Home Top Ad

கடந்த ஆண்டு கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழ் தொலைக்காட்சியில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. ஆரம்பத்தில் சீசன் 2-வை கமல் தொகுத்...

கடந்த ஆண்டு கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழ் தொலைக்காட்சியில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. ஆரம்பத்தில் சீசன் 2-வை கமல் தொகுத்து வழங்கமாட்டார் என்று தெரிவித்தனர்.

ஆனால் மீண்டும் கமலே தொகுத்து வழங்கவுள்ளார், அதற்கான டீஸர் வேலைகளையும் கடந்த வாரம் நடந்து முடிந்தது, இந்நிலையில் நாளை முதல் விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் 2 நிகழ்ச்சியின் டீஸர் வெளிவரவுள்ளது, முதல் சீசன் போலவே இரண்டவது சீசன் மிக பிரமாண்டமாக செட் அமைப்புடன் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது வரை கிடைத்த தகவல்படி பிரபல முன்னணி பிரபலங்கள் பிக் பாஸ் 2 வில் கலந்து கொள்ளவுள்ளனர் . ஆனால் யாரெல்லாம் என்பது ரகசியமாக வைத்துள்ளது பிக்பாஸ் குழு .

சினிமாவில் இப்போதெல்லாம் ஏதேதோ கதைகளை வைத்து படங்கள் எடுக்கப்படுகிறது. பேய் படங்கள் காலங்கள் போய் அடல்ட் படங்கள் அடியெடுத்து வைக்க தொடங்கிவ...

சினிமாவில் இப்போதெல்லாம் ஏதேதோ கதைகளை வைத்து படங்கள் எடுக்கப்படுகிறது. பேய் படங்கள் காலங்கள் போய் அடல்ட் படங்கள் அடியெடுத்து வைக்க தொடங்கிவிட்டது.

அதற்கிடையில் சினிமா வட்டாரமே நடிப்புக்காக ஏங்கிய பழம்பெரும் நடிகையான சாவித்திரியின் வாழ்க்கை படமாக வெளிவந்துள்ளது.

என்ன சொல்கிறார் இந்த நடிகையர் திலகம்? மகாநதியாக உருமாறிய இவரின் பயணம் பக்கம் நாமும் போகலாம்..

கதைக்களம்

ஒரு காலகட்டத்தில் சினிமா வட்டாரமே கர்ஜித்த பெயர் நடிகை சாவித்திரி. நடிகையர் திலகமாக நடிகை கீர்த்தி சுரேஷ். ஒரு சிறுமியாக, வளர்ந்த பெண்ணாக பின் ஒரு நடிகையாக மாறுகிறார்.

இந்த பயணத்தில் அவரின் வாழ்க்கையில் பல திருப்பங்கள். சாதாரண பெண்ணாக சினிமா துறையில் நுழைந்து நூற்றுக்கும் அதிகமான படங்களில் நடித்து ஒரு பெரும் புகழை பெற்றவர்.

அப்படியான புகழ் பெற்ற அவரின் வாழ்வில் ஒரு காதல் இவரையும் கடந்து போகிறது. இதில் மற்றொரு பிரபல நடிகர் ஜெமினி கணேசனும் முக்கிய பங்காற்றுகிறார்.

பிரபலங்களுக்கான காதல் கிசுகிசுக்களில் சிக்கிய இவர்கள் நிஜ வாழ்க்கையில் எப்படியிருந்தார்கள், கடைசி வரை காதல் ஜோடியாக இணை பிரியாமல் இருந்தார்களா?

மேலும் சாவித்திரியின் கடைசி ஆசையை யார் நிறைவேற்றினார்கள் என்பது படத்தின் மீதிக்கதை.

படத்தை பற்றிய அலசல்

கீர்த்தி சுரேஷ் படத்தின் மிக முக்கிய கேரக்டர். தமிழ், தெலுங்கு என பல படங்களில் நடித்த இவர் ஒரு பிரபல நடிகையின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்குமளவிற்கு உயர்ந்திருக்கிறார்.

சாவித்திரி சாதாரணமானவர் அல்ல. சகாப்தம் படைத்தவர். அப்படியான ஒருவராக இப்படத்தில் தன்னையே மாற்றியிருக்கிறார். ஏற்கனவே படங்களில் கீர்த்தி சுரேஷின் சில ரியாக்சனை கேலி கிண்டல் செய்தார்கள்.

ஆனால் இப்படத்தின் மூலம் அவருக்கு அந்த நிலை மாறலாம். இனிவரும் காலத்தில் இதே பெயர் அவருக்கு பொருந்தினாலும் ஆட்சேபனையில்லை என சொல்லலாம்.

