்டாலும், அதிகநேரம் தூங்காமல் இருப்பதால், இரத்த அழுத்தம் அதிகரித்து, உடல் அழற்சி ஏற்படுவது, இதயத்துக்கு நன்மை தராத ஒன்றாகும்.

ஒற்றைத் தலைவலியும், பிற்காலத்தில், இருதய பாதிப்பை ஏற்படுத்தும் ஆபத்தைத் தரும். ஆரா ஒளிவட்டமுள்ள தியானம் செய்பவர்கள், தலைவலி இல்லாதவர்கள் போன்றோரை பாதிப்பதைவிட, அதிகமாக ஒற்றைத்தலைவலி உள்ளவர்களுக்கு, மாரடைப்பு கோளாறுகள் ஏற்படக்கூடும்.

வினோதமான காட்சிகள், சப்தம், உணர்வுகள் போன்ற தலைவலிக்கு முன் தோன்றும் வித்தியாசமான அனுபவங்கள், இருதய பாதிப்பின் கடுமையான அறிகுறிகளாகக் கருதப்படுகிறது.

குளிர்காலத்தில் அதிகநேரம் வெளியில் இருப்பது, உடல் இரத்த நாளங்களை சுருக்கி, இதயத்துக்கு செல்லும் இரத்த ஓட்டத்தை, தடை செய்கிறது. இதனால், உடலை கதகதப்பாக வைக்க, இதயம் சிரமப்படுகிறது.

    பனிக்காலங்களில், ஐஸ் கட்டியில் விளையாடுவது, பனியில் ஊர் சுற்றுவது, போன்ற வெளிப்புற செயல்களைக் குறைப்பதன் மூலம், மாரடைப்பு உள்ளிட்ட இதய பாதிப்புகளைத் தவிர்க்க முடியும்.

மூக்குமுட்ட சாப்பிடுவதும், இரண்டாவது, மூன்றாவதுமுறை குழம்பு, பாயசம் வாங்கி சாப்பிடுவது, வயிற்றைமட்டும் பாதிக்காது, மனப்பதட்டத்தை ஏற்படுத்தும் நோர்பின்பிரைன் ஹார்மோனை அதிகம் சுரக்கவைத்து, அதனால், இரத்த அழுத்தமும் இதயத்துடிப்பும் அதிகரித்து, ஹார்ட் அட்டாக்கை ஏற்படுத்திவிட வாய்ப்புகள் ஏற்படும்.

கொழுப்புநிறைந்த அசைவ உணவுகள், இரத்தக்கொழுப்பை சட்டென அதிகரித்து, இரத்த நாளங்களை பாதிக்கக்கூடியவை.