ஜெமினி கணேசனாக மலையாள சினிமாவின் பிரபல நடிகர் துல்கர் சல்மான். இவருடன் கீர்த்திக்கும் காதல் மலர்கிறது. ஒரு நடிகரின் மேனரிசத்தை உள்வாங்கி அதை பிரதிபலிப்பது சாதாரணமான விசயமல்ல.

அவ்வகையில் துல்கர் தைரியமாக இறங்கியிருக்கிறார். மேலும் ஒரு தமிழ் படத்திற்காக அவர் முதன்முறையாக தனது சொந்த குரலில் டப்பிங் பேசியிருக்கிறார். ஆனால் முழுமையான ஜெமினி கணேசனாக எல்லாரிடமும் இடம் பெற்றாரா என்றால் கொஞ்சம் சந்தேகம் தான். சில அம்சங்கள் குறைந்து போல இருந்தது.

ஆனால் குடிப்பது போன்ற காட்சியில் கீர்த்தியுடன் இவர் பேசும் போது பார் (மதுக்கடை) பற்றி ரைமிங்காக ஒரு டையலாக் சொல்வார். அதற்கு நல்ல ரீச் இருந்தது.

நடிகை சமந்தா மதுரவாணியாக ஒரு பெண் பத்திரிக்கையாளராக வந்திருக்கிறார். சாவித்திரியை பற்றி விசயங்கள் பெரிதளவில் தெரியாவிட்டாலும் பின் தன் ஆராய்ச்சியால் ரசிகையாக மாறிப்போகிறார்.

இவருக்கும் விஜய் அந்தோனியாக வரும் விஜய் தேவரகொண்டாவுக்கும் காதல் மலர்கிறது. இவர்களுக்கிடையில் காதல் ஓடுகிறது. கலாச்சாரம் ஜெயித்ததா, காதல் வென்றதா என்பது ரகசியம் (படத்தில் பாருங்க).

மேலும் படத்தில் நடிகர் பிரகாஷ் ராஜ், பானுமதி ஆகியோரும், தெலுங்கு சினிமாவின் முக்கிய நடிகர்களும் இதில் இருக்கிறார்கள். ஒவ்வொருவரும் கதாபாத்திரமாக மாறி இடம் பிடித்திருக்கிறார்கள்.

படத்திற்கான காட்சிகள் அக்காலம் போல அருமையாக காட்டியிருக்கிறார் ஒளிப்பதிவாளர். படத்திற்கான பின்னணி இசை, பாடல் வரிகள் என மனதோடு ஒன்றிவிடுகிறது.

கிளாப்ஸ்

கீர்த்தி சுரேஷ் சாவித்திரியாக மாறிய தைரியத்தை பாராட்டலாம்.

அக்கால காதலை இக்கால தலைமுறைக்கு இயல்பாக எடுத்து சொன்னவிதம் நன்று.

வாழ்க்கை வரலாற்று படத்தை அழகாக கொடுத்த இயக்குனரின் அழகான முயற்சி.

நிறைவான காட்சிகளால் சிலிர்ப்புடன் வரும் சிரிப்பு.

பல்பஸ்

சில இடங்களில் கீர்த்தி சுரேஷ் வழக்கமான அசைவுகள் ஃபிளாஷாக தெரிந்தது.

டப்பிங் சில இடங்களில் பொருந்தவில்லை என தோன்றவைத்தது.

மொத்தத்தில் களங்கம் சுமத்தபடும் நடிகைகளுக்கு பின்னால் களங்கமில்லா ஒரு நல்ல மனது இருக்கிறது என நடிகையர் திலகம் காட்டுகிறது.

ஹெல்மெட் போடாமலோ அல்லது கைவசம் லைசென்ஸ் இல்லாமல் அல்லது குடித்து விட்டு வாகனங்களை ஓட்டி  டிராஃபிக் விதிகளை மீறுபவர்களிடம், டிராஃபிக் போலீசா...

ஹெல்மெட் போடாமலோ அல்லது கைவசம் லைசென்ஸ் இல்லாமல் அல்லது குடித்து விட்டு வாகனங்களை ஓட்டி  டிராஃபிக் விதிகளை மீறுபவர்களிடம், டிராஃபிக் போலீசார் லஞ்சம் வசூலிப்பதாகவும், அதேபோல் சாலை விதிகளை மீறுபவர்களும் தங்கள் குற்றங்களிலிருந்து தப்பிக்க லஞ்சம் கொடுப்பதாகவும், அதிக அளவில் புகார்கள் வந்தன.  இதையடுத்து, இதை தடுக்கும் விதமாக,  மின்னணு முறையில் -அதாவது பணமில்லா அபராதம்   அபராதம் செலுத்தும் வசதியை சென்னை மாநகர போலீஸ் அறிமுகப்படுத்தியுள்ளது.



தற்போதுள்ள தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப வாகன ஓட்டிகள் நேரடி அபராத தொகையை டிஜிட்டல் கட்டண முறைகளில் செலுத்த ஏதுவாகவும் பணமில்லா அபராதம் செலுத்தும் முறையை கொண்டு வந்துள்ளது.

போக்குவரத்து விதிமீறல்களுக்கான நேரடி அபாராத தொகையை பெறும் முறையில் வெளிப்படை தன்மையை உறுதி செய்யவும், சென்னை மாநகரபோக்குவரத்து காவல் துறை, நேரடி பணமில்லா அபராதம் செலுத்து முறையை இன்று முதல் நடைமுறைப்படுத்தி உள்ளது.

போக்குவரத்து போலீசார், ஸ்பாட் ஃபைன் பொதுமக்களிடம் வாங்குவதால் பல்வேறு மனக்கசப்புகள் ஏற்பட்டன.

போக்குவரத்து போலீசார் லஞ்சம் வாங்குவதுபோன்ற தோற்றத்தை ஏற்படுத்தியது. இதனால் தேவையில்லாத வாக்குவாதம் வீண் பிரச்சனைகள் ஏற்பட்டன.

இதனால், ஸ்பாட் பைன் முறையை நிறுத்துவதாகவும், நேரடி பணமில்லா அபராதம் செலுத்து முறை நடைமுறைபடுத்தப்பட்டுள்ளதாகவும் போக்குவரத்து காவல் துறை தெரிவித்துள்ளது.

போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராத தொகையை, பணமில்லா அபராத தொகை மூலம் செலுத்துவதற்கு கிரெடிட் கார்ட் / டெபிட் கார்டு, பாரத ஸ்டேட் வங்கி ஆன்லைன் பணபரிவர்த்தனை, போஸ்ட் ஆபிஸ், இ-சேவை மையம், PAYTM இதுபோன்று பல்வேறு வகையில் பணம்செலுத்த வகை செலுத்தப்பட்டுள்ளது.

பணம்தான் கொடுக்க வேண்டும் என்றால் நீதிமன்றம் சென்று செலுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எக்காரணம் கொண்டும் போலீசாரிடம் பணம் கொடுக்க வேண்டாம் என்று கூறப்பட்டுள்ளது.

கடந்த 2017 ஆம் ஆண்டு மட்டும் வாகன விபத்தில் 1347 பேர் உயிரிழந்துள்ளனர். குடும்ப உறுப்பினரை இழந்து வாடும் நிலையை அறிந்த பின்னரே போக்குவரத்து காவல் துறை இதுபோன்ற நடவடிக்கைகளை எடுத்து வருவதாக போக்குவரத்து காவல் அதிகாரி ஒருவர் கூறினார்.

நடிகர் ரஜினிகாந்த் இன்று நடந்த காலா படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடந்தது. அதில் பேசிய சூப்பர்ஸ்டார் மிக உருக்கமாக பேசினார். முதலில்...

நடிகர் ரஜினிகாந்த் இன்று நடந்த காலா படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடந்தது. அதில் பேசிய சூப்பர்ஸ்டார் மிக உருக்கமாக பேசினார்.

முதலில் கபாலி படத்தின் ஸ்கிரிப்டை படித்துவிட்டு கதை மிக மெதுவாக நகர்வதாக எனக்கு தோன்றியது. ரஞ்சித்தை அழைத்து இது பற்றி பேசினேன். ரசிகர்களுக்கு இவ்வளவு பொறுமை கிடையாது, நான் கதை கேட்கும்போது ஒரு ரசிகன் என்ன எதிர்பார்ப்பான் என்ற கண்ணோட்டத்தில் தான் கேட்பேன்.

காலா படத்தை மும்பையில் உள்ள தாராவியில் தமிழர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுத்துள்ளோம். ரஞ்சித் 85 நாட்களில் படத்தை முடித்துவிட்டார்.. அடுத்த கே.எஸ்.ரவிக்குமார் அவர்தான் என நினைக்கிறேன்.

"காலாவில் அரசியல் இருக்கும்; ஆனால் காலா அரசியல் படம் கிடையாது" என சூப்பர்ஸ்டார் மேலும் கூறினார்.

நடிகர் ரஜினிகாந்த் இன்று நடந்த காலா படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடந்தது. அதில் பேசிய சூப்பர்ஸ்டார் மிக உருக்கமாக பேசினார். முதலில்...

நடிகர் ரஜினிகாந்த் இன்று நடந்த காலா படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடந்தது. அதில் பேசிய சூப்பர்ஸ்டார் மிக உருக்கமாக பேசினார்.

முதலில் கபாலி படத்தின் ஸ்கிரிப்டை படித்துவிட்டு கதை மிக மெதுவாக நகர்வதாக எனக்கு தோன்றியது. ரஞ்சித்தை அழைத்து இது பற்றி பேசினேன். ரசிகர்களுக்கு இவ்வளவு பொறுமை கிடையாது, நான் கதை கேட்கும்போது ஒரு ரசிகன் என்ன எதிர்பார்ப்பான் என்ற கண்ணோட்டத்தில் தான் கேட்பேன்.

காலா படத்தை மும்பையில் உள்ள தாராவியில் தமிழர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுத்துள்ளோம். ரஞ்சித் 85 நாட்களில் படத்தை முடித்துவிட்டார்.. அடுத்த கே.எஸ்.ரவிக்குமார் அவர்தான் என நினைக்கிறேன்.

"காலாவில் அரசியல் இருக்கும்; ஆனால் காலா அரசியல் படம் கிடையாது" என சூப்பர்ஸ்டார் மேலும் கூறினார்.

சமீபகாலமாக நடிகர் பிரகாஷ்ராஜ் ஆளும் மத்திய அரசான பிஜேபியை விமர்சித்து வருகிறார். தனது நெருங்கிய தோழியும் பத்திரிக்கையாளருமான கவுரி லங்கேஷ் ...

சமீபகாலமாக நடிகர் பிரகாஷ்ராஜ் ஆளும் மத்திய அரசான பிஜேபியை விமர்சித்து வருகிறார். தனது நெருங்கிய தோழியும் பத்திரிக்கையாளருமான கவுரி லங்கேஷ் கொலைக்கு பிறகு மத்திய அரசை கடுமையான எதிர்த்து பேசினார்.

அதன் பிறகு பிரதமர் என்னை விட சிறந்த நடிகர் என்ற விமர்சனத்தை முன்வைத்தார், இதனால் அவரை எதிர்த்து பல இடங்களில் போராட்டம் வெடித்தன. இந்நிலையில் மைசூருவில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரகாஷ் ராஜ் நிருபர்களிடம் பேசுகையில், நான் பாரதிய ஜனதா மற்றும் இந்து அமைப்பினருக்கு எதிராக பேசி வருவதால், என்னை கொலை செய்ய சதி நடக்கிறது.

சில இந்து அமைப்புகள் என்னை கொலை செய்ய திட்டம் தீட்டி வருகிறார்கள். எந்த நேரத்திலும் நான் கொலை செய்யப்படலாம். அதற்கு நான் அஞ்சவில்லை. என்னிடம் இருந்து உயிரை வேண்டுமானால் பறித்துக் கொள்ளலாம். ஆனால் என்னுடைய அறிவு, நடிப்பு திறமையை யாராலும் பறிக்க முடியாது என கூறினார்

நடிகை கீர்த்தி சுரேஷ் தான் தற்போது டாக் ஆஃப் தி டவுன் என்று சொல்லலாம். அவருக்கான பட வாய்ப்புகள் அடுத்தடுத்து குவிந்து வருகிறது. தற்போது மகா...

நடிகை கீர்த்தி சுரேஷ் தான் தற்போது டாக் ஆஃப் தி டவுன் என்று சொல்லலாம். அவருக்கான பட வாய்ப்புகள் அடுத்தடுத்து குவிந்து வருகிறது. தற்போது மகாநதி படத்திற்கு தமிழில் எதிர்பார்ப்புகள் கூடியுள்ளது.

நடிகையர் திலகம் சாவித்திரியாக இப்படத்தில் அவர் நடித்துள்ளார். தெலுங்கில் இப்படத்தின் முன்னோட்ட காட்சியை பார்த்த பலரும் படத்தை மிகவும் பாராட்டியுள்ளார்கள்.

மேலும் பல ஊடகங்கள் 3 க்கும் அதிகமான ரேட்டிங்ஸ் கொடுத்துள்ளன. கீர்த்தியை தெலுங்கு சினிமாவை சேர்ந்த நடிகைகள், நடிகர்கள் பலரும் வாழ்த்தியுள்ளனர். ட்விட்டரில் ரசிகர்கள், ரசிகைகளும் மாஸ் காட்டியுள்ளனர்.

சாவித்திரியின் மகளும் படத்தை பார்த்துவிட்டு தன் அம்மாவை மீண்டும் பார்த்தது போல இருந்ததாக கீர்த்திக்கு போன் மூலம் மெசேஜ் அனுப்பி பாராட்டியுள்ளார். தமிழில் நாளை பிரிமியர் காட்சிகள் காண்பிக்கப்படவுள்ளது.

மேலும் தமிழக ரசிகர்களை இப்படம் ஈர்க்குமா என பொறுத்திருந்து பார்ப்போம்...

பலரையும் அசரவைத்த கீர்த்தி சுரேஷ்! குவியும் பாராட்டுக்கள்